Thursday, September 09, 2010

பதிவுகள் மூலம் உறவுகள்: ஏம்பா .... நீ லூசா? ‍ (பார்ட் 1)

 பே ருந்தில் காத்து இருக்கிறேன்.  என்னை இந்த நரகத்தில் இருந்து இரட்சித்து , ஏதோ ஒரு கடவுளின் சொர்க்க கம்பெனியில் சேர்க்க விரும்பும் ஒரு அன்பர் ஒரு பிட் நோட்டீஸ் கொடுக்கிறார்.  வேண்டாம் என்கிறேன். அவர் வலிந்து திணிக்கிறார். அல்லது பேருந்தில் சன்னலோர இருக்கையில் இருக்கும் போது நாய்க்கு பொறை போடுவது போல தூக்கி விசிறிவிட்டுச் செல்கிறார். எனது விருப்பம் ஏதும் கேட்கமலேயே.


நான் என்ன செய்யலாம்?

  1. எடுத்து அந்த ஆள் முகத்தில் எறியலாம்.
  2. எடுத்து குப்பையில் போடலாம்.
  3. காக்கா எச்சத்தை துடைக்கப் பயனப்டுத்தலாம்.
  4. என்ன இருக்கு என்று படிக்கலாம்.
  5. குழந்தை குட்டி உள்ள சக பயணியின் குழந்தை ஆய் போய்விட்டால் அதை துடைக்க அவருக்கு தந்து உதவலாம்.

ஆனால் கடவுளின் சொர்க்க கம்பெனியில் சேர வேண்டுமா அல்லது வேண்டாமா என்று முடிவெடுப்பது முழுக்க முழுக்க எனது முடிவு சார்ந்தது.

ஏதோ ஒரு ஆர்வத்தில் (Curiosity ) அல்லது வேறு வெலை வெட்டி இல்லாமல் சேர்ந்துவிட்டு , "பரம பிதா பிராண்டிவிட்டார்"  என்று மாத்து வாங்கிவிட்டு அதற்கு நீதி கேட்டு நான் பேருந்து ஓட்டுநரிடமும் என்னுடன் பயணித்த மற்ற பிரயாணிகளிடமும் முறையிட்டால் ..அவர்கள்....

"ஏம்பா ..நீ லூசா?"   என்று என்னைக் கேட்க எல்லா உரிமையும் உள்ளது.

ஏன் என்றால் இதுபோன்ற‌ கூமுட்டை கூட்டத்தில் சேர எல்லாருக்கும்தான் விளம்பரம் ஏதோ ஒருவிதத்தில் வருகிறது. அந்த பேருந்தில் சன்னோலோர இருக்கையில் இருந்த எல்லாப் பாவிகளுக்கும்  கடவுளின் சொர்க்க கம்பெனி நோட்டீஸ் வரத்தான் செய்தது. நான் ஏன் மட்டும் ஏன் சேர்ந்தேன்? நான் உண்மையில் லூசுதான்.

என்ன செய்யலாம்? அந்த பிட் நோட்டிஸ் கம்பெனியை சட்டபூர்வமாக அணுகலாம். ஏன் என்றால் எந்த "சொங்கி" "சோப்ளாங்கி" கம்பெனியாக இருந்தாலும் அது இருக்கும் நிலத்தின் (நாடு மாநிலம்) சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடப்பதாக சான்று அளித்து இருப்பார்கள்.

"எல்லாஞ் சரிதேன் , எவனாவது கண்டவன் வந்து கண்ட கம்பெனில சேருன்னு சொன்னா ஏண்டா சேருர? சுய புத்தி இல்லையா அல்லது வேலை வெட்டி இல்லையா?" என்று நீங்கள் கேட்டால். என்ன சொல்வேன் நான்?


Image from:  http://theblacksentinel.wordpress.com/2008/06/15/how-stupid-can-one-person-be/