Tuesday, November 10, 2015

The Arab Of The Future - Graphic Memoir by Riad Sattouf

க்ஃச்போர்ட் பல்கலைகழகத்தில் கிடைத்த பேராசிரியப் பணியை வேண்டாம் என்று மறுத்துவிட்டு லிபியா செல்கிறார் வரலாற்றுப் பேராசிரியர்  அப்தல் ரசாக் ஃசட்டோவ் (Abdel-Razak Sattouf). அவருக்கு லிபிய அதிபர் கடாபியின் சித்தாந்தங்களில் பெரும் நம்பிக்கை இருந்தது. கடாபி மீது கொண்டிருந்த நம்பிக்கையும், லிபியா அரசியலில் முக்கியப் பங்காற்றலாம் என்ற எண்ணமும் அவரை அப்படிப் போக வைத்தது.

சிரியாவில், காம்ஃச் ( Homs ) அருகே உள்ள ஒரு குக்கிராமத்தில் கடைக்குட்டியாகப் பிறக்கிறார் அப்தல். நோய் வந்தால் கொடுக்க மருந்துகூட இல்லாத ஊர் அது. அப்தலுக்கு மற்ற உடன்பிறப்புகளுக்கு கிடைக்காத சலுகை கிடைத்தது.  ஆம் அவருக்கு மட்டுமே சிறுவயதில் பள்ளி செல்ல வாய்ப்புக்கிடைக்கிறது. கல்வியில் சிறந்து விளங்கிய அப்தலுக்கு, சிரிய அரசாங்கத்தின் கல்வி உதவிகள் கிடைக்கிறது. அவர் குடும்பத்தில் அவர் மட்டுமே எழுதப் படிக்கத்தெரிந்தவர் ஆகிறார். மேற்படிப்பிற்காக பல மேற்குநாடுகளுக்கு விண்ணப்பம் இடுகிறார். அப்படி அனுப்பிய விண்ணப்பங்களில் அவருக்கு ஒரே ஒரு பல்கலைமட்டுமே பதில் அனுப்புகிறது. அது பிரான்ஃச் நாட்டு "சர்பான்" ( Sorbonne )  பல்கலைக்கழகம். அங்கு அவர் வரலாற்றுப் பாடத்தில் முனைவர் பட்டம் பெறுகிறார்.

சுன்னி இசுலாமியரான அப்தலுக்கும் , கேத்தலிக் கிறித்துவரான கிளமன்டைனுக்கும் (Clementine ) சர்பானில் படிக்கும்போது நட்பு ஏற்பட்டு மணமுடிக்கிறார்கள். அவர்களுக்கு பிறந்த குழந்தை ரியாட் ஃசட்டோவ் (Riad Sattouf) . குழந்தை பிறந்த நேரத்தில்தான் அப்தலுக்கு லிபியாவில் உள்ள ஒரு பல்கலைகழகத்தில் இருந்து பேராசிரியப் பணிக்கான அழைப்பு வருகிறது. லிபியாவிற்கு திரும்பிச்செல்லும் திட்டம் அப்தலின் மனதில் இருந்து கொண்டே இருந்துள்ளது. மேலும் தான் கற்ற மேலை நாட்டுக்கல்வி போன்று அரபு நாடுகளுக்கு கொடுக்கவேண்டும் என்ற ஆசையிம் அவருக்கு உள்ளூர இருந்துள்ளது. ஆனால் அதுகுறித்து அவர் மனைவியிடம்கூட ஏதும் சொல்லியிருக்கவில்லை. பிரான்ஃசில் படித்து இருந்தாலும் , 'மனைவி கணவனைப் பின் தொடரவேண்டும்' என்பது போன்ற பழைய நம்பிக்கைகள் இருந்து வந்துள்ளது அப்தலுக்கு.

கிளமன்டைனும் காதல் கணவருக்காக , குழந்தையுடன்,  பிரான்ஃசில் இருந்து, லிபியாவில் உள்ள ட்ரிப்போலி Tripoli  என்ற இடத்திற்கு 1978 ல் இடம் பெயர்கிறார். லிபியாவில் அப்தலுக்கு நல்ல வேலையுடன் வீடும் கிடைக்கிறது. அப்போது கடாபியின் ஆட்சிக்காலம். அனைவருக்கும் இலவச வீடு திட்டம் நடைமுறையில் இருந்த காலம். அப்தலின் குடும்பத்திற்கு நல்ல வீடு கிடைக்கிறது. ஒருநாள்,  தனது மனைவி , கைக்குழந்தையுடன் அவர்கள் வீட்டில் இருந்து கொஞ்சதூரம் நடந்து சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிகிறார்கள். அவர்கள் வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் வெளியில் வைக்கப்பட்டு இருந்தது.  அந்த வீட்டில் வேறு ஒரு குடும்பம் இருந்ததைப் பார்த்து அப்தலுக்கு அதிர்ச்சி. "இது என்னுடைய வீடு. நீங்கள் யார்?" என்று கேட்டார் அப்தல். "லிபியாவில் தனிப்பட்ட சொத்து என்று யாருக்கும் இல்லை. இது இப்போது என் வீடு" என்றார் அந்த வீட்டிற்குள் இருந்த மனிதர்.

ம் , ஒரு சில மணித்துளிகள்கூட வீட்டில் இல்லாவிட்டால் அது காலி வீடாகக் கருதப்படும். யார் வேண்டுமானாலும் அதை எடுத்துக்கொள்ளலாம். அதுதான் லிபியாவில் அப்போது நடைமுறை. இலவசவீடு என்ற சூத்திரத்திற்குள் இருக்கும் நடைமுறை. வந்த சில நாட்களிலேயா கடாபியின் ஆட்சியின் உண்மை நிலை அப்தலுக்கு முகத்தில் அறைகிறது. அவர்கள் மற்ற ஒரு காலிவீட்டைக் கண்டு பிடித்து அங்கு குடியேறுகிறார்கள். அப்போதைய கடாபியின் ஆட்சியில் சட்டங்கள் விநோதமானவை. அறிவியல் புனை கதைகளுக்கு மேலான சுவராசியம் கொண்டவை. திடீரென்று அனைவரும் அவரவர்கள் பார்க்கும் வேலையை மற்ற ஒருவருடன் மாற்றிகொள்ள வேண்டும் என்பார். பேராசிரியர் விவசாயம் பார்க்கவும், விவசாயி பாடம் நடத்தவும் வேண்டியது இருக்கும்.

தான் எதிர்பார்த்த அளவிற்கு லிபியா சிறந்த நாடாக இல்லை என்பதை உணர்ந்த அப்தல், தனது குடும்பத்தை மறுபடியும் இடம் பெயற்கிறார். இப்போது லிபியாவில் இருந்து தான் பிறந்த நாடான சிரியாவிற்கு அதுவும் தான் பிறந்த ஊருக்கு அருகிலேயே. அங்கு பல சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் கிளமன்டைனும் , குழந்தையாய் இருந்த ரியாட் ஃசட்டோவும்.

பிரான்ஃசில் , பிரிட்டனி ( Brittany ) என்ற இடத்தில் பிறந்து வளர்ந்த கிளமன்டைனுக்கு , சிரியாவில் ஆண்/பெண்பால் வேறுபாடுகள், நடைமுறை வாழ்க்கை சிக்கலை ஏற்படுத்துகிறது. அங்கு இருந்தவர்களுக்கு இவர்கள் பிரான்ஃசில் இருந்து வந்தவர்கள் என்பது தெரிகிறது. பிரான்ஃச் , இசுரேலின் கூட்டாளி என்பதும் தெரிகிறது. எனவே இவர்கள் சிரியாவின் எதிரிகளாகவே பார்க்கப்படுகிறார்கள்.  அவரும் அவரது அம்மாவும் மட்டுமே ஃபிளாண்ட் (blonde) ஆக இருக்கிறார்கள். ரியாட்,  அவரது நண்பர்களால் யூதர் என்றே அழைக்கப்படுகிறார். இப்படியான கால கட்டத்தில் (1990) கிளமன்டைன் தனது கணவரைவிட்டு பிரிந்து மகனுடன் மறுபடியும் பிரான்ஃசிற்கே திரும்புகிறார். அப்போது ரியாட் ஃசட்டோவிற்கு 12 வயது.

வர்தான் பிற்காலத்தில் சார்லி ஃகெப்டொ ( Charlie Hebdo ) இதழுக்கு கார்ட்டூன் துணுக்குகளை வரைந்து கொடுத்தவர். இவர் சார்லி ஃகெப்டொ இதழில் 10 வருடங்கள் வேலை செய்தாலும், இவரது பணி பெரும்பாலும் மின்னஞ்சல் பரிமாற்றம் மூலமே நடந்து வந்தது. மத அடிப்படைவாதிகள்,   'சார்லி ஃகெப்டொ' அலுவலகத்தை சூறையாடி ஒன்பது பேரைக் கொன்ற சம்பவத்திற்கு முன்னரே இவர் தனது பணியில் இருந்து விலகிவிடுகிறார்.

இவரது இளமைக்கால வாழ்க்கையை  "The Arab Of The Future: A Childhood In The Middle East, 1978-1984." என்று காமிக் (Graphic Memoir) புத்தகமாக கொண்டு வந்துள்ளார்.  பிரான்சில் பிரபலமடைந்த இந்த புத்தகம் தற்போது ஆங்கிலப் பதிப்பாக வந்துள்ளது.


தகவல்கள்: 
http://www.npr.org/

Monday, November 09, 2015

Always Ask the Turtle - Gloria Steinem

ல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போது, கள ஆய்விற்காக ஆசிரியர் மற்றும் மற்ற மாணவர்களுடன் கனடிக்கட் ஆற்றுப் பக்கம் செல்கிறார் குளோரியா ஃச்டைனம் (Gloria Steinem) . அப்போது ஒரு பெரிய ஆமையொன்று (Turtle)  ரோட்டின் அருகே மெதுவாக வந்து கொண்டுள்ள‌தைப் பார்க்கிறார். ரோட்டைக் கடக்கும் போது அது கார் சக்கரத்தில் அடிபட்டு இறந்துவிடும் என்று எண்ணி, அந்த ஆமையை உடனடியாக காப்பாற்ற விளைகிறார் குளோரியா.

பெரிய ஆமை அது. இரண்டு கைகளாலும் அதை தூக்கி ஆற்றை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறார். வழியில் தன்னை விடுவித்துக்கொள்ள அந்த ஆமை தனது கால்களைக் கொண்டு பட் பட் என்று அறைந்து கொள்கிறது.

ஆனால் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் மிகவும் சிரமப்பட்டு குளோரியா அதை விடாமல் தூக்கிச் சென்று ஆற்றில் விடுகிறார். அப்போது அங்கே வந்த அவரின் ஆசிரியர், " இந்த ஆமை பல நாட்கள் அல்லது வாரங்கள் பயணப்பட்டு இங்கே வந்து இருக்கலாம். பல சிரமங்களுக்கு இடையில் முட்டை இட நல்ல இடம் தேடிக்கொண்டு இருந்த ஒன்றை, நீ மறுபடியும் ஆற்றில் கொண்டுபோய் விட்டுவிட்டாய். அது மறுபடியும் இப்படி ஒரு இடத்தை அடைய இன்னும் பல வாரங்கள் ஆகலாம்" என்று சொன்னார்.

இந்த சின்ன அனுபவம் இருக்கு சில புரிதல்களைக் கொடுத்ததாகச் சொல்கிறார். இதையே அவர்  " Always Ask the Turtle  "  என்கிறார். http://www.mollylarkin.com/ask-the-turtle/

இவரின் புதிய புத்தகம் " My Life on the Road  " இப்போது வந்துள்ளது.
http://www.latimes.com/books/la-ca-jc-gloria-steinem-memoir-20151108-story.html

இவரின் சிறுவயதில் இருந்தே பயணம் வாழ்வின் ஒரு அங்கமாக இருந்துள்ளது. இவரின் அப்பா ஒவ்வொரு வருடமும் இலையுதிர்காலத்தில் குடும்பத்துடன் பயணங்களை மேற்கொள்வார். வழியில் பொருட்களை வாங்கி விற்றுக்கொண்டு, அதில் வரும் வருமானத்தில் பயணத்தை தொடர்வார்கள். இந்தியாவில் இரண்டு வருடங்கள் இருந்துள்ளார். அப்போது அவரின் பயணக் கதைகளை நியூயார்க் டைம் ல் எழுதி வந்துள்ளார். http://india.blogs.nytimes.com/author/gloria-steinem/

பயணங்கள் புதிய ஒரு புரிதலைக் கொடுக்கும் என்று சொல்லும் இவர் இன்றும் எங்காவது பயணத்தில் இருக்கக்கூடும்.

Monday, October 26, 2015

மதம் குறித்தான‌ ராபி மற்றும் ரிச்சர்டின் விவாதம்

ராபி மற்றும் ரிச்சர்டின் உரையாடல் சிறப்பான ஒன்று. இப்படியான உரையாடல்கள் இரு தரப்பையும் புரிந்துகொள்ள உதவும்.

ரிச்சர்ட் டாக்கின்ஃச் ( Richard Dawkins)

இவர் கிறித்துவ மதத்தை தழுவிய பெற்றோருக்கு பிறந்து , பின்னர் கடவுளின் இருப்பை கேள்வி கேட்ட ஆரம்பித்தவர். இவர் பெரும்பாலும் கிறித்துவ விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் ( Old Testament )சொல்லப்படும் கடவுளை ஒட்டி கேள்விகளை எழுப்புபவர். பல புத்தகங்கள் , விவாதங்கள், மற்றும்  உரையாடல்கள் மூலம் அவரின் கருத்தை கொண்டு செல்பவர். இவர் ஒரு உயிரியல் ஆய்வாளர் (Evolutionary Biologist). இவர் தனது அமைப்பின் குறிக்கோளாக சொல்வது   https://richarddawkins.net/aboutus/
//The mission of the Richard Dawkins Foundation is to promote scientific literacy and a secular worldview. Some might see this as two distinct missions: 1) Teaching the value of science, and 2) Advancing secularism.//

ராபி சாக்ஃச் (Rabbi Jonathan Sacks)

இவர் ஒரு யூதர். இவர் தான் ஏன் ஒரு யூதர் என்று அவரே சொல்கிறார்.
"Why I am a Jew”  http://www.rabbisacks.org/why-i-am-a-jew/ . இவரும் பல புத்தகங்களை எழுதியுள்ளவர். இவர் எழுதிய Not in God’s Name ( Confronting Religious Violence) பலராலும் பாராட்டப்பட்ட ஒன்று.

தகவலுக்காக:
  • ஆபிரகாமிய மதங்களில் கிறித்துவம் மற்றும் இசுலாம் போலில்லாமல் , யூத மதம் இரண்டு அடையாளங்கள் கொண்டது. அடிப்படையில் அது ஒரு இனம் ( race ). இந்த இனத்தில் பிறந்தவர் தான் இயேசு (Yeshua) .  யூத மத நம்பிக்கைகளை  எதிர்த்து புரட்சி செய்தவரும்கூட‌. பிற்காலத்தில் அவரது பேரில் ஒரு மதம் உருவானது வரலாறு.
  • ஒருவரின் யூத அடையாளம் என்பது இரண்டு வழிகளில் வருவது.  “Descent,”  &  “Consent.” தாய் (mother) யூதராக இருந்தால் , குழந்தையின் யூத அடையாளம் Descent Jew .வேறு மதத்தில்  இருந்து மாறுவதால் வரும் அடையாளம் Consent Jew.

Debate - Richard Dawkins vs Jonathan Sacks


விவாதம் குறித்தான எனது பார்வை
  1. இந்த விவாதம் முழுக்க முழுக்க ஒரு யூதருக்கும், கிறித்துவப் பின்னனியில் இருந்து வந்து, தற்போது கிறித்துவம் காட்டும் கடவுளை கேள்வி கேட்கும் ஒருவருக்கும் நடக்கும் விவாதமாகவே உள்ளது. இதனை பொதுவான கடவுள் நம்பிக்கை குறித்தான விவாதமாக என்னால் ஏற்க முடியவில்லை.  ராபி எல்லா இடத்திலும் கிறித்துவத்தைவிட யூதம் சிறந்தது என்ற ஒப்பீடுகளை வைத்தே அவரின் தரப்பை நியாயப்படுத்துகிறார்.
  2. ராபி , உலம்/அண்டம் குறித்த உரையாடலின் போது இவ்வாறு ஒன்றைச் சொல்கிறார்  ..to understand the system you need to be outside of system  ..... இப்படிச் சொல்லி, அதனால் படைத்தவன் ( creator  )  system - ற்கு வெளியேதான் இருக்க முடியும் என்று நிறுவ முயல்கிறார். @ 10:22
  3. கடவுள் உலகைப் படைத்தவர், அவர் உலகிற்கு வெளியே உள்ளவர் என்றால், அந்த கடவுளைப் படைத்தவர் யார்? என்ற  கேள்விக்குள் அவர் போக நினைக்கவில்லை. அதுவே போதும் என்று அவரது பயணத்தை சராசரி மதப் பற்றாளர்கள் போல நிறுத்திக்கொள்கிறார்.  அவர் சொல்லும்   to understand the system you need to be outside of system  முக்கியமானது.  இதை கடவுளுக்கும் பொருத்திப் பார்க்க வேண்டும். கடவுளைப் பற்றி அறிய , அதையும் தாண்டிப் போக வேண்டும்.
  4. @ 21:29 ‍- 22:30 ராபி,  விவிலியத்தை கிறித்துவத்தின் வழியில் படிக்கக்கூடாது என்கிறார் ( don’t read bible in Christian way  ).  @ 27:02 -27:39 அவர் யூதம் கிறித்துவத்தை, இசுலாத்தைவிடச் சிறந்தது என்கிறார். இங்கே ஒரு சராசரி மதப் பிரச்சார‌ யுத்தியே தெரிகிறது. இவர் பொதுவான "கடவுள்" என்ற கருத்தாக்கம் குறித்து பேசவில்லை. இந்த வாய்ப்பில் தனது ம‌தத்தைச் சரி என்று நிறுவ முயல்கிறார் என்றே நினைக்கிறேன்.
  5. ராபி சொன்னதில் பிடித்த ஒன்று , "அறம் என்பது மதத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று" சொன்னதே. பெரும்பாலன மத குருக்கள் "மதம் அற்றவன் அறம் அற்றவன்" என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது இவர், "மதத்திற்கும் அறத்திற்கும் தொடர்பில்லை" என்கிறார். @ 31:00-34:20  (  Religion don’t have any role in Moral   )
  6. சல்மான் ருஃச்டி பற்றிய உரையாடலின்  @ 45:03 - 41:00 போது 'ராபி' கருத்துச் சுதந்திரந்தை ஆதரிக்கிறார். "மதங்களை எதிர்த்துப் பேசும் சுதந்திரம் அனைவருக்கும் வேண்டும்" என்கிறார். 'ஒரு மதம் அதை யாரும் விமர்சிக்கக்கூடாது என்று மூடிவைத்து காலம் தள்ள முடியாது' என்கிறார். இங்கேயும் இவர் யூதம் கருத்துச் சுதந்திரத்தை ஆதரிக்கிறது என்று சொல்கிறார். ஆனால் வசதியாக இயேசுவின் கருத்துச் சுதந்திரத்திற்கு யூதம் என்ன செய்தது, என்பதை  மறந்து விடுகிறார். இவரே இந்த உரையாடலின் ஆரம்பத்தில் ரிச்சர்டின் புத்தகம் தனது நம்பிக்கையை புண்படுத்தியது ( offended ) என்றும் புலம்புகிறார்.  இரட்டை வேடம் போல் உள்ளது இவரது பேச்சு.
  7. ஒரு குழந்தை பிறந்தவுடன் அதற்கு மதச் சுமைகளை சுமத்த வேண்டாம் என்று நான் சொல்வது போல , ரிச்சர்டும் ஒரு வாதத்தை முன் வைக்கிறார். 28:21 - 29:12 12  (Labeling a child) . ஆனால் இதை ராபி , குழந்தையின் குடியுரிமை மற்றும் மொழி அடையாளம் போல இதுவும் ஒன்று என்று சொல்லி சமாளிக்கிறார்.  @ 30:49 - 31:02   ராபி அதுகுறித்து பேசுவதை அவசரமா தவிர்ப்பது போலவே எனக்கு தெரிந்தது.
  8. "தேங்கிவிடும் குட்டை" என்று நான் அடிக்கடி சொல்வேன். அதுபோலவே ரிச்சர்டும்  super natural  குறித்தான ஒரு கருத்தை முன் வைக்கிறார். @ 42:40- 44:05  "When you admit it is super natural, by definition it is not understandable" .  தெரியாத ஒன்றை தெரியாது என்று சொல்லும்போது,  அதை தேடலுக்கான ஒரு வாய்ப்பாக அறிவியல் எடுத்துக்கொள்கிறது.  மதம் இன்றைய அறிவியலால் நிரப்பமுடியாத கேள்விகளை கடவுள் என்று சொல்லி , துதிப்பாடல் தயார் செய்ய ஆரம்பிக்கிறது.
    The concept (theory) of god
    http://kalvetu.balloonmama.net/2015/10/the-concept-theory-of-god.html
Image courtesy: https://en.wikipedia.org/wiki/African_art
நன்றி சித்தார்த் மற்றும் தமிழழகி (G + வழியாக)

.

Wednesday, October 14, 2015

டெமாக்ரடிக் கட்சி 2016 அதிபர் வேட்பாள‌ர் தேர்விற்கான விவாதம் -1

ரம்பத்தில் இருந்தே தெளிவான பதில்களையும் தெளிவான நிலைப்பாடுகளை சரியான காரணம் கொண்டும் விளக்கி, பலரைக் கவர்ந்தார் 'பெர்னி சான்டர்ஃச்'.  இவர் யார் என்று தெரியாதவர்கள்கூட நேற்று இவரின் பேச்சைக் கேட்டபிறகு அவரைப்பற்றி அறிந்துகொள்ள தேடு தேடு என்று தேடி, ரிபப்ளிகன் கட்சியின்  என்டர்டெயினர் Trump ன்  ட்வீட்டர் ட்ரெண்ட்டையே தாண்டிப்போனார்கள். முதல் முறையாக இவர பேசுவதைக்கேட்ட பலர் , most honest person என்றுதான் சொல்லுகிறார்கள். இவரின் திட்டங்கள் மற்றும் நிலைப்பாடுகளில் ஏதும் குறை காண முடியாதவர்கள் , இவரை நாட்டின் எதிரிபோல காண்பிக்க சொல்லும் விசயம் வியட்நாம் போர்.  இவர் வியட்நாம் போரின்போது தான் போரிடமுடியாது என்று சொன்னதைச் சுட்டிக்காட்டுவார்கள்.  வியட்நாம் போர் காலத்தில் இவர் அந்த‌ போரில் ஈடுபடாமல் Conscientious Objector Status கேட்டவர்.

Wiki -Conscientious Objector Status
A conscientious objector is an "individual who has claimed the right to refuse to perform military service"on the grounds of freedom of thought, conscience, and/or religion. In general, conscientious objector status is only considered in the context of military conscription and is not applicable to volunteer military forces

நேற்றும் அந்தக் கேள்வி வைக்கப்பட்டது. சுற்றி வளைக்காமல் தெளிவாக தன் பதிலைச் சொன்னார். " நான் வியட்நாம் போரை ஆதரிக்கவில்லை. அதை அந்த வயதில் எதிர்த்தேன். அதனால் போரில் ஈடுபடுத்திக்கொள்வதில் இருந்து விலக்கு கேட்டேன்" என்றார். சரியோ தவறோ அதிபர் சொன்னால் போரிடும் அதிகாரவர்க்க இராணுவ நிலைபாடுகள் இல்லாமல், சுயமாகச் சிந்தித்து தனக்கு சரியில்லை என்றால் போருக்கு போவது இல்லை என்ற நிலைப்பாடு சுய சிந்தனை பகுத்தறிவு சார்ந்தது. அதைத்தான் அவர் அக்காலத்தில் செய்தார். நேற்று அதைச் சொல்ல அவர் தயங்கவும் இல்லை. அதுபோல 'எட்வர்ஃட் ஃச்னோடன்' பற்றி கேட்டபோதும் தயக்கமே இல்லாமல், "ஃச்னோடன்" மக்களுக்கு  சேவை செய்துள்ளார். அதையும் கணக்கில் எடுக்க வேண்டும்" என்று நேரடியாக்ச் சொன்னார். 'ஃச்னோடன்' பற்றிப் பேசுவதே தேசத்துரோக செயலாக பார்க்கப்படும் இந்தக் காலத்தில் , இவர் அதை விவாத மேடையில் சொன்னது முக்கியமானது.

கிளிண்டன் மின்னஞ்சல் குறித்த கேள்விக்கு அது குறித்து கவலை இல்லை என்று சொல்லி கிளிண்டனுக்கு பெரும் நிம்மதியைக் கொடுத்தார். கிளிண்டன் உடனே இவருக்கு கைகொடுத்து நன்றி தெரிவித்தார். இது எல்லாம் ரிபப்ளிகன் நாடகத்தில் காணவே முடியாத காட்சிகள்.

இலவச கல்லூரி, சோசியல் செக்யூரிட்டி விரிவாக்கம், பங்குச் சந்தையில் நடக்கும் பரிவர்த்தனைகளுக்கு வரி (nominal financial transactions tax on speculative trading in stocks, bonds, derivatives, and other financial instruments) புவி வெப்பம‌யமாதல் என்று எல்லாவற்றுக்கும் தெளிவான திட்டங்கள் மற்றும் தொலை நோக்குப் பார்வை கொண்டவராக இருக்கிறார் 'பெர்னி சான்டர்ஃச்'. இவருக்கு போட்டியாளராக இருக்கும் கிளிண்டனோ,  தான் பெண் என்பதை மட்டும் சுட்டிக்காட்டி ஓட்டு சேகரிக்க முயல்கிறார்.


னது குடும்ப பெயர் பார்த்து பார்த்து வாக்களிக்க வேண்டாம். ஆனால் நான் பெண் , உங்கள் குழந்தையிடம் அவளும் ஒரு நாள் அதிபராகலாம் என்று நீங்கள் சொல்லலாம். பெண் என்பதால் நான் வித்தியாசமான அதிபராக இருப்பேன். நான் ஒரு பெண் பெண் பெண்....... இப்படித்தான் நேற்று 'ஃகிலாரி கிளிண்டன்' ' பேசிக்கொண்டு இருந்தார். குடும்பபெயரால் வரும் தீமைகள் வேண்டாம் என்ற தொனியில் பேசிவிட்டு, பெண் என்பதால் சலுகை கேட்பதுபோல பேசுவது என்பது இரட்டை வேடம்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான டெமாக்ரடிக் கட்சியின் உள்கட்சி தேர்தலை ஒட்டி நடந்த விவாதத் களத்தில் ஆரம்பக் கேள்வியே "வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் எதையும் மாற்றிப் பேசுவீர்களா?" என்று 'ஆண்டர்சன் கூப்பர்' எடுத்த எடுப்பிலேயே கிளின்டணைக் கேட்டார்.  ஆம் சமீப காலங்களில் அவரின் நிலைப்பாடுகள் பல்டியடித்துகொண்டு உள்ளது. விவாதத்தில் எதையாவது உருப்படியாகப் பேசினாரா என்றால் இல்லை. முன்னாள்  First lady அதன்பிறகு ஒபாமவுடன் பிரைமரியில் மோதியது, அதே ஒபாமா அமைச்சரவையில் வெளியுறவுத்துறையை நிர்வாகம் செய்தது போன்ற செயல்களால், மக்களுக்கு அவரது பெயர் நன்கு அறிமுகமாயுள்ளது. இதை அவர் பயன்படுத்திக் கொள்ளப்பார்க்கிறார். வெற்றி பெற்றால் முதல் பெண் அதிபர் என்று வரலாற்று புத்தகத்தில் இடம் பெறலாம் கிளிண்டன். திட்டங்கள், தொலை நோக்குப்பார்வை (Policy based political agenda ) என்று ஏதும் இருப்பதாக  தெரியவில்லை. வால் ஃச்ட்ரீட் மற்றும் பெரிய வங்கிகள் விசயத்தில் அவரின் நிலைப்படு என்ன என்பது அவருக்கே தெரியாதுபோல். பூசி மெழுகினார்.

***

இந்த‌ இருவர் தவிர விவாத களத்தில் இருந்தவர்கள் "மார்ட்டின் ஒ மாலி" (Martin O’Malley ) "சிம் வெப்"  (Jim Webb )  மற்றும்  "லிங்கன்  ச்சஃவே" ( Lincoln Chafee)

***

மார்ட்டின் ஒ மாலி" (Martin O’Malley )
மார்ட்டின் 2007 இல் இருந்து 2015 வரை மெரிலேண்ட் (Maryland) கவர்னராக இருந்தவர்.  'ஃகிலாரி கிளிண்டன்' ஒபாமைவை எதிர்த்து போட்டியிட்டபோது (2008) அவரை ஆதரித்தவரும்கூட. ஆனால், இப்போது கிளிண்டனின் நிலைப்பாடுகளில் நம்பிக்கையில்லை என்று அவருடன் போட்டியாளராக இருக்கிறார். மெரிலேண்ட்  கவர்னராக இவர் செய்த நல்ல விசயங்களைச் சொன்னார். வால் ஃச்ட்ரீட் , வங்கி போன்ற பிரச்சனைகளில் இவர் கிளிண்டனை கடுமையாக எதிர்த்தார்.முடிவுரையின்போது 'ரிபப்ளிகன் கட்சியைபோல் அல்ல டெமாக்ரடிக் கட்சி 'என்று அழுத்தமாக கோடிட்டுக்காட்டினார்.


ஜிம் வெப் (Jim Webb).
முன்னாள் செனட்டர் இவர் வெர்சினியா மாநிலத்தில் இருந்து செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்  பல நல்ல சட்டங்களை முன்மொழிந்து செயல்படுத்தியதாகச் சொன்னார். பெர்னியுடன் சேர்ந்தும் சிலவற்றைச் செய்துள்ளார்போல தெரிகிற‌து.  'சிஎன்என்' விவாதத்தில் இவருக்கு நேரம் கொடுக்கப்படவில்லை என்று 'ஆண்டர்சன் கூப்பரோடு' மல்லுக்கட்டிக் கொண்டு இருந்தார். ஆண்டர்சனோ "நீங்கள் அனைத்திற்கும் ஒத்துகொண்டே விவாதத்திற்கு வந்தீர்கள்" என்று சொல்லிக்கொண்டே இருந்தார். மேடையில் யார் நடுவில் இருப்பது போன்றவை வேட்பாள‌ர்களின் செல்வாக்கை வைத்து தீர்மானிக்கப்படும். வேட்பாளர்களுக்கு கொடுக்கப்படும் நேரம் கூட அப்படித்தானா?


லிங்கன் ச்சஃவே ( Lincoln Chafee )
முன்னாள் ரோஃட் அய்லேண்ட் (Rhode Island)  கவர்னரான இவர் மிகவும் பரிதாபமாகவே இருந்தார். அவருக்கே அவர் வேட்பாளராக இருப்பது சந்தேகமாக உள‌ளது போல. "வங்கிகள் சார்ந்த சட்டம் (Glass-Steagall  provisions) சார்பான ஓட்டெடுப்பில் வங்கிகளை மேலும் பெரிதாக்கும் ஒன்றிற்கு ஏன் சாதகமாக ஓட்டுப்போட்டீர்கள்?" என்ற கேள்விக்கு, "அது வந்து இங்க பாரு தம்பி நான், அப்பத்தான் மொத தபாவா செனட்டுக்கு வந்தேன். எல்லாரும் கூட்டமா ஓட்டுப்போடும்போது நானும் எதுக்கோ போட்டேன்" என்ற‌ ரீதியில் சொன்னபதில் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. அவரின் ஆதரவாளர்கள அவரை வறுத்து எடுப்பார்கள் என்று நினைக்கிறேன்.

********
வ்வொரு விவாதத்தின் முடிவிலும் கார்ப்பரேட் தொலைக்காட்சிகள் 'இவர்தான் இந்த விவாத வின்னார்' என்று சம்பிரதாயமாக சொல்லியே ஆக வேண்டிய கட்டாயம் போல. மில்லியனர்கள், பெரிய வங்கிகளுடன் ,கார்ப்பரேட் ஊடகங்களையும் எதிர்க்கிறேன் என்று சிஎன்என் அமைத்துக்கொடுத்த மேடையிலேயே விளாசிய சான்டர்ஃச் நிச்சயம் இவர்களுக்கு டார்லிங்காக இருக்க மாட்டார். நினைத்தபடி கிளிண்டனே விவாத வெற்றியாளர் என்று கூவ ஆரம்பித்துவிட்டார்கள். அப்படி என்ன சொன்னார் கிளிண்டன்?  என்று இதுவரை எனக்குப் புரியவில்லை.

முதல்முறையாக பெர்னி சான்டர்ஃசின் பேச்சைக் கேட்ட என் மகன் , அரைமணி நேரத்தில் அவரின் தொண்டராகிவிட்டான். "நான் ஒரு மில்லியனர் கிடையாது. என் தேர்தல் செலவிற்கு வரும் பணம் அனைத்தும் மக்களிடம் இருந்து ஐந்தும் பத்துமாக வரும் நன்கொடையே. நீங்களும் உதவுங்கள்"  என்று பெர்னி சொன்னவுடன், ஒரு போட்டியில் அவன் வென்ற‌ $100 யில் இருந்து , $50 டாலரை இவருக்கு இப்பவே அனுப்புங்கள் என்று அடம் பிடித்தான். இல்லாவிட்டால் " FEEL THE BERN" என்று இருக்கும் அவரின் பிரச்சார டிசர்ட் ஆவது வாங்கி அவருக்கு உதவுங்கள் என்று நச்சரிக்க ஆரம்பித்துவிட்டான். இடையிடையே விவாதம் சார்ந்த சிஎன்என் இணைய வாக்கெடுப்பிலும் கலந்துகொண்டு பெர்னிக்கு வாக்கைச் செலுத்தினான். காலையில் எழுந்து அவருக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று நிற்கிறான்.

இன்னும் அதிக ஊடக வெளிச்சம் கிடைத்தால் பெர்னி அதிக இளைஞர்களைக் கவர்வார் என்பது உறுதி. 

Tuesday, October 13, 2015

சர்வரோக நிவாரணி ஆதி பல்பொடி

ணவே மருந்து என்பது நம் முன்னோர்களின் வாக்கு. இங்கே முன்னோர்கள் எனப்படுபவர்கள்,  ஆதி ஆதி ஆஆஆ ஆதி அந்தம் எல்லாம் தாண்டிய ஆதிமனிதர்கள். இந்த ஆதி காலம் என்பது ஆத்தீசூடிக்கு முன்னால் உள்ள காலம். ஆதி காலம் என்பது இந்த ஆதாமுற்கு முந்திய முன்னால் உள்ள காலம். காலங்களுக்கு முந்திய காலம். கலாமாலும் கண்டுபிடிக்கமுடியாத காலம்.ஆத்திச்சூடியும் இருந்தாலும் இது அவை எல்லாவற்றுக்கும் முந்திய காலம். அக்காலத்தில் இருந்தவர்கள் வாயால்தான் சாப்பிட்டுள்ளார்கள் என்பதை எங்களது பேசு புக் மடத்தில் பேசிப் பேசிக் கண்டுபிடித்தோம்.

சுமார் 20 ஆயிரம் பேசு புக் பயனாளிகள் பேசிப் பேசியே கண்டுபிடித்த புதிய கண்டுபிடிப்புதான் இதுவரை மனிதகுலம் கண்டுபிடித்த அனைத்திலும் சிறந்தது என்று "தாமசு ஆல்வா எடிசன்" ( ஆல்வா -வில் உள்ள "ஆ" வை கவனிக்க) இன்று கனவில் அனைவருக்கும் செய்தியைச் சொன்னார். இதுதான் அந்தக் கண்டுபிடிப்பு. "ஆதி மனிதன் வாயால் சாப்பிட்டான்" . சுமார் 20 ஆயிரம் பேசு புக் பயனாளிகள் பேசிப் பேசியே கண்டுபிடித்த சிற‌ப்புக்கொண்டது இது. பேசிப் பேசி கண்டுபிடிக்க முடியாத அல்லது பேசு பொக் கணக்கு இல்லாத சாதரண மனிதர்கள் பலநேரம் "ஆதி என்றால் எந்த ஆண்டு என்று கி.மு வில் ஒரு எண் சொல்லு" என்கிறார்கள் இவர்களின் பேச்சைக் கேட்கவேண்டாம் என்று அவசரச் செய்தியும் அனுப்பப்பட்டுள்ளது. எனவே நம்பிக்கையாளர்கள் பேசு பொக் பக்கம் வந்து எங்கள் பசனைக் கூட்டத்தில் சேர்ந்து பேசிப் பேசி பலவற்றைக் கண்டுபிடிப்போம் வாருங்கள்.

ஆதி மனிதனின் பெயரே ஆதிதான். ஆதி1 ஆதி2 ஆதி 3 என்று பெயர் இருக்கும். ஆதி மனிதன் எப்படி எண்களைப் பயன்படுத்தினான் என்று நீங்கள் கேட்பீர்களேயானல் உங்களைப் பார்த்து சிரிப்பதைத்தவிர‌ வேறுவழியில்லை. எல்லாம் தெரிந்தவன்தான் ஆதி. அடுத்த தலைவர் படத்திற்குகூட "ஆதி" என்றுதான் பெயர் வைக்கப்பட உள்ளது. ஆதி மனிதன் வாயால் சாப்பிட்டான் என்ற கண்டுபிடிப்பைக் பேசு பொக் மடத்தில் ஆதிக் கடவுள் அறிவித்த தருணம் ஆதி உலகில் முக்கியமானது. அவர்  சொன்னபோது அனைவரும்

ஆதி ஆதி ஆஆ தீ
ஆதி ஆதி ஆத்தாடி
ஆதி ஆதி ஆடிப் பாத்தாடி
ஆதி ஆதி எல்லாம் ஆஆ தீ!

என்ற பசனைப்படலை கூக்குரலிட்டு மகிழ்ந்தார்கள். ஆதிமனிதன் போலவே ஆனால் ஒரே ஒரு "ஆதி ஆடு" மட்டும் ஆப்பிள் சாப்பிட்ட காரணத்தால் எதிர்த்து கேள்வி கேட்டது. "நாமும்தான் வாயால் சாப்பிடுகிறோம் எல்லாப் பக்கிகளும்தானே வாயால் சாப்பிடுது. நீங்க என்ன புச்சா கண்டுபிடிச்சிட்டீக?" என்றது அந்த ஆதி ஆடு சாரி கறுப்பு ஆடு. ஒரு கேள்வியால் காண்டாகிப்போன ஆதிக்கடவுள், அவரை பேசு போக் மடத்தில் இருந்து விலக்கிவிட்டார். இருந்தாலும் ஏதாவது ஒரு பதில் சொல்லி கூட்டத்தைக் தக்க வைக்க வேண்டியதன் அவசியத்தை உண‌ர்ந்தார் ஆதிக்கடவுள்.

மருதையில் மண்டபம் பிடித்து "ஆதி மனிதன் வாயால் சாப்பிட்டான்" என்ற உண்மையை விளக்கிக்கொண்டிருந்த தனது செயலாளரை புறாவைவிட்டு வரவ‌ழைத்தார். (ஆதி ஆதி ஆதி எல்லாம் ஆதிமுறை) . புஃச்ப வாகனத்தில் வந்து இறங்கிய செயலாளர், இறங்கும்போதே கொஞ்சம் வித்தியாசமாக் தெரிந்தார். என்னவென்று நேரடியாகக் கேட்டால் கடவுளின் பதவிக்கு இழுக்கு என்று எண்ணி,  ஆதி கடவுள் மோந்து பார்த்தார். உரேகா ..ஆம் மருதையில் இருந்து வந்திறங்கிய செயலாளரின் வாயில் இருந்து ஒருவித புதிய‌நெடி வந்துகொண்டு இருந்தது. அது என்ன என்று கேட்ட ஆதிகடவுளிடம் , தான் மருதை அரசரடி டீக்கடையில் வாங்கிய பல்பொடி பாக்கெட்டைக் குடுத்தார் செயலாளர். அந்தக் கணமே அதற்கு ஆதி பல்பொடி என்று நாமகரணம் சூட்டினார் ஆதி கடவுள். 

அடுத்த நாள் பேசு பொக் கூட்டத்தில் இவ்வாறு ஆதிக் கடவுள் அறிவித்தார்.

உணவே மருந்து.
ஆதி வாயால் சாப்பிட்டான்.
ஆதி பல்வெளக்கிய பிறகு சாப்பிட்டான்.
ஆதி பல்பொடியில் பல்வெளக்கிய பிறகு சாப்பிட்டான்.

என்ன வேணுமினாலும் சாப்பிடலாம் .
எவ்வளவு வேணுமினாலும் சாப்பிடலாம்.
ஆனால் ஆதி பிராண்ட் பல்பொடியில் பல்வெளக்கிய பிறகே சாப்பிட வேண்டும்.

அனைத்து தொண்டர்களும் ஆரவரம் செய்தார்கள்.

ஆதி ஆதி ஆஆ தீ
ஆதி ஆதி ஆத்தாடி
ஆதி ஆதி ஆடிப் பாத்தாடி
ஆதி ஆதி எல்லாம் ஆஆ தீ!

என்ற பசனைப்படலை கூக்குரலிட்டு மகிழ்ந்தார்கள். 

அனைவருக்கும் பலவித பேனர்கள் வழங்கப்பட்டது. 


  • ஆதி பல்பொடியே அனைத்திற்கும் மருந்து.
  • மார்சியன் படத்தில் கீரோ ஆதி பல்பொடியை எடுக்காமல் போனதாலே பிரச்சனை வந்தது.
  • ஆதி பல்பொடியில்  பல்வெளக்கிய பிறகு பச்சைப் பாம்பை, கருநாகம் விசத்தில் வறுத்து சாப்ப்பிட்டாலும் ஒன்னியும் ஆவாது.
  • முடவர்கள் ஆதி பல்பொடியில் பல் வெளக்கிய பிறகு நடக்கிறார்கள்.
  • குருடர்கள் ஆதி பல்பொடியில் பல் வெளக்கிய பிறகு பார்க்கிறார்கள்.
  • பல் இல்லாத பாட்டிகளுக்கு பல் முளைக்கிறது ஆதி பல்பொடியால்.


மூட்டை முடிச்சுகளுடன் புதிய ஆதிச் செய்தியை பரப்ப மேற்கண்ட பேனர்களுடம் தொண்டர்கள் கெளம்பினார்கள்.


பக்கவாட்டு குறிப்பு: 
"தமிழ் பேலியோ" மதத்திற்கும் இதற்கும் தொடர்பு அல்ல. இது முழுக்க முழுக்க புனைவு.


Friday, October 09, 2015

வண்ணங்களில்தான் எண்ணம் - ஒடிலி டொனால்ட் ஒடிட்டா

ள்ளூரில் இருக்கும் டுயூக் (Duke) பல்கலைக்கழகம் ஒரு தனியார் பல்கலைக்கழகம். இது பலசிறப்புகளைக் கொண்டது. அமெரிக்காவில் மருத்துவத்துறையில் முதல் பத்து முக்கிய கல்லூரிகள் என்று எடுத்தால் இது அந்த பட்டியலில் வந்துவிடும். அதுபோல வணிக மேலாண்மைப் படிப்புகளிலும். ஆப்பிள் நிறுவனத்தின் தற்போதைய முதன்மை செயல் அதிகாரி (CEO) டிம் குக்  (Tim Cook)  இங்கு வ‌ணிக மேலாண்மைப் மேற்படிப்பு படித்தவர். இந்த பல்கலைக்கழகம் குறித்தும் அது தோன்றிய வரலாறும் இணையத்தில் படிக்கக்கிடைக்கிறது.

Duke University: A Brief Narrative History
http://library.duke.edu/rubenstein/uarchives/history/articles/narrative-history

நான் பேசப்போவது இந்தப் பல்கலையில் 10 வருடங்களுக்கு முன் ஆரம்பித்த கலைக் காட்சியகம் குறித்தானது. மருத்துவம், மேலாண்மை மற்றும் தொழில் நுட்ப படிப்புகளில் சிறந்து விளங்கும் இந்த பல்கலைக்கழகம்,  கலைத்துறையிலும் சிற‌ந்து இருக்க வேண்டும் என்று, 10 வருடங்களுக்கு (2005) முன் புதிய பெயருடன் புதுப்பிக்கப்பட்டது. 

Nasher Museum  Of Art At Duke University
http://nasher.duke.edu/about/

ப்போது அது 10 ஆவது ஆண்டுவிழாவைக் கொண்டாடுகிற‌து. இதன் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக,  "ஒடிலி டொனால்ட் ஒடிட்டா" (Odili Donald Odita) என்ற ஓவியர் வரைந்த சுவரோவியம் ( Mural ) முக்கியமானது.  "ஒடிலி ஒடிட்டா" அமெரிக்கர். ஆப்ரிக்க கறுப்பினத்தவர்.  இவர் பாணி ஓவியம் ஒருவித சீரான வடிவங்கள் கொண்டது. "நேர்த்தியில் வண்ணம்" என்று சொல்லலாம்.

http://www.odilidonaldodita.com/  
“Color in itself has the possibility of mirroring the complexity of the world as much as it has the potential for being distinct.” -Odili Donald Odita

டுயூக் பல்கலை அமைந்துள்ள இடம் "டுர்ஃகாம்"  (Durham) ஆகும். இது 45% வீத கறுப்பின மக்கள்தொகை கொண்ட ஊர்.  இந்த ஊரைப்பற்றிய ஒரு வெளிப்பாடாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் ஒடிட்டா வரைந்த ஓவியமே எனக்கு அவரைப்பற்றிய அறிமுகம். இவரின் சிறப்பு இவர் தேர்ந்தெடுக்கும் வண்ணங்களில் உள்ளது. 



2007 ல் இவர் வரைந்த ஃபுளோ (FLOW) என்னும் சுவரோவியம் அசத்தியடிக்கும் ஒன்று. 
FLOW @  Kaplan Hall, the lobby of the Lois & Richard Rosenthal Center for Contemporary Art
http://www.odilidonaldodita.com/exhibitions/flow/index.html



Wednesday, October 07, 2015

ஃபெர்னி ஃசான்டர்ஃச் - Bernie Sanders For USA President 2016

மீப காலமாக என்னைக் கவர்ந்தவராக இருப்பவர் , அமெரிக்க சனாதிபதி தேர்தலுக்கான டெமாக்ரடிக் கட்சியின் வேட்பாளர்களில் ஒருவராக இருக்கும் ஃபெர்னி ஃசான்டர்ஃச் (Bernie Sanders ) அவர்கள். எனது அமெரிக்க அரசியல் அறிவு (அறிந்துள்ளது) என்பது கடுகளவுகூட இருக்காது. ஏதாவது ஒரு இடத்தில் விளம்பரம்/செய்தி என்று ஒருவர் வித்தியாசமாக இருப்பதாகத் தோன்றினால், அவர் குறித்து அதிகம் தேடி அதன் பின்னர் அறிந்துகொள்வேன். அப்படியான தேடலில் தெரிந்துகொண்ட நபர்தான் ஃபெர்னி ஃசான்டர்ஃச்.

2016 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க சனாதிபதி தேர்தலில் , டெமாக்ரடிக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் தேர்தலில் (Primary Election ) களத்தில் உள்ளார். Primary- ஒரு கட்சி அதற்கான சனாதிபதி வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் தேர்தல்.

ச்சரயப்படுத்துகிறார்   இவர்.  இவர் ஏற்கனவே சொந்த ஊரில் மேயராக இருந்தவர். இப்போது அமெரிக்க செனட்டராக இருப்பவர். (United States Senator from Vermont). இவரின் வயது ஒரு குறையாகப் பார்க்கப்படுகிறது. என்னளவில் அதிக வயது என்பது தடை அல்ல. ஒருவேளை இந்தியா போன்ற பரம்பரை அரசியலில் அதை ஒரு குறையாகப் பார்க்கலாம். இவர் மாற்றத்தைக்கொண்டுவருவார் என்று இவரின் பேச்சு செயல்பாடுகள் நம்பிக்கை அளிக்கிற‌து.

வர் பிரச்சனைகளைப் பற்றி மட்டும் பேசுகிறார். அதற்கான தீர்வாக தனது தரப்பு விளக்கம், என்ன செய்யலாம் என்றும் சொல்கிறார். தனக்கு போட்டியாக இருந்தாலும் , மற‌ந்தும் மற்றவர்களின் தனிச் செயல்பாடுகளை விமர்சிப்பது இல்லை. "பிரச்சனையில் மற்றவர்களின் கருத்து என்ன என்று சொல்லுங்கள் அதைப்பற்றி பேசுகிறேன் தனிநபரைப் பற்றி அல்ல" என்று தெளிவாகச் சொல்லிவிடுகிறார்.

வ்வொரு முறை ஃகிலாரி கிளிண்டன் பற்றியும், அவரின் சமீபகால மின்னஞ்சல் பிரச்சனைகள் குறித்தும் இவரிடம் கேள்வி கேட்கப்படுகிறது. இவர் அதற்காக சொல்லும் பதில், ஃகிலாரி கிளிண்டனையே இவருக்கு ஓட்டுப்போட வைத்துவிடும். அந்த அளவிற்கு தெளிவாக உள்ளார்.

பாமாவின் சமீபத்திய ஈரான் ஒப்பந்ததை ஆதரிக்கிறார். அடுத்த நாடுகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு போர் ஒரு தீர்வு அல்ல என்பதிலும்,  பேச்சுவார்த்தைதான் தீர்வு என்பதிலும் தெளிவாக உள்ளார். வளைகுடா நாடுகளில் நடக்கும் பிரச்சனைகள் அனைத்தும் மதம் சார்ந்த ஒன்று என்றும் ,அதில் அமெரிக்கா முன்னிற்காமல், செளதி போன்ற மதக்காப்பாளர்களை பொறுப்பேற்க வைக்கவேண்டும் என்று சொல்வது முழுக்க முழுக்கச் சரி.

ரு காலத்தில் இலவசமாக இருந்த கல்லூரிப் படிப்புகள் இப்படி விலையேற்றம் அடைந்து இருப்பதற்கு அவர் சொல்லும் தீர்வு சரியானதுதான். "மாணவர்கள் போராடவேண்டும் நான் அவர்களோடி இணைந்தே வெற்றி காண்பேன்" என்கிறார். சோசியலிஃச்ட் என்றால் கெட்டவார்த்தை போல பார்க்கும் மக்களிடம், அதைப்பற்றி பேசி விளக்கிமுய‌ற்சிக்காமல், டென்மார்க் போன்ற அய்ரோப்பிய நாடுகளை உதாரணம் காட்டி "அதுபோல இருப்பதுதான் டெமாக்ரட்டிக் சோசியலிஃச்ட்" என்று எளிதாக விளக்குகிறார்.

மெரிக்காவில் சோசியல் செக்யூரிட்டி எனப்படும் (இந்திய பிராவிடெண்ட் பண்டு போல but not same) வைப்புநிதியை ஊற்றி மூடவேண்டும் என்று சொல்லும் ரிபப்ளிகன் கட்சி வேட்பாளர்கள் போல் இல்லாமல், அதை விரிவுபடுத்தி , ஓய்வுபெறும் வயதைக் குறைத்து, மக்களுக்கு பயன்கொடுப்பேன் என்கிறார்.

வெர்சினியா சுரங்கத்தொழிர்கள்  ஃகிலாரி கிளிண்டன் ஆதவாளர்களாக இருந்தவர்கள். ஒபாமாவிற்கும் , ஃகிலாரி கிளிண்டன் கிளிண்டனுக்கும் நடந்த பழைய பிரைமரி போட்டிகளில்கூட இவர்கள் அதிக அளவு வாக்குகளில் ஃகிலாரி கிளிண்டனை ஆதரித்தவர்கள் இவர்கள் . இப்போது  ஃபெர்னி ஃசான்டர்ஃச் பக்கம் பார்வையைத் திருப்பி உள்ளார்கள்.



Bernie Sanders Speaks With Katie Couric - Full Interview
https://www.youtube.com/watch?v=XpgJYNaIeqo

Bernie Sanders For President
https://www.youtube.com/channel/UCW4EM_U8f6sXf1IFsTU_DRQ

https://berniesanders.com/

The concept (theory) of god

The concept (theory) of god is not a definite one. This allows anyone to say "yes there is god", or "no, there is no such thing called god". Unless someone defines, "what is god?", and that definition is acceptable (to you /me/ anyone) , then only can they (who got convinced by the definition of god) start searching for god. Once you found the meaning of the word, god, you can look for its existence.

This is how I see the concept of God.

When science was at 100th mile mark, people said, "our god is at 200th mile mark. Can your science explain what is at 200th mile mark?". At one point science did reach that 200th mile mark. That pissed of many people, so they moved their god's existence to 300th  mile mark by saying,  "no, our god is at the 300th mile mark. You see a misty object there, can your science explain that? "

The beauty of science is,  it won’t stop at any point assuming anything as a definite answer.  Science will disprove its own discovery/theory as it travels/explores  more.

The so called. "fictional god", only lives in the gaps of science. As you know, the Bible was written by folks who thought the Earth was flat. This makes the bible useless after the discovery of the Earth being round.  The Bible is just an example of all the "fictional" holy books that fall into this category.

Science is trying to explore the unknown. On the other side, the unknown is being labeled as "God." Have fun with your label!
-Kalvetu

God of The Gaps - Neil DeGrasse Tyson
https://www.youtube.com/watch?v=ytaf30wuLbQ




Thursday, October 01, 2015

A Sinner In Mecca - Movie

கனின் பள்ளியில் "உலக வரலாறு" என்ற பாடம் உள்ளது. அதில் சிந்துவெளி நாகரிகம் தொடங்கி யூதர்களின் வரலாறு என்று எல்லாம் படிக்கிறார்கள். அது குறித்து பேசும்போது எனது தரப்பு கருத்துக்களையும் சொல்வேன் என் மகனிடம்.  நேற்று திடீரென்று "அப்பா என்னோடு மெக்காவிற்கு வருவீர்களா? என்றான். நான் சின்னவயதில் நடைபயணமாக பழனி மலை போக நினைத்த போது, என்னுடன் என் அப்பா வந்தார். பக்திமாலை, மண்ணாங்காட்டி ,மூத்த சாமியார் , பசனை ,சடங்குகள் இல்லாமல் நான் எனக்கே ஒரு துளசி மாலையைப் போட்டுகொண்டு அப்பாவுடன் நடக்கத்துவங்கிவிட்டேன். தேர்தல் காலம் அது. அப்பா வழிநெடுக டீக்கடையில் நின்று நின்று செய்தி கேட்டுவருவார். "கன்னிவாடி" என்று நினைக்கிறேன், அதுதாண்டி அப்பாவால் நடக்க முடியவில்லை. நான் மட்டும் தனியாக நடக்க, அப்பா பேருந்தில் ஏறி அடுத்த கிராமத்தில் இறங்கி எனக்காக காத்து இருப்பார். செல்போன்கள் இல்லாத காலம். வெறும் நம்பிக்கையுடன் அப்பா காத்து இருக்க, நானும் அதே நம்பிக்கையுடன் ஓட்டமும் நடையுமாக அப்பாவை வந்தடைவேன்.

என் பார்வையில் படும் வண்ணம் ஊரின் முகப்பிலேயே அப்பா இருப்பார். இருவரும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு , சாப்பாடு தண்ணீர் குடித்துவிட்டு, நான் மறுபடியும் நடக்க ஆரம்பிப்பேன். அப்பா பேருந்தில் ஏறி அடுத்த நிறுத்ததில் இறங்குவார். இப்படி தொடர்ந்தது எங்கள் பயணம். நான் நடக்கும்போது என்னைக்கடந்து செல்லும் சின்ன மோட்டார் வாகனக்காரர்கள் என் அருகே நிறுத்தி என்ன என்று விசாரித்துச் செல்வார்கள். தனியா நடக்கும் சிறுவன் என்பதால். அவர்கள் மறக்காமல் என் அப்பாவைப் பார்த்தால் பையன் இங்கே வருகிறான் என்றும் சொல்லிச் செல்வார்கள் அவரிடம்.  எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன் அந்தப் பயணத்தின்போது நான்.

அதற்கு அடுத்து திருச்செந்தூருக்கு நடக்க வேண்டும் என்ற எங்கள் திட்டம் மதுரை தாண்டியவுடன் நின்றுவிட்டது. அப்பாவால் நடக்கமுடியவில்லை. எனவே நாங்கள் அப்படியே ஊருக்கு திரும்பிவிட்டோம். என் அண்ணனுடன் சேர்ந்து பலமுறை திருப்பரங்குன்றம் நடந்து சென்றுள்ளேன். அத்தகைய பயணங்கள் எல்லாம் நாங்கள் தனியாகச் செல்வதே.

இப்போது என் மகன் மெக்கா செல்ல வேண்டும் என்ற‌வுடன் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் மெக்கா இசுலாமியர் அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லாத இடம் என்று அவனிடம் சொன்னவுடன் அவனுக்கு மகிழ்ச்சி போய்விட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பிரகாரத்தில் பல இசுலாமியர்கள் கடை வைத்து இருப்பார்கள். கோவில் உள்பிரகாரத்தில் மற்ற மதத்தவர்களுக்கு அனுமதி இல்லை. இதுவே தவறு. கடவுள் என்ற ஒரு கான்செஃப்ட்டிற்கு இது முரணானது. கடவுள் மதம் பார்த்தா அருள் பாலிக்கிறார்?

இசுலாம் அதைவிட அடுத்தபடிக்கு எடுத்துச் செல்கிறது. ஊர்பக்கமே வரக்கூடாது, இடத்தை பார்க்கவேகூடாது என்று சொல்கிற‌து. மதங்கள் அரசியல் கட்சிகளைவிட மோசமானவை. ஒரு கட்சிக்காரன் மாற்றுக்கட்சி தலைவரை அவர் வீட்டில் வைத்துக்கூட பார்க்கமுடியும். ஆனால் ஒரு மதத்துக்காரன் அடுத்த மதத்தின் முக்கிய/புனித இடம் / ஊருக்குள்ளேகூட போகமுடியாது.

****
சமீபத்தில் நடந்த மெக்கா விபத்து குறித்து பேச‌ Parvez Sharma   ( https://en.wikipedia.org/wiki/Parvez_Sharma  ) என்பவர் ஒரு பண்பலை நிகழ்ச்சிக்கு வந்து இருந்தார். அந்த நிகழ்ச்சியின் வழியாக எனக்கு இந்தப்படம் அறிமுகமானது. அந்தப்படம் குறித்த Dr Joy ன்  பார்வை.http://www.drjoy.com/movie_reviews/a-sinner-in-mecca/

http://asinnerinmecca.com/

http://www.imdb.com/title/tt4666618/

இந்தப் படத்தின் இயக்குநர் "பெர்வேஃச்"  "ஒருபால் ஈர்ப்புள்ள" ஒரு இசுலாமியர்.  த‌ன்னை ஒருபால் ஈர்ப்பாளராக பொதுவில் அறிவித்துக்கொண்டவர் 'பெர்வேஃச்'. மதவாதிகளிடம் இருந்து இதற்குமுன்னரே பல சிக்கல்களை அனுபவிப்பவர் . இசுலாத்தில் ஒருபால் திருமணங்கள் அல்லது ஒருபாலினச் சேர்க்கை தடை செய்ய‌ப்பட்ட ஒன்று. ஒருபாலினச் சேர்க்கையாளர் என்றவுடனே மத அடிப்படையில் இவருக்கு மெக்காவும் மறுக்கப்பட்ட ஒன்றாகிவிடுகிறது. ஆனால் கடவுளுக்கும் எனக்கும் இடையில் யாரும் இல்லை என்று இவர் துணிந்து செல்கிறார் மெக்காவிற்கு தன்மத கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று.

http://asinnerinmecca.com/about/
//
Every able-bodied Muslim is commanded by Allah to embark on this spiritual Hajj pilgrimage to Mecca at least once in a lifetime. Islam’s heart beats here. Equipped with nothing more than my faith and my iPhone, I leave my 21st-century life in America and arrive in Saudi Arabia, where the Islamic calendar, much like its subjugated citizenry, is stuck in the 1400s. In Mecca, I weep as I behold the sight indelibly marked on my mind and on every prayer rug I have known since I was a child: millions of devotees in white robes circling a large black cube, the Kaaba. As I gather courage to film on my iPhone I ponder: “Surely Allah allowed me here, because he accepts me as I am.”
//

மெக்காவில் யாருக்கும் தெரியாமல் படம் எடுப்பது என்பது தற்கொலைக்குச் சமமானது. இவர் தனது மெக்கா பயணத்தின் போது எடுத்த ஆவணப்படம் நிறைய கதைகளை சொல்லும் என்று நினைக்கிறேன்.

அமெரிக்காவில் September 4, 2015அன்று இந்தப்படம் வெளியாகும் என்று அறிவிப்பு சொல்கிறது. இந்தப்படம் எப்படியும் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுவிடும். எனவே இதை நாமும் இந்தியாவில் தடை செய்யக்கோருவோம் இப்போதே.

.

Friday, September 25, 2015

நான் ஏன் கடவுளை நம்பவில்லை - மைக் மால் (Mike Mal)

டவுள் அதாவது பைபிள் காட்டும் கடவுளை நம்பிய ஒருவர்,  இங்கே இவரின் நம்பிக்கை  சாதரண ஒன்று அல்ல. இவர் முற்றிலும் கடவுளை நம்பி ,  வரிக்கு வரி பைபிள் சொல்லும் அனைத்தையும் நம்பியவர் . கடவுள் அழைக்கிறார் என்று பாதிரியாருக்குப் படித்து முடித்து இவர் "செவன்த் டே அட்வென்டிஃச்ட்" (  Seventh-day Adventist Church. ) ஆலயத்தில் தனது பாதிரியப் பணியைத் தொடர்கிறார்.  இவர் கடவுள் , பைபிள் மற்றும் "செவன்த் டே அட்வென்டிஃச்ட்" அமைப்புகளின் போதனைகளை அப்படியே ஏற்றுக்கொண்டவர் என்பதைவிட முழு நம்பிக்கையாளர். அப்படியான அந்த காலகட்டத்தில், "செவன்த் டே அட்வென்டிஃச்ட்" ஆலயத்தின் / நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான "ஏலன் கெளவுஃட் வைட்" ( Ellen Gould White
பற்றி அப்போது பல எதிர்மறை விமர்சனங்கள் இருந்தது. (இன்றுவரை அது தொடர்கிறது) . கடவுள் மேல் இருந்த அதீத நம்பிக்கையால் இவர் "ஏலன்   வைட்" குறித்து மற்றவர்கள் சொல்வது தவறு என்று நிரூபிக்க நினைத்தார்.  அந்த செயல்தான் இவர் வாழ்க்கையை மாற்றியுள்ளது. ஆம், அதை ஆராய்ச்சி செய்ய இவர் முதன்முதலாக தனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டவைகளைத் தாண்டி (பைபிள் மற்றும் அதுசார்ந்த கதைகள்) வெளியில் இருந்தும் படிக்க ஆரம்பித்தார்.

முடிவில் இவர் யாரை சரி என்று நிறுவ நினைத்தாரோ அவர் ( "ஏலன்  வைட்") ஒரு பொய்யர் என்று அறிந்துகொள்கிறார். ஏலன் சொன்ன கதைகள் எல்லாம் பிற புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்டவை என்று அறிந்ததருணம் இவரின் நம்பிக்கையில் விழுந்த முதல் நகக்கீறல் .அப்போதுகூட இவர் "செவன்த் டே அட்வென்டிஃச்ட்" அமைப்பின்மீதுதான் நம்பிக்கை இழக்கிறாரே தவிர , பைபிள் மற்றும் அது காட்டும் கடவுளின் மீது வைத்த நம்பிக்கை மாறவே இல்லை. அடுத்த கட்டமாக, இவர் கடவுளிடமே தனக்கு சரியான வழியைக் காட்டுமாறு பிராத்திக்கிறார். இவர் அறிந்த தகவல்கள் (எல்லாம் வரலாற்றுக் குறிப்புகள் இன்றும் அனைவருக்கும் அது தெரியும் வண்ணமே உள்ளது)  பைபிள் ஒரு கட்டுக்கதை என்ற உண்மையைச் சொல்கிறது. சரி பைபிள் தவறு. கடவுளாவது உண்மையா?  என்றால் அதுவும் இவரை ஏமாற்றிவிடுகிறது.

கடைசியில் அறிவியலில் வந்து நிற்கிறார். ஆம் அறிவியல் என்பது இறுதி என்று எந்த ஒரு விதியையும் சொல்லாது. இன்று இருக்கும் தகவல், நாளைய கண்டுப்பிடிப்புகளால் மாறும் என்பதே அறிவியல் காட்டும் உண்மை.

Why I No Longer Believe In God (Documentary) Full Movie  என்ற இவரின் ஒரு மணி நேர இந்த ஆவணப்படத்தை பொறுமையாகப் பார்த்தால், கிறித்துவம் / பைபிள் என்பது எப்படி கட்டமைக்கப்பட்ட கதைகள் என்பது தெரிய வரும்.  இது ஏதோ இந்த ஒரு மதத்திற்கு மட்டுமே இருக்கும் சிக்கல் அல்ல. அனைத்து மதங்களும் புனைக்கதைகளின் மீது கட்டமைக்கப்பட்டவையே.

தனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட மதப் புத்தகங்களதாண்டி , உண்மையான வரலாற்றுத் தேடல் ஆர்வம் இருந்தால் ஒவ்வொருவரும் அவர்கள் மத சொல்லிக்கொடுத்த கதைகளை அவர்களே நிராகரிக்கும் அளவிற்கு தகவல்கள் உண்டு.

இது சராசரியான ஆவணப்படம் அல்ல. தகவல்களால் நிரம்பிய ஒரு ஆவணம். கடவுளை கடக்க முடியாமல் இருப்பவர்களுக்கு உதவலாம். உண்மையான மனிதம் மற்றும் அறிவியல் இந்த மனித குலத்திற்கு செய்தவற்றை அறிய ஒரு வாய்ப்பு.

Why I No Longer Believe In God (Documentary) Full Movie
https://www.youtube.com/watch?v=M5ZLuRYp8gk



Is God Moral?
https://www.youtube.com/watch?v=uUbz4mpXIbo



தகவல்கள் மற்றும் படங்கள் அனைத்தும் Mike Mal இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது. நான் சொல்லியுள்ளது அவரின் ஆவணம் குறித்த எனது விமர்சனமே.

You Tube, Picture courtesy Mike Mal -https://www.youtube.com/channel/UCU8gjkOuh1b-_vYPCZGY0-g/feed

.

Wednesday, September 23, 2015

அசோகன் சவுண்ட் சர்வீஃச்

முதலில் எங்கள் ஊரில் பாப்புலராக இருந்தது "அசோகன் சவுண்ட் சர்வீஃச்"தான். கல்யாணம், கோவில் திருவிழா, சடங்கு , வாலிபர்களின் கைப்பந்து விளையாட்டு என்று எதுவாக இருந்தாலும், அசோகன் சவுண்ட் சர்வீஃச் தான் ஒலி&ஒளி அமைப்பு செய்வார்கள்.  ஊரில் இருந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்லும்போது இரண்டு மூன்று சைக்கிள்களில் குழாய் ஃச்பீக்கரை பக்கவாட்டில் கட்டிக்கொண்டு ஒரு வண்டியும், ஆம்பிளிபைய‌ர் மற்றும் ரிக்கார்டுகளை கேரியரில் வைத்துக்கொண்டு ஒரு வண்டியும், ட்யூப் லைட் மற்றும் சீரியல்செட் லைட்டுகளை  இன்னொரு வண்டியிலும் வைத்துக்கொண்டு மதியம் வாக்கில் கெள‌ம்பிவிடுவார்கள். சிலகாலம் கழித்து இவர்கள் மூன்று சக்கரவண்டி வாங்கியதாக நினைவு.

சின்ன வயதில் என் அண்ணன் இவர்களுடன் ஒட்டிக்கொண்டே சுத்துவான். வீட்டில் சண்டை நடந்தால் அவன் கோவித்துக்கொண்டு போகும் இடங்களில் 'அசோகன் சவுண்ட் சர்வீஃச்' ஒன்றாக இருக்கும். ஒரே நேரத்தில் பல விழாக்களுக்கு ஒலி & ஒளி அமைப்பு செய்யும்போது, என் அண்ணன் போன்ற‌ பல இளவட்டங்களுக்கு தனி ஆவர்த்தனம் செய்யும் வாய்ப்பு கிடைத்துவிடும். மைக் செட் ஓனர் அசோகன், யார் யார் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிச் செல்வார். இரவு முழுக்க விழித்து , இடைவிடாமல் பாட்டுப் போடும் பணி இவனுக்கு கிடைக்கும். அதில் இடை இடையே மைக்கில் பேச வாய்ப்பு கிடைக்கும். பதின்ம வயதில் ஊரில் இப்படி குரல் ஒலிப்பது பெரிய கெத்தாக எடுத்துக்கொள்ளப்படும். "பழைய மற்றும் புத்தம் புதிய பாடல்களுக்கு, அசோகன் சவுண்ட் சர்வீஃச். உங்களின் திருமணம் மற்றும் அனைத்து இல்ல விழாக்களுக்கும் சிறந்த முறையில் ஒலி ஒளி அமைத்துக்கொடுக்கப்படும்" என்று நட்ட நடு ராத்திரியில் விளம்பரம் செய்துவிட்டு அதை இமாலய வெற்றியாக அடுத்த நாள் டீக்கடையில் கொண்டாடப்படும். அதுவும் பகல் நேரத்தில் ஊர் குமரிகள் ரோட்டில் நடமாடும்பொது, தங்கள் வெளம்பரக் குரலை ஒலிக்க விட பெரும் போட்டி இருக்கும் விடலைகளிடம்.

ல்யாண வீடுகள் அல்லது பொதுவான குடும்ப விழாக்களில் ஒலி&ஒளி அமைப்பது பெரிய விசயமாக இருக்காது. வீட்டில் போடப்பட்டுள்ள கொட்டகையில் இரண்டு குழாய் ஃச்பீக்கர் , அந்த வீடு இருக்கும் தெரு முக்கில் ஒன்று அல்லது  இரண்டு குழாய் ஃச்பீக்கர் என்று கட்டிவிட்டால் ஒலி அமைப்பு முடிந்துவிடும். கொடுக்கும் காசுக்கு ஏற்ப  குழாய் ஃச்பீக்கர் எண்ணிக்கை மாறும். ஃச்பீக்கர் கட்டி முடிந்தவுடன் மூங்கில் கம்புகளை தெருவில் நட்டு அதில் ட்யூப் லைட்டுகளை கட்டி , சீரியல் பல்புகளையும் போட்டுவிட்டால் ஒளி & ஒலி அமைப்பு வேலை முடிந்துவிடும். அதற்குப்பிறகு விடிய விடிய ஏதாவது பாடல்களைப் போட்டுக்கொண்டு இருந்தால் போதும். சில‌ நேரங்களில் விழாநடக்கும் வீட்டில் இருந்து யாராவது பொடுசுகள் வந்து  "எங்க மாமா இந்தப் பாட்டு போடச் சொன்னாக"  , "எங்க அக்கா இந்தப்பாட்டு போடச் சொன்னாக" என்று நேயர் விருப்ப பட்டியல் கொடுத்துவிட்டுப்போவார்கள்.  தெரிந்த குமரிப் பொண்ணுகள் இருந்தால் அவர்களுக்கான ஃச்பெசல் பாட்டுக்கள் கேட்காமலேயே ஒலிபரப்பு செய்யப்படும்.

ரசியல் மேடைகளில் பெரும்பாலும் ஒரு மைக் இருந்தாலே ஒப்பேற்றிவிடலாம். எப்பவாவது இரண்டு மைக் வைக்க வேண்டி வரும். ஆனால் நாடக மேடைகளில் அதிக மைக் தேவைப்படும். பெரும்பாலும் மேளக்காரரருக்கு மைக் தேவைப்படாது. ஆனால் ஆர்மோனியத்திற்கு ஒரு மைக் அவசியம்.  நாதசுவரம் ஊதுபவர் அவர் முறை வரும்போது மைக் இருக்கும் பக்கம் திரும்பி ஊதித்தள்ளிவிடுவார். பொதுவிதியாக ஆர்மோனியம், நாதசுவரம், மேளம் அடங்கிய வாத்தியக் குழுவிற்கு இரண்டு மைக் வைக்கப்படும். நாடக நடிகர்கள் பேச ஒன்று அல்லது இரண்டு மைக் வைக்கப்படும்.  ராசபாட் நடிகராக இருந்தாலும் , பபூனாக இருந்தாலும் இருக்கும் மைக்கைத்தான் மாற்றி மாற்றிப் பயன்படுத்த வேண்டும்.  இப்போது இருப்பதுபோல வயர்லெஃச் மைக்குகள் , மேடையில் தொங்கும் மைக்குகள் கிடையாது அப்போது.  மேடையில் எங்கு ஆடிக்கொண்டு இருந்தாலும் , வசனம் பேச வேண்டும் என்றால் மைக் அருகில் வந்தே பேச வேண்டும்.

த்தம் ..சத்தம் ..சத்தம் மட்டுமே. சத்தத்தை கூட்ட மற்றும் குறைக்க மட்டுமே முடியும். இப்போது இருப்பதுபோல வாத்தியங்களுக்கு தக்கவாறு தனித்தனி  அலைவரிசையில் தனித்த‌னியாக மிக்சிங் செய்ய முடியாது. சத்தம் அதிகம் வந்தால் "நல்ல மைக்செட் பார்ட்டி" இல்லை என்றால் வாடிக்கையாளர் குறைந்துவிடும். போட்டியே இல்லாத‌ ஊரில் புதிதாக "திருமலை ஒலி&ஒளி அமைப்பு" கடை போட்டது. இவர் அருகில் உள்ள கிராமத்துக்காரர். எங்கள் ஊரில் வந்துது கடை போட்டார். காலப்போக்கில் இருவருக்கும் தனித்தனி ஆர்டர்கள் கிடைத்து இருவரும் நன்றாகவே தொழில் செய்துகொண்டு இருந்தார்கள். காலத்திற்கு ஏற்ப இருவரும் ஃச்பீக்கர் டப்பாக்கள் வாங்கி அடுக்கி வைத்தார்கள்.

குழாய் வடிவ ஃச்பீக்கரில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் அதை  எங்காவது கட்ட முடியுமே தவிர அருகில் வைத்து கேட்க முடியாது. விழாவீடுகளுக்கு வெளியே நல்லா கேட்கும் பாட்டு, அந்த வீட்டின் பந்தலின் உள்ளே கேட்காது. அந்தக் குறையை ஃச்பீக்கர் டப்பாக்கள் நிவர்த்தி செய்தன. அடுத்து வ‌ந்த தலைமுறையினர் மதுரையில் இருந்து பெரிய மைக்செட் பார்ட்டிகளை கொண்டுவந்து அதிக வித்தைகள் காட்டினார்கள். பம்பர் குலுக்கல் பரிசுடன் நடந்த பெரிய நாடகத்திறுகு மைக் செட்டு அமைக்க ஒரு பெரிய கம்பெனி மதுரையில் இருந்து வந்தது. போகஃச் லைட்டுகள் , கலர் கலர் மேடை லைட்டுகள் , 5 க்கும் மேற்பட்ட மேடை மைக்குகள் என்று வைத்தபோது அது பெரிய ஆச்சர்யமாக இருந்தது எனக்கு. அசோகன் மற்றும் திருமலை குழுவிற்கு இப்படியான நிகழ்ச்சிகளில் வாய்ப்பு குறைந்துகொண்டே போனது.

ஒரு கட்டத்தில் அவர்களின் அலுமினிய கூம்பு ஃச்பீக்கர்கள் படிப்படியாக சத்தத்தை குறைத்து மெளனமாகிவிட்டன.

Picture courtesy: wikimedia.org 

Thursday, September 03, 2015

முற்போக்கு என்பது எது?

மிழில் பின்நவீனத்துவம் என்ற‌ ஒரு வார்த்தை புழக்கத்திற்கு விடப்பட்ட காலத்தில், அதை மொழி பெயர்த்தவர்கள்  Postmodernism என்பதை அப்படியே தமிழ்ப்படுத்திவிட்டார்கள் என்று நினைக்கிறேன். இது ஏதோ "முன்நவீனத்துவம் -- நவீனத்துவம் --- பின்நவீனத்துவம்" என்ற தொடர் பகுப்புபோல் புரிய வைக்கும்.  சரியாக இருக்க வேண்டும் என்றால் , "நவீனகாலத்திற்கு பிறகு" அல்லது "நவீனத்துவத்திற்கு பிறகான" என்றுதான் இருக்க வேண்டும். மாடர்ன் என்ற புள்ளியில் இருந்து அதை விமர்சித்து (கலை பண்பாட்டு வழிகளில்) எழுந்த ஒரு கோட்பாடு / இயக்கம்தான்  Postmodernism. ஆனால் அப்படியான ஒரு அர்தத்தை தமிழ் வார்த்தை "பின்நவீனத்துவம்" கொடுக்கவில்லை எனக்கு.

இப்படி பல சிக்கல்கள் உண்டு . பேசும் / எழுதும் வார்த்தைகள் உண்மையான பொருளை கடத்திவிடமுடியாது. அதுவும் மொழிபெயர்ப்புகளில் பெரும் சிக்கல்.

முற்போக்கு என்பது என்ன?

இதன் உடனடி அர்த்தம்,  இருக்கும் நிலையில் இருந்து முன்னோக்கிச் செல்வது.  அதாவது 2001 ல் இருந்தால் 2002 க்குச் செல்வது போன்றது.  தவறு என்று 2001 ல் அறியப்பட்ட ஒன்றை 2002 க்கு எடுத்துசெல்லாமல் , சுமைகளை உதறி முன்னேறுவது.

எது சுமை என்பதில் வேறுபாடுகள் வரும்போது ஒருவர் நினைக்கும் முற்போக்கு என்பதும் அடுத்தவர் நினைக்கும் முற்போக்கு என்பதும் வேறு வேறாகிவிடும். மதப் புத்தகங்களை எடுத்துக்கொள்வோம் அதில் "இந்த வரி தவறு இந்தக் காலத்திற்கு உதவாது" என்று சொல்லி அதை அகற்ற மாட்டார்கள். அதே புத்தகம் அச்சு மாறாமல் அடுத்த காலத்திற்கும் பயணித்துக்கொண்டு இருக்கும். இங்கே இதை யாரும் சுமை என்று  கருதவில்லையாதலால், அதைவிடாமல் எடுத்துக்கொன்டு போகிறார்கள்.

எது சுமை? என்பதை தனி ஒருவன் அவனுக்காக முடிவு செய்கிறான் (செய்ய வேண்டும்). எதை அடுத்த சந்ததிக்கு கடத்தலாம் என்பதையும் அவன்தான் முடிவு செய்ய வேண்டும். சில புனைக்கதைகளை (Fiction) கதைகள் என்று சொல்லி கடத்திக்கொண்டே இருக்கலாம் தவறே இல்லை. ஆனால் இன்றும்,  "உலகம் தட்டை" (Non-Fiction) என்ற தகவலை கடத்திக்கொண்டே இருந்தால் அதுதான் பிற்போக்குத்தனம்.  ஆனால் இன்றும் உலகம் தட்டை என்று நம்புபவர்களுக்கு அது பிற்போக்குத்தனம் இல்லை.

எனவே,  ஒருவர் பிற்போக்கா இல்லையா என்பது , அவரைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும்,  அவர்களின் சுமை குறித்த புரிதல்களின் பேரில் மாறுபடும் ஒன்று.

.
Picture courtesy: www.artafrica.info

Monday, August 31, 2015

கடவுள்

டவுள் (God / Idea of God)  என்பது என்ன என்று எனக்குத் தெரியாது. அது குறித்து சொல்லிக்கொடுக்கப்பட்டவைகளை எல்லாம் துறந்துவிட்டு, அந்த வார்த்தையை அர்த்தம் இழந்த வெற்றுச் சொல்லாக மட்டுமே இன்று பார்க்க முடிகிறது இப்போது.  எப்படிச் சிந்தித்தாலும் அந்த வார்த்தைக்கு உயிர் கொடுத்து, புதிய அர்த்தங்களை சேர்த்துக்கொள்ளவேண்டிய தேவை எனக்கு இல்லை இன்று. ஒரு வேளை தேவை ஏற்பட்டால், அந்த வார்த்தைக்கான அர்த்தம் என்ன என்று தேடி , பின்னர் அது உள்ளதா? இல்லையா?என்று அடுத்த கேள்விக்கு போகலாம்.

அறிவியலின் இன்றைய நிலையில், நம்மைத்தாண்டி சில சாத்தியங்கள் இருக்கும் என்ற அடிப்படையில் இன்றும் ஆராய்ச்சிகள் தொடர்ந்துகொண்டுள்ளது. நமக்கு தெரியாத ஒன்றை "கடவுள்" என்று சொல்லி , பூசை செய்து சாத்திரங்கள் ஓதி அமர்ந்துவிடாமல்,  நமக்கு தெரியாத ஒன்று தெரியும்வரை பயணித்துக்கொண்டு இருப்பதுதான் அறிவியலின் அடிப்படை. 

முப்பரிணாமங்கள்தாண்டி அடுத்த பரிமாணங்களில் ( இன்டர்ஃச்டெல்லர்  படம் நினைவிற்கு வரலாம்) இயங்கக்கூடிய உயிர்கள் இருக்கலாம் என்ற அறிவியல்தேடலில் நான் கவனம் செலுத்துகிறேன். அத்தகைய உயிர்கள் (உயிர் என்று சொல்வது நமக்கு தெரிந்த வார்த்தையில் ) நம்மைவிட பலம் மிக்கவர்களாக இருக்கலாம். எறும்பைவிட நாம் எப்படி பலம்மிக்கவர்களோ அப்படி அவைகள் நம்மைவிட பலம்மிக்கவைகளாக இருக்கலாம்.

இன்று நாம் எதிர்கொள்ளும் புரிந்துகொள்ளமுடியாத இயற்கைச் சீற்றங்கள்கூட ஒரு வகை மேம்பட்ட பரிணாம பொருளின்/உயிரின் இயக்கமாக இருக்கலாம். இருந்துவிட்டுப்போகட்டும். என் கண்ணின் காணும் திறனைத்தாண்டிய ஒளி கீற்றுகளும், என் செவியின் கேட்கும் திறனைத்தாண்டிய ஒலி அலைகளும் நிறைந்துள்ள இந்த உலகில் நானும் வாழ்ந்துகொண்டுதான் உள்ளேன்.  என்னால் அவைகளை ஒன்றும் செய்யமுடியாது. எனது உணர்திறனுக்கு அப்பால் நடக்கும் பல எனக்குப் புரிய முடியாததாக உள்ளது என்பதற்காக,  அவற்றை ஏதோ ஒரு பெயர் சொல்லி அழைத்து (கடவுள்) சமாதானம் அடைய விரும்பவில்லை. அது தேங்கிவிடும் குட்டை நீர்போல.

எனது உணர்திறனுக்கு அப்பால் இருக்கும் சாத்தியங்களை அறிவியலின் துணைகொண்டு அறிந்துகொள்ள முயற்சிப்பதில்தான் உண்மையான தேடல் உள்ளது.

Idea of God
கடவுள் என்றால் என்ன என்பது எனக்குத் தெரியாது. தெரிந்துகொள்ளவும் தேவை ஏற்படவில்லை. அதேசமயம் நாம் வாழும் இந்த உலகில் அதுகுறித்து தினமும் பேசப்படுவதால் அந்த வார்த்தைக்காண அர்த்தம் பிறரிடம் என்னவாக உள்ளது என்று சிந்திக்கும்போது அது ஒரு கருத்தாக்கம் (Idea) என்றுதான் தோன்றுகிறது. அதைத்தாண்டி ஒன்றும் இல்லை.

நாத்திகம்
நான் நாத்திகன் அல்ல.
இன்றைய அளவுகோலின்படி நாத்திகம் என்பது கடவுள் உள்ளார் என்ற கருத்தாக்கத்தை மறுக்கும் ஒற்றை நிலைப்பாடு.

இல்லாததை அல்லது என்னவென்று புரியாத தெரியாத‌ ஒன்றை, இருக்கிறது என்று ஆதரிப்பதும் ,இல்லை என்று மறுப்பதும் தேவையில்லாதது.

அது இருந்தாலும் இல்லாவிட்டாலும் எனக்கு என்ன?

.
Image courtesy: http://www.visual-arts-cork.com/

.

Thursday, August 27, 2015

சமூகச்சமநிலையும் இட ஒதுக்கீடும்

பொது இடங்களில் அதாவது கற்றோர் (பெத்தப்படிப்பு படித்து அதன்மூலம் காசு சம்பாதிப்பவர்கள் என்று கொள்க) கூடியிருக்கும் இடங்கள் அல்லது ஏட்டுச் சுரைக்காய் மட்டும் புசித்து மூளைவீங்கிகள் இருக்கும் இடங்கள் போன்றவற்றில் முடிந்த அளவு மிக்சரை வாயில் திணித்துக்கொண்டு பராக்கு பார்த்துக்கொண்டு இருப்பதுபோல நேரத்தை ஓட்டிவிடுவேன். ஆனாலும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் இப்படியான பொது இடங்களில் சில உண்மைகளைப் பேசவேண்டியதாகிவிடுகிறது. ஆம் இங்கே உண்மை என்பது நான் பட்டறிந்த உண்மைகள். அய்யோ பாவம், அந்த வாய்ப்பு உங்களுக்கு இல்லை என்றால் அது உங்களுக்கான உண்மையல்ல. ஏதாவது கதை பொக் படித்து செட்டிலாகிவிடுங்கள். உண்மை என்பது பக்கச் சார்பானதுதான். எனது உண்மையும் உங்களுடைய உண்மையும் ஒன்றாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

தமிழ் நாட்டு அரசியல் வகைப்பேச்சுகள் ஏதாவது நடந்தால் பலர் எடுத்த எடுப்பிலேயே திமுக தலைமையைத் திட்டுவது என்பதை சம்பிரதாயமாக கொண்டுள்ளார்கள். இட ஒதுக்கீட்டை ஆதரித்தும் கிந்தியை எதிர்த்தும் கருணாநிதி அவர்கள் செய்த செயல்களால்தான் தமிழ்நாடு இப்படியாகிவிட்டது என்று பேச ஆரம்பித்துவிடுகிறார்கள். பல நேரம் பொத்திக்கொண்டு இருந்தாலும் சிலநேரங்களில் பத்திக்கொண்டுவிடுகிறது. நான் எந்த அரசியல் கட்சியின் அடிமைகிடையாது இருந்தாலும் இட ஒதுக்கீட்டு என்ற‌ விசயத்தில் எனக்கான சில நிலைப்பாடுகள் உண்டு.

இட ஒதுக்கீட்டின் மூலம் தமிழ்நாட்டில் கல்வி பெற்று (கற்று) அம்பேரிக்காவிற்கு வந்து பெரிய சம்பளம் கொடுக்கும் வேலைகளில் இருக்கும் கணவான்கள் எல்லாம் இட ஒதுக்கீட்டை இன்று எதிர்க்கிறார்கள். ஆனால் அதே சமயம் அவர்களே சாதி இருக்க வேண்டும் என்றும் கொடிபிடிக்கிறார்கள். அப்படியான ஒரு உரையாடலில் சினிமா, அரசியல், இட ஒதுக்கீடு , கற்பு கருமாதி என்று தமிழர்களின் கிப்போகிரேட் மனநிலையை கோடிட்டுக்காட்டினேன். சில எதிரிகளை உருவாக்கி இருக்கக்கூடும் இருந்தாலும் சிலவற்றைச் சொல்வதில் தயக்கம் இருக்கக்கூடாது என்று இன்றும் நம்புகிறேன்.

இம்சை அரசன் அவர்களை நாட்டுக்கு தாரைவார்த்த இந்த உலகில் இருக்கும் ஒரே புண்ணிய பூமியான குசராத்தில் இன்று நடக்கும் இட ஒதுக்கீட்டு ஒலங்கள் பல "ராம பக்தர்களை" ஆச்சர்யப்படுத்தி உள‌ளது. ஆம் இன்று இட ஒதுக்கீடு கேட்பவர்கள் எல்லாம் "கடவுள் இராமன் அவர்களின் நேரடி வாரிசு வழி பரம்பரையாளர்கள்".

http://indianexpress.com/article/india/india-others/hardik-patel-leads-obc-quota-protests-here-are-his-top-10-quotes/
// We are the descendants of Lord Ram… we are the descendants of Sardar Patel. //

மண்டல் கமிசன் காலங்களில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கொடிபிடித்த இந்த "கடவுள் இராமனின் பரம்பரையினர்"  இன்று மகாபாரதம் படித்து ஞானியாகிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். இந்த சந்தில் , சிலர் கோட்டா என்றால் அறிவு கம்மி என்றும் சிந்து பாட ஆரம்பித்துவிட்டார்கள்.

Coming full circle on reservations: Here's why Patels' OBC status demand should worry India
http://www.firstpost.com/politics/coming-full-circle-on-reservations-patels-demand-for-obc-status-should-worry-india-2407116.html

பேசிப் பேசி அலுத்துப்போன விசயம் இருந்தாலும் பொணமாகும்வரை காலாட்டிக்கொண்டு இல்லாவிட்டால் இந்த அறிவாளிகள் நம்மையும் மிதித்துவிடுவார்கள் என்பதால் பழைய நினைவுகள்.

இட ஒதுக்கீடு பொருளாதர சமநிலைக்கல்ல
http://kalvetu.balloonmama.net/2012/12/blog-post.html

இட ஒதுக்கீடு: நாய்கள்தான் அப்படி நாமளுமா?
http://kalvetu.balloonmama.net/2006/05/blog-post_23.html

ஏன் வேண்டும் இடஒதுக்கீடு - கட்டுரைகளின் தொகுப்பு   (குழலி)
http://kuzhali.blogspot.com/2007/03/blog-post_30.html

.
Picture courtesy: http://www.marieclaire.co.uk/

.

Tuesday, July 14, 2015

நேற்று என்பது வரலாறு - புளூட்டோ

றிவியலில் எந்த ஒரு விசயத்திற்குமான‌ வரையறை (விதிகள்)  என்பது நிலையானது அல்ல. அது மாறிக்கொண்டு இருக்கும் ஒன்று.  இன்று நாம் சரி என்று நம்பும் விசயங்கள் நாளைய கண்டுபிடிப்பில் தவறாக மாற வாய்ப்புள்ளது.  இந்த சரி /தவறு என்பவை எல்லாம் அறிவியலின் தொடர் ஆராய்ச்சி சார்ந்த புரிதல்களின் பேரில், நாம் வரையறுத்துக்கொள்ளும் புதிய விதிகளே அன்றி வேறுயாவும் இல்லை.  நம் சூரியக் குடும்பத்தில் சூரியன் (sun) என்பது நட்சத்திரம்.  Mercury, Venus, Earth , Mars, Jupiter, Saturn, Uranus, Neptune என்பவைகள்  (கோள்) கிரகம்.  ஒவ்வொரு கோளுக்கும் சில நிலாக்கள் ( natural satellite)  இருக்கலாம்.  சந்திரன் என்பது பூமி என்ற கிரகத்தின் (நிலா) துணைக்கோள் .

ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி இருப்பவை இப்படித்தான் அறிவியலில் பகுக்கப்படுகிறது.  இவையாவும் நம் அறிவியலின் புரிதலின்பேரில் நாமே ஏற்படுத்திக்கொண்ட பகுப்புகள். இவை நாளை மாறலாம். கடவுள்/சோசிய நம்பிக்கைகள் போல அறிவியல் மாறாதது அல்ல. சோசியத்தில் இருக்கும் கட்டத்தில் சந்திரன்,சூரியன்,சனி,செவ்வாய் என்று எல்லாம் ஒரே அவியலாக  கிரகம் (கோள் / Planet) என்ற மதிப்பீட்டில்தான் உள்ளது. ஆனால் அறிவியல் அதை ஏற்றுக்கொள்வது இல்லை.

சூரியக் குடும்பத்தில் புளூட்டோ ஒரு அப்புராணி அல்லது எடுப்பார் கைப்பிள்ளை போன்ற ஒரு "உருண்டை". என்ன செய்வது இதற்கு "உருண்டை" என்பது தாண்டி என்ன பெயர் கொடுப்பது?  முதன் முதலில் இந்த உருண்டை கண்டறியப்பட்டபோது (1930) அனைவரும் இதை சூரியக்குடும்பத்தின் கடைசிக் குழந்தையாகவே எண்ணி ஒரு கோளாக (planet) அங்கீகரித்தார்கள். இவரும் தனது அண்ணன், அக்காமார்களுடன் சேர்ந்து ஒன்பதாவது தம்பியாக சூரியக்குடும்பத்தில் சேர்ந்து கொண்டார். இப்படி இருந்த புளுட்டோவின் வாழக்கையில் விதி விளையாடியது . 1992 ஆண்டுவாக்கில் நடந்த சில கண்டுபிடிப்புகள் புளூட்டோவை கோள் (கிரகம்) என்ற மதிப்பீட்டில் இருந்து இறக்கிவிட்டது.  ஆம் சரியான எடை இல்லாதவர் என்பதாலும், தாறுமாறாக சுற்றிக்கொண்டு இருப்பவர் என்பதாலும் இவரை பதவியிறக்கம் செய்துவிட்டார்கள். ஆம் இன்றுவரை அவர் குள்ளக் கோள்   "Dwarf Planet" என்றுதான் அழைக்கப்படுகிறார்.

இப்படி எல்லாம் அசிங்கப்படுவோம் என்று தெரிந்துதான் அவர் ஆரம்பத்தில் இருந்து கோக்குமாக்கான ஒரு சுற்றுப்பாதையில் சூரியனைச் சுற்றி வருகிறார். மற்ற எல்லாச் சகோதர , சகோதிரிகளும் ஒரு ஒழுங்கான நீள் வட்டத்தில் சூரியனைச் சுற்றினால், இவர் ஒரு பிரமிப்பான குறுக்குப் பாதையில் அனைவரையும் டெரராக்கும் நோக்கில் சுற்றிவருகிறார்.


பூமியில் இருந்து இதுவரை தோன்றிய எந்தக் கடவுளும் நமக்கு புளூட்டோவை https://en.wikipedia.org/wiki/Pluto காண்பித்தது இல்லை. நாமும் ஒரு தோராயமாக அது நீலநிறப் பந்து அல்லது நிலா போன்ற‌ வெள்ளைப் பந்து (அதிகக் குளிர் காரணமாக உறைந்த நிலையில் இருக்கும் தண்ணீர்ப்பந்து) என்ற அளவில் அதற்காக ஒரு படத்தை தயாரித்து நம்பிக் கொண்டு இருந்தோம். அதை எல்லாம் சுக்கு நூறாக்கிவிட்டது  New Horizons   எனப்படும் வெண்வெளி ஆராய்ச்சி விமானம் (Spaceflight) . ஆம் இது ஒரு விமானம்தான். பூமியைச் சுற்றும் வெண்வெளி ஆராய்ச்சி மையம் அல்லது கணக்கற்ற செயற்கை துணைக்கோள்கள் ( Satellite ) போல் அல்லாமல் இது அதன் போக்கில் பயணிக்கும் ஒரு விமானம். போகும் வழியில் புளுட்டோவைப் படம் பிடித்து நமக்கு செய்தி சொல்லும். இது புளுட்டோவையும் தாண்டி Kuiper Belt -ல் https://en.wikipedia.org/wiki/Kuiper_belt பயணித்துக்கொண்டு இருக்கும். என்னவெல்லாம் நடக்கும் என்பதை ஒரு குத்துமதிப்பாக இங்கே  https://en.wikipedia.org/wiki/New_Horizons  சொல்லியுள்ளார்கள். 2038 க்குப் பிறகு New Horizons நம்மைவிட்டு அதாவது நமது தொடர்பு எல்லைகளைத் தாண்டி விண்ணில் கலந்துவிடும்.

எதற்காக அனுப்பப்பட்டதோ அந்த செயலை கச்சிதமாக New Horizons நிறைவேற்றிவிட்டது. ஆம் புளூட்டோ எப்படி உள்ளது என்ற அக்மார்க் புகைப்படம் கிடைத்துவிட்டது. http://news.nationalgeographic.com/2015/150714-pluto-flyby-new-horizons-space/ .


அறிவியல் என்பது எப்போது அழித்து எழுதப்படுவது. சோசியக் கட்டங்கள்போல தலைமுறைக்கும் தொடரும் புனைவுகள் அல்ல. உங்களின் புளூட்டோ செல்பிகளை மாற்றிக்கொள்ளுங்கள். ஆம் புளூட்டோ  நிலாவைப் போன்ற வெள்ளையாகவும் இல்லாமல்,  செவ்வாய் போன்ற செவப்பாகவும் இல்லாமல் ஒருவித பழுப்பு நிறத்தில் உள்ளது.

குள்ளமாக உள்ளது என்று ஒதுக்கப்பட கோளாக இருந்தாலும் , அழகான ஐந்து நிலா மகள்களைக் கொண்ட மாமன் என்பதால் புளூட்டோ http://pluto.jhuapl.edu/   மாமனை கட்டி அணைப்போம்.

Image courtesy : NASA, Nationalgeographic & http://physics.stackexchange.com/

Thursday, April 23, 2015

எளக்கிய மொக்கைகளே கீப் இட் அப்.

(Image courtesy from :http://arablit.org/2012/06/20/syrias-war-literature/)
வரு பெட்னா (அட்லாண்டா) விழாவில் தேவர் புகழ் பாடினார். இவரு கலப்பில்லா தமிழை முயற்சி செய்பவர்களை நக்கிப்பிழைக்கும் நாய்கள் என்று பட்டம் கொடுத்தவர். இன்னொருவர் இணையத்தில் எழுதுபவர்களை மொண்ணைகள் என்றும் தமிழை ஆங்கில வரிவடித்தில் எழுதலாம் என்று சொல்லி இன்று வரை கரகம் எடுத்து ஆடிக்கொண்டு இருப்பவர். இன்னொருவர் "கேரளாவுல ரேக்ளா ரேசில்கூட மாட்டின் கழுத்தில் எழுத்தாளர் தொங்கிக்கொண்டு இருப்பார்" என்று சொல்லி வருபவர். முரண் என்னெவென்றால் இவர்கள் அனைவரும் எழுதிப் பிழைப்பது தமிழ். இப்படி பலர் ...சரி விடுங்கள் சாக்கைடையை கிளறினால் முத்தா வந்துவிடப்போகிறது எல்லாம் ஒரே குட்டையில் இருக்கும் மட்டைகள். என்ன மட்டைகளின் நீள அகலங்களில் வேறுபாடு உண்டு அவ்வளவே.

கத , கவிதை என்ற‌ தொழில் தாண்டி இவர்கள் அனைவரும் இயல்பு வாழ்வில் எல்லாரையும் போல சாதரண‌ர்களே. சாதிப் பாசம் அல்லது மதப் பாசம் அல்லது ஏதோ ஒரு மொழிப் பாசம் அல்லது சினிமா வாய்ப்பு , புகழ் என்ற பல நவரசங்களில் இருந்து இவர்களும் இரசம் சாப்பிட்டு அவர்களின் கருத்துகளை பொழிந்தவர்களே. இப்படி துறைரீதியாக சாதித்தவர்கள் பொதுவெளியில் (இயல்வாழ்வில்) எதையாவது சொல்லி/செய்து பல்ஃப் வாங்குவது புதியவிசயம் அல்ல.

எந்த சத்சங்கம் சிறந்தது? எந்த கத பொத்தகம் அக்மாரக் எளக்கியம்?

இரண்டு சினிமாக்களில் நடித்தவுடன் இரசிகர் மன்றம் வைக்கும் சினிமா கண்மணிகளைப்போல இவர்களும் இப்போது வட்டம் , சதுரம் என்று வரைந்து, அதற்குள் சில களப்போராளிகளை வைத்துள்ளார்கள். "எங்க ஆளு மேலாயாடா கைய வச்ச" என்று இவர்கள் கம்பு சுற்றுவார்கள். மடாதிபதி இவர்களுக்கு அவ்வப்போது சில பிச்சைகள் (காது குத்து நிகழ்வுகளில் முதல் வரிசை) போடுவார். வெளியில் இருந்து யாராவாது "இன்ன எங்க நடக்குது. இன்னும் புரியலையே" என்றால், "நாங்கள் வைத்துள்ள எள‌க்கிய யுனிவர்சிட்டியில் ,எங்கள் தல கையால் வாசக பட்ட டிப்ளமோ வாங்கி, சங்க மெம்பரானால்தான் படிமம் புரியும் அதுவரை பிகருகூட படியாது" என்று மொண்ணை வசனம் பேசுவார்கள்.

இப்படி கோமாளி சேர்த்த கூட்டமாய் இருக்கும் இவர்களுக்குள் எந்த சத்சங்கம் சிறந்தது? எந்த கத பொத்தகம் அக்மாரக் எளக்கியம்? புகழுக்காக எவன் அலையுறான்? என்று சண்டைகள் வேறு. இப்படி ஒரு மடம் அடுத்த மடத்தின்மீது போர் தொடுக்கும்போது , இவர்கள் பார்க்கும்/பார்த்த‌ தொழில் (கவிதை,கதை எழுதுவது) வழியாக வந்த இரசிகக் கண்மணிகள், அவர்களின் நம்பிக்கையின் பிம்பங்களின் வேர்கள் ஆட்டப்படும்போது பொங்குகிறார்கள்.

புகழுக்காக இப்படிச் செய்யலாம கண்மணி?

கார்பரேட் அடிமையுகத்தில் "மாப்ள ஒங்கூட வேலை செய்ததா இந்த தேதியில் இந்த நிறுவனத்தில் இந்த வேலை செய்ததாக போட்டுள்ளேன். தொலைபேசி வந்தா இப்படி இப்படி சொல்லிடுடா" என்று பிழைப்பிற்கும், அது தாண்டி அதிக சம்பளம், வசதி வாய்ப்புகளுக்கு பொய் சொல்லி பிழைத்தவர்கள் பலர். என்ன இதில் எல்லாம் சிபாரிசு செய்ததாகச் சொல்லப்படுபவனிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு செய்வார்கள்.  அப்படி இல்லை என்றால் இழுத்து மூடிய மன்னார் அன்ட் கம்பெனியில் வேலை பார்த்ததாகச் சொல்லியும் வேலை பிடிப்பார்கள். அதுபோல ஒரு கவுச தொழிலாளி பொய்யான செய்திகளை போட்டு புகழ் ஏதோ ஒன்றை அடைய முயற்சித்துள்ளார். அவர் சொன்ன விசயம் எலக்கியவாதிகளின் அதிகாரபூர்வ Journal லில் வந்துவிட்டது. பொகழுக்காக இப்படிச் செய்யலாமா? என்ன இருந்தாலும் இவர் இப்படியா? என்று பொங்கித் தீர்த்துவிட்டார்கள்.

டமில் எளக்கிய வொலகில் அடுத்தவன் எழுதிய கடிதங்களை கதையாக்கி விற்பது, அடுத்தவன் எடுத்த/வரைந்த  படத்தை ஆட்டையைபோட்டு புத்தகத்தில் அட்டையாகபோட்டு விற்பது, அடுத்தவன் தொகுத்த ஒன்றை (அல்வாவை) தன் இலையில் வழித்து போட்டுக்கொள்வது போன்ற கேப்மாரிதனங்கள் நடந்துகொண்டே உள்ளது. அதுதாண்டி மார்க்கெட்டிங் என்ற ஒரு காதுகுத்து விழாக்கள் இப்போது நடக்கிறது. இந்த விழாக்களில் கதையை படிக்காமலே மேடையில் மைக்கைப்பிடித்து  "நான் இன்னும் இதப் படிக்கல ஆனால் பாருங்கள்...அந்த பனைமரத்தில் இந்த ஆடு கட்டப்பட்டுள்ள‌தால் ..." என்று ஒரு சான்றிதழை வழங்கிவிட்டுப் போவார்கள். எந்தவித வெட்கமும் இல்லாமல் அடுத்த காதுகுத்துவிழாவிற்கு இன்னொரு சினிமா சிகினாவை அழைப்பார்கள். இப்படியாக தொழில் போய்க்கொண்டு இருக்கும். இது எல்லாம் மார்க்கெடிங் என்றாலும் அடியில் ஒட்டும் இழைகள் புகழ், இருப்பைக் காட்டிக்கொளல் மற்றும் பிழைப்பு சார்ந்த ஒன்றாக இருக்கும்.

இந்த புகழ் போதை காதுகுத்துவிழாக்களில் வசதி வாய்ப்பு உள்ளவர்கள் சினிமா கீரோக்களையும், ஏப்பை சாப்பைகள் அவர்கள் அளவிற்கு ஒரு சினிமா போஃச்டர் ஒட்டிய‌வரையாவது அழைத்து வந்து பேச வைத்து நிம்மதியடைவார்கள்.  இந்த அக்கப்போர்களில் சாட்சியும் , வாதியும், பிரதிவாதியும் எல்லாம் எலக்கிய மொக்கைகளாகவே இருக்கும். எனவே யாரும் யாரையும் காட்டிக்கொடுத்துக்கொள்வது இல்லை.

இன்று கவுச தொழிலாளி மாட்டிக்கொண்டார்.  நாளைக்கே இந்த கவித கவுச தொழிலாளி பாட்டெழுத, அந்த மணி அய்யா இயக்க , அந்த இணைய மொண்ணை அய்யா வசனம் எழுத,  "எல்லாரும் வாங்க பழகலாம்" என்று அந்த சினிமா ஒலகம் ஒன்று சேர்ந்துவிடும்(காசு,பணம்,துட்டு).

இணைய மொண்ணைகளுக்கு எதுக்கு வம்பு?

பதிவுகள் எழுதி ரிட்டையர்ட் ஆன சம்முவத்தில் ஒரு காலத்தில் பலர் பின்னூட்டங்களை நமக்கு நாமே திட்டத்திலும், பிறருக்கு தொலைபேசி வலிந்து கேட்டு வாங்கியும் கணக்குகாட்டி பெருமையும் பட்டுக்கொண்டவர்கள் உண்டு. இத்தனை லைக்கு, இதனை ஃபாலோயர்ஃச் என்று இன்றுவரை ஏதோ ஒருவகையில் செய்தியைச் சொல்லிவிடுகிறார்கள் இங்கும். விடுங்க பாசு ..வாங்க பிள்ளைகளை படிக்க வைக்கலாம்.

எளக்கிய விருதுகளும் எருதுகளும்

அதிக பட்சம் 1000 பேர் படிக்கும் கத பொக் உற்பத்தி தொழில் துறையில் கதை, கவித புத்தகங்களை எழுதி விற்றுக்கொண்டு இருப்பவர்களுக்குள் இருக்கும் பல சண்டைகளில் முக்கியமானது விருதுச் சண்டை. தனக்கு கிடைக்காதவரை நோபல் பரிசே ஆனாலும் அது எனக்கு மசுறு என்று சொல்வார்கள். தனக்கு குச்சிமிட்டாய் கிடைத்தால்கூட அதுதான் "அக்மார்க் ஒரிசினல் மதுரை பாண்டியன் மார்க் அவார்டு" என்று சொல்லி குதிப்பார்கள்.

யாரும் சீந்தவில்லை என்றால் விஃசுணுவை அழைத்து சிறந்த படைப்புக்கான "வில்லாபுரம்" அவார்ட் கொடுத்து தங்களை நிலைநாட்டிக்கொள்ள முயற்சிப்பார்கள். இப்படி கடவுளுக்கே விருது கொடுத்த மொக்கராசு கமிட்டியில் இருந்த வண்டுமுருகன்கள் எல்லாம் அந்த போதையில் கொஞ்சகாலம் வந்தவன் போனவன் எல்லாரையும் "நீ எளக்கியம் படிச்சயா? படிமம் தெரியுமா? பரஞ்சோதி ஓட்டல் தெரியுமா ? மாஃச் ஓட்டல் மூளைக்கறி சுவை தெரியுமா? என்று கிண்டி கிட்னி எடுப்பார்கள்.

இவர்கள் மட்டும் இல்லாவிட்டால் தமிழ் இணைய வெட்டிப் பேச்சு பொரணிகள் சுவராசியம் இழந்து போயிருக்கும்.

எளக்கிய மொக்கைகளே கீப் இட் அப்.

Wednesday, March 11, 2015

சுமாரான போக்குவரத்து உள்ள சாலைகளின் சந்திப்பு அது. அருகில் புதிதாக வந்துள்ள வணிக வளாகம் அதன் பங்கிற்கு கூட்டத்தை இழுத்து சாலையில் விட்டுக்கொண்டு இருந்தது. முகப்பில் உள்ள டீசல்/பெட்ரோல் கடை அன்று வழக்கைத்தைவிட அதிக கூட்டத்துடன் காணப்பட்டது. சாலைகள் சந்திப்பின் அருகே இரு சாலைகளின் மையமாக இருக்கும் சிமெண்ட் தீவுப்பகுதியில் (Median) பெயிண்ட் டப்பாவைக் தலைகீழாகப் போட்டு அதில் அமர்ந்திருந்தாள் அவள். கலைந்துபோன தலை முடி, தொய்வான ஆடைகள் சகிதம்.  சாலைச் சந்திப்பில் எப்போதும் ஏதாவது ஒருபுறம் சிவப்பு விளக்கு எரிந்துகொண்டே இருக்கும் ஒன்று மாற்றி ஒன்று. சிகப்பு விளக்கைத் துரத்திச் சென்று எல்லாப் பக்கமும் செல்ல முடியாது. இதனால் இவர்கள் ஏதேனும் ஒரு பக்கம் டப்பாவைக் கவுத்தி உட்கார்ந்து விடுவார்கள். தங்கள் பக்கம் உள்ள சாலையில் சிகப்பு விளக்கு எரிந்தவுடன்  வாகன ஓட்டியின் இடதுகை பக்கம் வருமாறு எழுந்து நின்றுவிடுவார்கள். வயதான சிலர் பல மணி நேரம் அப்படியே நின்று கொண்டு இருப்பதையும் பார்த்திருக்கிறேன்.

அன்று குளிர்காலம் (பனிகாலம்) முடிந்து வசந்தகாலம் ஆரம்பிக்கும் வாரஇறுதி .எனக்கு மிகவும் பிடித்தமான காலம். அன்று சனிக்கிழமை அன்று இரவுதான் நேரத்தை ஒரு மணிநேரம் முன் தள்ள வேண்டும். இலையுதிர் காலத்தில் எடுத்துக்கொண்ட நேரத்தை இப்போது திருப்பிக்கொடுக்க வேண்டும். அன்று நான் செய்யும் பகுதி நேரவேலை/தன்னார்வப்பணி இடத்தில் வடக்கு கரோலைனா மாநில பல்கலைக்கழக கூடைப்பந்து அணிக்கும், நியூயார்க் சைரஃச் பல்கலைக்கழக கூடைப்பந்து அணிக்கும் இடையேயான போட்டி ( Joe Biden, Vice President of the United States இந்தக் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்.)  வடக்கு கரோலைனா மாநில பல்கலைக்கழக கூடைப்பந்து அணிக்கு அதுதான் அந்த பருவத்தின் இறுதிப்போட்டி. அதற்குப்பின் அவர்கள் பிற வெற்றி பெற்ற அணிகளுடன் நடக்கும் தொகுதிவாரிப் போட்டிக்குப் போய்விடுவார்கள்.

இப்படி சாலையில் இருப்பவர்களுக்கு உதவ‌ நினைக்கும் தருணங்கள் எப்போதும் குழப்பமானது. சாலையில் கார் நிற்கும் அந்த‌ சில நிமிடங்களில் கொடுக்கவா? வேண்டாமா? என்று முடிவு செய்து, அதிலும் எவ்வளவு கொடுக்கலாம் என்று முடிவு செய்து , விளக்கு பச்சைக்கு மாறும்முன் கொடுத்துவிட வேண்டும். கொடுக்க நாம் தயாராக இருந்தாலும் அவர்கள் நம்மைக் கவனிக்காவிடில் சிக்கல்தான். இந்தமுறை நான் அவளை தூரத்தில் இருந்தே பார்த்துவிட்டேன். இன்று கொடுத்தே ஆகவேண்டும் என்று முடிவுடன் காரின் சன்னல் கதவை இறக்கிவிட்டு கையில் சில ஒரு டாலர் பணத்துடன் இருந்தேன்.

எனது காருக்கு முன்னால் ஒரு கார் இருக்கும் வகையில்  சிகப்பு விளக்கு எரிந்து வாகனங்களை நிறுத்தியது. பஞ்சு மிட்டாய் கலரில் சின்ன கால்சட்டையும், கண்ணைப்பறிக்கும் பச்சை அரைப்பனியனுடனும் வலதுபுறம் ஓடிக்கொண்டிருந்த ஒரு பெண் எனது காருக்கு முன்னால் குலுங்கி குலுங்கி சாலையைக் கடந்தாள். ஒருவாரத்திற்கு முன் இந்த ஊர் பனியால் மூடிக்கிடந்தது, இந்தவாரம் இப்படி மாறி இருந்தது. சாலையில் ஓடுபவர்கள் எல்லாம் ஒருவகையில் எனக்கு நெருக்கமானவர்கள். ஓட்டம் எனக்கு மிகவும் பிடித்த உடற்பயிற்சி.

அதற்குள் அந்த அட்டைப்பெண் என் காரை நெருங்கிவிட்டிருந்தாள். கையில் பிடித்த அட்டையுடன் என்னை நெருங்கி பணத்தைப் பெற்றுக்கொண்ட அவள் என்னை நோக்கி "நன்றி , கடவுள் உன்னை ஆசிர்வதிப்பார்" என்றார். கடவுள் தன்னை தெருவில் நிறுத்திவிட்டாலும் அடுத்தவனையாவது ஆசீர்வதிக்கட்டும் என்ற எண்ணமாக இருக்குமோ தெரியவில்லை. இங்கே இப்படி ரோட்டில் இருப்பவர்கள் யாரையும் தொந்தரவு செய்வது இல்லை. ஒரு சின்ன அட்டையில் ஏதாவது ஒரு செய்தியை எழுதி வைத்துக்கொண்டு அப்படியே எங்கோ வெறித்தபடி இருப்பார்கள். போகும் காருக்கெல்லாம் "காட் ப்ளஃச் யு" சொல்லும் ஒருவர் எனக்குத் தெரியும். அவர் எழுந்து நிற்கமாட்டார். யாராவது அழைத்தால் மட்டுமே வந்து பணத்தை வாங்கிக்கொள்வார். ஒவ்வொருவரும் ஒருவிதம். நியூயார்க் சப்வே மனிதர்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள்.

அன்று நடந்த போட்டியில் வடக்கு கரோலைனா மாநில பல்கலைக்கழக கூடைப்பந்து அணி வெற்றி பெற்றது.


Picture courtesy
http://www.pressherald.com