Friday, October 26, 2007

கம்யூனிசம்-காந்தியம்-நாடி ஜோதிடம் மற்றும் பக்கவாட்டு நவீனத்துவம்

யணம் செய்யும் கப்பலில் ஒரு ஒட்டை இருப்பது தெரியவருகிறது. அந்த ஓட்டையின் விபரீதம் கப்பலின் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்பவனுக்கும், முதல் வகுபில் பயணம் செய்பவனுக்கும் வெவ்வேறுவிதமாகத் தெரியவரும். எவன் முதலில் சாகப்போகிறான் என்ற அளவில் வித்தியாசப்படும் அவ்வளவே. அடிப்படையில் அந்த கப்பலில் பயணம் செய்யும் அனைவருக்கும் பிரச்சனை ஒன்றுதான்.


எப்படி கப்பலின் ஓட்டையை அடைப்பது?
என்று.
  • ஒருவர் கம்யூசனிச சாந்து கொண்டு பூச வேண்டும் என்று சொல்கிறார்.
  • மற்றவர் காந்திய சாந்து கொண்டு பூச வேண்டும் என்கிறார்.
  • மேல் வகுப்பில் பயணம் செய்பவன் "எங்கே ஓட்டை ? எல்லாம் நல்லாத்தானே இருக்கு ? " என்று கூட சொல்லலாம். அது அவனின் புரிதல். பிரச்சனை உள்ளது என்றே தெரியாத இவனை ஆட்டையில் சேர்க்கவே முடியாது.

பிரச்சனை உள்ளது என்பதை ஒப்புக்கொண்டு, அதை எப்படி தீர்ப்பது என்று முன்வரும் குழுக்களில் அணுகுமுறை எப்படி அமைகிறது? அவனவன் அவனுக்குத் தெரிந்த ஒரு இசத்தையோ , மதத்தையோ அல்லது அரசிலையோ எடுத்துக்கொண்டு ஓட்டையை அடைக்க வந்துவிடுகிறார்கள்.

எந்த ஒரு இசங்களையும் படித்து அதன் உதவியுடன் நமது அறிவை கூர் தீட்டப்பயன்படுத்த வேண்டுமே தவிர, அந்த இசங்களையே நாமாகக் கற்பனை செய்து நாமும் அதுவாகி , சுய அடையாளங்களைத் துறத்தலால் வரும் பயன் ஏதும் இல்லை. பழைய தத்துவங்கள் ,இசங்கள் புதியவற்றைச் சமைக்க ஒரு கருவியாக இருக்க வேண்டுமே தவிர அதுவே, சர்வரோக நிவாரணியக Dr.காளிமுத்துவின் தாது புஷ்டி லேகியம் போல், கக்கூஸ் பிரச்சனையில் இருந்து கைப் பிரச்சனைன வரைக்கும் ஒரே மருந்தே தீர்வு என்று இருக்க முடியாது.

  • கம்யூனிசச் சாந்து கப்பல் X ஐ அடைக்கப் பயன்பட்டு இருக்கலாம்.
  • காந்தியச் சாந்து கப்பல் Y ஐ அடைக்கப் பயன்பட்டு இருக்கலாம்.

அதற்காக கப்பல் A க்கும் அதுதான் தேவை என்று அடம்பிடிக்காமல், நிகழ்காலப் பிரச்சனைக்கு தீர்வாக புதிய சிந்தனைகள் வளரவேண்டும். கம்யூனிசம் அல்லது காந்தி சொன்னார் என்பதற்காக கடிவாளத்தைக் கொண்டு காரை ஓட்ட நினைக்கக்கூடாது. கடிவாளத்தை அடிப்படையாக அல்லது உதாரணமாக வைத்து காருக்கு ஒரு தீர்வு காண முற்பட வேண்டுமே தவிர கடிவாளத்துடன் வாழ்க்கை முழுவதும் அலையக்கூடாது.

இசங்களைப் படித்தவர்கள் அங்கேயே நின்றுவிட்டதால்தான் நிகழ்கால சமூகப் பிரச்சனைகளுக்கு புதிய தீர்வுகள் இன்னும் பழைய புத்தகங்களிலேயே தேடப்படுகிறது. நூல்களில் இருந்து பெறுவது வாசிப்பு அனுபவம. வாசிப்பே அறிவாகிவிடாது. ஒவ்வொரு்வருக்கும் குடும்பச் சூழலில் தொடங்கி, அவரது குடும்பம் பின்பற்றும் கொள்கைகள், அவரது கல்விச் சூழல், கல்வி, நண்பர்கள், பிறக்கும் ஊர், நாடு, அவர் படிக்கும் நூல்கள் .....இவைகளில் கிடைப்பது பகுத்தறிவு இல்லை... அதன் பெயர் அனுபவம் அல்லது அனுபவ அறிவு.

இப்படிக் கிடைத்த அனுபவங்களையும், இசங்களையும், தத்துவங்களையும் இன்னபிற விசயங்களையும் கேள்விக்கு உட்படுத்தி அதனை மேலும் ஆராய்வதே பகுத்தறிவு. கப்பல் பயணைத்தில் கிடைத்த அனுபவ அறிவு பாலைவனப் பய்ணத்திற்கு அப்படியே பயன் படாது.

முன் முடிவுகள் இல்லாமல் அனைத்தையும் கேள்விக்கு உட்படுத்தி அதன் மூலம் தனக்கென ஒரு புரிதலை அடைவதே பகுத்தறிவு. அந்த பகுத்தறிவின் மூலம் புதிய தீர்வுகள் கண்டறியப்படவேண்டும்.

அனுபவம் (கற்றல்,கேட்டல்,உணர்தல்..) + அவற்றை கேள்விக்கும் பரிசோதனைக்கும் உட்படுத்துதல் + சுய புரிதல் = பகுத்தறிவு.


இது பகுத்து அறியும் அறிவியல். இந்த அறிவியலின் மூலம் நிகழ்காலப் பிரச்சனைக்குத் தீர்வுகாண வேண்டுமே தவிர பழைய இசங்களில் நம்மை தொலைத்துவிடக்கூடாது. இசங்களைப் படித்தல் ஒரு அனுபவம் , ஆனால் எல்லாப் பிரச்சனைகளுக்கும் பழைய புத்தகங்களில் விடை தேடுவதும், நாடி ஜோதிடம் பார்ப்பதும் ஒன்றுதான்.

நீங்கள் 5 வயதில் பகுத்தறிந்த ஒன்றை 50 வயதிலும் பகுத்தறிய தயாராக இருக்க வேண்டும். தொடர்ச்சியாக கேள்விகளுக்கு உட்படுத்திக் கொள்வது அறிவியல். அதாவது "." டன் (முற்றுப் புள்ளியுடன் ) நிற்காமல் , அடுத்த தலைமுறையும் தொடர்ந்து சிந்திக்கும் வண்ணம் "," வைப்பது. உதாரணமாக் இதுதான் இறுதி இறை வேதம் அல்லது இறுதி அவதாரம் அல்லது தூதர் என்று சொன்னால் அங்கே "." வந்து விடுகிறது. அறிவியல் அப்படி அல்ல.

"பின் நவீனத்துவம் " (இது தத்துவம் அல்ல காலக் குறியீடு ) தொடங்குவதற்கு முன்னர் அல்லது அது ஒன்று அறியப்படாதபோது அதை உணர்ந்தவர்கள்/கண்டுபிடித்தவ்ர்கள்/...அவர்கள் வாழ்ந்த நாடு/காலம்/.. போன்றவற்றில் இருந்து பெற்ற உணர்வுகளால் இத்தகைய புதிய காலத்தை கட்டமைக்க அல்லது அது சார்ந்த சிந்தனையை வெளிப்படுத்த கற்றுக் கொண்டர்கள். அதாவது அவர்கள் வாழ்ந்த கால்த்தில் அவர்களின் நிலப்பரப்பில் இருந்த வினைகளுக்கு எதிர்வினையாக அல்லது மாற்றாக சிந்தித்தார்கள், புதியதை உருவாக்கினார்கள். நாமும் நமது மக்களுக்கு இந்தச் சூழலில் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டுமே தவிர , படித்த இரவல் சிந்தனைகளை அப்படியே பேசிக்கொண்டிருப்பதால் ...சமூகத்தை விடுங்கள், அதைப்படித்தவனுக்கே ஒரு பயனும் இல்லை.

இசங்களின் அல்லது மதங்களின் அல்லது நவீனத்துவங்களின் படிப்பு அல்லது வாசிப்பு எப்படி இருக்க வேண்டும் என்றால்...

4+3 = 7 என்று பழைய (இரவல் சிந்தனை) புத்தகங்ளில் இருந்து கற்றுக் கொள்வது தவறு இல்லை. அதுதான் கற்றலின் வழியும்கூட. ஆனால்,
கற்றபின் அதே 4+3 இல் நின்று கொண்டு வியாக்கியானம் பேசாமல் (யார் அதிக புத்தகம் படித்துள்ளார்கள் என்பதுபோல ) தான் வாழும் சமூகத்திற்கு ஏற்ற புதிய சிந்தனைகளை உருவாக்க வேண்டும். அதாவது 4+4=8 என்ற அளவிலாவது.

சுஜாதா ,மதன் வகையறாக்கள் 10 வெளிநாட்டு புத்தகங்களைப் படித்து விட்டு சுவற்றில் ஒண்ணுக்குபோவது "ஆணீயம்" என்றும் "தமிழனக்கு வரலாறு இல்லை" என்ற ரீதியில் எப்படி வாரப்பத்திரிக்கை வாசகனை "வாசக வட்டத்திற்குள்" கொண்டு வந்து காசு பார்க்கிறார்களோ அப்படியே இந்த பின்/முன்/பக்கவாட்டு நவீனத்துவ/இலக்கிய/கம்யீனிச/காந்திய வியாதிகள் தங்கள் பக்க நியாயத்தை தத்தம் குழுக்களில் பேசித் தீர்த்துக் கொள்கிறார்கள் அல்லது அறிவு சீவிப் பட்டம் பெற்றுக் கொள்கிறார்கள். அந்த இசங்களாகவே வாழ்ந்து சுயம் இழக்கிறார்கள் ஒரு சினிமா கதாநாயகனின் இரசிகனைப்போல.


Picture courtesy:
www.artofancientafrica.com

Wednesday, October 17, 2007

கடவுள் - கரண் தப்பார் - கனிமொழி

டவுள் இருக்கிறார் என்பதும் கடவுள் இல்லை என்பதும் இரண்டுவிதமான நம்பிக்கைகள். அறிவியலை ஒதுக்கிவிட்டு தட்டையாக நம்பிக்கை என்ற ரீதியில் மட்டும் ஆராய்ந்தால் , இதை இரண்டுவிதமான நம்பிக்கைகள் என்று சொல்லலாம்.

கடவுள் பற்றிய விமர்சனங்கள், எதிர் கருத்துக்கள் சொல்லப்படும் போதெல்லாம் கடவுளை நம்புபவர்களின் மனதை நோகடிக்கக்கூடாது என்ற கருத்துகள் அள்ளிவிடப்படும். "கடவுள் இருக்கிறார்" என்பது பலரின் நம்பிக்கை என்றால் அதே கடவுள் "இல்லை" என்பதும் சிலரின் நம்பிக்கையே.

அப்படி இருக்கையில் "கடவுள் இல்லை" எனறு நம்புபவர்களின் மனதை, "கடவுள் இருக்கிறார்", "பாலம் கட்டினார்" என்று சொல்லி நோகடிப்பது எந்த விதத்தில் சரி? இத்தைகைய செயல்கள் "இல்லை" என்பவர்களின் நம்பிக்கையை கேள்வி கேட்கும் செயல் அல்லவா? அதுவும் தவறுதானே? அவர்களுக்கும் வலிக்கும்தானே?

இருக்கிறார் என்பதும் நம்பிக்கை. இல்லை என்பதும் நம்பிக்கை. இரண்டையும் நம்பிக்கை சார்ந்த விசயங்களாக எடுத்துக் கொண்டால் ,யார் நம்பிக்கை உண்மை அல்லது உயர்ந்தது என்று எப்படி அளவிட முடியும்? இப்படி இருக்கையில், "இல்லை" என்று சொன்னால் மட்டும் ஒரு சாரருக்கு வலிக்கும் என்று அரசும் ஊடகங்களும் ஏன் புலம்புகின்றன?

"இருக்கு" என்று சொல்லி ஒருசாரர் அடிக்கும் கும்மி, மறுசாரருக்கு வலிக்கும் அல்லவா? இது ஏன் புரிந்து கொள்ளப்படவில்லை? இது எப்போதும் ஒருதலைப் பட்சமான புரிதலாக இருக்கிறது.

அதிக சதவீத மக்கள் "இருக்கு" என்று நம்புகிறார்கள் என்பதற்காக "இல்லை" என்று நம்பும் மக்களை கருத்துச் சொல்ல அனுமதிக்காமல் அல்லது அதன் பெயரில் பெரிய அரசியலையே கட்டமைக்க முயல்வது கேவலம்.

இரண்டுமே நம்பிக்கைகள். யாரும் யார் நம்பிக்கையையும் கேள்வி கேட்கக்கூடாது என்றால், அவரவர் அவரவர் கருத்தைச் சொல்லும் சுதந்திரம் இருக்க வேண்டும். கேள்வி கேட்பதால் மனது புண்படுகிறது என்றால் அது இரு நம்பிக்கையாளர்களுக்கும்தான்.

"இருக்கு" என்று நம்புபவர்களின் பேச்சுக்காளால் தினம் தினம் "இல்லை" என்று நம்புபவ்ர்களின் மனதும் புண்படுகிறது.


  • அவரவர் நம்பிக்கைகள் அவரவர்களுக்கு.
  • "இல்லை" என்று பேசவே கூடாது என்றால் "இருக்கு" என்றும் பேசக்கூடாது.

********
ரு முதல்வர் கடவுள் நம்பிக்கையாளர்களை புண்படுத்தும் வண்ணம் பேசலாமா? என்று கேட்கிறார் கரண் தப்பர். கரணின் கேள்வியே அபத்தமானது. ஸ்டிரியோடைப் என்று சொல்லப்படும் அதே "நம்பிக்கையாளர்கள் புண்படுவார்கள்" என்ற ரீதியில் கேட்கப்பட்ட தட்டையான கேள்விகள். அதே முதல்வர்தான் அந்த மாநிலத்தில் இருக்கும் மாற்று நம்பிக்கையாளர்களுக்கும் (கடவுள் இல்லை என்று நம்புபவர்களுக்கும்) முதல்வர்.

http://www.ibnlive.com/videos/50516/.html






கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ள இருள் நீக்கி சுப்பிரமணியில் இருந்து, காசுக்கு கலை சொல்லிக் கொடுக்கும் சிரி சிரி ரவி சங்கர பாபா முதல் , ஆன்மீக வாந்திகள் மைக் போட்டு கடவுள் இருக்கிறார் என்று கத்தும் போது , கடவுள் இல்லை என்று நம்பும் நம்பிக்கையாளர்களின் மனதும்தான் புண்படுகிறது.

தப்பாருக்கு அது புரியாது. இவர்களை உட்காரவைத்து கரண் தப்பார் "ஏன் நம்பிக்கையளர்களை (கடவுள் இல்லை என்று நம்பும்
நம்பிக்கையளர்கள்) படுத்துகிறீர்கள்" என்று கேட்பாரா?

**

கனிமொழி ???

நோ கமெண்ட்ஸ்.

அரசியலுக்கு இபோதுதான் வந்துள்ளார். இவரை அறிவாளி, சிந்தனையாளர், கவிதை சொல்லி என்று கொண்டாடியவர்களுக்கு வேண்டுமானால் இவரின் பேட்டி ஏமாற்றமாக இருக்கலாம். சராசரி அரசியல்வாதிக்கு உள்ள எல்லாத் தகுதிகளும் கொண்டவர் இவர் என்பதால் தனியாக விமர்சனங்கள் இப்போது தேவை இல்லை.


Picture courtesy
http://louisproyect.wordpress.com/category/religion/
1819 caricature by British George Cruikshank. Titled “The Radical’s Arms”, it depicts the infamous guillotine. “No God! No Religion! No King! No Constitution!” is written in the republican banner.