Wednesday, July 07, 2010

ஜேம்ஸ் கேமரூன் அப்புறம் இந்த மணிரத்னம் போன்றவர்களும் இயக்குனர் என்றே அழைக்கப்படுகிறார்கள்.


ஜேம்ஸ் கேமரூனின் அவதார் என்ற திரைப்படம் சொல்லும் முக்கிய விசயம்   வளத்திற்காக கொள்ளையிடப்படும் இடமும் அதனைச் சமாளிக்க பாதிக்கப்பட்டவர்கள்  முன்னெடுக்கும் போராட்டமும்"    என்று ஒருவரியில் உள்ளடக்கத்தைச் சொல்லலாம். இந்தப் பிரச்சனையை மனிதர் வாழும் எல்லா நாடுகளிலும் (இடங்களில்) பொருத்திப் பார்க்கலாம். எதோ ஒரு வகையில் இந்த பிரச்சனை எல்லா நாடுகளிலும் இருக்கும்.

ஆச்சர்யமான ஒன்று என்னெவென்றால், ஜேம்ஸ் கேமரூனுக்கு இந்தியாவில் நடக்கும் பிரச்சனையும் தெரிந்து இருக்கிறது. அதை அவர் வெளிப்படையாகவும் சொல்கிறார்.


Is Avatar a Native American story?

என்ற கேள்விக்கு பதில் சொல்லும் ஜேம்ஸ் கேமரூன் , இப்படிச் சொல்கிறார்.

Not exclusively. I think Americans locate the story there most quickly. But Avatar's now the No. 1 movie in Brazil, and Brazil has a lot of issues with the displacement of indigenous populations and deforestation. There's a tribe in India that is getting pushed off its sacred mountain for a bauxite mine. The film is hugely popular in China, and people there are getting displaced by the government to build dams. So people are relating to it from all these different perspectives.

Read more:
10 Questions for James Cameron
http://www.time.com/time/magazine/article/0,9171,1969722,00.html

காணொளியாக‌ (வீடியோப் பதிவாக ) பேட்டி
http://www.time.com/time/video/player/0,32068,69997107001_1969700,00.html




இந்தப்பிரச்சனை குறித்த amnesty.org யின் விரிவான அறிக்கை.
India: Don't mine us out of existence: Bauxite mine and refinery devastate lives in India
http://www.amnesty.org/en/library/info/ASA20/001/2010/en


தமிழில் நாகர்ஜுனன் -திணை இசை சமிக்ஞை
http://nagarjunan.blogspot.com/2010/04/6.html

இதனைப் படிக்கும் போது மணிரத்னம் போன்றவர்களும் "ச‌னியனுடன் பீடி குடித்தேன். அதனோடு உரையாடிய போது டவுசர் கிழிந்தது" என்று எதையாவது கிறுக்கி உலகத்து பிரச்சனைகளில் இருந்து தன்னைத் துண்டித்து கனவில் வாழ்ந்து வரும் பின் நவீன புனைவு பதிவர்களும் நினைவில் வந்து போகிறார்கள்.

மணிரத்னம் போன்றவர்களும் இயக்குனர் என்றே அழைக்கப்படுகிறார்கள். அவர்களும் படம் எடுக்கிறார்கள். அவரையும் அறிவாளி என்கிறார்கள். மக்களின் பிரச்சனையைச் சொல்லதா கலை என்ன கலை?  கோமாளிகள் எழுதும் கருமாந்திரப் புனைவுகள் நினைவிற்கு வந்து தொலைக்கிறது. கேட்டால்,  "கலை ஏதாவது ஒன்றைச் சொல்லத்தான் வேண்டுமா?" என்கிறார்கள் புனையும் பின் நவீனப் புண்ணாக்குப் பதிவர்கள்.

---
தொடர்புடைய பதிவு...
உண்மைத்தமிழன்
இராவணன் - மணிரத்னம் சொன்னதும், சொல்லாமல்விட்டதும்..!
http://truetamilans.blogspot.com/2010/06/blog-post_20.html

தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் உச்சக்கட்ட வெறியில் ஆட்டமோ ஆட்டம் என்று ஆடிக் கொண்டிருக்கிறது இந்திய அதிகார வர்க்கம்.பழங்குடியினர், மலைவாழ் மக்களின் பூர்விகச் சொத்தான காடுகள், மலைகள், இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் விதமாக எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் செயல்படும் இந்த அதிகார வர்க்கத்தின்  ஒரே குறிக்கோள்.. சட்டம், நீதிமன்றம் என்ற ஒன்றையே இந்த அப்பாவி மக்களின் கண்களில் காட்டாமல் இவர்களைக் கொன்றொழிப்பதுதான்..!
.....
எத்தனை நல்ல சந்தர்ப்பம் மணிக்கு..? இன்றைய யதார்த்த நிலைமையை சுட்டிக் காட்டுவதைப் போல தான் செய்தது தன்னைச் சார்ந்த மக்களுக்காகவும், அந்த மக்களை பாராமுகம் காட்டி புறக்கணிக்கும் ஏகாதிபத்திய அதிகார வார்க்கத்தை எதிர்த்தும்தான் என்பதை ஆணித்தரமாக நிரூபித்திருந்தால் இத்திரைப்படம் இந்திய அரசியல் சினிமாவில் மிக முக்கியப் பங்கை அளித்திருக்கும்..!




.
Picture Source: time.com

4 comments:

  1. :) அருமையான பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  2. கேமரூனுக்கு இருக்குற நேர்மை மணிரத்னத்திடம் இல்லை!

    இருவர் மற்றும் குருவில் அப்பட்டமாகிவிட்டது!

    ReplyDelete
  3. கல்வெட்டு, மணிரத்னம் போன்ற ஆட்களிடம் பிரச்சனையே தன்னை என்னவாக நிலைநிறுத்த நினைக்கிறார்களோ அதுக்கு தான் தகுதியானவன் இல்லை என்பதை உணர்ந்திருப்பதால் ஏற்படும் தடுமாற்றம்தான். எப்போது ஏதேனும் மூலக்கதையை சுடுவது(புராணக் கதை மட்டும்தான் என்றில்லை சமகால நாவல் வடிவங்கள், தலைவர்களின் வாழ்கை வரலாறு என்று சகட்டுமேனிக்கு எதையாவது :)) ), இளையராஜாவிலிருந்து ரஹ்மான் வரை, பி.சி.ஸ்ரீராமிலிருந்து சந்தோஷ் வரை என எப்போதும் டாப்பர்களையே பயன்படுத்தி தன்னை காப்பாற்றிக்கொள்வது என அவரின் தகிடு தத்தங்களே சொல்லும் அவரின் யோக்கியதையை....

    ReplyDelete
  4. .

    விதூஷ்

    வால்

    லக்ஷ்மி

    வந்தமைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி!
    .

    ReplyDelete