Friday, July 09, 2010

தமிழ்ப் பதிவர்களின் இஸ்லாம் விமர்சனம் ‍ - உங்களை நீங்களே சேதப்படுதிக் கொள்ளும் அபாயம் உள்ளது


தங்கள் , அதன் அடிப்படைக் கொள்கைகள், நோக்கங்கள் இவையாவும் தெரிந்தோ , தெரியாமலோ அதைப் பின்பற்றுபவர்கள் , மேலும் அவர்களின் பிரச்சனைகள் என்று எல்லாம் எப்படியோ போகட்டும் என்று இருந்துவிடலாம். ஆனால், மதத்தில் பிறந்துவிட்ட காரணத்தினாலேயே , சில மனித உயிர்கள் துன்பப்படும்போது , சின்னச் சின்ன நியாயங்கள், உரிமைகள் ,மறுக்கப்படும்போது , அவர்களுக்காக வரும் அனுதாபம் மற்றும்  ஆதங்கமானது மதம் மீதும் அதன் அடிப்படைக் கொள்கைகள் மீதும் விமர்சனமாக வந்துவிடுகிறது. சவூதி போன்ற நாடுகள் "முலைப்பால் கொடுத்தால் பெண்கள் இரத்த சம்பந்தம் இல்லாத ஆண்களுடன் இருக்கலாம்"   என்று சொல்லும் போது,  வருத்தமும் , கோபமும், இயலாமையும் வரத்தான் செய்கிறது.  ஒரு பெண் , யாருக்கு முலைப்பால் கொடுக்கலாம் என்பதையும் , கட்டாயம் அவர்களின் ஓட்டுனருக்கு முலைப்பால் நேரடியாக கொடுக்க வேண்டும்  என்பதையும் எப்படி ஒரு சில சமயங்களும் அதன் கொள்கைகளும் தீர்மானிப்பதாகச் சொல்ல முடிகிறது?

நாம்  உண்டு , உறங்கும், வாழும், பகிர்ந்து கொள்ளும் இதே உலகில் எத்தனையோ விசயங்கள் நடந்தாலும் , நமது பார்வைக்கு வரும் இப்படியான அத்துமீறல்கள், கொடுமைகள்மீது ஒரு சின்னக் கோபம்கூட வராமல் "அர்த்த ராத்திரி வேளையில் சனியனுடன் பீடி குடித்தேன், காத்து பிரிந்த போது சனியும் பிரிந்தது"   என்று எண்டர் கவிதைகளும் , கண்றாவிப் கதைகளும் எழுதிக் கொண்டிருக்க முடியவில்லை. தமிழ் வலைப்பதிவுகளில் மத விமர்சனங்களைச் செய்பவர்கள் சிலரே.  அப்படி இயங்குபவர்களுக்கு மதவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல்கள் வருவது என்றும் வழக்கமாக  நடக்கும் ஒன்றுதான் என்றாலும் , சமீபகாலமாக  அது சிலருக்கு அதிகமாகவே நடக்கிறது.


ந்து மதத்திற்கு என்று எந்த சட்டதிட்டங்களும் இல்லை. யார் யார் இது இது இல்லையோ அவர்கள் எல்லாரும் இந்துக்கள் என்ற அளவில்தான் சைவம், சமணம், வைணவம் , சீக்கியம் என்று எல்லாவற்றையும் கொண்ட சாம்பாராக இந்துமதம் உள்ளது. THE CONSTITUTION OF INDIA  Article 25 (2)(b) அதன் பங்கிற்கு ஒரு குழப்பமான விளக்கத்தைச் சொல்லிச் செல்கிறது.
http://india.gov.in/govt/documents/english/coi_part_full.pdf
 
Fundamental Rights  Right to Freedom of Religion 
25.(1)Subject to public order, morality and health and to the other provisions of this Part, all persons are equally entitled to freedom of conscience and the right freely to profess, practice and propagate religion.
(2)Nothing in this article shall affect the operation of any existing law or prevent the State from making any law. 
(a)regulating or restricting any economic, financial,political or other secular activity which may be associated with religious practice; 
(b)providing for social welfare and reform or the throwing open of Hindu religious institutions of a public character to all classes and sections of Hindus.
Explanation I.The wearing and carrying of kirpans shall be deemed to be included in the profession of the Sikh religion. 
Explanation II.—In sub-clause (b) of clause (2), the reference to Hindus shall be construed as including a reference to persons professing the Sikh, Jaina or Buddhist religion,and the reference to Hindu religious institutions shall be construed accordingly.

சுலபாகச் சொல்ல வேண்டும் என்றால்,  இந்தியாவில் பிறக்கும் எல்லாரும் இந்துக்களே அவர்கள் வேறு மதத்திற்கு மாறாதவரை. அப்படியே மதம் மாறினாலும் இந்தியாவில் தோன்றிய மதங்களுக்குள் மாறினாலும் இந்துவாகவே அறியப்படுவார்கள். தமிழ்நாட்டில் உள்ள முருகன் இரண்டு பொண்டாட்டி வைத்து இருப்பது நியாயமா? என்று கேட்டால் காஷ்மீரப் பண்டிட்களுக்கு ஒன்றும் கவலை இல்லை. முனியாண்டி சாமியைக் குற்றம் சொன்னால் மும்பை இராம வாலாக்களுக்கு ஒரு கவலையும் இல்லை. இந்த நிலையில், இந்து மதத்தின் மீது விமர்சனம் என்பது இலக்கில்லாமல் சாட்டப்படும் குற்றச்சாட்டு. பலர் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வது இல்லை.  வர்ணாசிரம விமர்சனங்களே இன்னும் இந்துமத விமர்சனமாக தமிழ்ப்பதிவுகளில் வலம் வந்து கொண்டு உள்ளது.

கிறித்துவம்,  பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு, கருவைக் கலைக்க போப் எதிர்ப்பு ஆனால் ஒன்னொரு பிரிவு ஆதரவு , ஓரினச் சேர்க்கைக்கு எதிர்ப்பு ஆதரவு , ஓரினச்சேர்க்கையாளரே மத போதகராக இருக்க ஆதரவு, எதிர்ப்பு என்று
கிறித்துவ மதவாதிகளே பரிசோதனைகள் செய்து கொள்வதால் சிலுவைப் போர் காலங்களைப் போல பெரும் சண்டைகள் வருவது இல்லை. ஒரிசாவில் நடந்த விசயங்கள் நினைவில் வந்து போகிறது .( More Christian homes set on fire, three bodies fished out of river http://www.asianews.it/news-en/Orissa:-More-Christian-homes-set-on-fire,-three-bodies-fished-out-of-river-13342.html  ) இருந்தாலும், இன்றைய காலகட்டத்தில்,  கிறித்துவத்தால் பெரும் சண்டைகள் இல்லை. அது பாட்டுக்கு முட்டை போட்டு குஞ்சு பொறித்துக்கொண்டுள்ளது என்றே சொல்லாம். கிறித்துவம் ஓரளவிற்கு இயல்பை ஏற்று, மாற்றங்களைப் பரிசோதித்து ஏற்பவர்கள்,  எதிர்ப்பவர்கள் என்று அணுக்களைப் போல ஒன்று இரண்டாகி , இரண்டு நான்காகி அது பாட்டுக்கு தன்னை பெருக்கிக் கொள்கிறது. 

ன்றுவரை என்னால் விளங்கிக்கொள்ள முடியாத , இன்னும் புரிந்து கொள்ளமுடியாத ஒன்று இஸ்லாமியர்களின் உலகளாவிய செயல்பாடுகள். ஒவ்வொரு இஸ்லாமியரும் கீழ்க்கண்டவற்றை ஏற்றுக்கொள்கிறார்கள். இதை ஏற்காவிட்டால் அவர்கள் இஸ்லாமியர் இல்லை என்பது எனது புரிதல்.
  1. ஒரே இறைவன் (அரபியில் அல்லா எனப்படும் வார்த்தை தரும் பொருளை தமிழில் இறைவன்  அல்லது கடவுள் என்று கொள்ளலாம்)
  2. அந்த இறைவனின் நேரடி வேதம் என்று அவர்களால் நம்பப்படும் புனித குரான்.   http://www.alislam.org/quran/search2/ 
  3. அதை உலகுக்குச் சொல்லிய முகம்மது அவர்களை இறுதி இறைத்தூதராக (நபி) ஏற்றுக் கொள்வது.
  4. மேலும் முகம்மது அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் அல்லது அவரின் வாழ்க்கையின் வழியாக எப்படி வாழ வேண்டும் என்று அறியப்படும் ஹதீஸ்கள்.  http://iknowledge.islamicnature.com/hadith/
இவை எல்லாம் இஸ்லாமியர் என்பதற்கான அடிப்படை. இதில் ஏதேனும் ஒன்று இல்லை என்றாலும் அவர்கள் இஸ்லாமியர் கிடையாது. அதாவது , குரானை மட்டும் ஏற்று , முகம்மது அவர்களை இறுதி இறைத்தூதராக (நபி) ஏற்றுக் கொள்ளாவிட்டால், நிறுவனப்படுத்தப்பட்ட இஸ்லாம் மதத்தில் இடம் இல்லை. (1) புனித குரான், (2) இறுதித் தூதர், (3) தூதரின் வாழ்க்கையாக பதியப்பட்டுள்ள ஹதீஸ்கள் மூன்றும் பிரிக்க முடியாதவை.

குரானின் மூல மொழி அரபி . அதில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டு பல மொழிகளில் அது கிடைக்கிறது. அரபி வார்த்தையில் இருக்கும் அர்த்தங்களை விளக்குகிறேன் என்று மொழிபெயர்ப்பாளர்கள் அடைப்புக்குறிக்குள் தங்களின் கவித்துவ வர்ணனைகளையும் அவர்களின் அதீத கற்பனைகளையும் சேர்த்தே சொல்லுவார்கள்.  உதாரணமாக திருக்குறளுக்கான கலைஞரின் உரையையும் , சாலமன் பாப்பையாவின் உரையையும் படித்தால், அதில் அவர் அவரின் தனித்துவம் தெரியும் http://www.thirukkural.com . அதுபோல குரானின் மொழிபெயர்ப்புகளின் அடைப்புக்குறி வசனங்கள். உண்மையான விசயத்தை வளைத்து, திரித்து புதிய கருத்தை திணிக்கும். இது மொழிபெயர்பாளர்களின் ஆர்வத்தாலும் சில உள் நோக்கங்களாலும் வருவது.


 தேடுதல் மற்றும் ஆர்வம் உள்ள ஒருவரால் குரானின் மொழிபெயர்ப்பு பிரச்சனையை  சுலபமாக கடந்துவிடலாம். ஏன் என்றால் அரபியில் மூலம் உள்ளது. அரபியும் ஆங்கிலமும் தெரிந்த , இரண்டு கலாச்சாரங்களையும் அறிந்த ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் இதைக் கடக்க முடியும்.

அதிகமனா குழப்பங்கள் , பத்வாக்கள் போன்றவை குரானை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. அவை எல்லாம் ஹதீஸ்களை அடிப்படையாகக் கொண்டது. ஹதீஸ்கள் என்பவை இறைவனின் நேரடி வார்த்தைகளோ அல்லது முகம்மது நபியின் நேரடி வார்த்தைகளோ அல்ல. இவை யாவும் மற்றவர்களால் சொல்லப்பட்டவை.  அதாவது முகம்மது நபியின்(0) அருகில் இருந்தவர்(1) அடுத்தவருக்குச் (2) சொல்லி அந்த அடுத்தவர் (3) இன்னொருவருக்குச்(4) சொல்லி இந்த நான்காமவர் பதிந்து வைத்தது.  இந்த வரிசை இன்னும் நீளலாம். 0 முதல் 4 வரை நான் சொல்வது ஒரு உதாரணமே. ஒருவர் ஹதீஸ் என்று ஒன்றைச் சொன்னால் , அதைச் சரிபார்க்க அவரில் இருந்து 4‍ --> 3 --> 2 -->1-->0  முகம்மது நபி தொடர்பைச் சரிபார்த்து அது சரியாக இருந்தால் மட்டுமே அதிகார பூர்வ ஹதீசாக ஏற்றுக் கொள்ளப்படும்.

மொழி பெயர்ப்புச் சிக்கலுடன் , எது அதிகார பூர்வமானது?  என்பதும் ஹதீஸ் விசயத்தில் சேர்ந்து கொள்கிறது. பிரச்சனை என்னவென்றால் "எந்த ஹதீஸ் சரி?" என்பதும் அப்படி அது சரியானது என்று ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் மூலம் அரபி என்பதால் மற்ற நாடுகளில் "அதற்கான யாருடைய‌ மொழி பெயர்ப்பு சரி?"   என்பதும் அதன் வழி வரும் நடைமுறைச் சட்டங்கள்  அரபு நாடுகளின் நடைமுறைககளில் இருந்து வேறுபடுவதும் உண்டு.  இவை இன்னும் விடையில்லாத விசயங்கள்.சவூதியில் சரி என்று சொல்லப்படும் (அவர்கள் மொழிதான் மூலம்) அதே ஹதீசை தமிழ்நாட்டில் மேற்கோள்காட்டிப் பேசக்கூட முடியாது. அது ம‌த துவேசமாக கட்டம் கட்டப்படும். இது நடைமுறைச் சிக்கல். 

பிகளைப் பற்றி யாரவது இருக்கும் ஒரு ஹதீஸை வைத்து விமர்சித்தால்
இஸ்லாமியர்கள் சொல்வது "  அது சரியான ஹதீஸ் அல்ல" என்பதும் அல்லது "    அந்த ஹதீஸ்ற்கான அர்த்தம் அதுவல்ல " என்று சொல்வதும் வாடிக்கையான ஒன்று.  மேலும் அப்படிச் சொல்பவரை "  விவாதத்திற்கு வா "   என்பதும் , யாராவது  ஒரு மதப்பிரச்சாரகரைக் காட்டி "அவரிடம் பேசு" என்று சொல்வதும் வாடிக்கையான ஒன்று.  உலக அளவில் நபி அவமதிப்பு அல்லது அவரின் வாழ்க்கையான ஹதீஸ் குறிப்புகள் குறித்த சண்டைகள் பெரிய வன்முறையாக கொலை, குத்து சண்டை , போராட்டம் என்று நடந்து கொண்டே உள்ளது ஏதாவது ஒரு மூலையில். இப்படியான குரான், இஸ்லாம்  பிரச்சனைகளில் முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விசயம் சவூதி,ஈரான்,தாலிபான்கலின் நடைமுறைகள். குரான் , ஹதீஸ் மற்றும் இறைவனின் பெயரில் இவர்கள் செய்யும் தனிமனித வன்முறைகள், சுதந்திரங்கள் பெரும்பாலும் மாமியார் உடைத்த சட்டிபோல மற்ற நாடுகளில் உள்ள இஸ்லாமியர்களால் கண்டுகொள்ளாமல் விடப்படும்.  

லகில் உள்ள எல்லா இஸ்லாமியரைவிட, சவூதியில் வாழும் இஸ்லாமியருக்கு ஒரு சிறப்பு உள்ளது. அது அவர்கள் நாட்டில் உள்ள இஸ்லாம் வரலாற்றுப் பாரம்பரியமும் , அந்த நாட்டில் மெக்காவில் உள்ள காபா என்ற புனித இடமும். இந்தக் காரணங்களாலேயே சவூதி அரசு தனது அரசியல் அமைப்புச் சட்டமாக குரானைக் கொண்டுள்ளது. மேலும் முகம்மது அவர்களின் வாழ்க்கை குறிப்பான ஹதீஸ்களை தனது சட்ட விதிகள் தீர்ப்புகளுக்கு நேரடியாப்  பயன்படுத்துகிறது.


குரான் தான் சவூதியின் சட்ட அடிப்படை.
http://www.saudiembassy.net/about/country-information/laws/The_Basic_Law_Of_Governance.aspx


Article 1:
---------
The Kingdom of Saudi Arabia is a sovereign Arab Islamic State. Its religion is Islam. Its constitution is Almighty God's Book, The Holy Qur'an, and the Sunna (Traditions) of the Prophet (PBUH). Arabic is the language of the Kingdom. The City of Riyadh is the capital.

Article 45:
-----------
The Holy Qur'an and the Sunna (Traditions) of God's Messenger shall be the source for fatwas (religious advisory rulings).

Article 48:
----------
The Courts shall apply rules of the Islamic Sharia in cases that are brought before them, according to the Holy Qur'an and the Sunna, and according to laws which are decreed by the ruler in agreement with the Holy Qur'an and the Sunna.
 

இப்படி குரானையும், இறைத்தூதர் நபி அவர்களின் வாழ்க்கை முறையையும் கடைபிடிப்பதாகச் சொல்லும் இவர்கள் "பெண்கள் கார் ஓட்டக்கூடாது" என்று இன்றுவரை பிடிவாதமாக உள்ளார்கள். கேட்டால் அதற்கு சில ஹதீஸ்களை காட்டுகிறார்கள்.   மேலும் பெண்களை அடுத்தவருக்கு முலைப்பால் கொடுப்பதன்மூலம் அவர்கள் அடுத்த நாட்டு ஓட்டுநர்களை குடும்ப உறவாக‌க் கொள்ளாம் என்று "Shaikh Abdul Mohsin Bin Nasser Al Obaikan" ( member of Saudi Council of Senior Scholars and adviser to the king)  சொல்லியிருக்கிறார்.
"A woman can breastfeed a mature man so that he becomes her son. In this way, he can mix with her and her daughters without violating the teachings of Islam," the scholar said.
http://gulfnews.com/news/gulf/saudi-arabia/saudi-women-use-fatwa-in-driving-bid-1.643431
SAUDI ARABIA: Women threaten to breastfeed drivers if they aren't allowed to drive
http://latimesblogs.latimes.com/babylonbeyond/2010/06/saudi-women-use-fatwa-in-driving-bid.html



இஸ்லாமியராக அடையாளம் காட்டிக் கொள்ளும் தமிழ் பதிவர்களுக்கு......                         

விமர்சனம் என்ற‌ பெயரில் மற்றவர்கள்/பதிவர்கள் உங்களின் மத‌ நம்பிக்கையை கேலி செய்வது , சொற்களை வீசுவது தவறு. இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் நீங்கள் எப்படி இந்த சவூதி அறிவிப்புகளையெல்லாம் சத்தமில்லாமல் கடந்து போகிறீர்கள் என்று தெரியவில்லை. அதுதான் ஆச்சர்யமாக உள்ளது.  முன்னாள் பெரியார்தாசன் அல்லது மறைந்த பாடகர் மைக்கேல் ஜாக்சன் இப்படி யாராவது இஸ்லாத்தில் சேர்ந்தால் , அதை இஸ்லாத்திற்கு மக்கள் வரும் ஒரு குறியீடாக வைத்துக் கொண்டு பதிவுபோடுகிறீர்கள்.

ஹதீசாக இருக்கட்டும் குரானாக இருக்கட்டும் சவூதியாக இருக்கட்டும் இப்படி பெண்களைச் செய்யச் சொல்வது சரியா?   மனிதர்களாக , சுயமரியாதை உள்ள யாருக்கும்  இப்படியான செயலைக் கண்டால் " என்ன கொடுமை? கார் ஓட்டக்கூடாது....சரி அதற்காக ஓட்டுனர் வைத்துக் கொண்டால் அவருக்கு பால் கொடுக்க வேண்டுமா? கிறுக்குத்தனமாக இல்லை"   என்றுதான் கேட்கத் தோன்றும்.

புனித நூல் குரானை அடிப்படையாகக் கொண்டது என்று அறிவித்துக் கொள்ளும் ஒரு நாடு (constitution is Almighty God's Book, The Holy Qur'an, and the Sunna (Traditions) of the Prophet (PBUH) உலக இஸ்லாமியர் அனைவரும் ஒருமித்து ஒருதிசை நோக்கி தொழ குறியீடாக இருக்கும் காபா (மெக்கா) வைத் தன்னுள் கொண்ட நாடு  இப்படி செய்வது குரானிற்கும் இஸ்லாத்திற்கும் களங்கம் இல்லையா?

ஒரு எதிர்ப்புக்குறியீடாக இதையெல்லாம் கண்டிக்கவே மாட்டீர்களா?  மாநாடுகளில் அல்லது மெக்கா செல்லும்போது ஒரு சின்ன போராட்டம் என்று எப்படியாவது ஒரு எதிர்ப்பைக் காட்டமுடியாதா? அவர்களும் நீங்கள் நம்பும் மதத்தைத்தானே அவமதிக்கிறார்கள்?
  • ங்களின் அரசியல் சட்டமே குரான் என்று சொல்லிக் கொண்டு இப்படிச் செய்யும் சவூதியை அரசை எத்தனை தமிழ் இஸ்லாமியர் புறக்கணிக்கிறார்கள்?
  • எத்தனை தமிழ் பதிவர்கள் (இஸ்லாமியராக அடையாளம் காட்டும் பதிவர்கள்) ,  சவூதி இஸ்லாமிய அறிஞர்களை விவாதத்திற்கு அழைத்து இருக்கிறார்கள்?‌
  • தமிழ்ப்பதிவர்கள் செய்யும் அவமதிப்பிற்கு மல்லுக்கட்ட தயாராக இருப்பவர்கள்,  ஏன் இது போன்ற‌ சவூதி இஸ்லாம் அறிஞர்களையும் நேரடி விவாதத்திற்கு அழைக்கக்கூடாது?
  •  அப்படி அழைத்து  சவூதி இஸ்லாம் அறிஞர்களுக்கு உண்மையான ஹதீஸ்களை எடுத்துக் காட்டி விளக்கலாமே? அல்லது சவூதியைப் புறக்கணிக்கலாமே?
  • Islam - sin  of ‘khulwa’ (staying alone with a stranger) என்று கூகிளில் தேடினாலே பல ஆச்சர்யங்கள் வரும். இவைகளை எல்லாம் வாதம் செய்து இஸ்லாத்தை அவமதிக்கும் சவூதி அடிப்படைவாதிகளை எதிர்த்து மற்ற இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டங்கள் விவாத அழைப்புகள் உண்டா?
  • வலைப்பதிவில் மல்லுக்கு நிற்கும் யாரும் இதுவரை ச‌வூதியை ஒரு எதிர்ப்பிற்காகவேனும் ,இஸ்லாம் அவமதிப்பிற்காக விவாதத்திற்கு வா என்று அழைப்புவிட்டதாகத் தெரியவில்லை.

தமிழில் வலைப்பதிவு செய்து கொண்டு இஸ்லாம் மதத்தை விமர்சிப்பவர்களுக்கு...


விமர்சனத்திற்கும் அவதூறுக்கும் உள்ள வித்தியாசம் , கவர்ச்சிக்கும் ஆபாசத்திற்கும் உள்ள வித்தியாசம் போன்றது. ஒரு பெண் தொடை தெரியும் அளவிற்கு டவுசர் அல்லது குட்டைப்பாவடை போட்டால் அது கவர்ச்சி. ஆனால் அதே பெண், சேலையைக் கட்டிக்கொண்டு, கவன ஈர்ப்பிற்காக முழங்கால்வரை உயர்த்தினாலே ஆபாசமாக இருக்கும். கவனிக்க...இந்த நிலையிலும் டவுசரைவிட, சேலையே பெரும்பகுதியை மறைக்கிறது இருந்தாலும், அது ஆபசமாகவே இருக்கும். கடுமையான கருத்துக்களையும் எளிதாகச் சொல்லலாம். 


குரான் வழி நடப்பதாகச் சொல்லிக் கொண்டு பெண்களை அவமதிக்கும் பேச்சுக்களை ஏதோ ஒரு ஹதீஸைக் காட்டி பேசும் சவூதி இஸ்லாமிய அறிஞர்களைக்    கண்டிக்காதவர்கள், உங்களையும் கண்டுகொள்ளமாட்டார்கள் என்று நினைக்காதீர்கள். இது பெரிய பிரச்சனையாக வாய்ப்புள்ளது.

நீங்கள் இணையத்தில் எதோ ஒரு மூலையில் இருக்கும் ஏதோ ஒரு ஹதீஸை சுட்டி என்னவோ பேசுகிறீர்கள். அந்த தொடுப்பு இணையத்தில் இருப்பதே  ஒத்துக் கொள்கிறேன் . நீங்களோ  அல்லது எந்த தமிழ் வலைபதிவரும் உருவாக்கியது அல்ல. பிரச்சனை என்ன  என்றால் உங்கள் பதிவில் வெளியிட்ட குற்றத்திற்காக (??) நீங்கள் பொறுப்பு ஏற்க வேண்டி வரலாம். இறைத்தூதர் முகமது நபி அவர்களின் படங்கள் இணையத்தில் உள்ளது. ஆனால் அதை குமுதம் போன்ற பத்திரிக்கைகள், "தகவலாக" வெளியிட்டால்கூட சங்குதான். 


தயவுசெய்து ஹதீஸ்களைத் தொடாதீர்கள். எது சரியானது ? எது உண்மை ? எந்த மொழிபெயர்ப்பு உண்மை?  யார் சொல்வது சரி ? என்று யாருக்கும் தெரியாது.

உயிர்ப்பயம் அல்லது வாழ்வியல் காரணங்கள் என்று எப்படி வேண்டுமானலும் அடுத்தவர்கள் சொல்லட்டும் , இதில் இருந்து நீங்கள் விலகி இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை. உங்கள் செயல் உங்களின் உரிமை. ஆனால் தக்க சமயத்தில் இடித்துரைக்காவிட்டால் நான் உங்களிடம் இணையத்தில் பேசிக்கொள்வதும் பின்னூட்டங்கள் பகிர்ந்து கொள்வதிலும் அர்த்தம் இல்லை.

சவூதி இஸ்லாம் அறிஞர்ககளுக்கு இருக்கும் சலுகைகள் உங்களுக்கு கிடைக்காது. அப்படியே பேச வேண்டும் என்றால் குரானை மட்டும் மேற்கோள் காட்டுங்கள். குரானைத்தாண்டி விவாதங்கள் ஹதீஸ் பக்கம் சென்றால்..." அய்யா, நான் கடவுளின் வார்த்தைகளை மட்டுமே நம்புகிறேன். குரான் சொன்னதாக குரானில் இருந்து மேற்கோள் காட்டுங்கள். மேலே பேசுவோம் " என்று சொல்லி நகர்ந்து விடுங்கள். ஆப்பில் நீங்களே போய் உட்கார்ந்து கொள்ளாதீர்கள்.

அப்படியே அவர்கள் குரானைக் கொண்டுவந்தாலும் எந்த தமிழ் மொழிபெயர்ப்புகளையும் ஆதாரமாகக் கொண்டு வாதம் செய்ய முயற்சிக்காதீர்கள். அவர்களிடம் , அதிகார, வசன எண்ணை மட்டும் வாங்கிக் கொண்டு முடிந்தவரை ஆங்கில வசனங்களைச் சரிபார்த்து (http://www.alislam.org/quran/search2/) அதைப்பற்றி மட்டுமே பேசுங்கள். தமிழ் மொழிபெயர்ப்புகளில் இருக்கும் மேலதிக விளக்கங்கள் மத நம்பிக்கையாளர்களுக்கு மட்டுமே.

அது போல எக்காரணம் கொண்டும் அவர்கள் மதிக்கும் இறைத்தூதரை எதுவும் சொல்லாதீர்கள். நீங்கள் சொல்வது எதோ ஒரு ஹதீஸில் இருந்தால் கூட.


வலைப்பதிவில் உங்களின் பதிவின் தேவையைவிட உங்களின் குடும்பத்திற்கு உங்களின் இருப்பும் உங்களின் ஆரோக்கியமும் குழப்பமற்ற மனமும்  அவசியம்.



இஸ்லாம் ஆண்கள் ஏன் அரேபியா பாணி ஆடைகளை தமிழகத்தில் அணிவது இல்லை?
http://kalvetu.blogspot.com/2010/01/blog-post.html

Picture courtesy
http://www.freeimages.co.uk/

Wednesday, July 07, 2010

ஜேம்ஸ் கேமரூன் அப்புறம் இந்த மணிரத்னம் போன்றவர்களும் இயக்குனர் என்றே அழைக்கப்படுகிறார்கள்.


ஜேம்ஸ் கேமரூனின் அவதார் என்ற திரைப்படம் சொல்லும் முக்கிய விசயம்   வளத்திற்காக கொள்ளையிடப்படும் இடமும் அதனைச் சமாளிக்க பாதிக்கப்பட்டவர்கள்  முன்னெடுக்கும் போராட்டமும்"    என்று ஒருவரியில் உள்ளடக்கத்தைச் சொல்லலாம். இந்தப் பிரச்சனையை மனிதர் வாழும் எல்லா நாடுகளிலும் (இடங்களில்) பொருத்திப் பார்க்கலாம். எதோ ஒரு வகையில் இந்த பிரச்சனை எல்லா நாடுகளிலும் இருக்கும்.

ஆச்சர்யமான ஒன்று என்னெவென்றால், ஜேம்ஸ் கேமரூனுக்கு இந்தியாவில் நடக்கும் பிரச்சனையும் தெரிந்து இருக்கிறது. அதை அவர் வெளிப்படையாகவும் சொல்கிறார்.


Is Avatar a Native American story?

என்ற கேள்விக்கு பதில் சொல்லும் ஜேம்ஸ் கேமரூன் , இப்படிச் சொல்கிறார்.

Not exclusively. I think Americans locate the story there most quickly. But Avatar's now the No. 1 movie in Brazil, and Brazil has a lot of issues with the displacement of indigenous populations and deforestation. There's a tribe in India that is getting pushed off its sacred mountain for a bauxite mine. The film is hugely popular in China, and people there are getting displaced by the government to build dams. So people are relating to it from all these different perspectives.

Read more:
10 Questions for James Cameron
http://www.time.com/time/magazine/article/0,9171,1969722,00.html

காணொளியாக‌ (வீடியோப் பதிவாக ) பேட்டி
http://www.time.com/time/video/player/0,32068,69997107001_1969700,00.html




இந்தப்பிரச்சனை குறித்த amnesty.org யின் விரிவான அறிக்கை.
India: Don't mine us out of existence: Bauxite mine and refinery devastate lives in India
http://www.amnesty.org/en/library/info/ASA20/001/2010/en


தமிழில் நாகர்ஜுனன் -திணை இசை சமிக்ஞை
http://nagarjunan.blogspot.com/2010/04/6.html

இதனைப் படிக்கும் போது மணிரத்னம் போன்றவர்களும் "ச‌னியனுடன் பீடி குடித்தேன். அதனோடு உரையாடிய போது டவுசர் கிழிந்தது" என்று எதையாவது கிறுக்கி உலகத்து பிரச்சனைகளில் இருந்து தன்னைத் துண்டித்து கனவில் வாழ்ந்து வரும் பின் நவீன புனைவு பதிவர்களும் நினைவில் வந்து போகிறார்கள்.

மணிரத்னம் போன்றவர்களும் இயக்குனர் என்றே அழைக்கப்படுகிறார்கள். அவர்களும் படம் எடுக்கிறார்கள். அவரையும் அறிவாளி என்கிறார்கள். மக்களின் பிரச்சனையைச் சொல்லதா கலை என்ன கலை?  கோமாளிகள் எழுதும் கருமாந்திரப் புனைவுகள் நினைவிற்கு வந்து தொலைக்கிறது. கேட்டால்,  "கலை ஏதாவது ஒன்றைச் சொல்லத்தான் வேண்டுமா?" என்கிறார்கள் புனையும் பின் நவீனப் புண்ணாக்குப் பதிவர்கள்.

---
தொடர்புடைய பதிவு...
உண்மைத்தமிழன்
இராவணன் - மணிரத்னம் சொன்னதும், சொல்லாமல்விட்டதும்..!
http://truetamilans.blogspot.com/2010/06/blog-post_20.html

தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் உச்சக்கட்ட வெறியில் ஆட்டமோ ஆட்டம் என்று ஆடிக் கொண்டிருக்கிறது இந்திய அதிகார வர்க்கம்.பழங்குடியினர், மலைவாழ் மக்களின் பூர்விகச் சொத்தான காடுகள், மலைகள், இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் விதமாக எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் செயல்படும் இந்த அதிகார வர்க்கத்தின்  ஒரே குறிக்கோள்.. சட்டம், நீதிமன்றம் என்ற ஒன்றையே இந்த அப்பாவி மக்களின் கண்களில் காட்டாமல் இவர்களைக் கொன்றொழிப்பதுதான்..!
.....
எத்தனை நல்ல சந்தர்ப்பம் மணிக்கு..? இன்றைய யதார்த்த நிலைமையை சுட்டிக் காட்டுவதைப் போல தான் செய்தது தன்னைச் சார்ந்த மக்களுக்காகவும், அந்த மக்களை பாராமுகம் காட்டி புறக்கணிக்கும் ஏகாதிபத்திய அதிகார வார்க்கத்தை எதிர்த்தும்தான் என்பதை ஆணித்தரமாக நிரூபித்திருந்தால் இத்திரைப்படம் இந்திய அரசியல் சினிமாவில் மிக முக்கியப் பங்கை அளித்திருக்கும்..!




.
Picture Source: time.com

Friday, July 02, 2010

தமிழ் நாட்டில் பள்ளிகளில் சாதி, சமயம் (மதம்) கட்டாயம் இல்லை : தமிழக‌ அரசாணையை தரவிறக்கம் செய்து கொள்ள‌

மிழ் நாட்டில் , பள்ளி விண்ணப்ப படிவங்களில்  சாதி , சமயம் (மதம்) குறிப்பிடுவது கட்டாயம் இல்லை. அரசாணை 1210    2.7.1973

 து தமிழக அரசின் அதிகாரபூர்வதளம்.  இந்த தளத்தில் அரசாணை உள்‌ளது.
http://www.tn.gov.in/tamiltngov/tamilgos/sed/sedums205.htm

நேரடியாகப் பார்க்க வேண்டும் என்றால் நீங்கள் முதலில் தமிழக அரசு பயன்படுத்தும் கம்பன் எழுத்துருவை உங்கள் கணனியில் நிறுவ வேண்டும். அது கிடைக்கும் இடம்.http://www.tn.gov.in/tamiltngov/misc/fontdload.htm அரசாணையை தரவிறக்கம் செய்து இங்கே சேமித்து உள்ளேன். இங்கே உள்ள பிடிஎஃப் கோப்பை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 ==> G.O.1210_From_TamilNadu_Gov.pdf






மேலும் கீழ்வேளூர் வட்டாரம் - நாகை மாவட்டம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு  ஆசிரியர் , மாணவர்களுக்குத் தேவையான பல அரசாணைகளை தொகுத்து வைத்துள்ளது. http://koottanigo.blogspot.com/  இங்கேயும் அனைத்து படிவங்களும் பள்ளி சம்பந்தப்பட்ட அரசாணைகளும் கிடைக்கும். இவர்கள் தளத்திலும் மேற்கண்ட அரசாணை வண்ணத்தில்  கிடைக்கிறது. அதையும் பிடிஎஃப் கோப்பை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 ==>  G.O.1210_From_Teacher_Website.pdf



***



சாதி உங்கள் சாய்ஸ !
http://kalvetu.blogspot.com/2007/09/blog-post.html


அரசாணை 1210    2.7.1973
TamilNadu G.O  1210 Dated     2.7.1973