Wednesday, July 24, 2013

உங்களுக்காக வழிமேல் விழிவைத்து --- கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் பதிவர்/ப்ளசர்களே என் ப்ரியமானவர்களே,

ஜூலை 28 ஞாயிறு (28/07/2013) மாலை 4:30 மணி அள‌வில் ஓம்காரின் பிரணவபீடத்தில் உங்களை எல்லாம் சந்திக்க ஆவலாய் உள்ளேன்.

நோக்கம்:
படமும், எழுத்துமாய் அறிமுகமாகி இன்றுவரை அதே படமும் எழுத்துமாய் இருக்கும் உங்களை எல்லாம் நேரில் காண்பதே. உங்களுக்காக காத்திருக்கிறேன்.

இடம்:
http://pranavapeetam.org/contact.htm

Pranava Peetam Trust
#47, Ponurangam Road(East),
Near Jain Temple.
R S Puram,
Coimbatore 641002.

ஓம்கார் அவர்கள் அவரது ஆன்மீக பயிற்சிவகுப்புகள் தொடர்பாக காலை முதல் மாலை 4 வரை வகுப்பில் இருப்பார். எனவே அவரை போன் போட்டு இம்சிக்காமல் , இந்த இடத்தை பேப்பரில் குறித்துக்கொள்ளுங்கள்.  :))

உங்களுக்காக வழிமேல் விழிவைத்து...

*******
1. சேலம் வைத்தியர் காளிமுத்து , ஊர் ஊருக்கு லாட்ஜ் போட்டு அன்பரகளுக்கு குணப்படுத்துவார். அவர் எப்போது எங்கே என்று தெளிவாக போஸ்டர் அடித்து மதுரை சந்து பொந்துகளில் இருக்கும். தேடிப்போவார்கள் தேவையானவர்கள்.

2. கட்சி தலைவர்கள், வட்டம் மாவட்டங்களில் சொல்லிவிட்டால் எல்லாம் தயாராய் இருக்கும்.

3. பிஸ்கோத்து பிளாக்கர்/ப்ளசரான எனக்கு இருக்க இடம் (மடம்) கொடுத்த சக பிளாக்கர்/ப்ளசர் ஓம்கார் அவர்களுக்கு என் நன்றி.

"இப்படி இப்படி என்ன செய்யலாம்"  என்றவுடன் "எங்கேயும் போகவேண்டாம், இங்கேயே வாருங்கள். மற்றவர்களையும் இங்கே வரச்சொல்லிவிடுங்கள்"  என்று சொல்லி பரசவப்டுத்திவிட்டார் ஓம்கார்.

ஓம்காருக்கும்  எனக்குமான ஆதிகால உரையாடல்களை அறிந்தவர்களுக்கு எங்களின் வெட்டு குத்துகள் தெரியும். ஆனால் அன்பிற்கு உண்டோ அடைக்கும்தாழ்?

#I feel honored

**
மனைவியிடம் சொன்னபோது "இந்த ஆளோட நான் எப்படி குடும்பம் நடத்துகிறேன்" என்ற‌ சொற்பொழிவும் இருக்கும் என்று சொல்லிவிடுங்கள் என்றார்.

4 comments:

  1. :) அஹா மெய்யாலுமா ?

    கூகுள் ப்ளசில் பகிர்ந்தீர்களா ?

    ReplyDelete
  2. கல்வெட்டுவை நேரில் சந்திக்க ஆவல் இருந்தும். இன்று காலையே வெளியூர் புறப்பாடு. திரும்ப வரும் நேரம் நம் கையில் இல்லை ;) எனவே மன்னிக்கவும். மகிழ்வானதொரு நிகழ்வுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. திருப்பூர் வர வாய்பில்லையோ?

    ReplyDelete
  4. கோவி,
    ஆம் பகிர்ந்தேன்.

    காசி,
    அனைவரையும் பார்க்க ஆவல். ஆனால் நேரப்பற்றாக்குறை. நீங்கள் உட்பட பலரைச் சந்திக்கமுடியாமல்போனது வருத்தமே. :(

    ஜோதிஜி,
    நிச்சயம் திருப்பூர் பக்கம் வர விருப்பம் உள்ளது. நேரம்தான் முடிவாக‌வில்லை

    ReplyDelete