Wednesday, December 14, 2005

நீ எப்படி கொல்லப்படுகிறாய் என்பதும் முக்கியம்

பதிவு 24: நீ எப்படி கொல்லப்படுகிறாய் என்பதும் முக்கியம்.

மரணம் என்பது அனைவருக்கும் வருவதுதான் அல்லது வரப்போவதுதான்.மரணம் விளைவிக்கும் துயரங்கள் பலவிதம்.எல்லா மரணங்களும் தனது நெருங்கிய சொந்தங்களுக்கு ஈடுகட்ட முடியாத இழப்பே. ஆனால் இயற்கையான மரணங்களை தவிர்த்து மற்ற மரணங்கள் (கொலை,விபத்து) சமூகத்தில் ஏற்படும் தாக்கம் ஒவ்வொன்றும் வேறுவிதமானவை.பொது மக்களில் ஒருவன் கொல்லப்பட்டால் அல்லது விபத்தில் உயிர் நீத்தால், அவன் எப்படி இறக்கிறான் எங்கே கொல்லப்படுகிறான், அவனை கொலை செய்தவர்கள் உலக அரங்கில் வகிக்கும் இடம் போன்றவைகளைப் பொருத்து அந்த மரணத்தின் விலை அரசால் நிர்ணயிக்கப்படுகிறது.

பத்திரிக்கைகளும் மரணச் செய்திகளை அதன் விற்பனை விலையை பொருத்து வெளியிடும். மேலும் பல கொலைகளும் விபத்துகளும் ஒரு சிலருக்கு அரசியல் இலாபத்தையும் எதிர் தரப்பினருக்கு அரசியல் நஷ்டத்தையும் கொண்டுவரும்.சமீபத்தில் நான் பார்த்த இரண்டுவகையான கொலைகள் அரசியல் மற்றும் பத்திரிக்கைச் சமுதாயத்தில் பெற்ற இடங்கள் என்னை கவலை கொள்ளச் செய்கிறது.

கடமையில் இறந்துபோன மஞ்சுநாத் சண்முகம் பற்றிய செய்தி:
http://www.domesticatedonion.net/blog/?item=662

இன்று தினகரனில் வந்த செய்தி:
மணல் லாரி ஏற்றி போலீஸ் ஏட்டு கொலை.
http://www.dinakaran.com/daily/2005/Dec/14/flash/flasnews1.html

மேற்சொன்ன இரண்டு செய்திகளைவிட மணியப்பன் என்பவரின் மரணம் அரசியலுக்கும்,பத்திரிக்கைகு அதிக தீனி போடுவதால் அனைவரும் அந்த சோகத்தில் பங்கெடுக்கவே விரும்புகிறார்கள்.

மணியப்பனின் மரணம் தொடர்பான அரசியல் கூத்துக்களை ஆசிப் மீரான் இங்கே பட்டியலிடுகிறார்.
http://asifmeeran.blogspot.com/2005/11/blog-post_27.html

****************


****************