Tuesday, March 19, 2019

2019 Election For True State Representation :தமிழகத்தின் நோக்கமாக இருக்க வேண்டியது

1. வெளியுறவுக் கொள்கை முடிவுகளில், அடுத்த நாட்டுடன் கடல், நில எல்லையைப் பகிரும் மாநிலங்களின் கருத்து முதல் நிலையில் இருக்க வேண்டும். State inclusive decision on foreign policy. State interest first.

2. கவர்னர் &சனாதிபதி பதவிகள் நீக்கப்பட வேண்டும். State representative union govt.ல், கவர்னர் என்பது conflict of interest. Parliament (இரு சபைகளும்) approve செய்த மசோதாவை சனாதிபதி காலம் தாழ்த்துவது conflict of interest.

3. கல்வி என்பது மாநிலங்களின் உரிமையாகவே இருக்க வேண்டும். மத்திய அரசு பரிந்துரை மட்டுமே செய்யலாம். இறுதி முடிவு அந்த மாநில சட்டசபையின் முடிவாகவே இருக்க வேண்டும். NEET, 5th, 8th exam போன்ற குளறுபடிகள் உடனே களையப்பட வேண்டும்.

4. கடவுச்சீட்டு(passport) ஆங்கிலத்துடன் அந்த அந்த மாநிலங்களின் மொழி அட்டையில் இருக்க வேண்டும். நாட்டைவிட்டு செல்லும் போது பயன்படும் ஆவணத்தில் இந்தி தேவையற்றது. பார்வையற்றவர்களுக்கு Brille எழுத்துகள் அட்டையில் இருக்க வேண்டும்

5. இரயில் போக்குவரத்து என்பது மாநில மக்களின் அக்கறைகொண்ட  மண்டலங்களாக இயங்க வேண்டும். அந்த அந்த மாநிலங்களின் மொழி முதன்மையாகவும்,  இரண்டாவது ஆங்கிலமாகவும் மூன்றாவது அந்த மண்டலம் அமைந்துள்ள கூட்டு மாநிலங்களின் விருப்ப மொழி.

6.மாநிலத்தின் தலைமை மற்றும் முக்கிய பதவிகளில் இருக்கும் மத்திய துறை அதிகாரிகள்,அந்த அந்த மாநிலத்து அதிகாரிகளாக இருக்க வேண்டும். 70%அந்தந்த மாநில மக்களும்30% பிற மாநில மக்களும் இருக்கலாம் போன்றதொரு State represent சட்டம் must

7. India is a union of states. மாநிலங்களுக்கு அரசு இலச்சினை (state seal) வாழ்த்துப்பாடல் (State Anthem) உள்ளது போல, மாநில கொடிகள் குறித்தான சட்டம். தேசியக் கொடி , மாநிலக் கொடியை விட இரண்டடி உயரமாக பறக்கவிடவேண்டும்.

8. நதிநீர் பங்கீடு குறித்தான சட்டம்.  இதை ஒரு living document ஆக இருக்குமாறு. அதாவது வறட்சி காலத்தில் என்ன செய்வது , வெள்ளம் வரும்போது என்ன செய்வது போன்ற வழிகாட்டுதலுடன்.

9. மத்திய அரசின் மானியங்களில் (சமையல் எரிவாயு) நடந்த குளறுபடிகள் முற்றிலும் களையப்பட வேண்டும்.

10.கைரேகை, கண் retina , பெயர், முகவரி என்று அனைத்தையும் ஒரு அட்டையிலும் ஒரு database லும் வைத்திருக்கும் ஆதார் ஒரு அழிவுக்கான பார்முலா. ஆதாரை அழித்துவிட்டு,PAN , Voter # என்று தனியாக வைத்திருக்கும் முறைக்கு திரும்ப வேண்டும்.

11. பிறப்புச் சான்றிதழ் தவிர பாஃச்போர்டிற்கு எதுவும் தேவை இல்லை. வீட்டு முகவரி மற்றும் PAN# தவிர வங்கிகளுக்கு எதுவும் தேவை இல்லை. எல்லாவற்றையும் அனைவரும் கேட்கும் முறையை மாற்ற வேண்டும். டிசிட்டல் காலத்தில் இது security issue.

12. வடகிழக்கு மாநிலங்களின் பிரதிநித்துவம் MP க்கள் எண்ணிக்கை என்ற அடிப்படையில் உண்மையாக இல்லை. சின்ன மாநிலங்களுக்கு இது அநீதி.  Rajya Sabha பிரதிநிதித்துவத்தை அமெரிக்க செனட் போல அமைக்க சட்டம். அனைத்து மாநிலங்களுக்கும் இரண்டு (Rajys Sabha)  உறுப்பினர்கள் மட்டுமே irrespective of their MLA count in state assembly.

13. பல்கலைக் கழகங்களில் ஆளுநரை வேந்தராக வைக்கும் மரபு தேவையற்றது. மாநில அரசு நடத்தும் பலகலைக்கு.அந்த மாநில கல்வித்துறை அமைச்சரே வேந்தர். தனியார் பல்கலை இருக்கும் மாநிலத்தில் அந்த மாநிலத்திற்கு கட்டுப்பட்டது.

14. மாநில உயர்நீதி மன்றம்  தொடங்கி அதற்கு கீழே உள்ள நீதி அமைப்புகளில் அந்த மாநில மொழியே முதன்மை மொழி என்ற சட்டம். தலைமை நீதிபதி அந்த மாநிலத்தவர் அந்த மாநில மொழி தெரிந்தவர் என்ற சட்டம்.

15. பேச்சுரிமை என்பது even if you get offended I can say what I want என்று இருக்கவேண்டும்பத்திரிக்கை சுதந்திரம். Hate crime என்பது வேறு, விமர்சனம் என்பது வேறு. குடிமகன் அரசாங்கத்தை , நீதிமன்றத்தை விமர்சிக்க உரிமை வேண்டும்.

16. இயற்கைவளம் , கனிம வளம் போன்ற கொள்கை முடிவுகளில் அந்தந்த மாநிலங்களேஇறுதி முடிவை எடுக்க வேண்டும். தேசிய நலன் என்ற போர்வையில், மாநில வளங்களைச் சூறையாடுவதை தடுக்க சட்டம்.

17. தேசியப் பூங்கா என்பது.மரம் காடு மட்டுமல்ல. பரந்த கடற்கரையும் மீன் பிடி தொழிலும் கொண்ட மாநிலங்களை உள்ளடக்கி கடல்சார் பாதுகாப்பு திட்டம், புவி வெப்பமயமாதல் குறித்தான தொலைநோக்கு திட்டங்கள்.

18. சமூகச் சமநீதி அனைவருக்கும் கிடைக்கும் வகையில் மக்களை வர்ணம் பிரிக்கும் புத்தகங்களை குறித்தான விவாதமும், மத அமைப்புகள் நடத்தும் மேளாக்கள், நதிச் சீர்கேடு போன்றவற்றிற்கான வழிகாட்டும் சட்டங்களும் அவசியம்.

19. கட்சிகளுக்கு தனிநபர், தனியார் நிறுவனங்கள் கொடுக்கும் பணம் வெளிப்படையாக இருக்க வைக்கும் சட்டம். Make every paisa accountable.

20. இந்தியா ஒரு துணைக்கண்டம். அதன் நடுவண் அரசு என்பது Union of State என்பது சொல்லிலும் செயலிலும் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

https://twitter.com/kalvetu/status/1098594789480648711

No comments:

Post a Comment