Wednesday, March 17, 2010

கடவுளைக் க‌ண்டேன் ‍- விமர்சனம்



பெ ரியாரிஸ்ட் என்றும் பெரியார்தாசன் என்றும் சொல்லிக்கொள்பவர்களை பார்த்தால் காமெடியாய் இருக்கிறது. பெரியார் சொல்லிக்கொடுக்க முயற்சித்தது பகுத்தறிவு. பகுத்தறிவின் ஒரு உப-விளைபொருள் கடவுள் என்பது பற்றிச் சிந்தித்து அவனவன் அவனுக்காக முடிவெடுப்பது. எதையும் புரிந்து கொள்ளாமல் சடாரென்று காலில் விழுவது, அல்லது எந்த தலைவனுக்காவது தன்னை ஒப்புக்கொடுத்து தாசன், இரசிகன், அல்லக்கை, சொம்பு என்று அலைந்து  திரிந்துவிட்டு; மறுநாள் இன்னொரு சமாச்சாரத்திற்கு தாசன்,இரசிகன்,அல்லக்கை,சொம்பு என்றாவது....அவர்களின் விருப்பம்.

விடாமல் சொம்பையும் முதுகில் கருத்துக் குப்பைகளையும் யாருக்காகவாது சுமந்துகொண்டு அலைவது என்பது தாசநோய் - க்கான அறிகுறி.


காட்சி1:
'சேசாஷலம்' என்ற ஒருவர் 'பெரியார்' என்ற ஒருவருக்கு , தன்னை ஒப்புக்கொடுத்தார். பெரியார்தாசன் ஆனார்

காட்சி2:
இடையில் அம்பேத்காரின் ஆசை வார்த்தைகளைக் கேட்டு புத்த மத சித்தாந்ததுக்கு தன்னை ஒப்புக்கொடுத்து சித்தார்த்தன் ஆனார்.

காட்சி3:
இப்போது சித்தார்த்தன் என்ற மனிதர் இஸ்லாத்திற்கு தன்னை ஒப்புக்கொடுத்து அப்துல்லாஹ் ஆகியுள்ளார்


சேசாஷலம்  என்ற ‌ பெரியார்தாசன் என்ற சித்தார்த்தன் என்ற அப்துல்லாஹ் - எப்போது? யாருக்கு? அடிமையாய் அல்லது தாசனாய் இருக்கிறார் என்று பார்த்தால் , அனைத்தும் கடவுள் என்ற ஒரு கான்செப்ட்டில் அவருக்கு விளைந்த மாற்றங்களாகவே இருக்கும்.  அவர் இதுவரை கடவுள் என்ற ஒரு கருத்தை ஒட்டியே வாழ்ந்துள்ளார். அதைத்தாண்டி அவர் பயணிக்கவே இல்லை. கடவுள் என்ற ஹருத்தை ஒட்டி அமைந்த ஆற்றில் ஒரு கரையில் இருந்தவர் மறு கரைக்குப் போய் உள்ளார் அவ்வளவே. 


இது எல்லாம் அவரின் சுய உரிமை என்றாலும், பப்ளிக்கில் எதையாவது மேடை கட்டி உளறிவிட்டு , கொஞ்சம்காலம் கழித்து அந்தர் பல்டி அடிக்கும் 'நித்தியானந்தாதனத்திற்கு'  விமர்சனம் தான்.  அதைத்தாண்டி,  'யாருக்கு சொம்பெடுப்பது' என்பது ஒருவரின் தனிமனித உரிமை.

அவர் இதுநாள் வரை வருணாசிரமத்தைத்தான் எதிர்த்தார் என்றால் அது உண்மையல்ல. இஸ்லாம் என்ற மதத்தையும், கிறித்துவம் என்ற மதத்தையும்  கலந்துகட்டித்தான் கேசட் போட்டார். அவருக்கு இருந்தது மதவிமர்சனம்.

இன்று கடவுளைக்கண்டுவிட்டார் . எப்படி? அதே மதங்களின் மூலமாக.

இது போன்ற தாச/இரசிக/தொண்ட/வாசக/ அடிமைகள் யாருக்காவது அடிமையாகவே இருப்பார்கள். சுயமாக இருக்கமுடியாத ஒரு வித ஜன்னிசார்ந்த மோன நிலை.  பாவம் இவரை வைத்து கேசட் போட்டு சம்பாரித்த மக்களும் இவருக்கு கைத்தட்டி இரசித்தவர்களும்.

குத்து அறியும் திறன் கொண்டவன்,  நாத்திகவாதியாகவோ அல்லது ஆத்திகவாதியகவோ இருக்க முடியாது. மிகச்சுலபமாக கடவுள் என்ற கோட்பாட்டைக் கடந்து செல்ல முடியும்.  நிச்சயம் அதை ஆதரித்து, அதற்கு 'சொம்பு தூக்கும் ஆத்திகவாதியாகவோ' அல்லது அதை எதிர்த்து 'தெருமுனையில் சொம்புவிற்கும் நாத்திகவதியாகவோ' இருக்க முடியாது.   அப்படி இல்லாமல் ஆத்திகம் அல்லது நாத்திகம் என்ற ஏதாவது ஒரு கட்சியில் இருந்தால், ஒன்றிலிருந்து மற்றொரு கட்சிக்கு மாறுவது என்பது சகஜம்.

"சின்ன வயசில் இரசினி இரசிகனா இருந்தேன் , இப்ப கமலுக்கு மாறிட்டேன்" என்பது போன்றது ஆத்திக <- ->நாத்திக கட்சி மாற்றம்.

ஆத்திகத்திற்குள் ஏற்கனவே இருக்கும் ஒருவர், ஒரு மதத்தில் இருந்து அடுத்த மதம் போவதும் இப்படித்தான். ஆனால் அது, கட்சிக்குள் அணி மாறுவது போன்ற ஒரு செயல். ஜானகி அணியில் இருந்து ஜெயலலிதா அணிக்குப் போவது போன்றது

பகுத்து அறிய முடிந்தவன் , கடவுள் என்ற ஒரு கான்செப்ட்டை (சித்தாந்தம்,/கருத்து)  ஒன்றைக் கடந்தவனாகவே இருப்பான்.
கடவுள் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன?

சுயம் இழந்தவர்ககளுக்கு  " யாருக்காவது அல்லது எந்த இசத்திற்காவது சொம்புதூக்காவிட்டால்" ஜன்னி வந்துவிடும் . சுயமாக இருக்கமுடியாது.

பகுத்தறிவு என்பது இசமா?
அதுவும் ஒரு இசம்தான்,  எல்லாவற்றையும் (பகுத்தறிவு  என்ற இசம் உட்பட) அலசி ஆராய்ந்து , பிறர் சொன்னதையும் அறிந்து, தாண்டி , கடந்து .... பயணித்துக் கொண்டே இருப்பதுஒன்றைப் பார்த்தவுடன் அல்லது படித்தவுடன் அல்லது அறிந்தவுடன் ஜன்னி வந்து சொம்பெடுப்பது அல்ல. 

.
மதங்களின் மூத்திரச் சந்துகளின் வழியாக வரும் கோர்வையற்ற நாற்றம்
http://kalvetu.blogspot.com/2007/12/blog-post.html

 .
Picture courtesy
When I Saw God in Valparai...
http://radz-cookiespensieve.blogspot.com/2009/07/when-i-saw-god-in-valparai.html

11 comments:

  1. சேஷாசலத்திற்கு சில தாசன்கள் இருக்காங்க தெரியுமா!?

    ReplyDelete
  2. கல்வெட்டு அண்ணா, அசத்தல். ஆத்திகம், நாத்திகம் இரண்டுமே கடவுளைக் கட்டிபுடுச்சு அழுவறதுதான்.
    பகுத்தறிவு என்பது இந்த இரண்டையும் கடந்து செல்வதுதான்.
    ஆத்திகர்கள் எல்லாம் - அவரவர் கடவுளுக்கு அடிமைகள்
    நாத்திகர்கள் எல்லாம் (நான் சந்தித்த வரையில்!) - பெரியாருக்கு அடிமைகள் அல்லது தாசன்கள்!

    // கடவுள் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன?

    பகுத்தறிவு என்பது இசமா?
    அதுவும் ஒரு இசம்தான், எல்லாவற்றையும் (பகுத்தறிவு என்ற இசம் உட்பட) அலசி ஆராய்ந்து , பிறர் சொன்னதையும் அறிந்து, தாண்டி , கடந்து .... பயணித்துக் கொண்டே இருப்பது. ஒன்றைப் பார்த்தவுடன் அல்லது படித்தவுடன் அல்லது அறிந்தவுடன் ஜன்னி வந்து சொம்பெடுப்பது அல்ல. //

    அத்தேதான்.

    ReplyDelete
  3. அன்பான நண்பர் திரு கல்வெட்டு,

    என்ன சொல்ல வரீங்க சார்????

    // ப குத்து அறியும் திறன் கொண்டவன், நாத்திகவாதியாகவோ அல்லது ஆத்திகவாதியகவோ இருக்க முடியாது. மிகச்சுலபமாக கடவுள் என்ற கோட்பாட்டைக் கடந்து செல்ல முடியும். .........// அப்போ பகுத்தறி என்பது என்ன என்று கொஞ்சம் விளக்குங்களேன்? எனக்கும் புரிந்த மாதிரி இருக்கும்!!

    மேலும் "பகுத்தறிவு என்பது இசமா? அதுவும் ஒரு இசம்தான், எல்லாவற்றையும் (பகுத்தறிவு என்ற இசம் உட்பட) அலசி ஆராய்ந்து , பிறர் சொன்னதையும் அறிந்து, தாண்டி , கடந்து .... பயணித்துக் கொண்டே இருப்பது. ஒன்றைப் பார்த்தவுடன் அல்லது படித்தவுடன் அல்லது அறிந்தவுடன் ஜன்னி வந்து சொம்பெடுப்பது அல்ல. //

    வார்த்தை ஜாலங்கள் என்பது யார்வேண்டுமானாலும் செய்யலாம்! அது எப்படி சார் "இருக்கமுடியாது" என்பதை இவ்வளவு ஆணித்தரமாக சொல்லுகிறீர்கள்??
    மேலும், "மிகச்சுலபமாக கடவுள் என்ற கோட்பட்டை கடந்து செல்ல முடியும்" என்று வேறு சொல்லுகிறீர்கள்! எப்படி சார்?????

    மேடை நாத்திகவாதம் என்று நீங்கள் சாடுகிறீர்கள்! அப்போ நீங்கள் பேசுவது என்ன, இணைய தள நாத்தீகம் என்று சொல்லலாமா???

    நன்றி

    ReplyDelete
  4. குத்துங்க கல்வெட்டு ....குத்துங்க.....இந்த தாசனுகளே இபடித்தான் .........

    இவனுகளை எல்லாம் திருத்த கல்வெட்டு போதாது...வேற வேற வேட்டைக்கு போற குடுகுடுப்பை காரன் தான் வேணும் ...................

    பய புள்ள பொய்யா பேரா பெரியார் தாசனு இத்தனை நாளா வைதிருகான் போல .......

    ReplyDelete
  5. //// பகுத்து அறியும் திறன் கொண்டவன், நாத்திகவாதியாகவோ அல்லது ஆத்திகவாதியகவோ இருக்க முடியாது. மிகச்சுலபமாக கடவுள் என்ற கோட்பாட்டைக் கடந்து செல்ல முடியும். .........// அப்போ பகுத்தறிவு என்பது என்ன என்று கொஞ்சம் விளக்குங்களேன்? எனக்கும் புரிந்த மாதிரி இருக்கும்!! //
    திரு NO, கடவுள் இருக்கிறார் - ஆத்திகம், இல்லை - நாத்திகம். தெரியாது - இந்த நிலைக்குப் பெயர் என்ன? பகுத்தறிந்து பாருங்கள்

    //வார்த்தை ஜாலங்கள் என்பது யார்வேண்டுமானாலும் செய்யலாம்! அது எப்படி சார் "இருக்கமுடியாது" என்பதை இவ்வளவு ஆணித்தரமாக சொல்லுகிறீர்கள்??//

    "இருக்கமுடியாது" என்பதை இவ்வளவு ஆணித்தரமாக எங்கே சொன்னார்?

    //மேடை நாத்திகவாதம் என்று நீங்கள் சாடுகிறீர்கள்! அப்போ நீங்கள் பேசுவது என்ன, இணைய தள நாத்தீகம் என்று சொல்லலாமா??? //

    திரு NO ஆத்திகம், நாத்திகம் இந்த இரண்டுக்குமிடையே ஒரு நிலை இல்லை என்று நினைக்கிறீர்களா?

    நம்ம மக்களுக்கு இந்த 3ஆவது நிலை பற்றி கொஞ்சம் விளக்குங்கள் அண்ணா!

    ReplyDelete
  6. /////திரு NO ஆத்திகம், நாத்திகம் இந்த இரண்டுக்குமிடையே ஒரு நிலை இல்லை என்று நினைக்கிறீர்களா?நம்ம மக்களுக்கு இந்த 3ஆவது நிலை பற்றி கொஞ்சம் விளக்குங்கள் அண்ணா! /////

    அது என்னங்க ...3ஆவது நிலை ....?? வாத்திகமா ....யார் என்ன சொன்னாலும் அடிரா ராம அடிரா ராம னு அடிபாகளே பீ ...பீ ...அதுவா...

    ReplyDelete
  7. அன்புள்ள நண்பர் திரு Proxy கல்வெட்டு அதாவது ஈரோடு கோடீஸ் அவர்களே,

    முதலில், நான் கேட்ட கேள்வியை புரியாமல் ஏதேதோ பதில் கொடுக்கும் நண்பரே, முதலில் ஆத்திகம் என்பதனின் நிலைகளை புரிந்து கொள்ளுங்கள்! (நான் உங்களுக்கு பதில் எழுதுவதாக இல்லை, இருந்தாலும் நீங்கள் விவாதத்திற்கு வர முயற்சிப்பதால் சொல்லுகின்றேன்)!

    Theist - One who believes that there is a god who may either be as one that is prescribed in his holy book that which has a form and shape as described, or, as a supreme power that monitors, intervenes and influences human life in every way!
    ஆத்திகன் - உருவம் கொண்ட, அல்லது இல்லாத, ஆனால் தனக்கு மிஞ்சிய, எல்லாவற்றையும் எஞ்சிய மிகப்பெரிய சக்தி ஒன்று இருப்பதை நம்புகிறவன்!

    Deist - One who believes that a God or a supreme entity did set up an initial condition for all the process that includes evolution of cosmos and life but once done sits back and never intervenes. He is not a personal God.
    டேயஸ்ட் - எல்லாவற்றையும் எஞ்சிய சக்தியானது, cosmos மற்றும் உயிரினங்களின் தொடக்கத்தை மட்டும் விதைத்துவிட்டு ஒதிங்கிக்கொண்டுவிட்ட ஒன்றை வணங்குபவன்! ஒரு உருவமோ , அதன் செயல்பாடுகளோ, அதன் கட்டளைகளோ தேவையில்லை மற்றும் அப்படி ஒன்றும் அந்த சக்தியால் தரப்படவில்லை என்று உணர்ந்தவன்!

    Pantheist - One who believes that entire cosmos that we see is itself a form of god and with this kind of sacredness for one to see, doesnt require a personal creator or a anthromorphic entity!
    பான்தேஸ்ட் - நாம் காணும் அண்ட சராசரமே கடவுள் என்ற சக்தியின் ஒரு வெளிப்பாடுதான் ஆதலால் "அவன்" என்பது தனியாக ஒன்றும் இல்லை தேவையும் இல்லை என்று நம்புகிறவன்!

    Panentheist - One who believes that God himself is the expression of cosmos and at the same time able to transcend over and above the cosmos.
    பனேன்தெயஸ்ட் - அண்டத்தின் ஒரு உருவகமே கடவுள், அதே சமயம் அதையும் தாண்டி நிற்ப்பவன் என்று உணர்ந்து தனியாக "அவன்" என்ற உருவகம் தேவை இல்லை என்று நினைப்பவன்!

    நீங்கள் தெரியாது என்றும் சொல்லும் நிலைக்கு பெயர் ஒன்றும் இல்லை - Agnostic என்று வேண்டுமானாலும் சொல்லலாம்! அவர்கள் சொல்லுவது, கடவுள் என்பது இருந்தாலும் இருக்கலாம், ஆனால், அதன் பாதிப்பு, நாம் காணும் வாழ்க்கையில் எந்த விதத்திலும் இல்லை, ஆதலால் வணகுவது அல்லது துதிப்பது என்பதற்கு அர்த்தமே இல்லை என்பதாகும்!

    நான் சொன்னவைகளை முதலில் உள்ள்வாங்கிக்கொண்டு வாருங்கள். பிறகு நான் கேட்ட கேள்விகளை பாருங்கள்! முடிந்தால் பதில் சொல்லுங்கள்!

    நன்றி

    ReplyDelete
  8. ஆத்தீகத்தைப்பற்றி இங்கே அளந்து விட ஆவலாய் துடிக்கும் நண்பர் திரு ஈரோடு அதைப்பற்றிய புரிதலில் அசகாய சூரராக இருப்பார் என்று நினைத்து அவர் தளத்தினை மேய்ந்தேன்! புரிந்தது அவரின் ஆன்மிகம் என்றால் என்ன என்ற பதிவைப்பார்த்து! தாவி குதித்து proxy கொடுத்த நண்பர் திரு ஈரோடு பள்ளம் விழுந்து
    தேஞ்சிப்போன தார் ரோடு என்பதை அவர் பதிவில் இருந்து புரிந்து கொண்டேன்!

    நண்பர் திரு கல்வெட்டு, அப்துல்லாஹ் ஆனவர்களின் பட்டியலில் இவர் பெயரையும் இன்னும் கொஞ்ச நாட்களில் சேர்க்க வேண்டி வரலாம் , of course if at all he still thinks he professes Atheism !!

    வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  9. .


    நோ,
    தேவையில்லாததை அல்லது எனக்கு அக்கறை இல்லாததை என்னால் கடக்க முடியும்.

    ஆப்ரிக்க பழங்குடி கிராமத்தில் இன்று ஒரு பெரிய சம்பவம். அது உங்களுக்கு தெரியாது உங்களுக்கு அக்கறையும் இல்லை. அதைத் தெரியாததால் உங்களுக்கு ஏதாவது இழப்பா?

    அது போலத்தான் எனக்குகடவுள் என்ற ஒரு சித்தாந்தமும்.அதை ஆதரித்‌தோ அல்லது மறுத்தோ நான் வாழப்போவது இல்லை. அது பாட்டுக்கு இருக்கட்டும் எனக்குத் தேவை இல்லாதது அவ்வளவே.

    **

    //அப்போ பகுத்தறி என்பது என்ன என்று கொஞ்சம் விளக்குங்களேன்? எனக்கும் புரிந்த மாதிரி இருக்கும்!!//

    பகுத்தறி என்றால் என்ன என்பதை நான் உங்களுக்குச் சொல்ல நினைத்தாலோ, அல்லது நீங்கள் என்னிடம் கேட்ட நினைக்கும்போதே அவரவர் அவருக்கான ஒன்றைத் தெரிந்து கொள்வதன் உண்மை அடிபட்டுப்போகும். எனவே நீங்களே உங்களை கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள். இது தீட்சை அல்லகொடுப்பதற்கு

    அல்லது நான் ஆசிரியனோ அல்லது உங்களுக்கு வழிகாட்டியோ இல்லை.

    **

    //மேடை நாத்திகவாதம் என்று நீங்கள் சாடுகிறீர்கள்! அப்போ நீங்கள் பேசுவது என்ன, இணைய தள நாத்தீகம் என்று சொல்லலாமா??? //

    சொல்லலாம்.
    அது உங்கள் உரிமை.
    நான் காட்டும் சாளர ஓட்டை வழியே மட்டும்தான் உலககைக்காண வேண்டும் என்று சொல்ல மாட்டேன்.

    உங்களுக்கான கருத்தை நீங்களே சமைத்துக் கொள்ளுங்கள்.

    என்னிடம் ஒன்றும் இல்லை.


    **

    .
    நோ, வால்பையன், சுதந்திர யோகி , ஈரோடு கோடீஸ் கருத்திட்டமைக்கு நன்றி

    .

    ReplyDelete
  10. மிகச்சிறப்பான பதிவு, பல ஆண்டுகளாக நிறைய நிறைய குழப்பங்கள் கடவுள் இருக்கா இல்லையா... ஆனால் கடைசியாக முடிவுக்கு வந்தது கிட்டத்தட்ட இந்த பதிவில் சொல்லியிருப்பது தான், இருந்தா இருந்துட்டு போகட்டும் இல்லைன்னா இல்லாம போகட்டும் எனக்கு அதைப்பற்றி கவலையில்லை என்று கடந்து போகும் மனநிலை வந்துள்ளது...

    எப்படி போலிசாமியார்களோ அது போல போலி பெரியாரிஸ்ட்களும் நாட்டில் பெருகிவிட்டனர்... மேலும் பெரியாரிஸ்ட்கள் பெரியாரியத்தை மதமாக்காமல் விடமாட்டார்கள் போலுள்ளது...இது பற்றிய என் பதிவு <a href="http://kuzhali.blogspot.com/2009/11/blog-post_12.html>இங்கே</a>

    http://kuzhali.blogspot.com/2009/11/blog-post_12.html

    ReplyDelete
  11. என்னையும் மதிச்சுப் பதி தந்த நோவுக்கு நன்றி.

    //நீங்கள் தெரியாது என்றும் சொல்லும் நிலைக்கு பெயர் ஒன்றும் இல்லை - Agnostic என்று வேண்டுமானாலும் சொல்லலாம்! அவர்கள் சொல்லுவது, கடவுள் என்பது இருந்தாலும் இருக்கலாம், ஆனால், அதன் பாதிப்பு, நாம் காணும் வாழ்க்கையில் எந்த விதத்திலும் இல்லை, ஆதலால் வணகுவது அல்லது துதிப்பது என்பதற்கு அர்த்தமே இல்லை என்பதாகும்//

    இதைத்தானே நானும் சொன்னேன்!!
    கடவுள எதுத்தாலே அவன் நாத்திகன் என்று ஏன் முத்திரை குத்துகிறீர்கள்?

    //ஆன்மிகம் என்றால் என்ன என்ற பதிவைப்பார்த்து! தாவி குதித்து proxy கொடுத்த நண்பர் திரு ஈரோடு பள்ளம் விழுந்து
    தேஞ்சிப்போன தார் ரோடு என்பதை அவர் பதிவில் இருந்து புரிந்து கொண்டேன்! //

    அப்படி என்ன பள்ளம் விழுந்துதுனு கொஞ்சம் வெளக்குறீங்களா?

    ஆத்திகம், நாத்திகம் இரண்டுமே கடவுளைக் கட்டிபுடுச்சு அழுவறதுதான். எங்களுக்கு கடவுள் தேவையில்லை. இருந்தால் இருந்துவிட்டுப்போகட்டும்.இல்லாட்டியும் ஒன்னும் நட்டமில்லை.

    //மேடை நாத்திகவாதம் என்று நீங்கள் சாடுகிறீர்கள்! அப்போ நீங்கள் பேசுவது என்ன, இணைய தள நாத்தீகம் என்று சொல்லலாமா??? //

    நாங்க பேசறது நாத்திகமே இல்லை! அது உங்க மேலான அறிவுக்கு எட்ட ஏதாச்சும் விரதம் இருந்தா இருந்து பாருங்க!

    //அது என்னங்க ...3ஆவது நிலை ....?? வாத்திகமா ....யார் என்ன சொன்னாலும் அடிரா ராம அடிரா ராம னு அடிபாகளே பீ ...பீ ...அதுவா...//

    சுதந்திர யோகி ! தங்கள் மேலான புரிதலுக்கு நன்றி.

    ReplyDelete