Saturday, February 29, 2020

அப்பா 4: கடைசி இரவு பிறந்த மாநிலச் சீதனம்


மலகாசனின் வாழ்த்துச் செய்தியுடன் கோடைப் பண்பலை ஒலித்துக்கொண்டுள்ளது. மாலை 5:30 .
பூங்காற்று புதிதானது
புது வாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து .....
என்ற பாடலைக் கேட்டுக்கொண்டே இதை எழுதுகிறேன். இந்த மாலை வேலையில் சூடாக ஒரு டீ குடிக்க ஆசை. அப்பாவின் நண்பர் ஒருவர் வந்து சென்றார்.அவரும் ஓய்வு பெற்ற ஆசிரியரே. அப்பாவைவிட இளமையானவர். அப்பா அவரிடம் பேசிக்கொண்டே நடந்து கொண்டு இருந்தார். அப்பாவின் ஒரு மணி நேர நடைப் பயிற்சிக்கான நேரம் இது. தவம் போல் நடந்து கொண்டுள்ளார்.

வைகிங் பனியனுக்கான நேரம் என்று கோடைப் பண்பலை நேரம் சொல்லிச்சென்றது. விளம்பரதாரர் நிகழ்ச்சி என்ரு நினைக்கிறேன். வந்த இருவாரங்களில் மூன்று முறை துணி துவைத்துவிட்டேன்.இன்று இறுதியாக 10 ரூபாய் "சர்ப் எக்செல்" பவுடர் வாங்கி, காலை 9 மணிக்கு ஊற வைத்தது. மதுரைக்குச் செல்லும் முன் அலசிப் போட்டுவிடேன். இதோ இப்போது துணிகளை மடித்துக் கொண்டுள்ளேன்.

ரில் இருந்து அக்கா மகன், சாத்தூர் சேவும் மிட்டாயும் வாங்கி வந்தான். அனைத்தையும் அள்ளிப் போட்டுக்கொண்டு காலையில் கிளம்ப வேண்டும். எழுதிக் கொண்டிருந்த போதே, 'தாய் மாம்' உடன் பேருந்து நிலையக்கடையில் டீ சாப்பிட்டுவிட்டு வந்தேன். "கோட்டமேட்டுக்கடை" என்று சொல்லப்படும் டீ கடையின் டீயே ஃச்ட்ராங்கானது என்ற நம்பிக்கை இன்னும் பலருக்கு உள்ளது. அந்தக்கடைக்காரர் அருகில் உள்ள "கோட்டைமேடு" என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.

டுத்த எப்போ வருவது? வரும் போது அப்பா இருப்பாரா? போன்ற விடையில்லா கேள்விகளுடன் போராடிக் கொண்டுள்ளேன்.அயல் வாழ்க்கை திரிசங்கு நிலையின் உறவுச் சிக்கல் இது. அண்ணன் அவன் பங்கிற்கு "பால் பன்" வாங்கி வந்து சாப்பிடச் சொன்னான். இப்படித்தான், இரு நாட்களுக்கு முன் அமெரிக்கத் தம்பிக்கு என்று, மதுரை செயராம் பேக்கரியில் "பிட்சா" வாங்கி வந்தான். மைதா ரொட்டியின் மீது ஏதோ போட்டிருந்தார்கள். அவனின் அன்பின் அடையாளம் அவனால் முடிந்த ஒன்று. சண்டைகள் பல இருந்தாலும் இது போன்ற தருணங்கள் நெகிழ்ச்சியானவை.

தூத்துக்குடியில் இருந்து மக்ரூன் (Macaroon), கோவையில் இருந்து ஏ-1 சிப்ச், சாத்தூரில் இருந்து முட்டாய் மற்றும் சேவு, திருச்சியில் இருந்து மயில் மார்க் இனிப்புகள், மதுரை பிரேம விலாச் அல்வா,கடைசி நேரத்தில் அண்ணன் வாங்கி கொடுத்த கடலைமிட்டாய் பாக்கெட்டுகள்,  என்று எனக்கு சீதனம் கொடுத்த மனிதங்களை நினைத்துக் கொண்டே பெட்டியில் அடுக்குகிறேன்.


திருச்சியில் இருக்கும் ஒரு சின்ன மாமியார், (மனைவியின் சித்தி) வீட்டு வேலை செய்பவர். ஒரு வாகன விபத்தில் கணவனை இழந்து தலைகீழாகிப்போன வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். அவர் வாங்கிக் கொடுத்த 200 கிராம் நிலக் கடலைப் பொட்டலம் அதிக அன்புடன் கனத்து. எல்லா நிலை மனிதர்களின் அன்பால் நிறைந்துள்ளது பெட்டி. "சாமி புத்தம் படிக்க மாட்டீக ஊறுகாயாவது சாப்பிடுவீக" என்று ஒரு சோசிய, யோகா தொழிலில் இருக்கும்  நண்பர் கொடுத்த ஊறுகாயும் உள்ளது பெட்டியில்.

எட்டு மணியில் இருந்து எட்டரைக்குள் இரவுச் சாப்பாடு சாப்பிட்டு படுத்துவிடுகிறார் அப்பா. முழுதான தூக்கம் இல்லை. நான் பெட்டியை அடுக்கும் போது வரும் தொலைபேசி அழைப்புகளை கவனிக்கிறார். கைபேசி வழியாக நான் தட்டிக் கொண்டிருப்பதைக் கவனித்து என்ன செய்கிறாய் என்றும் கேட்கிறார். அவரிடம் சொல்லிவிடேன் நான் என்ன செய்கிறேன் என்பதை. ஒன்றும் சொல்லவில்லை அவர்.

இரவு பதினொன்றுக்கு மணிக்கு "கடுக்காய் பொடி" கலக்கி குடிக்கிறார். இன்று அப்படி அதற்காக எழுந்திருக்கும் போது, கோடைப் பண்பலையில் "இரவுச் சிறகு" நிகழ்ச்சி வரும் என்று சொன்னார். சிறிது நேரம் அவருடன் சேர்ந்து கேட்டேன்.

"இன்னுமா எடுத்து வைக்கவில்லை" என்றார். அமெரிக்காவிற்கு செல்லும் விமானங்களில் ஒதுக்கப்படும் எடை அளவையும், எடை பார்த்து வைக்கவேண்டிய முறைகளையும், ஏன் அப்படி என்றும் விளக்கினேன். அம்மா இருந்த காலங்களில் அப்பா எதையும் கண்டு கொள்வது இல்லை. அம்மாதான் எங்களைச் சுற்றி சுற்றி வருவார். ஓட்டில் சொருகி வைத்துள்ள சில காகிதங்களை எடுத்து "இத போனதடவை விட்டுட்டுப் போயிட்ட வேணுமா பாரு" என்பார். அது ஏதேனும் கடை இரசீதாக அல்லது எதுவாகவோ இருக்கலாம். எழுதப் படிக்கத் தெரியாத அம்மாவிற்கு, பிள்ளைகள் மறந்துபோகும் காகிதங்கள் எல்லாம் முக்கியமான பட்டயங்களாய் இருந்தது.

அம்மா இல்லை என்ற நிலையில், அப்பா கேட்டு வைக்கிறார். இப்படிச் செய், அப்படிச் செய் என்று அவரளவில் சொல்கிறார். பிடிவாத மனிதர்களின் அன்பு இப்படித்தான் இருக்கும்.பொட்டியை கட்டியாகிவிட்டது. அப்பாவும் படுத்துவிட்டார். காலையில் மதுரையில் இருந்து விமானம். அம்மா இருந்தவரை கார் வரை வந்து அனுப்பி வைப்பார். கடந்த இரண்டு முறையாக யாரும் அப்படி வருவதில்லை. அப்பாவால் வர முடியாது. வீட்டில் சேரில் இருந்து கொண்டே வழியனுப்பி வைப்பார்.

காலையில் சீக்கிரம் எழுந்துவிட வேண்டும். பேருந்து நிலைய டீக்கடையில் டீ சாப்பிட்டுவிட்டு , தினத்தந்தி பேப்பர் வாங்கி, அப்பாவிற்கு ஆர் கே நகர் அரசியலை அப்டேட் செய்ய வேண்டும்.

Dec 16,2017

Friday, February 28, 2020

தனித்துவத்திற்கான விலை: கடலையும் Guys' Place ம்

மெரிக்காவில் , எனது அனுபவத்தில் , நான் பார்த்த "இலவச கடலை" கொடுக்கும் கடைகள்.

Five Guys என்ற "பர்கர்" கடையும் Guys' Place என்ற "பார்பர்" கடை & Texas Road House என்ற உணவகம். இங்கு , வறுத்த கடலை இலவசம். இத்தனைக்கும் கடலைக்கும் இவர்கள் தொழிலுக்கும் தொடர்பு இல்லை.

காத்திருக்கும் நேரத்தில் , கொறிப்பதற்காக வறுத்த கடலை வைத்திருப்பார்கள். எவ்வளவு வேண்டுமானாலும் திங்கலாம். கடலைப் பிரியனான எனக்கு ,இது ஒரு போனசு. இதற்காகவே நான் இந்த கடைகளுக்குப் போவேன்.

Texas Road House என்ற உணவகத்தில் கடலையை சாப்பிட்டு அதன் தோலை நீங்கள் சுதந்திரமாக தரையில் எறியலாம்.  அமெரிக்காவில்தான் "Peanut Allergy" என்ற "கடலை ஒவ்வாமை" அதிகம் உள்ளது.  அப்படி ஒன்று இருப்பதே எனக்கு அமெரிக்கா வந்தவுடன்தான்  தெரியும்.

"Peanut Allergy" உள்ளவர்களால் இந்தக் கடைகளுக்குள் வரவே முடியாது. இது ஒரு குறிப்பிடத்தக்க வருமான இழப்பு இந்த நிறுவனங்களுக்கு. ஆனால் , இதையும் கணக்கில் கொண்டு அல்லது இதையும் தாண்டி , "இப்படித்தான் நாங்கள்" , என்று உள்ளது இவர்களின் பிசினசு மாடல்.

ல்லோருக்கும் பிடித்தவனாக இருக்க வேண்டும் என்பது, மனிதனை சாம்பாராக்கிவிடும். 

ழப்புகள் இருக்கும் என்பதை உணர்ந்தே (with consciousness) , தேர்ந்தெடுக்கும் பாதையில், இழப்பு என்பது, சுய சமநிலைக்கு அவசியம் என்றே நினைக்கிறேன்.

Tuesday, February 25, 2020

இன்னும் வாசிக்கப்படாத பக்கங்கள்

இறந்தவர்களின் உடல்கள், தினமும் வந்து போகிறது 
இறுதிப்பயண மருத்துவமனை பரிசோதனைக்கு.

இறுதிப்பயண ஊர்திகள் நிற்கிறது ஊரின் எல்லையில்.
இறக்கும் பயணியை எதிர்பார்த்து. 

சில மாலைகளைக் கட்டுகிறார்கள் பூ விற்பவர்கள்.
சில சாவுகளாவது நிச்சம் என்று.

மயானம் இயங்கிக் கொண்டே இருக்கிறது
மறந்தும் விடுப்பு எடுக்காமல்.

எனது இறுதிப் பக்கங்கள் இன்னும் வாசிக்கப்படவில்லை.
ஆனால் அது நிச்சயம் புனைவாய் இருக்காது.

எனது உடலும் கரியாகும் அல்லது புலிக்கு உணவாகும். 
ஏதோ ஒரு நெடுஞ்சாலையில் சிதறி அடிக்கவும்படலாம்.

வாழ்க்கையின் நோக்கம் 
வாழ்வது தவிர வேறொன்றும் இல்லை. 

வாழ்வின் சில தடைகளுக்கு 
நடுவிரலைக் காட்டி நகர்ந்துவிடுதலும் கலையே. 

Sunday, February 23, 2020

அமெரிக்க தேர்தல் பழகுவோம் 6: ஒரு கட்சியின் உட்கட்சி தேர்தலில் அடுத்த கட்சி வாக்களிக்கலாம்

ந்தப் பகுதியை எழுதிக்கொண்டிருக்கும் நாளில் பெர்னி சான்டர்ச் Nevada Caucus ல்  இமாலய வெற்றியைப் பெற்று டெமாக்ரடிக் கட்சியின் முன்னணி வேட்பாளராக தன்னை நிறுத்திக்கொண்டுள்ளார். இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம் என்றாலும், இந்த நாளின் இது எனக்கு மகிழ்ச்சியான செய்தி. அமெரிக்க அரசியலில், நேரில் சென்று விசில் அடித்து ஆரவாரம் செய்து நான் ஆதரிக்கும் அரசியல்வாதி பெர்னி சான்டர்ச். 

தை எழுதும் இந்த நேரத்தில்தான் "அதிபர் ட்ரம்ப் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம்" என்று செய்திகள். மோடியும் ட்ரம்ப்பும் ஒரே மாதிரியான சித்தாங்கள் உடையவர்கள். அமெரிக்காவரும் எந்த இந்திய Prime Minister யும், அமெரிக்க அதிபர், அதிபர் அலுவலகம், தூதர் அலுவலகங்கள் தாண்டி யாரும் கண்டுகொள்வதே இல்லை. அமெரிக்காவில் இருக்கும் காங்கிரசு மற்றும் செனட் சபைகள்கூட கண்டுகொள்ளாது. இங்கிருக்கும் முன்னாள் இந்தியர்கள் FCI (Former Citizen of India ) மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களில் NRI (Non Resident Indian) சிலர் ஏதேனும் கூட்டங்களுக்கு வரவழைத்து பேசுவார்கள். வாசிங்டனில் ஒரு தெருவின் போக்குவரத்தைக்கூட மாற்ற மாட்டார்கள். ஒரு ஓரமாக ஒரு வண்டி போக வழிவிடுவார்கள் அவ்வளவே. வெள்ளைக்காரர்களை (மேற்குலகம்) அருகில் வைத்துக்கொள்வதோ அல்லது அவர்கள் எனக்கும் நண்பர்கள் என்பதோ இந்தியாவில் காலம்காலமாக இருக்கும் ஒரு அடிமை மனநிலை.
ங்கே இருக்கும் இசுகான் தொழில் நிறுவனங்களில் வெள்ளைக்காரன் சிலையைத் தொடலாம். ஆனால் இந்திய வம்சாவழி தாழ்த்தப்பட்ட மக்கள் தொடமுடியாது. 2016 அமெரிக்க அதிபருக்கான பொது தேர்தலில் வெற்றி பெற்ற ட்ரம்பின், பதவியேற்பு விழா நிகழ்ச்சிக்கு வந்த அவரின் இரசிகர்கள், கட்சிக்காரர்களைவிட அதிக கூட்டத்தை இந்தியாவில் கூட்ட மோடி & கம்பெனி முயற்சிக்கிறது ஏன்? இது இந்தியாவின் வலிமையைக் காட்டாது. உலக அரங்கில் இது ஒரு சர்க்கசாகவே பார்க்கப்படும்.
டுத்துக்காட்டாக, அதிபர் ட்ரம்ப் பிரான்சு நாட்டுக்குச் செல்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள், இப்படியான சர்க்கசுகளை அந்த நாடும் , அந்த மக்களும் நடத்துவார்களா? இங்குதான் நாம் வேறுபடுகிறோம். உது ஒரு உளவிய‌ல் பிரச்சனை. சினிமா இரசிகர் மன்றம் தொடங்கி, கத புத்தகங்களின் இரசிகர் மன்றங்கள் தொட்டு அரசியல் தாண்டி, மக்களின் பொது மனநிலையும் இப்படியே உள்ளது. கல்கத்தா பகுதியில் வெள்ளைக்காரர்கள் படையெடுத்த காலத்தில், மக்கள் போரிடாமல் வேடிக்கை பார்த்தே நிலத்தை இழந்த கதைக்குச் சொந்தக்காரர்கள். அது தனிக்கதை.

நீங்கள் அதிமுக உறுப்பினர். ஆனால் நீங்கள் திமுக உட்கட்சி தேர்தலில் வாக்களிக்கலாம் என்றால் எப்படி இருக்கும்? ஆம் அப்படியான நடைமுறைகள் அமெரிக்காவில் உண்டு. ரிபப்ளிகன் கட்சி உறுப்பினர் ஒருவர் , டெமாக்ரடிக் உட்கட்சித் தேர்தலில் வாக்களிக்கலாம். இவை எல்லாம் அந்தந்த மாநிலங்களின் நடைமுறை சார்ந்தது. அமெரிக்கா முழுமைக்கும் ஒரே மாதிரியான சட்டங்கள் இல்லை. தேர்தலை நடத்துவது கண்காணிப்பது எல்லாம் மாநிலங்களின் அதிகாரம். அது அமெரிக்க அதிபரின் தேர்தலேயானாலும் அதை எப்படி நடத்துவது என்பதை ஒவ்வொரு மாநிலமும் அதன் வசதிக்கேற்ப தீர்மானிக்கலாம்.

மெரிக்காவில் இருக்கும் முக்கியமான கட்சிகளான டெமாக்ரடிக் மற்றும் ரிபப்ளிகன் என்ற இரண்டு கட்சிகளும் loosely coupled framework போன்றது. இதுதான் எங்களின் கொள்கை என்ற திட்டவட்டமான இலக்கோ நோக்கமோ இருக்காது. அடிமை முறையை ஒழித்த ஆபிரகாம் லிங்கனும் (Abraham Lincoln), இன்று இருக்கும் அதிபர் டொனால்டு ட்ரம்பும் (Donald Trump) அதே ரிபப்ளிகன் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றால் , வரலாறு வெட்கப்படும். ஆம், நம்மூரில் இன்று எம்சியாரும் எடப்பாடியாரும் ஒரே அதிமுக கட்சி என்றால், எம்சியாருக்கு எவ்வளவு அதிர்ச்சியாக இருக்குமோ அப்படித்தான்.

யாரும் எந்தக் கட்சியாகவும் அவர்களே அறிவித்துக்கொள்ளாலம் என்று பார்த்தோம்.
அமெரிக்க தேர்தல் பழகுவோம் 4: கட்சித் தலைமை உங்களை விலக்க முடியாது!
https://kalvetu.blogspot.com/2020/02/4.html

அதைவிட இன்னொரு விசயம் ஒரு உட்கட்சி தேர்தலில் அந்த கட்சி உறுப்பினர்கள் தவிர மற்றவர்களும் வாக்களிக்கலாம் என்ற விசயங்கள். இந்திய அரசியல் அமைப்பில் இருந்து இதைப் பார்க்கும் போது பேரதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால், இதுதான் அமெரிக்க உட்கட்சி தேர்தல்களில் சிக்கலும் , சிறப்பும் ஆகும். உட்கட்சி தேர்தலில் யார் ஓட்டுப்போடலாம் என்பதில் மூன்றுவிதமான முறைகள் உள்ளது. ஒரே கட்சியின் தேர்தல்கூட, மாநிலத்திற்கு மாநிலம் அது நடத்த‌ப்படும் முறைகள் வேறுபடும். எனவே இதை டெமாக்ரடிக் அல்லது ரிபப்ளிகன் என்றோ அல்லது ஏதோ ஒரு மாநிலத்திற்கான முறை என்றோ அணுகாமல் பொதுவான ஒரு முறையாகப் பார்ப்போம்.


உட்கட்சி தேர்தலில் Caucus & Primary என்ற இரண்டு முறைகள் உள்ளது. அவை இரண்டுக்குமான வேறுபாடுகளை முந்தைய கட்டுரையில் பார்த்தோம்.
அமெரிக்க தேர்தல் பழகுவோம்-2:Presidential Election Primaries & Caucuses
https://kalvetu.blogspot.com/2020/02/2presidential-election-primaries.html

இந்த  Caucus & Primary என்ற இரண்டு முறைகளிலும்  உட்பிரிவாக 
  1. Open Caucus/Primary
  2. Closed Caucus/Primary
  3. Semi-Closed Caucus/Primary
Open
A registered voter may vote in any party regardless of his or her own party affiliation. 

Closed 
People may vote in a party only if they are registered members of that party prior to election day.

Semi-closed. 
Semi-closed systems, allow unaffiliated voters to participate as well.



டியாப்பச் சிக்கல் போன்றது இவை. நீங்கள் அதிகம் தெரிந்துகொள்ள அதிக குழப்பமே மிஞ்சும். இந்த முறைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். ஒரு மாநிலம் Open Caucus முறையில் உட்கட்சி தேர்தலை நடத்தும், அருகில் உள்ள இன்னொரு மாநிலம் Closed Caucus முறையில் நடத்தும். நீங்கள் எந்தக் கட்சியிலும் உறுப்பினர் இல்லாவிட்டாலும், அந்தக் கட்சியின் தேர்தலின் போது வாக்குச் சாவடியிலேயே , உறுப்பினராக  பதிவு செய்து Same-Day Registration  ஓட்டும் போடலாம்.

Saturday, February 22, 2020

அப்பா 3: சகானாவின் இரசிகர் அப்பா

"கானாவப் பார்க்க போகலாம்பா" என்றேன். " சும்மா இர்றா. ஏதாவது வெட்டியா பேசிக்கிட்டு. நாளைக்கு ஊருக்குப் போற தேவையானதை எடுத்துவை" என்று, அவருக்கே உரிய கண்டிப்பில் சொல்லிவிட்டார்.

உங்களில் யாருக்கேனும் சகானாவைத் தெரிந்திருக்கலாம். எனக்குத் தெரியாது. சில அழகியல் விசயங்களில் அறிவியலை இழுத்து ஆழம் பார்க்கும் குணமுடையவன் நான். எனக்கான பகுத்தறியும் புத்தி சார் தேவை அது என்றாலும் , அழகியல் சமநிலையின் தேவை குறித்தான புரிதல் (consciousness) கொண்டவன். உதாரணத்திற்கு நீர் நிலைகள் மீது தீராத காதல் கொண்டவன்.

வாழும் ஊரில் நான் அதிகம் கேட்பது NPR 
பண்பலை. அதன் மாதாந்திர நன்கொடையாளர்கள் பட்டியலில் நானும்  உண்டு.

நேர்காணல் அல்ல ஒலி உரையாடல்:Radio Is Pure Sound
http://kalvetu.blogspot.com/2019/10/radio-is-pure-sound.html

மிழகத்தில் வானொலி பண்பலையின் உரையாடல்கள் எனக்கு கடுப்படிப்பவை.  "உங்க வாய்சு நல்லா இருக்கு மேடம். இதோ என் அண்ணாவும் பேசனுமாம். அவன்கிட்டயும் பேசுங்க" போன்ற பேச்சுகள், தாடி பாலாசியின் மொக்கை மொழி அனைத்தும் என்னை ஓட ஓடத் துரத்துபவை. 



தமிழகத்தில் பொழுதுபோக்கு ஊடகம் சார்ந்த உரையாடல்கள் மற்றும் கிண்டல்கள், பெருவாரியாக தொலைக்காட்சி சீரியல் பார்க்கும் பெண்களைச் சுற்றியே நடக்கும். வானொலி பண்பலை குறித்து அவ்வளவு இல்லை. அப்படியே இருந்தாலும், தாடி பாலாசி போன்ற "சென்னை" சாம்பார்களைச் சுற்றியே இருக்கும். தொலைக்காட்சிக்கு முந்திய காலங்களில், வானொலி பண்பலை கிராம மக்களிடம் ஒரு பெரிய இடத்தைப் பிடித்திருந்தது. வேளாண்மை, நாடகம், சினிமா பாடலகள் என்று பலவகை ஒலிகள். பலவகை இரசிகர்கள் இருந்த காலங்கள் உண்டு. இப்போதெல்லாம் வெகுசன உரையாடல்களில்  பண்பலை என்பது சென்னை தாண்டி இல்லை என்பது போல , ஒட்டுமொத்த வெகுசன ஊடக பந்தியும், சாம்பார் பாலாசி போன்றவர்களால் நிறைந்து இருக்கும்.

ந்த இடத்தில்தான் "சகானா" வின் இருப்பும், தேவையும் என்னை ஆச்சரியப்படுத்தியது. தூக்கம் , சாப்பாடு நேரங்கள் தவிர , அப்பா உட்கார்ந்த இடத்தில் அப்படியே இருப்பார். நடை குறைந்துவிட்டது. வீட்டின் முன்னால், பழகிய இடம் என்பதால், மெதுவாக , ஒரு கையில் குச்சியுடனும் , மறுகையில் வீட்டுச் சுவற்றைப் பிடித்துக்கொண்டும் , ஒரு மணி நேரம் நடப்பார். மற்ற நேரங்களில் அவரின் ஒரே பேச்சுத்துணை கோடை பண்பலை.




ப்பாவின் அதிகபட்ச ஆடம்பரம் இந்த வானொலி மட்டுமே. கண் பார்வை குறைந்த அவரால், தொலைகாட்சி பார்க்க முடியாது என்பதுதாண்டி , இதுவே அவரின் பொழுபோக்காக பல ஆண்டுகள் உள்ளது. அக்கா பிள்ளைகள் எங்கள் வீட்டில் இருந்தவரை , வானொலி நிலையங்கள் மாறிக் கொண்டிருக்கும்.தாத்தா கேட்கும் நேரத்தில் அவருக்கான நிலையத்தை வைத்துவிடுவார்கள். கடந்த ஐந்து வருடங்களாக , கோடை பண்பலை மட்டுமே மாற்றப்படாமல் நிலைத்திருக்கிறது. யாரையும் அந்த வானொலியைத் தொடவிடமாட்டார் அப்பா. அவரே விரும்பினாலும் அவராக ஏதும் மாற்ற இயலாது. அப்பாவின் உரையாடல் தளம் இப்போது இந்த நிலையத்தில் உறைந்துவிட்டது.

ப்பாவிற்கும் சரி , திருச்சியில் இருக்கும் என் மாமியாருக்கும் சரி வானொலிப் பொட்டிகளை வாங்கிக்கொடுத்தவன் நானே. ஒவ்வொரு நாளும் அது அவர்களுடன் பேசிக் கொண்டுள்ளது.

கோடை பண்பலையில், இன்று நிகழ்ச்சி கேட்டுக் கொண்டிருந்த அப்பாவை , கலாய்த்துக் கொண்டிருந்தேன். எனது 'தாய் மாம்' , "அப்பாவுக்கு இதில பேசுறவுக பேர் எல்லாம் தெரியும். இந்த 'சகானா நேரம்' விரும்பிக் கேட்பார்" என்றார் 
சிரித்துக்கொண்டே.
அரசியல் மற்றும் சோசியம்தான் அப்பாவின் ஃபேவரிட் டாபிக். சினிமா பார்க்கவே மாட்டார். 50 அல்லது 60 வருடங்களுக்கு முன் படம் பார்த்திருப்பார் என்று நினைக்கிறேன்.நன்றாக நடந்து திரிந்து கொண்டிருந்த ஓய்வு நாட்களில், டீக்கடை அரசியல் பேசிக் கொண்டிருந்தவருக்கு, இன்று சகானா முக்கியமானவராயிருக்கிறார். அம்மா இருந்தவரை, ஏதாவது பொரணிகளை பேசிக் கொண்டிருப்பார். இப்போது அப்பாவுக்கு சகானா மட்டுமே தோழி.

ப்பா போல் எத்தனையோ பெரியவர்களுக்கு சகானாவும் அவரின் கோடைப் பண்பலை சகாக்களும் பேச்சுத்துணையாய், தினசரி வாழ்வில் ஒரு அங்கமாய் உள்ளார்கள். இங்கிருக்கும் நாட்களில் அப்பாவுடன் சேர்ந்து கேட்டுக் கொண்டுள்ளேன். அப்பா போன்ற முதியவர்களின் தோழியாய் உள்ளார் சகானா. அவர் மட்டுமல்ல அவரின் சகாக்களும்தான். நான் அமெரிக்கா திரும்புவதற்குள் ஒருநாள் சகானாவை பார்க்க அப்பாவை அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்தே அவரிடம் "சகானாவப் பார்க்க போகலாம்ப்பா" என்று சொன்னேன்.

அவருக்கே உரிய கண்டிப்புடனும் கடுகடுப்பும் சேர்த்து  "வேலையப் பார்றா. வெட்டியா ஏதாவது பேசிக்கிட்டு" என்று சொல்லிவிட்டார். ஓரளவு வெட்கமும் இருந்ததை என்னால் காணமுடிந்தது.அருகில் இருந்த என் தாய்மாமா, சிரித்துகொண்டே இதைப் பார்த்துக்கொண்டிருந்தார். 
நம் சமூகம் ஆசை இருந்தாலும் வெளியில் சொல்லாத ஒன்று. இதுவே ஏதோ ஒரு சக்கி சாமியார் என்ற போர்வையில் ஆன்மீக கொண்டாட்டம் என்றால் சமூகம் அங்கீகரிக்கும். சுலபமாக ஒரு ஆண் சாமியாரையோ பெண் சாமியாரையோ போய் பார்த்துவிட முடியும்.

"இல்லப்பா , உங்களைப் போல எத்தனையோ பெரியவர்களுக்கு கோடை எஃப் எம் ஒரு வடிகாலா இருக்கலாம். இப்படியான மனிதர்களை , நம் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்ப்பவர்களை, முடிந்தால் பார்த்து , நன்றி சொல்வது நல்லது. உங்களைப் போன்ற பெரியவர்கள், அவரின் இரசிகர்களாய் இருக்கிறீர்கள் என்பதை அறிந்தால் , அவர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்" என்றேன்.பிடிவாத அப்பா அதற்கு மேல் பேசவில்லை.

ம்மா இல்லை. எங்கள் வீட்டிலேயே வளர்ந்த என் அக்கா மகள்கள் இருவரும்  திருமணமாகி போய்விட்டார்கள். அண்ணனின் மகன் அப்பாவிற்கு துணையாக இருந்தான். அவனும் கல்லூரி, வேலை என்று சென்றுவிட்டான். அண்ணி வேலைக்குச் சென்றுவிடுவார். அண்ணன் அவனுக்கென்று சோலிகள். அப்பா தனிமையாகிவிட்டார் அவர் ஆண்ட அந்த வீட்டிலேயே. என் தாய்மாமன் மட்டுமே அப்பாவிற்கு இப்போது. அதுவும் அவர் சில நாட்கள் அவர் ஊருக்குச் சென்றுவிடுவார்.

அப்பாவிற்கு துணை என்பது, அவரை அண்டி வாழும் "கருப்பா" என்ற நாயும், கோடைப் பண்பலை சகானாவின் குரலும்தான். இதையெல்லாம் அருகில் இருந்து பார்க்கும் எனக்கு, கண்கள் குளமாகும். நான் அழுவது அப்பாவிற்கு தெரியாது. அவர் அவருக்கான சேரில் அமர்ந்திருக்க , நான் ஆளில்லாத அந்த வீட்டின் மூலையில் அழுது கொண்டிருப்பேன் என் 45 வயதில். 

நான் பிறந்து வளர்ந்த வீடு. சோலைபோல இருந்த ஒன்று இன்று பாலையாக‌ ஒடுங்கிவிட்டது. றுமுறை வரும்போது சகானாவைச் சந்திக்க அப்பாவை அழைத்துப் போக வேண்டும். அல்லது அவரை அழைத்து வரவேண்டும் ஊருக்கு. அப்பாவிடம் அன்றாடம் பேசுவதும் , அதிகம் பேசுவதும் அவரே.

உங்களுக்கு கோடைப் பண்பலை சகானா தெரிந்திருந்தால் , அவரிடம் சொல்லுங்கள், அவர் பல முதியவர்களின் பேச்சுத்துணையாய் உள்ளார் என்று. 

 💐💐💐

Dec 16, 2017

Monday, February 17, 2020

அமெரிக்க தேர்தல் பழகுவோம் 5: உங்களில் எத்தனை பேருக்கு இந்திய அரசியல் தெரியும்?

ரசியல் ஒரு சாக்கடை. அதுலேலாம் எனக்கு ஆர்வம் இல்லை. பூராம் சல்லிப்பயலுக. நீ அதுலேலாம் சேராத, ஒழுங்காப்படிச்சு நல்ல வேலைக்குப் போயி பொழைக்கி வழியப்பாரு.

ப்படியான உரையாடல்களை நான் கேட்டு வளர்ந்திருக்கிறேன். இன்றும் பலர் பேசக் கேட்டுள்ளேன் இந்தியாவில். என் அண்ணன் மகன் பொறியியல் கல்லூரிப்படிப்பு முடித்து ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். அவனிடம், "உள்ளூரில் இருக்கும் வார்டு தேர்தல் தொடங்கி, பாராளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவை வரை அடிப்படையாவது தெரியுமா? என்று கேட்டால் , "அது எதுக்கு சித்தப்பா என்பான்?"

நாம் என்ன மாதிரியான கல்வி கற்கிறோம்? பள்ளிக்கு என்ன உடை போடப்போகிறோம்? பள்ளியில் நாம் சாப்பிடப் போகும் உணவில் வெங்காயம் பூண்டு இருக்கலாமா? படித்த பிறகு வங்கி வேலை கிடைக்குமா? சேமித்த காப்பீட்டுப்பணம் இருக்குமா? உள்ளூர் ரயில் ஓடுமா? அடுத்த நாட்டுடன் போர் வருமா? நம்மூர் அருள்மிகு முனியாண்டி கோவில் "சிரி முனியாண்டி பகவான்" என்று மாறுமா?

வை அனைத்தையும், நாம் வாழப்போகும் வாழ்க்கையில் ஒவ்வொரு அடியையும் , பாதையையும் தீர்மானிப்பது அரசியல். உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ, நீங்கள் ஓட்டுப்போடுகிறீர்களோ இல்லையோ, உங்களை அறிஞர் அண்ணாவோ , எடப்பாடி பழனிச்சாமியோ யாரோ ஒருவர் ஆளப்போகிறார்கள். உங்களின் வாழ்க்கையை, உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை தீர்மானிக்கப்போகும் கொள்கை முடிவுகளை, எடுத்து உங்களின் வாழ்க்கையை சிதைக்கவோ அல்லது சிறப்பாக்கவோ செய்யமுடியும் அவர்களால்.

காந்தி தென்னாப்பரிக்காவில் அரசியலில் இறங்கியது குடியுரிமை சார்ந்த போராட்டத்தினால்தான். அண்ணாவும் கலைஞரும் அரசியலுக்கு வந்ததும், இன்று ரசினி அரசியலுக்கு வர நினைப்பதும் ஒரே காரணம் அல்ல. அது போல, அரசியலுக்கு வந்துவிட்டாலும், கமலுக்கு தமிழக அரசியல் குறித்து எதுவும் தெரியாது. ஏன் இட ஒதுக்கீடு? மதிய உணவிற்கு காமராசரும் , எம்சிஆரும், கலைஞரும் பட்ட துயரங்கள் என்ற வரலாறு தெரியாதவர் கமல். அவரும் அரசியல் கட்சி நடத்துகிறார்.

மெரிக்காவில் பள்ளிகளில் அரசிலமைப்பு கற்றுத்தரப்படுகிது. ஒரு சட்ட வரைவு (Bill /மசோதா) எப்படி சட்டமாகிறது என்பதில் ஆரம்பிக்கும் ஆரம்பக்கல்வி, மேல்நிலைப்பள்ளிகளில் அது விரிவடையும்.  விருப்பப்பாடமாக எடுக்கலாம். ந்தியாவில் வளரும் மனப்பாட மெசின்களைவிட ஒப்பீட்டளவில் இங்குள்ள குழந்தைகள் ஓரளவு அரசியல் கல்வி கற்கிறார்கள் எனலாம். 
I'm Just a Bill
https://www.youtube.com/watch?v=OgVKvqTItto

ப்போதும் இணைய தளங்களில், பஞ்சாயத்து சேர்மன், வார்டு கவுன்சிலர் என்ற அடிப்படை தொடங்கி, மசோதா, வெளிநடப்பு, கேள்வி நேரம், என்பதுவரை எதுவும் தெரியாதவர்கள இருக்கிறார்கள். இவர்கள், கையில் கட்டையுடன் ஒருவன் ஒரு பந்தை அடித்துவிட்டு எவ்வளவு முறை நட்டுவைக்கப்பட்ட மூன்று குச்சிகளை சுற்றி ஓடினான் என்பது குறித்தும், விசய், அசீத்து நடித்த பட போசுடர்களை வைத்து மணிக்கணக்காக விவாதமும் செய்வார்கள். ஆனால், இவர்களின் குழந்தைகளின் வாழ்வை பாதிக்கும், புதிய சட்டங்கள் குறித்தோ, குழந்தைகளின் வளர்ச்சியைப் பாதிக்கும் உணவு முறைகளில் அரசு எடுக்கும் சனாதன முடிவுகள் குறித்தோ அதிகம் கவலைப்பட மாட்டார்கள்.

ங்களை ஒருவர் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஆளுகிறார். உங்கள் வாழ்வைப் பாதிக்கும் முடிவுகளை எடுக்கிறார். உங்கள் படிப்பு உங்கள வேலை, உங்கள் சேமிப்பு, உங்கள நிலம் , உங்கள் வயல் , உங்கள மருத்துவம் என்று எல்லாம் பாதிக்கிறது. இதைத் தெரிந்துகொள்வது மட்டும் போதாது. ஒவ்வொருவரும் அவர்களின் பங்களிப்பைக் கொடுக்க வேண்டும். கட்டடங்களில் உள்ள கற்சிலைகளிடம் வேண்டி பயன் இல்லை. அவைகள் உங்களுக்கு என்றும் உதவாது. நீங்கள்தான் அதுக்கும் காசு கொடுக்கவேண்டும்.

ரசியலில் பழகுவதும், அதில் ஆக்கபூர்வமாக பங்கெடுப்பதும் ஒவ்வொரு குடிமகனின் கடமை. சிலைகளைப் பார்க்க கட்டிடங்களுக்கு வருடம் ஒருமுறை செல்லும் நேரத்தில் ஒரு போராட்டங்களிலாவது கலந்து கொள்ளுங்கள். 

நான் பலமுறை சொன்னது.
“A republic . . . if you can keep it.”


அமெரிக்க அரசியல் குறித்து இன்றும் இந்தியாவில் மேம்போக்கான பல பொதுக்கருத்துகள் உள்ளது. எடுத்துக்காட்டாக "அமெரிக்காவின் அதிபரை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கிறார்கள்" என்பது போன்ற தவறான தகவல்கள். தமிழில் அமெரிக்க அரசியல் களம் குறித்து விரிவான கட்டுரைகளோ அல்லது தகவல்களோ இருப்பதாக தெரியவில்லை. அதை ஆவணப்படுத்த முடிந்த அளவு முயல்கிறேன் நான். 

பிற நாட்டின் அரசியலைத் தெரிந்து கொள்வது, உள்ளூர் அரசியலை சீர்தூக்கிப் பார்க்க உதவும். 

எனவே அரசியல் பழகுங்கள் தோழர்களே!

Sunday, February 16, 2020

அமெரிக்க தேர்தல் பழகுவோம் 4: கட்சித் தலைமை உங்களை விலக்க முடியாது!

ட்சியின் தலைமைக்கு எதிராக அல்லது கொறடா போன்ற நடைமுறைகளுக்கு எதிராக செயல்பட்டாலோ, கட்சியின் கொள்கைகளை , ஒரு குறிப்பிட்ட விசயத்தில் விமர்சித்தாலே கட்சியை விட்டு விலக்கிவிடுவார்கள் நம்மூரில். இந்த காரணத்தினாலேயே, தனக்கு பிடிக்காவிட்டாலும் கட்சியின் நிலைப்பாட்டை எதிர்த்து வாக்களிக்க பலர் தயங்குகிறார்கள் இந்திய அரசியல் நடைமுறையில். இது ஒரு உண்மையான சனநாயகமாக எனக்குத் தெரியவில்லை.

மெரிக்காவில் டெமாக்ரடிக் கட்சி அல்லது ரிபப்ளிகன் கட்சியில் ஒருவர் சேருவதும்,விலகுவதும், அவரின் தனிப்பட்ட செயல். கட்சியின் தலைமை அல்லது பொறுப்பாளர்கள் எந்த ஒரு தனி நபரையும் விலக்கமுடியாது. அதுபோல, கட்சியில் சேர யாருடைய‌அனுமதியும் தேவை இல்லை. இவை அனைத்தும் Self Declaration தான். இன்று நானாக டெமாக்ரடிக் கட்சி என்று அறிவித்து அதைப் பதிவு செய்யலாம். நாளை அதில் இருந்து நானாக விலகலாம். நாளை மறுநாள் ரிபப்ளிகன் கட்சியில் என்னை இணைத்து பதிவு செய்யலாம். எந்தக் கட்சியிலும் சேராத Independent Voter என்றும் பதிவு செய்யலாம்.

ந்த சுதந்திரம், கட்சியில் அடிமை முறையை அழிக்கிறது. கட்சியின் சார்பில் எந்த தேர்தலிலும் நீங்கள் போட்டியிட யாரின் அனுமதியும் தேவை இல்லை. எடுத்துக்காட்டாக, இந்த அதிபர் போட்டிக்கான உட்கட்சி வேட்பாளர் தேர்தலில் நீங்கள் டெமாக்ரடிக் கட்சி வேட்பாளராக போட்டியிட ,அந்தக் கட்சியின் தேசியத் தலைமை அல்லது மாவட்ட, உள்ளூர் நிர்வாகிகளின் அனுமதி தேவையே இல்லை. நீங்களாக உங்களை அறிவித்துக்கொண்டு களத்தில் இறங்க்கிவிடலாம். உங்களால் மக்களைக் கவர முடிந்து, நீங்கள் வென்றுவிட்டால், நீங்கள்தான் வெற்றி வேட்பாளர். ந்த முறை இருப்பதால், கட்சி சார்பில் தேர்தலில் நிற்க டிக்கெட் கேட்டு யாரையும் யாரும் கேட்கத் தேவையில்லை. கட்சி தலைமைக்கு சால்ரா அடித்து பிழைக்க வேண்டிய தேவையும் இல்லை. 
நீங்கள் மக்களைத் திரட்ட முடிந்து, வென்றுவிட்டால், நீங்களே அந்தக் கட்சியின் முகம். இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு AOC என்று அறியப்படும் Alexandria Ocasio-Cortez தான். இவர் நியூயார்க் 14 வது மாவட்டத்தின் அமெரிக்க மக்களவை காங்கிரசு உறுப்பினர் (Member of the U.S. House of Representatives from New York's 14th district) . இவர் ஒரு ஓட்டலில் Waitress ஆகவும் Bartender ஆகவும் வேலை பார்த்த பட்டதாரிப் பெண். சமூகம் சார்ந்த பிரச்சனைகளால் உந்தப்பட்டு , அந்தப் பகுதியின் டெமாக்ரடிக் கட்சியின் பெரிய தலையான Joe Crowley,  என்பவரை எதிர்த்து 2018 ல் போட்டி போடுகிறார். Joe Crowley அந்த தொகுதியின்  Democratic Caucus Chair மட்டுமில்லாமல், அந்த 14 வது மாவட்டத்தின் காங்கிரசு உறுப்பினராக பத்து முறை இருந்த பெரும் புள்ளி. அவரை எதிர்த்து எங்கிருந்தோ வந்த இளம் பெண் , தன்னை டெமாக்ரடிக் கட்சி வேட்பாளராக அறிவித்துக்கொண்டு களத்தில் இறங்குகிறார்.

டெமாக்ரடிக் கட்சியின் உட்கட்சி தேர்தலில் Joe Crowley தோல்வியடையச் செய்து, அந்தக் கட்சியின் டிக்கெட்டைப் பெற்று, பொதுத் தேர்தலில், ரிபப்ளிகன் கட்சியின் வேட்பாளர் Anthony Pappas ஐ நவம்பர்,2018 ல் நடந்த தேர்தலில் தோற்கடித்து வெற்றிவாகை சூடுகிறார் AOC. இன்று இவர் டெமாக்ரடிக் கட்சியில் அமெரிக்க அளவில் மிகவும் நன்கு அறிமுகமான வெற்றி முகமகாத் திகழ்கிறார். இவர் பெர்னியின் ஆதரவாளர். இவரின் தேர்தல் வெற்றிக்கு பெர்னி தன் ஆதரவைத் தெரிவித்ததோடு களப்பணியிலும் இறங்கினார்.

ம்மூரில் உள்ளூர் மாவட்டச் செயலாளரை எதிர்த்து, கட்சியின் தலைமையின் அனுமதி இல்லாமல், ஒருவர் தேர்தலில் வென்று, அந்தக் கட்சியின் முகமாக மாறமுடியுமா? வெற்றி பெற்றாலும் கட்சியில் இருந்து விலக்கிவிடுவார்கள் சரியா? ஆனால், இங்கு வெற்றி பெற்றவரே கட்சியின் முகமகாக முவரியாக மாறிவிடுவார். 

கட்சியில் சேரவோ, தேர்தலில் அந்தக் கட்சியின் வேட்பாளர்களில் ஒருவராக உட்கட்சி தேர்தலில் போட்டியிடவோ யாரின் அனுமதியும் தேவையில்லை. யாரும் யாரையும் விலக்க முடியாது.

ஆனால், ஏற்கனவே இருக்கும் கட்சி பொறுப்பாளர்கள், புதியவரை எதிர்த்து உள்ளடி வேலைகள் செய்யலாம். அவரை தோற்கடிக்க , கட்சிப் பொறுப்பாளர்கள் அவருக்கு எதிராக வேலை செய்யலாம்.

Party Delegates

டெலிகேட் என்பவர்கள் தனிமனிதர்கள். இவர்கள் அந்தக் கட்சியின் சார்பாக ஒரு மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த மாநிலத்தின் பிரதிநிதியாக, கட்சியின் தேசிய மாநாட்டில் (National Convention ) கலந்து கொள்வார்கள். அப்படி, அனைத்து மாநிலங்களில் இருந்தும் வரும் இந்த டெலிகேட்கள் சேர்ந்து, அந்தக் கட்சியின் சார்பாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யார்? என்பதை,அந்த தேசிய கட்சி மாநாட்டில்தான் முடிவு செய்வார்கள். 

மாநிலங்களில் இப்போது நடக்கும் உட்கட்சி தேர்தல்கள் எல்லாம் ஒரு வேட்பாளர் எத்தனை Delegate களை அந்த மாநிலத்தில் பெறுகிறார் என்ற முடிவுகளே தவிர, அந்த மாநிலத்தில் அவர் வெற்றி பெற்றார் என்பது அல்ல. கட்சியின் வேட்பாளர் இவர்தான் என்று முடிவுசெய்வது, இறுதியில் ஒருவர் அமெரிக்க அளவில் மொத்தம் எத்தனை Delegates களைப் பெற்றார் என்ற கணக்கே தவிர , மாநில அளவில் அதிகம் பெற்றது தீர்மானிக்காது. இதனாலாதான், பல வேட்பாளர்கள் சில மாநிலங்களில் போட்டி போடுவதே இல்லை. எடுத்தகாட்டாக Iowa மாநிலத்தின் மொத்த Pledged Delegates களின் என்ணிக்கை 41. இது தேசிய அளவிலான டெமாக்ரடிக் கட்சியின் மொத்த Pledged Delegates களில் 1% அளவே. இங்கே செலவழிக்கும் நேரத்தையும் பணத்தையும் அதிக அளவு Delegates  எண்ணிக்கை உள்ள ஒரு மாநிலத்தில் செலவழிப்போம் என்று சில வேட்பாளர்கள் இப்படியான சின்ன மாநிலங்களை புறக்கணித்துவிடுவார்கள் உட்கட்சி தேர்தலில். கலிபோர்னியா மாநிலத்தின் மொத்த Pledged Delegates களின் எண்ணிக்கை 415. இங்கு பெறும் வெற்றியானது வேட்பாளரை முன்னணிக்கு கொண்டுவந்துவிடும். 

மைக்கேல் ப்ளூம்பெர்க் (Michael Bloomberg) என்பவர் பெரிய பில்லியனர். நியூயார்க் நகரத்தின் மேயராகவும் இருந்தவர். அவரும் இந்த 2020 டெமாக்ரடிக் கட்சியின் வேட்பாளர் தேர்வுக்கான தேர்தலில் களத்தில் குதித்துள்ளார். மற்றவர்கள் எல்லாம் Iowa and New Hampshire போன்ற மாநிலங்களில் கவனம் செலுத்திக்கொண்டு இருந்த போது , இவர் அவைகளை தவிர்த்துவிட்டு,அதிக அளவு Delegates களின் கொண்ட் மாநிலங்களில் கவனம் செலுத்திவருகிறார்.
Bloomberg Takes Untested Path to 2020, Skipping Key Contests 
https://www.bloomberg.com/news/articles/2019-11-25/bloomberg-takes-untested-path-to-2020-skipping-key-contests

மெரிக்கா முழுமைக்குமான Pledged Delegates 3,979  ஐ ஒவ்வொரு மாநிலத்திற்கும் இவ்ளவு என்று பிரித்து ஒதுக்குவார்கள் அந்தக் கட்சி நிர்வாகிகள். ஒரு மாநிலம் எத்தனை Delegates களைப் பெறுகிறது என்பது ஒரு விகிதாச்சரக் கணக்கு. இது கொஞ்சம் சிக்கலானது. இன்றுவரை என்னை குழப்பிக்கொண்டே இருக்கும் ஒன்று. எழுதும் போது புரிந்ததுபோல இருக்கும், பிறகு நானே குழம்பிக்கொள்வேன். மிகவும் விரிவான கணக்கிற்கு இந்த தளத்தில் நிறைய தகவல்கள் உள்ளது.

👇👇👇👇

https://ballotpedia.org/Democratic_delegate_rules,_2020
//The number of delegates awarded to each state is determined by a formula that factors the state's popular vote for the Democratic nominee in the previous three elections, the state's electoral votes, and when the state's primary is held.//

ற்கனவே நடந்த தேர்தல்களில் அந்த மாநிலத்தில் எத்தனை பேர் பங்குகொண்டு வாக்களித்தார்கள், அந்த மாநிலத்தின் கவர்னர் ,மற்றும் கட்சியின் பொறுப்பில் உள்ளவர்களின் என்ணிக்கை என்று ஒரு சிக்கலான கணக்கின் அடிப்படையில் ஒரு மாநிலத்திற்கான Delegates எண்ணிக்கை நிர்ணயிக்கப்படும். இது முழுக்க முழுக்க ஒரு கட்சி சார்ந்தது. ஒரே மாநிலத்திற்கு டெமாக்ரடிக் கட்சியின் Delegates களின் எண்ணிக்கையும் , ரிபப்ளிகன் கட்சியின் Delegates களின் எண்ணிக்கையும் மாறும். இது அவர்களின் உட்கட்சி பிரச்சனை. இதற்கும் மாநில அரசுக்கும் தொடர்பே இல்லை.

ந்த சிக்கலுக்குள் போகாமல், ஒரு மாநிலத்திற்கு ஒதுக்கப்படும் அந்தக்கட்சியின் Total Delegates களின் எண்ணிக்கை என்பது, அந்த மாநிலத்தில் கடந்த தேர்தல்களில் அந்தக் கட்சியின் வாக்குப்பதிவு எண்ணிக்கையின் விகிதாச்சர எண்ணிக்கையில் பிரித்துக் கொடுக்ப்படும் ஒன்று என வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த வகையில், அமெரிக்கா மொத்தத்திற்குமான Delegates களின் எண்ணிக்கையில், Iowa மாநிலத்திற்கு என்று இந்த 2020 ல் ஒதுக்கப்பட்டுள்ள எண்ணிக்கை.

USA Democratic Party 
Total Pledged Delegates = 3,979 total Unpledged Delegates or Automatic Delegates (aka Super Delegates) =771
Iowa 2020 
Total Delegates 49
  • Total Pledged Delegates:     41
    • District Delegate:         27
    • At- Large Delegate:       9
    • PLEO Delegate Votes:  5
  • Total Unpledged Delegates    8



Saturday, February 15, 2020

அப்பா-2:விலையில்லா பண்டம் "மனிதம்"

"நாலு இட்லி பார்சல்" என்று கேட்டு இரசீது வாங்கி , மதுரை அண்ணாநகர் 'அன்னபூர்ணா' உணவகத்தின் "பார்சல்" கவுன்டரில் நின்றேன். வீட்டில் இருந்து இட்லி கொண்டு வந்திருக்கலாம். ஆனால் அப்பாவுடன் போகும் போது அவர் நினைத்ததுதவிர ஒன்றும் நடக்காது. நடக்கவும் விடமாட்டார். கைகள் , விரல்கள் என்று உடல் நடுங்கும் அப்பாவிற்கு, உணவை கையில் எடுத்து சாப்பிட அவருக்கான சில வசதிகள் வேண்டும். வீட்டில் அது உள்ளது. பேப்பரில் பொட்டலமாக கட்டிக்கொடுக்கும் இட்லியை அவரால் சாப்பிடவே முடியாது. தட்டு போன்ற ஒரு தகரம் கிடைத்தால்கூட ரோட்டில் பொறுக்க தயாராக இருந்தேன்.

ட்டல் பார்சல் கவுன்டரில் கவலையுடன் நின்று கொண்டிருந்தபோது, அவர்களிடம் சின்ன செவ்வக வடிவில் அலுமினிய டப்பா ( Aluminium Foil Pressed ) இருந்தது பார்வைக்கு தெரிந்தது.

"பார்சலை அந்த கப்பில் கொடுக்க முடியுமா?" என்றேன்.

 "இல்லீங்க இட்லி பார்சலுக்கு பொட்டலம் தான்" என்றார். அந்தப் பெண். நடுத்தர வயது இருக்கும். ஓட்டலில் வேலை பார்க்கும் ஒரு ஊழியர். ஊதா நிற புடவை அணிந்து இருந்தார். ஏதோ ஒரு கிராமம் அல்லது மதுரையின் புறநகர் பகுதியில் இருந்து வந்திருக்கலாம் அவர் என்று தோன்றியது. மனிதர்களைப் படிப்பது சொல்லாமல் வந்துவிடுகிறது எனக்கு.

ன் அப்பாவின் நிலையைச் சொல்லி , அட்டை போன்ற ஒன்றின் தேவையை, பிச்சை எடுக்காத குறையாகச் சொன்னேன். கை நடுங்கும் அவரால், இலையில் வைத்து சாப்பிட முடியாத நிலையைச் சொன்னேன். அப்படியும் மறுத்துவிட்டார் அந்தப்பெண். மருத்துவமனையில் உட்காரக்கூட இடமில்லாத நிலையில் வயதான அப்பா, பொட்டலத்தை கையில் வைத்து சாப்பிடுவது குறித்தான , வயதானவர்களின் சிக்கலை பொறுமைையாகச் சொன்னேன். கோபப்டவில்லை நான். எனக்கு அப்போதைய தேவை அந்த டப்பா, மேலும் நமது முக்கியப் பிரச்சனைகள், பிறருக்கும் முக்கியமான ஒன்றாக இருக்கத் தேவையில்லை என்பதைை உணர்ந்தவன் நான். எவ்வளவு சொல்லியும், அந்தப் பெண் அவர் சொன்னதையே சொன்னார்.

"இல்ல சார் அதில இட்லி பார்சல் வராது" என்று சொல்லிவிட்டார் கவுண்டரில் பெண் .

"அம்மா, அந்த கப்புக்கான விலையைக் கொடுத்துவிடுகிறேன்" என்றேன்.

 "அப்படியெல்லாம் கொடுக்க முடியாது" என்றார் கறாராக.

"என்ன வாங்கினால் கப்பில் கொடுப்பீர்கள்?" என்றேன்.

"எதுக்கும் கிடையாது" என்று முடிவாக சற்று எரிச்சலுடன் சொல்லிவிட்டு, இட்லியை தினத்தந்தி நாளிதழில், ஒரு பிளாஃச்டிக் பேப்பரை வைத்து கட்ட ஆரம்பித்துவிட்டார்.

ப்பா மருத்துவச் சோதனைக்கு வந்துள்ள "ஆசிர்வாதம்" மருத்துவமனையில் , உட்கார சேர் தவிர ஏதும் இல்லை. அதுவும் சந்து போன்ற ஒரு பகுதி. உணவு சாப்பிடும் முன்னும் பின்னும் செய்யப்பட வேண்டிய சோதனைகள் உண்டு. ஆனால் 82 வயது ஆன , நடக்க , உட்கார, சாப்பிட அனைத்திற்கும் உடல் நடுங்கும் மனிதர்களுக்கு , உட்கார்ந்து சாப்பிட இடம் இல்லை.

ழைய சோற்றுக்கே பிச்சை எடுக்கும் சம்முவத்தில், பிரியாணியில் கறி கம்மி என்று , தனியார் மருத்துவமனை குறித்து நான் புலம்புவதை யாரும் கேள்வி கேட்கலாம். நகைக்கலாம். அது உண்மையும்கூட. 20 வருடமாக அப்பா இங்குதான் வருகிறார் என்பதால், எத்தனை மணிக்கு வீட்டில் எழுந்திருக்க வேண்டும் என்பதில் இருந்து , என்ன எடுத்துச் செல்ல வேண்டும் என்பதெல்லாம் அவர் கட்டளை. அதை மீறி சிந்தித்தால்கூட சண்டை வந்துவிடும். அவர் திட்டப்படி "கடலில் இறங்கி கப்பலைத் தள்ளு" என்றாலும் தள்ளியாக வேண்டும்.

ந்த மருத்துவமனை மற்றும் அதன் சோதனை முறைகள் குறித்து புரிதல் ஏதும் இல்லாத தற்குறி நான். அக்கா பிள்ளைகள் இருந்தவரை அவர்கள் அழைத்து வருவார்கள். யாரும் ஒன்றும் சொல்லவில்லை. அவர்களுக்கு இதுஎல்லாம் இயல்பானதாய் இருந்திருக்கும் போல. எனக்குத் தெரிந்திருந்தால் ஒரு தட்டு மற்றும் நாலு இட்லியை வீட்டில் இருந்து அப்பாவிற்கு தெரியாமல் எடுத்து வந்திருப்பேன். ஒரு தட்டு கிடைத்தால் இட்லி சாப்பிட வசதியாய் சாம்பார் ஒழுகாமல் , சிந்திவிடாமல் சாப்பிட முடியுமே என்பதே என் கவலை. அழுதாலும் அந்த அலுமினிய டப்பா (3 " x 3" அளவு. இரண்டு இட்லி வைக்கலாம்) கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார் அந்தப் பெண்.

னது 'தாய்மாம்' உடன் வந்திருந்தால் அவரை , அப்பாவுடன் விட்டுவிட்டு சிறிது தொலைவில் உள்ள கடையில் ஏதேனும் 2018 காலண்டர் அட்டையாவது வாங்கி வந்திருப்பேன். வீட்டில் இருந்து கிளம்பும் போது, எதற்கு "இத்தனைபேர். அவன் வந்தால் நான் வரலை" என்று சண்டை செய்துவிட்டார் அப்பா. வீட்டில் யாராவது ஒருவர் இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார் அப்பா.

பொட்டலத்தை பிரித்து அப்பா எப்படி சாப்பிடுவார் என்ற கவலையில் இட்லி கவுண்டரில் நின்று கொண்டு இருந்தேன். பொட்டல இட்லியில் சாம்பார் ஊற்றி நடுங்கும் ஒரு கையில் பிடித்து, அடுத்த நடுங்கும் கையில் அவரால் சாப்பிடவே முடியாது.
அவருக்கு ஊட்டி விடுவது என்பது , அவரின் கௌரவக் குறையாகிவிடும் என்றோ அல்லது என்ன காரணமோ, எதுவும் செய்ய விடமாட்டார்.

வேண்டுமானால் , ஓரமாக உட்கார்ந்து அழுகலாம் நான். அதுவே என்னால் , என் கட்டுப்பாட்டில் உள்ளது. கண்ணீர்கூட என் கட்டுப்பாட்டில் இல்லை. எனது பையில் இருந்த கிரடிக் கார்டுகள், எதுவும் உதவாது. இந்த மாதிரி நேரங்களில் கண்ணீர் எனக்கு வந்துவிடும். எதுவுமே செய்ய முடியாத, பிற ,மனிதர்களின் கருணையில் இருக்கும் கையலாகதா நிலைமை அது. கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது.

ட்லி வாங்க ஓட்டல் வருவதற்கு முன்னரே , மருத்துவமனை கழிப்பறைத் தொழிலாளி ஒருவரிடம் அதன் அருகில் உள்ள ஒரு சேரில் உட்கார்ந்து சாப்பிடலாமா என்று கேட்டு அனுமதி வாங்கிவிடேன். அவர் பார்த்து "இங்கெல்லாம் முடியாது" என்று சொல்லி இருந்தால், அப்பாவை ஓட்டலுக்குத்தான் அழைத்துவர வேண்டும். மருத்துவமனையில் டோக்கன் வாங்கி விட்டால், அங்கேயே இருக்க வேண்டும். டோக்கன் எண்படி , செவிலியர் யாராவது அப்பாவை சோதனைக்கு அழைத்தால் உடனே "உள்ளேன்" சொல்லவேண்டுமாதலால் அப்பா அங்கே இருப்பது அவசியம்.

ண்ணீரைக் கடத்திக்கொண்டே அன்னபூர்னா பார்சல் கவுண்டரில் நிற்கிறேன். காலம் என்னைப் பார்த்து சிரிக்கிறது. என் அப்பா சேர்த்து வைத்துள்ள சொத்துகள், வங்கி டெபாசிட்டுகள், என் பணம் , எதுவும் உதவாத நிலை. அந்த ஓட்டலில் பொட்டலம் கட்டும் பெண்ணின் மனமிரங்க எந்த சொத்து /பணம் மசிரும் உதவவில்லை. மனிதம் புரியாத இடத்தில் ஒன்றும் வேலைக்காவாது.

அப்போது அந்த கவுண்டரில் இட்லி எடுக்க வந்த ஒரு சர்வர் , "என்னக்கா?" என்று அந்தப் பெண்ணிடம் கேட்டார். அவர் உள்ளே சாப்பிடுபவர்களுக்கு சப்ளை செய்யும் சர்வர். இந்த பார்சல் கவுன்டர் பெண்ணும் , எனது "வேண்டுகோளை" "பிரச்சனையாக'"அவரிடம் சொன்னார்.

யாராவது உதவமாட்டார்களா என்று அழுதுகொண்டிருந்த நான், அவரிடமும் என் வேண்டுகோளை வைத்தேன். அவராலும் முடியாவிட்டால் நாலு வார இதழ்களை வாங்கி அட்டைபோல் வைக்க எண்ணம். அப்படி வைத்தாலும் , அப்பாவால் சாம்பார் ஊற்றிச் சாப்பிடவே முடியாது.

அந்த சர்வர், என்னிடம் "சார் கேசியர்ட்ட போய் கேளுங்க" என்று சொன்னார்.

கேசியரிடம் சென்று முறையிட்டேன். அவர் அங்கிருந்தே, "டப்பால குடுங்க" என்று பார்சல் கவுன்டர் பெண்ணிடம் சொன்னார்.

சர்வர் மற்றும் கேசியர் இருவரும் 20 ல் இருந்து 25 வயதிற்குள் இருப்பார்கள். மறு பேச்சு பேசாமல் , பார்சல் கவுன்டர் பெண் , அந்த டப்பாவில் இரண்டு இட்லி வைத்து ( அதற்கு மேல் அது கொள்ளாது) , பொட்டலத்தில் இரண்டு இட்லிகளை மடித்துக் கொடுத்தார்.

அதற்குள் அப்பாவின் டோக்கன் வந்துவிடுமே என்று ஓடி வந்துவிட்டேன். அந்த பார்சல் பெண்ணிடம் நன்றி சொல்லிவிட்டு.

ருத்துவமனை , கக்கூசிற்கு அருகில் அப்பா அப்படியே உட்கார்ந்து இருந்தார்.அவருக்கு ஒவ்வொரு இட்லியாக இந்த அலுமினிய கப்பில் கொடுத்து, சிறிதே சாம்பார் ஊற்றி சாப்பிட வைத்தேன். அப்படி இருந்தும் வேட்டியில் சாம்பார் சிந்திவிட்டது . அவரின் நடுங்கும் கைகளால்.

றுபடி அதே ஓட்டலுக்குச் சென்று அந்த சர்வரைத்தேடி நன்றி சொன்னேன். "காசு கொடுத்தாலும் கிடைக்காத உதவி நீங்கள் செய்தது" என்று சொல்லி சின்னதாக சன்மானம் கொடுத்தேன். அந்த பணம் பிழைக்கத் தேவையாய் இருக்கலாம் அவருக்கு. நிச்சயம் அன்று அவர் செய்த உதவிக்கு ஈடுகிடையாது.

கேசியரைத்தேடினேன். அவர் இல்லை. அவரிடமும் என் அன்பைத் தெரிவிக்கச் சொல்லி , சர்வரிடமே , கேசியரின் சன்மானப் பணத்தையும் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்.

டியில் ஆரம்பித்து, கதவு , தரை வரை நோயாளிகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்படுவதில்லை. கம்பு ஊன்றி நடந்தாலும் வழுக்கும் பள பள தரை, ஒருக்களித்துச் சென்றாலும் முதியவரை கைபிடித்துச் செல்ல முடியா கதவு . இப்படி பல. நாலு அறை, நாற்பது செவிலியர் என்று தொடங்கப்படும் மருத்துவமனைகள். ஆனால் அவற்றைத்தான் நம்புகிறார்கள் மக்கள். ஒரு வீல் சேர் இருந்திருந்தால் உதவியாய் இருந்து இருக்கும். கண் பார்வை குறைந்த , நடுங்கும் கை கால்கள் கொண்ட , குச்சி ஊன்றிய தாத்தாக்கள் , சிறுநீர் சோதனைக்காக சிறுநீர் பிடிக்க முடியாத 2x2 கக்கூசு.

*
செவிலியர்களையோ ஓட்டல் சிப்பந்திகளையோ குறை சொல்ல முடியாது. வழிகாட்டிகள் இல்லா நாடு. என்பதைத்தவிர யாரை நோவது. 😢😢

மனிதம் என்பது விலைமதிப்பற்ற உணர்வு. அது எல்லாமட்டத்திலும் இருக்க வேண்டும். கட்டடம் கட்டும் வரைபடத்தில் ஆரம்பித்து ஓட்டல் பார்சல் கவுண்டர் வரை இருக்க வேண்டும்.

Dec 15, 2017

மெல்லச் சொருகும் கத்தி -3: ஆயிரம் மடங்கு கவனம் தேவை

2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ரசியாவின் தலையீடு இருந்தது என்றும், அது அமெரிக்காவின் நிலைத்தன்மையை சீர்குலைக்க இணையத்தில் பல பொய்த்தகவலகளைப் பரப்பியது என்றும், பெரிய குற்றச்சட்டு எழுந்து, அதை விசாரிக்க நியமிக்கப்பட்டவர்தான் ராபர்ட் முல்லர் (Robert Mueller ). இது 2017 மே மாதம் நடக்கிறது. இப்போது ட்ரம்ப் தான் அமெரிக்க அதிபர். ஆனால் பல்வேறு அழுத்தங்களால் ட்ரம்பின் மேற்பார்வையில் இருக்கும் "United States Department of Justice"  ன் Deputy Attorney General Rod Rosenstein முல்லரை இது குறித்து விசாரிக்க நியமிக்கிறார்.

முல்லரைப் பற்றியும், அமெரிக்க நீதித்துறையில் இருக்கும் சிலரின் நாட்டுப்பற்றையும் தெரிந்து கொள்ள நீங்கள் அவசியம் வாசிக்க வேண்டியது.
👇👇👇
Stellar Wind | James Comey | Robert Mueller | Nunes Memo
https://kalvetu.blogspot.com/2018/02/stellar-wind-james-comey-robert-mueller.html

நாட்டுப்பற்று என்பது, அதிகாரத்திற்கு ஆமாம் சாமி போடும் அடிமைத்தனம் இல்லை. அதிபரே சொன்னாலும், தனக்கு சரியென்று படாத ஒன்றைச் செய்யாத மன உறுதிதான் உண்மையான நாட்டுப்பற்று மற்றும் தான் ஏற்றுக்கொண்ட பதவிக்கு உண்மையாக இருந்தலும் ஆகும். அதிபர் சொன்னார், அமைச்சர் சொன்னார் என்று, அவர்கள் சொன்னதைச் செய்ய ஒரு அடிமை போதும். அதற்கு அதிகாரிகள் தேவை இல்லை.

ப்படியாக FBI, Central Intelligence Agency (CIA),National Security Agency (NSA) 
நடத்திக்கொண்டிருந்த புலனாய்வுகள், ஒரு சிறப்புச் சட்டத்தின் மூலம்  ராபர்ட் முல்லரின் த‌லைமையிலான புலனாய்வு அமைப்பிற்கு மாற்றப்படுகிற‌து.
வர் முதலில் கை வைத்து George Papadopoulos. அவரை அரசுத்தரப்பு சாட்சியாக கொண்டுவருகிறார். George Papadopoulos ன் மூலம் கிடைத்த தகவல்களின்படி காய் நகர்த்தப்படுகிற‌து. சுமார் இரண்டு வருடங்களாக நடந்த விசாரணையில், பலர் கைது செய்யப்படுகிறார்கள். வேறு வேறு வழக்குகளின் பெயரில், ஆனால் அவர்கள் அனைவரும் அதிபர் ட்ரம்பின் 2016 தேர்தலில் ரசியாவின் தலையீட்டு சிக்கலில் பங்கு கொண்டவர்கள். இவர்கள் அனைவரும் ராபர்ட் முல்லரின் விசாரணையால் அடையாளம் காணப்பட்டவர்கள்.

அப்படி தண்டனை பெற்றவர்களில் முக்கியமானவர்கள்.


Trump campaign chairman Paul Manafort 
National Security Advisor Michael Flynn (இவர் இன்னும் மேல் முறையீடு செய்து கொண்டுள்ளார்)

(Mueller indicted 13 Russian individuals and 3 Russian companies for attempting to trick Americans into consuming Russian propaganda that targeted Democratic nominee Hillary Clinton)

March 22, 2019, ராபர்ட் முல்லர் அவரின் இறுதி அறிக்கையை அளிக்கிறார். அவரின் இறுதி அறிக்கை குற்றங்கள் நடந்ததை உறுதி செய்கிறது. ஆனால், அமெரிக்க நடைமுறையில், அதிபராக இருக்கும் ஒருவரின்மீது நடவடிக்கை  எடுக்க அவரால் பரிந்துரைக்க முடியாத சட்டச் சிக்கலில், அவர் அறிக்கையை கொடுத்ததோடு போய்விடுகிறார்.


Steve Bannon
இவர் அமெரிக்காவில் வலதுசாரி அமைப்பில் அது தொடர்பான நடவடிக்கைகளில் மிகவும் முக்கியமானவர். Breitbart News. https://www.breitbart.com/ என்ற பத்திரிக்கையின் CEO ஆக இருந்தவர். இந்தைப் பத்திரிக்கை எப்படிப்பட்டது என்றால் 100 துக்ளக் பத்திரிக்கையின் வன்மததைக்கொண்டது எனலாம். வலதுசாரி , மதம் சார்ந்த, அடிப்படைவாத கருத்துக்களை திணிப்பதும், அதன் மூலம் ஒரு ஓட்டு வங்கியை கட்டமைத்து, அவர்களுக்கு தேவையான வேட்பாளர்களை கட்சிகளுக்குள் நுழைத்து, அவர்களை வெல்ல வைப்பது. 

மெரிக்காவில் இப்படி பல அமைப்புகள் உள்ளன. 2016 அதிபர் தேர்தலில் இவரும் ரிபப்ளிகன் வேட்பாளரான டொனால்டு ட்ரம்பிற்கு ஆலோசகராகிறார். ட்ரம்ப் 2016 தேர்தலில் வெற்றியும் பெற்று அதிபரானவுடன் இவருக்கு வெள்ளை மாளிகையில் Chief Strategist  பதவியும் கொடுக்கிறார் ட்ரம்ப்.

Cambridge Analytica Ltd (CA)
Cambridge Analytica Ltd (CA) என்பது தகவல் தொழில் நுட்பத் துறையில் , தகவல்களை அலசி ஆராய்ந்து அதனை வைத்து திட்டங்களை வகுக்கும் Data Analysis நிறுவனம். இலண்டனில் இதன் தலைமை அலுவலகம் இருந்தாலும் , இதற்கு அமெரிக்காவிலும் கிளைகள் உண்டு. இதை நிறுவியவர்களில் ஒருவர் Steve Bannon.

George Papadopoulos வேலை செய்ததும் இலண்டனில் உள்ள‌ London Centre of International Law Practice (LCILP) என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook–Cambridge Analytica data scandal
2016 தேர்தலின் போது Cambridge Analytica , பல தகவல்களை Facebook இடம் இருந்து திரட்டுகிறது. திரட்டிய தகவல்களை வைத்து, பல பொய்ப்பிரச்சாரங்களை திட்டமிட்டு, Facebook பயனர்களுக்கு targeted users, friends  விளம்பரமாக அனுப்புகிறது. இந்த செயலில் Facebook  மக்களை ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு , Mark Zuckerberg மன்னிப்பு கேட்டார் அமெரிக்க காங்கிரசு சபையில்.

இவையெல்லாம் ஒவ்வொன்றும் அதற்கே உரிய சிக்கல்களைக் கொண்டவை. ஒவ்வொன்றும் ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு தகவல்கள் நிறைந்தவை. 2016 ல் இருந்து இன்றுவரை அமெரிக்க தேர்தலில் ரசியாவின் பங்கு என்பது பெரிய சிக்கலாம இருந்துவருகிறது அமெரிக்காவிற்கு. அரசியல் காரணங்களுக்காக ரிபப்ளிகன் (ட்ரம்பின் கட்சி) இதைக் கண்டுகொள்ளாபல் இருக்க முயல்கிறார்கள். ஆனால் டெமாக்ரடிக் கட்சி இதை விடுவதாய் இல்லை.

முல்லரால் அதிபருக்குத்தான் தண்டனை பெற்றுத்தர முடியவில்லையே தவிர, இந்த 2016 அதிபர் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்ட முக்கியமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனையும் வாங்கிக் கொடுத்தார். அப்படி தண்டனை பெற்ற ஒருவர்தான் Roger Stone நாம் முதல் கட்டுரையில் பார்த்தவர்.

மெல்லச் சொருகும் கத்தி-1: I-PAC Prashant Kishor
https://kalvetu.blogspot.com/2020/02/1-i-pac-prashant-kishor.html

ன்றுவரை அமெரிக்கா இந்த 2016 தேர்தலில் ரசியா என்ன செய்தது எப்படிச் செய்தது என்று பல விசாரணைகளை நடத்தி வருகிறது. அமெரிக்காவில் பல நல்ல அதிகாரிகள் உள்ளார்கள். அதிபரே சொன்னாலும் வெகு சாதரணமாக நடுவிரலைக் காட்டிவிட்டு போய்விடுவார்கள்.

ஆம், அதிபருக்கு நடுவிரலைக் காட்டிய ஒரு சாதரண பெண் , அவர் செய்த செயலால் வேலையை இழந்தார். ஆனால், அவரையே அந்த கவுண்டியின் Board of Supervisors ஆக அந்த மக்கள் தேர்ந்தெடுத்தது வரலாறு. பொது மக்களின் கருத்துச் சுதந்திரமும், அவர்களின் அன்றாட அரசியல் ஈடுபாடும், இந்தியாவில் இல்லாத ஒன்று.

Woman Who Lost Job After Flipping Off Trump's Motorcade Wins Election in Virginia
https://time.com/5719601/juli-briskman-trump-middle-finger-virginia-election/
***
ந்தியாவில், இன்று வளர்ந்து வரும் இந்த பிரசாந்த் கிசோரை நான் பயத்துடனே பார்க்கிறேன். இவர் ஒருங்கிணைந்த நாடுகள் அமைப்பில் (United Nations) பலகாலம் வேலை பார்த்தவர். பன்னாட்டுத் தொடர்புகள் நிச்சயம் இருந்திருக்கும். அதைவிட நான் பயப்படும் விசயம், இவர் "குசராத் கோத்ரா இரயில் எரிப்பு" சம்பவங்களுக்கு பிறகும், மோடிக்காக உழைத்தவர். நல்ல மனநிலையில் உள்ள யாரும் இதைச் செய்யவே மாட்டார்கள். ஒரு அரசியல்வாதியாக கட்சிக் கூட்டணி என்பதுகூட ஏதோ பதவி ஆசை அல்லது, கொள்கைகளில் சமரசம் செய்து ஏதோ ஒரு நல்லதை அடைய நினைக்கிறார்கள் என்று மன்னிக்கலாம். ஆனால்,இவர் தனி நபராக, ஒரு நிறுவனமாக மோடியை மறுபடியும் முதல்வராக்கியவர் என்று அறியப்படுகிறார். அதே மோடியை பிரதமராகவே ஆக்கியவர் என்றும் அறியப்படுகிறார்.

னது கவலை அதிகரிக்குமிடம் இதற்குப் பிறகுதான் வருகிறது. மோடிக்காக வேலை பார்த்த இவர், பீசேபியின் எதிர் அணிகளாகவே பார்த்து சேர்கிறார். அது ஏன்? ஒரு நிறுவனமாக காசு அதிகம் கொடுப்பவர்களிடம் இவர் வேலை செய்வது இல்லை. இவரே தேர்ந்தெடுக்கிறார். அது கவலை கொள்ளச் செய்கிற‌து.
**
ன்றைய  மிழ் நாட்டுச் சூழலில் அவசியம் திமுக பெற்றேயாகவேண்டும். பல காலமாக வளர்த்த சமூகநீதி முன்னேற்றங்கள் எல்லாம், பீசேபியின் பினாமியாகச் செயல்படும் அதிமுக அரசால் நாசம் செய்யப்படுகிறது. எனவே 2021 தேர்தலில், நமக்கு எதிரிகளாக இருந்தாலும், அவர்களால் உதவி வருகிறதோ இல்லையோ, அவர்களின் உதவி எதிரணிக்கு போய்விடாமல் பார்ப்பது முக்கியம்.

பிரசாந்த் கிசோரை திமுக வாங்க்கியுள்ளதை நான் இந்த தேர்தலில் மேற்சொன்ன காரணக்களுக்காக வரவேற்கிறேன். அதே நேரம் இவரிடம் நாம் என்ன பகிர்கிறோம் என்பதிலும், எந்த அளவு இவரை நம்புகிறோம் என்பதிலும் கவனம் தேவை.

காந்தி என்ற வைசியர், ஒரு சனாதன வர்ண ஆதரவாளர். ஆனால் அவரையே கொன்றார்கள் சித்பவன் பிராமினான கோட்சே கூட்டம். ஏன் என்றால், அவர்களுக்கு இசுலாம் எதிர்ப்பு என்பதே முக்கியம். காந்தி அதற்கு எதிர் நிலையில் இருந்ததாலே கொல்லப்பட்டார்.

மூகச் சமநீதி இயக்கமான, வர்ணாசிரமத்தை ஏற்றுக்கொள்ளாத தன்மரியாதை இயக்கமான திமுக, இன்றுவரை வடக்கு மக்களையும், தமிழக பிராமிண் வர்ணத்தினரையும் உறுத்தும் ஒன்று. அவர்கள் திமுக உடகட்டமைப்பை ஒழிக்க என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அவர்கள் விசம் தோய்ந்த மனிதர்கள். அவர்களின் கத்தி இந்திய சனநாயகத்தில் காலம் காலமாக மெல்லச் சொருப்படும் ஒன்று. நாம் ஆயிரம் மடங்கு கவனமாக இருக்க வேண்டும். அதுவே என் ஆசை மற்றும் இக்கட்டுரையின் நோக்கம்.

-நன்றி‍-
மெல்லச் சொருகும் கத்தி-முற்றும்.

தகவல்கள்
https://en.wikipedia.org/wiki/Cambridge_Analytica

https://en.wikipedia.org/wiki/Robert_Mueller