Friday, January 13, 2006

பொங்கல் வாழ்த்து


பதிவு 25: பொங்கல் வாழ்த்து

எல்லாருக்கும் வணக்கம்பா. பொங்கல் கொண்டாட்டம் பற்றி மிக விரிவாக எப்படிக் கொண்டாட வேண்டும் என்று எழுத நினைத்து இருந்தேன். பல காரணங்களால் அதை எழுத முடியவில்லை. சமயம் கிடைக்கும் போது விரிவாக எழுதுகிறேன். இந்த கொண்டாட்ட நேரத்தில் எதிர்மறையான எண்ணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, அனைவரும் இதனைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று விரும்புகிறேன்.

பொங்கலை சாதி, மத அடையாளங்களில் இருந்து மீட்டெடுத்து உலகத்தில் வாழும் அனைத்து தமிழர்களும் இதனைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

ஒரே வகையான சமையற் குறிப்பில் அவரவர் அவருக்கு ஏற்ப உப்பு,மிளகாய் சேர்த்துக் கொள்வது போல அவர்களுக்குத் தேவையான வழிபாட்டு முறைகளை சேர்த்துக் கொள்ளட்டும் கவலை இல்லை. ஆனால் இந்துக்கள் என்று அழைக்கப்படும் ஒரு பிரிவினர் , இந்தப் பொங்கல் கொண்டாட்டத்தில் செய்யும் இறைவழிபாட்டு முறைகளைக் காரணம் காட்டி மற்ற மதத்தினர் இந்த நல்ல கொண்டாட்டத்தை தவிர்க்க வேண்டாம்.

சாதி, மத,ஆரிய, திராவிட பிரச்சனையை ஓரமாக வைத்துவிட்டு அனைத்து தமிழர்களும் இதனைக் கொண்டாட வேண்டும்.

அனைவருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

பொங்கல் போல் உங்களது அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும் அன்பும் பொங்கிப் பெருகட்டும்.

அன்புடன்.
கல்வெட்டு (எ) பலூன் மாமா

பொங்கல் சம்பந்தமான எனது முந்தைய பதிவுகள்

தமிழர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி
http://kalvetu.blogspot.com/2005/10/09.html

கேரளா ஓணமும் தமிழனுக்கு ஒரு கேள்வியும்
http://kalvetu.blogspot.com/2005/10/10.html

குற்றவுணர்வும் Thanks Giving Day யும்
http://kalvetu.blogspot.com/2005/10/12-thanks-giving-day.html

தீபாவளி பண்டிகையும் சில கேள்விகளும்
http://kalvetu.blogspot.com/2005/10/15.html

தீபாவளி தெரியும் Halloween தெரியுமா?
http://kalvetu.blogspot.com/2005/10/16-halloween.html

போகிப் பண்டிகை கொண்டாடும் முறை சரியா?
http://kalvetu.blogspot.com/2005/11/blog-post_15.html

பொங்கல் கொண்டாட்டம்- தமிழக இஸ்லாம்,கிறித்துவ நண்பர்களுக்கு ஒரு கேள்வி.
http://kalvetu.blogspot.com/2005/11/blog-post_21.html

பொங்கல் கொண்டாட்டம் சிலரின் தயக்கங்கள்.
http://kalvetu.blogspot.com/2005/11/blog-post_113294177394608479.html