Friday, January 28, 2011

இந்த நாட்டில் மட்டும்தான் இது நடக்கும் #tnfisherman

ரானில் உளவு வேலை பார்த்ததாக அமெரிக்கர்களை ஈரான் கைது செய்து இன்றுவரை சிறையில் வைத்துள்ளது.American Hikers in Iran Accused of Espionage. ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இருக்கும் எதிர் நிலைகளில் ஈரான் நினைத்தால் அவர்களை உடனே சுட்டுக் கொன்று இருக்கலாம். ஆனால் அப்படிச் செய்ய முடியாது. எவ்வளவுதான் பிரச்சனைகள் இருந்தாலும், அமெரிக்கர் ஒருவரை மற்ற நாடுகள் கிள்ளுக்கீரையாக நடத்தவே முடியாது. அமெரிக்கா என்ற நாடு, அதன் மக்களுக்குத் தரும் அதிபட்ச காவல் இது. எங்கிருந்தாலும் 'அமெரிக்க சிட்டிசன்' என்றால் , அவர்கள் கொலைக்குற்றம் செய்து இருந்தாலும் கிள்ளுக்கீரையாக நடத்திவிடமுடியாது.

இந்தியா என்ற நாடு அதன் குடிமக்களுக்கு தரும் மரியாதை என்பது நாயைவிடக் கேவலமானது. பீபீ லுமாடா : இந்திய தூதரகத்தின் இரக்கமற்ற கொலை !!
//ஓமன் நாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்தவர் பீபீ லுமாடா , இவர் இந்தியாவுக்கு திரும்பும் வழியில் தோஹா விமானநிலையத்தின் தன் இந்தியப் பாஸ்போட்டைத் தொலைத்திருக்கிறார். இதனையடுத்து அப்பெண்ணை தோஹா விமான நிலைய அதிகாரிகள் அவரை இந்தியாவுக்கு செல்ல அனுமதிக்காமல் மஸ்கட்டுக்கே திருப்பி அனுப்பியிருந்தனர். கடவுச் சீட்டு இல்லாததனாலும், ஒமானுக்குள் மறுபடியும் நுழைவதற்கான விசா இல்லாததாலும் இவரை விமான நிலையத்தை விட்டு வெளியில் செல்ல அனுமதிக்காமல் மஸ்கட் விமான நிலையத்திலேயே வைத்து விட்டு மஸ்கட்டில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்தியத் தூதரகப் பணியாளர்களோ அப்பெண்ணை விரைவில் தொடர்பு கொள்வோம் என்று சொன்னதோடு சரி, வந்து பார்க்கவும் இல்லை ஏன் என்று கேட்கவும் இல்லை. ஐந்து நாட்களாக லுமாடா தங்கிவதற்கு அறையோ தனக்கு ஒத்துக் கொள்ளும் உணவோ இன்றி வாடிய நிலையில், அச்சம் அவரை துவட்டி எடுக்க ஆறாவது நாள் காலையில் உறங்கிய நிலையிலேயே லுமாடாவின் உயிர் பிரிந்திருந்தது. அதுவரை நேரில் வந்தோ அள் அனுப்பியோ அந்த பெண்ணின் உயிரைக் காப்பாற்றாத இந்திய தூதர் அனில் வாத்வா  ”பாஸ்போர்ட்டைத் தொலைத்திருந்த லுமாடாவுக்கு தற்காலிக பயண ஆவணங்களை தருவதற்குள்ளாக அவர் உயிரிழந்தது வருத்தம் அளிப்பதாக ” தெரிவித்திருக்கிறார். இப்போது லுமாடாவின் உடலை பத்திராமாக அவரது சொந்தங்களிடம் சேர்க்க முயர்சிக்கிறதாம் இந்தியாத் தூதரகம். ஆமாம் இந்த இந்தியா எப்போதும் ஏழைகளின் உடலை பத்திரமாக அனுப்புவதிலேயே குறியாக இருக்கும்.//
இந்தியா வல்லரசும் இல்லை நல்லரசும் இல்லை. ஒருவகையான கார்ப்பொரேட் கழிசடை அரசாகத்தான் உள்ளது. ஊழல் மலிந்த இந்த நாட்டில் ஒரு சாமான்யனின் உயிருக்கு மதிப்பே இல்லை. அம்பானி சாகோதரர்களின் சொத்துச் சண்டைக்கு கட்டப் பஞ்சாயத்துச் செய்ய பிரதமர் முதல் எல்லா அமைச்சர்களும் கரம் சிரம் பொத்தி காவல் செய்வார்கள். ஆனால் "லுமாடா" போன்ற பெண்களுக்கு ஒன்றும் நடக்காது. ஏன் இப்படி?

மன்மோகன் என்ற இப்போதைய பிரதமர் ஒரு குமாஸ்தாவாக இருக்க இலாயக்கு. அவர் ஒரு தேர்ந்த மக்கள் தலைவர் அல்ல. எந்தவிதமான‌ தொலைநோக்குப் பார்வையும் இல்லாத , சோனியா என்ற கோங்கிரஸ் கட்சித் தலைவரின் நலன்களுக்காக உழைக்கும் ஒருவர். இந்தியா இப்படி இருப்பது சாபக்கேடு. மும்பையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் "டாஜ்" ஓட்டலில் செத்தவர்களுக்கும் , இரயில் நிலையத்தில் செத்தவர்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. எல்லாம் உயிர்தான். ஆனால், அரசாங்கமும் ஊடக‌ங்களும் நடந்துகொண்டவிதம், பணம் இல்லாத பகட்டில்லாத பொதுசனம் செத்தால் என்ன , டாஜ்தான் முக்கியம் என்றே இருந்தது.

எல்லைப்புற மாநிலங்கள்

அருணாசலப்பிரதேசம் போன்ற தரைவழியில் அடுத்த நாட்டைத்தொடும் மாநிலமாகட்டும் , கடல்வழியில் இலங்கைக்கு அருகில் உள்ள தமிழ்நாடு போன்ற மாநிலமாகட்டும் மத்திய அரசிற்கு எந்தவிதமான தீர்க்கமான திட்டங்களும் இல்லை. சீனாவிற்கும் ,இலங்கைக்கும் சொம்பைத்தூக்க எப்போதும் தயாராகவே இருக்கிறது இந்தியா. ஒரு நல்ல அப்பா, அம்மா இல்லாத வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு எப்படி பாதுகாப்பு இல்லையோ, அதுபோல, நல்ல மத்திய மாநில அரசுகள் இல்லாத குடிமக்களுக்கு எந்தப்பாதுகாப்பும் இல்லை.

மீனவர் பிரச்சனை:

மீனவர்களுக்கு எல்லைக்கோடுபற்றிய புரிதல் இருக்க வேண்டும் என்று சொல்லும் கிந்து  Relations between India and Sri Lanka have never been better. போன்ற முட்டாள் நாளேடுகள் அடுத்த நாட்டிற்குப் போய்விடலாம். கிந்துக் கூட்டங்கள் இலங்கை அரசால் இலங்கா ரத்னா வாங்கியவர்கள் அவர்கள் குலைத்துத்தான் ஆக வேண்டும்.

தனது குடும்பம் மற்றும் அது சார்ந்த சுயநலங்களுக்காக மட்டும் ஆட்சி நடத்தும் தற்போதைய முதல்வருக்கு மக்கள் நலம் என்பது அவரின்குடும்ப நலன் மட்டுமே. பொது மக்கள் என்பவர்கள் அவர் பார்வையில் இலவச அடிமைகள். மக்களும் அப்படிதான் உள்ளார்கள். ஒரு முதலமைச்சரை மீறீ மத்திய அரசு நடக்கவே முடியாது. இவர் நினைத்தால் ஒரு மணிநேரத்தில் மத்திய அரசை மண்டியிடச் செய்யமுடியும். ஆனால் தனது குடும்பம் சிக்கியுள்ள பல பிரச்சனைகளுக்கு அடுத்த தேர்தலில் முதல்வராக இவர் வந்தே ஆகவேண்டிய சூழலில், காங்கிரசுக்கு அடிமையாய் இருக்க முடிவெடுத்து, மீனவரின் பிணங்களின்மீது தொகுதிப்பங்கீடு நடக்கிறது. எப்படி இப்படி? ஒரு தமிழ் உணர்வாளர் கடைசிக்காலத்தில் இப்படி மாறிப்போனார்?

http://tamilmakkalkural.blogspot.com/2010/08/karunanidhi-t-shirtiam-still-life-first.html


  
ஒரு மாநிலமாகச் செய்ய வேண்டியது.
தமிழகம் ஒரு காலத்தில் இன உணர்வுடன் இருந்திருந்தாலும், தற்போதைய தமிழகம் உணர்வற்ற கூட்டங்களால் நிரம்பி உள்ளது. காசுக்கும் பதவிக்கும் மட்டுமே வாழும் தலைவர்கள், இலவசங்களை மட்டுமே பார்த்து ஓட்டுப்போடும் மக்கள். இந்த மக்கள் எதற்காகாவும் கோபப்படுவது இல்லை. எல்லாவற்றையும் சினிமா,கிரிக்கெட் என்று தின்று செரித்துவிடுகிறார்கள்.
1. கச்சத்தீவை மீட்டேயாகவேண்டும்
2. சேதுதிட்டம் நடந்தேயாகவேண்டும்
3. தமிழகத்தில் இருந்து இலங்கைத்தூதரகம் மற்றம் இலங்கை சார்ந்த எந்த அமைப்புகளும் இருக்கக்கூடாது.
4. இலங்கையுடன் ராஜாங்க உறவுகளை முறித்துக்கொள்ள மத்திய அரசை வற்புறுத்த வேண்டும்.

மக்கள் செய்ய வேண்டியது:
1. தி.மு.க கட்சி மற்றும் அவர்கள் குடும்பம் சார்ந்த எல்லா வணிகப்பொருட்களையும் புறக்கணிக்க வேண்டும்.
2. இந்த தேர்தலில் நிச்சயம் தி.மு.க தோற்கடிக்கப்படவேண்டும்.
3. குறைந்தபட்சம் தொகுதியில் இருந்தே கட்சிசார்பர்று நல்லவர்களை தேர்ந்தெடுக்க முயற்சிக்க வேண்டும்.
4. கிரிக்கெட்டை முற்றிலுமாகப் புறக்கணியுங்கள். இலங்கை என்ற நாடு எதிர்ப்பைத் தாண்டி செய்ய வேண்டியது இது.ஒட்டுமொத்த இந்தியாவே இதற்கு கைதட்டுவதும் இவன்களைப் பார்ப்பதும்தான் தேசபக்தி என்ற அளவில் மந்தைக்கூட்டமாய் உள்ளது.
5. தமிழகம் தாண்டி , மற்ற மாநிலங்களின் பிரச்சனைகளை அறிந்து கொள்ளுங்கள். காஷ்மீர்,மணிப்பூர் கொடுமைகளுக்காகவும் குரல் கொடுங்கள். அப்போதுதான் மற்றவர்கள் உங்களுக்காக குரல் கொடுப்பார்கள்.
6.சினிமாவில் வெட்டி வசனம்பேசும் அட்டைக் கத்தி பயில்வான்களை , கூத்தாடி என்ற அளவிற்குமேல் பார்க்காதீர்கள்.
7. மீனவர் பிரச்சனைக்கு மீனவர் மட்டும் போராடுவது, விவசாயி பிரச்சனைக்கு விவசாயி மட்டும் போராடுவது, ஆசிரியர் பிரச்சனைக்கு ஆசிரியர் மட்டும் போராடுவது.... என்று இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் தோள்கொடுங்கள்.
8. சாதி, மத ,கட்சி வர்க்க பேதங்களைக் கலைந்து தமிழ் என்ற ஒரு இனமாக மட்டும் இருங்கள்.


http://www.savetnfisherman.org/

http://twitter.com/tnfishermen

http://www.facebook.com/pages/Save-Fishermen-from-Sri-Lankan-Navy/167109543335671

#TNFisherman ட்விட்டரில் ஒரு உணர்வுத்தீ
http://allinall2010.blogspot.com/2011/01/tnfisherman.html

Thursday, January 27, 2011

ஊரை ஏமாற்றும் சீமான், வைகோ, திருமா

நி ரூபிக்கப்பட்ட மற்ற தமிழனத்துரோகிகளை இங்கே நான் குறிப்பிடவிரும்பவில்லை. சீமான், வைகோ  மற்றும் திருமா ஆகியோரை இன்னும் சிலர் நம்புவதால் அவர்களை மட்டும் குறித்தானது.

திருமா:
இவரின் ஆரம்பகால அரசியல் என்பது சமூகப் பார்யைவோடுதான் , சமூக இனப் போராளியாக ஆரம்பித்தது.கடைசியில் கார்ப்பொரேட் அரசியல்வாதியாகிவிட்டார். இன்றுவரை இவர் தி.மு.க  , காங்கிரசுடன் மற்றும் இராஜபக்சேயுடனும் மாறி மாறி சிரித்து போஸ் கொடுக்கிறார்.  எப்படி ஒரே சமயத்தில் தமிழனுக்காக அழவும், மறுபுறம் தி.மு.க ,காங்கிரசுடன் மற்றும் இராஜபக்சேயுடனும் சேர்ந்து காவடி தூக்கவும் முடிகிறது?

வைகோ:
காமெடிக் கதம்பமாய் ஆகிப்போனவர். அ.தி.மு.க மற்றும் தி.மு.க வைவிடவா காங்கிரஸ் தமிழினத் துரோகம் செய்துவருகிறது?  இவருக்கு அ.தி.மு.க கூட்டணியில் ஒரு செல்வாக்கும் இல்லை. தி.மு.க வில் ஒன்றும் செய்ய முடியாது.

சீமான்:
அரசியலில் புதுக்குழந்தை. இவர் வேறு நாம் தமிழர் என்ற காமெடிக் கட்சியைத்துவக்கியுள்ளார். யார் யார் தமிழர் என்று சொல்லுங்கள் முதலில். இவர் காங்கிரசை எதிரி என்கிறார். அப்படி என்றால் அ.தி.மு.க மற்றும் தி.மு.க தமிழனுக்கு எதிரி இல்லையா?

சின்ன கதை:
தமிழகம் என்ற ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டிற்கு, மக்கள் என்பவர்கள் உரிமையாளர்கள். அந்த வீட்டைக் காவல் காக்க‌ கட்சி என்ற கூர்க் (Coorg) ஒருவரை காவலுக்கு வைக்கிறார்கள். மத்திய ஆட்சி என்ற பெரிய வலிமை , தமிழகம் என்ற வீட்டையும் அதன் நலன்களையும் நசுக்க வருகிறது.

கட்சி என்ற கூர்க் மனிதர் என்ன செய்யலாம்?
1. கட்சி என்ற கூர்க் மனிதர், மத்திய ஆட்சி என்ற பெரிய வலிமையை எதிர்த்துப் போராடி, மாண்டுவிடுவார். மத்திய ஆட்சி என்ற பெரிய வலிமை , தமிழகம் என்ற வீட்டையும் அதன் நலன்களையும் நசுக்கிவிடும்.

2. கட்சி என்ற கூர்க் மனிதர் மத்திய ஆட்சி என்ற பெரிய வலிமையை எதிர்த்துப் போராடி, பல காயங்களுடன் குற்றுயிராய்கிடக்க, மத்திய ஆட்சி என்ற பெரிய வலிமை , அவரைத் தாண்டி தமிழகம் என்ற வீட்டையும் அதன் நலன்களையும் நசுக்கிவிடும்.

3. கட்சி என்ற கூர்க் மனிதர் எதிர்த்துப் போராட முடியாமல் ஓடிவிடுவார். ஆளில்லாத வீட்டில் , மத்திய ஆட்சி என்ற பெரிய வலிமை வீட்டையும் அதன் நலன்களையும் நசுக்கிவிடும்.
இவைதான் ஒரு மனிதனாக கட்சி என்ற கூர்க் மனிதர் செய்ய முடிந்தது.
ஒன்று வீரனாக இருந்து மாண்டுபோகலாம் அல்லது கோழையாக இருந்து ஓடிவிடலாம்.

இன்னும் சிலவற்றைப் பார்ப்போம்
4. கட்சி என்ற கூர்க் மனிதர் , மத்திய ஆட்சி என்ற பெரிய வலிமை போடும் பிச்சைக்காசுக்காக தான் காவல் செய்ய வேண்டிய வீட்டையே காட்டிக்கொடுக்கலாம். காசுவாங்கிவிட்டதால் அல்லது தனக்கு சில ஆதாயம் கிடைப்பதால் மத்திய ஆட்சி என்ற பெரிய வலிமை செய்யும் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கலாம்.
இந்த 4 ஆவது அயோக்கியத்தனம், துரோகம், கேவலமானது. 
ரை ஏமாற்றும் சீமான், வைகோ, திருமா ஆகியோர் அயோக்கியத்தனம் செய்யும் காவலாளியுடன் கூட்டு வைத்துக் கொண்டே அதே சமயம், மத்திய ஆட்சி என்ற பெரிய வலிமையை மட்டும் குற்றம் சாட்டுவது,  மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா? உண்மையில் எதிரி யாரென்று தெரியவில்லையா அல்லது தவறான இலக்கை அடையாளம் கட்டுவதன்மூலம் கூட்டுக் கொள்ளை அடிக்கப் பார்க்கிறீர்களா?

உள்ளூர் கூர்க் காவலாளி , மத்திய வலிமையுடன் கூட்டணியில் உள்ளார். இன்னொருவர் எப்படா திண்ணை காலியாகும் என்று அதே மத்திய வலிமையுடன் கூட்டுச்சேர காத்துள்ளார்.  நீங்கள் எல்லாம் எப்படி சலிக்காமல் உள்ளூர் கூர்க் காவலாளியோடு கூட்டு வைத்துக்கொண்டு , வெட்கமே இல்லாமல் மத்திய வலிமைதான் கெட்டவர் அவரை எதிர்க்கிறோம் என்று ஏமாற்றுகிறீர்கள்? பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்ற நிலையில் எப்படி வெட்கம் சிறிதும் இல்லாமல் அரசியல் செய்கிறீர்கள்/ அல்லது இதுதான் நீங்கள் அறிந்த அரசியலா?

"தனியா நின்றால் மக்கள் ஓட்டுப்போடவில்லை"  என்று சொல்லும் நீங்கள், ஓட்டுப்போடும் அளவிற்கு என்ன செய்துள்ளீர்கள்? மக்கள் செல்வாக்கு உள்ளவன்தான் அவர்களின் வாக்கைக் கேட்டு தேர்தலில் நிற்கவேண்டும். தேர்தலில் நிற்பதாலேயே வாக்குப் போடவேண்டும் என்று கேட்க எந்த உரிமையும் இல்லை. அதற்கான தகுதியை முதலில் வளர்க்க வேண்டும்.

உள்ளூரில் யாரும் வெளிநாட்டுப் பிரச்சனைக்காக ஓட்டுப்போடுவது இல்லை. தமிழகத்தில் வெற்றிபெற, தமிழகத்திற்கான அஜெண்டா இருக்க வேண்டும். அதற்கான உழைப்பு இருக்க வேண்டும்.கம்யூனிஸ்டுகள் மற்றும் ம.க.இ.க வினர் செய்த மக்கள் போராட்டங்கள் அளவிற்குகூட வைகோ எந்தப் போராட்டங்களையும் நடத்தவில்லை. உத்தப்புரம் சுவர் பிரச்சனையை எடுத்துக் கொள்வோம். பெர்லின் சுவர்போல இந்தக்கொடுமை இன்று உலகம் முழுவதும் தெரிந்திருக்க வேண்டாமா? திருமா எந்தனைமுறை இதை பாராளுமன்றத்தில் பேசியுள்ளார்? உடைத்தெரியவேண்டாமா அந்தச்சுவரை? மக்களின் அன்றாட வாழ்வில் கலக்காமல் எப்படி அவர்களிடம் ஓட்டுக் கேட்கமுடியும்?  இராமாஸ்வர மீனவர்களின் பிரச்சனையையே தமிழர் பிரச்சனையாக சென்னையில் இருக்கும் கிண்டு என்ற பத்திரிக்கைகூட நினைக்கவில்லை.  இந்த வள்ளலில் எத்தனைகாலம் ஈழ அஜெண்டாவை வைத்துக் கொண்டு தமிழகத்தில் ஓட்டு கேட்கமுடியும்?

நீங்கள் இன்னும் 10 வருடங்களுக்கு தேர்தலில் வெற்றிபெறாவிட்டாலும் ஒன்றும் குடிமுழுகிவிடப்போவது இல்லை. ஆனால், அந்த 10 வருடங்களை உண்மையான மக்கள் பணியில் செலவழித்தால் நிச்சயம் மக்களே உங்களை சிம்மாசனத்தில் வைப்பார்கள். நீஙகள் அப்படிசெய்தும் மக்கள் ஓட்டுப்போடவில்லையா? அவர்களை பேய்கள் திங்கட்டும். அப்படி மக்கள் உங்களை சிம்மாசனத்தில் வைக்கும்போது , உலக நலன்களைப் பேசமுடியும். அதைவிட்டுவிட்டு ஏன் இப்படி தேர்தல் கூட்டணிக்காக அலைகிறீர்கள்?  இதில் என்ன சாதித்துவிட முடியும் என்று சொல்லுங்கள்?

அரசியல் என்பது தேர்தலில் நின்று ஓட்டுக் கேட்பது இல்லை. மக்கள் பணி செய்வதால் மக்கள் உங்களை தலைவராக ஏற்றுக் கொள்வது. உண்மையான மக்கள் பணி செய்வனுக்கு , தேர்தல் மூலம் வரும் அதிகாரம் ஒரு கூடுதல் கருவி தவிர அது மட்டுமே கருவி அல்ல.
.

காங்கிரசை ஒழிப்பதற்காக ஜெயலலிதாவை ஆதரிப்பது நியாயமா?- சீமானுக்கு கவிஞர் தாமரையின் பகிரங்கக் கடிதம்!
http://www.nerudal.com/nerudal.24944.html


.

Monday, January 24, 2011

ஏண்டா உனக்கு அறிவில்லையா? சொரணை இல்லையா?

நா னும் தமிழன் என்று சொல்லிக் கொள்வதால் இந்தக் கேள்வி என்னை நோக்கியே. ஏண்டா உனக்கு அறிவில்லையா? சொரணை இல்லையா?

தமிழன் போன்ற பிரிந்துகிடக்கும் சொரணையற்ற சமுதாயம் உலகில் எங்கும் இருக்க முடியாது. எந்தப் பிரச்சனைகளுக்கும் கோபம் கொள்ளத்தெரியாத சொரணையற்ற சமுதாயம். அன்றாட வாழ்விற்கு சில ரொட்டித்துண்டுகளும் , தனது சுயநலமும் நிறைவேறிவிட்டால் அவனவன் அவன் குடும்பம் தாண்டி தெருவரைகூட சிந்திக்கமாட்டான்.

சாதியாலும், மதத்தாலும் பொருளாதார வர்க்க பேதங்களாலும் ஒவ்வொருவனும் ஒரு தனி உலகம். அறிவு சீவி என்று தங்களைத் தாங்களே சொல்லிக்கொள்ளும் சும்பன்கள் எல்லாம் ஒரு தனி இரகம். இவர்கள் எதற்கும் கவலைப்படாமல் எல்லாப்பிரச்சனையையும் எப்படி கதையாக , கவிதையாக மாற்றிக் கல்லாக் கட்டலாம் என்று மட்டும் நினைக்கும் சாம்பிராணிகள் கூட்டம்.  சமூகம் சார்ந்த கோபம் இல்லை யாருக்கும்.

நீங்கள் உலகப்பிரச்சனைகளை எல்லாம் விட்டுவிடுங்கள். உங்கள் மாநிலத்தில் உங்களின் ஒருவனாக மீனவர்கள் தினந்தோறும் சாகிறார்கள். இது ஒரு கொந்தளிப்பாக வந்து இருக்க வேண்டாமா?

தொடரும் மீனவர்கள் படுகொலை
http://truetamilans.blogspot.com/2011/01/blog-post_25.html

கடற்புறத்தை எல்லையாகக் கொண்ட மாநிலத்தில் , மீனவ வாழ்க்கை இன்றியமையாதது. அதற்காக உங்களுக்கு எந்த சமூகக் கோபமும் இல்லையா?

எந்த அரசியல் கட்சிக்காவது அல்லது எந்த தமிழனுக்காவது இதில் என்ன மாற்றுக் கருத்து இருக்க முடியும்? ஏன் உங்களால் ஓரணியில் சேரமுடியவில்லை?

மீனவர்கள் பிரச்சனை, முல்லைப் பெரியாறு, காவிரி, மலம் திண்ணும் பிரச்சனை , தேர் இழுக்கும் பிரச்சனை என்று எதுவுமே யாரையுமே பாதிப்பது இல்லை. இந்த வள்ளலில் இவர்கள்தான் ஈழம் குறித்து கவலைப்படுவார்களாம்.
  • தான் வாழும் தெரு அளவில்..
  • ஊர் அளவில்..
  • மாநிலம் அளவில் தமிழனாக இணைந்து ஒரு பிரச்சனைக்காக குரல் கொடுக்க முடியாதவன் இதையெல்லேம் ஒன்று சேர்த்து ஈழம் வாங்க உதவி செய்யப்போகிறானாம். 
இவர்கள் எல்லாம் தமிழர்கள்தான். தினமும் கடலுகுச் செல்லும் மீனவனும் , கச்சேரிக்கு செல்லும் மைலாப்பூர் மாமிகளும், சினிமாத் தியேட்டரில் கூடும் கூட்டமும், என் போன்றவர்களும் டமிலர்கள்தான்.
    1.ம‌லையகத் தமிழன்
    2. யாழ்பாணத் தமிழன்
    3.கொழும்புத் தமிழன்
    4.இலங்கைவாழ் இஸ்லாமியத் தமிழன்
    5.கனடாத் தமிழன்
    6.மலேசியாத் தமிழன்
    7.மொரிசியஸ் தமிழன்
    8.மயிலாப்பூர் தமிழன்
    9.சிங்கப்பூர் தமிழன்
    10.உலகத் தமிழன்
    11.தலித் தமிழன் ,அய்யர் தமிழன் அய்யங்கார் தமிழன்
    இன்னும் நிறைய டமிலர் வெரைட்டி இருக்கு.  எந்த பொதுவான எதிரியை வைத்து அல்லது பொதுவான காரணத்தை வைத்து இவர்களை ஒன்று சேர்ப்பது?. சும்மா நாம் டமிலர் என்று சொன்னால் எவன் தமிழன் என்று கேள்வி வரத்தான் செய்யும்.

    இந்தக் கொடுமையைப் பாருங்கள். இது எல்லாம் டமில்நாட்டில் மட்டுமே நடக்கும்.
    //இந்திய அரசின் ராணுவத்துறை நடத்தும் சைனிக் பள்ளி திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி நகரில் உள்ளது. இந்த பள்ளியில் 2011ம் ஆண்டுக்கான நாட்காட்டி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டது.

    இந்த நாட்காட்டியில் இலங்கை அதிபர் ராஜபக்சேயின் படம் அச்சிடப்பட்டுள்ளது. அந்த படத்திற்கு தலைப்பாக ‘’எல்லாமே சாத்தியம்’’ என்று எழுதப்பட்டுள்ளது.//
    http://maniyinpakkam.blogspot.com/2011/01/blog-post_13.html

    லீனா மணிமேகலை என்பவர் தற்போது எடுத்துள்ள ஒரு சினிமா செங்கடல். http://www.sengadal.com/  தற்போது அது சென்சார் போர்டால் மறுக்கப்பட்டுள்ளது. அந்த சினிமாவை மக்கள் பார்வைக்கு கொண்டுவர சினிமாக்காரர்களான பாரதிராஜா அல்லது சீமான் அல்லது விஜயகாந்த் அல்லது தங்களை இன உணர்வாளர்களாக் காட்டிக்கொள்ளும் சினிமா மக்கள் என்ன செயல்திட்டம் வைத்துள்ளார்கள்?

    லீனாவின் ஈழம் குறித்த பார்வையும் மற்றவர்களின் பார்வையும் ஒன்றாக இல்லாவிட்டாலும் அவர் சொல்லவரும் கருத்தைப் பரப்பவாவது ஈழம் என்ற ஒற்றைக் குறிக்கோளில் நின்று செயல்திட்டம் வகுக்கவேண்டுமே? இவர்கள் ஏன் சிந்திப்பது இல்லை.

    தனக்குச் சாதகமான வியாபாரம் (அரசியல்,சினிமா, புத்தகம் )இல்லாவிட்டால் இவர்கள் ஒரே கருத்தில் இணையமாட்டார்கள்.
     


    தமிழகம் மாநிலமாக...
    கரையோர எல்லைபுற மாநிலமான தமிழகத்திற்கு, அதை ஒட்டியுள்ள இலங்கை என்னும் நாட்டின் தொடர்பான வெளியுறவுக் கொள்கைகளில் முக்கியப் பங்கு உள்ளது. இலங்கை குறித்த இந்திய மத்திய அரசின் எந்த முடிவுகளும் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் எடுக்கப்படக்கூடாது. சிறப்புச் சட்டம் தேவை. சேது திட்டம் தொடங்கி அன்றாட மீனவர் பிரச்சனைவரை சொம்புதூக்கிகளாகவே தமிழகம் உள்ளது.

    இதற்கு தமிழகத்தில் நல்ல அரசியல் தலைமை தேவை. ஏன் என்றால் கச்சத்தீவு போல அரசியல் ஒப்புதலுடனே தாரைவார்க்கும் அபாயமும் உள்ளது.

    தமிழ் ஒரு இனமாக...
    சாதி, மதம் தாண்டி தமிழன் ஒரு இனமாக் கூடி , மலையக மக்கள் தொடங்கி, மலேசியாத் தமிழர் தொட்டு , தமிழகத்தில் மலம் திண்ண வைக்கப்படும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் என்ன செய்யலாம் என்று ஒரு தீர்க்கமான அஜென்டா இருக்க வேண்டும்.


    வாய்ச் சொல் வீரர்கள்
    http://masivakumar.blogspot.com/2009/05/blog-post_21.html

    இயக்குநர் வைகோ. ஈழம் இனப்படுகொலை
    http://deviyar-illam.blogspot.com/2011/01/blog-post_23.html
    .

    தமிழன் என்ற ஒரு இனம் இல்லை. பல உட்பிரிவுகள் (பொருளாதாரம், சாதி, மத , வர்க்க உட்பிரிவுகள்) அவர்களுக்கான நலனுக்காக மட்டுமே இயங்குகின்றன.

     .
    வெட்கப்படுகிறேன் வருத்தப் படுகிறேன் என்று சொல்வதற்குக்கூட வெட்கப்படும் ஒருவன் நான்.

    Friday, January 14, 2011

    சீமானின் சாகாத சாதிப் பற்று

    .தி.மு.க.வுக்கு ஆதரவு ஏன்? வியூகத்தை விளக்கும் சீமான்
    //காங்கிரஸை அழிப்பது என்பது தந்தை பெரியாரின் கனவு, அண்ணல் அம்பேத்கரின் கனவு, ஐயா முத்துராமலிங்கத் தேவரின் கனவு -சீமான்//
    http://www.tharavu.com/2011/01/blog-post_14.html

    "ஐயா முத்துராமலிங்கத் தேவர் பற்றி எனக்குத் தெரியாது அண்ணன்கள் சொல்லி பின்னால் தெரிந்துகொண்டேன்" என்று கொஞ்ச நாளைக்கு முன்னால் பல்டி அடித்த சீமான்,  மறுபடியும் சாதிப் பூனையை வெளியில் விட்டிருக்கிறார்.

    (1)பெரியார் , (2)அம்பேத்கார் வரிசையில் (3) அய்யா முத்துஇராமலிங்கத் தேவர்.

    அய்யா பசும்பொன் முத்துஇராமலிங்கத் தேவர் என்ன கனவு கண்டார்? என்று சீமானுக்குத் தெரிந்தால் அவரது கட்சிப் பக்கத்தில் http://www.naamtamilar.org போடலாம். நாமும் தெரிந்துகொள்ளலாம். தேசியமும் இந்துமத ஆன்மீகமும் இருகண்களாகக் கொண்டு வாழ்ந்த அய்யாவைப்பற்றி எழுதும் அசுரன்களை நாமும் கேள்வி கேட்கலாம்.

    எசமான் சீமான், சொல்லுங்க எசமான் சொல்லுங்க.

    கொறிக்க...

    சீமானிடம் இதையா எதிர்ப்பார்த்தோம்?
    http://periyaryouth.blogspot.com/2009/11/blog-post.html

    சீமான் தரப்பு ‘நியாயங்களும்’ ஜெயமோகனின் ‘சமூக ஆஆஆஆராய்ச்சியும்’
    http://sugunadiwakar.blogspot.com/2009/11/blog-post.html

    சீமான் உள்ளிட்ட ‘முற்போக்கு’ நரிகளின் தேவர் சாதிவெறி
    http://www.vinavu.com/2009/12/16/pseudo-secular-casteist-seeman/

    சீமான் என்ன செய்யவேண்டும்?
    http://thekkikattan.blogspot.com/2011/01/blog-post.html

    சீமான் தேறுவாரா? தடம் மாறுவாரா?
    http://deviyar-illam.blogspot.com/2010/12/blog-post_21.html

    ஓட்டுப் பொறுக்கியாகிறார் சீமான்!
    http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=1611

    TAG: இன்னும்மா வொலகம் நம்மளை நம்புது?‌

    .

    Monday, January 10, 2011

    "சைவம்" - என்பது மதம். அது "உணவுப் பழக்கம்" அல்ல‌

    கே ள்வியே கேட்காமல் திணிக்கப்பட்ட புத்தியில் மட்டும் உறைந்திருக்கும் நிலை மடச்சமாதி எனப்படும் நிலை. மடச்சமாதி மாக்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பிரச்சனை இல்லை. ஆனால் இந்த மடச்சாமாதி (சாம்பிராணிகள்) அறிவியல் பேசும்போதுதான், அவர்களின் மீது விமர்சனம் வருகிறது.

    அப்படிப்பட்ட  ஒன்று  "நான் சைவம். கறி திங்க மாட்டேன். காரணம் நான் உயிர்களைக் கொல்வது பாவம் என்று நினைப்பவன்" என்று சொல்லும் மொக்கைதனம்.

    சை வம் என்றால் என்ன‌?
    தமிழகத்தில் மற்றும் புலம்பெயர்ந்துவாழும் தமிழர்களில், சாதி,மதம் பாராமல் பலரும் பயன்படுத்தும் வார்த்தை சைவம். புலால் மறுக்கும்  ஒருவர், தனது உணவுப் பழக்கத்தை குறிக்க,  "சைவம்" என்றே அடையாளப்படுத்திக் கொள்கிறார். இது ஒருவகையில் துவைக்கப்பயன்படும் எல்லா  பிராண்ட் சோப்பையும் "ரின்" என்று அழைப்பது அல்லது காப்பி(Copy) மெசின் அனைத்தையும் ஜெராக்ஸ் என்று அழைப்பது போன்றது.

    சைவம் என்பது ஒரு மதம். மேலும் 'சைவம்' அதே சைவ மத‌த்தினரின் உணவு முறையும் அல்ல. குழப்பம் கரணம் கச்சாமி.

    அதாவது.....
    • சைவம் என்பது முதலில் ஒரு மதத்தின் பெயர்.
    • மேலும் அந்த சைவ மதத்தில் இருப்பவர்கள் புலால் உண்ணாதவர்களாகத்தான் இருக்கவேண்டும் என்ற சட்டம் ஏதும் இல்லை.
    ந்தியாவில் தோன்றிய மதங்களில் பெளத்தமும்,ஜெயின் வகையறாவும் புலால் மறுத்தலை கொள்கையாகக் கொண்டுள்ளது எனலாம். சைவம் , வைணவம் போன்ற சனாதன பார்ப்பனீய மதங்கள் சாப்பாட்டு விசயத்தில் புலால் மறுத்தலை மதக் கொள்கையாகக் கொள்ளவில்லை.  சைவக் கடவுள் சிவனே சுடுகாட்டு ஆண்டியாகவும், அவனது பக்தர்கள் வேட்டுவர்களாகவும் இருக்கையில், சைவம் மதம் புலால் மறுக்கிறது என்பதை ஏற்க முடியாது. சைவ மததின் கொள்கைகள் என்று இனிமேல் யாராவது எழுதினால்தான் உண்டு.

    எனவே புலால் மறுப்பவர்கள் தங்களை தாவர உண்ணியாகச் சொல்லலாமே தவிர, சம்பந்தமில்லாமல் சைவம் என்ற ஒரு சனாதனதர்ம வர்ணாசிரம மத‌த்தின் அடையாளத்தில் ஒதுங்க வேண்டியது இல்லை.

    கொல்லாமை மற்றும் புலால் மறுத்தல் பற்றிப் பேசிய நம்ம பெருசு ( பெருசு - அன்பால் சொல்வது) ஒரு இடத்தில்கூட சைவம் பற்றிச் சொல்லவில்லை. மழித்தலும் நீட்டலும் வேண்டாம் என்ற பெரிசு அவர் புக்கில் "சைவம்" என்ற மத‌த்தைப் பற்றிப் பேசி இருக்க மாட்டார் என்றே நம்புகிறேன். குறள் அறிந்த நண்பர்கள் சொல்லலாம்.

    அறத்துப்பால் - துறவறவியல் - புலான்மறுத்தல்
    http://www.thirukkural.com/2009/01/blog-post_9289.html

    அறத்துப்பால் - துறவறவியல் - கொல்லாமை
    http://www.thirukkural.com/2009/01/blog-post_4715.html

    சா தியும் புலால் மறுத்தலும்

    ருவன் எந்த சாதிக்கு நேர்ந்துவிடப்பட்டு இருந்தாலும், உணவுப்பழக்கத்தில் தாவர உண்ணியாகவோ அல்லது மாமிச உண்ணியாகவோ அல்லது இரண்டும் திங்கியாகவோ இருக்கலாம்.  அப்படி இருப்பதால் உங்களின் சனாதன வர்ணாசிரம பார்ப்பனீயக் கொள்கைக்கு எந்த பங்கமும் வராது.  வர்ணாசிரமக் கொள்கைப்படி உங்களுக்கு மேல் ஒரு சாதியையும், உங்களுக்கு கீழ் சில சாதிகளையும் வரித்துக் கொண்டு, அதன்படி வேறுபாடுகள் பாராட்டினாலே போதும்.  மற்றபடி புலால் மறுத்தல் என்பது சனாதன வருணதர்மக் கோட்பாடு அல்ல.  பிறப்பின் பெயரால் சாதி பார்த்து தீண்டாமையை கடைப்பிடிப்பது (கல்யாணத்தில் சாதி பார்ப்பது, அடுத்த சாதியில் குழந்தைகள மணமுடித்தால் அருவாள் தூக்குவது )  மற்றும் அது சார்ந்த அயோக்கியத்தனம் செய்தாலே போதும். நீங்கள் அக்மார்க் பார்ப்ஸ்

    புலால் மறுத்தலுக்கும் சாதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் சைவ அய்யர், அசைவ அய்யர், பீர் அடிக்கும் அய்யர், வோட்கா அடிக்கும் அய்யங்கார், சைவப் பிள்ளை, அசைவப் பிள்ளை , நரிப்பிள்ளை , கீரிப்பிள்ளை சாப்பிடும் அல்லது சாப்பிடாத பிள்ளை. காட்டு நாயக்கர் மற்றும் வேட்டுவ நாயக்கர், விரதத்தின் போது மட்டும்  "நோ கறி" நாயுடு....என்று சகட்டுமேனிக்கு சாதி + உணவுப்பழக்கத்தை வைத்து புதுச் சாதி வகையை ஏற்படுத்திக் கொண்டார்கள். அவர்களை மன்னிப்போமாக.

    யிர்க் கொல்லாமை மனிதனுக்கு சாத்தியமா?

    தற்கு முதலில், உயிர் என்றால் என்ன? என்று தெரியவேண்டும். அதுபோல உயிர்- ‍க்கும் உயிரி- க்கும் உள்ள வித்திசாயமும் தெரியவேண்டும். உயிர் என்றால் என்ன என்று தெரியமலேயே "உயிர்க்கொல்லாமை" தான் சைவம் என்று சந்தில் சிந்து பாடக்கூடாது.  அது தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதுடன் , அடுத்தவர் முன்னிலையில் உங்களை அசிங்கப்படுத்தும்.

    உயிர், உயிரி பற்றி அடிப்படையை அறிந்துகொள்ள உங்களுக்கான கையேடு.

    இறப்பு - உரையாடல் - I
    http://kaiyedu.blogspot.com/2008/02/i.html
    இறப்பு - உரையாடல் - II - உயிர்த் தோற்றம், செல்-அறிமுகம்
    http://kaiyedu.blogspot.com/2008/02/ii.html
    இறப்பு - உரையாடல் - III - நெக்ரோசிஸ் - சீரற்ற இறப்பு முறை
    http://kaiyedu.blogspot.com/2008/02/iii.html

    ஒரு உயிரியைக் கொன்றாலே அது உயிர்க்கொலை என்ற அளவில், மனிதன் என்ற சார்ந்து வாழும் ஒரு விலங்கினம் தனது வாழ்நாளில் உயிர்க்கொலை செய்யாமலேயே வாழமுடியுமா? என்றால் அது நிச்சயமாக இல்லை. 

    மனிதன் மற்ற உயிரிகளைச் சார்ந்தே வாழமுடியும். சார்ந்து என்றால் ஏதோ தோளில் சாய்ந்து கொண்டு அல்ல, சாப்பிட்டும் வாழும் நிலை. இதற்காக குற்ற உணர்வு தேவை இல்லை. நமது அமைப்பு அப்படி. வயிற்றிலும் மூக்கிலும் பேட்டரி போட்டுகொண்டு வாழமுடியாது. ஒருவேளை நாளை இது மாறலாம். அதுதான் அறிவியல்.

    உணவு என்பதே அடுத்த ஒரு உயிர் அல்லது உயிரி. உயிரற்ற ஒன்றை (பாறை, கல் , மண் )மனிதன் இதுவரை உணவாக உட்கொண்டதாக எனக்குத் தெரியவில்லை. உயிரிகளை வகை வகையாக சமைத்து நேரடியாக அல்லது மறைமுகமாகப் பயன்படுத்தி வருகிறான். எனவே தாவர உண்ணி என்பதும் உயிர்க்கொலைதான். தாவர உணவு எடுப்பவர்கள் " உயிர்க் கொலையா? நான் லேது "என்று சொல்ல முடியாது. வாங்க நீங்களும் உயிர்க்கொலையாளிகளின் பக்கம். எனவே தாவர உண்ணிகள் உயிர்க்கொலை செய்யாத புண்ணியாத்மாக்கள் என்று பிலிம் போட வேண்டாம். அது உயிர் என்றால் என்னவென்றே தெரியாத மடத்தனத்தால் வரும் பேதமை.

    ன் மனிதனின் உணவுப் பழக்கத்தில் இந்த வேறுபாடு?

    ஒருவர் எந்த உணவு வகைகளைச் சாப்பிடுகிறார் என்பது ,அவரின் உணவுப்பழக்கம்.  அதைத்தாண்டி அதில் பாவம் , புண்ணியம், மதம் சாதி என்ற எந்தக் கண்றாவிகளையும் அள்ளிதெளித்து "கொல்லாமை" என்ற "குழு அடையாளம்" காட்டுவது முதலுக்கு மோசம். நீ எந்த உயிரியையும் கொல்லாமல் வாழ நினைத்தால் நீ உன்னையே கொல்கிறாய் என்று அர்த்தம். கொல்லாமை கடைபிடிக்க நீ உயிரியாக இருக்க மாட்டாய்.

    மனிதனின் உணவுப் பழக்கம் என்பது அவன் இருக்கும் சூழல் சார்ந்தது.

    இதற்கு பண்டைக்கால தமிழனின் வாழ்க்கை முறையை வகைப்படுத்தும் குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை போன்ற குறிப்புகளில் காணப்படும் , அவர்களின் உணவு முறையே சான்று.  எந்தக் காலத்திலும் மீன் தின்னும் ஒருவனை இழிவாகச் சொல்லவில்லை இந்தத்திணை. அது அவன் மண் சார்ந்த உணவுப்பழக்கம் அதைப் போற்ற வேண்டும். கள்ளுண்ணுவது, வாளைமீன் , விரால் மீன், தேன் , திணைமாவு, வேட்டையாடுதல் என்று அதகளப்படுத்தி இருக்கிறார்கள். இந்த 5 திணைகளில் எல்லாம் உழைக்கும் மக்களே காட்சிப்படுத்தப்பட்டு அவர்களுக்கான உணவு முறை இருக்கும். மணியாட்டும் நவீன பார்ப்பனீயக் கருத்தான சைவம் என்ற உணவுப் பழக்கத்தை குறிக்கும் வார்த்தை இருந்ததாக யாராவது சுட்டிக் காட்டினால் உதவியாய் இருக்கும்.

    சங்ககாலத்து உணவும் உடையும்.
    http://www.varalaaru.com/Default.asp?articleid=525

    ண்ட மாற்றும் , பயண வசதியும் ஏற்பட்ட பின்னர்தான் அனைவரும் அனைத்து உணவு வகைகளையும் சாப்பிடும் வாய்ப்பு ஏற்பட்டது. அதுவரை அந்த  அந்த மண்ணின் மைந்தர்க்கு அந்த மண்ணில் கிடைக்கும் உயிர்களே உணவு. கடலின் அருகே வாழ்பவனுக்கு மீன்தான் பிரதான உணவு. அவனின் மீன் உணவு, குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்களின் உணவைவிட எந்தவிதத்திலும் தாழ்ந்தது கிடையாது. அப்படி யாரும் சொன்னதும் இல்லை. இந்தக் கால பார்ப்பனீய சைவக் குஞ்சுகள், மீன் சாப்பிடுவதை மகா கேவலமாகப் பார்க்கிறதுகள்.

    எல்லாம் மனிதன் வாழும் சூழல் சார்ந்த ஒன்று. எல்லா வாய்ப்புகளும் இருக்கும் போது , தெரிந்தெடுக்க முடியும். வாய்ப்பே இல்லாத சூழலில், இருப்பதைத்தான் திங்க வேண்டும். அதுதான் இயற்கை. இயற்கையின் பங்கை பயணமும் பண்ட மாற்றும் மாற்றியிருக்கிறது என்பது உண்மை.

    உணவு என்பதே உயிர்க்கொலைதான். அதில் எந்த தாழ்ச்சியும் உயர்ச்சியும் இல்லை.

    இன்னமும் பல மொக்கைகள் "நான் உயிர் கொல்லாமை கடைபிடிக்கும் டவுசர், உயிர்களுக்கு தீங்கு விளைவிக்க விரும்பவில்லை. அதனால்  என்று சைவ உணவு மட்டுமே உட்கொள்ளுகிறேன்" என்று கூறினால்......

    1.கொல்லப்பட்ட விலங்குகளின் தோலால் ஆன பெல்ட் , பர்ஸ், சூ ... என்று ஏதேனும் உபயோகித்தாலும் நீங்கள் விலங்குகள் தோலைப் பயன்படுத்துவது மற்றும்  சார்ந்த அது கொலையையும், கொலை சார்ந்த வணிகத்தையும் ஊக்கிவிக்கும் செயல்.

    2. மூச்சு விட்டாலும், தயிர் சாப்பிட்டாலும், பிரட், பன் சாப்பிட்டாலும் உயிர்க்கொலையே .எத்தனையோ பாக்டீரியாக்கள் காற்றில் இருந்து உடலுக்கு வருகிறது. தயிரில் பாக்டீடிரியா உள்ளது. பிரட், பன், பிச்சா, இட்லி ,தோசை என்று எல்லாவற்றிலும் நொதித்தல் உண்டு. அவை எல்லாம் உயிரிகளின் செயலே(ஈஸ்ட்).  சில டவுசர்பத்ரிக்கள் , நடு ரோட்டு நாராயண சாஸ்திரிகளும் (எத்தனை காலம் டவுசர்பாண்டி என்றே சொல்வது) முட்டை இல்லா கேக் மட்டும் சாப்பிடுவார்கள். பன் தலையர்களே பன்னிலும் பிச்சா மாவிலும் இட்லி ,தோசையிலும்  கூட நொதித்தல் உண்டே? என்ன செய்யலாம்?

    3. ல அய்யர் மற்றும் அய்யங்கார் ஆத்து ஆண்/பெண் என்று எல்லா சகல குஞ்சு குளுமான்களும் பட்டுச்சேலை அல்லது அங்க வஸ்திரம் (??) போட்டு "சுத்த அக்மார்க் உயிர்க்கொலை நோ" கமிட்டியாக வலம் வருவார்கள். அவர்களின் கோமணம் &  வஸ்திரங்கள் பட்டுப்புழுக்களை கொன்று வந்தவை என்று மனதால் நினைக்கக்கூட அஞ்சுவார்கள்.

    4. தைவிட காமெடி இந்த "சுத்த அக்மார்க் உயிர்க்கொலை நோ" கமிட்டி பெண்கள் அணியும் முத்தால் ஆன ஆபரணங்கள். சிப்பி என்பது உயிரற்ற வஸ்து இல்லை. அது ஒரு உயிரி அதைக் கொன்று பகட்டாக அணிகலன் செய்து போட்டுக் கொள்வார்கள்.

    5. காலையில் நெய் இட்லியும் , மத்தியானம் நெய் சாம்பாரும் சாப்பிட்டுவிட்டு "சுத்த அக்மார்க் உயிர்க்கொலை நோ" கமிட்டி மக்கள் சபாக்களில் , மாட்டுத் தோல் அல்லது ஏதோ ஒரு விலங்கினைக் கொன்று , பக்குவப்படுத்தப்பட்ட தோலால் ஆன மிருதங்கத்தின் வாரை , இழுத்துக் கட்டிக் கொண்டு, அவா அவா சபா சாபாவாப் பாடுவா. ஆனால், அந்த தோல் எப்படி வந்தது என்று , அதே தோலின் வாரை இழுத்துக் கட்டும்போதுகூட யோசிக்க மாட்டா. என்ன கொடுமை இது "சுத்த அக்மார்க் உயிர்க்கொலை நோ" கமிட்டி?

    6. "சுத்த அக்மார்க் உயிர்க்கொலை நோ" கமிட்டியில் உள்ள மக்கள் அனைவரும் , அவர்கள் வீட்டில் வரும் கொசு , மூட்டைப் பூச்சி, பூரன், பூச்சி வகைகளைக் கொல்லமாட்டார்கள். மிருகக்காட்சி சாலைக்கு போன் பண்ணி கொசுவை பத்திரமாக அனுப்பி வைப்பார்கள்.

    என்ன மாதிரியான உயிர் கொல்லாமை இவர்கள் கடைபிடிப்பது?

    சிப்பியைக் கொன்று அதில் செய்த முத்துக்களையும், பட்டுப்புழுக்களைக் கொன்று அதில் செய்த பட்டையும் அணிந்து கொண்டு, மாட்டின் தோலால் செய்யப்பட்ட மிருதங்கத்தில் இசை கேட்டுக் கொண்டிருக்கும் திருப்பதி வெங்கடவா போன்ற சாமிகளுக்கே வெளிச்சம்.

    கொசுறு

    கரிகரன் ஐயா, நீங்க சொல்லுவது தான் சரி
    http://tbcd-tbcd.blogspot.com/2008/02/blog-post_19.html

    என்னத்தைச் சொல்ல 4 - 1 - 2011
    http://tbcd-tbcd.blogspot.com/2011/01/4-1-2011.html


    Picture courtesy :  http://en.wikipedia.org