Sunday, May 13, 2012

நித்தி பிள்ளை இல்லை முதலி : இலக்கியவியாதி நெல்லை கண்ணன் கவலை

மிழ்நாட்டில் எந்த இலக்கியவியாதிகளும் சமூகப்பணிகளில் நேரடிப்பங்கு கொள்வது இல்லை. கதைப்புத்தகம் எழுதுவது, அம்புலிமாமா வாசக வட்டத்தின் சொம்புக்கூட்டங்களில் கலந்துகொண்டு மயிர்பிளக்க விவாதிப்பது போன்ற உலகமாகப் பணிகளில் மட்டுமே கலந்துகொள்வார்கள். சமூகப்பிரசனைகள் இவர்களுக்கு தேவை அற்றது. முடிந்தால் அதில் பட்டும்படாமல் எதையாவது உருவி கதை சமைக்கப் பார்ப்பார்கள் (சுசாதா பாணி பிரச்சனைக்குள் போகாமல் மொக்கை கருத்துகளை கதையாக்குவது.) அல்லது வாய்கிழியப் பேசிவிட்டு கர கர சங்காரா என்று கடைசிக்காலத்தில் மடப்பிரச்சாரவாதிப்போல சமஸ்கிரகத்திற்கு சொம்பெடுப்பது (செயகாந்தன் பாணி) என்று மாறிவிடுவார்கள்.

நெல்லை கண்ணன் அவர்களின் தமிழ்ப்பற்று குறித்துபேச ஒன்றும் இல்லை. நல்ல தமிழ் ஆர்வலர். ஆனால் இவர் எந்த சாதி எந்த மடத்திற்கு நல்லது என்று சண்டைபோட வந்துள்ளார்.

http://tamil.oneindia.in/news/2012/05/13/tamilnadu-nellai-kannan-seeks-jaya-help-save-madurai-aadheenam-153902.html

பின்னர் குழுத் தலைவர் நெல்லை கண்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

"மதுரை ஆதீனமாக சைவ வேளாளரை நியமனம் செய்ய வேண்டும். ஆனால், அகமுடைய முதலியாரான நித்தியானந்தாவை, ஆதீனமாக நியமித்துள்ளது சைவத்திருமடங்களின் விதிகளுக்கும், மரபுகளுக்கும் புறம்பானது."

மடங்களுக்கு நல்ல மனிதர்கள் தேவை இல்லை. ஒருவேளை நித்தி சைவ வேளாளராக இருந்திருந்தால் பஞ்சாயத்து கண்ணன் ஒகே சொல்லியிருப்பார் என்றே நினைக்கிறேன்.

காஞ்சியாகட்டும் மதுரையாகட்டும் மடங்களுக்கு சாதிதான் முக்கியமே தவிர நல்ல மனிதர்கள் அல்ல. அதுக்கு சொம்பாக இப்படி இலக்கியவியாதிகளும் பேசுவது அதிர்ச்சியாக இல்லை........ஏன் என்றால் செயமோகனாகட்டும் செயகாந்தன் ஆகட்டும் சுசாதா ஆகட்டும் நெல்லை கண்ணன் ஆகட்டும் மதத்தில் திளைப்பவர்களே .அவர்களின் மதமே வர்ணாசிரம சாதியக் கட்டுமானம்தான் எனும்போது சொல்ல ஒன்றும் இல்லை.

நெல்லை கண்ணன் இனி பிள்ளை கண்ணன்.

தம்மைத்தாமே நக்கிக்கொள்ளும் நாய்கள்‍ யார் யார்? - விளக்கம் : கதைபுக் ரைட்டர் ஜெய‌காந்தன்
http://kalvetu.blogspot.com/2010/03/blog-post_31.html


"சைவம்" - என்பது மதம். அது "உணவுப் பழக்கம்" அல்ல‌
http://kalvetu.blogspot.com/2011/01/blog-post.html