Friday, January 27, 2006

இது எதிர்பார்த்ததுதான்

இது எதிர்பார்த்ததுதான்.

பிடிக்கவில்லையா ஓடு என்பதும், நீ இந்தப்பக்கம் இல்லை என்றால் அந்தப் பக்கமே தான் என்று புஷ்த்தனமாகப் பேசுவதும் எதிர் பார்த்த ஒன்றுதான்.

என்ன கேட்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொள்ள விரும்பாமல் வேறு விசயங்களைப் பற்றிப் பேசுவது எனது கேள்விக்குப் பதில் அல்ல.

* எனக்குத் தமிழ்மண சட்ட திட்டங்கள் தெரியும். எதற்கெடுத்தாலும் terms பார் என்று சொல்வது தேவை இல்லாதது.

*ஆபாசப் பின்னூட்டங்கள் முற்றிலும் அழிக்கப்பட வேண்டியவை. நிறுத்தப்பட வேண்டியவை. இதில் மாற்றுக் கருத்து இல்லை.

*தனி மனித தாக்குதல்கள் தவிர்க்கப் படவேண்டியவை.இதில் மாற்றுக் கருத்து இல்லை.

*எனது பதிவில் இதுவரை யாரையும் தாக்கிப் பின்னூட்டங்கள் வந்ததும் இல்லை. அப்படி வந்து இருந்தால் காசி என்ன வேறு யாரும் சொல்லாமலே நான் இவைகளைச் செய்து இருப்பேன்.

நான் எழுப்பிய கேள்விகளே வேறு. நான் என்ன கேட்கிறேன் என்பதைப் புரிந்து கொள்ளாமலேயே நான் ஏதோ தேசத்துரோகமான கேள்வி கேட்டுவிட்டேன் என்று கேள்விகளைத் திசை திருப்புவதும்,காசியை கேள்வி கேட்டுவிட்டேன் என்பதற்காக அவரது அபிமானிகள் என்னை தனிமனிதத் தாக்குதல் செய்வதும் என்னால் ஏற்றுக் கொள்ளமுடியாதது.

தமிழ்மணத்தில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.

http://kalvetu.blogspot.com/
http://balloonmagic.blogspot.com

முறைப்படி adm@thamizmanam.com -க்கு மயில் அனுப்பியாகி விட்டது.

அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா

****************


****************

3 comments:

  1. அவசரப்படாதீர்கள் நண்பரே....காசி உங்களை எதுவும் சொல்லாதவரை நீங்கள் எந்த முடிவையும் எடுக்கவேணடாம்..இது ஒரு நண்பனின் வேண்டுகோள்....

    (பி.கு)நீங்கள் சொல்லவந்ததை நான் புரிந்துக்கொண்டேன்

    ReplyDelete
  2. உங்கள் முடிவு வருத்தமளிக்கிறது, ஆனால் புரிந்து கொள்ள முடிகிறது. டெக்னோராட்டி வழியாக சந்திப்போம்!

    ReplyDelete