Friday, July 14, 2006

Mumbai Muslims give blood to bomb victims

எந்த மதத்தில் இருந்தாலும் நல்ல மனங்கள் நல்லதாகவே இருக்கும்.பாதிக்கப்பட்ட மனிதனுக்கு இன்னொரு மனிதன் உதவ முனைவது சாதாரணமான/இயல்பான நிகழ்வே இருந்த போதும் இது இப்போது இங்கே பகிர்ந்து கொள்ளப்படவேண்டியது எனவே...






Mumbai Muslims give blood to bomb victims


http://www.expressindia.com/fullstory.php?newsid=70963
http://www.gulf-times.com/site/topics/article.asp?cu_no=2&item_no=97119&version=1&template_id=40&parent_id=22

மதங்களை மீறிய மனித உணர்வுகள் இருக்கும் அனைவருக்கும் ஒரு
Royal salute !

ஒவ்வொரு மதமும் தீவிரவாதிகளுக்கு மத ரீதியான தடையை பகிங்கரமாக விதிக்க வேண்டும். கோட்பாடுகள்/விதிகள்/மறை/வேதம் என்று வரையறுத்து இயங்கும் மதங்கள் அந்த விதிகளை மீறுபவர்களுக்கு என்ன தண்டனை என்பதை முதல் பக்கத்திலேயெ கூற வேண்டும்.

இராணுவ முறைகளை மீறும் இராணுவ வீரர்களுக்கு இருக்கும் Court-martial போல் நிறுவனமயமாக்கபட்ட மதங்களும் ஒரு தெளிவான நடைமுறையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். சும்மா மறுமையில் நரகம் என்பெதெல்லாம் நடைமுறை வாழ்க்கைக்கு உதவாது.

  • ஒரு பெண் கோவிலில் நுழைந்தால் தீட்டு என்று கூறும் மடையர்கள் அதே மதத்தைச் சார்ந்த ஒருவன்/ஒருத்தி வேற்று மத மக்களை கொழுத்தினால் அவனது பாவச் செயலால் மதத்திற்கே தீட்டு வந்துவிட்டதாக கூப்பாடு போட்டதாக எங்கும் நான் படித்ததில்லை.

  • அது போல் ஒரு எழுத்தாளன் தனது மதத்தை விமர்சித்து எழுதிவிட்டான் என்று கூப்பாடு போட்டு அவனுக்கு மரணதண்டனை விதிக்கும் மத குருக்கள் அதே மதத்தைச் சார்ந்தவர்கள் 9/11 3/11 7/11 என்று ஊரைக் கொழுத்தும் போது தனது மத கயவாளிகளுக்கு மரணதண்டனை விதிப்பதில்லை.

  • அமைதியே வடிவான பிட்சுகள் இன்னும் இனக்கொலைகளை அமைதியாகவே பார்க்கிறார்கள்.

பிணந்திண்ணி மதங்கள்


Wednesday, July 12, 2006

மும்பை குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி

தில் மேலும் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் ஒன்றும் நடக்கப்போவது இல்லை.இதற்குமுன் நடந்த குண்டுவெடிப்புக்கு காரணமாக கருதப்படும் தாவூத் பக்கத்து நாட்டில் இருந்தாலும் அவர்களுடன் கிரிக்கெட் விளையாடுவதைத் தவிர ஒன்றும் செய்ய முடியவில்லை என்பது உண்மை.அப்படியே பிடித்தாலும் மறுபடி ஒரு விமானத்தை சிறையாக்கி அதில் உள்ள பயணிகளுக்காக குற்றவாளிகளை விடுவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் வரும். அப்படியே குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டாலும் இறந்தவர்கள் திரும்ப வரப்போவது இல்லை.

தீவிரவாதமும் உயிர்ப்பலிகளும் மனிதன் உள்ளவரை அழியாது. மதம்,மொழி,சாதி,பொருளாதாரம் ..என்று ஏதோ ஒருவடிவில் இருந்து கொண்டுதான் இருக்கும்.

நாளை என்பது நிச்சயம் இல்லாதது.ஒவ்வொருவரும் இந்த நேரத்தில் இருக்கும் உறவுகள்,நண்பர்களை நட்பு பாராட்டுங்கள்.மறந்தும் பகை வேண்டாம்.நாளை அவர்கள் இருப்பார்களா என்று தெரியாது.

மும்பை குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி!







கல்வெட்டு

Thursday, July 06, 2006

மலக்குடலுடன் இறைவனைத் தரிசிக்கலாமா?

தனையும் கேள்விக்குள்ளாக்காமல் கிளிப்பிள்ளைபோல் சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பதுதான் மதத்தின் மூல ஆதாரம்.மனிதனுக்கு உள்ள நவ துவாரங்களில் இருந்து தினமும் கழிவு வெளியேறுகிறது.மனித உடலே ஒரு உற்பத்திக்கூடம் போலத்தான்.உண்ணும் உணவும், சுவாசிக்கும் காற்றும், குடிக்கும் நீரும் வேதி மாற்றங்களை அடைந்து வேர்வையாக,மூச்சுக்காற்றாக,சிறுநீராக,மலமாக,ஆசனவாய் காற்றாக,சளியாக,காதில் இருந்து அழுக்காக,கண்களில் இருந்து கழிவாக,வாயில் இருந்து எச்சிலாக ..

இப்படி ஏதேனும் ஒரு வகையில் தினமும் வெளிவந்து கொண்டேதான் இருக்கிறது.இவற்றில் சிலவற்றைத்தான் மனிதனால் கட்டுப்படுத்த முடியும்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் மேற்சொன்னவை எல்லாம் பொதுவானவை.மனிதனின் உடல் அவன்/அவள் தூங்கும் போதும் சரி ,கடவுள் வணக்கம் செய்யும் போதும் சரி சும்மா தெருவில் சுத்தும் பொதும் சரி மேற்கண்ட வேலைகளை செய்து கொண்டுதான் இருக்கிறது.புரியும்படி சொல்வதானால் நமது மலக்குடலும், சிறுநீரகமும் ஒரு நொடி ஓய்வில்லாமல் கழிவு சேகரிப்பை செய்து கொண்டுதான் இருக்கின்றன.எங்கு போனாலும் கூடவே வருகிறது.புனிதமான இடமாக இருந்தாலும் சரி அது பூங்காவாக இருந்தாலும் சரி.

கடவுளின் தூதுவர்களாக ,அவதாரமாக வந்த எல்லா மனிதப் பிறவிகளின் உடல்களும் அன்றாடம் மேற்சொன்ன அனைத்து வேலைகளையும் செய்து கொண்டுதான் இருந்தன.

ஆணுக்கு உற்பத்தியாகும் விந்துக்கு எந்த சுழற்சி முறையும் கிடையாது.ஒரு அளவுக்கு மேல் சுரந்துவிட்டால் அது தானாக வெளியேறிவிடும் அல்லது கனவு வழியாக வெளியேற்றப்பட்டு விடும்(சொப்பன ஸ்கலிதம் ???).மேலும் வயது ஆக ஆக இதன் உற்பத்தி குறைந்து விடும்.பெண்களின் சினை முட்டை உற்பத்தியும் இது போலவே என்ன,அது ஒரு சுழற்சி முறைக்கு உட்பட்டது.உருவாகும் சினைமுட்டைகள் கருவாக மாறாத பட்சத்தில் கருப்பை அதை வெளியே அனுப்பிவிட்டு அடுத்த முட்டை உற்பத்திக்கு தன்னை தயார் செய்யும் சுய சுத்திகரிப்பே இந்த இரத்தப்போக்கு.

ஆண் உடம்பில் இருந்து வரும் கழிவுகள் எல்லாம் மறக்கப்பட்டு பெண்களின் இந்த இரத்தப்போக்கு மட்டும் தீட்டாகிவிட்டது கொடுமை.எல்லாம் பணமும்,அதிகாரமும்,ஆணவமும்,புஜ வலிமையும் கொண்ட ஆணாதிக்கம், மதம் என்ற போர்வையில் செய்யும் கொடுமைகளில் இதுவும் ஒன்று.கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத்தூக்கி மனையில் வை என்ற கதையாக ஆண் வர்க்கம் புனிதம் தீட்டு என்ற பெயரில் செய்யும் பெண்ணடிமைத்தனம்தான் தீட்டு/பெண்ணடிமைத்தனம்.

மதம் அதைப் பின்பற்றுபவர்களின் தனிப்பட்ட நம்பிக்கை என்றாலும்,பெண்களை சமமாகப் பாவிக்கவில்லை என்றால் அது பச்சையான ஆணாதிக்கமே! இதைச் சொல்வதற்கு மதவாதியாக இருக்கத் தேவையில்லை.மனிதனாக இருந்தாலே போதும்.