Wednesday, June 27, 2018

அறியாமையும் முட்டாள்தனமும்:முன்னோர்கள் முட்டாள்களா? இல்லை நீங்களா?

ந‌டுநிலைப் பள்ளிப்படிப்பின் போது (டீன் வயது) ஒரு நாள் படுக்கையில் ஒன்னுக்குப் போய்விட்டேன். எங்கோ சென்றுவந்த அலுப்பு. கனவா? நிசமா?என்று தெரியாமல், நண்பனுடன் தியேட்டர் மூத்திரச் சந்தில் , மூத்திரம் போகும் கனவு வந்த போது, என் மூளை என் பைப்பை படுக்கையிலேயே திறந்துவிட்டிருந்தது காலையில்தான் தெரிய வந்தது.

மகனுக்கு என்னவோ ஆகிவிட்டது. ஒற்றைப்பனைமரம் பக்கம் வெளிக்கிப் போனபோது, முனி அடித்திருக்கலாம், என்று பயந்து , எருக்கார அக்காவிடம்  எனக்கு தண்ணி அடித்து (மூஞ்சியில் அடித்து) விபூதி பூசச் சொன்னார் அம்மா. அதையும் தாண்டி சோசியரையும் பார்த்து வரவேண்டும் என்று என் அப்பாவிடம் சொல்லிவிட்டார்.  

**
ஒரு பிரபல சோதிடரின் அருகில் வளர்ந்தவன் நான். அவரின் செயல்கள், பேச்சுகள் அனைத்தும் சிறுவயதில் அறிந்தவன். அந்த சோதிடர் எங்கள் பக்கத்துவீடு என்பதால், ஒன்னுக்குப்போன கதை தெரிந்தால் அவமானம் என்று(நான்தேன்), அடுத்த தெருவில் உள்ள அவரின் தம்பியிடம் போனோம். 

இந்த தம்பி சோதிடர்  எங்கள் பகுதியில் பேமசான சோதிடர் . கேப்டன் விசயகாந்திற்கு அவர்தான் ஆஃச்தான சோதிடர். அந்த ஆஃச்தான சோதிடர், நான் பத்தாவதில் ஃபெயில் ஆவேன் என்று கணித்தார். 1986 ல் நான் வாங்கிய 445/500 மதிப்பெண் பட்டியலை அவரிடம் சென்று காட்டவேண்டும் என்று என் அப்பாவிடம் அடம்பிடித்தேன். "விட்றா விட்றா" என்று சொல்லிவிட்டார் அப்பா. ஆனால் அடுத்தமுறை அவரை தெருவில் பார்த்தபோது எனது மார்க்கை மறக்காமல் சொல்லிவிட்டேன்.
**

என் அம்மா எழுதப் படிக்கத் தெரியாதவர். சூரியனைப் பார்த்து தினமும் ஒரு கும்பிடு போட்டுவிட்டுத்தான் சாப்பிடடுவார். அவருக்கு, சூரியன் என்பது கிரகமா? நட்சத்திரமா? என்பது எல்லாம் தெரியாது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள நவகிரகங்கள் சிலைகளில் சூரியனும் ஒருவர். அவ்வளவே அவரின் புரிதல். 

சனிபகவான், ராகு & கேது பட்டாளங்களில் சூரியனும் ஒரு சாமியைச் சுத்துவதற்கு ஒன்பது பேரைச் சுற்றினால் நல்லதுதானே? எனவே  அறிவியல் சார்ந்த கேள்விகள் என் அம்மாவிடம் இருந்தது இல்லை. அறிந்துகொள்ளவும் இல்லை ஆர்வமும் இல்லை. அவருடைய உலகம் தேங்கிவிட்ட ஒன்று. அதுவே அவருக்குப் போதும் என்றும் இருந்துவிட்டார்.

இங்கே, சூரியன் குறித்த விசயத்தில் என் அம்மா அறிவியல் அறியாதவர். இது அறியாமை. அல்லது கற்க வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடியாத என் தாத்தா செய்த குற்றம். 

அறியாமை என்பது முட்டாள் இல்லை. அறியாமை என்பது அறியாமை அவ்வளவே.

ஆனால், சூரியனை நட்சத்திரம் என்று பள்ளியில் படித்து, அதைத் தேர்விலும் எழுதி ,அதன் அடிப்படையில் பிழைப்பையும் ஓட்டிக் கொண்டு , தனது பிள்ளைகளுக்கும் அதையே பயிற்றுவித்து , அதே சமயம்,  , 'ராகு கேது சந்திரன்  சூரியன் எல்லாமே கிரகம்' என்ற அடிப்படையில் உள்ள பழைய சோதிட முறையை இன்றும் ஏற்று/ நம்பி செயல்பட்டால்,  அவர்கள் முட்டாள்களே. இவர்கள் என் தலைமுறையினர். முன்னோர்கள் இல்லை.

அறியாமைக்கும் முட்டாள்தனத்திற்கும் இதுதான் வேறுபாடு.

**

நான் ஒருபோதும் என் இன்றைய புரிதலின் அடிப்படையில் முன்னோர்களின் அந்தக் காலத்திய‌ செயல்களை எடைபோடுவது இல்லை. அந்தக் காலத்தில் அவர்களின் புரிதலில் அவர்களின் செயல்கள் சரியாக இருந்திருக்கலாம். அவர்களுக்கு வாய்த்த அறிவியல் அவ்வளவுதான்.

என் தலைமுறையினர், முன்னோர்களின் அந்தக்காலச் செயல்பாடுகளை, சடங்காக இன்னும் செய்து கொண்டு, "அதுதான் சரி" என்று சொல்லும்போது, நிச்சயம் அவர்களை முட்டாள் என்று சொல்லலாம்.
**

"ஆன்மீகம் என்பது அயோக்கியத்தனத்தின் பசுத்தோல்" என்பது எனது கருத்து. யாராவது ஆன்மீகம் என்ற பெயரில் அறிவியல் கருத்துகளை திரிக்குக்போது, அவர்களை முட்டாள்கள் என்று சொல்வேன். அப்படிச் சொல்வதால் நான் எல்லாம் அறிந்தவன் அல்ல. அந்த பேசுபொருளில்/உரையாடலின் நிகழ்வில் (In that context) உங்களை நான் முட்டாள் என்று சொல்வதால், நான் எல்லாம் அறிந்தவன் அல்ல. 

நான் எல்லாம் அறிந்தவன் என்று நீங்களாக கற்பனை செய்தால், உங்களின் கடவுளை நீங்களே அவமதிக்கிறீர்கள் என்று பொருள். உங்கள் நம்பிக்கையின்படி,  உங்கள் கடவுளே எல்லாம் அறிந்தவன். எனவே என்னை இணை வைக்காதீர்கள்.

**
~ எனது அம்மா எழுதப் படிக்கத் தெரியாதவர். என் அப்பா ஆசிரியர். யாரும் அவரிடம் "உன் மனைவிக்கு சொல்லிக்கொடுத்துவிட்டு, பள்ளிப் பிள்ளைகளுக்கு பாடம் எடு"  என்று சொல்லவில்லை. "மனைவிக்கு சொல்லித்தர முடியாதவன், எங்கள் குழந்தைக்குப் பாடம் எடுப்பது போலித்தனம்" என்றும் சாடை பேசவில்லை.

~எனது பாட்டி, பின் கொசுவம் வைத்து ரவிக்கை இல்லாமல் சேலை கட்டுபவர். என் அம்மா, முன் கொசுவம் வைத்து கட்டிய காலத்தில், யாரும் அவரிடம் "உன் அம்மாவைத் திருத்த முடியாத நீ ஏன் இப்படி கட்டுகிறாய்" என்று சொன்னதில்லை.

~என் மனைவி இறைச்சி உண்பவர். அவரிடம் யாரும் "உன் புருசனை இறைச்சிக்கு மாத்தாமல் நீ மட்டும் உண்பதும், அது நல்லது என்று பிள்ளைகளுக்கும் பழக்குவதும் போலித்தனம் " என்று பேசியதில்லை.

~"இறைச்சி சாப்பிடும் மனைவியுடன் எப்படி வாழ்கிறாய்? அவரை இறைச்சி மறுக்கச் செய்யாமல், நீ மட்டும் காய்கறி,முட்டை தின்று வாழும் வாழ்க்கை போலி" என்று என்னை யாரும் விமர்சித்தது இல்லை. 

ஆனால் , "Idea of god ஐ நீ ஏற்காத போது உன் மனைவி ஏற்கிறாரே? அதனால் நீ போலியானவன்.வீட்டை மாற்றாமல் நீ பேசுவது போலி" என்று சாடைமாடையாக பேசுபவர்கள், ஆன்மீகவாதிகளே. 

அதே ஆன்மீகவாதிகள், "என் அம்மா சுரிதார் போடவில்லை. நீ மட்டும் எப்படி சுரிதார் போடலாம்?" என்று தங்கள் மனைவியைக் கேட்பது இல்லை. இதில் பலர் மது அருந்துபவர்கள். "தன் மனைவியையே மதுக்குடிக்க வைக்க முடியாதவர்கள், எப்படி பொது வெளியில் நண்பர்களுடன் மது அருந்தலாம்?" என்ற கேள்வியை எந்த முற்போக்குவாதியும் கேட்பது இல்லை. (அப்படிக் கேட்டால் அவர்கள் ஆன்மீகவாதிகூட்டத்தில் சேர்த்துவிட்டுவிடுங்கள்.)

உங்கள் அப்பா டை கட்டவில்லை என்பதற்காக நீங்கள் கட்டாமல் இருப்பதில்லை. அவரை கட்டவும் வற்புறுத்துவதில்லை. அதே சமயம், உங்கள் நண்பனிடம்  "டை கட்டுவது இன்டர்வியூக்கு நல்லது" என்று சொல்வீர்கள். சரியா? நிலைப்பாடுகள் இப்படித்தான் இருக்கும்.

ஆனால், idea of god ல் மட்டும் வேற்றுச் சிந்தனைகள் உள்ள மனிதர்கள் சேர்ந்து வாழவே முடியாது என்பவர்கள், அதே கருணையும், அன்பும், சமத்துவமும் பேசும் ஆத்திகர்கள்தான். அப்படியானவர்கள் மூடர்கள் என்பதில் தவறில்லையே?

**
Idea of god ஐ ஏற்காதவர்களை "நம்பிக்கையில்லாதவர்கள்" என்றும் "நாத்திகவாதிகள்" என்றும் சொல்கிறார்கள். இதையெல்லாம் மறுபேச்சுப் பேசாமல் இன்முகத்தோடு ஏற்கவேண்டும்.  ஆனால், அறிவியலை அறிந்து கொள்ளாதவர்களை , அறியாதவர்கள் என்றும், அறிந்தும் 'சூரியனை கிரகம்' என்று நம்பி சோதிடம் பார்ப்பவர்களை, முட்டாள்கள் என்று சொன்னால் வருந்துகிறார்கள்.
**

ஏற்றத்தாழ்வு
------------

எனது அம்மா எழுதப்படிக்கத் தெரியாதவர். எனக்குத் தெரியும். இது ஒப்பீடு அல்ல. Just a fact 

கடவுள் என்ற கருத்தை ஏற்றவர் ஆத்திகர் ஏற்காதவர் நாத்திகர். இது ஒப்பீடு அல்ல. ஒரு கருத்தில் வேறு நிலை.

ஒரு குறிப்பிட்ட விசயத்தைப் பேசும் போது அறிந்தவர் என்பதும், அந்த விசயத்தை அறியாதவர் என்பதும் வெறும் fact.(In that context) இதில் என்ன உயர்வு தாழ்வு உள்ளது?

அடுத்தவரை "கடவுளை அறியாதவர்" (நம்பிக்கையற்றவர்/நாத்திகர்) என்று சொல்வது சரியானால், reasoning /evidence தேடதாவரை  "அறிவியல் அறியாதவர்" என்று சொல்வது சரியே.

அறிவியல் அல்லது கடவுளைத் தெரிந்தவர்கள் உயர்ந்தவரும் இல்லை .அதைத் தெரியாதவர்கள் தாழ்ந்தவரும் இல்லை. இது ஒப்பீடு அல்ல. Statement /fact
**
ஒன்று செய்வோம். நீங்கள் எங்களை நம்பிக்கையில்லாதவர்கள் என்றும் நாங்கள் உங்களை அறிவியல் தெரியாதவர்கள் என்றும் எதிர்மறையாய் விளிக்காமல், எங்களை நீங்கள் "அறிவியல் அறிந்தவர்கள்" என்று சொல்லுங்கள். நாங்கள் உங்களை "கடவுளை அறிந்தவர்கள்" என்று சொல்கிறோம். சரியா?
**

ஒரு கருத்துக்கு எதிர்கருத்து உள்ளதாலும், அதைப் பேசுவதாலும், பகிர்வதாலும், அது "மற்றவர்களைத் திருத்தும் நோக்கில் செய்யப்படும் செயல்" என்ற பார்வை தவறானது. உங்களைக் கண்காணித்து நல்வழிப்படுத்த வேண்டியது உங்களின் imaginary friend தானே தவிர என் வேலை அல்ல. 

**
"The idea of God is the sole wrong for which I cannot forgive mankind."
-Marquis de Sade

Idea of god 

"Idea of god" is a comforting one. It helps lot of people to move forward.That doesn't mean that idea is a proven fact. Its is simply a choice for people to handle their emotion and/or whatever it is. 

Those people must understand, that there are few people still exists. They try to do reasoning and look for scientific evidences . They separate faith , beliefs, facts etc. 
-Kalvetu
**

No comments:

Post a Comment