Thursday, June 10, 2010

கடுப்பைக் கிளப்பும் - FeTNA சேர்ந்தே டான்ஸ் பாக்கலாம் கவித வாசிக்கலாம் வாங்க ப்ளீஸ்

கும்மி பெட்னா விழா FeTNA

அடுத்ததா ஆர‌ம்பிச்சுட்டானுக இவனுக இம்சை தாங்க முடியவில்லை. உலகத்துல எவன் செத்தாலும் அல்லது எவன் வீட்டில் எழவு நடந்தாலும் சினிமாக்காரர்களைக் கூட்டிவந்து வருசத்து ஒருமுறை சொம்பு தூக்கவில்லை என்றால் இவர்களுக்கு ஜன்னி வந்துவிடும். 1988 ல் ஆரம்பித்த இந்த மனமகிழ் மன்றம் அல்லது வருத்தமில்லா வாலிபர் சங்கம்  இதுவரையில் என்ன செய்துள்ளது என்றால்  " நாங்கள் வருசா வருசம் கலர் கலரா டான்ஸ் ஆடுறோம்" என்று சொல்கிறார்கள். சரிதான் மனமகிழ் மன்றம் செய்ய வேண்டிய வேலைதான்.  தாத்தா கலைஞர் செய்யும் செம்மொழி மாநாடு கூத்தைப் போல , இவர்கள் விடும் அறைகூவலே இந்தப் பதிவிற்கு காரணம்.

செந்தமிழால் சேர்ந்திணைவோம்
சேர்ந்தே டான்ஸ் பாக்கலாம் கவித வாசிக்கலாம்
மாத்தி மாத்தி சொறிந்து கொள்ளலாம்  வாங்க ப்ளீஸ்

என்று அறைகூவல் விட்டு இருந்தால் என்னைப்போல் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால் இவர்களின் அறைகூவல்தான் கடுப்பைக் கிளப்புது யுவர் ஆனர். இந்த வருட பெட்னா மனமகிழ் மன்றத்தின் அறைகூவல்.
செந்தமிழால் சேர்ந்திணைவோம்
செயல்பட்டே இனம் காப்போம்
ஏன்யா இம்சைப் படுத்துறீங்க?

  1. இனத்தைக் காக்கவென்று உங்களிடம் ஏதாவது செயல்திட்டம் உள்ளதா?
  2. 1988 ல் இருந்து இன்றுவரை என்றாவது இனம் காக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று குறைந்த பட்ச செயல்திட்டத்திற்கு உட்கார்ந்து பேசியுள்ளீர்களா?
யாரைக் கூட்டிவந்து டான்ஸ் ஆடவைக்கலாம், டிக்கெட் எவ்வளவு விற்கவேண்டும்?  எப்படி கும்மியடிக்க வேண்டும்?  என்று போட்ட செயல்திட்டத்தில்,  கடுகளாவாவது  இனம் என்றால் யார் யார்? அவர்களின் பிரச்சனைகள் என்ன? இனத்தைக் காக்க என்ன திட்டம் என்று , என்றாவது செயல்பட்டது உண்டா?  மார்க்ஸ்-ம் எங்கெல்ஸும் வெளியிடப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிக்கான மேனிவெஸ்ட்தான் தொழிலார்களைக் காக்க வந்த பைபிள்.  திட்டம் வரையறுத்தபின்னால்தான் அவர்கள் தொழிலாளர்களை நோக்கி அறைகூவல் விட்டார்கள்.

இனம் காக்க என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?  இனம் செத்து ஒருவருடம் ஆகவில்லை. இந்த மொன்னையிலும் விழாவுக்கு வாங்க என்று ஜிகினாக்களை வைத்து விளம்பரம்  , சொம்பு தூக்கிக் கொண்டுள்ளீர்கள் . ஆட்டம் பாட்டம் சினிமாவில் நடிக்கும் அட்டக்கத்தி வீரன்கள் எல்லாம் வருகிறார்கள். என்ன சாதிக்கப் போகிறீர்கள் ? அசிங்கமாக இல்லை?

மெரிக்கத் தமிழர் அமைப்பு என்று சொல்லிக் கொள்ளும் இந்த பெட்னா மனமகிழ் மன்றம்  1988 ல் இருந்து இன்றுவரை 22  ஆண்டுகளாக அமெரிக்காவில் ஈழத்தமிழர்  அல்லது மலேசியத் தமிழர் அல்லது அமெரிக்காவில் வாழும் தமிழர்களுக்காக என்ன அரசியல் அல்லது சமூகப் போராட்டங்களை முன்னெடுத்து உள்ளது? ஈழம் வெந்துகொண்டு இருந்த போது , இந்தக் கோமான்கள் அமெரிக்காவில் நடத்தியுள்ள அரசியல் மாநாடு,பேரணிகள் ஏதாவது உண்டா? அதாவது பெட்னா மனமகிழ் மன்றம் சார்பாக அல்லது அது முன்னின்று நடத்தியவை.

கதியாக வந்து அல்லது வேலைக்கான விசாவில் வந்து தங்கி இருப்பவர்களைக் குற்றம் சொல்ல முடியாது.  அவர்கள் அமெரிக்க அரசியல் அமைப்பை நோக்கி இது போன்ற போராட்டங்களை நடத்த முடியாது.   ஆனால், பெட்னாவில் பழம் தின்று கொட்டை போட்டு இன்று டான்ஸ் கச்சேரி நடத்தும் பொறுப்பில் இருக்கும் பலர் அமெரிக்க குடியிரிமை வாங்கியவர்கள். அமெரிக்க அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு இவர்கள் "இனம் காக்க" என்ன செய்தார்கள்?  பிச்சாத்து கிரீன்கார்டுக்காகவும் அதில் வந்த புராசஸ் தடங்கலை சரி செய்யவும் அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகளை கூட்டமாகச் சென்று  பார்த்தவர்களை நான் அறிவேன்.

சரி இந்த பெட்னா மனமகிழ் மன்றத்தின் கொள்கைகள் என்ன என்று பார்ப்போம்.

Why do they exist as a Sangam ?
என்று கேட்டால் இதுதான் அவர்கள் சொல்லும் காரணம்.

 http://www.fetna.org/index.php?option=com_content&view=article&id=47&Itemid=59
What is our objective?
To establish a centralized organization comprised of elected representatives of Tamil associations in North America and of individuals living in North America who have contributed to the objectives of the Federation and who join as Life Members.

ஒகே ... மெம்பர் சேர்த்தாகிவிட்டது. ஒரு குறிக்கோள் நிறைவேறிவிட்டது. அப்புறம் சார் ?

To cultivate, promote, foster, and develop the advancement of knowledge in Tamil language, literature and culture.

நெஜமாகவே இதில் என்ன நடந்துள்ளது என்று அறிய ஆவல்.
அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழங்களில் சொற்ப அளவிலேயே தமிழ் உள்ளது. எத்தனை பல்கலை, தமிழ் மொழிக்கு துறைகளை ஒதுக்கியுள்ளது என்ற தகவலாவது உண்டா?

1.cultivate,
2.promote,
3.foster, and
4.develop

இதற்கு என்ன அஜெண்டா (action plan) உள்ளது ?


To cultivate, promote, and foster the exchange of ideas and understanding between the Tamil people and other cultures.
To promote better understanding and foster friendship among various Tamil associations in North America and to encourage the formation of new Tamil Sangams.


சங்கத்தை வைத்து என்ன செய்வது என்றே தெளிவில்லாதபோது நிறைய சங்கங்களை பெருக்கி ...அப்ப்புறம் சொல்லுங்க கேட்போம்??

To act upon charitable causes directly concerning the welfare of Tamil community living throughout the world.

காமெடி... மலேசியத் தமிழர்கள் அல்லது ஈழத் தமிழர்கள் அல்லது துபாய் தமிழர்கள் , கனடா தமிழர்கள் ...தமிழ் நாட்டுத் தமிழர்கள் ...இவர்களுக்காக செய்ய என்ன அஜெண்டா உள்ளது ?  என்ன **த்துக்கு வேர்ல்டு வைடு  என்று ப்லிம்?னமகிழ் மன்றம், வருத்தப்படாத வாலிபர் சங்கங்களுக்கும் இதற்கும் வித்தியாசம் இல்லை. சும்மா பொழுது போக்குச் சங்கங்களே இவை. கூட்டமாகச் சேர்ந்து பொழுதைப் போக்க நல்ல அமைப்பு.  மற்றபடி எதிர்பார்க்க ஒன்றும் இல்லை.  மனமகிழ் மன்றங்கள் என்ற அளவில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை.

"மானாட மசிராட"  போல டான்ஸ் காட்டுறோம் வாங்க பாசு நூறு ரூபாய்தான் என்றால் பிரச்சனை இல்லை. ஆனால்.....
கலாச்சாரம், தமிழ் வளர்ச்சி, உலகளாவிய தமிழ்த்தொண்டு, உலகத்தமிழர்நலன், என்ற அடிப்படை குறிக்கோள் ஜல்லியைத்தான் தாங்க முடியவில்லை. கடுப்பைகிளப்புகிறார்கள்


Why do they exist as a sangam ?

இதை நிர்ணயித்துவிட்டால். அதை எப்படி அடைவது என்பது பற்றி பேச வழி இருக்கும். இலக்கே சேர்ந்து கும்மி அடிப்பது என்றால் .....அதில் தவறே இல்லை. மனமகிழ் மன்றங்கள் அவசியம் தேவை. கொண்டாட்டங்கள் இல்லாத வாழ்க்கை சுவராசியமாக இருக்காது.

ஆனால் கூட்டம் வேண்டும் என்பதற்காக சினிமா xxxxக்களை வருடா வருடம் அழைத்தே தீருவோம் என்றால் அதற்கு ரிக்கார்டு டான்ஸ் நடத்தி கூட்டம்/பணம்/உறுப்பினர் சேர்க்கலாம்.  கூத்து நடத்துவதற்கும் வெட்டி அரட்டைகள் அடிப்பதற்கும் தமிழ் என்ற பெயரில் சங்கம் தேவை இல்லை. "மானட மசிராட சங்கம்" என்றே இருக்கலாம். அல்லது "நீயா? நாயா?" என்று அரட்டைக் கச்சேரி நடத்தலாம். சும்மா கூடி பேசி உண்டுகழிக்க வேறு பெயரில் சங்கம் நடத்தலாம்.

லகளாவிய தமிழர்நலன் ஜல்லி/சொம்புகளைவிட்டுவிடுங்கள். அது எல்லாம் ரொம்ப தூரம். சீசன் காலத்தில் அந்த சீசனுக்கு தகுந்த ஆட்களை கொண்டு வந்து பேசவைத்தால் எல்லாம் சரியாகிவிடுமா என்ன?  வட அமெரிக்காவில் ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு டொமஸ்டிக் வயலன்ஸ் கேஸ் என்று வைத்துக் கொள்ளுங்கள்... அல்லது எந்த சொந்த பந்தமும் அமெரிக்காவில் இல்லாத புதிதாக அமெரிக்க பல்கலையில் வந்து சேரும் புத்தம் புதிய தமிழ் மாணவருக்கான‌ ( தமிழ்நாடு,இலங்கை,கனடா,மலேசியா...etc பின்னனி கொண்ட தமிழர்)  உதவி என்று வைத்துக் கொள்ளுங்கள் (பணம் அல்ல வழிகாட்டல்). இவர்களுக்கான எந்த உதவியாவது டமில் சங்கத்தில் இருந்து கிடைக்குமா?   தனிநபர்கள் செய்கிறார்கள் இல்லை என்று சொல்லவில்லை. சங்கமாக தமிழ்/தமிழர் வளர்ச்சிக்கு என்ன அஜெண்டா உள்ளது என்பதே கேள்வி?

சாதி,மத,பூகோளப் பாலிடிக்ஸ்.

செந்தமிழால் சேர்ந்திணைவோம் 

ஏன்யா விளையாடுறீங்களா? சாதிச் சங்கமாகச் செயல்பட்டுவரும் சங்கங்ககளையும்,  மத ரீதியாக பிரிந்து கும்மி அடிப்பதையும் என்ன செய்ய? வடக்கு கரோலைனாவில் சாதிக்கு ஒரு தமிழ்ச்சங்கம். xxx க்கு ஒன்று, மற்றவர்களுக்கு ஒன்று.  என்ன கொடுமை இது டமில்ஸ்?

மிழ் என்ற அடையாளத்தை மட்டும் முன்னிருத்தி, மற்ற அடையாளங்களை (சாதி மத தமிழ் நாடு, ஈழம்) தற்காலிகமாக இரண்டாம்பட்சமாக்கி (துறந்து) தமிழுக்காக மட்டும் சங்கமிக்க‌அனைவரும் இணைந்து செயல்படுவது என்பது இன்னும் சாத்தியமகவில்லை. து காற்றில் வெண்ணெய் எடுப்பது போன்றது.  அப்படியே ஒரு பத்துப்பேரைச் சேர்த்துவிட்டாலும்... டான்ஸ் ,சினிமா, கவித, காய்ச்சல் என்று சிலர்  "அதெல்லாம் எதுக்கு ? ஆளுக வரமாட்டாங்க. பாட்டு டான்ஸ் வச்சுக்குவோம்.ஜிகினா சிரயையும் பேச்சுப்புயல் டாம்டூம் தகரடப்பாவையும் கூப்பிடுவோம்...கூட்டம் வரும்"    என்று நம்மை சொம்பாக்கிவிடுவார்கள்.

யுவர் ஆனர் ,காபரே டான்ஸ் போட்ட்டால்கூட நல்ல கூட்டம் வரும் .  அல்லது ஏதாவது சாமியார்ப் பயல்களைக் கூட்டி வந்தால் குடும்பம் குட்டியோடு நிறையக் கூட்டம் வரும்.

 சேர்ந்தே இனம் காப்போம் என்று சொல்லாதீர்கள் யுவர் ஆனர் .  இனம் காக்க நினைப்பவன் ஜிகினாஸ்ரீ வந்தால்தான் வருவேன்  என்று சொல்ல மாட்டான்.  இனம் காக்கும் உணர்வே போதும்.



னது விமர்சனங்கள் எல்லாம் இவர்களின் அடிப்படைக் கொள்கைகள் கொள்கைகள் குறித்தே.  அது (இலக்கு) தெளிவாகிவிட்டால் எப்படிச் செல்வது என்று பேசலாம். விழாக்காலக்கூத்துகள் மட்டுமே சங்கங்களின் அஜெண்டா என்றால் அதில் தவறு இல்லை. கிராமத்தில் விழாக்காலத்தில் மட்டும் கூடும் விழாக்கமெட்டியாக இருந்துவிட்டுப் போங்கள். இனம் காப்போம் என்று சொல்லி டான்ச் ஆட கூட்டம் சேர்க்காதீர்கள். 


வாய்ச் சொல் வீரர்கள்
http://masivakumar.blogspot.com/2009/05/blog-post_21.html

தமிழ் பெரும் விழா - தாமரை - வைரமுத்து: Fetna 2009 - II
http://thekkikattan.blogspot.com/2009/07/fetna-2009-ii.html


Image Courtesy: http://images.all-free-download.com

17 comments:

  1. / சேர்ந்தே இனம் காப்போம் என்று சொல்லாதீர்கள். இனம் காக்க நினைப்பவன் ஜிகினாஸ்ரீ வந்தால்தான் வருவேன் என்று சொல்ல மாட்டான். இனம் காக்கும் உணர்வே போதும்./


    சரியான வார்த்தை!
    முழுவதுமாக வழிமொழிகிறேன்!

    புறகணிப்பே சரியான வழி!

    ReplyDelete
  2. நண்பர் மூலம் அறிந்தது!

    Tamil got recognized as second language in America due to FeTNA's demand


    மூன்று பல்கலைக்கழகத்தில் தமிழ் பாடமொழி ஆக்கப்பட்டு இருக்கிறது


    சென்ற ஆண்டு ஆண்டு விழாவில் ஈழம் குறித்தான விழிப்புணர்வு பற்றி விரிவாகப் பேசினார்கள்


    இந்த ஆண்டும் பேசுவார்கள்


    ஈழத் தமிழர்களுக்காக தொடர் உண்ணாவிரதம் 180 நாட்கள் நடத்தியது பேரவை


    ******

    ஆகையால் புறகணிப்போம் என்ற என் கருத்தை வாபஸ் பெறுகிறேன்!

    ஜிகினாஸ்ரீ, அனைவருக்கும் பொது என்பதால் அதில் உடன்படுகிறேன்!

    ReplyDelete
  3. //வால், said...Tamil got recognized as second language in America due to FeTNA's demand
    //


    உங்க லொள்ளுக்கு அளவே இல்லையா வால். :-)))))

    கொஞ்சம் விளக்கவும் . அதாவது சிங்கப்பூரில் உள்ளது போலவா?

    அமெரிக்காவில் ஆட்சி மொழி அல்லது அங்கீகாரம் பெற்ற மொழி என்ற‌ வரிசையில் இரண்டாவது மொழி என்றா சொல்கிறீர்கள்?

    அமெரிக்காவில் தமிழ் இரண்டாவது மொழியாக எங்கே ? (மாநிலம் அல்லது பெடரல் அரசாங்கத்தால்) யாரல்? அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று கேட்டுச் சொல்லுங்கள்.

    அப்படிச் சொல்லும் பட்சத்தில் நான் அத்யன் பின்னனி பெட்னாவா இல்லையா என்று சொல்கிறேன்.

    உங்களுக்காக தகவல்:
    தமிழ் ஓரள‌விற்கு தெரிந்து இருந்தால் (அதற்கான அளவு கோல் உண்டு) சில பல்கலைக்கழகங்களில் கிரடிட் உண்டு. (கிரடிட் என்பதை செமஸ்டரின் தேவைக்கான மதிப்பெண் என்று கொள்ளுங்கள்)

    ஆனால் அது பெட்னாவால் வந்தது என்று பெட்னா அவர்கள் தளத்தில் அவர்களது சாதனைப் பட்டியலில் பல்கலையின் பெயரோடு போடுமா? அல்லது உங்களின் நண்பரிடம் கேட்டுச் சொல்லுங்கள்.


    ****

    //மூன்று பல்கலைக்கழகத்தில் தமிழ் பாடமொழி ஆக்கப்பட்டு இருக்கிறது//

    பெட்னாவிற்கும் அந்தப் பல்கலைக் கழகங்களில் தமிழ் வந்தமைக்கும் தொடர்பு இல்லை.

    ***

    //சென்ற ஆண்டு ஆண்டு விழாவில் ஈழம் குறித்தான விழிப்புணர்வு பற்றி விரிவாகப் பேசினார்கள் இந்த ஆண்டும் பேசுவார்கள் //

    பேச வேண்டும் ஒரு அரசியல் அமைப்பாக இருக்க வேன்டும் என்பதே ஆசை.

    ***

    // ஈழத் தமிழர்களுக்காக தொடர் உண்ணாவிரதம் 180 நாட்கள் நடத்தியது பேரவை//

    ஐ நா கட்டிடத்தின் முன்பு நடந்ததா? அது பெட்னாவால் ஒருங்கிணைக்கப்பட்டது என்றால் அதற்கான விவரங்களைப் தர முடியுமா? நிச்சயம் அது நல்ல முயற்சி. எனக்குத் தெரிந்து அது வேறு ஒரு குழுவால் ஒருங்கிணைக்கப்பட்டது.

    **

    தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  4. சுட்டிகள் கேட்டிருக்கேன் தல!
    வந்ததும் பகிர்ந்துகிறேன்!

    நான் தமிழ்நாட்டில் ஒரு மூலையில் பொட்டி தட்டிகிட்டு இருக்கேன், எனக்கு அமெரிக்காவில் என்ன நடக்குதுன்னு எப்படி தெரியும், நண்பரின் தகவலை பகிர்ந்திருக்கேன், மறுப்பவர்களும், ஏற்பவர்களும் உரையாடலுக்கு வரட்டும்!

    ReplyDelete
  5. .
    வால்,
    நிச்சயம் இது ஒரு நல்ல அமைப்பாக , தமிழ் மக்களின் அரசியல் அமைப்பாக இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை.

    அதற்காகவே நான் இது குறித்து பலரிடம் பேசியுள்ளேன். ஆனால் பெரும்பாலும் சினிமா, டான்ஸ், கவித , கருவாடு , ஜாலி ,கூட்டம் ..என்றுதான் மனநிலை. :-((((

    உங்களையோ உங்களுக்கு தகவல் கொடுத்த நண்பரையோ குறை சொல்லவில்லை. நல்ல முறையில் செல்லாதா என்ற ஆதங்கமே.


    ***

    இந்தச் சுட்டியில் நடந்த உரையாடலில்

    தமிழ் பெரும் விழா - தாமரை - வைரமுத்து: Fetna 2009 - II
    http://thekkikattan.blogspot.com/2009/07/fetna-2009-ii.html

    ... சுந்தரவடிவேல் சொன்னது


    //பேரவை இன்னும் மேம்படவேண்டும் என்ற ஆதங்கம் எனக்கும் உண்டு. நோக்கம் என்று ஒன்று இருந்தாலும் அதை நோக்கி எவ்வளவு தூரம் இப்பேரவை பயணித்திருக்கிறது என்பது, கல்வெட்டு கேட்டிருப்பதைப் போன்று, முக்கியமான கேள்வி. இது குறித்தும், விகடன் கட்டுரை குறித்தும் எழுதலாம் என இருக்கிறேன்.//

    அவராவது எழுதுவார் என்று நினைத்தேன் . அதற்கு அடுத்து அவர் ஏதும் எழுதவில்லை. :-(((



    உங்கள் தகவலுக்கு:

    1. கனேடிய மற்றும் அமெரிக்கத் தமிழர்கள் இணைந்து, அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன் நடத்தும் மாபெரும் பேரணி! http://sundaravadivel.blogspot.com/2009/02/blog-post_15.html


    2. அட்லாண்டா தமிழ்ச் சங்கம்
    வாரீர் ! நாளை அட்லாண்டா மாநகரில் பேரணி !
    http://sundaravadivel.blogspot.com/2009/02/blog-post.html

    3.Rally on Capitol Hill: PEARL joined with U.S. Campaign for Burma
    http://www.pearlaction.org/rally.php

    // பேரணியை ஒழுங்கு செய்திருப்பது PEARL என்ற இளைஞரமைப்பு. //

    வாஷிங்டனில் நாங்கள் கண்ட கறுப்பு ஜூலை பேரணி
    http://sundaravadivel.blogspot.com/2008/07/blog-post_26.html


    *******

    "பெட்னா" மின்னின்று ஏற்பாடு செய்த நிகழ்விற்கான சுட்டி கிடைத்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    .

    ReplyDelete
  6. ஜிகினா ஸ்ரீக்களை முன்னிலை படுத்தும் விழாவை வன்மையாக கண்டிக்கிறேன்.

    எனக்கும், அவர்கள் வலைத்தளத்தில் போடப் பட்டுள்ள காணொளி பார்த்ததும், கடுமையான கோபம் வந்தது.

    கவிஞர் தாமரை மற்றும் பேராசியர் பர்வீன் சுல்தானா தவிர்த்து வேறு யாரும் தமிழில் பேசவில்லை.

    லஷ்மிராயும், தமிழினத்துக்கும் என்னய்யா சம்பந்தம்???

    திரைப் படத் துறையினரை முன்னிலைப் படுத்துவதால் “கலை விழா” என்று அவர்கள் சொல்லிக் கொள்ளலாம்! அதற்காக, தமிழ், தமிழினம் என்று கலைஞர் மாதிரி உட்டாலக்கடி எல்லாம் அடிக்கக் கூடாது.

    ReplyDelete
  7. 40000பேர்
    கொல்லப்பட்ட தினத்தை அமெரிக்க அதிபர் முன்றலில் பேரவையினர் கடைபிடித்தததின் படம் இதில்
    http://fetna.org/images/PDF/2010MalarFront.pdf


    நண்பர் பகிர்ந்தது!

    ReplyDelete
  8. நன்றி வால்!
    தகவலுக்கு.

    பெட்னா வருடா வருடம் மறக்காமல் செய்வது இந்த மனமகிழ் விழாக்கள்தான். அரசியல் சமூகம் தவிர்த்து அதிக பொழுது போக்கு குழுவாகவே இருக்கிறது.

    இன்னும் இது பெட்னாவால் முன்னெடுக்கப்பட்ட ஒன்றா என்று தெரியவில்லை. விசாரித்து பகிர்ந்து கொள்கிறேன். தவறாக இருந்தால் திருத்திக் கொள்கிறேன்.

    ReplyDelete
  9. .

    வால்,
    மிகவும் தவறான தகவலைப் பகிர்ந்து கொண்டு உள்ளார் உங்கள் நண்பர். :-(((

    நீங்கள் கொடுத்த பெட்னா மனமகிழ் மன்ற ஆண்டுவிழா மலரில் உள்ள படம் "Tamil Genocide Remembrance Day " (தமிழ் ஜினோசிட் ரிமெம்பரன்ஸ் டே) யில் நடந்த நிகழ்விற்கான படம்.

    அதை ஏற்பாடு செய்தவர்கள் "United States Tamil Political Action Council

    இவர்கள் "அமெரிக்க தமிழ் அரசியல் செயல்பாட்டுக் குழு"வைச் சார்ந்தவர்கள். இவர்கள் பெட்னா ம‌னமகிழ் மன்ற டான்ஸ் பார்ட்டிக் கும்பல் அல்ல.

    United States Tamil Political Action Council
    http://www.ustpac.org/

    (இது போல இந்திய அமெரிக்க பொலிடிக்கல் போரம் என்று ஒன்றும் உள்ளது . அவர்கள் அஜென்டா தனி http://www.iafpe.org/)

    ***

    இவர்கள் (United States Tamil Political Action Council) 2009 ல் வெளியிட்ட அழைப்பு மற்றும் திட்டம்.

    http://www.ustpac.org/Documentation%5Cmay15_remembrance_logistics_final.pdf


    ***

    மேலும் இது உல‌க அளவில் நடந்த ஒன்று .நினைவுக் கூட்டங்கள் எந்த எந்த இடத்தில் என்று நடக்கும் என்பதற்கான குறிப்பு

    http://tamilnational.com/news-flash/2413-remembering-may-2009-tamils-worldwide-commemorate-mullivaikal-massacre-in-may-2009.html

    ***

    நீங்கள் கொடுத்துள்ள படம் இங்கேயுள்ளது. மேலும் தெளிவாக பல விசயங்களுடன்.
    http://tamilnet.com/art.html?catid=13&artid=31764

    இதையும் பார்க்கவும்.
    http://www.tamilsagainstgenocide.org/


    ****


    பெட்னா ஒரு மனமகிழ் டான்ஸ்/ பொழுது போக்கு கூட்டம்.

    இந்த அமைப்பில் சில நல்லவர்கள் உள்ளார்கள். மறுப்பதற்கு இல்லை. ஆனால் 90 சதவீதம் ஜிகினா சிரி இரசிகக்கூட்டம் மற்றும் கவிதை கதை பொழுது போக்கு விரும்பிகள் .

    அடுத்த வருடம் எந்த நடிகையை அழைப்பது அவர்களைத் தங்கவைக்க நல்ல ஓட்டல் எது என்று இந்த விழா முடிவிலேயே சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள். ரொம்ப பாக்கியவான்கள்.

    **

    சில தனி மனிதர்கள் தாங்களாக Tamil Genocide Remembrance Day
    ல் கலந்து கொண்டார்கள் அவர்கள் பெட்னாவில் உறுப்பினராக இருக்கலாம்.
    அதற்காக இது பெட்னா நடத்தியது என்று சொல்வது மாகா அயோக்கியத்தனம் அல்லவா?


    ***

    உங்கள் நண்பர் Tamil Genocide Remembrance Day
    க்கு பெட்னாதான் காரணம் என்றால் அதற்கான பெட்னாவின் சுற்றறிக்கையை தந்து உதவட்டும். தவறு என்றால் திருத்திக் கொள்கிறேன்.

    .

    ReplyDelete
  10. நிச்சயம் இதையும் பகிர்ந்து கொள்கிறேன் தல!

    ReplyDelete
  11. .
    நன்றி வால் ,
    புரிதலுக்கு

    பொழுது போக்கு டான்ஸ் பார்டிகளில் காட்டும் ஆர்வத்தை இவர்கள் வேறு விசயங்களிலும் காட்டினால் நல்லது . இவர்களின் அடிப்படை நோக்கமே டான்ஸ் என்றால் விட்டுவிடாலாம் .


    ஆனால் "சேர்ந்தே இனம் காப்போம்" என்று லட்சுமிராய் அழைக்கும்போது கடுப்பைக்கிள‌ப்புது யுவர் ஆனர்.

    .

    ReplyDelete
  12. கல்வெட்டு, எதைப் பற்றியும் முழுவதும் அறிந்துகொள்ளாமலே, அல்லது யாரோ சிலர் கொடுத்த தவறான தகவல்களை வைத்து மட்டுமே என்ன வேண்டுமானாலும் எழுதுவது உங்களைப் போன்றவர்களுக்கு அழகல்ல. பெட்னா மானாட்டில் சினிமாக்காரன்களும் அழைக்கப் படுகிறான்கள் என்பதற்காக பெட்னாவைப் பற்றியோ, அதன் வரலாற்றைப் ப்ற்றியோ அல்லது இதுவரை எவ்வளவு இன்னல்களுக்கிடையே அவர்கள் செய்ய முயன்றிருக்கிறார்கள் என்பதைப் பற்றி அறிந்து கொள்ளாமல் வாய்க்கு வந்தபடி எழுதுகிறீர்கள்.

    அமெரிக்க மண்ணில் நீங்கள் என்றைக்காவது ஒரு தமிழர் அமைப்பில் சேர்ந்து பணியாற்றியிருந்தால் உங்களுக்கு அதன் வலி புரியும். ஏன் உங்களைப் பற்றியும் கூட உங்களுடைய நண்பர் ஒருவர் சொன்னார். நீங்கள் வாசிங்டனுக்கு அருகில் வசித்த போதும் ஒருநாள் கூட தமிழ்ச்சங்கம் பக்கம் எட்டிப் பார்த்ததில்லையென்று. ஆனால் அப்பொழுது வளைகாப்பு, பிறந்தநாள் விழா என்று உல்லாசமாகத்தான் இருந்ததாகச் சொல்வதை வைத்து நீங்கள் ஒரு உருப்படாத பேர்வழி என்று சொல்வது முட்டாள்தனமல்லவா?

    http://kalvetu.blogspot.com/2005_08_01_archive.html
    http://kalvetu.blogspot.com/2005/09/03-3.html
    http://kalvetu.blogspot.com/2005/09/04-4.html

    வாசிங்டன் தமிழ்ச்சங்கம் அப்பொழுது ஒன்றும் கிழிக்கவில்லை என்று சொல்லாதீர்கள். நீங்கள் அங்கு வாழ்ந்தபோதுதான் வாசிங்டன் தமிழ்ச்சங்கம் அறிஞர்களை அழைத்து திருக்குறள் மாநாடு நடத்தியுள்ளது. மேரிலாந்து மாநில அரசே திருக்குறள் வாரம் என்று அறிவித்துப் பெருமை செய்தது.

    http://www.thirukkural2005.org/


    உங்களுக்கு அதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் பழமை பேசியின் பதிவில் போய் என்ன கிழித்தீர்கள் என்பீர்கள்.

    இதையும் கொஞ்சம் படியுங்கள்:

    http://fetnathiruvizha.blogspot.com/2007/06/fetna-3.html

    வலையில் எழுதிக் கிழிப்பது மட்டுமே சாதனை என்று சிலர் இருக்கிறீர்கள். நீங்களும் அந்த இரகத்தில் சேர்ந்து விடாதீர்கள். தமிழ் மக்களை ஒருங்கிணைப்பது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. சினிமாக்காரன்களைப் பார்க்கிறதுக்கும் ஒரு பெருங்கூட்டமிருக்கு. அப்படி வந்தவன்களை இருக்க வைத்து எலின் சாண்டர், பாய்டு போன்ற அமெரிக்கர்களை வைத்து ஈழப்பிரச்னையை எடுத்துச் சொல்வது எளிதான காரியமல்ல. முடிந்தால் உபகாரமாக இல்லாவிட்டாலும், உபத்திரமாக இல்லாமல் இருக்க முயலுங்கள். மக்களைத் திரட்டி ஏதாவது ஒரு பணி செய்ய முயன்று பாருங்கள். எவ்வளவு கஷ்டமுன்னு தெரியும்.

    முதலில் இந்தப் பின்னூட்டத்தை வெளியிடுறிங்களான்னு பார்க்கலாம்.

    சிங்காரவளவன்

    ReplyDelete
  13. .

    சிங்காரவளவன்,

    1. நான் ஒன்றும் செய்யவில்லை. உண்மை.

    2. நான் வாசிங்டனில் வாழவில்லை. அது ஒரு பயணக் கட்டுரை.

    3. நான் மக்களைத் திரட்டி ஒன்றும் செய்யவில்லை. உண்மை.

    4. நான் வெட்டியாகவே இருக்கிறேன். உண்மை.

    5. நான் யாரிடமும் காசு வாங்கி சினிமாக் கூத்து நடத்தவில்லை. உண்மை.

    6. காபரே டான்ச் வைத்தால் நல்ல கூட்டம் வரும் . உண்மை.

    7.வலையில் எழுதிக் கிழிப்பது மட்டுமே சாதனை என்று நான் இருப்பதால், நீங்கள் சொன்ன இந்தச் சுட்டியைப் படிக்கவில்லை என்றே வைத்துக் கொள்ளுங்கள்.http://fetnathiruvizha.blogspot.com/2007/06/fetna-3.html

    8.உருப்படாத சங்கம் என்று நான் நினைத்து, அதில் சேர்ந்து இயங்காமல் நான் இருந்தால் அது மற்றவர்களுக்கு தவறாகத்தான் தெரியும். நீங்கள் என்னை தாராளமாக உருப்படாத பேர்வழி என்று சொல்லலாம்.

    உங்களின் கருணைக்கு நன்றி.


    **

    நான் என்ன செய்யவில்லை என்று சொல்ல எடுத்த முயற்சியில் ஒரு பங்காவது எடுத்து "சினிமா டான்ஸ் குழு பெட்னா" என்ன செய்தது என்று சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன்.


    ***


    http://fetnathiruvizha.blogspot.com/2007/06/fetna-3.html

    இதை ஏற்கனவே படித்து உள்ளேன். இதையும் வரிக்கு வரி விமர்சித்து எழுதலாம். இதை பெட்னாவின் தளத்தில் அதிகாரபூர்வ சாதனையாக போட்டுவிட்டால் பாரட்டவோ அல்லது விமர்சிக்க இயலும். செய்வீர்களா?


    **



    சினிமா நயகிகளை புக் செய்யவும் அவர்களை அழைத்து வந்து விருந்தோம்பவும் நீங்கள் படும் கஸ்டம் புரியாமல் பேசி விட்டேன். மன்னித்துவிடுங்கள் அய்யா.

    :-(((


    காபரே முலம் நடந்தாலும் தமிழ் வளர்ந்தால் சரி.


    **

    லட்சுமிராயயுடன் சேர்ந்து டமில் வளர்ப்போம்.

    ReplyDelete
  14. /*
    from http://fetnathiruvizha.blogspot.com/2007/06/fetna-3.html
    ...பாரம்பரியக் கலைகளையும், கிராமியக் கலைகளையும்...
    ...விளிம்புநிலை மட்டும் ஒடுக்கப் பட்ட இனத்தவர்களின் பிரதிநிதிகளை...
    ...நல்ல இலக்கியவாதிகளையும் எழுத்தாளர்களையும்...
    ...அமெரிக்க மண்ணில் நிரந்தரமாகத் தமிழாராய்ச்சியில்...
    ...முதியோர் மற்றும் அனாதை இல்லங்களில் உணவு...
    */
    Normal days these are fine and even appreciatory.
    But on the crisis(genocide), as a grand organization what the f*** you have done?. demonstrations? petitions? - what sangam done?.

    Month after the crisis you had festival ??? for what ???
    Don't say people talked and people applauded?

    If people die, language no need to live...
    If it's for tamil, work for people first then work for language.
    Without people, what the hell sangam gona do with language?

    Apologies for the word "f***", but i have to use it.

    a personnel experience...

    1)a tamil sangam near pittsburg, they had a function on those crisis period(yea, function to sing, dance - for kids, can't blame kids...the moral adults), in end of function speech, assistant head of sangam, with his bad feelings talked about doing something for genocide and etc. he been singled out after the function and advised not to talk those things in function ...

    2)for the feb-17(friday) white house demonstration I asked a friend to join, he said he wants to but he can't take a leave...after that i met that friend and couple of more frineds in a family meeting...those two friends even went to extream, reasoning out that they don't want to be in trouble of getting monitored by taking part in these kind of rallies (they work for a bank in illegal money laundering division)...

    ....

    people die...i mean, with blood and bare bone, people die... our own people...people talk same language..people live across 14 miles...
    what we care about, i can't take leave, i don't want to monitored, promote tamil language...
    if we can't safeguard the tamil people, why save the language, let it die too. what the f*** we gona do with language with out people... can tamil sangams realize that?

    lots of individuals couldn't stomach the crisis, wondering how a sangam can do functions, celebrations....

    ReplyDelete
  15. கல்வெட்டு அவர்களுக்கு!

    செம்மொழி குறித்த உங்கள் பதிவுக்காக எங்கிருந்து இங்கே வந்தேன் என்று ஊர் சுற்றலில் தெரியவில்லை.ஊரோட ஒப்பாரிகளையெல்லாம் அப்புறம் தள்ளி விட்டு இன்று கல்யாணம் நடப்பதால் அது பற்றி கருத்து சொல்வதில் பயனில்லை.

    டான்ஸ் பார்ப்பதோ,கவித வாசிப்பதோ,ஜிகினா பூசுவதோ சொந்த மண்னைக் கடந்த சூழலில் மிக முக்கியம்.

    ஒன்று சேர்வதே ஒருவரை ஒருவர் அடையாளப்படுத்திக் கொள்ளும் சூழலை உருவாக்குமென்பதால் நான்கு சுவருக்குள் முடங்குவதை விட இது சிறந்தது என்பேன்.

    மற்றபடி கேளிக்கைகளையும் தாண்டி சென்றாக வேண்டிய கட்டாயமும் நமக்கு இருக்கிறது என்பதில் உடன்படுகிறேன்.

    ReplyDelete
  16. ராஜ நடராஜன்,
    சாரயக்கடை என்று போர்டு போட்டு சாராயம் விற்பதில் தவறே இல்லை அந்த அந்த நாட்டுச் சட்டங்களுக்கு இணங்க.

    ஆனால் இட்லிக்கடை என்று சொல்லிவிட்டு, பிரதர் "சாராயமும் வித்தால்தான் கூட்டம்வரும்..சராயம் சும்மா கூட்டம் சேர்க்க சைட் டிஸ். போன முறை ஜினுக்கு சிகாமணிக்குதான் கூட்டம் வந்தது. இட்லி விற்கவே இல்லை. மக்கள் இப்படி இருந்தால் நாங்கள் என்ன செய்ய" என்று சொல்வதை ஏற்கமுடியவில்லை.

    இது "நல்ல படம் எடுத்தால் யார் பார்க்கிறார்கள் அதனால் பிட்டுப் படமும் சேர்த்து எடுக்கிறோம் " என்று சொல்வது போல உள்ளது.

    **

    வருடத்திற்கு ஒருமுறை டான்ஸ் பார்ட்டியையோ அல்லது கபரே ஷோவையோ நடத்திவிட்டு, அதில் அவரும் காசில் தனியாக "இனம் காக்க ஒரு செயல்திட்டக் கூட்டம்" போட்டால் நல்லது. நாய் வித்த காசு குரைக்கவா போகிறது?

    நான் கேட்பது எல்லாம் இவர்களிடம் இனம் காக்க என்ன செயல்திட்டம் உள்ளது?

    அதை வெளியிட்டால் தெரிந்து கொள்ளலாம். அதற்கான ஆதரவையோ அல்லது ஒத்துவராதபோது விமர்சனத்தையோ வைக்கலாம்.

    ***

    உங்களுக்குத் தெரியுமா?..

    ஏ. ஆர் ரகுமான் என்ற ஒருவர் இதே நேரத்தில் அமெரிக்காவில் யாபாரம் நடத்துகிறார்.

    அப்படியே சுத்தமான வியாபாரம். இதில் எந்த வருத்தமோ அல்லது எதிர்ப்போ யாரும் சொல்லமுடியாது.

    ஏன் என்றால் அவர் எந்தச் சேவையும் செய்வதாகவோ எந்த இனத்தையும் காக்கப்போவதாகவோ அவர் தளத்தில் சொல்லவில்லை.

    http://www.arrahmanlive.com/concert/abouttour.html

    சுய தொழில் செய்பவர் தொழில் நிமித்தம் ஊர் சுற்றுகிறார்.

    ***
    ஆனால்,

    செந்தமிழால் சேர்ந்திணைவோம்
    செயல்பட்டே இனம் காப்போம்


    என்று சொல்லிக் கூட்டம் சேர்க்கும்போது

    1. இனம் என்றால் யார்?
    2. அதைக்காக்க என்ன திட்டம் உள்ளது?
    3. அதில் லட்சுமிராயின் பங்கு என்ன?
    4. இனம் காக்க வருபவன் டான்ஸ் இருந்தால்தான் வருவேன் என்று சொன்னால் அவன் என்ன மாதிரி இனத்தைக் காக்கப்போகிறான்?
    5. 1000 பேர் வந்து டான்ஸ் பார்ப்பதை "டான்ஸ் பார்ட்டி" என்று சொல்லலாமே தவிர அதில் 100 பேர் இனம் காக்கவும் வந்தார்கள் என்பதற்காக அதை இனம் காக்கும் மாநாடு என்று சொல்ல முடியுமா?

    **

    ஒவ்வொரு ஊரிலும் டான்ஸ் நடத்தும்போது அந்த ஊர் மேயரிடம் இருந்து சான்றிதழ் வாங்கி வெளியிடுவார்கள் இவர்கள்.

    http://fetna.org/images/PDF/WaterburyMayor.pdf

    பொறுப்பில் இருப்பவர்களில் பலர் அமெரிக்க பிரஜை. இனம் காக்க மேயரையோ அல்லது கவர்னரையோ சந்தித்து பேசிய செய்தியை இவர்கள் தளத்தில் வெளியிட்டால் நிச்சயம் எனது கருத்தை மாற்றிக் கொள்கிறேன்.

    ஒபாமா நினைத்தால் அழிவுப்போரை நிறுத்த முடியும் என்ற ஒரு நிலையில் 'பெட்னா' , ஒபாமாவைச் சந்திக்க அல்லது அவர்கள் பகுதி செனட்டர், காங்கிரஸ் மேனைச் சந்திக்க இந்த அமெரிக்க பிரஜைகள் என்ன முயற்சி எடுத்தார்கள்?

    ***

    இங்கே பேசப்போகும் Dr Ellyn Sue Shander க்கு இந்தியாவிற்கான விசா அரசியல் காரணங்களால் மறுக்கப்பட்டபோது ஒரு பேரவையாக இவர்கள் இந்திய தூதரகத்தில் என்ன முயற்சி எடுத்தார்கள்?

    http://www.deccanchronicle.com/chennai/india-denies-visa-us-rights-activist-081

    //The Indian visa of Dr Ellyn Sue Shander, a US-based humanitarian worker and a strong critic of Sri Lankan government, was cancelled by the Indian mission at New York,
    //

    இப்படி நிறையச் சொல்லலாம்.

    ****

    United States Tamil Political Action Council
    http://www.ustpac.org/

    என்ற அமைப்பு சில நல்ல வேலைகளைச் செய்தது. ஆனால் இவர்கள்? :-(((

    குறிப்பு:
    அகதியாக அல்லது வேலைக்கான விசாவில் இருப்பவர்கள் அரசியல் போராட்டங்கள் நடத்தவோ அல்லது இணைத்துக் கொள்ளவோ முடியாது.

    சும்மா வருத்தக் கூட்டங்களில் பங்கேற்கலாம்.

    ஆனால்... ‌அமெரிக்க பிரஜையாக இருப்பவர்கள் என்ன செய்கிறார்கள்? இனம் காக்க என்ன திட்டம் உள்ளது? என்பதே ஆதங்கம்.


    **

    கதை,கவிதை,கருமாதி எல்லாம் தமிழகத்தில் உள்ளது சொரணையைத்தவிர. :-((((

    இவை எல்லாம் பொழுது போக்கு விசயங்கள். கனிமொழிகூட கவிதை எழுதுபவர்தான். இதனால் என்ன பயன்? இனம் எப்படி காக்கப்படும்?

    **

    வாங்க பொழுதைப் போக்குவோம் என்று அறைகூவல் விட்டால் யார் கேட்கப்போகிறார்கள் இவர்களை?

    **

    ReplyDelete
  17. இப்பொழுதுதான் முழுக்க படித்தேன். பின்னுட்டங்களும் சேர்த்து...

    பெட்னா இன்னும் காத்திரமான அரசியல் செயல்பாடுகளுடன் அமெரிக்க பார்லிமெண்ட்டில் எண்ணங்களை விதைக்குமாறு அவசியம் இயங்கணும்.

    ReplyDelete