Friday, February 17, 2006

சர்வர் பிள்ளையார்

சர்வர் பிள்ளையார்.
ஹுசைன் பெண் தெய்வத்தை நிர்வாணமாக வரைந்தார் என்பதெல்லாம் பழைய செய்தி. இங்க பிள்ளையாரே வந்து பரிமாறுகிறார். ம்ம்.... வேண்டினாலும் எளிதில் வரம் கொடுக்காத விநாயகா இப்படி வெளியூர்க் காரங்களுக்கு மட்டும் பரிமாறலாமோ?

//சென்ற வினாயக சதுர்த்தியன்று, சென்னை அண்ணாசாலையிலுள்ள பிரபல ஓட்டலொன்றின் சர்வர்களுக்கும், மேஜை துடைப்பவர்களுக்கும் வினாயகர் வேடமிட்டு வெளிநாட்டிலிருந்து வந்திருந்த வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாற வைத்துள்ளனர். இதன் வண்ணப் புகைப்படத்தைத் தமிழகத்தின் பிரபல தினசரியான ‘தினமணி’ பத்திரிகை, அதன் 8.9.2005 ம் தேதியிட்ட இதழில் வெளியிட்டுள்ளது.//

படம் மற்றும் தகவல்:
குமுதம் சோதிடம். 23/12/2005
இனியும் சகித்துக் கொள்ளத்தான் வேண்டுமா?
http://www.kumudam.com/jothidam/231205/231205-01.php

****************


****************

Friday, February 10, 2006

இங்கு இப்பொழுது படித்ததில் பிடித்தது


பல விசயங்களில் இப்போது தமிழ் வலைப் பதிவு நண்பர்கள் விவாதம் செய்கிறார்கள். பின்னூட்டம் பெறுவது எப்படி என்பது முதல் தன் கட்டிலுக்கு அடியில் இருந்து வரும் "நெட்ஓர்க்கிங் ஃபண்டமெண்டல்ஸ்" அண்ட் "உள்குத்து மேட் ஈஸீ" வரை பல அறிவுரைகள். இங்கே இப்பொழுது நடைபெறும் விவாதம் (அ) சண்டை(க்கோழி)யில் படித்ததும் பிடித்ததும்.



1.இப்போதும் பெரியார் வந்திருக்காவிட்டால், நம்மிடம் சொல்வதற்கு காருண்யக் கதைகளே எஞ்சியிருக்கும். அவர் நாம் முதுகுகளில் சுமந்து திரிந்த புனிதங்களை உடைத்து அவலங்களைச் சொன்னார்.

2.புத்தரின் அன்பும் கருணையும் வெறும் வார்த்தைகளாக்கப்பட்டது.

3.எனக்குத் தேவை இல்லாத ஒன்றை பெற்றுக்கொள்வதோ, மற்றவர்க்கு தேவையில்லாத ஒன்றைக் கொடுப்பதோ நான் செய்வது கிடையாது
--தங்கமணி.

4...கொஞ்சம் கூட்டம் சேர்ந்தவுடன், கொஞ்சம் பெரிதான அமைப்பை உருவாக்கி அதற்கு அடுத்த நடவடிக்கையை கொள்ளவேண்டும். இப்படித்தான் உலகம் மாறுகிறது. இப்படித்தான் அடிமைத்தனம் அகன்றது. பெண்கள் வோட்டுரிமை பெற்றார்கள். நீங்கள் பெற்றீர்கள். அப்படித்தான் உழைக்கும் வர்க்கம் தற்காப்பு பெற்றது. எந்தவொரு பலன்களும் அந்தமாதிரியான உழைப்பால் வந்தது தான்.. அது ஒரு கூட்டதிற்குப் போய், பின்னால் நழுவியவர்களால் வந்ததல்ல. நாலு வருடத்திற்கு ஒருமுறை ஓட்டுமட்டும் போட்டவர்களால் வந்ததில்ல்லை. ஒரு தேரும் வேட்பாளர்களுக்கு ஓட்டு போடுவதால் மட்டும் அமையப் போவதில்லை. அது ஒரு ஆரம்பமாக வேண்டுமானல் இருக்கலாம்.
--அனாதை

5.'இங்கு-இப்போது' என்பதில் அனேக பாடங்கள் உள்ளன.

--புத்தரின் மேற்கோளில் இருந்து மு.மாலிக்

மேலே கண்ட மேற்கோள்கள் தங்கமணியின் இந்தப் பதிவில் இருந்து இங்கே சேமிக்கப்படுகிறது.

6.என்னை உனக்கு அறிமுகப்படுத்திக்கொள்ள நான் விரும்பவில்லையெனில், நீ என்னைப்பற்றி என்ன தெரிந்துகொண்டாலும் புரிந்துகொண்டதாக நினைத்தாலும் அதுகுறித்த அக்கறையோ மரியாதையோ எனக்கில்லை என்பதே.

--சன்னாசி

மேலே கண்ட சன்னாசியின் மேற்கோள் முகமூடியின் இந்தப் பதிவில் இருந்து இங்கே சேமிக்கப்படுகிறது.


****************


****************

Thursday, February 02, 2006

நியூயார்க் வயலின் பெண் - Soho & Solow


கொஞ்ச நாளைக்கு முன்னால ஒரு நண்பருடன் தொலைபேசிக் கொண்டு இருந்தேன். நண்பர் கொஞ்சம் வருத்ததில் இருந்தார் போல இருக்கு, "உலகத்துலேயே பெரிய பணக்காரனா இருந்தாத்தான் நல்லது. அவங்களாலேயே மகிழ்ச்சியாக இருக்க முடியும்" என்றார். "அப்படியெல்லாம் இல்ல , பணக்கார குடும்பத்துல அப்பா புள்ள சந்திக்கணும்னாக்கூட முன் கூட்டியே தேதி வாங்க வேண்டியிருக்கும். பணத்துக்கும் விலை இருக்கு. ஆனா பணத்தால் மட்டுமே மகிழ்ச்சி கிடைக்காது" ன்னு சொன்னேன்.

வாழ்க்கையில பணம் முக்கியம் தான், ஆனா பணம் மட்டுமே வாழ்க்கைய நிறைவு செய்யாது. எனக்குத் தெரிஞ்ச இன்னொரு நண்பர் இப்படித்தான், பணம் இருந்தா எல்லாம் கிடைச்சுடுமின்னு பணத்துக்காக வெளிநாடு போனார். நினைச்ச பணம் வந்தது. சொந்த பந்தமெல்லாம் சந்தோசமா இருந்திச்சு. அவர் எப்ப ஊருக்கு வந்தாலும் அவருக்கு தடபுடல் கவனிப்புதான். ஆறு வருசம் கழிச்சு அவருக்கு பணம் சலிப்புத்தட்டி ஊர் வரத் தீர்மானிச்சார். வந்தும் விட்டார். இப்ப பாருங்க அவர யாரும் கண்டுக்கிறது இல்ல. சொந்த மனைவியே பொழைக்கத் தெரியாத மனுசன் அப்படீன்னு சொல்லிக்கிட்டு அலையும் கொடுமை.

குடும்ப வாழ்க்கை அப்புறம் இந்த மனித சமுதாயத்துல நாமும் ஒருத்தரா வாழ்றதுக்குன்னு இன்னபிற தேவைகள் பலவற்றை நிறைவு செய்ய உழைப்பு அவசியம். கடின உழைப்பு அவசியம்தான். ஆனா எதற்காக கடினமாக உழைக்கிறோம் அப்படீன்றதும் ரொம்ப முக்கியம். உழைப்பின் வழியா வரும் இந்தப் பணம் இருக்கே, அது ஒரு போதை மாதிரி. சில சமயம் நம்மள முழுங்கிடும். வண்டிக்கு வேகக்தடை இருக்குற மாதிரி பணத்துமேலே நம்ம செய்ற சவாரிக்கும் ஒரு வேகத்தடை இருக்கணும். இல்லாங்காட்டி நம்ம கீழே இறங்கி இளைப்பாரவே முடியாது.

வேகமாப் போகப் போக நிறையப் பணம் கிடைக்கும்தான் ஆனா வாழ்க்கைய நிதானமா அனுபவிக்க முடியாது. பணத்தேவை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமா இருக்குறதால எப்ப நிறுத்தனும், நிதானிக்கனுங்றத மத்தவங்க யாரும் சொல்லவோ தீர்மானிக்கவோ முடியாது. நாமளே சுயாமா சிந்திக்க வேண்டும். வேணுமின்னா பாருங்க ஒரு சக்கரவர்த்தி எல்லாம் இருந்தும் சாகும் போது எப்படி புலம்பியிருக்காருன்னு அவுரங்கசீப் ன் உயில்.

நியூயார்க்கில வேலை பாத்துக்கிட்டு இருந்தப்ப அந்த ஊரோட பாதாள இரயில் சவாரி ரொம்பப் பிடிக்கும். நம்ம சென்னை மின்சார இரயிலில் பார்க்கும் எல்லா சுவராசியமான காட்சிகளும் இங்கேயும் பார்க்கலாம். அதுவும் காலை, மாலை இந்த அலுவலக நேரத்துல ஒரே கூட்டம்தான். நின்று நிதானமாக எங்க போணும்னு கூட யோசிக்க முடியாது. எல்லாம் அனிச்சைச் செயலா நடக்கும்.

புதுசா ஊருக்கு வந்தவங்கதான் பராக்குப் பார்த்துக்கிட்டு இருப்பாங்க. மத்த எல்லாரும் பறந்து கொண்டு இருப்பாங்க. நம்மள்ள 90 சதவீதம் இப்படி ஓடுறவங்கதான்.இதில கவனிக்கப்பட வேண்டியது மேலும் நான் சொல்ல வந்தது எப்பயுமே ஓடிக்கிட்டு இருக்கிர இவங்களப் பத்தி இல்ல. ஒரு ஓரமா ஒக்காந்து வாழ்க்கைய அனுபவிச்சுக்கிட்டு இருக்கிறவங்களப் பத்தி.

ரொம்பப்பேரு இவங்களப் பாத்து இருக்கோம். அடப் பாவமே இப்படி இருக்காங்களேன்னும் நாம அவங்களப் பாத்து அனுதாபப் பட்டு இருகோம். ஆனா அவங்க பக்கத்துல இருந்து நாம நம்மள பார்த்தது இல்ல. அந்த மகிழ்ச்சிக்காரர்களின் பார்வையில் நாமதான் பரிதாபப் பிராணிகளா இருக்குறோம். நான் சொல்ற மகிழ்ச்சிக்காரங்க யாருன்னு கேட்குறீங்களா? எல்லாம் பாதள இரயில் பாதையில் பாட்டுப்பாடியும், சும்மா "God Bless You" அப்படீன்னு சொல்லியும் இன்னும் பல வித்தைகளைச் செய்தும் வாழ்க்கைய ஓட்டும் மக்கள்தான். அதாவது பிச்சைக்காரர்கள்.

நம்ம எல்லாரும் இவங்களப் பிச்சைக்காரர்கள் அப்படீன்னுதான் நினைச்சுக்கிட்டு இருக்கோம். உண்மை அதுவல்ல. அதுல பல கலவைகள் உண்டு. பாதிக்கு மேல பணத்துக்காக மட்டுமே இந்த மாதிரி பாட்டுப்பாடி வித்தை காட்டும் மக்கள் இருந்தாலும் சில வித்தியாசமான ஆட்களும் உண்டு.இந்த கூட்டத்தில் என்னைப் பெரிதும் கவர்ந்தவர் ஒரு பெண். யாருப்பா அங்க ஜொள்ளுன்னு சிரிக்கிறது? இவர் பெண் என்பதால் ஒரு கவர்ச்சி இருந்தாலும் இவர் வயலின் வாசிக்கும் விதமே அழகு. தினமும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சரியான நேரத்திற்கு வந்து விடுவார். வந்து ஏதோ ஒரு முற்றும் துறந்த ஞானிபோல அமைதியாய் வயலினை எடுத்து சாந்தமான இராகத்தை இழுக்க ஆரம்பித்து விடுவார். பெரும்பாலும் கண்ணை மூடியே வாசிப்பார். அவர் முன்னே இருக்கும் அந்த வயலின் பொட்டியில் எப்போதாவது நாணயமோ டாலர் நோட்டோ தென்படும்.


தினமும் இவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டு இருக்கிறேன். என்ன பணம் வந்துவிடப்போகிறது? எதற்காக இம்மாம் பெரிய ஊரில் வேறு வேலை பார்க்காமல் இப்படி பிச்சை எடுத்துக் கொண்டுள்ளார்? இப்படிப் பல கேள்விகள். சென்ட்ரல் பார்க் அருகில் நான் வேலை பார்த்து வந்த அலுவலகம் "Big 9 " என்று நியூயார்க் மக்களால் செல்லமாக அழைக்கப்படும் அழகான Solow கட்டிடத்தில் இருந்தது. எனது அலுவலத்துக்கு அருகில்தான் நியூயார்க்கின் சென்ட்ரல் பார்க் இருக்கிறது. மத்தியான நேரத்தில் சாப்பாடு முடித்து நேரம் இருந்தால் அப்படியே கொஞ்ச நேரம் இங்க சுத்திக் கொண்டு இருப்பது வழக்கம்.ஒரு நாள் அதே பெண்ணை இங்கேயும் பார்க்க நேர்ந்தது. ஆனால் வயலின் வாசிப்பாளராக இல்லை. யாரோ ஒரு ஆண் நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தார்.


இவரைப் பலமுறை பாதாள இரயில் பாதையில் பார்த்து இருப்பதால் சட்டென்று அடையாளம் காண முடிந்தது. சரி இவர் பாட்டுப்பாடி பிச்சை மட்டும் எடுக்கும் இரகம் அல்ல. நம்மைப் போல் ஒரு சமுதாய வாழ்க்கையும் கொண்ட ஒரு சக மனிதர் என்று வகைப்படுத்திக் கொண்டேன். அதற்குப் பிறகும் இவரைப் பலமுறை அதே பாதாள இரயில் பாதையில் பார்த்து இருக்கிறேன்.நாளாக நாளாக இவரிடம் ஒரு தலை நட்புக் கொள்ள ஆரம்பித்தேன். நேரடியாக பேசுவதற்குப் பயமோ தயக்கமோ இல்லை. எப்பப் பாத்தாலும் கண்ணை மூடிக்கிட்டே ஒரு ஞானி தோரணையில் சாந்தமாக வாசிக்கிம் இவரைம் போய் "எஸ்சுக்கூசுமீ" என்று சொல்லி மிரள வைக்க விருப்பம் இல்லை.


தினமும் ஓடிக்கொண்டும் பொருளீட்டும் பொருட்டு ஊர்,நாடுவிட்டு வந்து இப்படி பரதேசியாய் அலையும் எனக்கு , அதே நியூயார்க்கில் கவலையே இல்லாமல் சாந்தமாய் தினமும் மகிழ்ச்சியாய்த் தோன்றும் இந்த பெண்ணைப் பார்த்தால் ஒரே பொறாமையாய் இருக்கும்.





ஒரு சுபயோக சுபதினத்தில் நான் வேலை செய்துவந்த புராஜக்டடுன் நான் வேலை பார்த்து வந்த அலுவலகம் தன்னையும் ஊத்தி மூடிக்கொண்டது. அப்புறம் நாமல்ல வேலை செய்றோம். கொஞ்சநாள் பெஞ்சத் தேச்ச பிறகு, Greene Street பக்கம் உள்ள Soho ஏரியா பக்கம் ஒரு பொட்டிக் கம்பெனியில் வேலை கிடைத்தது. இந்த Soho ஏரியா சினிமாவில் காணும் நியூயார்க் பிம்பத்தில் இருந்து ரொம்பவும் வித்தியாசமானது. நிறைய ஓவியக் கண்காட்சிகளும் இன்னும் பல கலைச் சமாச்சாரங்களும் அடங்கிய ஒரு அரதப் பழசான ஏரியா. நம்ம கொத்தவால் சாவடி மாதிரியே ஆனால் கொஞ்சம் பிரமாண்டமாய் இருக்கும். ஒரு நாள் இந்த ஏரியாவில் அதே வயலின் பெண்ணை ஒரு ஓவியக் கண்காட்சியில் பார்த்தேன். ஒரு ஓவியத்தின் பக்கத்தில் நின்று கொண்டு இருந்தார். என்னால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. ஆனால் இருந்த கூட்டத்தில் ஒன்றும் பேச முடியவில்லை.

அப்படியே நாட்கள் ஓடிவிட்டது. அந்தப் பெண் வழக்கம் போல் பாதாளப் பாதையில் வயலின் வாசித்துக் கொண்டுதான் இருந்தார்.ஒருநாள் இந்த வயலின் பெண்ணை எனது அலுவலகத்துக்கு அருகில் உள்ள ஒரு தபால் அலுவலகத்தில், அங்கே பணி செய்பவராக பார்த்தேன் எனக்கு மறுபடியும் கிறுக்குப்பிடித்தது. யார் இவர்? ஒருவழியாக அன்று அவரிடம் நான் பேசினேன்...

(தொடரும்)

****************


****************