Wednesday, December 21, 2011

ட்வீட்டர் குருவி இனி என்ன செய்யும்?

image courtesy cnn.com
கே ப்டன் ஜி. ஆர். கோபிநாத் ஆரம்பித்த, டெக்கான் விமானப் போக்குவரத்து , அவரின் கனவுத்திட்டமான ( A dream inspired by just one statement. “I want every Indian to fly at least once in his/ her lifetime.” ) குறைந்த செலவில் விமானப் போக்குவரத்து என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது. அது பொதுச்சந்தைக்கு வந்தபின்னால்,  சராயாவியாபாரி மல்லையா அவர்களால் ஆட்கொள்ளப்பட்டது. அதன் பிறகு அது ஜிம்பிளிக்கா ஜிங்கா என்று , கிரிக்கெட், சாராயம் வகையறாவுடன் சேர்ந்து பத்தோடு பதினொன்றாகி த‌னித்தன்மையை இழந்து மல்லையாத்தனமாகிவிட்டது.  மல்லையா அவர்கள் ஐடி கம்பெனி ஆரம்பித்தால் ஆண்களுக்கு வேலை கிடைக்குமா என்று தெரியாது. அப்படியே கிடைத்தாலும் சம்பளம் கொடுத்து (மல்லையாவிற்கு கொடுத்து) சேர கூட்டம் வந்தாலும் வரும். என்ன மாதிரியான தொழில் அதிபரோ இவர்?

எந்த ஒரு நிறுவனமும் ஏதோ ஒருவரின் கனவினால் ஆரம்பிக்கப்படுகிறது. பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கில் ஆரம்பிக்கப்படும் வட்டிக்கடை வகையறாக்களை ஒதுக்கிவிடவேண்டும். பணம் வருகிறது என்றால் முதலீட்டாளர்கள் ****னம் செய்து பொருளீட்டும் தொழிலில்கூட முதலீடு செய்வார்கள்.  அவர்களின் நோக்கம் பணம் செய்வது. எப்படிப் பணம் செய்யப்படுகிறது என்பது அல்ல.  இந்த அறத்தின் நீள, அகலங்கள் ஊருக்கு ஊரு மாறுபடும்.  Las Vegas சூதாட்ட கிளப்பின் பங்கு, ஏதோ ஒரு மாமியின் போர்ட்போலியோவில் இருந்தாலும் மாமிக்கு பிரச்சனை இல்லை. அது கெளரவமான முதலீடு. ஆனால், கொண்டையம்பட்டியில் மூணுசீட்டில் வயித்துப்பிழைப்பை ஓட்டும் ரங்குவை, போலிஸ் நையப்புடைத்துவிடும்.

மிகவும் என்னை பாதித்த ஒரு செய்தி ட்வீட்டர் சம்பந்தமானது.  ட்வீட்டரில் செளதி இளவரசர் 300 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்துள்ளார். இத்தனைக்கும் அது இன்னும் பொதுச்சந்தைக்கு வரவில்லை. ட்வீட்டரின் ஆரம்பகால பங்குதாரர்களிடம் இருந்து இவருக்கு போய் உள்ளது.

Should Twitter fear Saudi prince?
http://www.cnn.com/2011/12/20/opinion/rushkoff-saudi-prince-twitter/index.html?hpt=hp_c3

இணைய உலகில் செளதியின் சென்சார் வேலைகள் உலகம் அறியும். சமீபத்தில் தமிழ்மணம் என்னும் திரட்டியையே சிலரால தடை செய்யமுடிந்தது. அதுதவிர, செளதியின் இறைக்கோட்பாடுகள், இறையச்சம் எல்லாம் உலகம் அறிந்ததே.
ட்வீட்டரில் மும்மது நபி பற்றி அவதூறு செய்து வந்தால், இளவரசர் என்ன செய்வார்?
ஒருவேளை அவருக்கு தெரியாமலேயே இருந்தாலும், மெக்கா புண்ணியபூமி இளவரசரின் பணம், அதே மெக்காவைத் தவறாகச் சொல்ல பயன்பட்டால், கடவுள் எப்படி எடுத்துக்கொள்வார்? 
 சமீப காலத்தில் நடந்த எகிப்து போராட்டங்களில் முக்கியப்பங்கு வகித்தது Twitter. இஸ்லாம் நாடுகளுக்கு எதிராக , இனிமேல் அப்படி ஒரு விசயம் Twitter ல் நடக்கப்போவது இல்லை. அப்படி நடந்தால் இளவரசர் என்ன செய்வார்?
பணமுதலைகளின் முடிவுகளுக்கு  முன்னால் சாதாரணப் பயனாளர்கள் ஒன்றும் செய்துவிடமுடியாது.  விக்கிலீக்கை முடக்க வைத்த அதிகாரமும், பணமும் அதிகார சாம்ராஜ்யங்களும், இணையத்தில் தகவல் பரப்பும் Blogger, Twitter , Facebook பேஸ்புக் போன்றவைகள் சிறைப்படுத்தினால் , சங்கெடுத்து முழங்குவதைத் தவிர வேறு வழியில்லை.

இவர் கூகிளில் இவர் முதலீடு செய்துள்ளாரா? ப்ளாக்கருக்கு ஆப்புவராமல் இருக்க வேண்டும்.

கேப்டன் கோபிநாத்தின் நிறுவனம் போல , ட்வீட்டரும் வருங்காலத்தில் ஊத்திக்கொள்ள‌ வாய்ப்பு உள்ளது.  Google Buzz போன நிலையில், Twitter ம் இப்படி அரசர்களின் கையில் போகும் நிலையில்,  இணையப் பொதுவெளி என்ற‌ சொல் அர்த்தமிழக்க வாய்ப்புள்ளது.

.

Wednesday, August 03, 2011

நீ என்ன ஒழுங்கா? மற்றும் எப்படி சகித்துக் கொள்கிறீர்கள் நீங்கள்?

டுத்தவர்கள்மீது விமர்சனம் வைக்கும் எவர்மீதும் வைக்கப்படும் கேள்வி இது. இதன் உள்ளார்ந்த அர்த்தம் "ஆமா நான் செய்தேன் (அல்லது செய்யவில்லை) கேள்வி கேட்கும் நீ செய்தாயா (அல்லது செய்யவில்லையா) ? என்பதே.  இந்தவகை உரையாடலில் கேள்விக்கான பதில் யாருக்கும் கிடைக்கப்போவது இல்லை. கேள்விக்கு அடுத்த ஒரு கேள்வியே பதிலாய் வரும். தமிழக அரசியல் சூழலில் இது மிகவும் சர்வசாதரணம். "அய்யா உங்க ஆட்சியில் பொதுமக்கள் டவுசர் ஏன் கிழியுது?" என்றால் அதற்கான பதில்:

கிழிந்திருந்தால்:
ஆம் என்று சொல்லி அதற்கான காரணத்தைச் சொல்லுதல் . "ஆம்,  அதற்குத்தான் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள்"  (அல்லது வேறு ஒரு காரணம்)

கிழியாவிட்டால்:
"இல்லை. எங்கே யாரைக் கிழித்தார்கள்?". என்று கேட்பது.

தமிழகத்தில் இது நடக்கவே நடக்காது. பதிலுக்கு ஒரு புது கேள்வி வரும். உதாரண‌த்திற்கு...

கேள்வி: "அய்யா உங்க ஆட்சியில் பொதுமக்கள் டவுசர் ஏன் கிழியுது?" அதற்கான பதில்: போன ஆட்சியில் ஜட்டிவர கிழித்தார்களே?

என்னமாதிரியான பதில் இது?  அமெரிக்க வெள்ளை மாளிகை பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடக்கும் கேள்வி பதிலில் அல்லது அமெரிக்க ஜனாதிபதியுடன் முக்கிய விசயங்களுக்காக நடக்கும் கேள்வி பதிலில் இந்தமாதிரி அபத்தமுறையில் பதிலுக்கு "இந்தாபிடி உனக்கொரு கேள்வி" என்று இருக்காது. ஆம்/  இல்லை என்று சொல்லிவிட்டு அதற்கான விளக்கம் இருக்கும். ஒற்றைவரியில் ஆம்/ இல்லை என்று பதில் சொல்லமுடியாத கேள்விகளுக்கு சற்று சுற்றி வளைத்த அதில் வரும். அவன் மட்டும் ஒழுங்கா? என்ற ரீதியில் பதில் இருக்காது.

என்ன சாபமோ தெரியவில்லை தமிழக‌ அரசியல் கட்சி தலைவர்களும் சரி தொண்டர்களும் சரி இப்படியேதான் இருக்கிறார்கள். நேர்ந்துவிடப்பட தொண்டர்களிடம் பேசவே பயமாய் இருக்கிறது. எந்த விமர்சனம் என்றாலும் "நீ ஒழுங்கா? அவன் ஒழுங்கா? அது ஒழுங்கா?" என்றே பதில் வரும்.

சரிதான் அய்யா. அந்தக் கட்சியும் ஒழுங்கில்லை. அல்லது எந்தக் கட்சியும் ஒழுங்கில்லை. பின்ன என்னதுக்கு நீங்கள் வேறு தனியாகக் கட்சி நடத்துகிறீர்கள்? எல்லாம் ஒன்றுதான் எதற்கு வேறு வேறு கட்சி?

"நீ என்ன ஒழுங்கா?" Chapter

ஒழுக்கம் என்பது ஏதோ உலகில் உள்ள எல்லா மக்களுக்கும் பொதுவான ஒரே ஒரு அர்த்தம் உள்ள ஒரே ஒரு அகராதி என்று நினைத்துக்கொண்டு கேட்கப்படுவது இது. முதலில் ஒழுக்கம் என்பது வீடு, தெரு, மாநிலம்,நாடு, கண்டம் , இனம்,மொழி ,பண்பாடு என்று பலவகைகள் கொண்ட ஒன்று. ஒரு இடத்தில் சரியெனப்படுவது மற்றொரு இடத்தில் தவறாக இருக்கும். எனவே இப்படி ஒரு ஓப்பன் சோர்ஸ் கேள்வியைக் கேட்கும்முன் , கேள்விக்கான சூழலை வரையறுத்துக் கேட்கப்படவேண்டும்.

உதாரண‌த்திற்கு சில.

1. பஸ்ஸில் பொம்பள பக்கத்தில் ஆம்பளை
 உட்காருவது சரியா?


மும்பையில் சரி ஆனால் உசிலப்பட்டியில் உசிலப்பட்டிபெண்குட்டி செருப்பால் அடிக்க வாய்ப்புள்ளது. எனவே இடம் பொருள் காலம் அனைத்துடனும் கேள்வி இருக்க வேண்டும்.

2. ஆபிஸ் வேலைக்கு டவுசரில் வரலாமா?

உசிலப்பட்டியில் உனது ஆபிஸ் வயக்காடு என்றால் வண்டிப்பட்டை அன்ட்ராய‌ரோடு என்ன கோவண‌த்துடன்கூட வரலாம். ஆனால் அதே உசிலப்பட்டியில் தாசில்தார் ஆபிசில் குமாஸ்தாகவாக இருந்தால் வண்டிப்பட்டை அன்ட்ராய‌ரோடு வேலை செய்ய முடியாது.

3. சித்தப்பா பொண்ணைக் கட்டிக்கலாமா? அக்கா பொண்ணைக் கட்டிக்கலாமா? (கட்டிக்கிற‌து = திருமணம்)
-ஒரு மதத்தில் சித்தப்பா பொண்ணைக் கட்டிக்கிற‌து சரி.
-வேறு மதத்தில் அக்கா பொண்ணைக் கட்டிகிறது சரி. இந்த மதத்திலேயே சில மாவட்டங்களில் ஒருசில இனக்குழுக்களில் அக்கா பெண்ணைக் கட்டுவது தவறு.

எனவே "நீ என்ன ஒழுங்கா" என்று கேட்கும்முன் நீங்கள் "இதுதான் ஒழுக்கம்" என்று நம்பும் உங்களின் விதிகளைச் சொல்லி, எங்கே அது கடைபிடிக்கப்படவேண்டும் என்றும் சொல்லி தெளிவாகக் கேள்வி எழுப்பினால் பதில் சொல்ல சுலபமாய் இருக்கும்.

அரசியல் கட்சி என்பது சில கொள்கைகளுக்காக இயங்கும் அமைப்பு. அதன் தொண்டர்கள் அந்தக்கொள்கையை ஏற்று , அந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் ஒரே நோக்கத்தோடு உழைப்பவர்கள்.

காங்கிரஸ் ,திமுக, அதிமுக, க‌ம்யூனிஸ்ட் etc.,  போன்ற‌ கட்சிகளில் சேர, தானாக விண்ணப்பம் வாங்கி, உறுப்பினர் கட்டணம் கொடுத்து, கட்சியின் கொள்கைகளுக்காக மட்டுமே உழைக்கும் தொண்டர்களிடமும் , அதன் தலைவர்களிடமும்  "உங்களின் கொள்கை என்ன?" என்று கேட்டு, அன்றாடப் பிரச்சனைகளில் அவர்களின் (கட்சிக்கொள்கையுடன் பொறுந்தும்) சார்புநிலை என்ன என்று கேட்டு தெளிவான பதில் கிடைத்துவிட்டால் பெரும்பாலான பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.





எப்படி சகித்துக் கொள்கிறீர்கள் நீங்கள்?
https://plus.google.com/102460823121199383626/posts/WJUEQydfe6j



சீட்டுக்காக மானம், மரியாதை, கொள்கை எல்லாவற்றையும் அடகுவைக்க வேண்டுமா என்ன?
http://kalvetu.blogspot.com/2011/03/blog-post.html

கட்சிக்கு நேர்ந்துவிடப்பட்ட மொக்கைகள்
http://kalvetu.blogspot.com/2010/11/blog-post_20.html

அரசியல் - கொள்கை மற்றும் இலக்கு மாறலாமா?
http://kalvetu.blogspot.com/2010/12/blog-post.html

ஏண்டா உனக்கு அறிவில்லையா? சொரணை இல்லையா?
http://kalvetu.blogspot.com/2011/01/blog-post_25.html

picture from:
http://www.negotiationlawblog.com/blawgs/guilty-of-betraying-niche-posting-politics-on-another-blog/

Friday, July 08, 2011

சமச்சீர் நோ நோ- நேக்கு வர்ணாசிரம பாணியில் உயர்வு தாழ்வு வேண்டும்.

 சமச்சீர் கல்வி என்றாலே என்ன என்று தெரியாமல் "அது நன்னா இல்லை, நேக்கு வர்ணாசிரம பாணியில் உயர்வு தாழ்வு வேண்டும்.

சம்ச்சீர் கல்வி என்றாலே என்ன என்று தெரியாமல் "அது நன்னா இல்லை, நேக்கு வர்ணாசிரம பாணியில் உயர்வு தாழ்வு வேண்டும். அப்பத்தான் சமூகம் நன்னா இருக்கும்" என்று பேசும் மக்கள் (மக்குகள்) புத்தகத்தைப் படித்து இருப்பார்களா?

வினவு தளத்தில் இருந்து இங்கு பகிரப்படுகிறது......

.....இந்த சமச்சீர் கல்வி எப்படி தயாரிக்கப்பட்டிருக்கிறது, அதில் என்ன இருக்கிறது என்பதே பலருக்கும் தெரியாது. இங்கு தோழர் இரணியன் சமச்சீர் கல்வி குறித்த பாடத்திட்டங்களை விரிவாக படித்து விட்டு தனது கருத்துக்களை இங்கே பகிர்ந்திருக்கிறார். 

மச்சீர்கல்வி பற்றிய விவாதங்களில் ஒன்றைக் கவனிக்க முடிந்தது. சமச்சீர் கல்வி வேண்டாம் எனச் சொன்னவர்கள் ‘சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்களின் தரம் குறைவானது’ எனச் சொன்னார்கள். குறைந்தது 10 பேராவது இதனை என்னிடம் சொல்லியுள்ளனர். அவர்களிடம் அந்த நூல்களை வாசித்தீர்களா எனக்கேட்டேன். ஒருவரும் இல்லை என்றார்கள். மேலும் தரம் குறைவானதென எல்லோரும் சொல்கின்றனர் என்பதால் அவர்களும் அவ்வாறு சொல்வதாக ஒப்புக் கொண்டனர். அப்படி என்றால் சமச்சீர் கல்விப்பாட நூல்களில் என்ன சொல்லப்பட்டுள்ளன என்பதை அறிவதுதான் முதன்மையானதெனக் கருதி அரசின் இணையதளத்தில் போய்ப் பார்த்தேன். அதிலிருந்து பாடநூல்கள் எடுக்கப்பட்டு விட்டன. கூகிளில் தேடி ஒரு தனிநபரது இணையதளத்தில் இருந்து 5,7,8,9,10 ஆம் வகுப்புகளுக்கான பாடநூல்களை மட்டுமே எடுத்துப் படிக்க முடிந்தது. அவற்றில் கணக்குப் பாடங்களைத் தவிர பிறநூல்கள் அனைத்தையும் வாசித்ததில் இருந்து சில அம்சங்களைச் சொல்லலாம் எனக் கருதுகிறேன்.
பாடத்திட்டங்களை அனைத்துத் தரப்பினரின் பங்கெடுப்போடுதான் நூல்களாக்கி உள்ளனர். மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியன்டல், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இணைந்துதான் நூல்களை உருவாக்கி உள்ளனர். பல நூல்களின் ஆசிரியர் குழுக்களில் தமிழகத்தின் சிறந்த கல்லூரிகளின் பேராசிரியர்களும் இடம்பெற்றுள்ளனர். 10 ஆம் வகுப்பு அறிவியல் நூலுக்கு தலைமை வகித்தவர் சென்னை ஐஐடி பேராசிரியர் ஆவார்.
பாடப்புத்தகங்கள் மனப்பாடம் செய்ய என இல்லாமல் சிந்திக்க, கலந்துரையாட, சுகமான வாசிப்புக்கு எனும் நோக்கில் வண்ணப்படங்கள், எளிய வரைபடங்கள் மூலம் அழகிய லே-அவுட்டில் அருமையாக இருந்தது.
பாட வாரியாக அவற்றில் நான் கண்ட நிறை குறைகளை இனி பார்ப்போம்.

மேலும் வாசிக்க கலந்துரையாட வினவு தளத்திற்கு......

மச்சீர்கல்வி பாடநூல்களின் தரம் – ஒரு ஆய்வு!
http://www.vinavu.com/2011/07/08/samacheer-kalvi-syllabus/


***********************************************


மிகவும் அருமையான பதிவு. வினவிற்கும் , தோழர் இரணியனுக்கும் நன்றி!

கலந்துரையாடல்களை ஒரே இடத்தில் நிகழ்த்த வேண்டும் என்ற நோக்குடன் , பிற தளத்தில் இருந்து பகிரப்பட்ட இந்தப் பதிவிற்கு மட்டும் பின்னூட்ட வசதி நீக்கப்படுகிறது. உங்களின் கருத்துகளை வினவு தளத்தில் பகிரலாம்.




**

Wednesday, June 22, 2011

ஏன் தமிழ்? யார் தமிழர்?

ஏன் தமிழ்? யார் தமிழர்?


மொழி என்பது ஒரு இனத்துக்கான அடையாளம். மேலும் மொழியானது,அந்த‌ இனம் அவர்களுக்காக சமைத்துக்கொண்ட முதல் ஊடகம்.  மொழி இல்லாமல் இனம் இல்லை. இனம் இல்லாமல் மொழி இல்லை. மொழி ஒரு இடத்தில் தோன்றினாலும், காலப்போக்கில் அது சார்ந்த‌ மனிதர்களுடன் அதுவும் பயணித்து, எல்லா இடங்களிலும் அவர்களுடன் சேர்ந்தே வாழும். அப்படி புலம் பெயர்ந்தவர்கள், அந்த மொழியைப் பேணாவிடில், மொழி அழிந்து போகும் என்பது வர‌லாற்று உண்மை. யுனஃச்கோ-வின் ஆராய்ச்சிப்படி, செத்துமடியும் மொழிகள் http://www.unesco.org/culture/languages-atlas/en/atlasmap.html

மொழி என்பது, தலைமுறைகளுக்கு இடையேயான‌ ஒரு வரலாற்றுத் தொடர்பு சாதனம். இனம் இனமாய் இருக்க,  மொழி முக்கியமான ஒன்று . அதே நேரத்தில் மொழி வாழ வேண்டும் என்றால், இனம் அதை தொடர்ச்சியாகப் பயன்படுத்த வேண்டும்.  மொழியும் இனமும் சேர்ந்தே இருக்கும். ஒன்று இல்லாமல் மற்ற ஒன்று இல்லை.

மிழ் மொழியானது , இந்தியாவில் பண்டைய தமிழகத்தைப் பிறப்பிடமாகக் கொண்டாலும், மணப்பெண் சீர்போல, தமிழர் குடும்பங்களுடன் பயணித்து, உலகில் எல்லா இடங்களிலும் நீக்கமற‌ நிறைந்துள்ளது. தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதென்பது, உலகின் எல்லா இடங்களிலும் கிளைபரப்பி வாழும் அனைத்து தமிழர்களுக்குமான ஒரு கடமை. இந்தக் கடமையை நாம் அனைவரும் உணர்ந்திருக்கிறோமா?

புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு இருக்கும் அடையாளக் குழப்பங்களில் முக்கியமானது "நான் தமிழரா?" என்பதே. புதுக்குடித்தனம் செய்ய ஆரம்பிக்கும் பெண் , தன் தாய்வீட்டில் இருந்து எடுத்துவரும் சீர்தனங்கள் போல, சாதி மத சம்பிரதாய கட்டுச் சோற்றை எங்கு போனாலும் எடுத்துவரும் நாம் , தமிழன் என்ற பெருமைமிகு அடையாளத்தை இயல்பாக மறந்துவிடுகிறோம். தமிழனாய் பிறப்பது என்பது ஒருவனின் தனிப்பட்ட முடிவு அல்ல. இன்றுவரை இயற்கையும் , அறிவியலும் அப்படி ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுக்கவில்லை. தமிழர் தம்பதிகளுக்குப் பிறக்கும் ஒரு குழந்தை, விரும்பியோ விரும்பாமலோ தமிழராகவே அடையாளம் காணப்படுகிறது . எனவே, ஒரு குழந்தை தமிழராய் பிறப்பதென்பது, அதன் முடிவு அல்ல. ஆனால், வளர்ந்து பதின்ம வயது வந்தவுடன் , தமிழராய் வாழும் முடிவு என்பது, தனிப்பட்ட மனிதனின் கையில்தான் உள்ளது. அப்படி ஒரு குழந்தை தமிழராய் வாழ முடிவு செய்தால், அப்படி வாழ்வதற்கு முக்கியமான கருவி "மொழி". அதைக் குழந்தைகளிடம் சேர்ப்பது பெற்றோர்களின் கடமை அல்லவா? அதற்கு நாம் என்ன செய்கிறோம்?

முதலில் பெற்றோர்கள் ஒவ்வொருவரும் "நாம் தமிழராய் வாழ்கிறோமா?" என்று அவரவர்கள் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி. அதைவிட முக்கியம் "ஏன் தமிழராய் வாழ வேண்டும்?" என்பதும், அப்படி முடிவு செய்துவிட்டபின்னர் "எப்படி தமிழராய் வாழ்வது?" என்பதும், தனக்குள் ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள். அதற்கான விடைகள் நம்மிடம் உள்ளதா? அல்லது குறைந்த பட்சம் இந்தக் கேள்விகளை நமக்குள் கேட்டுள்ளோமா? இன்னும் நம்மில் எத்தனைபேர்கள்  "மத" அடையாள‌ங்களையும் "தமிழ் இன" அடையாளத்தையும் பிரித்துப் பார்க்கத் தெரியாமல், சர்வஜித்து, சர்வதாரி, விரோதி, விக்ருதி - யார் குருதி போனால் எனக்கென்ன என்று, தமிழ் மொழிக்கு சம்பந்தமே இல்லாத  வார்த்தைகளில் வரும் ஆண்டுகளை, அறியாமையின் காரணமாக‌ தமிழாண்டாக எண்ணிக் கொண்டாடி வருகிறோம்? இது ந‌மது அறியாமை அல்லவா? அழகிய "தை"மகள் இருக்கும்போது எதற்கு வேற்றுமொழிக் குறியீடு?

தமிழ் என்ற இனமும் தமிழ் என்ற மொழியும் சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். தமிழ் என்ற அடையாளத்தை மட்டும் முன்னிருத்தி, மற்ற சாதி ,மத, ஈயம், பித்தளை அடையாளங்களை  முற்றிலும் துறந்து (அல்லது இரண்டாம் இடத்தில்  வைத்து விட்டு) தமிழுக்காக மட்டும் சங்கமிப்பது, இணைந்து செயல்படுவது என்பது இன்னும் நம்மில் சாத்தியமாகவில்லை என்பது கசப்பான உண்மை.  நமக்குள்தான் எத்தனை பிரிவுகள். Jallianwala Bagh - யும் Holocaust -யும் அறிந்து வைத்துள்ள நாம், இன்று நம் கண்முன்னால் முள்ளிவாய்க்காலை மையமாகக் கொண்டு நடந்தேறிய கொடூரங்களை எந்த அளவு அறிந்துள்ளோம்? எந்த அள‌வில் நாம் ந‌ம் இன வரலாற்றை நம் குழந்தைகளுக்கு சொல்லித் தருகிறோம்? வரும் காலங்களில் இது போன்ற சின்ன சின்ன வட்டங்களைத் துறந்து "தமிழ் இனம்" என்ற ஒரே பெரிய வட்டத்தில், வரும் தலைமுறையினராவது காலடி வைக்கவேண்டும். அதற்கு புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் குழந்தைகள் பாதை வகுப்பார்கள் என்று நம்புவோமாக. அதற்கான முக்கியக் கருவி மொழி. தமிழைக் கொண்டு சேர்ப்போம் குழந்தைகளிடம்.

தமிழனாய் பிழைத்திருப்பது (Survival) முக்கியமல்ல. தமிழனாய் உணர்வதும் (Feel) வாழ்வதும்  (Living) முக்கியம்.


 .

Monday, June 06, 2011

சாமியார்ப் பயல்களால் சமுதாய மாற்றம் வந்ததாய் வரலாறு இல்லை.


ந்தியாவில் 99 தே முக்கால் சதவீதம் மக்கள் ஏதோ ஒரு மதக் கம்பெனியில் உறுப்பினர்களாக உள்ளார்கள். அவர்கள் அந்த மதக் கம்பெனி சொல்லும் கடவுளை நம்புபவர்கள் அதன் வழி நடப்பதாய்ச் சொல்லிக் கொள்கிற‌வர்கள்.

இந்த 99 தே முக்கால் சதவீதம் மக்கள் லஞ்சம் வாங்காமலும் கொடுக்காமலும் இருந்தால் இந்த கறுப்புப்பணப் பிரச்சனையே வந்திருக்காது.

இலஞ்சம் மதக் கம்பெனிகளில் பக்தி என்ற பெயரில் ஆரம்பிக்கிறது.

"நான் ரொம்ப நல்லவன் , அதனால எனக்குச் சேரவேண்டிய நன்மைகளை (வரம் ???) நீயே வந்து நேரில் என் வீட்டில் கொடு"....... என்று கடவுளிடம்கூட நெஞ்சை நிமிர்த்தி நேர்மையாகப் பேச முடியாத காரணத்தினால்தான் உண்டியல், காணிக்கை, புனித பயணம் போன்ற லஞ்ச லாவண்யங்கள் மதக் கம்பெனிகளில் நடக்கிறது. அவரும் அச்வர்யாராய் வந்தால் சிறப்பு தரிசனம் கொடுக்கிறார்.
பாவம் பாபா .
ஏற்கனவே யோகாவால் நோய் குணமாகும் என்று ஜல்லியடித்து அன்புமணியால் அசிங்கப்பட்டவர் இன்று இப்படி. Ramadoss rubbishes yoga guru Ramdev's claims

உங்க கூட்டம் யோக்கியமாய் இருந்தாலே நாட்டில் பாதி இலஞ்ச லாவண்யம் குறையும் பாபா .

சின்னச் சின்ன செயல்கள் செய்யலாம். ட்ராபிக்கை மதித்தல். ரோட்டில் குப்பை போடாமை. சினிமாவிற்கு பிளாக்கில் டிக்கெட் வாங்காமை போன்றவை....

பாபா ராம்தேவின் உண்ணாவிரதம்: காமெடியா, அழுகாச்சி காவியமா?
http://www.vinavu.com/2011/06/06/ramdev-retches/
.
Thanks to http://freedigitalphotos.net
.

Friday, May 20, 2011

அணைத்தல் ஒரு அற்புதமான வெளிப்பாடு

ஏன் தமிழகத்தில் இல்லை?

தொடாமல் சொல்லும் வணக்கமே ஒரு தீண்டமையின் வெளிப்பாடு. :-(

.

Monday, April 11, 2011

பர்தா - பிரான்ஸ்

ர்தா என்பது மத அடையாளமன்று, மாறாக பெண் அடிமைத் தனத்தின் அடையாளம் - பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சார்கோஸி
http://thatstamil.oneindia.in/news/2011/04/11/france-bans-full-face-veil-aid0128.html


French senate approves burqa ban

http://articles.cnn.com/2010-09-14/world/france.burqa.ban_1_burqa-overt-religious-symbols-ban-last-year?_s=PM:WORLD




  • Burqas and Niqabs are banned in France due to reasons of national identity and equality of the sexes.
  • Hijabs (scarves around hair and neck) and chadors (dresses which cover the body but not the face) are still allowed.
"The ban does not target the wearing of a headscarf, head-gear, scarf or glasses, as long as the accessories do not prevent the person from being identified," state officials said.



இஸ்லாம் ஆண்கள் ஏன் அரேபியா பாணி ஆடைகளை தமிழகத்தில் அணிவது இல்லை?
http://kalvetu.blogspot.com/2010/01/blog-post.html


தமிழ்ப் பதிவர்களின் இஸ்லாம் விமர்சனம் ‍ - உங்களை நீங்களே சேதப்படுதிக் கொள்ளும் அபாயம் உள்ளது
http://kalvetu.blogspot.com/2010/07/blog-post_10.html



Saturday, April 02, 2011

எனது மக்களும் அவர்களின் வேலைக்காரரும்

னது மக்களும் அவர்களின் வேலைக்காரரும்


லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து! இப்படியும் ஒரு கலெக்டர்

இவர்களைப் பற்றி அதிகம் கவலைப்படும் மன்னர்கள்




http://www.youtube.com/watch?v=AyuTyX6GSvk

.

Friday, March 18, 2011

கம்யூனிஸ்டுகள் ஏன் விசயகாந்திடம் போய் நிற்கிறார்கள்? கொள்கை விளக்கம்

http://chodingworld.wordpress.com/2009/04/25/an-honest-beggar/

மா னம் மரியாதை கொள்கை கெட்டாலும் மக்கள்பணிக்கு குறைந்தபட்சம் 2 சீட்டுகளாவது வேண்டும்.அது இல்லாமல் மார்க்ஸ் எங்கெல்ஸ் வழியில் கட்சி நடத்தமுடியாது.

ஏற்கனவே "கம்யூனிஸ்டுகள் ஏன் ஜெயலலிதாவிடம் போய் நிற்கிறார்கள்?" என்று கொள்கைவிளக்கம் கொடுத்தாகிவிட்டது. இந்த நிலையில் இந்த அம்மா "சூ"  என்று விரட்டிவிட்டார். நல்லவேளை மனம் மாறிவிட்டார். இல்லை என்றால் ....

கம்யூனிஸ்டுகள் ஏன் விசயகாந்திடம் போய் நிற்கிறார்கள்?
கம்யூனிஸ்டுகள் ஏன் கார்த்திக்கிடம்  போய் நிற்கிறார்கள்?

என்று கொள்கைவிளக்கம் குறித்து எழுதிவைத்ததை வெளியிடவேண்டி வந்திருக்கும். வாழ்க அம்மா அல்லது அய்யா அல்லது கேப்டன் அல்லது சரத்குமார் அல்லது கார்த்திக்.

சீட்டுக்காக மானம், மரியாதை, கொள்கை எல்லாவற்றையும் அடகுவைக்க வேண்டுமா என்ன?
http://kalvetu.blogspot.com/2011/03/blog-post.html

கட்சிக்கு நேர்ந்துவிடப்பட்ட மொக்கைகள்
http://kalvetu.blogspot.com/2010/11/blog-post_20.html

அரசியல் - கொள்கை மற்றும் இலக்கு மாறலாமா?
http://kalvetu.blogspot.com/2010/12/blog-post.html

ஏண்டா உனக்கு அறிவில்லையா? சொரணை இல்லையா?
http://kalvetu.blogspot.com/2011/01/blog-post_25.html

கொத்துபரோட்டாவும் கம்யூனிச வியாதிகளும்
http://kalvetu.blogspot.com/2010/10/blog-post.html


.

Thursday, March 17, 2011

சீட்டுக்காக மானம், மரியாதை, கொள்கை எல்லாவற்றையும் அடகுவைக்க வேண்டுமா என்ன?

 http://all-free-download.com

கம்யூனிஸ்ட்:
எந்தக் கட்சிக்காவது காவடி எடுத்து சில சீட்களைப் பெறுவது மட்டுமே கொள்கையாக்கொண்டு வாழும் இந்தக் கேவலமான வாழ்க்கை தேவையா? கிடைக்கும் சில சீட்களுக்காக கொள்கை, மானம், என்று எல்லாத்தையும் அடகுவைத்து என்ன சாதிக்கப்போகிறீர்கள்? இதுதான் மார்க்சும் எங்கெல்சும் கற்றுக்கொடுத்த அரசியலா?

வெட்கெங்கெட்டவர்களே உங்கள் கட்சிகளின் பெயர்களில் இருந்து கம்யூனிசம் என்ற பெயரை எடுத்துவிடுங்கள்.

வைகோ:
இதெல்லாம் ஒரு பிழைப்பு? அரசியல் என்பது கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல் கொண்ட மக்கள் நலன் சார்ந்த அமைப்பு. மக்கள் நலன் சார்ந்த அரசியலில் தேர்தல் மற்றும் ஆட்சி என்பதும் ஒரு ஆயுதம். அது மட்டுமே ஆயுதம் அல்ல. கிடைக்கும் பத்து இருபது சீட்டுக்காக மானம், மரியாதை, கொள்கை எல்லாவற்றையும் அடகுவைக்க வேண்டுமா என்ன?

மாறி மாறி கூட்டுவைத்து என்ன சாதிக்கப்போகிறீர்கள்?

தோற்றாலும், மடிந்தாலும் வீரன் என்பவன் தான் நம்பிய கொள்கைக்காக போராடுபவனே தவிர, ஜெயிக்கும் குதிரையில் பணம்கட்டும் சீட்டாட்டக்காரன் அல்ல.

வைகோ – ஒரு அரசியல் அனாதையின் கதை!
http://www.vinavu.com/2011/03/16/vaiko-mdmk/

அதிமுக/திமுக:
யார் மத்தியில் ஆண்டாலும் அவர்களை மிரட்டி உங்களுக்குத் தேவையானதைப் பெறப்போகிறீர்கள். மக்கள் நலம் என்பது என்ன என்று உங்களிடம் பேசுவது வீண்.

காங்கிரஸ்:
?

மக்கள்ஸ்:
எது நடந்தாலும் தனக்கு நேரடிப் பாதிப்பு இல்லாதவரை ...இலஞ்சம், தேர்தலில் ஓட்டுக்கு காசு , போக்குவரத்து விதிகளை மதியாமை போன்ற குணக்குன்றுகளான உங்களுக்கு அந்த ரேஞ்சில்தான் தலைமைகிடைக்கும்.

மாற்றம் உங்களில் இருந்துவராதவரை அரசியல் கட்சிகளைக்குறை சொல்ல உரிமை இல்லை.

குறைந்த பட்சம் வார்டு, பஞ்சாயத்து அளவிலாவது ஒற்றுமையைக் காட்டுங்கள்.காசுக்கும் பிரியாணிக்கும் ஓட்டைவிற்கும் xxxகள் அரசில் கெட்டுவிட்டது என்று டீக்கடையில் உட்கார்ந்து பீலாவிடக்கூடாது.



.
கட்சிக்கு நேர்ந்துவிடப்பட்ட மொக்கைகள்
http://kalvetu.blogspot.com/2010/11/blog-post_20.html

அரசியல் - கொள்கை மற்றும் இலக்கு மாறலாமா?
http://kalvetu.blogspot.com/2010/12/blog-post.html

ஏண்டா உனக்கு அறிவில்லையா? சொரணை இல்லையா?
http://kalvetu.blogspot.com/2011/01/blog-post_25.html


Wednesday, February 02, 2011

தமிழர்களுக்காக வாழும் "சிறுத்தை திருமா" "கவிதாயினி கனிமொழி" #tnfisherman




http://www.youtube.com/watch?v=AyuTyX6GSvk

.

தமிழக கடலோர மீனவர் பிரச்சனை நிரந்தர தீர்வாக சில - கொக்கரக்கோ #tnfisherman

'மீனவ நண்பனாக' என்னென்ன செய்யலாம் - கருணாநிதி?
http://kokkarakko2011.blogspot.com/2011/01/blog-post_31.html


கனவாக இருந்தாலும் நல்ல தீர்வுகள். மேலும் எனது தரப்பாக சிலவற்றை பிரிதொரு நாளில் சேர்க்க எண்ணம்.

Friday, January 28, 2011

இந்த நாட்டில் மட்டும்தான் இது நடக்கும் #tnfisherman

ரானில் உளவு வேலை பார்த்ததாக அமெரிக்கர்களை ஈரான் கைது செய்து இன்றுவரை சிறையில் வைத்துள்ளது.American Hikers in Iran Accused of Espionage. ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இருக்கும் எதிர் நிலைகளில் ஈரான் நினைத்தால் அவர்களை உடனே சுட்டுக் கொன்று இருக்கலாம். ஆனால் அப்படிச் செய்ய முடியாது. எவ்வளவுதான் பிரச்சனைகள் இருந்தாலும், அமெரிக்கர் ஒருவரை மற்ற நாடுகள் கிள்ளுக்கீரையாக நடத்தவே முடியாது. அமெரிக்கா என்ற நாடு, அதன் மக்களுக்குத் தரும் அதிபட்ச காவல் இது. எங்கிருந்தாலும் 'அமெரிக்க சிட்டிசன்' என்றால் , அவர்கள் கொலைக்குற்றம் செய்து இருந்தாலும் கிள்ளுக்கீரையாக நடத்திவிடமுடியாது.

இந்தியா என்ற நாடு அதன் குடிமக்களுக்கு தரும் மரியாதை என்பது நாயைவிடக் கேவலமானது. பீபீ லுமாடா : இந்திய தூதரகத்தின் இரக்கமற்ற கொலை !!
//ஓமன் நாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்தவர் பீபீ லுமாடா , இவர் இந்தியாவுக்கு திரும்பும் வழியில் தோஹா விமானநிலையத்தின் தன் இந்தியப் பாஸ்போட்டைத் தொலைத்திருக்கிறார். இதனையடுத்து அப்பெண்ணை தோஹா விமான நிலைய அதிகாரிகள் அவரை இந்தியாவுக்கு செல்ல அனுமதிக்காமல் மஸ்கட்டுக்கே திருப்பி அனுப்பியிருந்தனர். கடவுச் சீட்டு இல்லாததனாலும், ஒமானுக்குள் மறுபடியும் நுழைவதற்கான விசா இல்லாததாலும் இவரை விமான நிலையத்தை விட்டு வெளியில் செல்ல அனுமதிக்காமல் மஸ்கட் விமான நிலையத்திலேயே வைத்து விட்டு மஸ்கட்டில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்தியத் தூதரகப் பணியாளர்களோ அப்பெண்ணை விரைவில் தொடர்பு கொள்வோம் என்று சொன்னதோடு சரி, வந்து பார்க்கவும் இல்லை ஏன் என்று கேட்கவும் இல்லை. ஐந்து நாட்களாக லுமாடா தங்கிவதற்கு அறையோ தனக்கு ஒத்துக் கொள்ளும் உணவோ இன்றி வாடிய நிலையில், அச்சம் அவரை துவட்டி எடுக்க ஆறாவது நாள் காலையில் உறங்கிய நிலையிலேயே லுமாடாவின் உயிர் பிரிந்திருந்தது. அதுவரை நேரில் வந்தோ அள் அனுப்பியோ அந்த பெண்ணின் உயிரைக் காப்பாற்றாத இந்திய தூதர் அனில் வாத்வா  ”பாஸ்போர்ட்டைத் தொலைத்திருந்த லுமாடாவுக்கு தற்காலிக பயண ஆவணங்களை தருவதற்குள்ளாக அவர் உயிரிழந்தது வருத்தம் அளிப்பதாக ” தெரிவித்திருக்கிறார். இப்போது லுமாடாவின் உடலை பத்திராமாக அவரது சொந்தங்களிடம் சேர்க்க முயர்சிக்கிறதாம் இந்தியாத் தூதரகம். ஆமாம் இந்த இந்தியா எப்போதும் ஏழைகளின் உடலை பத்திரமாக அனுப்புவதிலேயே குறியாக இருக்கும்.//
இந்தியா வல்லரசும் இல்லை நல்லரசும் இல்லை. ஒருவகையான கார்ப்பொரேட் கழிசடை அரசாகத்தான் உள்ளது. ஊழல் மலிந்த இந்த நாட்டில் ஒரு சாமான்யனின் உயிருக்கு மதிப்பே இல்லை. அம்பானி சாகோதரர்களின் சொத்துச் சண்டைக்கு கட்டப் பஞ்சாயத்துச் செய்ய பிரதமர் முதல் எல்லா அமைச்சர்களும் கரம் சிரம் பொத்தி காவல் செய்வார்கள். ஆனால் "லுமாடா" போன்ற பெண்களுக்கு ஒன்றும் நடக்காது. ஏன் இப்படி?

மன்மோகன் என்ற இப்போதைய பிரதமர் ஒரு குமாஸ்தாவாக இருக்க இலாயக்கு. அவர் ஒரு தேர்ந்த மக்கள் தலைவர் அல்ல. எந்தவிதமான‌ தொலைநோக்குப் பார்வையும் இல்லாத , சோனியா என்ற கோங்கிரஸ் கட்சித் தலைவரின் நலன்களுக்காக உழைக்கும் ஒருவர். இந்தியா இப்படி இருப்பது சாபக்கேடு. மும்பையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் "டாஜ்" ஓட்டலில் செத்தவர்களுக்கும் , இரயில் நிலையத்தில் செத்தவர்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. எல்லாம் உயிர்தான். ஆனால், அரசாங்கமும் ஊடக‌ங்களும் நடந்துகொண்டவிதம், பணம் இல்லாத பகட்டில்லாத பொதுசனம் செத்தால் என்ன , டாஜ்தான் முக்கியம் என்றே இருந்தது.

எல்லைப்புற மாநிலங்கள்

அருணாசலப்பிரதேசம் போன்ற தரைவழியில் அடுத்த நாட்டைத்தொடும் மாநிலமாகட்டும் , கடல்வழியில் இலங்கைக்கு அருகில் உள்ள தமிழ்நாடு போன்ற மாநிலமாகட்டும் மத்திய அரசிற்கு எந்தவிதமான தீர்க்கமான திட்டங்களும் இல்லை. சீனாவிற்கும் ,இலங்கைக்கும் சொம்பைத்தூக்க எப்போதும் தயாராகவே இருக்கிறது இந்தியா. ஒரு நல்ல அப்பா, அம்மா இல்லாத வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு எப்படி பாதுகாப்பு இல்லையோ, அதுபோல, நல்ல மத்திய மாநில அரசுகள் இல்லாத குடிமக்களுக்கு எந்தப்பாதுகாப்பும் இல்லை.

மீனவர் பிரச்சனை:

மீனவர்களுக்கு எல்லைக்கோடுபற்றிய புரிதல் இருக்க வேண்டும் என்று சொல்லும் கிந்து  Relations between India and Sri Lanka have never been better. போன்ற முட்டாள் நாளேடுகள் அடுத்த நாட்டிற்குப் போய்விடலாம். கிந்துக் கூட்டங்கள் இலங்கை அரசால் இலங்கா ரத்னா வாங்கியவர்கள் அவர்கள் குலைத்துத்தான் ஆக வேண்டும்.

தனது குடும்பம் மற்றும் அது சார்ந்த சுயநலங்களுக்காக மட்டும் ஆட்சி நடத்தும் தற்போதைய முதல்வருக்கு மக்கள் நலம் என்பது அவரின்குடும்ப நலன் மட்டுமே. பொது மக்கள் என்பவர்கள் அவர் பார்வையில் இலவச அடிமைகள். மக்களும் அப்படிதான் உள்ளார்கள். ஒரு முதலமைச்சரை மீறீ மத்திய அரசு நடக்கவே முடியாது. இவர் நினைத்தால் ஒரு மணிநேரத்தில் மத்திய அரசை மண்டியிடச் செய்யமுடியும். ஆனால் தனது குடும்பம் சிக்கியுள்ள பல பிரச்சனைகளுக்கு அடுத்த தேர்தலில் முதல்வராக இவர் வந்தே ஆகவேண்டிய சூழலில், காங்கிரசுக்கு அடிமையாய் இருக்க முடிவெடுத்து, மீனவரின் பிணங்களின்மீது தொகுதிப்பங்கீடு நடக்கிறது. எப்படி இப்படி? ஒரு தமிழ் உணர்வாளர் கடைசிக்காலத்தில் இப்படி மாறிப்போனார்?

http://tamilmakkalkural.blogspot.com/2010/08/karunanidhi-t-shirtiam-still-life-first.html


  
ஒரு மாநிலமாகச் செய்ய வேண்டியது.
தமிழகம் ஒரு காலத்தில் இன உணர்வுடன் இருந்திருந்தாலும், தற்போதைய தமிழகம் உணர்வற்ற கூட்டங்களால் நிரம்பி உள்ளது. காசுக்கும் பதவிக்கும் மட்டுமே வாழும் தலைவர்கள், இலவசங்களை மட்டுமே பார்த்து ஓட்டுப்போடும் மக்கள். இந்த மக்கள் எதற்காகாவும் கோபப்படுவது இல்லை. எல்லாவற்றையும் சினிமா,கிரிக்கெட் என்று தின்று செரித்துவிடுகிறார்கள்.
1. கச்சத்தீவை மீட்டேயாகவேண்டும்
2. சேதுதிட்டம் நடந்தேயாகவேண்டும்
3. தமிழகத்தில் இருந்து இலங்கைத்தூதரகம் மற்றம் இலங்கை சார்ந்த எந்த அமைப்புகளும் இருக்கக்கூடாது.
4. இலங்கையுடன் ராஜாங்க உறவுகளை முறித்துக்கொள்ள மத்திய அரசை வற்புறுத்த வேண்டும்.

மக்கள் செய்ய வேண்டியது:
1. தி.மு.க கட்சி மற்றும் அவர்கள் குடும்பம் சார்ந்த எல்லா வணிகப்பொருட்களையும் புறக்கணிக்க வேண்டும்.
2. இந்த தேர்தலில் நிச்சயம் தி.மு.க தோற்கடிக்கப்படவேண்டும்.
3. குறைந்தபட்சம் தொகுதியில் இருந்தே கட்சிசார்பர்று நல்லவர்களை தேர்ந்தெடுக்க முயற்சிக்க வேண்டும்.
4. கிரிக்கெட்டை முற்றிலுமாகப் புறக்கணியுங்கள். இலங்கை என்ற நாடு எதிர்ப்பைத் தாண்டி செய்ய வேண்டியது இது.ஒட்டுமொத்த இந்தியாவே இதற்கு கைதட்டுவதும் இவன்களைப் பார்ப்பதும்தான் தேசபக்தி என்ற அளவில் மந்தைக்கூட்டமாய் உள்ளது.
5. தமிழகம் தாண்டி , மற்ற மாநிலங்களின் பிரச்சனைகளை அறிந்து கொள்ளுங்கள். காஷ்மீர்,மணிப்பூர் கொடுமைகளுக்காகவும் குரல் கொடுங்கள். அப்போதுதான் மற்றவர்கள் உங்களுக்காக குரல் கொடுப்பார்கள்.
6.சினிமாவில் வெட்டி வசனம்பேசும் அட்டைக் கத்தி பயில்வான்களை , கூத்தாடி என்ற அளவிற்குமேல் பார்க்காதீர்கள்.
7. மீனவர் பிரச்சனைக்கு மீனவர் மட்டும் போராடுவது, விவசாயி பிரச்சனைக்கு விவசாயி மட்டும் போராடுவது, ஆசிரியர் பிரச்சனைக்கு ஆசிரியர் மட்டும் போராடுவது.... என்று இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் தோள்கொடுங்கள்.
8. சாதி, மத ,கட்சி வர்க்க பேதங்களைக் கலைந்து தமிழ் என்ற ஒரு இனமாக மட்டும் இருங்கள்.


http://www.savetnfisherman.org/

http://twitter.com/tnfishermen

http://www.facebook.com/pages/Save-Fishermen-from-Sri-Lankan-Navy/167109543335671

#TNFisherman ட்விட்டரில் ஒரு உணர்வுத்தீ
http://allinall2010.blogspot.com/2011/01/tnfisherman.html

Thursday, January 27, 2011

ஊரை ஏமாற்றும் சீமான், வைகோ, திருமா

நி ரூபிக்கப்பட்ட மற்ற தமிழனத்துரோகிகளை இங்கே நான் குறிப்பிடவிரும்பவில்லை. சீமான், வைகோ  மற்றும் திருமா ஆகியோரை இன்னும் சிலர் நம்புவதால் அவர்களை மட்டும் குறித்தானது.

திருமா:
இவரின் ஆரம்பகால அரசியல் என்பது சமூகப் பார்யைவோடுதான் , சமூக இனப் போராளியாக ஆரம்பித்தது.கடைசியில் கார்ப்பொரேட் அரசியல்வாதியாகிவிட்டார். இன்றுவரை இவர் தி.மு.க  , காங்கிரசுடன் மற்றும் இராஜபக்சேயுடனும் மாறி மாறி சிரித்து போஸ் கொடுக்கிறார்.  எப்படி ஒரே சமயத்தில் தமிழனுக்காக அழவும், மறுபுறம் தி.மு.க ,காங்கிரசுடன் மற்றும் இராஜபக்சேயுடனும் சேர்ந்து காவடி தூக்கவும் முடிகிறது?

வைகோ:
காமெடிக் கதம்பமாய் ஆகிப்போனவர். அ.தி.மு.க மற்றும் தி.மு.க வைவிடவா காங்கிரஸ் தமிழினத் துரோகம் செய்துவருகிறது?  இவருக்கு அ.தி.மு.க கூட்டணியில் ஒரு செல்வாக்கும் இல்லை. தி.மு.க வில் ஒன்றும் செய்ய முடியாது.

சீமான்:
அரசியலில் புதுக்குழந்தை. இவர் வேறு நாம் தமிழர் என்ற காமெடிக் கட்சியைத்துவக்கியுள்ளார். யார் யார் தமிழர் என்று சொல்லுங்கள் முதலில். இவர் காங்கிரசை எதிரி என்கிறார். அப்படி என்றால் அ.தி.மு.க மற்றும் தி.மு.க தமிழனுக்கு எதிரி இல்லையா?

சின்ன கதை:
தமிழகம் என்ற ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டிற்கு, மக்கள் என்பவர்கள் உரிமையாளர்கள். அந்த வீட்டைக் காவல் காக்க‌ கட்சி என்ற கூர்க் (Coorg) ஒருவரை காவலுக்கு வைக்கிறார்கள். மத்திய ஆட்சி என்ற பெரிய வலிமை , தமிழகம் என்ற வீட்டையும் அதன் நலன்களையும் நசுக்க வருகிறது.

கட்சி என்ற கூர்க் மனிதர் என்ன செய்யலாம்?
1. கட்சி என்ற கூர்க் மனிதர், மத்திய ஆட்சி என்ற பெரிய வலிமையை எதிர்த்துப் போராடி, மாண்டுவிடுவார். மத்திய ஆட்சி என்ற பெரிய வலிமை , தமிழகம் என்ற வீட்டையும் அதன் நலன்களையும் நசுக்கிவிடும்.

2. கட்சி என்ற கூர்க் மனிதர் மத்திய ஆட்சி என்ற பெரிய வலிமையை எதிர்த்துப் போராடி, பல காயங்களுடன் குற்றுயிராய்கிடக்க, மத்திய ஆட்சி என்ற பெரிய வலிமை , அவரைத் தாண்டி தமிழகம் என்ற வீட்டையும் அதன் நலன்களையும் நசுக்கிவிடும்.

3. கட்சி என்ற கூர்க் மனிதர் எதிர்த்துப் போராட முடியாமல் ஓடிவிடுவார். ஆளில்லாத வீட்டில் , மத்திய ஆட்சி என்ற பெரிய வலிமை வீட்டையும் அதன் நலன்களையும் நசுக்கிவிடும்.
இவைதான் ஒரு மனிதனாக கட்சி என்ற கூர்க் மனிதர் செய்ய முடிந்தது.
ஒன்று வீரனாக இருந்து மாண்டுபோகலாம் அல்லது கோழையாக இருந்து ஓடிவிடலாம்.

இன்னும் சிலவற்றைப் பார்ப்போம்
4. கட்சி என்ற கூர்க் மனிதர் , மத்திய ஆட்சி என்ற பெரிய வலிமை போடும் பிச்சைக்காசுக்காக தான் காவல் செய்ய வேண்டிய வீட்டையே காட்டிக்கொடுக்கலாம். காசுவாங்கிவிட்டதால் அல்லது தனக்கு சில ஆதாயம் கிடைப்பதால் மத்திய ஆட்சி என்ற பெரிய வலிமை செய்யும் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கலாம்.
இந்த 4 ஆவது அயோக்கியத்தனம், துரோகம், கேவலமானது. 
ரை ஏமாற்றும் சீமான், வைகோ, திருமா ஆகியோர் அயோக்கியத்தனம் செய்யும் காவலாளியுடன் கூட்டு வைத்துக் கொண்டே அதே சமயம், மத்திய ஆட்சி என்ற பெரிய வலிமையை மட்டும் குற்றம் சாட்டுவது,  மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா? உண்மையில் எதிரி யாரென்று தெரியவில்லையா அல்லது தவறான இலக்கை அடையாளம் கட்டுவதன்மூலம் கூட்டுக் கொள்ளை அடிக்கப் பார்க்கிறீர்களா?

உள்ளூர் கூர்க் காவலாளி , மத்திய வலிமையுடன் கூட்டணியில் உள்ளார். இன்னொருவர் எப்படா திண்ணை காலியாகும் என்று அதே மத்திய வலிமையுடன் கூட்டுச்சேர காத்துள்ளார்.  நீங்கள் எல்லாம் எப்படி சலிக்காமல் உள்ளூர் கூர்க் காவலாளியோடு கூட்டு வைத்துக்கொண்டு , வெட்கமே இல்லாமல் மத்திய வலிமைதான் கெட்டவர் அவரை எதிர்க்கிறோம் என்று ஏமாற்றுகிறீர்கள்? பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்ற நிலையில் எப்படி வெட்கம் சிறிதும் இல்லாமல் அரசியல் செய்கிறீர்கள்/ அல்லது இதுதான் நீங்கள் அறிந்த அரசியலா?

"தனியா நின்றால் மக்கள் ஓட்டுப்போடவில்லை"  என்று சொல்லும் நீங்கள், ஓட்டுப்போடும் அளவிற்கு என்ன செய்துள்ளீர்கள்? மக்கள் செல்வாக்கு உள்ளவன்தான் அவர்களின் வாக்கைக் கேட்டு தேர்தலில் நிற்கவேண்டும். தேர்தலில் நிற்பதாலேயே வாக்குப் போடவேண்டும் என்று கேட்க எந்த உரிமையும் இல்லை. அதற்கான தகுதியை முதலில் வளர்க்க வேண்டும்.

உள்ளூரில் யாரும் வெளிநாட்டுப் பிரச்சனைக்காக ஓட்டுப்போடுவது இல்லை. தமிழகத்தில் வெற்றிபெற, தமிழகத்திற்கான அஜெண்டா இருக்க வேண்டும். அதற்கான உழைப்பு இருக்க வேண்டும்.கம்யூனிஸ்டுகள் மற்றும் ம.க.இ.க வினர் செய்த மக்கள் போராட்டங்கள் அளவிற்குகூட வைகோ எந்தப் போராட்டங்களையும் நடத்தவில்லை. உத்தப்புரம் சுவர் பிரச்சனையை எடுத்துக் கொள்வோம். பெர்லின் சுவர்போல இந்தக்கொடுமை இன்று உலகம் முழுவதும் தெரிந்திருக்க வேண்டாமா? திருமா எந்தனைமுறை இதை பாராளுமன்றத்தில் பேசியுள்ளார்? உடைத்தெரியவேண்டாமா அந்தச்சுவரை? மக்களின் அன்றாட வாழ்வில் கலக்காமல் எப்படி அவர்களிடம் ஓட்டுக் கேட்கமுடியும்?  இராமாஸ்வர மீனவர்களின் பிரச்சனையையே தமிழர் பிரச்சனையாக சென்னையில் இருக்கும் கிண்டு என்ற பத்திரிக்கைகூட நினைக்கவில்லை.  இந்த வள்ளலில் எத்தனைகாலம் ஈழ அஜெண்டாவை வைத்துக் கொண்டு தமிழகத்தில் ஓட்டு கேட்கமுடியும்?

நீங்கள் இன்னும் 10 வருடங்களுக்கு தேர்தலில் வெற்றிபெறாவிட்டாலும் ஒன்றும் குடிமுழுகிவிடப்போவது இல்லை. ஆனால், அந்த 10 வருடங்களை உண்மையான மக்கள் பணியில் செலவழித்தால் நிச்சயம் மக்களே உங்களை சிம்மாசனத்தில் வைப்பார்கள். நீஙகள் அப்படிசெய்தும் மக்கள் ஓட்டுப்போடவில்லையா? அவர்களை பேய்கள் திங்கட்டும். அப்படி மக்கள் உங்களை சிம்மாசனத்தில் வைக்கும்போது , உலக நலன்களைப் பேசமுடியும். அதைவிட்டுவிட்டு ஏன் இப்படி தேர்தல் கூட்டணிக்காக அலைகிறீர்கள்?  இதில் என்ன சாதித்துவிட முடியும் என்று சொல்லுங்கள்?

அரசியல் என்பது தேர்தலில் நின்று ஓட்டுக் கேட்பது இல்லை. மக்கள் பணி செய்வதால் மக்கள் உங்களை தலைவராக ஏற்றுக் கொள்வது. உண்மையான மக்கள் பணி செய்வனுக்கு , தேர்தல் மூலம் வரும் அதிகாரம் ஒரு கூடுதல் கருவி தவிர அது மட்டுமே கருவி அல்ல.
.

காங்கிரசை ஒழிப்பதற்காக ஜெயலலிதாவை ஆதரிப்பது நியாயமா?- சீமானுக்கு கவிஞர் தாமரையின் பகிரங்கக் கடிதம்!
http://www.nerudal.com/nerudal.24944.html


.

Tuesday, January 25, 2011

ஏண்டா உனக்கு அறிவில்லையா? சொரணை இல்லையா?

நா னும் தமிழன் என்று சொல்லிக் கொள்வதால் இந்தக் கேள்வி என்னை நோக்கியே. ஏண்டா உனக்கு அறிவில்லையா? சொரணை இல்லையா?

தமிழன் போன்ற பிரிந்துகிடக்கும் சொரணையற்ற சமுதாயம் உலகில் எங்கும் இருக்க முடியாது. எந்தப் பிரச்சனைகளுக்கும் கோபம் கொள்ளத்தெரியாத சொரணையற்ற சமுதாயம். அன்றாட வாழ்விற்கு சில ரொட்டித்துண்டுகளும் , தனது சுயநலமும் நிறைவேறிவிட்டால் அவனவன் அவன் குடும்பம் தாண்டி தெருவரைகூட சிந்திக்கமாட்டான்.

சாதியாலும், மதத்தாலும் பொருளாதார வர்க்க பேதங்களாலும் ஒவ்வொருவனும் ஒரு தனி உலகம். அறிவு சீவி என்று தங்களைத் தாங்களே சொல்லிக்கொள்ளும் சும்பன்கள் எல்லாம் ஒரு தனி இரகம். இவர்கள் எதற்கும் கவலைப்படாமல் எல்லாப்பிரச்சனையையும் எப்படி கதையாக , கவிதையாக மாற்றிக் கல்லாக் கட்டலாம் என்று மட்டும் நினைக்கும் சாம்பிராணிகள் கூட்டம்.  சமூகம் சார்ந்த கோபம் இல்லை யாருக்கும்.

நீங்கள் உலகப்பிரச்சனைகளை எல்லாம் விட்டுவிடுங்கள். உங்கள் மாநிலத்தில் உங்களின் ஒருவனாக மீனவர்கள் தினந்தோறும் சாகிறார்கள். இது ஒரு கொந்தளிப்பாக வந்து இருக்க வேண்டாமா?

தொடரும் மீனவர்கள் படுகொலை
http://truetamilans.blogspot.com/2011/01/blog-post_25.html

கடற்புறத்தை எல்லையாகக் கொண்ட மாநிலத்தில் , மீனவ வாழ்க்கை இன்றியமையாதது. அதற்காக உங்களுக்கு எந்த சமூகக் கோபமும் இல்லையா?

எந்த அரசியல் கட்சிக்காவது அல்லது எந்த தமிழனுக்காவது இதில் என்ன மாற்றுக் கருத்து இருக்க முடியும்? ஏன் உங்களால் ஓரணியில் சேரமுடியவில்லை?

மீனவர்கள் பிரச்சனை, முல்லைப் பெரியாறு, காவிரி, மலம் திண்ணும் பிரச்சனை , தேர் இழுக்கும் பிரச்சனை என்று எதுவுமே யாரையுமே பாதிப்பது இல்லை. இந்த வள்ளலில் இவர்கள்தான் ஈழம் குறித்து கவலைப்படுவார்களாம்.
  • தான் வாழும் தெரு அளவில்..
  • ஊர் அளவில்..
  • மாநிலம் அளவில் தமிழனாக இணைந்து ஒரு பிரச்சனைக்காக குரல் கொடுக்க முடியாதவன் இதையெல்லேம் ஒன்று சேர்த்து ஈழம் வாங்க உதவி செய்யப்போகிறானாம். 
இவர்கள் எல்லாம் தமிழர்கள்தான். தினமும் கடலுகுச் செல்லும் மீனவனும் , கச்சேரிக்கு செல்லும் மைலாப்பூர் மாமிகளும், சினிமாத் தியேட்டரில் கூடும் கூட்டமும், என் போன்றவர்களும் டமிலர்கள்தான்.
    1.ம‌லையகத் தமிழன்
    2. யாழ்பாணத் தமிழன்
    3.கொழும்புத் தமிழன்
    4.இலங்கைவாழ் இஸ்லாமியத் தமிழன்
    5.கனடாத் தமிழன்
    6.மலேசியாத் தமிழன்
    7.மொரிசியஸ் தமிழன்
    8.மயிலாப்பூர் தமிழன்
    9.சிங்கப்பூர் தமிழன்
    10.உலகத் தமிழன்
    11.தலித் தமிழன் ,அய்யர் தமிழன் அய்யங்கார் தமிழன்
    இன்னும் நிறைய டமிலர் வெரைட்டி இருக்கு.  எந்த பொதுவான எதிரியை வைத்து அல்லது பொதுவான காரணத்தை வைத்து இவர்களை ஒன்று சேர்ப்பது?. சும்மா நாம் டமிலர் என்று சொன்னால் எவன் தமிழன் என்று கேள்வி வரத்தான் செய்யும்.

    இந்தக் கொடுமையைப் பாருங்கள். இது எல்லாம் டமில்நாட்டில் மட்டுமே நடக்கும்.
    //இந்திய அரசின் ராணுவத்துறை நடத்தும் சைனிக் பள்ளி திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி நகரில் உள்ளது. இந்த பள்ளியில் 2011ம் ஆண்டுக்கான நாட்காட்டி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டது.

    இந்த நாட்காட்டியில் இலங்கை அதிபர் ராஜபக்சேயின் படம் அச்சிடப்பட்டுள்ளது. அந்த படத்திற்கு தலைப்பாக ‘’எல்லாமே சாத்தியம்’’ என்று எழுதப்பட்டுள்ளது.//
    http://maniyinpakkam.blogspot.com/2011/01/blog-post_13.html

    லீனா மணிமேகலை என்பவர் தற்போது எடுத்துள்ள ஒரு சினிமா செங்கடல். http://www.sengadal.com/  தற்போது அது சென்சார் போர்டால் மறுக்கப்பட்டுள்ளது. அந்த சினிமாவை மக்கள் பார்வைக்கு கொண்டுவர சினிமாக்காரர்களான பாரதிராஜா அல்லது சீமான் அல்லது விஜயகாந்த் அல்லது தங்களை இன உணர்வாளர்களாக் காட்டிக்கொள்ளும் சினிமா மக்கள் என்ன செயல்திட்டம் வைத்துள்ளார்கள்?

    லீனாவின் ஈழம் குறித்த பார்வையும் மற்றவர்களின் பார்வையும் ஒன்றாக இல்லாவிட்டாலும் அவர் சொல்லவரும் கருத்தைப் பரப்பவாவது ஈழம் என்ற ஒற்றைக் குறிக்கோளில் நின்று செயல்திட்டம் வகுக்கவேண்டுமே? இவர்கள் ஏன் சிந்திப்பது இல்லை.

    தனக்குச் சாதகமான வியாபாரம் (அரசியல்,சினிமா, புத்தகம் )இல்லாவிட்டால் இவர்கள் ஒரே கருத்தில் இணையமாட்டார்கள்.
     


    தமிழகம் மாநிலமாக...
    கரையோர எல்லைபுற மாநிலமான தமிழகத்திற்கு, அதை ஒட்டியுள்ள இலங்கை என்னும் நாட்டின் தொடர்பான வெளியுறவுக் கொள்கைகளில் முக்கியப் பங்கு உள்ளது. இலங்கை குறித்த இந்திய மத்திய அரசின் எந்த முடிவுகளும் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் எடுக்கப்படக்கூடாது. சிறப்புச் சட்டம் தேவை. சேது திட்டம் தொடங்கி அன்றாட மீனவர் பிரச்சனைவரை சொம்புதூக்கிகளாகவே தமிழகம் உள்ளது.

    இதற்கு தமிழகத்தில் நல்ல அரசியல் தலைமை தேவை. ஏன் என்றால் கச்சத்தீவு போல அரசியல் ஒப்புதலுடனே தாரைவார்க்கும் அபாயமும் உள்ளது.

    தமிழ் ஒரு இனமாக...
    சாதி, மதம் தாண்டி தமிழன் ஒரு இனமாக் கூடி , மலையக மக்கள் தொடங்கி, மலேசியாத் தமிழர் தொட்டு , தமிழகத்தில் மலம் திண்ண வைக்கப்படும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் என்ன செய்யலாம் என்று ஒரு தீர்க்கமான அஜென்டா இருக்க வேண்டும்.


    வாய்ச் சொல் வீரர்கள்
    http://masivakumar.blogspot.com/2009/05/blog-post_21.html

    இயக்குநர் வைகோ. ஈழம் இனப்படுகொலை
    http://deviyar-illam.blogspot.com/2011/01/blog-post_23.html
    .

    தமிழன் என்ற ஒரு இனம் இல்லை. பல உட்பிரிவுகள் (பொருளாதாரம், சாதி, மத , வர்க்க உட்பிரிவுகள்) அவர்களுக்கான நலனுக்காக மட்டுமே இயங்குகின்றன.

     .
    வெட்கப்படுகிறேன் வருத்தப் படுகிறேன் என்று சொல்வதற்குக்கூட வெட்கப்படும் ஒருவன் நான்.

    Saturday, January 15, 2011

    சீமானின் சாகாத சாதிப் பற்று

    .தி.மு.க.வுக்கு ஆதரவு ஏன்? வியூகத்தை விளக்கும் சீமான்
    //காங்கிரஸை அழிப்பது என்பது தந்தை பெரியாரின் கனவு, அண்ணல் அம்பேத்கரின் கனவு, ஐயா முத்துராமலிங்கத் தேவரின் கனவு -சீமான்//
    http://www.tharavu.com/2011/01/blog-post_14.html

    "ஐயா முத்துராமலிங்கத் தேவர் பற்றி எனக்குத் தெரியாது அண்ணன்கள் சொல்லி பின்னால் தெரிந்துகொண்டேன்" என்று கொஞ்ச நாளைக்கு முன்னால் பல்டி அடித்த சீமான்,  மறுபடியும் சாதிப் பூனையை வெளியில் விட்டிருக்கிறார்.

    (1)பெரியார் , (2)அம்பேத்கார் வரிசையில் (3) அய்யா முத்துஇராமலிங்கத் தேவர்.

    அய்யா பசும்பொன் முத்துஇராமலிங்கத் தேவர் என்ன கனவு கண்டார்? என்று சீமானுக்குத் தெரிந்தால் அவரது கட்சிப் பக்கத்தில் http://www.naamtamilar.org போடலாம். நாமும் தெரிந்துகொள்ளலாம். தேசியமும் இந்துமத ஆன்மீகமும் இருகண்களாகக் கொண்டு வாழ்ந்த அய்யாவைப்பற்றி எழுதும் அசுரன்களை நாமும் கேள்வி கேட்கலாம்.

    எசமான் சீமான், சொல்லுங்க எசமான் சொல்லுங்க.

    கொறிக்க...

    சீமானிடம் இதையா எதிர்ப்பார்த்தோம்?
    http://periyaryouth.blogspot.com/2009/11/blog-post.html

    சீமான் தரப்பு ‘நியாயங்களும்’ ஜெயமோகனின் ‘சமூக ஆஆஆஆராய்ச்சியும்’
    http://sugunadiwakar.blogspot.com/2009/11/blog-post.html

    சீமான் உள்ளிட்ட ‘முற்போக்கு’ நரிகளின் தேவர் சாதிவெறி
    http://www.vinavu.com/2009/12/16/pseudo-secular-casteist-seeman/

    சீமான் என்ன செய்யவேண்டும்?
    http://thekkikattan.blogspot.com/2011/01/blog-post.html

    சீமான் தேறுவாரா? தடம் மாறுவாரா?
    http://deviyar-illam.blogspot.com/2010/12/blog-post_21.html

    ஓட்டுப் பொறுக்கியாகிறார் சீமான்!
    http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=1611

    TAG: இன்னும்மா வொலகம் நம்மளை நம்புது?‌

    .

    Tuesday, January 11, 2011

    "சைவம்" - என்பது மதம். அது "உணவுப் பழக்கம்" அல்ல‌

    கே ள்வியே கேட்காமல் திணிக்கப்பட்ட புத்தியில் மட்டும் உறைந்திருக்கும் நிலை மடச்சமாதி எனப்படும் நிலை. மடச்சமாதி மாக்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பிரச்சனை இல்லை. ஆனால் இந்த மடச்சாமாதி (சாம்பிராணிகள்) அறிவியல் பேசும்போதுதான், அவர்களின் மீது விமர்சனம் வருகிறது.

    அப்படிப்பட்ட  ஒன்று  "நான் சைவம். கறி திங்க மாட்டேன். காரணம் நான் உயிர்களைக் கொல்வது பாவம் என்று நினைப்பவன்" என்று சொல்லும் மொக்கைதனம்.

    சை வம் என்றால் என்ன‌?
    தமிழகத்தில் மற்றும் புலம்பெயர்ந்துவாழும் தமிழர்களில், சாதி,மதம் பாராமல் பலரும் பயன்படுத்தும் வார்த்தை சைவம். புலால் மறுக்கும்  ஒருவர், தனது உணவுப் பழக்கத்தை குறிக்க,  "சைவம்" என்றே அடையாளப்படுத்திக் கொள்கிறார். இது ஒருவகையில் துவைக்கப்பயன்படும் எல்லா  பிராண்ட் சோப்பையும் "ரின்" என்று அழைப்பது அல்லது காப்பி(Copy) மெசின் அனைத்தையும் ஜெராக்ஸ் என்று அழைப்பது போன்றது.

    சைவம் என்பது ஒரு மதம். மேலும் 'சைவம்' அதே சைவ மத‌த்தினரின் உணவு முறையும் அல்ல. குழப்பம் கரணம் கச்சாமி.

    அதாவது.....
    • சைவம் என்பது முதலில் ஒரு மதத்தின் பெயர்.
    • மேலும் அந்த சைவ மதத்தில் இருப்பவர்கள் புலால் உண்ணாதவர்களாகத்தான் இருக்கவேண்டும் என்ற சட்டம் ஏதும் இல்லை.
    ந்தியாவில் தோன்றிய மதங்களில் பெளத்தமும்,ஜெயின் வகையறாவும் புலால் மறுத்தலை கொள்கையாகக் கொண்டுள்ளது எனலாம். சைவம் , வைணவம் போன்ற சனாதன பார்ப்பனீய மதங்கள் சாப்பாட்டு விசயத்தில் புலால் மறுத்தலை மதக் கொள்கையாகக் கொள்ளவில்லை.  சைவக் கடவுள் சிவனே சுடுகாட்டு ஆண்டியாகவும், அவனது பக்தர்கள் வேட்டுவர்களாகவும் இருக்கையில், சைவம் மதம் புலால் மறுக்கிறது என்பதை ஏற்க முடியாது. சைவ மததின் கொள்கைகள் என்று இனிமேல் யாராவது எழுதினால்தான் உண்டு.

    எனவே புலால் மறுப்பவர்கள் தங்களை தாவர உண்ணியாகச் சொல்லலாமே தவிர, சம்பந்தமில்லாமல் சைவம் என்ற ஒரு சனாதனதர்ம வர்ணாசிரம மத‌த்தின் அடையாளத்தில் ஒதுங்க வேண்டியது இல்லை.

    கொல்லாமை மற்றும் புலால் மறுத்தல் பற்றிப் பேசிய நம்ம பெருசு ( பெருசு - அன்பால் சொல்வது) ஒரு இடத்தில்கூட சைவம் பற்றிச் சொல்லவில்லை. மழித்தலும் நீட்டலும் வேண்டாம் என்ற பெரிசு அவர் புக்கில் "சைவம்" என்ற மத‌த்தைப் பற்றிப் பேசி இருக்க மாட்டார் என்றே நம்புகிறேன். குறள் அறிந்த நண்பர்கள் சொல்லலாம்.

    அறத்துப்பால் - துறவறவியல் - புலான்மறுத்தல்
    http://www.thirukkural.com/2009/01/blog-post_9289.html

    அறத்துப்பால் - துறவறவியல் - கொல்லாமை
    http://www.thirukkural.com/2009/01/blog-post_4715.html

    சா தியும் புலால் மறுத்தலும்

    ருவன் எந்த சாதிக்கு நேர்ந்துவிடப்பட்டு இருந்தாலும், உணவுப்பழக்கத்தில் தாவர உண்ணியாகவோ அல்லது மாமிச உண்ணியாகவோ அல்லது இரண்டும் திங்கியாகவோ இருக்கலாம்.  அப்படி இருப்பதால் உங்களின் சனாதன வர்ணாசிரம பார்ப்பனீயக் கொள்கைக்கு எந்த பங்கமும் வராது.  வர்ணாசிரமக் கொள்கைப்படி உங்களுக்கு மேல் ஒரு சாதியையும், உங்களுக்கு கீழ் சில சாதிகளையும் வரித்துக் கொண்டு, அதன்படி வேறுபாடுகள் பாராட்டினாலே போதும்.  மற்றபடி புலால் மறுத்தல் என்பது சனாதன வருணதர்மக் கோட்பாடு அல்ல.  பிறப்பின் பெயரால் சாதி பார்த்து தீண்டாமையை கடைப்பிடிப்பது (கல்யாணத்தில் சாதி பார்ப்பது, அடுத்த சாதியில் குழந்தைகள மணமுடித்தால் அருவாள் தூக்குவது )  மற்றும் அது சார்ந்த அயோக்கியத்தனம் செய்தாலே போதும். நீங்கள் அக்மார்க் பார்ப்ஸ்

    புலால் மறுத்தலுக்கும் சாதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் சைவ அய்யர், அசைவ அய்யர், பீர் அடிக்கும் அய்யர், வோட்கா அடிக்கும் அய்யங்கார், சைவப் பிள்ளை, அசைவப் பிள்ளை , நரிப்பிள்ளை , கீரிப்பிள்ளை சாப்பிடும் அல்லது சாப்பிடாத பிள்ளை. காட்டு நாயக்கர் மற்றும் வேட்டுவ நாயக்கர், விரதத்தின் போது மட்டும்  "நோ கறி" நாயுடு....என்று சகட்டுமேனிக்கு சாதி + உணவுப்பழக்கத்தை வைத்து புதுச் சாதி வகையை ஏற்படுத்திக் கொண்டார்கள். அவர்களை மன்னிப்போமாக.

    யிர்க் கொல்லாமை மனிதனுக்கு சாத்தியமா?

    தற்கு முதலில், உயிர் என்றால் என்ன? என்று தெரியவேண்டும். அதுபோல உயிர்- ‍க்கும் உயிரி- க்கும் உள்ள வித்திசாயமும் தெரியவேண்டும். உயிர் என்றால் என்ன என்று தெரியமலேயே "உயிர்க்கொல்லாமை" தான் சைவம் என்று சந்தில் சிந்து பாடக்கூடாது.  அது தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதுடன் , அடுத்தவர் முன்னிலையில் உங்களை அசிங்கப்படுத்தும்.

    உயிர், உயிரி பற்றி அடிப்படையை அறிந்துகொள்ள உங்களுக்கான கையேடு.

    இறப்பு - உரையாடல் - I
    http://kaiyedu.blogspot.com/2008/02/i.html
    இறப்பு - உரையாடல் - II - உயிர்த் தோற்றம், செல்-அறிமுகம்
    http://kaiyedu.blogspot.com/2008/02/ii.html
    இறப்பு - உரையாடல் - III - நெக்ரோசிஸ் - சீரற்ற இறப்பு முறை
    http://kaiyedu.blogspot.com/2008/02/iii.html

    ஒரு உயிரியைக் கொன்றாலே அது உயிர்க்கொலை என்ற அளவில், மனிதன் என்ற சார்ந்து வாழும் ஒரு விலங்கினம் தனது வாழ்நாளில் உயிர்க்கொலை செய்யாமலேயே வாழமுடியுமா? என்றால் அது நிச்சயமாக இல்லை. 

    மனிதன் மற்ற உயிரிகளைச் சார்ந்தே வாழமுடியும். சார்ந்து என்றால் ஏதோ தோளில் சாய்ந்து கொண்டு அல்ல, சாப்பிட்டும் வாழும் நிலை. இதற்காக குற்ற உணர்வு தேவை இல்லை. நமது அமைப்பு அப்படி. வயிற்றிலும் மூக்கிலும் பேட்டரி போட்டுகொண்டு வாழமுடியாது. ஒருவேளை நாளை இது மாறலாம். அதுதான் அறிவியல்.

    உணவு என்பதே அடுத்த ஒரு உயிர் அல்லது உயிரி. உயிரற்ற ஒன்றை (பாறை, கல் , மண் )மனிதன் இதுவரை உணவாக உட்கொண்டதாக எனக்குத் தெரியவில்லை. உயிரிகளை வகை வகையாக சமைத்து நேரடியாக அல்லது மறைமுகமாகப் பயன்படுத்தி வருகிறான். எனவே தாவர உண்ணி என்பதும் உயிர்க்கொலைதான். தாவர உணவு எடுப்பவர்கள் " உயிர்க் கொலையா? நான் லேது "என்று சொல்ல முடியாது. வாங்க நீங்களும் உயிர்க்கொலையாளிகளின் பக்கம். எனவே தாவர உண்ணிகள் உயிர்க்கொலை செய்யாத புண்ணியாத்மாக்கள் என்று பிலிம் போட வேண்டாம். அது உயிர் என்றால் என்னவென்றே தெரியாத மடத்தனத்தால் வரும் பேதமை.

    ன் மனிதனின் உணவுப் பழக்கத்தில் இந்த வேறுபாடு?

    ஒருவர் எந்த உணவு வகைகளைச் சாப்பிடுகிறார் என்பது ,அவரின் உணவுப்பழக்கம்.  அதைத்தாண்டி அதில் பாவம் , புண்ணியம், மதம் சாதி என்ற எந்தக் கண்றாவிகளையும் அள்ளிதெளித்து "கொல்லாமை" என்ற "குழு அடையாளம்" காட்டுவது முதலுக்கு மோசம். நீ எந்த உயிரியையும் கொல்லாமல் வாழ நினைத்தால் நீ உன்னையே கொல்கிறாய் என்று அர்த்தம். கொல்லாமை கடைபிடிக்க நீ உயிரியாக இருக்க மாட்டாய்.

    மனிதனின் உணவுப் பழக்கம் என்பது அவன் இருக்கும் சூழல் சார்ந்தது.

    இதற்கு பண்டைக்கால தமிழனின் வாழ்க்கை முறையை வகைப்படுத்தும் குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை போன்ற குறிப்புகளில் காணப்படும் , அவர்களின் உணவு முறையே சான்று.  எந்தக் காலத்திலும் மீன் தின்னும் ஒருவனை இழிவாகச் சொல்லவில்லை இந்தத்திணை. அது அவன் மண் சார்ந்த உணவுப்பழக்கம் அதைப் போற்ற வேண்டும். கள்ளுண்ணுவது, வாளைமீன் , விரால் மீன், தேன் , திணைமாவு, வேட்டையாடுதல் என்று அதகளப்படுத்தி இருக்கிறார்கள். இந்த 5 திணைகளில் எல்லாம் உழைக்கும் மக்களே காட்சிப்படுத்தப்பட்டு அவர்களுக்கான உணவு முறை இருக்கும். மணியாட்டும் நவீன பார்ப்பனீயக் கருத்தான சைவம் என்ற உணவுப் பழக்கத்தை குறிக்கும் வார்த்தை இருந்ததாக யாராவது சுட்டிக் காட்டினால் உதவியாய் இருக்கும்.

    சங்ககாலத்து உணவும் உடையும்.
    http://www.varalaaru.com/Default.asp?articleid=525

    ண்ட மாற்றும் , பயண வசதியும் ஏற்பட்ட பின்னர்தான் அனைவரும் அனைத்து உணவு வகைகளையும் சாப்பிடும் வாய்ப்பு ஏற்பட்டது. அதுவரை அந்த  அந்த மண்ணின் மைந்தர்க்கு அந்த மண்ணில் கிடைக்கும் உயிர்களே உணவு. கடலின் அருகே வாழ்பவனுக்கு மீன்தான் பிரதான உணவு. அவனின் மீன் உணவு, குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்களின் உணவைவிட எந்தவிதத்திலும் தாழ்ந்தது கிடையாது. அப்படி யாரும் சொன்னதும் இல்லை. இந்தக் கால பார்ப்பனீய சைவக் குஞ்சுகள், மீன் சாப்பிடுவதை மகா கேவலமாகப் பார்க்கிறதுகள்.

    எல்லாம் மனிதன் வாழும் சூழல் சார்ந்த ஒன்று. எல்லா வாய்ப்புகளும் இருக்கும் போது , தெரிந்தெடுக்க முடியும். வாய்ப்பே இல்லாத சூழலில், இருப்பதைத்தான் திங்க வேண்டும். அதுதான் இயற்கை. இயற்கையின் பங்கை பயணமும் பண்ட மாற்றும் மாற்றியிருக்கிறது என்பது உண்மை.

    உணவு என்பதே உயிர்க்கொலைதான். அதில் எந்த தாழ்ச்சியும் உயர்ச்சியும் இல்லை.

    இன்னமும் பல மொக்கைகள் "நான் உயிர் கொல்லாமை கடைபிடிக்கும் டவுசர், உயிர்களுக்கு தீங்கு விளைவிக்க விரும்பவில்லை. அதனால்  என்று சைவ உணவு மட்டுமே உட்கொள்ளுகிறேன்" என்று கூறினால்......

    1.கொல்லப்பட்ட விலங்குகளின் தோலால் ஆன பெல்ட் , பர்ஸ், சூ ... என்று ஏதேனும் உபயோகித்தாலும் நீங்கள் விலங்குகள் தோலைப் பயன்படுத்துவது மற்றும்  சார்ந்த அது கொலையையும், கொலை சார்ந்த வணிகத்தையும் ஊக்கிவிக்கும் செயல்.

    2. மூச்சு விட்டாலும், தயிர் சாப்பிட்டாலும், பிரட், பன் சாப்பிட்டாலும் உயிர்க்கொலையே .எத்தனையோ பாக்டீரியாக்கள் காற்றில் இருந்து உடலுக்கு வருகிறது. தயிரில் பாக்டீடிரியா உள்ளது. பிரட், பன், பிச்சா, இட்லி ,தோசை என்று எல்லாவற்றிலும் நொதித்தல் உண்டு. அவை எல்லாம் உயிரிகளின் செயலே(ஈஸ்ட்).  சில டவுசர்பத்ரிக்கள் , நடு ரோட்டு நாராயண சாஸ்திரிகளும் (எத்தனை காலம் டவுசர்பாண்டி என்றே சொல்வது) முட்டை இல்லா கேக் மட்டும் சாப்பிடுவார்கள். பன் தலையர்களே பன்னிலும் பிச்சா மாவிலும் இட்லி ,தோசையிலும்  கூட நொதித்தல் உண்டே? என்ன செய்யலாம்?

    3. ல அய்யர் மற்றும் அய்யங்கார் ஆத்து ஆண்/பெண் என்று எல்லா சகல குஞ்சு குளுமான்களும் பட்டுச்சேலை அல்லது அங்க வஸ்திரம் (??) போட்டு "சுத்த அக்மார்க் உயிர்க்கொலை நோ" கமிட்டியாக வலம் வருவார்கள். அவர்களின் கோமணம் &  வஸ்திரங்கள் பட்டுப்புழுக்களை கொன்று வந்தவை என்று மனதால் நினைக்கக்கூட அஞ்சுவார்கள்.

    4. தைவிட காமெடி இந்த "சுத்த அக்மார்க் உயிர்க்கொலை நோ" கமிட்டி பெண்கள் அணியும் முத்தால் ஆன ஆபரணங்கள். சிப்பி என்பது உயிரற்ற வஸ்து இல்லை. அது ஒரு உயிரி அதைக் கொன்று பகட்டாக அணிகலன் செய்து போட்டுக் கொள்வார்கள்.

    5. காலையில் நெய் இட்லியும் , மத்தியானம் நெய் சாம்பாரும் சாப்பிட்டுவிட்டு "சுத்த அக்மார்க் உயிர்க்கொலை நோ" கமிட்டி மக்கள் சபாக்களில் , மாட்டுத் தோல் அல்லது ஏதோ ஒரு விலங்கினைக் கொன்று , பக்குவப்படுத்தப்பட்ட தோலால் ஆன மிருதங்கத்தின் வாரை , இழுத்துக் கட்டிக் கொண்டு, அவா அவா சபா சாபாவாப் பாடுவா. ஆனால், அந்த தோல் எப்படி வந்தது என்று , அதே தோலின் வாரை இழுத்துக் கட்டும்போதுகூட யோசிக்க மாட்டா. என்ன கொடுமை இது "சுத்த அக்மார்க் உயிர்க்கொலை நோ" கமிட்டி?

    6. "சுத்த அக்மார்க் உயிர்க்கொலை நோ" கமிட்டியில் உள்ள மக்கள் அனைவரும் , அவர்கள் வீட்டில் வரும் கொசு , மூட்டைப் பூச்சி, பூரன், பூச்சி வகைகளைக் கொல்லமாட்டார்கள். மிருகக்காட்சி சாலைக்கு போன் பண்ணி கொசுவை பத்திரமாக அனுப்பி வைப்பார்கள்.

    என்ன மாதிரியான உயிர் கொல்லாமை இவர்கள் கடைபிடிப்பது?

    சிப்பியைக் கொன்று அதில் செய்த முத்துக்களையும், பட்டுப்புழுக்களைக் கொன்று அதில் செய்த பட்டையும் அணிந்து கொண்டு, மாட்டின் தோலால் செய்யப்பட்ட மிருதங்கத்தில் இசை கேட்டுக் கொண்டிருக்கும் திருப்பதி வெங்கடவா போன்ற சாமிகளுக்கே வெளிச்சம்.

    கொசுறு

    கரிகரன் ஐயா, நீங்க சொல்லுவது தான் சரி
    http://tbcd-tbcd.blogspot.com/2008/02/blog-post_19.html

    என்னத்தைச் சொல்ல 4 - 1 - 2011
    http://tbcd-tbcd.blogspot.com/2011/01/4-1-2011.html


    Picture courtesy :  http://en.wikipedia.org

    Friday, December 31, 2010

    அரசியல் - கொள்கை மற்றும் இலக்கு மாறலாமா?

    சமரசங்களற்ற வாழ்வு சாத்தியமா? பகுதி-2

    சென்றபதிவில் அரசியல் கட்சிகளின் இலக்கு (நோக்கம்) , கொள்கை மற்றும் அதை அடையும் வழிகள் பற்றிப் பார்த்தோம். ஒரு இயக்கம் தீர்க்கமான இலக்கையும், அதை அடையும் வழியாக சில கொள்கைகளையும் தீர்மானித்து, அதை பொதுவில் வெளியிட்டுவிடுகிறது என்று கொள்வோம். அதில் இணையும் ஒவ்வொரு தொண்டரும், இயக்கத்தின் கொள்கைகளைப் பார்த்து, இயக்கம் சென்றடையும் இலக்கைச் சரிபார்த்து, அது தங்களின் தனிப்பட்ட கொள்கை, இலக்கு , விருப்பு வெறுப்புகளுக்கு இயைந்து வரும் பட்சத்தில் மட்டுமே அதில் இணைகிறார்கள் என்று கொள்வோம்.


    சில காலம் கழித்து இயக்கம் நிர்ணயத்த இலக்கை, ஏற்றுக்கொண்ட கொள்கையின் (அடையும் வழி) மூலம் சென்று அடையமுடியவில்லை என்று கொள்வோம். இப்போது என்ன செய்யலாம்?


     
    1. இலக்கை அப்படியே வைத்துக் கொண்டு அதை அடையும் வழியை(கொள்கை) மாற்ற‌லாம்.
    2. இயக்கத்தின் கொள்கையை அப்படியே வைத்துக் கொண்டு இலக்கை மாற்றலாம்.
    3. அல்லது கொள்கை மற்றும் இலக்கு இரண்டையுமே மாற்றலாம்.
    இதில் 1 தேர்ந்தெடுத்தால் அது சமரசம்.  2 மற்றும் மூன்றாவதைத் தேர்ந்தெடுத்தால் அது சமரசம் அல்ல அது முற்றிலும் புதிய இயக்கம். இதற்கு இலக்கும் கொள்கையும் புதியதாக நிர்ணயிக்கப்படவேண்டும். சமரசம் என்பதை  மட்டும் இங்கே பார்ப்போம்.

    கொள்கையில் சமரசம்

    இலக்கு மாறவில்லை ஆனால் அதை அடையும் வழிகளில் மாற்றம் செய்து கொள்வது சமரசம். என்னளவில் சமரசங்கள் செய்வது தவறு அல்ல. ஆனால் எந்த மாதிரி சமரசங்கள் செய்கிறோம் அல்லது யாருக்காக (எதன் பொருட்டு) சமரசம் செய்கிறோம் என்பதில்தான் சூட்சுமம் உள்ளது. அரசியல்வாதிகள் குடும்ப‌ சொத்து மற்றும் கழக கண்மனிகளின் காண்ட்ராக்ட் கொள்ளை போன்ற சுயநலக் காரணங்களுக்காக மட்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டு அவர்களின் இயக்கத்தின் கொள்கை இலக்கு (உதாரணம் ஈழம், காவிரி, முல்லைப்பெரியார், சேது சமுத்திரம்) போன்றவற்றில் தினம் ஒரு நிலை எடுப்பது அல்லது சும்மா இருப்பது அதாவது நாடக‌ம் போடுவது சுயநலம் சார்ந்த சமரசம். 

    இது கேவலமான செயல். அதாவது கட்சி,இலக்கு, கொள்கை எல்லாவற்றையும் தனக்காக வளைத்துக்கொள்வது. இது போன்ற செயல்களை கட்சியின் தலைமை செய்யும்போதே கட்சித் தலைமையின் நோக்கம் அனைவருக்கும் தெரிந்துவிடுகிறது. தலைமையை ஒன்றும் செய்ய முடியாது. ஏன் என்றால் அவர்கள் தெளிவான சுயநலப் போக்கை எடுத்துவிட்டார்கள். அதன் உண்மையான தொண்டன் தான் இந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதே சிந்திக்க வேண்டிய பிரச்சனை.

    தான் ஏற்றுக் கொண்ட கொள்கைகள் இலக்கு போன்றவற்றில் இயக்கம் சீராக பயணிக்காத போது அதன் தொண்டன் என்ன செய்ய வேண்டும்?
    • தலைமையைக் கேள்வி கேட்க வேண்டும்.
    • இயக்கத்தில் எந்த ஒரு தொண்டனும் கேள்வி கேட்டு , அதற்கான பதிலைப் பெற ஒரு அங்கீகரிக்கப்பட்ட நடைமுறை இருக்க வேண்டும்.
    • தலைமை, கட்டாயப் பதில் அனுப்ப ஒரு காலக்கெடு இருக்க வேண்டும்.
    • தலைமை அனுப்பும் பதில் தனக்கு ஒத்து வருகிறது என்றால், தொண்டனும் தலைமையின் வழியில் சமாதன சமரசங்களை ஏற்றுக் கொள்ளலாம். அது அவனின் தனிப்பட்ட உரிமை.
    • அப்படிக் கேள்வி கேட்டு , அந்தப்பதில் தனது தனிப்பட்ட எண்ணங்கள் , கொள்கைகளுக்கு ஒத்துவராதபோது இயக்கத்தைவிட்டு வெளியேறுவதே சூடுசொரணை, தன்மானம் உள்ளவன் செய்யும் செயல்.
    • தனக்கு ஒத்துவராத செயல்களில் இயக்கம் ஈடுபடும்போது, தொண்டன் கேள்வி எழுப்ப வேண்டும். இயக்கத் தலைமை கொடுக்கும் பதில் தனக்கு ஏற்புடையதாக இல்லாத போது இயக்கத்தை விடுவதே நல்லது.

    அரசியல் கட்சிகளின் தேர்தல்கால கூட்டணிகள்

    தேர்தல்காலக் கூட்டணி என்பது "ஏற்றுக்கொள்ளப்பட்ட கூட்டணி செயல்பாடுகளின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சேர்ந்து இருக்கும் ஒரு ஒப்பந்தம்". இந்த ஒப்பந்தம் கட்சியின் இலக்கை மாற்றுவதாக இருக்கக்கூடாது. ஆனால் இலக்கை அடையும் நடைமுறையில் உள்ள சிக்கல்களை போக்கிக்கொள்ளும் விதமாக, கொள்கையில் தற்காலிகச் சமரசமாக இருக்ககலாம்.

    உதாரணத்திற்கு ஒரு இயக்கம் ஈழம், காவிரி, முல்லைப் பெரியார், சேது பிரச்சனைகளில் ஒரு தெளிவான நிலையை எடுத்து அதை அறிவித்து ,அதற்காக அதாவது அந்த தெளிவான அறிவிக்கப்பட்ட இலக்கை அடைய வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக அரசியல் கூட்டணிகளில் சமரசம் செய்துகொள்வது (சொந்த வாழ்வில் கேவலப்பட்டாவது பொது நலன்சார்ந்த இலக்கை அடைவது) பொதுநலன் சார்ந்த சமரசம். இதை வரவேற்கலாம்.

    ஓட்டரசியலில் இது தவிர்க்க முடியாதது. :-((  பெரும்பான்மை இல்லாத போது எடுத்துக்கொண்ட பொது நலன்களுக்காக, அரசியலில் தேர்தல் நேர கூட்டணிகளின் அடைப்படை இதுதான். அல்லது இப்படித்தான் அரசியல் தேர்தல்கால கூட்டணிகள் இருக்க வேண்டும்.

    தேர்தல்காலக்கூட்டணிகள் , கொள்கை அல்லது இலக்கில் ஒட்டுமொத்த சமரசம் அல்ல. இடைக்கால குறுக்குவழி.

    அதாவது இலக்கை அடைய, கொள்கையில் வளைந்து கொடுப்பது. ஆனால் ஸ்பெக்டரம் ஊழல்போல ஊழல் இலக்கை அடைய தேர்தல் கூட்டணி அமைத்து ,துறை தேர்ந்தெடுத்து, கூட்டுக்கொள்ளை அடித்து மாட்டிக் கொண்டபின்பும்,  இந்தக் அரசியல் கட்சித் தொண்டர்கள் "அவன் செய்யவில்லையா ? அவன் மட்டும் ஒழுங்கா?" என்று எதிராட்டம் ஆடிக் கொண்டிருப்பது "கூமுட்டைகள் மட்டுமே அரசியல் கட்சியில் தொண்டனாக இருக்க முடியும்" என்பதையே நிரூபிக்கிறார்கள்.

     அல்லது தலைமையின் வழியில் இலக்கு கொள்கைகளை கழற்றிவிட்டு சுயநலவாதிகளாக அம்மணமாக இருக்க தொண்டர்களும் தயங்கவில்லை என்றே எடுத்துக் கொள்ளலாம். கட்சியில் சேர்ந்துவிட்ட கொடுமைக்காக கட்சித் தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு ஆட்டு மந்தைபோல கட்டுப்படுபவன் சுயசிந்தனை உள்ளவன் கிடையாது.

    பொதுவாக அரசியல் கட்சி ஆட்டுமந்தைகளிடமும், மதவாதக் கும்பல்களுடனும் உரையாடல் நிகழ்த்தவே முடியாது. இவர்கள் மூளையை அடகு வைத்தவர்கள்.  சுயமாகப் பேசவோ அல்லது தான் ஏற்றுக்கொண்ட தலைமை,கொள்கையை பொதுவில் விமர்சிக்கவோ திராணியற்றவர்கள்.

    உதாரணத்திற்கு எனது அனுபவம்

    ஒருமுறை தமிழ்ச்செல்வன் என்ற பதிவரிடம் (http://satamilselvan.blogspot.com) வரதராஜன் என்பவரின் தனிப்பட்ட பாலியல் சார்ந்த குற்றச்சாட்டுகளை கட்சி ரீதியாக விசாரித்தது சம்பந்தமான கேள்விகளைக் கேட்டேன் (http://satamilselvan.blogspot.com/2010/03/2.html) அவர் எதற்கும் பதில் சொல்லாமல் பின்னூட்டங்களை குப்பையில் போட்டுவிட்டார். பதில் சொவது அவரது உரிமை என்றால்கூட , கட்டற்ற சுதந்திரமும் மாற்றுக்கருத்துகளும் புழங்கும் இணைய வெளியில் , மாற்றுக் கேள்விகளை வெளியிடக்கூட தயங்கும் இவரை பதிவராகக்கூட என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை  . :-((  

    கட்சித் தொண்டராக இருப்பது அவர் நேர்ந்துகொண்டது மேலும் ரின் சுய தேர்வு

    இந்த போலிச்சமூகத்தில் ஒரு ஆண் அல்லது பெண் மீது சொல்லப்படும் பாலியல் குற்றச்சாட்டு மிகவும் தாக்கங்கள் கொண்டது. "அழகி" கைது என்று சொல்வதும் ரஞ்சிதாவா என்று கேட்கப்படுவதிலும் அதிக ஆர்வமுள்ள சமுதாயம். இப்படிப்பட்ட ஒரு சமூகத்தில் வரதராஜன் போன்றோரின் பாலியல் சம்பந்தமான விசயங்களை குடும்பமும் அவரும் மனநலம்/குடும்பநலம் சம்பந்த துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களின் உதவியை நாடாமல் கட்சி கட்டப்பஞ்சாயத்து செய்ததை இன்னும் கண்டிக்காதவர்கள்தான்  இவர் போன்றவர்கள்.(தற்கொலையில் முடிந்த துயரச் சம்பவம்.)

    இவர்கள் சொல்லும் காரணம் "ஒரு அமைப்பில் இருக்கும் போது (இருப்பது வரை) அதன் கட்டுப்பாடுகளுக்கு அடங்கி இருக்கத்தானே வேண்டியிருக்கிறது. வெளியில் பேசமுடியாது"

    ஒரு அமைப்பு ஒரு தொண்டனின் உண்மையான உணர்வுகளைப் பேச தடைவிதிக்கிற‌து என்றால்..ஏன் அந்த அமைப்பில் இருக்க வேண்டும்? வரதராஜனும் இவரும் ஒரு கட்சியில் இருக்கிறார்கள் என்பதற்காக , பாலியல் குறித்த தனிமனித உணர்வுகளை நிலைப்பாடுகளைப் பேசக்கூடாதா?

    எனக்கு புரியாதது....
    1.கட்சிக் கொள்கைகளை படித்துவிட்டு, தானே விரும்பித்தானே கட்சியில் சேர்கிறார்கள்? இல்லை வம்சாவழி தீட்சையா?

    2.வெளிப்படையாக இருக்கும் கட்சிக்கொள்கைகளில் முரண் தெரியும்போது, அதை ஏன் வெளிப்படையாகப் பேசக்கூடாது?

    3.கட்சியில் இருப்பதாலே தன்னை ஒரு அடிமை போல எண்ணிக் கொள்பவர்கள், ஏன் சமூகம் பற்றி சுய கருத்தைச் சொல்லவேண்டும்?
    இதே தமிழ்ச்செல்வன்தான் நித்யானந்தாவிற்கு பாலியல் சுதந்திரம் உண்டு என்றார். http://satamilselvan.blogspot.com/2010/03/blog-post_03.html
    //பாலுணர்வு என்கிற இயற்கையான ஒன்று சாமியார் வேசம் போட்டதால் அவனுக்கு மறுக்கப்படுவது நியாயமல்ல. //
    அதாவது, இவர் ஒரு சாமியாரின் பாலியல் சம்பந்தமான பிரச்சனையில் பொதுவில் பேசலாம் , கேள்வி கேட்க‌லாம்,கருத்துச் சொல்லலாம் ஆனால் , இவராக விரும்பி ஏற்றுள்ள கட்சியின் பாலியல் பஞ்யாசத்துக்களை இவரிடம் கேட்கக்கூடாது. என்ன கொடுமை இது? இது தொடர்பான மா.சிவக்குமாரின் பதிவில் நடந்த உரையாடல் http://masivakumar.blogspot.com/2010/04/blog-post_23.html

    கட்சி என்ன இவர் சம்பள‌ம் வாங்கும் கம்பெனியா? மக்கள் அமைப்பு அல்லவா?
    அதன் கொள்கைக்கும் செயல்பாட்டுக்கும் முரண்வரும்போது விளக்கம் அளிக்கவேண்டியது கடமை அல்லவா? இது ஒரு உதாரணம்தான். இது போல பல அரசியல் மொக்கைகளிடம் உரையாடி அவர்களிடம் பேச ஒன்றும் இல்லை (கட்சி அனுமதி இல்லையாம்) என்று விலகிவிட்டேன்.

    என்னளவில் ஒரு நல்ல அரசியல்வாதியை (தலைமை மற்றும் தொண்டன்) இப்போது காணமுடியவில்லை. அரசியல் என்றால் என்ன என்றே தெரியாத வம்சாவளி தீட்சை பெற்றவர்கள்  தலைமையில் , நேர்ந்துவிடப்பட்ட மொக்கைகளைத் தொண்டர்களாகக் கொண்ட‌ கட்சிகளே உள்ளது. இதை சபிக்கப்பட்ட தமிழகத்தின் தலைவிதி என்றுகொள்வோம்.

    சமரசங்களற்ற வாழ்வு சாத்தியமா? பகுதி-1
    http://kalvetu.blogspot.com/2010/11/1.html

    கட்சிக்கு நேர்ந்துவிடப்பட்ட மொக்கைகள்
    http://kalvetu.blogspot.com/2010/11/blog-post_20.html


    தனிமனித கொள்கைகளும் சமரசங்களும் (போரம்களில் சேர்வது, குழுகளில் சேர்வது,சமரசங்கள் செய்வது,வாழ்க்கை மற்றும் பிழைப்பு ) அடுத்த பதிவில்.......
     
    Picture courtesy www.politicsofhealth.org

    Wednesday, November 24, 2010

    சமரசங்களற்ற வாழ்வு சாத்தியமா? பகுதி-1

    கொ ள்கை என்றால் என்ன?

    எதையும் தெரிந்து கொள்வதற்குமுன்  அதைத் தெரிந்து கொள்வதற்கான அவசியம் அல்லது  அக/புறத்தூண்டல் வேண்டும். எனவே முதலில், "கொள்கை" எதற்கு? என்று பார்த்து விடுவோம்.

     அதானே, எதற்கு கொள்கை?  எனக்கு "கொள்கை" என்ற ஒன்று தேவையாய் இருக்கும் பட்சத்தில் மட்டுமே நான் அதைப்பற்றி சிந்தனை செய்யவேண்டும்.  தேவையே இல்லாதபோது அல்லது எனது அன்றாட வாழ்விற்கு அதனால் பாதிப்பு இல்லாதபோது அதன் தேவை எதற்கு? அமேசான் காட்டில், ஏதோ ஒரு மூலையில் ஒரு பாம்பு ஒருவனைக் கடித்துவிட்டதென்றால் எனக்கு என்ன ?  அது பாட்டுக்கு நடக்கும். எனக்கு அதனால் சாதக/பாதகம் என்றால் மட்டுமே அல்லது குறைந்த பட்சம் அறிந்து கொள்ளும் ஆவல் இருந்தால் மட்டுமே , அமேசான் என்றால் என்ன? பாம்பு என்றால் என்ன ?அது ஏன் கடித்தது? என்று தேட முயல்வேன்.

    ப்படி கொள்கை என்பது எதற்கு? அது எனக்குத் தேவையா? என்று சிந்தித்தால் மட்டுமே , அதை வைத்துக் கொள்ள எனக்கு ஒரு அவசியம் வரும். இங்கேதான் "இலக்கு" என்ற ஒன்று வருகிறது. மதுரைக்கு காலை 4 மணிக்குள் போக வேண்டும் என்பது இலக்கு என்றால், அதற்கான வழிகளை , சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, எப்படி? ஏன்? ஒரு குறிப்பிட்ட வழியில் மட்டும் போகவேண்டும் என்பது கொள்கையாக வந்து நிற்கும்.

    இலக்கே அற்றவர்களுக்கு கொள்கை எனபது இருக்காது. அதுபோல ஒரே இலக்கை அடைய, ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான கொள்கை இருக்கும். ஆட்சியைப் பிடிப்பதே (மக்கள் சேவை என்று கொள்க) எல்லா அரசியல் கட்சிகளுக்கும் இலக்கு. ஆனால் அதை அடையும் வழி மற்றும் வியூகங்கள் எல்லாம் சேர்ந்து அவரவருக்கான தனித்துவம் வாய்ந்த கொள்கையாக வந்து நிற்கும்.

    எனவே, இலக்கு என்ற ஒன்று தெரிவானவுடன் , அதை அடையும் வழிகள் அதை அடைவதற்கு தான் நம்பும் முறைகள் என்று எல்லாம் சேர்ந்து கொள்கையாக உருப்பெறும். இலக்கை ஒட்டியே கொள்கை என்பதால் அல்லது இலக்குக்கான கொள்கை என்பதால் , ஒரே மனிதருக்கு பல கொள்கைகள் இருக்கலாம். ஒரே கொள்கையை அவரின் எல்லா இலக்குக்கிற்கும் தூக்கிக்கொண்டு தர நிர்ணயம் செய்ய இயலாது. ஆனால் எல்லா இலக்கிற்கும் பொருந்தக்கூடிய சில பொதுவான கொள்கைகள் இருக்கும் / இருக்கலாம்.  சட்டத்திற்கு புறம்பாக நடப்பது தவறு என்பது உனது பொதுவான கொள்கையானல், 50 ரூபாய் டவுசர் த ரோபோ அனுமதிச் சீட்டை 500 ரூபாய்க்கு வாங்கிப் பார்ப்பதும் தவறு.  இது போன்ற மொக்கைகள் 10000000000000 கோடி ஊழல் நடந்துவிட்டது என்று புலம்பக்கூடாது. ஏன் என்றால், உனக்குத் தேவையானபோது நீ  500 ரூபாய் தவறு செய்கிறாய் மற்றவர்கள்.... விரலுக்குத்தகுந்த வீக்கம். அது போல குடித்துவிட்டு பைக் ஓட்டுபவர்கள், குடித்துவிட்டு லாரி மற்றும் பஸ் ட்ரைவர்களால் ஆபத்து அதிகம் என்று வருத்தப்பட யோக்கியதை இல்லை.  ஏன் என்றால் குடிந்துவிட்டு வாகனம் ஓட்டுவது தவறு என்பது உனது கொள்கையானால் , குவார்ட்டர் குடித்த நீ ஆட்டோவில் வர வேண்டும். அப்படியே ஒரு குவாட்டரைப் போட்டுவிட்டு பைக்கில் வீடு திரும்பக்கூடாது. அபப்டி வந்துவிட்டு நாடு சரியில்லை என்று பிதற்றக்கூடாது. உன்னைப்போன்ற வெளாங்காவெட்டிகள் இருக்கும் நாடு இப்படித்தான் இருக்கும்.


    இலக்கும்  கொள்கையும் முடிவானவுடன், "கொள்கை"ப்படி இலக்கை அடைகிறோமா அல்லது இலக்கை அடைவதே கொள்கையாகமாறி சமரசங்களை ஏற்றுக் கொள்கிறோமா?


    ---------------------------

    அரசியல் கட்சிகளின் இலக்கு மற்றும் கொள்கை

    னது 12 ஆம் வகுப்பு முதல் கல்லூரி முடியும் வரை ஊரில் உள்ள எல்லா அரசியல் கட்சியிலும், நான் எனக்கே தெரியாமல் உறுப்பினராக இருந்துள்ளேன். எனது அண்னன், "எதற்கும் இருக்கட்டும்" என்று அவனின் அரசியல் நட்புகள் மூலம் எல்லா கட்சியிலும், எனக்கும் சேர்த்து உறுப்பினர் அட்டை வாங்கிவிடுவான். கேட்டால் "நாள‌ப்பின்ன கலெக்டர் ஆபிஸ், தாசில்தார் என்று ஏதாவது சர்டிபிகேட் வேண்டும் என்றால், கட்சிக்காரர்கள் உதவுவார்கள்." என்று விளக்கம் கொடுப்பான்.

    யார் , எந்தக்கட்சி , அவர்களின் கொள்கை என்ன என்று ஏதும் தெரியாமலே நான் என் அண்ணனால் நேர்ந்துவிடப்பட்டு இருந்தேன். சிறுவயதில் காய்ச்சல் தலைவலி தாண்டி , பெரிய வியாதிகள் வந்தால், பிள்ளைக்கு மொட்டை போடுவதாக தாய்மார்கள் தாங்களாகவே நேர்ந்து கொள்வார்கள். அதுபோல இதுவும்.

    ன்றும் பல கட்சிகளில் உறுப்பினர்களாக இருப்பவர்களிடம்,
    1. ந்தக் கட்சியின் கொள்கைகள் என்ன?
    2. தற்கு உட்பட்டே நீங்கள் உறுப்பினர்களாக ஆனீர்களா?
    3. றுப்பினர் ஆவதற்குமுன் கொள்கைகளையும் , இலக்கையும்  அலசி ஆராய்ந்தீர்களா?
    4. து உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை, ஆசை, கொள்கை  மற்றும் இலக்கிற்கு ஏற்றதா?
    5. Why they exists as political party?  என்பதை ஆராய்ந்தீர்களா?
    6. ந்தக் கட்சி அறிவித்துக்கொண்ட இலக்கிலும், கொள்கையிலும்  தடம் மாறும்போது உங்களின் நிலை என்ன?
    7. நீங்கள் இன்று சேர்ந்துள்ள கட்சியுன் தலைமை , அவர்களின் சுய நலனுக்காக கூட்டணிகள் மாறும் போது கட்சியில் இருந்து வெளியில் வந்துவிடுவீர்களா? அல்லது நேர்ந்துவிடப்பட்ட ஆடுபோல கட்சி விசயத்தை வெளியில் பேசமாட்டேன் என்று இருப்பீர்களா?

    இப்படியான கேள்விகள் கேட்டால் , "குஷ்பூவிற்கே தெரிந்த திராவிட வரலாறும், கொள்கையும் எங்களுக்குத் தெரியாதா?" என்பார்கள். எல்லாம் சரி, உங்கள் கட்சியின் முதல் பத்து முக்கிய கொள்கைகளைக் கூறுங்கள். மேலும், அந்தக் கொள்கையில் இதுவரை எவ்வளவு தூரம் வந்துள்ளீர்கள்? அதில் உங்கள் பங்கு என்ன என்றால்..."ஆங்.... பிரியாணி மற்றும் காண்ட்ராக்ட் கட்டிங்" என்றே சொல்கிறார்கள்.

    கட்சியின் கொள்கை ,இலக்கு என்ன என்று தெரியாதவர்கள், எப்படி இலக்கை நோக்கி செல்லும் ஒரு தலைமையின் தொண்டராக அறிவித்துக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை.

    சாதி, மதம் போல , வாழையடிவாழையாக காங்கிரஸ் குடும்பம், திமுக குடும்பம் ,கம்யூனிஸ்ட் குடும்பம் என்று ஞானஸ்தானம் செய்து நேர்ந்துவிடபட்டவர்கள் தான் அதிகம். ஒரு கட்சியில் சேர்வதற்கு முன் , அதன் கொள்கை, இலக்கு என்ன என்று கேட்டு , அது தனக்கு ஏற்றதா? அதன் செயல்திட்டங்களுக்கு எந்த அளவில் நாம் பங்காற்ற முடியும் என்று பார்த்து யாரும் உறுப்பினராவது இல்லை.  அப்படி இருந்தால், கட்சி எடுக்கும் எல்லா முடிவிற்கும் இவர்கள் கட்டுப்படாமல் கலகவாதியாய் மாறிவிடுவார்கள்.  மண்டையாட்டும் மக்கள் மட்டுமே கட்சி செய்யும் எல்லா ஊழல்களுக்கும் வியாக்யானம் கொடுத்துக் கொண்டு இருப்பார்கள். உட்கட்சி ஜனநாயகம் என்ற ஒன்று இருந்தால், இன்று இந்தியாவில் ஏறக்குறைய‌ எல்லாக் கட்சிகளிலும் மன்னர் பரம்பரை வாரிசு அரசியல் வந்து இருக்காது.

    எனவே கொள்கை சார்ந்து யாரும் அரசியல் கட்சிகளில் உறுப்பினராவது இல்லை. எனக்கு என் அண்ணன் செய்தது போல ஏதாவது ஒரு பலனை எதிர்பார்த்து உறுப்பினராக இருக்கிறார்கள்.  சாதி, மதம் விசயத்தில் திமுகவின் கொள்கை என்ன என்று யாருக்காவது தெரியுமா? அப்படி ஒன்று இருந்தால், அதன் உறுப்பினர்கள் அனைவரும் அதைக் கடைபிடிக்க வேண்டுமே. கொள்கையைக் கடைபிடிக்காதவன் எப்படி உறுப்பினர் / தொண்டன் என்று சொல்லிக் கொள்ளமுடியும்?  ஆளுக்கு ஒரு வழி என்றால் why they exists as a member of a party?


    .

    Saturday, November 20, 2010

    கட்சிக்கு நேர்ந்துவிடப்பட்ட மொக்கைகள்

    ரசியல்வாதிகள் எல்லாம் சாக்கடை, குப்பை என்று சொல்லுபவர்கள்,  கல்லூரிப்ப‌டிப்பு படித்த சில கனவான்களை 'அறிவாளிகள்' ,  'திறமைசாலிகள்' என்று எளிதாக நம்பிவிடுவார்கள். மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் பள்ளியில் இங்கிலீஸ் மீடியத்துல படித்தவர் என்பதற்காகவே அவரை அறிவாளியாகப் பார்த்தவர்கள் நம்மக்கள். ‌அந்த வகையில், மாண்புமிகு மன்மோகன்சிங்கும் ஒருவர். ஆளைப்பார்த்து 'நல்லவர்', 'நியாயவாதி', 'சே சே அப்படி எல்லாம் தப்புச் செய்யமாட்டார்' 'அறிவாளி'   என்றே நினைக்கப்பட்டவர்.

    னது பார்வையில் மக்களின் தலைவராக இருக்க சில அடிப்படைத் தகுதிகள் , பண்புகள் வேண்டும் .பாடப்புத்தக கல்வி நிச்சயம் அந்த அடிப்படைத்தேவை இல்லை. காமரசர் நல்ல உதாரணம்.

    ல்லவன் படித்தால் நல்லது செய்வான்.
    திருடன் படித்தால் நூதனமாக திருட தன் கல்வியைப் பயன்படுத்திக்கொள்வான்.
    அடிப்படையில் நீ யார்? நீ என்னவாய் இருக்கிறாய் என்பதே முக்கியம் . கல்வி "அந்த" உன் அடிப்படையில் இருந்து அடுத்த நிலைக்கு இட்டுச் செல்லும்.

    நாய் கல்வி கற்றால், அழகாக எப்படிக் குரைக்கலாம் என்பதற்குத்தான் அந்த கல்வி பயன்படுமே தவிர, கல்லூரிப்படிப்பு கற்றுவிட்ட ஒரே காரணத்திற்காக அந்த நாய் இனிமேல் பேண்ட் சட்டை போட்டுத்தான் வெளியே வரும்,கம்பத்தைக் கண்டால் காலைத் தூக்காது என்று எதிர்பார்க்கக்கூடாது.

    த்தி என்பது ஒரு ஆயுதம் அது சமையலுக்கு காய்வெட்டவும் பயன்படும் , அதே சமயம் தலையை வெட்டவும் பயன்படும். அதுபோலத்தான் கல்வியும். அது யாரிடம் உள்ளது என்பதைப் பொறுத்தே அதன்பயன்பாடு இருக்கும். பல நேரங்களில் "படிச்சவனா இப்படி?" என்று கேட்பார்கள். படிப்பிற்கும் "நீ யார்?" என்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. படிப்பு என்பது,  நம்பர் "0" போன்றது. அதை "1" க்குப்பின்னால் போட்டால் "1" ஐ  -> பத்தாக்கும் , "5"  க்குப்பின்னால் போட்டல் "5" ஐ -> ஐம்பதாக்கும்.


    சூட்சுமம் உன்னில் உள்ளதே தவிர கல்வியில் இல்லை.

    மேலும் சொல்வதானால் கல்வி என்பது நீர் போல. கள்ளிச்செடிக்கு நீர் ஊற்றினால் அது மாங்காய் கொடுக்கப்போவது இல்லை.

    The Radia Papers– Raja, Tata, Ambani connection
    http://indiasreport.com/magazine/data/the-radia-papers-raja-tata-ambani-connection/

    சந்திக்கு வந்த டாப் சீக்ரெட் - சட்டம் நம் கையில்.
    http://lawforus.blogspot.com/2010/11/blog-post_313.html

    Performance Audit Report on the by the Department of Telecommunications Ministry of Communications and Information Technology
    http://www.scribd.com/doc/42774182/CAG-2GSpectrum-20101115

    ன்னளவில் மதிபிற்குரிய மன்மோகன் அவர்கள்,  ஒரு குமாஸ்தாவாக இருக்கலாம். மற்றபடி மக்கள் தலைவராக இருக்க முடியாது. பல கோடி ரூபாய் கொடுத்தாலும் விண்ணப்பிக்காத‌  வேலைக்கு நான் போக மாட்டேன். அப்படியே ஒன்று வந்தாலும், அந்த வேலையில் எனது பங்கு, கடமை போன்றவை தெரிந்துதான் சேருவேன்.  அம்மா சொன்னார் , அப்பா கேட்டார் என்பதற்காக சும்மாகாச்சுக்கும் இருக்க நான் எதற்கு? டவுசர் த ரோபோவாக இருந்துவிட்டுப் போகலாமே?

    இவர் இருக்கிறார் என்றால் ..அது ஏன்? என்ன அவசியம் என்ற கேள்வி வருகிறது. இவரைபற்றி நான் ஏற்கனவே எழுதிய சில.

    நாரயணமூர்த்தி மன்மோகன்சிங் புனிதர்களா?
    http://kalvetu.blogspot.com/2006/10/blog-post_09.html

    மன்மோகன் சிங்கின் காமெடி..ஏம்பா லூசாப்பா நாங்க?
    http://kalvetu.blogspot.com/2009/04/blog-post.html


    தாரம் இல்லை அய்யா. உங்களுக்கு மனட்சாட்சி என்ற ஒன்று உண்டா? நாட்டை வன்புணர்ந்தவன் யாரென்று தெரியவில்லை. எங்களால் அடையாளம் காட்டமுடியவில்லை. நிரூபிக்க முடியவில்லை. ஆனால் நாங்கள் வன்புணரப்பட்டது என்னவோ உண்மை அய்யா.  அரசியல் புரிய ஆரம்பித்த நாளில் இருந்து எப்படியாவது , யாரவது நாட்டை வன்புணர்ந்து கொண்டுதான் உள்ளார்கள். போபார்ஸ் ஊழல், ஹர்சத் மேத்தா ஊழல், மாட்டுத்தீவன ஊழல், மருத்துவக் கல்லூரி பெர்மிசன் ஊழல்..இப்போது ஸ்பெட்ரம் ஊழல். என்ன செய்யலாம்? எங்களுக்கே வெக்கமாக உள்ளது.  எந்த நாட்டில் பிறக்க வேண்டும் என்பது எங்கள் முடிவு இல்லை.  பிறந்துவிட்டோம்.

    ட்டா ,வரி சக‌லமும் சரியா உள்ள‌ உள்ள அக்மார்க் சுத்தகிரய வீட்டிற்கு , கக்கூஸ் இணைப்பு கொடுக்க முனிசிபாலிட்டிகளால் , எங்களின் டவுசர்வரை கிழிக்கப்படுகிறது. ஆனால் பலகோடி வியபாரச் சமாச்சாரங்கள் மிகச் சுலபமாக நடக்கிறது.  எப்பூடி இப்படி?


    ங்கள் ஊரில் சைக்கிள் திருடி மாட்டினவன் , ஏட்டய்யாவின் ஒரு அதட்டலுக்கே டவுசரில் ஒன்னுக்குப்போவான். படித்த மேன்மக்கள் என்ன ஆனாலும் வெக்கப்பட்டதாகவே தெரியவில்லை. எப்பூடி இப்படி?

    ம்பானி , டாட்டா போன்றவர்கள் பணம் செய்யும் மிசின்கள் அவர்களிடம் மக்கள் நலன் இல்லை என்று குற்றம்சாட்டுவது, ஆடு கசாப்புக்கடைக்காரனிடம் ஜீவகாருண்யம் இல்லை என்று சொல்வது போன்றது. அவர்களின் தொழில் பணம் செய்வது. ஒருமுறை ரத்தன் டாடாவின் பேட்டியைப் பார்த்து "கொஞ்சம் நல்லவரா இருக்காரே" என்று நினைத்தேன்.

    Polyester Prince-The Real Story of Dhirubhai Ambani
    http://www.scribd.com/doc/3924530/Polyester-PrinceThe-Real-Story-of-Dhirubhai-AmbaniBanned-in-India


    சென்னையைத்தவிர எந்த மாவட்டத்திலும் அல்லது மாநிலத்திலும் ஒரு நாளைக்கூட தங்கி செலவழித்திராத மண்டூகங்கள், கட்சிக்கு நேர்ந்துவிடப்பட்ட மொக்கைகள், இன்னும் அதுஅதுகள் சார்ந்த கட்சிக்கு வக்கலாத்து வாங்கிக் கொண்டுள்ளது. எப்பூடி இப்படியெல்லாம்...? மூளையை எப்படி அடகு வைக்கிறீர்கள்?

    சோ ற்றால் அடித்த பிண்டங்கள், அடுத்த தேர்தலில் யார் அதிக காசு கொடுப்பார்கள் ஓட்டுப்போடலாம் என்று இருக்கும். இவர்களுக்கு காசு கொடுப்பதற்காகவே அரசியல்வாதிகள் நிறைய தவறு செய்ய நேரும்போலத் தெரிகிறது. ( கலாச்சார கூமுட்டைகள் இதுக்கெல்லாம் வெட்கப்ப‌டுதுகளா என்று தெரியவில்லை. மதவாதிகளுக்கும் , கலாச்சார கூமுட்டைகளுக்கும் பொம்பளப்பிள்ளைகள் டவுசர் ஒழுங்காப்போடுதுகளா என்று பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கும் போல.)

    பிழைத்திருப்பதற்கும் வாழ்வதற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள்.


    எதைப்படிப்பது எதைவிடுவது ?

    Scam
     
    http://news.outlookindia.com/item.aspx?701401

    http://www.outlookindia.com/article.aspx?268064

    http://www.outlookindia.com/article.aspx?268066

    http://www.outlookindia.com/article.aspx?268068

    http://www.outlookindia.com/article.aspx?268065