Tuesday, December 18, 2007

Spit in your face ..leaving you looking like an oppressed Harijan. - Swaminathan S Anklesaria Aiyar


P arpanisam never dies :-((

Some Aiyar writes in TOI (16 Dec 2007) using Dalit community for dirty example.

// It means that a takeover target can spit in your face and say that mere association with you will be demeaning, leaving you looking like an oppressed Harijan. //

Why can't it be a oppressed some xxxx caste other than Dalit?


Why Tata should be more like Mittal
16 Dec 2007, 0010 hrs IST,Swaminathan S Anklesaria Aiyar

Ratan Tata says he is a nice guy who does not believe in hostile takeovers. But this has consequences. It means that a takeover target can spit in your face and say that mere association with you will be demeaning, leaving you looking like an oppressed Harijan. This is the situation Tata faces after being spurned in no uncertain terms by Orient-Express Hotels, the international luxury hotel chain.

Till now, Tata has negotiated several friendly global takeovers, ranging from Tetley Tea to Corus. However, his group ran into rough weather after Indian Hotels, its group company, wooed Orient-Express Hotels. Indian Hotels built up a double-digit stake in the multinational, and then proposed a strategic alliance. This looked like the first step in an acquisition.

Orient-Express bristled at the proposal. It declared that any association of its brands and hotels with a predominantly domestic Indian hotel chain would hurt its brand image and hit its ability to charge premium rates.
......................
.............

News Courtesy: (All the glory goes to TOI)

http://timesofindia.indiatimes.com/articleshow/2625123.cms

Wednesday, November 21, 2007

பேர் அண்டு லவ்லி, மைக்கேல் ஜாக்சன், ஜோதிடம் மற்றும் சில மனிதர்கள்


பே ர் அண்டு லவ்லி க்ரீம் போட்டால் 3 வாரத்தில் ஒரு அக்கா(அ) தங்கச்சி அப்படியே சிவப்பாக மாறுவதாகக் காண்பிக்கிறார்கள். அது உண்மையானால் அந்த "பேர் அண்டு லவ்லி" இன்னும் காஸ்மாட்டிக் சரக்காக இருக்காது பார்மச்சூட்டிகல் சரக்காக அவதாரம் எடுத்துவிடும். அதாவது சோதனை செய்து அறிவியல் பூர்வமாக சொல்லப்படும் பலன்களை "பேர் அண்டு லவ்லி" கொடுத்தால் அதை பார்மச்சூட்டிகல் சரக்காக ( படை ,சொறி, சிரங்கு, களிம்பு வகைகள் போல) விற்க அனுமதி கிடைக்கலாம்.

ஏன் "பேர் அண்டு லவ்லி" இன்னும் காஸ்மட்டிக்காகவே இருக்கிறது என்றால் ஒரு தலைமுறையே உபயோகித்தாலும் கலர் மாறாது அதுதான் உண்மை. கலர் மாறுவதற்காக உடல் முழுதும் அறுவை சிகிச்சை செய்த மைக்கேல் ஜாக்சன் என்ன முட்டாளா? மூன்றே வாரத்தில் "பேர் அண்டு லவ்லி" தடவி மாறியிருக்கலாமே?

கோழியூர் (காழியூரா ? கோழியூரா ?? ) நாராயணனும் அவரைப்போல தொழில் செய்யும் மனிதர்களும் ஜோதிடத்தை வைத்து ஆராய்ச்சி செய்து அதன் பலன்களை நிரூபித்து அறிவியலுக்கான ( ஜோதிடம் அறிவியலாம் !!) நோபல் பரிசு வாங்க வேண்டியதுதானே?

ஜோதிடம் ஒரு பொழுது போக்குக் கலை அவ்வளவே. அது கலையாக இருப்பதனால்தான் எந்த வரையரையும் இல்லாமல் நட்சத்திரமும் கிரகமும் ஒண்ணுதான் என்று நினைத்தவாறு பிதற்றமுடிகிறது. கலை (Art) என்று வந்துவிட்டால் எந்த அறிவியல் மூலமும் தேவை இல்லை. எதைக் கிறுக்கினாலும் மாடர்ன் ஆர்ட்டாக மாறும்.

அறிவியலில் கிறுக்கல் சதுரமாகவோ அல்லது வட்டமாகவோ ஏற்றுக்கொள்ளமுடியாது.கிறுக்கல் கிறுக்கலாகவே வரையறுக்கப்படும்.


ஜோதிடம் என்னும் மகாசமுத்திரம்.
http://classroom2007.blogspot.com/2007/11/jl51.html

சுனாமி போன்ற விபத்துகளில் இறந்தவர்கள் அனைவரும் அன்று சாவார்கள் என்று சுப்பையா வாத்தியாரால் சொல்ல முடிந்திருக்கும் யாரும் இவரை அணுகவில்லை என்பது வேதனையான விசயம். தமிழக பிறப்பு இறப்பு பதிவுத்துறை இவரை அணுகி வரும் நாட்களில் சாகப்போகும் மக்களின் பட்டியலை தாயாரித்துக் கொள்ளலாம். தேவை கைரேககையோ ஜாதகமோதான். குடி மக்களிம் ரேசன் கார்டில் ஜாதகம் தேவை என்று ஒரு சின்ன சட்டத்திருத்தம்மூலம் இதனைச் செயல்படுத்தலாம்.

  • இனிமேலாவது இவர் சொல்லும் புத்தகங்களைப் படித்துவிட்டு அதன்படி இன்சூரன்ஸ் செய்யுங்கள்.
  • இந்த புத்தகங்கள் உதவியுடன் உங்கள் ஆயுட்காலத்தை நீங்களே கணித்துத் தெரிந்து கொள்ளலாம். இது பயணம் செய்வதற்குமுன் நீங்கள் சாவீர்களா அல்லது பத்திரமாக பயணம் செய்வீர்களா என்று தெரிந்து கொள்ள உதவும் . அதன்படி டிக்கட் புக் செய்யலாம்.
  • கும்பகோணம்போல் பள்ளி விபத்துகளைத் தவிர்க்க (தவிர்க்க முடியாதாம் ஆனால் சாகும் தேதியை தெரிந்து கொள்ளலாம்) குழந்தைகளை ஜோதிடம் பார்த்து சாகும் நாள் குறித்து அனுப்பவும்.இதனால அதிர்ச்சிகள் தவிர்க்கப்படும்.
  • எல்லாச் சாவுகளும் ஜாதகப்படி(கைரேகைப்படி) நடப்பதால் விபத்து இழப்பீட்டிற்கு அரசாங்கம் முன்கூட்டியே பட்ஜெட் போடலாம்.
  • இன்சூரன்ஸ் செய்தவர்களின் ஜாதம் இருந்தால் (கைரேகை ??) அவர்களின் சாவு தேதியை முன்கூட்டியே அறிந்து சாகும் நாளிற்கு ஒரு நாள் முன்னதாக பாலிஸியை கேன்சல் செய்து இன்சூரன்ஸ் கம்பெனிகள் இலாபம் ஈட்டலாம்.
  • அல்லது கடைசித் தேதி அன்று பணப்பட்டுவாட செய்து சாகப் போகும் பாலிசிதாராரிடம் நல்ல பெயர் எடுக்கலாம்.
  • ரேசன் கார்டில் ஜாதம் இணைத்து அனுப்பினால் அரசாங்கம் யார் யார் எந்த ஆண்டுவரை உயிரோடு இருக்கவேண்டும் என்று Expiry Date ம் அடித்துக் கொடுத்துவிடுவார்கள்.

ஜோதிடம் உண்மையா? பொய்யா?.முடிவு என்ன?
http://jaallyjumper.blogspot.com/2007/11/blog-post_19.html


Picture courtesy: Internet

Tuesday, November 20, 2007

அயோத்திதாச பண்டிதர்

தீ ண்டாமை வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் திணிக்கப்பட்டதே ஒழிய அது ஆதிகாலம் தொட்டே இருந்தது கிடையாது....

"இத்தனைக்கும் சாதி மத சாரம் பார்த்த அந்தப் பெரிய சாதியோர் என்போர். காலங்காலமாக 'மதவித்தைகளையும் விருத்தி செய்கிறார்களேயன்றி, பூமியை உழும் நவீனக் கலப்பையையோ, விரைவாக நீர் பாய்ச்சும் ஏற்றத்தையோ, நெல்லையும் அரிசியையும் பிரிக்கின்ற எந்திரத்தையோ, போட்டோ கிராப், டெலிகிராப், போனோ கிராப், மோனோ கிராப், ஸ்டீம் ரயில்வே, டிராட்மவே போன்ற நவீன அறிவியல் சாதனங்களையோ கண்டுபிடிக்கவில்லை. ஆனால் அவர்கள் பராமரித்து வரும் பழைய சாதி மத திக்க நிலையால் மட்டுமே இப்புதிய வசதி வாய்ப்புக்களை அபகரிக்க முடிகிறது" என்று வேதனைப்படுகிறார்....

மேலும் படிக்க ...
அயோத்திதாச பண்டிதர் -ராகவன் தம்பி
http://sanimoolai.blogspot.com/2007/11/blog-post_1976.html

அயோத்திதாச பண்டிதர் குறித்த மேலும் சில கட்டுரைகள்

அயோத்தி தாச பண்டிதர் ! - கோ.வி.கண்ணன்
http://govikannan.blogspot.com/2007/08/blog-post_4717.html


அயோத்தி தாசர் -தமிழ் விக்கி
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D

அறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ வே ரா வின் அணுகுமுறை - ஜெயமோகன்
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20203102&edition_id=20020310&format=html


Picture courtesy:
http://commons.wikimedia.org/wiki/Image:8403452_36f7580a25_o.jpg

Friday, October 26, 2007

கம்யூனிசம்-காந்தியம்-நாடி ஜோதிடம் மற்றும் பக்கவாட்டு நவீனத்துவம்

யணம் செய்யும் கப்பலில் ஒரு ஒட்டை இருப்பது தெரியவருகிறது. அந்த ஓட்டையின் விபரீதம் கப்பலின் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்பவனுக்கும், முதல் வகுபில் பயணம் செய்பவனுக்கும் வெவ்வேறுவிதமாகத் தெரியவரும். எவன் முதலில் சாகப்போகிறான் என்ற அளவில் வித்தியாசப்படும் அவ்வளவே. அடிப்படையில் அந்த கப்பலில் பயணம் செய்யும் அனைவருக்கும் பிரச்சனை ஒன்றுதான்.


எப்படி கப்பலின் ஓட்டையை அடைப்பது?
என்று.
  • ஒருவர் கம்யூசனிச சாந்து கொண்டு பூச வேண்டும் என்று சொல்கிறார்.
  • மற்றவர் காந்திய சாந்து கொண்டு பூச வேண்டும் என்கிறார்.
  • மேல் வகுப்பில் பயணம் செய்பவன் "எங்கே ஓட்டை ? எல்லாம் நல்லாத்தானே இருக்கு ? " என்று கூட சொல்லலாம். அது அவனின் புரிதல். பிரச்சனை உள்ளது என்றே தெரியாத இவனை ஆட்டையில் சேர்க்கவே முடியாது.

பிரச்சனை உள்ளது என்பதை ஒப்புக்கொண்டு, அதை எப்படி தீர்ப்பது என்று முன்வரும் குழுக்களில் அணுகுமுறை எப்படி அமைகிறது? அவனவன் அவனுக்குத் தெரிந்த ஒரு இசத்தையோ , மதத்தையோ அல்லது அரசிலையோ எடுத்துக்கொண்டு ஓட்டையை அடைக்க வந்துவிடுகிறார்கள்.

எந்த ஒரு இசங்களையும் படித்து அதன் உதவியுடன் நமது அறிவை கூர் தீட்டப்பயன்படுத்த வேண்டுமே தவிர, அந்த இசங்களையே நாமாகக் கற்பனை செய்து நாமும் அதுவாகி , சுய அடையாளங்களைத் துறத்தலால் வரும் பயன் ஏதும் இல்லை. பழைய தத்துவங்கள் ,இசங்கள் புதியவற்றைச் சமைக்க ஒரு கருவியாக இருக்க வேண்டுமே தவிர அதுவே, சர்வரோக நிவாரணியக Dr.காளிமுத்துவின் தாது புஷ்டி லேகியம் போல், கக்கூஸ் பிரச்சனையில் இருந்து கைப் பிரச்சனைன வரைக்கும் ஒரே மருந்தே தீர்வு என்று இருக்க முடியாது.

  • கம்யூனிசச் சாந்து கப்பல் X ஐ அடைக்கப் பயன்பட்டு இருக்கலாம்.
  • காந்தியச் சாந்து கப்பல் Y ஐ அடைக்கப் பயன்பட்டு இருக்கலாம்.

அதற்காக கப்பல் A க்கும் அதுதான் தேவை என்று அடம்பிடிக்காமல், நிகழ்காலப் பிரச்சனைக்கு தீர்வாக புதிய சிந்தனைகள் வளரவேண்டும். கம்யூனிசம் அல்லது காந்தி சொன்னார் என்பதற்காக கடிவாளத்தைக் கொண்டு காரை ஓட்ட நினைக்கக்கூடாது. கடிவாளத்தை அடிப்படையாக அல்லது உதாரணமாக வைத்து காருக்கு ஒரு தீர்வு காண முற்பட வேண்டுமே தவிர கடிவாளத்துடன் வாழ்க்கை முழுவதும் அலையக்கூடாது.

இசங்களைப் படித்தவர்கள் அங்கேயே நின்றுவிட்டதால்தான் நிகழ்கால சமூகப் பிரச்சனைகளுக்கு புதிய தீர்வுகள் இன்னும் பழைய புத்தகங்களிலேயே தேடப்படுகிறது. நூல்களில் இருந்து பெறுவது வாசிப்பு அனுபவம. வாசிப்பே அறிவாகிவிடாது. ஒவ்வொரு்வருக்கும் குடும்பச் சூழலில் தொடங்கி, அவரது குடும்பம் பின்பற்றும் கொள்கைகள், அவரது கல்விச் சூழல், கல்வி, நண்பர்கள், பிறக்கும் ஊர், நாடு, அவர் படிக்கும் நூல்கள் .....இவைகளில் கிடைப்பது பகுத்தறிவு இல்லை... அதன் பெயர் அனுபவம் அல்லது அனுபவ அறிவு.

இப்படிக் கிடைத்த அனுபவங்களையும், இசங்களையும், தத்துவங்களையும் இன்னபிற விசயங்களையும் கேள்விக்கு உட்படுத்தி அதனை மேலும் ஆராய்வதே பகுத்தறிவு. கப்பல் பயணைத்தில் கிடைத்த அனுபவ அறிவு பாலைவனப் பய்ணத்திற்கு அப்படியே பயன் படாது.

முன் முடிவுகள் இல்லாமல் அனைத்தையும் கேள்விக்கு உட்படுத்தி அதன் மூலம் தனக்கென ஒரு புரிதலை அடைவதே பகுத்தறிவு. அந்த பகுத்தறிவின் மூலம் புதிய தீர்வுகள் கண்டறியப்படவேண்டும்.

அனுபவம் (கற்றல்,கேட்டல்,உணர்தல்..) + அவற்றை கேள்விக்கும் பரிசோதனைக்கும் உட்படுத்துதல் + சுய புரிதல் = பகுத்தறிவு.


இது பகுத்து அறியும் அறிவியல். இந்த அறிவியலின் மூலம் நிகழ்காலப் பிரச்சனைக்குத் தீர்வுகாண வேண்டுமே தவிர பழைய இசங்களில் நம்மை தொலைத்துவிடக்கூடாது. இசங்களைப் படித்தல் ஒரு அனுபவம் , ஆனால் எல்லாப் பிரச்சனைகளுக்கும் பழைய புத்தகங்களில் விடை தேடுவதும், நாடி ஜோதிடம் பார்ப்பதும் ஒன்றுதான்.

நீங்கள் 5 வயதில் பகுத்தறிந்த ஒன்றை 50 வயதிலும் பகுத்தறிய தயாராக இருக்க வேண்டும். தொடர்ச்சியாக கேள்விகளுக்கு உட்படுத்திக் கொள்வது அறிவியல். அதாவது "." டன் (முற்றுப் புள்ளியுடன் ) நிற்காமல் , அடுத்த தலைமுறையும் தொடர்ந்து சிந்திக்கும் வண்ணம் "," வைப்பது. உதாரணமாக் இதுதான் இறுதி இறை வேதம் அல்லது இறுதி அவதாரம் அல்லது தூதர் என்று சொன்னால் அங்கே "." வந்து விடுகிறது. அறிவியல் அப்படி அல்ல.

"பின் நவீனத்துவம் " (இது தத்துவம் அல்ல காலக் குறியீடு ) தொடங்குவதற்கு முன்னர் அல்லது அது ஒன்று அறியப்படாதபோது அதை உணர்ந்தவர்கள்/கண்டுபிடித்தவ்ர்கள்/...அவர்கள் வாழ்ந்த நாடு/காலம்/.. போன்றவற்றில் இருந்து பெற்ற உணர்வுகளால் இத்தகைய புதிய காலத்தை கட்டமைக்க அல்லது அது சார்ந்த சிந்தனையை வெளிப்படுத்த கற்றுக் கொண்டர்கள். அதாவது அவர்கள் வாழ்ந்த கால்த்தில் அவர்களின் நிலப்பரப்பில் இருந்த வினைகளுக்கு எதிர்வினையாக அல்லது மாற்றாக சிந்தித்தார்கள், புதியதை உருவாக்கினார்கள். நாமும் நமது மக்களுக்கு இந்தச் சூழலில் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டுமே தவிர , படித்த இரவல் சிந்தனைகளை அப்படியே பேசிக்கொண்டிருப்பதால் ...சமூகத்தை விடுங்கள், அதைப்படித்தவனுக்கே ஒரு பயனும் இல்லை.

இசங்களின் அல்லது மதங்களின் அல்லது நவீனத்துவங்களின் படிப்பு அல்லது வாசிப்பு எப்படி இருக்க வேண்டும் என்றால்...

4+3 = 7 என்று பழைய (இரவல் சிந்தனை) புத்தகங்ளில் இருந்து கற்றுக் கொள்வது தவறு இல்லை. அதுதான் கற்றலின் வழியும்கூட. ஆனால்,
கற்றபின் அதே 4+3 இல் நின்று கொண்டு வியாக்கியானம் பேசாமல் (யார் அதிக புத்தகம் படித்துள்ளார்கள் என்பதுபோல ) தான் வாழும் சமூகத்திற்கு ஏற்ற புதிய சிந்தனைகளை உருவாக்க வேண்டும். அதாவது 4+4=8 என்ற அளவிலாவது.

சுஜாதா ,மதன் வகையறாக்கள் 10 வெளிநாட்டு புத்தகங்களைப் படித்து விட்டு சுவற்றில் ஒண்ணுக்குபோவது "ஆணீயம்" என்றும் "தமிழனக்கு வரலாறு இல்லை" என்ற ரீதியில் எப்படி வாரப்பத்திரிக்கை வாசகனை "வாசக வட்டத்திற்குள்" கொண்டு வந்து காசு பார்க்கிறார்களோ அப்படியே இந்த பின்/முன்/பக்கவாட்டு நவீனத்துவ/இலக்கிய/கம்யீனிச/காந்திய வியாதிகள் தங்கள் பக்க நியாயத்தை தத்தம் குழுக்களில் பேசித் தீர்த்துக் கொள்கிறார்கள் அல்லது அறிவு சீவிப் பட்டம் பெற்றுக் கொள்கிறார்கள். அந்த இசங்களாகவே வாழ்ந்து சுயம் இழக்கிறார்கள் ஒரு சினிமா கதாநாயகனின் இரசிகனைப்போல.


Picture courtesy:
www.artofancientafrica.com

Wednesday, October 17, 2007

கடவுள் - கரண் தப்பார் - கனிமொழி

டவுள் இருக்கிறார் என்பதும் கடவுள் இல்லை என்பதும் இரண்டுவிதமான நம்பிக்கைகள். அறிவியலை ஒதுக்கிவிட்டு தட்டையாக நம்பிக்கை என்ற ரீதியில் மட்டும் ஆராய்ந்தால் , இதை இரண்டுவிதமான நம்பிக்கைகள் என்று சொல்லலாம்.

கடவுள் பற்றிய விமர்சனங்கள், எதிர் கருத்துக்கள் சொல்லப்படும் போதெல்லாம் கடவுளை நம்புபவர்களின் மனதை நோகடிக்கக்கூடாது என்ற கருத்துகள் அள்ளிவிடப்படும். "கடவுள் இருக்கிறார்" என்பது பலரின் நம்பிக்கை என்றால் அதே கடவுள் "இல்லை" என்பதும் சிலரின் நம்பிக்கையே.

அப்படி இருக்கையில் "கடவுள் இல்லை" எனறு நம்புபவர்களின் மனதை, "கடவுள் இருக்கிறார்", "பாலம் கட்டினார்" என்று சொல்லி நோகடிப்பது எந்த விதத்தில் சரி? இத்தைகைய செயல்கள் "இல்லை" என்பவர்களின் நம்பிக்கையை கேள்வி கேட்கும் செயல் அல்லவா? அதுவும் தவறுதானே? அவர்களுக்கும் வலிக்கும்தானே?

இருக்கிறார் என்பதும் நம்பிக்கை. இல்லை என்பதும் நம்பிக்கை. இரண்டையும் நம்பிக்கை சார்ந்த விசயங்களாக எடுத்துக் கொண்டால் ,யார் நம்பிக்கை உண்மை அல்லது உயர்ந்தது என்று எப்படி அளவிட முடியும்? இப்படி இருக்கையில், "இல்லை" என்று சொன்னால் மட்டும் ஒரு சாரருக்கு வலிக்கும் என்று அரசும் ஊடகங்களும் ஏன் புலம்புகின்றன?

"இருக்கு" என்று சொல்லி ஒருசாரர் அடிக்கும் கும்மி, மறுசாரருக்கு வலிக்கும் அல்லவா? இது ஏன் புரிந்து கொள்ளப்படவில்லை? இது எப்போதும் ஒருதலைப் பட்சமான புரிதலாக இருக்கிறது.

அதிக சதவீத மக்கள் "இருக்கு" என்று நம்புகிறார்கள் என்பதற்காக "இல்லை" என்று நம்பும் மக்களை கருத்துச் சொல்ல அனுமதிக்காமல் அல்லது அதன் பெயரில் பெரிய அரசியலையே கட்டமைக்க முயல்வது கேவலம்.

இரண்டுமே நம்பிக்கைகள். யாரும் யார் நம்பிக்கையையும் கேள்வி கேட்கக்கூடாது என்றால், அவரவர் அவரவர் கருத்தைச் சொல்லும் சுதந்திரம் இருக்க வேண்டும். கேள்வி கேட்பதால் மனது புண்படுகிறது என்றால் அது இரு நம்பிக்கையாளர்களுக்கும்தான்.

"இருக்கு" என்று நம்புபவர்களின் பேச்சுக்காளால் தினம் தினம் "இல்லை" என்று நம்புபவ்ர்களின் மனதும் புண்படுகிறது.


  • அவரவர் நம்பிக்கைகள் அவரவர்களுக்கு.
  • "இல்லை" என்று பேசவே கூடாது என்றால் "இருக்கு" என்றும் பேசக்கூடாது.

********
ரு முதல்வர் கடவுள் நம்பிக்கையாளர்களை புண்படுத்தும் வண்ணம் பேசலாமா? என்று கேட்கிறார் கரண் தப்பர். கரணின் கேள்வியே அபத்தமானது. ஸ்டிரியோடைப் என்று சொல்லப்படும் அதே "நம்பிக்கையாளர்கள் புண்படுவார்கள்" என்ற ரீதியில் கேட்கப்பட்ட தட்டையான கேள்விகள். அதே முதல்வர்தான் அந்த மாநிலத்தில் இருக்கும் மாற்று நம்பிக்கையாளர்களுக்கும் (கடவுள் இல்லை என்று நம்புபவர்களுக்கும்) முதல்வர்.

http://www.ibnlive.com/videos/50516/.html






கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ள இருள் நீக்கி சுப்பிரமணியில் இருந்து, காசுக்கு கலை சொல்லிக் கொடுக்கும் சிரி சிரி ரவி சங்கர பாபா முதல் , ஆன்மீக வாந்திகள் மைக் போட்டு கடவுள் இருக்கிறார் என்று கத்தும் போது , கடவுள் இல்லை என்று நம்பும் நம்பிக்கையாளர்களின் மனதும்தான் புண்படுகிறது.

தப்பாருக்கு அது புரியாது. இவர்களை உட்காரவைத்து கரண் தப்பார் "ஏன் நம்பிக்கையளர்களை (கடவுள் இல்லை என்று நம்பும்
நம்பிக்கையளர்கள்) படுத்துகிறீர்கள்" என்று கேட்பாரா?

**

கனிமொழி ???

நோ கமெண்ட்ஸ்.

அரசியலுக்கு இபோதுதான் வந்துள்ளார். இவரை அறிவாளி, சிந்தனையாளர், கவிதை சொல்லி என்று கொண்டாடியவர்களுக்கு வேண்டுமானால் இவரின் பேட்டி ஏமாற்றமாக இருக்கலாம். சராசரி அரசியல்வாதிக்கு உள்ள எல்லாத் தகுதிகளும் கொண்டவர் இவர் என்பதால் தனியாக விமர்சனங்கள் இப்போது தேவை இல்லை.


Picture courtesy
http://louisproyect.wordpress.com/category/religion/
1819 caricature by British George Cruikshank. Titled “The Radical’s Arms”, it depicts the infamous guillotine. “No God! No Religion! No King! No Constitution!” is written in the republican banner.

Tuesday, September 18, 2007

சாதி உங்கள் சாய்ஸ !

ரசாங்க விண்ணப்ப படிவங்களில் சாதியை குறிப்பிடுவது கட்டாயம் இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பு

Child Cannot Be Compelled To Disclose Caste: SC
http://newspostindia.com/report-15455

Monday 17th of September 2007

The Supreme Court Monday observed that no school in the country can compel a child to disclose his caste at the time of admission.

A bench headed by Chief Justice K.G. Balakrishnan made the observation, saying the disclosure of one's caste could only be optional and not mandatory.

The bench dismissed a plea by an 81-year-old Gandhian from Tamil Nadu, Salemvelu Gandhi alias Velu, while yet terming the petition as having 'laudable objectives'.

The Gandhian had sought the court's direction to schools against seeking information about a child's caste at the time of admission, and pleaded this perpetuated casteism in the society.

The court said it was constrained to dismiss the petition owing to the practical difficulties in issuing the directions as several castes, including the Schedule Castes and Tribes and the Other Backward Classes, depend on the caste certificate issued by schools to avail the benefits of various affirmative actions of the state.

The bench said it cannot pass any direction on the issue as it would create problems for those who want to avail free scholarships and other benefits.


Schools cannot compel students to disclose caste: SC
http://www.rediff.com/news/2007/sep/17sc.htm

September 17, 2007 17:48 IST

The Supreme Court on Monday said schools in the country cannot compel students to disclose their caste status at the time of admission. Any such disclosure shall be optional, or in other words, it should be left to the discretion of the student to divulge his/her caste identity, a bench headed by Chief Justice K G Balakrishnan said.

The bench, however, dismissed a PIL filed by an 81-year-old freedom fighter, Salemvelu Gandhi alias Velu, from Tamil Nadu who sought a complete ban on "caste disclosure" forms circulated by schools to students during admissions.

The apex court, while appreciating the laudable objective of the petitioner, said it cannot pass any direction on the issue as it would create problems for those who want to avail free scholarships and other benefits.

The bench said the school-leaving certificate forms the basis for SCs, STs and BCs pursuing higher education or seeking jobs, as otherwise such beneficiaries would not be able to get the benefits.

ஜாதி என்ன? - பிரபு இராஜதுரை
http://marchoflaw.blogspot.com/2007/06/blog-post_16.html

தமிழக அரசு இந்தப் பிரச்னை குறித்து வெளியிட்ட அரசாணை எண்.1210 தேதி 02.07.73’. இந்த அரசாணையின்படி பள்ளிச் சான்றிதழ்களில் ஜாதி, மதம் போன்ற இடங்களை காலியாக விடவோ அல்லது இல்லை என்று குறிப்பிடவோ உரிமை உண்டு என்று அரசு கூறுகிறது.


படம் உதவி:
http://www.gutenberg.org

Wednesday, July 11, 2007

Rs Vs $$$ யார் எக்கேடு கெட்டால் என்ன?

பெரும்பாலான NRI க்கள் இந்தியாவின் ரூபாய் எப்போது குறையும் என்றே காத்து இருப்பார்கள். சந்தையில் தனது நாட்டு நாணய மதிப்பு குறைந்தால் சந்தோசப்படும் வித்தியாசமான மனிதர்கள். இவர்கள் மட்டும் அல்ல, உள்நாட்டில் இருந்து கொண்டே ஏற்றுமதித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பருப்புக்கடை முதலாளி தொடங்கி, பனியன் தயாரிப்பு ஓனர் முதல் மென்பொருள் ஏற்றுமதி செய்யும் கார்ப்புரேட் கம்பெனி வரை இந்தியாவின் நாணய மதிப்பு அதிகமானால் அதற்கு சாபம் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். Rs குறைந்து $$$ அதிகமானால் நல்லதே (யார் எக்கேடு கெட்டால் என்ன? )

பணவீக்கம் என்ற ஒன்று இந்தியாவில் வாழும் ஒரு சாதாண விவசாயியை,கூலித் தொழில் செய்பவனை எப்படி பாடாய் படுத்துகிறது என்று இவர்கள் யோசிப்பார்களா என்று தெரியவில்லை. சுயநலம் இருக்கலாம் ஆனால், அடுத்தவன் அழிவில் அது வரக்கூடாது . மற்றும் ஒரு தேசம் நாசமாய்ப் போகட்டும் என்று எண்ணுவது தவறு.

இந்தியாவின் பண மதிப்பு குறைய வேண்டும் என்று நினைக்கும் இந்தியர்களுக்கு குற்ற உணர்ச்சி இருப்பதும் ,இல்லாததும் அவர்களின் சுய மதிப்பீடு சார்ந்த விசயம். இந்தியாவின் ரூபாய் மதிப்பு எப்பொழுது குறையும் என்று காத்து இருப்பவர்களும்,வெளிநாட்டு வருமானத்திற்கு வரி இல்லை என்ற போதும் இன்னும் ஹவாலாவாக மாற்றிக் கொண்டு இருப்பவர்களும் அவரவரின் உணர்ச்சிகளை சுய மதிப்பீடு செய்து கொள்ளட்டும்.

அதிக மதிப்பை எட்டிய கரன்ஸிகளை உடைய நாடுகள் ஒன்றும் பிச்சைக்கார நாடுகள் இல்லை.அவர்களின் பண வீக்கம் கட்டுக்குள் உள்ளது. இன்னும் 1 cent ம் 10 fils ம் இன்னும் உபயோகத்தில் இருக்கிறது.பைசாதான் அழிந்துவிட்டது பணவீக்கத்தால்.

இந்தியாவின் பணவீக்கம் உயர்ந்தாலும் ரிசர்வ் வங்கி சும்மா இருக்க வேண்டும், அதை கட்டுப்படுத்தக்கூடாது அப்போதுதான் $$ ன் மதிப்பு ரூபாய்க்கு எதிராக உயரும் என்று நினைப்பது பச்சையான சுயநலம் இன்றி வேறு என்ன? பணவீக்கத்தால் பாதிக்கப்படுவது பங்குகளில் முதலீடு செய்யும் கனவான்கள் அல்ல. பணவீக்கம் எப்படி இருந்தாலும் இந்திய ரூபாய் சரிந்தால் சரி என்று எண்ணுபவர்களிடம் என்ன பேசுவது?

இந்திய பொருளாதாரம் இப்படி அல்லக்கையகவே இருக்கும் வரை.."ஒரு அளவுக்கு மேல் ரூபாய் உயர்வது இந்திய பொருளாதாரத்திற்கு கூட நல்லதில்லை... ஏனெனில் இந்திய ஏற்றுமதிக்கு பெரிய மதிப்பு இருக்காது" என்று சொல்லலாம். இப்படியே சிந்திப்பதால்தான் $$ கிடைக்கிறது என்று அரிசிக்குப் பதில் மூங்கில் போட விவசாயி தூண்டப்படுகிறான்…அவன் தின்பது எலிக்கறியாகவே இருந்தாலும்.


ரூபாயின் மதிப்பு கூடினால் பணவீக்கம் குறையும் என்பது உண்மையானால்,அதன் பயன்
சாமான்யனுக்கும் கிட்டும்.

பணவீக்கம் எக்கேடு கெட்டால் என்ன, ரூபாயின் மதிப்பு குறைந்தால் சரி என்றால்,
அதன் பயன் சாமான்யனுக்கு கிட்டாது.



ரூபாயின் மதிப்பு உயர்ந்தால் பணவீக்கம் குறையும் என்பதே எனது புரிதல்.

உள்நாட்டுப்பிரச்சனை,பொருளாதாரம் மற்றும் சர்வதேச பிரச்சனைகளால் $ன் மதிப்பு அதுவாக குறையும் போது , அதனைக் கொண்டு அளக்கப்படும் மற்ற நாணயங்களின் மதிப்பு உயர்ந்து காணப்படுவது இயற்கை. இந்த நேரத்தில் நமது ரிசர்வ் வங்கி டாலரை வாங்குவதும், அதனால் டாலருக்கு தேவை ஏற்பட்டு டாலர் சரியாமலும், ரூபாய் அதிகம் உயராமல் இருக்கும்படி செய்து ,ரூபாய் உயர்வதை ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்தி வைத்திருப்பதும் என்ன வகை பொருளாதாரம் என்று இன்றுவரை புரிந்தது இல்லை.

எனக்கு புத்தகங்கள் சொல்லிக் கொடுக்கும் பொருளாதாரம் தெரியாது. ஆனால் பணவீக்கத்தால் அழியும் சில வாழ்க்கைகள் தெரியும் என்றே நினைக்கிறேன்.பொருளாதாரப் புலி மன்மோகனுக்கே இந்த விசயம் இப்போதுதான் புரிந்துள்ளது.

பண வீக்கம் குறைந்து ஒரு சாதாரண மனிதன் தான் வாங்கும் சம்பளத்தில்/வருமானத்தில் குறைந்த பட்ச அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டால் அது நல்லது என்று நினைக்கிறேன். அதற்கு ரூபாயின் மதிப்பு கூட வேண்டும்.

தொடர்புடைய பதிவு:

இந்தியாவிற்கு பணம் அனுப்பாமல் டாலர் உயரும் என காத்திருப்பவரா நீங்கள் ?
http://stockintamil.wordpress.com/2007/07/10/indian-rupee-appreciates-to-nine-year-high

தகவலுக்காக:
Manmohan: taming inflation main aim http://www.hindu.com/2007/03/01/stories/2007030105441200.htm

Inflation in India is now uncontrollable because of Indian Government’s greed for Western money – PM Manmohan really scared now!
http://www.indiadaily.com/editorial/15407.asp

மற்றவர்களின் பார்வைகள்:

நாணய மாற்று வீதமும் ஏற்றுமதியும்http://porulsey.blogspot.com/2007/07/blog-post.html

மூலிகை பயிரிடுபவர்கள் முட்டாள்களா?
http://ullal.blogspot.com/2007/06/blog-post_5067.html

விவசாயத்தின் பேரழிவும் - உயிர்ம எரிபொருளும்!
http://poar-parai.blogspot.com/2007/07/blog-post.html





Picture Courtesy
http://www.savedahorses.com/

Wednesday, May 09, 2007

குழந்தை வளர்ப்பு என்னும் Cheap and Un-Attractive job


ரண்டு பேர் வேலை பார்க்கும் இன்றைய நவநாகரீக குடும்பத்தில் இருந்து எதை out source செய்யாலாம் என்று கணவன் மனைவி உட்காந்து யோசிச்சாலோ அல்லது ரூம் போட்டு யோசிச்சாலோ இன்ஸ்டன்ட் ஆக வரும் பதில் "குழந்தை வளர்ப்பு". யாரவது " ஏன் இவர்களுக்கு அப்பா ,அம்மா இல்லையா? தாத்தா பாட்டயிடம் குழந்தையை விட வேண்டியதுதானே ? " என்று கேட்டால் நீங்கள் இன்னும் கற்காலத்தில் வாழ்கிறீகள் என்று அர்ததம்.

தாத்தா பாட்டி பராமரிப்பு (??) (ஆம் வீடு கார் போல இவர்களும் ஜடம்தான். ஜடப் பொருளை பராமரிக்காமல் என்ன செய்வார்கள்?) என்ற வேலையை ஏற்கனவே காப்பகங்களுக்கு out source செய்தாகி விட்டது.மிச்சம் இருப்பது குழந்தை வளர்ப்பு மட்டுமே.இதனையும் out source செய்துவிட்டால் கார்ப்பொரேட் லேடரில் வேகமாக ஏறிவிடலாம்.

அமெரிக்காவில் வாழும் மிகவும் விவரமான சில குடும்பங்கள் இப்போது ஒரு நல்ல பார்முலாவைப் பின் பற்றுகிறார்கள்.வாய்ப்பு இருந்தால் வெளிநாட்டில் வாழும் வரைக்கும் குழந்தையை இந்தியாவில் பாட்டி வீட்டில் விடுவது.ஏன் என்றால் வெளிநாட்டில் babay sitting என்பது காஸ்ட்லி. எனவே பிள்ளையை இந்தியாவில் தாத்தா,பாட்டி வீடுகளுக்கு out source ஆக அனுப்புவது ரொம்ப நல்லது.பிள்ளைகள் அது பாட்டுக்கு குறைந்த செலவில் வளர்ந்து வரும்.அவ்வப்போது டெலிபோனில் கொஞ்சிக் கொள்ளலாம்.


பச்சை அட்டை,குடியுரிமை எல்லாம் வாங்கியபின்னால்,ஒரு வேளை இந்தியா வந்தால் கூட,குழந்தை வளர்ப்பு போன்ற பிக்கல் பிடுங்கல் இல்லாமல், பாட்டிகளால் வளர்க்கப்பட்டு இப்போது வளர்ந்துவிட்ட "potty trained and portable" குழந்தைகளுடன் வாழலாம். அல்லது குழந்தைகள் நன்றாக வளர்ந்தவுடன் அழைத்துக் கொள்ளலாம்.

இந்தியாவிலேயே இருப்பவர்கள் ,இந்தியாவில் இப்போது கொட்டிக் கொடுக்கும் அதிகச் சம்பள வேலையை விட்டுவிட்டு, வீட்டில் இருந்து பிள்ளையை வளர்க்க யாரும் விரும்புவார்களா என்ன? வீட்டில் இருக்க வேண்டும் என்றால் யாராவது ஒருவர் வேலையைவிட வேண்டும் அல்லது குழந்தை வளர்ப்புக்கும் நேரம் அமையும் வகையில் வேறு வேலை தேட வேண்டும்.இதையெல்லாம் செய்வதற்கு இவர்கள் என்ன பைத்தியங்களா?

மாதம் சில ஆயிரம் கொடுத்தால் ஒரு வேலைக்காரப் பெண்களைப் பிடித்து விடலாம்.எல்லா வேலையையும் செய்ய சில ஆயிரம்தான் சம்பளமா என்று யாராவது துடுக்குத்தனமாக இங்கே பேசப்படாது.எனக்குத் தெரிந்து சில குடும்பங்களில் 3 வேலைக்காரிகள் உள்ளார்கள். ஒருவர் துடைத்தல்,கழுவல் வேலைகளுக்கு. இரண்டாமவர் சமையலுக்கு.மூன்றாமவர் பிள்ளை வளர்க்கும் தொழிலுக்கு.மூன்றாமவர் மட்டும் வீட்டிலேயே தங்கி இருப்பவர்.

இன்னும் இந்த மாதிரி ஹை-புரபைல் தம்பதிகளின் sex மட்டும் out source ஆக வில்லை.அதுவும் ரொம்பப்பேர் அதற்கெல்லாம் நேரம் இல்லை என்று சொல்லி விடுகிறார்கள்.இப்படி எல்லாம் வாழ்ந்து இவர்கள் என்ன சாதிக்கப் போகிறார்கள்? அப்படீன்னு கேட்குறீங்களா? அதெல்லாம் ரொம்ப சிம்பிள் ஜென்டில்மேன். ஒரு வீடு,ஒரு கார்,அதிகச் சம்பளம்தரும் வேலை அப்புறம் செல்போன்,iPOD,லொட்டு லொசுக்கு ..இப்படி பட்டியல் நீளும்.இதை யெல்லாம் அடைந்து விட்டால் அப்புறம் வாழ்க்கை வந்துவிடுமா என்ன? அதெப்படி வரும்? பணம் இருந்தால் வாழ்க்கை வந்துவிடும் என்று இருந்தால் அப்புறம் வாழும் கலை சிரி.சிரி.சிரி ரவிசங்கர பாபா என்ன பண்ணுவார்? அவருக்கும் பிஜினஸ் போனியாக வேண்டாமா?

யாருப்பா அது குப்பத்துல இருந்து கொரல் கொடுக்குரது? நீயெல்லாம் வாழவே லாயக்கு கிடையாது. உன்ன மாதிரி ஆளுக்கெல்லாம் சிரி.சிரி ரவிசங்கரர் வந்து வாழும் கலையை சொல்லிக் கொடுக்கமாட்டார். அவரின் இலக்கே பிஜினஸ்மேன் அப்புறம் நல்லா சம்பாரிச்சு சம்பாரிச்சு சம்பாரிச்சே பணம் மட்டுமெ சேர்த்த இந்த மாதிரி நடுத்தரவர்க்க லூசுகள்தான்.நீ போடும் பிச்சைக்காசு உண்டியலுக்கு பகவான் திருப்பதியே அருள் கொடுக்க மாட்டார்.அப்புறம் சிரி.சிரி ரவிசங்கர பாபா எப்படி பாடம் எடுப்பார்? போ அப்பாலா.நீ வாழும் சேரிக்கு வந்து வாழும் கலையை சிரி.சிரி ரவிசங்கர பாபா சொல்லித்தரவே மாட்டார். வாழவே இலாயக்கில்லாத உன் போன்ற ஜந்துகளுக்கு இவர் வந்து பாடம் நடத்த இவர் என்ன களஞ்சியம் சின்னப்புள்ளையா? போ அப்பால.

முன்னயெல்லாம் புருசனும் பொஞ்சாதியும் எங்கவாது ஊருக்கு கிளம்பினால் பஸ்,இரயில் என்று ஏதாவது ஒன்னை பிடிக்க காத்திருக்கும் நேரத்தில அன்பாக கொஞ்சிக் கொள்ளாவிட்டாலும் ஊர்ப்பொரணி,உலகப்பொரணி பேசுவாங்க.அல்லது குறைந்த பட்சம் சண்டையாவது போடுவாங்க. ஏன் பெரியவனுக்கு இந்த சட்டை போட்ட. உன்னோட ஆததா இவன் பொறந்தப்ப எடுத்த இந்த பீத்த சட்டையை இப்ப மூணு வயசாகியும் போடனும்னு என்ன வேண்டுதலா....என்ற ரீதியில் ஏதேனும் ஒரு சண்டை போடலாம்.

இந்த நவ நாகரீக உலகத்தில் இப்ப எல்லாம் ரெண்டுபேரும் பக்கத்துல பக்கத்துல இருந்தாலும் ஆளுக்கொரு போனில் யாரவது ப்ரொஜக்ட் மேனஜரிடமோ அல்லது வேற்றுக்கிரக நண்பர்களிடமோ பேசிக்கொண்டு இருப்பார்கள்.இந்த வள்ளலில் இவர்கள் எப்படி குழந்தையை வளர்ப்பார்கள்? இந்தியாவில் குறைந்த செலவில் வேலையாட்கள் கிடைப்பதால் பெரும்பாலோனோரின் வாழ்க்கையை அவ்ர்களின் வேலையாட்கள்தான் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள். பணம் சம்பாதிப்பது மட்டுமே தம்பதிகள்.குழந்தையை குளிப்பாட்டுவது முதல் பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்துவந்து தூங்க வைப்பதுவரை வேலையாட்கள்தான்.குழந்தை வளர்ப்பில் மட்டுமல்ல கடைக்குச் சென்று பால் வாங்குவது போன்ற வேலைகளுக்கும் ஆள்தான்.

எல்லாம் சரி வாழ்தல் என்றால் என்ன ?

நுகர்வு மயமாகிப் போன வாழ்க்கையில் வாங்கிக் குவிப்பதே (சம்பளம் உட்பட) வாழ்க்கையின் குறிக்கோளாகப் போய்விட்டது.

சாப்பாட்டை மட்டும் நான் என் கையில் சாப்பிடுவேன் ஆனால் ஆசனவாயைத் துடைக்க வேலையாள் வைத்துக் கொள்வேன் என்று இருக்கமுடியுமா? அப்படித்தான் வாழ்கிறார்கள் பெரும்பாலனவர்கள்.

வாழ்வது என்பது அனைத்திலும் பங்கேற்பதுதான்.

(தொடரும்.....)


imageQE5.JPG Courtesy
http://www.cafcc.org/imageQE5.JPG





Tuesday, April 17, 2007

யாரோடு பேசினால் அனுபவம் கிடைக்கும்?

குமுதத்தில் வைரமுத்துவின் கேள்வி-பதில் பதில் பகுதியில் இருந்து சடாரென்று எனது மனதில் பதிந்த ஒன்று...








கேள்வி:
யாரோடு பேசினால் அனுபவம் கிடைக்கும்?

பதில்:
  • ஓய்வு பெற்ற நீதிபதிகள்.
  • காத்திருப்போர் பட்டியலில் உள்ள காவல்துறை அதிகாரிகள்.
  • அரைவயதில் களமிழந்த அரசியல்வாதிகள்.
  • நட்சத்திரங்களின் ஒப்பனைக் கலைஞர்கள்.
  • கட்டிய வீட்டில் திண்ணைக்கு எறியப்பட்ட கிழவன்.
  • மூத்த சவரத் தொழிலாளி.
  • விதவைகளின் மாமியார் மற்றும் விலைமகளின் தாயார்.
படம் மற்றும் செய்தி:
http://www.kumudam.com/magazine/Kumudam/2007-04-18/pg6.php








Wednesday, April 11, 2007

..and he is a chief mentor for infosys...

னது நாட்டின் தேசியகீதத்தை அதுவும் தனது நாட்டின் ஜனாதிபதி/குடியரசுத் தலைவர் கலந்து கொள்ளும் விழாவில் பாடுவது தனது நிறுவனத்தில் உள்ள ஒரு சில வெளிநாட்டு ஊழியர்களுக்கு தர்ம சங்கடம் ஏற்படுத்தும் என்று கூறும் இவர், ஒருவேளை அடுத்த ஜனாதிபதியாகிவிட்டால்,வெளிநாட்டு பார்வையாளர்கள் முன்னால் குடியரசு தினத்தன்று என்ன செய்வார்?


.....and he is a chief mentor for infosys....


பெங்களூரில் மெத்தப்படித்த் IT கணவான்கள் சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசலில் காத்திருக்க முடியாமல் சாலையின் இருபுறமும் உள்ள நடைபாதையில் இரு சக்கர போட்டார் வாகனத்தை ஓட்டிச் செல்வார்கள். வெற்றி ஒன்றே இலக்கு.அதை எப்படி அடைவது என்பது முக்கியமில்லை.இது போன்ற mentor கள் இருக்கும் நாட்டில் நிச்சயம் புதிய வேலைவாய்ப்புகள் வரும் ஆனால் அதன் விலை...??

***

இதுல பெரிய காமெடி என்னவென்றால் இவர் கொடுத்துள்ள இன்னொரு ஸ்டேட்மென்ட்

http://www.deccanherald.com/deccanherald/apr112007/index247102007411.asp

Mr Murthy on Tuesday, in a statement, said: “If my statement reported in the media has hurt anybody’s sentiments, I deeply apologise.”

இவர் சொன்ன விசயம் இன்னும் இவருக்கு தவறாகப்பட்வில்லை. மற்றவர்களின் sentiment பாதிக்கப்பட்டு இருந்தால் வருந்துகிறாராம்.

-------------
Deccan Herald Monday, April 9, 2007

National anthem could make foreigners at Infy uneasy: NRN DH News Service Mysore:

"We had arranged for five people to sing the anthem. But then we cancelled it as we have foreigners onboard here. They should not be embarrassed while we sing the anthem," said Infosys chief mentor Narayana Murthy. As per the protocol, the national anthem was played twice at Infosys campus here as President A P J Abdul Kalam stepped in and out -- the only difference being, it sounded like a bad arrangement of musical notes. In other words, the anthem, which should command the utmost respect from all true-blue Indians, did not get its due, from whoever was responsible -- the speakers at the do or the person who ‘orchestrated’ it.
Which made many wonder: Among the 5,000 employees, most of them Indians, wasn’t there a decent group of singers who could sing the anthem of the country without discomfiting its first citizen?

When the media posed this question to Infosys Chief Mentor N R Narayana Murthy after the event, he said: “Indeed, we had arranged for five people to sing the anthem. But then we cancelled it as we have foreigners onboard here. They should not be embarrassed while we sing the anthem.”

‘Super campuses’

Then what is India-based Infosys doing to enhance the image of India apart from ‘creating wealth and building super campuses’? “We will correct it next time,” was all Mr Murthy had to say, clearly riled by the mention.
Meanwhile, just as the “band” national anthem (played on keyboard) was played towards the end of the programme, President Kalam sang along with child-like enthusiasm while others barely moved their lips.

Somebody was heard, asking: “Was it too much to pay due attention to the revered symbols of the nation just so that a small percentage of foreign trainees don’t get fidgety”.

http://www.deccanherald.com/deccanherald/apr92007/state05631200749.asp

News courtesy: Deccan Herald

-----------------------------------------------------

அமெரிக்காவில் உள்ள உப்புமா சங்கங்களில் (தமிழ்ச்சங்கம்,கன்னடியர் சங்கம்,தெலுங்கர் சங்கம்,குஜராத்தி ...)பல வெளிநாட்டினரின் முன்னாள் இந்திய தேசிய கீதம் பிரச்சனை இல்லாமல் பாடப்படுகிறது.வெளிநாட்டினர் அவர்கள் வசிக்கும் ஒர் நாட்டின் அல்லது அவர்கள் கலந்து கொள்ளும் ஒரு நாட்டின் விழாவில் அந்த நாட்டின் தேசியகீதம் அவர்கள் முன்னால் பாடப்படுவதை பிரச்சனையாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.



அமெரிக்காவின் தேசியகீதம் பாட அவுட்சோர்ஸிங் நடந்தால் $க்காக 24 மணிநேரமும் யார் முன்னாலும் பாடலாம் நாம்.


















நாரயணமூர்த்தி மன்மோகன்சிங் புனிதர்களா?
http://kalvetu.blogspot.com/2006/10/blog-post_09.html

Why Narayana Murthy will make a poor President
http://churumuri.wordpress.com/2007/03/28/why-narayana-murthy-will-make-a-poor-president

An Open Letter to Mr.Narayan Murthy (NRN)
http://batrasden.wordpress.com/tag/open-lettr-narayan-murthy-nrn-infosys-politics-india

Blogs boil at Murthy’s anthem remark
http://newindpress.com/NewsItems.asp?ID=IE120070409110340&Page=1&Title=Bangalore&Topic=0

Narayana Murthy as a Cornell Trustee
http://www.kamalsinha.com/iit/people/narayana-murthy/cornell.html




















Thursday, March 15, 2007

They don't use ANYTHING during menses ..felt criminal


Dear Friends,
A cold winter morning of 2007, about 30 kms from Patna, I was in Gidhdha, a village of Moosahari's, a 35-lakh strong community spreadacross Bihar, known for eating even rats in dire circumstances of poverty & survival.

We were with people who often dig a hole in the nights to make their kids sleep and cover them with dry grass to save them from the cold.This is a place where women tell you that they don't use ANYTHING during menses, and they can't take a bath because there is NOTHING tochange

We felt criminal, wearing sweaters and jackets. For every person who dies because of cold and for every woman who goes through a bad phasewithout a piece of cloth, we found ourselves answerable…not because it's our doing but because we are not doing enough.

I remembered a radio channel holding hundreds of sweaters because they wanted a celebrity to hand it over to us and they were not gettingdates. I remembered corporates who didn't send material to us because after collection they were waiting for the right moment to organize anevent to do it. I also thought of millions of individuals who keep the material with them in search of a real needy or waiting for adisaster…

Don't you agree that for people who roam around naked in peak winters or die because of cold, winters are a much bigger annual disaster thanearthquake or floods? For millions of women, even menses is a monthly disaster if they are forced to roam around even without a piece ofcloth to use as a napkin.

We have decided to do something; every year in addition to our present role, we will take up 100 villages and ensure that no one in thesevillages remains without clothes. That means generating over 1,00,000 kgs of extra material every year. In 2007, we will do this for 100such villages of Bihar and it has already started from Gidhha, the village I mentioned earlier.
If you understand the seriousness of this issue then I'm sure we will able to go way beyond this commitment. By simply giving us anyunwanted cloth you have in your wardrobe, you can change the realities for these people.

Do visit http://www.goonj.info/clothincentive.php to see some realities.
Work on it. Open up your mind. Make some efforts…
More on our activities in the Newsletter..
Happy reading !!
Anshu
Anshu K. Gupta ( Ashoka Fellow )
Founder -DirectorGOONJ..
Tel.- (m)-98681-46978, (o)-011-26972351Add-J-93, Sarita vihar, New Delhi-76
E-mail-
anshu_goonj1@yahoo.co.in,
anshugoonj24@gmail.com

Website- www.goonj.info

***
GOONJ Founder -Director Anshu K. Gupta விடமிருந்து வந்த e-mail அப்படியே இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் உலகின் 500 பணக்காரர்களில் 3 பேர் இருப்பதும், SEZ பற்றிய செய்திகளும் ஏனோ மனதில் வந்து போகின்றன.

உதவ விருப்பம் உள்ளவர்கள் மேலே உள்ள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
***

தமிழக முதல்வர் அவர்களுக்கு
http://kalvetu.blogspot.com/2006/05/blog-post_114913553794167251.html

Tuesday, February 27, 2007

சுடர்: இன்னும் எத்தனை நாளைக்கு நம் உயிர்ச்சுடர்?

தேன்கூட்டின் இந்த சுடர் தொடர் ஓட்டத்தை உருவாக்கிக் கொடுத்த சாகரன் தற்போது நம்மிடையே இல்லை.அவர் அறிமுகப்படுத்திய இந்தச் சுடர் ஓட்டத்தில் நானும் பங்குகொள்ள வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியே.அவரின் குடும்பத்தினரின் வலிகளுக்கு காலம்தான் மருந்து. தேன்கூடு திரட்டியின் சாகரன் (கல்யாண்) அவர்களுக்கு அஞ்சலி
**********************************************************


பசகுணமாக நினைக்க வேண்டாம்.இன்று இருப்பவர்கள் நாளையும் இருப்பதற்கான எந்த உறுதியும் கிடையாது.குழந்தைகளாகப் பிறக்கும்போது நாம் 60 அல்லது 70 வருட வாரண்டியுடன் அல்லது 50 வருட ஸ்பேர் பார்ட்ஸ் மாற்றம் இலவசம் என்பது போன்ற இலவசங்களுடன் பிறப்பது இல்லை.வாழும் ஒவ்வொரு நாளையும் பொழுதையும் முடிந்தவரை இன்பமாக,அடுத்தவருக்கு தொல்லை இல்லாதவாறு வாழ்ந்தாலே போதும்.எந்த மதங்களும் நமக்கு வாழும் காலத்தில் சொர்க்கத்தை காட்டுவது இல்லை.

யாருக்குத் தெரியும், வேற்று கிரகங்களில் நாம் முதலில் பிறந்து இருக்கலாம்.அங்குள்ள கடவுள்கள் அங்கு நாம் செய்த பாவத்திற்காக நம்மை தண்டித்து, இப்போது நம்மை இந்தப் பூமியில் பிறக்கச் செய்து இருக்கலாம்.அவர்களின் பார்வையில் நாம் வாழும் பூமியே உண்மையில் நரகமாக இருக்கலாம்.

இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்பட்ட கதையாக இல்லாமல், நாம் வாழும் இந்த கணத்தில் முடிந்தவரை அன்புடன் வாழ பழகிக்கொள்வோம்.எல்லா மதங்களும் அவற்றைப் பின் பற்றுபவர்களுக்கு மன்னிப்பு,சொர்க்கத்தில் ரம்பை,சுவனத்தில் பெருமுலைக் கன்னியர்,பரிசுத்த ஆவியின் அரவணைப்பு என்று இலவச சலுகைகளாக அள்ளி விட்டுக் கொண்டு இருகின்றன.என்ன கொடுமை என்றால், இவை எல்லாமே இங்கேயே, இதே பூமியில் இப்போதே கிடைக்கிறது. HIV இலவசம்.

இங்கே தவறு என்று அறியப்பட்டவை எல்லாம் சொர்க்கத்தில் இலவசம் என்பதால் மனிதனும் வரிசையில் நின்று சொர்க்கவாசல் திறக்க காத்து கிடக்கிறான்.தாய்லாந்தில் பெருமுலைக்கன்னியர் வியாபாரம் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று.அமெரிக்காவின் போர்னோ தொழில் பட்ஜெட் மெக்டொனால்டு + கோக் இரண்டும் சேர்ந்த வருடாந்திர பட்ஜெட்டைவிட அதிகம்.இதற்காக செத்து சுவர்க்கத்திற்கோ அல்லது சுவனத்திற்கோ போக வேண்டுமா? கடவுளிடம் மன்னிப்பு கேட்பதற்குப்பதிலாக கணவன் மனைவி தங்களுக்குள் மன்னித்தும்,விட்டுக் கொடுத்தும் வாழத் தொடங்கினால் சொர்க்கம் வீட்டிலேயே இருகிறது. இதற்காக செத்து சுண்ணாம்பாகி அதன்பின் பரிசுத்த ஆவியால் மன்னிக்கப்பட வேண்டுமா?

ஒரு குழந்தையுடன் 10 நிமிடம் பேசினாலே சொர்க்கம் தெரியும்.அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரிந்தும் சொல்ல முடியாமல் நாம் திணரும் போது நரகம் நம் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் தெரியும்.இதற்காக சொர்க்கவாசலில் காத்து இருக்க வேண்டுமா? நீ சொர்க்கவாசல் என்று எண்ணும் இடம்தான் பலர் கஞ்சிக்கே பிச்சை கேட்கும் இடமாக இருக்கிறது.கவனித்தது இல்லையா?


சொர்க்கமும் ,நரகமும் இங்கேயே உள்ளது.நீங்கள் எதை சொர்க்கம் என்று நினைக்கிறீர்கள் அல்லது நரகம் என்று நினைக்கிறீர்கள் என்பது உங்களின் தேவை சார்ந்தது.இதற்காக எல்லாம் வரிசையில் நின்று பஜனை பாடிக் கொண்டு இருக்க வேண்டாம். அவர்கள் நீங்கள் செத்த பிறகு கிடைக்கப் போகும் எதோ ஒன்றுக்கு,அதாவது பொருளை விற்காமலேயெ வாரண்டி தருகிறார்கள். யோசித்துப் பாருங்கள்.

அது தேவையா?
சாதி,மதம் பொருட்டு வரும் சச்சரவுகள் தேவையா?

எல்லாம் உங்களின் சிந்தனைக்கு......

இனி நிர்மல் அவர்களின் கேள்விகளுக்கு பதில்கள். சுடர் யாருக்கு வரும் என்பதே தெரியாத விசயம். நானே தேன்கூட்டில் ஏன் சுடர் ரொம்ப நாளாக அப்படியே "Y" என்று நின்றுவிட்டது என்று பார்த்துக்கொண்டு இருந்தேன்.நிர்மல் என்ன எழுதியிருக்கார் என்று படிக்கவும் நேரமில்லை.தற்செயலாக எனது பிளாக்கரை பார்த்தபோது பின்னூட்டமாக நிர்மல் சுடரை ஒப்படைத்து இருந்தார். நன்றி நிர்மல்!

************************************************
இவை யாவும் எனது கருத்துக்கள் மட்டுமே.வானத்தில் இருந்து பார்த்தால் ஒரு புள்ளியாகத் தெரியும் குதுப்மினார் , அருகில் இருந்து பார்த்தால் பிரமாண்டமாக இருக்கும்.எல்லாம் நாம் எங்கிருந்து பார்க்கிறோம் என்பதைப் பொருத்தது.இந்தக் கேள்விகளுக்கு பதில்.
















1) சாதி, இனம், மொழி , தேசியம் என்ற வளையங்கள் குறித்து தங்கள் கருத்தென்ன?

வளையங்கள்:
Human is a Social Animal. மனிதன் குழுவாகவே வாழ விரும்கிறான்.யாரும் அதற்கு விலக்கல்ல.நண்பர்களுடன் இருப்பது, தனக்கென்று ஒரு அடியாளம் ஏற்படுத்திக் கொள்வதும்,அந்த அடையாளங்களை ஒத்த பிறருடன் பழகுவதும் இயல்பானது.மனிதனுக்கு பல்வேறு காரணங்களுக்காக ஏதோ ஒரு குழு அடையாளம் தேவைப்படுகிறது.அரிமா சங்கத்தில் ஆரம்பித்து ஆகாயத்தை ஆராயும் Space Research Association வரை மனிதன் குழுவாக ஏதோ ஒரு வேலையை (அல்லது வெட்டி வேலையை) செய்து கொண்டே இருக்கிறான்.

இந்த வளையங்கள் எதன் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது என்பதும், அடையாளங்கள் எந்த தகுதியின் அடிப்படையில் வழங்கப்படுகிறது என்பதும்,எதை முன்வைத்து இவர்கள் குழுவாக இயங்குகிறார்கள் என்பதும் முக்கியமான ஒரு விசயம்.

சாய்பாபாவைச்சுற்றி ஒரு கூட்டம் அதே சமயத்தில் மைக்ரோ பைனான்ஸ்-யூனுஸ்சைச் சுற்றியும் ஒரு கூட்டம்.முத்துராமலிங்கத் தேவரைச் சுற்றி ஒரு கூட்டம் அதே சமயம் தேவகுமாரனைச் சுற்றியும் ஒரு கூட்டம்.அல்லாவைச் சுற்றி ஒரு கூட்டம் அதே சமயம் ஆறுமுகனைச் சுற்றி ஒரு கூட்டம்.விரும்பியோ விரும்பாமலோ ,தெரிந்தோ தெரியமலோ மனிதன் எப்போதும் ஏதோ ஒரு குழு வளையத்தில் இருக்கிறான்.

பள்ளிக்காலத்தில் (நான் 6 ஆம் வகுப்பு சேர்ந்தவுடன்) வகுப்பில் உள்ள எல்லா மாணவர்களையும் உயரத்தின் அடிப்படையில், உயரம் குறைந்த மாணவனில் ஆரம்பித்து, அதிக உயரம் கொண்ட மாணவன் வரை வரிசையாக நிற்கவைத்து house பிரிப்பார்கள்.ஒரு பள்ளியில் 4 houses இருக்குமானால் 1,2,3 and 4 என்று சொல்லச் சொல்லியோ அல்லது Red,Blue,Green and Yellow என்று சொல்லச் சொல்லியோ பிரிப்பார்கள்.பிரித்தவுடன் அவனவன் ஒரே வகுப்பறையில் இருந்தாலும், ஒரு புதிய வண்ணம் பூசப்பட்டவன் ஆகி விடுவான். விளையாட்டுப் போட்டிகளின்போது, ஒரே வண்ண அடையாளம் உடையவர்கள் தனது வகுப்பையும் தாண்டி பள்ளியில் உள்ள மற்ற அனைவருடனும் சேர்ந்து அடுத்த வண்ணத்தினரை போட்டியில் வெல்ல முயற்சி செய்வார்கள்.

வளையங்கள் (குழுக்கள்) தேவையா என்றால் எனது பதில் ஆம் தேவையே.ஏனென்றால் இது தவிர்க்க முடியாதது.

ஆனால் நாம் அந்த வளையத்தில் இருப்பதன் நோக்கம் என்ன? என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். எப்படி/எதனால் இந்த வளையத்தில் தேர்ந்தெடுக்கப் பட்டோம்? என்பதும் தெரிய வேண்டும். அதே சமயத்தில் நமது சொந்த கொள்கை விருப்பு /வெறுப்புகளுக்கு மாறாக நாம் உள்ள வளையம் செயல்பட்டால், பிடிக்காத பட்சத்தில் வெளியேற தைரியம்/சுதந்திரம் இருக்க வேண்டும்.

20 வயது வரைக்கும் நாம் சில வளையங்களில் நமது விருப்பம் இல்லாமலேயே சேர்த்து விடப்பட்டு இருக்கிறோம்.அந்த காலங்களில் நம்மால் அதை கேள்வி கேட்கவோ அல்லது பிடிக்காத பட்சத்தில் வெளியேறவோ முடியாமல் இருந்திருக்கலாம்.ஆனால் அந்த வயதிற்கும் மேலும் பிடிக்காத,கருத்துக்கு ஒத்துவராத அல்லது கேள்வி கேட்பதே தெய்வக் குத்தம் என்ற அளவில் இருக்கும் வளையங்களில், மந்தையில் ஒரு ஆடாக இருப்பது கேவலம்.
பள்ளிக் காலத்தில் என்னால் ஒரு house -ல் இருந்து இன்னொரு house-க்கு மாற முடியவில்லை. House captain க்கும் எனக்கும் ஒத்து வராததால் விளையாட்டு ஆசிரியரிடம் hosue மாற விண்ணப்பித்தேன் அவர் "போடா வேலையப் பாத்துக்கிட்டு" என்ற ரேஞ்சில் பதில் சொல்லிவிட்டார். அது 11 வயதில். இப்போது நான் எனது வளையங்களைத் தேர்ந்தெடுக்க முடியும். பிடிக்காத பட்சத்தில் விடவும் முடியும்.

தேசியம்:

Whether you like it or not you are a citizen of a country. You can change the citizenship from one country to other but you can not live without a citizenship. You always belong to A country. No choice.

முதலில் தேசியம் என்றால் என்ன? என்பது வரையறுக்கப்பட வேண்டும்.தேசியம் பற்றிய எனது புரிதல்களும் உங்களின் புரிதலும் வேறாக இருக்கலாம்.

நாடு என்ற கட்டமைப்பு புவியியல் எல்லை கொண்ட ஒன்று.தான் சார்ந்துள்ள நாட்டின்பால் அன்பும் அதன் வளர்ச்சியில் அக்கறை கொள்வதும் தேசிய உணர்வின் குறைந்தபட்ச தேவை என்று சொல்வேன்.ஒரு நாட்டின் நலனின்பால் அதன் குடிமகன் செலுத்தும் அக்கறை தேசியம் அல்லது தேசிய உணர்வு என்று சொல்லலாம்.

இது பற்றி ஒரு அருள் மற்றும் அசுரன் பதிவுகளில் பின்னூட்டமாக நான் ஏற்கனவே சொன்ன சிலவற்றை இங்கேயும் சொல்கிறேன்.

ஒரு தேசியத்துக்குள் வரும் மனிதர்கள் அந்த தேசியத்தின் கீழ் ஒரே அடையாளமாகப் பார்க்கப்படுவார்கள்.இவர்களின் தேசிய உணர்வு அடுத்த நாட்டு மக்களால் தவறாகப் பார்க்கப்படும்.இது உலகெங்கும் நடைபெறும் ஒன்று.இந்தியர்களின் பாதுகாப்புக்காக போராடிய தேசபக்தர்கள் யாரால் மதிக்கப்படுவார்கள்? இந்தியர்களால் மட்டுமே.அது மற்ற தேசத்தவர்களுக்கு ஒரு பொர்ருட்டே அல்ல.பகத்சிங் நமக்கு ஹீரோவாக தோன்றும் அதே நேரத்தில் பிரித்தானியர்களுக்கு துரோகியாகத்தான் தெரிவார்.

ங்களுக்கு உங்களின் நாட்டின்பால் தேசிய உணர்வு இல்லை அல்லது அக்கறை இல்லை என்று கொள்வோம். இப்போது நீங்கள் என்ன செய்யலாம்?

  1. பிடித்த நாட்டிற்கு குடியுரிமை வேண்டி விண்ணப்பிக்கலாம்.கிடைக்கும் பட்சத்தில் மாறிவிடலாம்.
  2. இருக்கும் நாட்டை இரண்டாகப் பிரித்து புதிதாக ஒன்றை நீங்கள் நிர்மாணிக்கலாம்.(நீங்கள் நிர்மாணம் செய்யும் புதிய நாடு இன்னொருவருக்கு பிடிக்காமல் இருக்கலாம்.)

நீங்கள் பூமியில் பிறக்கும் நாட்டை உங்களால் தீர்மானிக்க முடியாது. ஆனால், ஒரு வயதிற்குப்பின் எந்த நாட்டில் வாழலாம் அல்லது எந்த நாட்டிற்கு குடியுரிமை வேண்டி விண்ணப்பிக்கலாம் என்பது உங்கள் கையில்.

ருக்கும் நாட்டை எத்தனை நாடுகளாக பிரித்தாலும் உடைத்த பிறகு வரும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டே ஆகவேண்டும். அதுவும் பிடிக்கவில்லையா அதையும் உடை...பிடிக்காமல் எத்தனை முறை உடைத்தாலும் ,அந்த உடைப்பினால் வரும் புது நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டேயாகவேண்டும்.

வேறு நாட்டிற்கு குடி பெயர்ந்தாலும் அந்த புதிய நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டே ஆகவேண்டும்.

யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு நாட்டின் குடிமகன்களே.

அப்படி இருக்கும் பட்சத்தில் ஒருவன் தானாக மனமுவந்து தனது தேசமாக என்னும் (கவனிக்க அவன் அவனாக நம்பினால்தான் உண்டு) அந்த நாட்டின் நல்லது/கெட்டதுகளில் பங்கேற்று வாழ்வது அவன் கடமைகளில் ஒன்று.தேசிய உணர்வு இல்லாத பட்சத்தில் கட்டுப்படல் என்பது முடியாது.பிறகு வாழ்க்கையே இம்சைதான்.

ந்த நாடும் பிடிக்கவில்லையா பாஸ்போர்ட்டை தூக்கி குப்பையில் போட்டு விட்டு ஒரு International Airpot -ல் செட்டிலாகி விட வேண்டும்.அல்லது காட்டிற்குள் போய்விடவேண்டும்.

தேசியம்/தேசப்பற்று என்றால் என்ன?


ஒரு வீட்டை உங்கள் வீடு என்று நம்பும் பட்சத்தில் (அய்யா நீங்களாக நம்பும் பட்சத்தில்) என்ன செய்ய மாட்டிர்களோ/செய்வீர்களோ அது எல்லாம் ...நீங்கள் உங்கள் நாடு என்று நம்பும் (அய்யா நீங்களாக நம்பும் பட்சத்தில் தான்) நாட்டிற்கும் பொருந்தும்.உங்கள் வீடாக இருந்தாலும் சமூத்தில் (தெரு,பஞ்சாயத்து..) இருந்து நீங்கள் விலக முடியாது (காட்டிற்கு போனால்தான் உண்டு..அங்கேயும் கூட்டம் வரும் போது இதே பிரச்சனைதான்) அது போல் நாட்டின் சட்டதிட்டங்களில் இருந்தும் விலக முடியாது.

பிடிக்காத ஒரு நாட்டின் அடையாளங்களை தாங்குவது, விரும்பாத மனைவியுடன் (அல்லது கணவனுடன்) ஊருக்காகச் சேர்ந்து வாழ்வது போல ஆகிவிடும்.ஒருவன் தனக்கு முதலில் உண்மையாக இருக்க வேண்டும்.தன்னையே நேசிக்கத் தெரியாதவனின் எந்தப் பற்றும் (குடும்பம்,தெரு,ஊர்,மாநிலம்,நாடு,உலகம்...) போலியானது.

முதலில் ஏதாவது ஒரு நாட்டைத் "தன் நாடு" என்று ஒருவன் நம்பினால்தான் நாட்டின் தேசியம் பற்றிய அடுத்த கட்டத்திற்கு போக முடியும்.தனக்கு நாடு என்ற வரைமுறைகளில் நம்பிக்கை இல்லை. சும்மாங்காட்டியும் நாட்டோட இருக்கேன்.என்றால் தேசியம் பற்றிய எந்தக் கேள்விகளும் அர்த்தம் அற்றது.வாயை மூடிக் கொண்டு வாழ்க்கையில் மற்ற முக்கிய பிரச்சனைகளில் கவனம் செலுத்தலாம்.குறைந்த பட்சம் நாடு என்று புவியியல் ரீதியாகவாது நம்பினால்தான் தேசியம் என்ற ஒன்று உள்ளது தெரியும்.

மொழி:
  • மொழியறிவு
  • மொழிப்பற்று
  • மொழிதுவேசம்
  • மொழியுணர்வு
  • மொழிசார்ந்த அடையாளங்கள்
இதில் நீங்கள் எதைச் சொல்கிறீர்கள் என்று தெரியாததால் மொழி என்ற வகையில் இருக்கும் எனக்குத் தெரிந்த அரசியலை விளக்கலாம் என்று நினைக்கிறேன்.

வாய் பேச முடியாத/காது கேட்காத மனிதர்களுக்கு மொழியுணர்வு இருக்குமா? கர்நாடகாவில் இருக்கும் ஒரு ஊமையும்,தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு ஊமையும் காவிரிப்பிரச்சனையில் மொழி சார்ந்து எந்த அணியில் சேர்வார்கள்? இறைவன் கொடுத்துள்ள புனிதப் புத்தகங்களால்,புனித மந்திரங்களால் அல்லது அந்த மந்திரங்கள் எழுப்பும் சத்தங்களால் (எந்த மதமாக இருந்தாலும்) இவர்களுக்கு ஏதேனும் பலன் உள்ளதா?

ண் தெரியாத ஒருவனுக்கு அய்யப்பன் அம்மணமாக இருந்தாலும் , வைர நகைகள் போட்டு குத்த வச்சு ஒக்காந்து இருந்தாலும் காட்சிப்பயன் ஒன்றும் இல்லை.கண் இல்லாத ஒருவனிடம் அல்லாவுக்கு உருவ வழிபாடு இல்லை என்று சொன்னால் என்ன சொல்லாவிட்டால் என்ன? அவனுக்கு எல்லாம் இருட்டுதான்.எல்லாம் உருவம் இல்லாத கருப்புக்காடுதான்.

Communication is not what you say, it's what they hear, and what they think you meant. It's perception, NOT intent. நீங்கள் சொல்ல நினைத்ததை கேட்பவர் புரியும் வண்ணம் சொல்வதே Communication. இதற்கு மொழி is just a meduim.

ந்த மொழியில் உரையாடுவது என்பது அந்த உரையாடலில் ஈடுபடும் இருவர் அல்லது அந்த உரையாடலில் பங்கு கொள்ளும் மனிதர்களின் சுதந்திரம்.இதற்கு எந்த புனிதமும், நிறமும், அரசியலும் கிடையாது.

ஒருவனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட மொழியறிவு இருக்கலாம்.அதில் ஏதேனும் ஒரு மொழி அவனுக்கு மிகவும் பிடித்தாக இருக்கலாம்.அவனுக்கு மிகவும் பிடித்தமான ஒரு அதே மொழி மற்றவனுக்கு பிடிக்காமல் இருக்கலாம்.எப்போது X மொழியைவிட Y மொழிதான் சிறந்தது என்று ஒருவன் சொல்ல ஆரம்பிக்கிறானோ அப்பொது மொழி துவேசம்/மொழிவெறி வந்துவிட்டது என்று கொள்ளலாம்.

நீ எந்த மொழியை விரும்புகிறாய் என்பது உனது விருப்பம். ஆனால் நான் விரும்பும் மொழி தாழ்ந்தது என்று சொல்ல உனக்கு அதிகாரம் இல்லை.

ரு மக்களின் கலாச்சாரத்தை அழிக்க வேண்டுமானால் முதலில் அவர்கள் பேசும் மொழியை அழித்தால் போதும்.இந்தியின் ஆதிக்கத்தை எதிர்த்ததால்தான் தமிழகம் மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபட்டு இருக்கிறது.ரு சின்ன உதாரணம்.தமிழின் தனித்தன்மையாலும் அதன் தீவிர இந்தித் திணிப்பு எதிர்ப்பாலும்தான் தமிழக சினிமாத்துறை இந்த அளவு வளர்ச்சி பெற்று உள்ளது(தரம் உயர்ந்துள்ளது என்று சொல்லவில்லை). இல்லையென்றால் மற்ற மாநிலங்கள் போல் Big-B யும் சில கான்-களும்தான் நம்மூர் போஸ்டர்களில் இருந்திருப்பார்கள்.

தமிழ் திரையுலகம் இந்தியாவில் இந்திக்கு அடுத்த இடத்தில் உள்ளது.குஜராத்தியிலோ அல்லது மாராத்தியிலோ எத்தனை படங்கள் வருகின்றன? கன்னடம் அல்லது தெலுங்கு இந்தப் போட்டியில் எங்கே உள்ளது? தனது அடையாளத்தை இழந்ததால் வந்த விளைவு.

இனம்:

இதுவும் ஒரு வளையமே.எந்த இனத்தைச் சொல்கிறீர்கள்? மனித இனம் என்றால் நாம் அனைவரும் ஒரே இனம்தான். மனித இனத்திற்குள்ளேயே உள்ள சிறிய/பெரிய உட்பிரிவாக உள்ள இனக்குழுக்களை நாடு/மதம்/மொழி என்று வகைப்படுத்திக் கொண்டே போகலாம்.

சாதி:

சாதி என்றால் என்ன என்று தெரியாமல் அது பற்றிப் பேச முடியாது.

னது பார்வையில், இந்தியாவில் சாதி என்பது சனாதன மதக் கோட்பாடு வழிவந்த அடக்குமுறை.அதனால் மதத்தைத் தொடாமல் சாதி பற்றி கருத்துச் சொல்ல முடியாது. இந்தியாவில் சனாதன தர்மமாக(அல்லது பிராமணீயமாக) அறியப்படும் இந்த ஏற்றத்தாழ்வு முறை வேறு நாடு அல்லது மதங்களில் மாற்றுப் பெயர்களில் அல்லது வேறு வடிவங்களில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.பிறப்பால் நிர்ணயிக்கப்படுவதுதான் இந்தியச் சாதி முறை. அதன் மூலம் சனாதன மதம்.

சாதி/மதம் இரண்டிலும் எனது கருத்து:
  • தனக்கு கற்பிக்கப்பட்ட ஒவ்வொன்றையும் கேள்வியே கேட்காமல் ஏற்றுக் கொள்பவர்கள் அதைத்தாண்டி மேலே போக முடியாது.
  • சரி அப்படி மேலே என்ன தான் இருக்கிறது..?
  • ஒன்றுமே இல்லை...
  • அது ஒரு வெற்றிடம்..
  • சாதி மதத்தை நம்புவர்களால் அது இல்லாத வெற்றிடத்தில் நிற்க முடியாது.
  • இவர்களுக்கு சாய்ந்து கொள்ள ஏதாவது வேண்டும்.

பெ ண்ணடிமை விசயத்தில் மதங்கள்/சாதிகள் எல்லாம் ஒரே கொள்கை உடையவை.காதலர்தினக் கொண்டாட்டத்தை மத வேறுபாடுகள் தாண்டி அனைத்து மதவாதிகளும் இந்தியாவில் எதிர்த்தார்கள். ஏன் தெரியுமா? அது இவர்கள் கட்டிக் காத்து வந்த புனிதக் கோட்பாடுகளை மீறுவதால்.(இந்தியாவில் கொண்டாடப்படும் காதலர் தினம் ஒரு கோமாளித்தனமானது அது பற்றி எனக்கு மாற்றுக் கருத்து உண்டு.காதல் என்பது இங்கே ஆண்-பெண் affection என்ற அளவில் மட்டுமே பார்க்கப்படுவதால் love இங்கே கேலிக்கூத்தாகிவிட்டது.)

குடும்ப அடையாளம் தேவை.ஆனால் அது அந்தக் குடும்பம் சாதியால் மட்டுமே கட்டப்படவேண்டும் என்பது தவறு.10 வருடங்களுக்கு முன் இருந்த நம்பிக்கைகள் எல்லாம் இப்போது கேலிக்கூத்தாகத் தெரிகிறது.

ந்த தலைமுறையினரால் முடிந்தது தமது குழந்தகளுக்குச் சாதி.மதச் சுமையை கொடுக்காமல் இருப்பது மட்டுமே. குழந்தையிலேயே ஒரு மதத்தை போதிப்பதும்/பழக்குவதும் குழந்தைத் திருமணமும் ஒன்று.குழந்தைகள் 10 அல்லது 15 வயது ஆனவுடன் பெற்றோர்கள் அவர்களிடம் மதங்கள்/சாதி பற்றிய உண்மையச் சொல்ல வேண்டும்.உதாரணமாக....

"உலகில் பல மதங்கள் உள்ளன.நாங்கள் (பெற்றோர்) இந்தக் காரணத்திற்காக் இந்த மதம்/சாதியைப் பின் பற்றுகிறோம். நீ விரும்பும் மதம்/சாதியை நீயே தேர்ந்தெடுத்துக் கொள்வதும் அல்லது எந்தவிதமான அடையாளங்களும் இன்றி இருப்பதும் உனது விருப்பம்."

.....என்று சொல்லலாம்.


2) SEZ- -சீனாவை உயர்த்த உதவியது. இந்தியாவிற்கு உதவுமா?


:-)))

சீனா உயர்ந்து உள்ளதா? எனக்குத் தெரியவில்லை.இந்தியாவில் இருக்கும் சுதந்திரம் சீனாவில் அதன் குடிகளுக்கு கிடையாது.
"tiananmen square china" என்று http://www.google.co.in இல் தேடுவதும் http://www.google.cn இல் தேடுவதும் ஒரே விடையை அளிக்காது.

னவே, எந்த ஒரு நாட்டின் வளர்சியையும் மற்ற நாட்டின் வளர்ச்சியிடன் ஒப்பிடுவது என்னளவில் சரியல்ல.

ஒரே மைதானத்தில் ,ஒரே விதிகளுடன் ,ஒரே கோப்பைக்காக விளையாடும் இரண்டு அணிகள் பற்றி ஒப்பிடலாம்.வேறு வேறு மைதானங்களில்,இரு வேறு விளையாட்டுகள் விளையாடும் அணிகளை ஒப்பிடக்கூடாது.

ந்தியாவிற்கு இது(SEZ) தேவையா? தேவை என்றால் எப்படி செயல்வடிவம் தரவேண்டும்? என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர,குளிர் பிரதேசத்தில் உள்ளவன் கோட்-சூட் போட்டு ,டை கட்டினால் அதுதான் நாகரீகம் என்று நாமும் செய்வது போல் , சீனா SEZ பின்பற்றினால் நாமும் பின்பற்ற வேண்டும் என்று ஆட்டு மந்தையாய் செயல்படக்கூடாது. ஏன் தஞ்சாவூரில் விவசாய SEZ அமைத்து விவசாயிகளுக்கு ஏற்றம் அளிக்கக்கூடாது?

நிற்க.

ந்தியாவின் உயர்வு என்று நான் நினைப்பதும் நீங்கள் நினைப்பதும் வேறாக இருக்கலாம்.

சென்னையில் எளிதாக பார்க்கக் கிடைக்கும் காட்சி.
  • மூக்கில் ஒரு உறை( காற்று மாசு பட்டுள்ளதால் அதை வடிகட்டி சுவாசிக்க).
  • கையில் ஒரு நீளமான உறை.இது மற்ற நாடுகளில் வாகன ஓட்டிகள் போடும் சிறிய கையுறை கிடையாது. முழங்கையையும் தாண்டி புஜம் வரை நீண்டி இருக்கும் உறை. அதிகமாக பெண்கள் அணிவதைப் பார்க்கலாம்.
  • பாட்டில் குடி நீர்.
  • எந்த விதிக்கும் கட்டுப்படாத வாகன ஓட்டிகள்.
  • அப்படியே ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு ஒண்ணுக்குப்போகும் IT இளைஞர்கள்.
  • இதை எல்லாம் கடந்து ஒரு அடுக்கு மாடியில் ஏறி பொட்டி தட்டிவிட்டு இந்தியா வளருது என்றால்...?
எது வளர்ச்சி? சுத்தமான காற்றையும்,நீரையும்,சுற்றுப்புறத்தையும் சாக்கடையாக்கிவிட்டு அது பற்றிய சொரணை கொஞ்சமும் இல்லாமல் ,புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல , மேற்கு நாடுகளைப் பார்த்து அதன்படி வாழ்ந்து கழிப்பது வாழ்க்கை அல்ல, அது வளர்ச்சியும் அல்ல.

வளர்ந்த நாடுகள் அவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்துவிட்டு அல்லது அதற்கும் சரியான கவனம் செலுத்திவிட்டுத்தான் ( நீர் ,சாலை,வனப் பாதுகாப்பு,சுகாதாரம்) IT தொழில்களில் முனைப்பு காட்டினார்கள். நாம்? அது பற்றிச் சிந்திப்பதுகூட இல்லை.

டிப்படைக் குணம் திருந்தாத வரையில் எத்தனை திட்டங்கள் வந்தாலும் நம் குணம் மாறது. SEZ வருவதற்கு முன்னால் சும்மா ரோட்டில் ஒண்ணுக்குப் போனவன் , SEZ வந்தபின் டை கட்டிக்கொண்டு ,காரில் வந்து இறங்கி அதே வீணாய்ப்போன ரோட்டில் ஒண்ணுக்குப்போவான்.

இந்தியாவின் IT தலைநகர் பெங்களூரில் ஒண்ணுக்குப்போக பள்ளியில் இடமில்லாமல் (இருக்கும் கக்கூசை மாணவர்கள் உபயோகிக்கா வண்ணம் பூட்டி வைத்துள்ளார்கள்) அருகில் இருக்கும் சாக்கடைப் பக்கம் ஒதுங்கிய இரண்டு சிறுமிகள் தவறி விழுந்து இறந்து விட்டனர்.

நம் முதல் தேவை கக்கூசுக்கும் குப்பைக்கும் SEZ.

3) கலாச்சாரம் என்பது சமூகத்தின் மீது பூட்டப்படும் விலங்கா? அலலது அணிகலனா?

  • Culture is an outsider's view of what the insider produces. This is contrary to popular opinion that argues that culture is a group who demonstrate similar qualities.
  • It is a learned behavior. From our child hood some things are taught by our parents. We must learn that every culture has different types of values, beliefs, customs, norms and taboos. We have to respect them for what they are and who they are.
  • Culture has been called "the way of life for an entire society." As such, it includes codes of manners, dress, language, religion, rituals, etc.,“A set of distinctive intellectual, emotional, spiritual, materialistic, artistic, literary attributes of a society along with the lifestyle, traditional beliefs and value system defines a culture”
  • Stereotypes are considered to be a group concept, held by one social group about another. They are often used in a negative or prejudicial sense and are frequently used to justify certain discriminatory behaviors. More benignly, they may express sometimes-accurate folk wisdom about social reality.
லாச்சாரம் என்பது மனிதன் வாழும் சூழ்நிலைக்கேற்ப ஒரு காலத்தில் அமைந்த வாழ்க்கை முறைகள்.அரபுக்களின் கலாச்சாரம் மொக்கையாக தலைமுதல் கால் வரை அங்கி அணிவது.கலாச்சாரம் காக்கிறேன் என்று அலாஸ்கா செல்லும் ஒரு ஷேக் அங்கேயும் வெறும் அங்கி மட்டும் அணிந்தால் குளிரில் உடல் என்னவாகும்? கலாச்சாரம் சூடுதருமா? கடலோரத்தில் வாழ்ந்த ஒருவன் மலைப்பிரதேசத்திற்கு வந்தும் மூன்று வேளையும் சாப்பிட மீன் தான் வேண்டும் என்றால் என்னாவது? ஆர்டிக் பகுதியில் வாழும் நானூக் இன மக்களை பிராமணீயத்திற்கு மாற்றி ,பச்சையாக கடல் மிருகத்தை துண்ணாதே என்றால், அவன் என்ன செய்வான்? அவனுக்கு சிவனா வந்து சீனிக்கிழங்கு பயிரிடுவார்?

எதுவாக இருந்தாலும் நாமே விரும்பி அணிந்தால் அணிகலன்.அதுவே சாதி/மதம்/அல்லது அது சார்ந்த பிறரால் திணிக்கப்பட்டால் விலங்கு.

4) பொழுது போக்கு கொண்டாட்டங்களில் தங்களுக்கு பிடித்தது எது?

குழந்தைகளுடன் விளையாடுவது,நெடுந்தூர ஓட்டம்,கடலோரம் அமர்ந்து இருப்பது போன்றவை.இவைகள் நான் நினைத்தால் செய்ய முடிந்தவை என்பதால் அதிகம் பிடிக்கும்.

நாம் விரும்பியபோது பொங்கலோ புது வருடமோ கொண்டாட முடியாது அது ஒரு சமுதாயக் கொண்டாட்டம். நீங்கள் இந்த சமுதாயக் கொண்டாட்டங்கள் பற்றிக் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். கொண்டாட்டங்கள் அனைத்திலும் நண்பர்கள்,குடும்பத்துடன் நேரம் கிடைக்கும் போது கலந்து கொள்வது பிடிக்கும்.

நன்றித் திருநாளாகிய தமிழர்களின் பொங்கல் விழா நான் மிகவும் விரும்பும் சமுதாயக் கொண்டாட்டம்.

5) சிங்குரில் விளைநிலத்தில் துவங்கும் டாடா கார் தொழிற்சாலை சிங்குரின் வாழ்க்கை தரத்தை உயர்த்துமா?

:-)))

எது வாழ்க்கைத்தரம் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள் என்பது தெரியவில்லை. iPOD,செல் போன்,கார்,அபார்ட்மெண்ட் இருந்தால் வாழ்க்கைத்தரம் உயர்ந்துவிட்டதாக நினைப்பது சரியா?

பெரும்பாலும் மக்கள் அதுவே வாழ்க்கைத்தரம் என்று நம்புகிறார்கள்.
பொருளாதார வளர்ச்சி என்பது வேறு ,ஒரு மனிதன் வாழும் வாழ்க்கையின் தரம் என்பது வேறு.இந்தியாவில் வசதியான மக்கள் சம்பாதிக்கிறார்களே தவிர வாழவில்லை.வாழ்க்கை என்பது வாழ்வது. வசதிகளுடன் உயிரோடு இருப்பது மட்டும் வாழ்க்கை அல்ல. :-)

உணவு,உடை,இருப்பிடம் என்பது வாழத் தேவையான குறைந்தபட்சத் தேவைகள்.இவை இருந்துவிட்டால் தரமான வாழ்க்கை வாழ்வது என்பது நம் கையில்தான் உண்டே தவிர, டாடாவின் கையில் இல்லை.சிங்குரில் வாழும் மக்களுக்கு இந்த குறைந்தபட்சத் தேவைகள்கூட இதுவரை இல்லை என்றால் ,அது டாடாவால்தான் வருகிறது என்றால், டாடாவை வரவேற்கலாம்.

நான் அறிந்த வரையில்(பத்திரிக்கைகள் வாயிலாக) இந்தப் பகுதி விவசாயிகள் டாடா வருவதற்கு முன் மிக நன்றாகவே வாழ்ந்துள்ளார்கள்.நலிந்தவர்கள் அல்ல.கண்ணை விற்று சித்திரம் வாங்குவது போன்றதுதான் இங்கே SEZ ன் வருகை.இந்த விவசாய நிலங்கள் தவிர வேறு தரிசு நிலங்களே அந்தப் பகுதியில் கிடையாதா?

Singur farmers: Why they oppose Tata plant
http://ia.rediff.com/money/2006/dec/09tata.htm

//"Till recently," Majhi says, "it was my land. I cultivated three crops in it," he says, while staring at the distance, "There would be paddy, potato, jute, til. . ." he trails off. Did Majhi voluntarily give up his land?
"No, never," he says fiercely, adding, "I'll never agree to give away my land. It has been with us for generations. It has fed and clothed me and my family of 18 people." How will he support himself? Majhi's face clouds over: "I don't know. Starve, I suppose."//

********************************************














இந்தச் சுடரை யெஸ்.பாலபாரதி அவர்களிடம் அளிக்கிறேன்

  1. உங்களின் எழுத்துக்கள் நீங்கள் வாழ்க்கையை இரசித்து அதன் போக்கில் வாழ்பவர் என்ற தோற்றத்தை எனக்குத் தருகிறது.உண்மையா? நீங்கள் இப்போது இருக்கும் நிலையில் சந்தோசமாக இருக்கிறீர்களா?
  2. இன்னும் 2 நாட்களே உங்களுக்கு இந்த உலகத்தில் வாழ அனுமதிக்கப்பட்டு உள்ளதாகக் கொள்வோம்.அந்த இரண்டு நாட்களை எவ்வாறு பயன்படுத்த விரும்புவீர்கள்?(இந்தக் கேள்வியை எனக்கு நானே கேட்டுக் கொண்டேன்.இரண்டு நாளை எப்படிப் பயன்படுத்துவேன் என்பதைவிட, எனது பிள்ளைகள்,எனது மனைவி நான் இல்லாமல் என்ன செய்வார்கள் என்று எண்ணிப் பார்த்தேன். மன பாரம் விளக்கமுடியாதது :-( வயதான என் தாய் ,தந்தையை நினைத்தால் அதைவிடக் கொடுமையாக இருக்கிறது.)
  3. நிறைய நண்பர்களை உடையவராக தெரியும் உங்களுக்கு எதிரிகள் யாரும் உள்ளனரா? (தொழில்/பங்காளி/பக்கத்து வீட்டுத் தகராறு என்று ஏதாவது?)
  4. உங்களின் எத்தனையாவது வயதில் ரிட்டையர்மென்ட் பிளான் செய்துள்ளீர்கள்? ஏதாவது திட்டங்கள்?
  5. கடவுள் நம்பிக்கை உண்டா? அந்தக் கடவுள் எந்த மதத்தையாவது சார்ந்தவரா?



Picture courtesy
http://www.modernartimages.com
http://www.art.co.za/ilsefourie/2005work09i.jpg
http://www.sankofadot.com/images/thinker.gif
http://www.fireiceglass.com/Portfolio/images/D/12a.jpg












Sunday, February 11, 2007

தேன்கூடு திரட்டியின் சாகரன் (கல்யாண்) அவர்களுக்கு அஞசலி


குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.


சாகரன் யார் என்பதோ, இதுவரை எந்தவிதமான தொடர்போ அறிமுகங்களோ இல்லை.சமீபத்தில் படித்த செய்திகளில் இருந்து இவர்தான் தேன்கூட்டின் முயற்சியாளர் என்பதும் 29 வயதே உடைய இளைஞர் என்பதும் தெரிய வந்தது.

அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்ல.

இவரின் இழப்பு தமிழ் வலைப்பதிவு உலகத்திற்கு ஈடு செய்ய முடியாத ஒன்று என்று சொன்னால் அது மிகையாகாது.

விடைபெறும் வேளையில் அன்பான வார்த்தைகளையே பேசுங்கள். ஒரு வேளை இதன்பிறகு நாம் இருவரும் வாழ்க்கையில் சந்திக்காமலேயே போய்விடக்கூடும். ---ஆழியூரான் வலைப்பதிவில் படித்தது.

Thursday, February 01, 2007

India Inc Stinks-SEZ ல் செக்ஸ் அனுமதி உண்டா ?

ந்தியாவின் முன்னேற்றம் என்பது வெறும் அந்நிய செலவாணி கையிறுப்பு அல்லது ஒரு குறிப்பிட்ட துறையின் முன்னேற்றம் அல்லது பங்குச் சந்தையில் பங்கு விற்கும் விலை என்ற அளவில்தான் பார்க்கப்படுகிறது.நான் பொருளாதார மேதை இல்லை.ஆனால் பொருளாதார மேதை இந்த நாட்டின் பிரதமராக இருக்கும் போது ஏன் விவசாயிகள் மாற்றாந்தாய் மனப்போக்கில் நடத்தப்படுகிறார்கள் என்று தெரியவில்லை.அரசாங்கம் எடுக்கும் எந்த முயற்சியும் Vidarbha பருத்தி விவசாயிகளை தற்கொலை முயற்சிகளில் இருந்து காப்பாற்றியதாகத் தெரியவில்லை.

11 farmers commit suicide in Vidarbha: NGO
Press Trust of IndiaNagpur, January 29, 2007
Eleven farmers have committed suicide in Vidarbha region of Maharasthra, an NGO working for farmers said Monday. The suicide cases were reported in the last two days from districts of Yavatmal, Washim (three each), Nagpur (two), Amaravati, Wardha and Chandrapur (one each), Vidarbha Jana Andolan Samiti President Kishore Tiwari said in a release in Nagpur. He said so far 62 farmers have committed suicide in the current month in the cotton-growing region in Eastern Maharasthra. Last year, about 1,050 farmers had committed suicide in Vidarbha which was visited by Prime Minister Manmohan Singh who announced a relief package for farmers reeling under bankruptcy and crop failure. The samiti has claimed the state government has paid compensation to 682 families of the deceased farmers.In addition to the Prime Minister's package, the state's Congress-NCP led government too had announced several relief measures for debt-ridden farmers but the spate of suicides continued.
http://www.hindustantimes.com/news/181_1914941,000900040001.htm


இந்த மாதத்தில் (ஜனவரி ,2007) மட்டும் 62 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள்.Google-ல் Vidarbha farmers என்று தேடினால் வரும் செய்திகள் மகிழ்ச்சிய்யூட்டுவதாக இல்லை.ஏன் இந்த நிலைமை? அரசாங்கம் ஒன்றும் செய்யாமல் வேடிக்கை பார்க்கிறது என்று சொல்ல முடியாது. ஆனால் என்னதான் அரசாங்கம் செய்கிறதோ அது விதர்பா பருத்தி விவசாயிகளின் வாழ்க்கையில் ஒளி ஏற்ற முடியவில்லை எனபது மட்டும் நிச்சயம்.Bombay Stock Exchange இல் ஒரு சின்ன சத்தம் கேட்டால்கூட அன்று இரவே தொலைக்காட்சியில் தோன்றி புள்ளிவிபரங்கள் தரும் நிதி அமைச்சர் விதர்பா பற்றி ஏதும் சொன்னதாகத் தெரியவில்லை.


இந்தியா வளமான பாதையில் செல்கிறது என்று கூக்குரலிடும் கனவான்களின் கண்ணில் இந்த அவலங்கள் தெரிவது இல்லை.மக்களும் சில்ப்பா சிரித்தாளா ஐஸ்வர்யா ஆடினாளா என்ற உலகவிசயங்களிலேயே பெரும்பகுதி நேரத்தைச் செலவிடுவதால் இது போன்ற சில்லரை விசயங்கள் அவர்களுக்குப் பெரிதாகத்தெரிவது இல்லை.எங்கேயாவது மொத்தமாக ஒரு 100 பேர் செத்தால் அதற்காக கொஞ்சநேரம் வருத்தப்பட்டுவிட்டு அடுத்த நாள் வரும் அபிஷேக்-ஐஸ்வர்யா நிச்சயதார்த்த உடைகளின் தரத்தையும்,சாருக்கான் எவ்வாறு போட்டியாளரை குரோர்பதி ஆக்குகிறார் என்றும் விவாதிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.



சமீபத்தில் எனது நண்பர் ஒருவர் இந்தியாவில் செல்போன் புழக்கத்தை நினைத்து பெருமிதம் கொண்டார்.அவரிடம் விதர்பா போன்ற சில்லரைச் சமாச்சாரங்களைச் சொன்ன போது, இந்தியாவில் பட்டினி/வறுமைச் சாவே கிடையாது என்று அடித்துச் சொன்னார்.விதர்பா பற்றியும் ,சில வருடங்களுக்கு முன்னால் தஞ்சையில் நடந்த எலிக்கறி சாப்பாடு பற்றிச் சொன்னால் அவர் அதற்கு முக்கியத்துவம் தராமல்,கிரிக்கட்டில் விளையாடும் வீரர்கள் நீளமான முடி வைப்பது நல்லதா கெட்டதா என்று விவாதத்தை ஆரம்பித்து விட்டார்.சராசரி மனிதனை சில குத்துப்பாட்டுகள்,சில்பா,ஷாருக்கான் என்ற அல்ப்பமான ரேஞ்சிலேயே ஊடகங்கள் வைத்து இருக்கிறது.விமானம் ஏறி பறந்து போய் கோக் (பெப்ஸி??)குடிப்பேன் என்று சொன்னவர்தான் இந்த கான்.மெத்தப்படித்த அறிவாளிகள்கூட விவசாயிக்கு மானியம் என்றால் நம்மை கேணையனாகப் பார்க்கும் போக்குதான் இங்கே உள்ளது.


இந்தியா இப்போது எப்படி உள்ளது?

2000 திற்குப்பின் நடந்த IT துறையின் வளர்ச்சியால் அதிகமான பணம் ஒரு பகுதி மக்களிடம் புழங்குகிறது.ஒரு குடும்பத்தில் ஒருவன் IT துறையில் இருந்துவிட்டாலே அவர்கள் ஒரு வருடத்தில் கார்,வீடு,கனவு என்று ஓரமாக ஒதுங்கிவிடுகிறார்கள்.தான் வாழும் இடத்தில் இருக்கும் நலிந்துபோன மக்களைப் பற்றிச் சிந்திப்பது பாவம் என்ற அளவில் அவர்கள் மாறிவிடுகிறார்கள்.இவர்களின் பணப்புழக்கத்துடன் போட்டி போட முடியாமல் சாமான்யன் மேலும் மேலும் கீழே போகிறான் அல்லது போட்டி போட முடியாமல் விரக்தியடைந்து விடுகிறான்.அரசாங்கமும் இதுதாண்டா வளர்ச்சி என்று இதன் பின்னாலேயே சுற்றுகிறது.இப்போதே சில நாடுகள் இந்தியாவைவிட குறைந்த விலையில் IT சேவைகளை வழங்கிவருகிறது.இலாபத்திற்காக தனது சொந்த நாட்டு மக்களின் வேலைகளுக்கே ஆப்பு வைத்த அமெரிக்கா ,அந்நியனான இந்தியனுக்கு தொடர்ந்து டாலரைக் கொட்டாது.ஒரு நாள் இந்த IT புயல் வேறு நாடுகளில் கரையேறும்.அப்போது இந்தியா பெரும் நெருக்கடியைச் சந்திக்கலாம்.கொஞ்சம் விவராமாகப் பார்க்கலாம்.




இந்தியா சுதந்திரம் வாங்கிவத்ற்கு முன்னாள் அல்லது சுதந்திரப் போராட்ட காலங்களில் "வக்கீல்" படிப்பு என்பதும் , பாரிஸ்டர் என்பதும்தான் அந்த தலைமுறைக்கு கனவாக இருந்தது.ஊரில் உள்ள பணக்காரன் ,செல்வாக்கு படைத்தவன் எல்லாம் ஜமீனாகவோ அல்லது வக்கீலாகவோ இருப்பார்கள்.
சுதந்திரத்திற்குப்பின்னால் வந்த கட்டுமானத் தொழில்கள் மற்றும் இயந்திரவியல் துறைகள் இந்த "பாரிஸ்டர்" பட்டாளங்களை முழுங்கி டாக்டர் , என்ஜினீயர் என்று அடுத்த கட்டதிற்கு சென்றுவிட்டது.டாகடர் அல்லது என்ஜினியர் ஆவதே அல்லது ஆக்குவதே குறிக்கோளாக இருந்த தலைமுறை அப்படியே IT க்கு டாப்கியரில் மாறிவிட்டது.இப்போது டாக்டர்களுக்கு மரியாதையே இல்லாமல் போய்விட்டது.

எனது உறவினர் ஒருவரின் பெண்ணுக்கு டாக்டர் மாப்பிள்ளை வந்தும் வேணாம் அமெரிக்க IT மாப்பிள்ளைதான் வேண்டும் என்று ஒத்தக்காலில் நின்றுகொண்டுள்ளார்.மருத்துவத்துறையிலும் இப்போது அவுட்சோர்ஸிங் ஆரம்பித்துவிட்டது.கிட்னி வியாபாரம் எல்லாம் கன ஜோராக நடப்பதும் அந்த வியபாரத்தில் புளங்கும் இலட்சக்கணக்கான பணமும் கிட்னி தாண்டி,கர்ப்பப்பை வாடகை என்ற அளவில் சென்றுள்ளது. இன்னும் பல கோரங்களையும் சந்திக்கும்.




இன்னும் 10-15 ஆண்டுகளில் இந்த IT வியபாரம் படுத்துவிடும்.சாதாரண மக்களும் சட்னியில் இருந்து கிட்னிவரை விற்றுவிட்டு பரதேசிகளாயிருப்பர்.வாங்கிய கடனைக் கட்டமுடியாமல் அதுவரை iPOD உடன் ஆட்டம் போட்ட கூட்டம் அடுத்து வேறு என்ன செய்யலாம் என்று சிந்திக்க ஆரம்பிக்கும். ஒரு வேளை தாய்லாந்து ரேஞ்சில் செக்ஸ் அவுட்சோர்ஸிங் நடந்தாலும் ஆச்சரியப்படவேண்டாம்.

ஏற்கனவே அதிக AIDS கணக்கு கொண்ட நாம் செய்து கொண்டிருப்பதை ISO சர்ட்டிவிகேட்டுடன் சுத்தபத்தாமகச் செய்ய வேண்டும்.டாலராக வந்தால் காந்தி பிறந்த மண்ணிலேயே அதுவும் BJP ஆட்சியில் இருக்கும் போதே SEZ இல் சாராயம் விற்க அனுமதிக்கப்பட இருக்கிறது. எது வேண்டுமானாலும் நடக்கலாம் டாலருக்காக.பாலியல் தொழில்கூட SEZ க்களில் சட்டபூர்வமாக அனுமதிக்கப்படலாம். பாலியல் தொழில் சட்டபூர்வமாக ஒரு தொழிலாக அங்கீகரிக்கப்படுவது நல்லதே. ஆனால் SEZ க்களுக்காகவே இவர்கள் செய்தால் அதன் நோக்கம் டாலர் அன்றி வேறு என்ன? இதுதான் முன்னேற்றப்பாதையா?

Adobe India வின் CEO வின் மகன் கடத்தப்பட்டபோது துரிதமாகச் செயல்பட்ட காவல்துறை அதே பகுதியில் அப்பாவி ஏழைகள் கொடுத்த பல புகார்களை பல நாட்களாக ,மாதங்களாக கிடப்பில் போட்டதால் தான் இப்போது பிணக்குவியல்கள்.ஏழைக்கு ஒரு நீதியும் பணக்காரனுக்கு ஒரு நீதியும், பணம் செல்வாக்கைப் பொறுத்து உயிர்கள் விலை பேசப்படுவதும் மனித குலத்திற்கு புதியதல்ல. ஆனால் இந்தியாவில் அது மட்டுமேதான் நடக்கிறது. அதுதான் கொடுமை.

நிச்சயம் இந்த IT என்ற bubble ம் ஒரு நாள் உடையும். அப்போது வேறு ஏதாவது ஒன்று வந்து நம்மை ஆளும். அது இதைவிடக் கொடுமையாய் இருந்துவிடக்கூடாது என்பதுதான் எனது பயம்.என்ன கிடைக்கிறதோ அதை வைத்து காலத்தை ஓட்டுவோம் என்று சராசரி மனிதன் யோசிக்கலாம். அரசாங்கமும் அப்படி இருந்தால் எப்படி?இப்படியே இருந்தால் எப்படி இந்தியா முன்னேறும்? நாட்டுக்கு என்ன தேவை என்பதில் அரசுக்கு தெளிவான பார்வை இருக்க வேண்டும்.

ஏற்கனவே வளர்ந்த நாடுகள் இப்போது நமக்கு அள்ளி இறைக்கும் காசுக்காக என்ன வேண்டுமானலும் செய்யலாம் என்ற நிலையை எடுத்தால் நாளை அவர்கள் மின்சாரம் அவுட்சோர்ஸ் செய்து 100 அணு உலைகளை இங்கே அரம்பித்து நமக்கு வேலை வாய்ப்புத் தருவார்கள். போனஸாக இங்கேயே அந்தக் அணுக்கழிவையும் புதைப்பார்கள். அல்லது சிங்கப்பூரில் இடப்பற்றாக்குறை நாங்கள் SEZ -இல் கொஞ்சப்பேரை குடிவைத்துக் கொள்கிறோம் என்று நாட்டையே அவுட்சோர்ஸிங் செய்வார்கள் நாமும் டாலருக்காக இடத்தை வாடகைக்கு விடலாம்.





அரசு அடிப்படைக் கல்வி,அடிப்படைச் சுகாதாரம்,அடிப்படைக் கட்டமைப்பு என்று திட்டமிடல் வேண்டும்.நான் படிக்கும் போது பள்ளியில் பரந்து விரிந்த விளையாட்டு மைதானங்கள் இருக்கும்.அதுவும் புட்பால்,ஹாக்கி,வாலிபால் என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு பெரிய தனி மைதானம் இருக்கும். இப்போது ?? அபார்ட்மெண்டில்தான் பள்ளிகள் நடக்கிறது சென்னை,பெங்களூர் போன்ற இடங்களில்.

மக்களும் சம்பாதிக்கும் நோக்குடனேயே இருக்கின்றனர்.எத்தனை பெற்றோர்கள் தனது குழந்தையை ஒரு நல்ல குடிமகனாக வளர்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.யோகா படித்தவனும் சாமி கும்பிடுபவனும் இன்னும் ரோட்டில்தான் ஒண்ணுக்குப் போகிறான்.

படித்த பரதேசிகள் IT ல் வேலை பார்ததாலும் கேண்டீனிலோ அல்லது இரயிலிலோ வரிசையில் நிற்பது கிடையாது.அடிப்படை ஒழுக்கம் இல்லாத ஒரு சமுதாயம் என்னதான் படித்தாலும் ,என்னதான் பதவியில் இருந்தாலும் முன்னேறவே முடியாது.நாய்க்கு டை கட்டி விடுவதால் அது மாறிவிடாது (நாய் சார் ப்ளீஸ் மன்னிக்க) அது டை கட்டிய நாயாகவேதான் காலம் முழுவதும் இருக்கும்.சாத்தான்குளத்தாரின் பதிவில் வெளிநாட்டுவாழ் மக்கள் கொண்டாடிய பொங்கல் விழா நாம் திருந்தமாட்டோம் என்பதற்குச் சான்று.

மனிதனின் உடலில் தொப்பை மட்டுமே வளர்வதுபோல் ஒரு சமுதாயத்தின் ஒரு பகுதி மட்டுமே வளர்ந்து அனைத்து வளங்களையும் நுகரத்துடிப்பது மனித குலத்திற்கு நல்லதல்ல.

நண்பர்களே முதலில் உங்கள் குழந்தைகளுக்கு குப்பையை எங்கே, ஏன் போட வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுங்கள்.Community service என்ற நல்ல செயலை குழந்தைப்பருவத்திலேயே ஊட்டி வளர்க்க வேண்டும்.வரிசையில் நிற்க கற்றுக் கொடுங்கள். நீங்கள் உதாரணமாய் இருங்கள்.ஒரு நாளில் அல்லது ஒரு வாரத்தில் அல்லது ஒரு மாதத்தில் சில மணி நேரத்தை உங்கள் தெரு மேம்பாட்டுக்காக செலவழித்து சுத்தமாக வைத்து இருங்கள்.எங்கே சென்றாலும் வரிசையில் நிற்கப் பாருங்கள். மாற்றம் ஒரு நாளில் வந்துவிடாது.


iPOD,PIZZA,Jeans,Dating,Car,Sex இவைகள்தான் மேற்கிந்திய கலாச்சாரம் என்று எவன் சொல்லிக்கொடுத்தானோ இப்போதுள்ள இளைஞர்களுக்கு சமுதாயப் பார்வையே இல்லாமல் போய்விட்டது.சுனாமி போது காசு கொடுப்பதோடு கடமை முடிந்து விட்டதாக நினைத்துக் கொண்டு எருமை மாடாகிப் போய் விட்டார்கள். ஆற்றின் போக்கிலேயே ஐலசா போட்டுக்கொண்டு எந்த இலக்கும் இல்லாமல் ஜல்லியடித்துக்கொண்டு வாழ்வது எளிது.எதிர் நீச்சல் சிரமம்.அதுவும் எதற்கெடுத்தாலும் பொதுச்சொத்தை சேதமாக்கும் நம் சக ஜனங்களுடனும், அரசியல் கட்சிகளுடனும் கும்மியடிப்பது முடியாத காரியம். தாங்க முடியலப்பா ரொம்ப வலிக்குது. என்ன செய்வது ...இருந்தாலும் முயற்சியாவது செய்தோம் என்ற மன நிறைவையாவது அது தரும்.











--வேதனையுடனும் பல குழப்பங்களுடனும் தீர்வை நோக்கி ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க நினைக்கும் சக இந்தியன்.


*******************


Planning Commission's Vidarbha report
http://planningcommission.nic.in/reports/genrep/rep_vidarbha.pdf

You can now booze in SEZs
http://timesofindia.indiatimes.com/articleshow/996289.cms

Common Problem in india??
http://indiarising.wordpress.com/2006/03/02/common-problem-in-india

நாரயணமூர்த்தி மன்மோகன்சிங் புனிதர்களா?
http://kalvetu.blogspot.com/2006/10/blog-post_09.html

Shift The Goalpost Obsession with GDP can cost India, China dear
http://timesofindia.indiatimes.com/articleshow/msid-2046411,curpg-1.cms

சாத்தான் குளத்தாரின் ஒரு விழாவும் ஒரு கேள்வியும்.
http://asifmeeran.blogspot.com/2007/01/blog-post_27.html

செல்வனின் ஹிந்து ஹ்ருதய சாம்ராட்
http://holyox.blogspot.com/2007/01/234.html

ஸ்டேஷன் பெஞ்ச் ராம்கியின் - கிராமத்தை மறைக்குது உல்லாச உலகம்!
http://stationbench.blogspot.com/2007/01/blog-post_29.html

அசுரனின்..

இழிச்சவாயர்களும், இந்திய விவசாயமும்
http://poar-parai.blogspot.com/2006/06/blog-post_115157825727252631.html

விவசாயியும், SEZயும், அடிவருடிகளும்
http://poar-parai.blogspot.com/2006/10/sez.html

கேடு கெட்ட இந்தியா... யானை கட்டியா போரடித்தோம்?
http://poar-parai.blogspot.com/2006/07/blog-post_14.html

அன்பான தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்களே!
http://poar-parai.blogspot.com/2006/07/blog-post_14.html