Tuesday, May 29, 2012

நீயா? நாயா?

னது அம்மா- in - law வுடன் பேசுவதற்காக (மனைவியின் அம்மா.. தமிழில் சொல்வது என்றால் மாமியார்) கோலங்கள் தொடங்கி கோபிநாத்தின் அசட்டு நீயா நாயா வரை தகவல்களை தெரிந்து வைத்துக் கொள்வேன்.  சும்மா வெறுமனே சாப்டீங்களா? என்ன சாப்டீங்க என்பதைத்தாண்டி , அவருடன் உரையாடலைத் தொடர,  அவர் இரசிக்கும் செய்திகளைத் தொட்டு உரையாடலை வளர்த்து செல்வது அவருடன் என்னை தொடர்பில் வைத்திருக்க உதவுகிற‌து. உரையாடல் விவாதமானாலும் எங்களுக்குள் ஒரு நல்ல உறவை தக்க வைத்துக்கொள்ள இத்தகைய உரையாடல்களை நானே வலிந்து செய்வது வழக்கம்.

அந்தவகையில்தான் கோபிநாத்தின் அசட்டு நீயா நாயா வையும் அவ்வப்போது பார்த்து வைப்பது வழக்கம்.

சமீபத்தில் பேசப்படும் பவர்ஸ்டார் சீனிவாசன் என்பரை இணையத்தில் உலாவும் பல சுவரொட்டிகளில் (போஸ்டர்களில்) பார்த்துமட்டுமே இருக்கிறேன். அதைத்தாண்டி ஒன்றும் இல்லை.
சூப்பரு ஸ்டாரு, 
இளவட்ட தள , 
உண்மையான தல, 
வொலக டமிள் தலவைர் ,
கேப்டன் ஆப் சினிமா , 
வொலக நாயகன் ......
வரிசையில் இவரும் ஒரு அடைமொழி வைத்துக் கொள்கிறார்.

தனக்கென ஒரு அடையாளத்தை பிச்சாத்து டிவி சோவில் தக்கவைக்க பம்மாத்திற்காக (போலி அடையாளம் ) கோட்டு சூட்டு போட்டுக் கொல்லும் ஒருவர், அதைவிட பெரிய வெள்ளித்திரையில் , ஒருவர் அவருக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திகொள்ள‌ செய்யும் முயற்சிகளை கிண்டல்தொனியில் கேட்பது மொள்ளமாரித்தனம்.

உண்மையிலேயே சமுதாயத்தைப் புரட்டிப்போடும் நிகழ்ச்சிகளை செய்ய தில் வேண்டும். எங்கே நெஞ்சில் மாஞ்சா இருந்திருந்தால் பர்தா குறித்த விவாதத்தை ஒளிபரப்பி இருக்கலாம் அல்லது வொலக நாயகன்  எப்போது எப்படி யாரால் வொலக நாயக பட்டம் வாங்கினார் என்று கூப்பிட்டு கும்மி அடிக்கலாம்.

***

அவமானப்படுத்த வேண்டும் என்ற மறைமுக எண்ணத்தோடு கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் சிரித்துக்கொண்டே பதில் சொன்ன பவர்ஸ்டார் என்ற ஒரு சராசரி மனிதன் உயர்ந்து நிற்கிறார் என் மனதில்.



Thursday, May 17, 2012

கதை விற்கும் டவுசர்களின் அட்டகாச வரலாற்று அறிவு மற்றும் சொம்பாய் மாறுதல்: செயமோகன் & மதன்


சுவராசியமாய் எழுதுவது, அழகாக ஓவியம் தீட்டுவது, பாடல் பாடுவது, ஆடுவது ..... எல்லாம் ஒரு கலை மற்றும் பயிற்சி.  விருந்து புத்தகத்தில் வேலை பார்ப்பவரும் உழைக்கிறார் , வாசிப்பவர்களை மயக்கும் ,கிரங்கடிக்கும் எழுத்தாற்றல் உண்டு அவர்களுக்கும். அதற்காக அவர்களை புனிதர்களாக ஆக்க முடியாது.

என்ன எழுதுகிறார்கள் என்பதுதான் முக்கியம். கதைபுக் ரைட்டர் எல்லாம் நல்லா கதை எழுதுகிறார்கள். பாராட்டுகள். வரலாற்றில் எதையாவது உருவி புனைவைச் சமைத்து உங்களின் இரசிகர் மன்றக் குஞ்சுகளுக்கு பரிமாறுங்கள். போகாத பொழுதுகளை உங்களின் கதைகளைப் படித்து போக்கிக்கொள்ளட்டும். மண்டகப்படி அமைத்து விச்சுணுபுரத்தில் தெருக்கள் எத்தனை அடி இருந்தது என்று மயிர்பிளக்க விவாதிக்கட்டும்.

வரலாற்றுத்திரிபுகள் எதற்கு?  வேண்டாம் விட்டுவிடுங்கள்.

http://www.jeyamohan.in/?p=27320

***

டிவியில் வேலை பார்ப்பதால் ஓனர் கோவிச்சுக்குவார் என்று, தனது மகத்தான அறிவியல் கேள்விக்கு ஏன் விகடன் அந்தப்படத்தைப் போட்டது? என்று வெகுண்டு எழுந்துள்ளார் மற்ற ஒரு வரலாற்று ஆய்வாளர்.

சார் இது ரொம்ப ஓவர். பரமசிவன் கழுத்த்தில் பல்லி இருந்தால் அது பாம்பாகக் கூட நடிக்குமாம். 

ஜெ. படம் விவகாரம்: விகடனிலிருந்து விலக்கப்பட்டார் மதன்!
http://tamil.oneindia.in/news/2012/05/17/tamilnadu-vikatan-terminates-cartoonist-madhan-154153.html

***
கொறிக்க....

பாஸ்போர்ட்' மருதன் வெளியிடாத பின்னூட்டம்
http://etamil.blogspot.com/2009/01/blog-post.html

ஹாய் மதனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் ..
http://www.varalaaru.com/Default.asp?articleid=482

ஆ.வி மதனின் சறுக்கல் : அறிவுக்கெட்டத்தனமான அறிவுக்கு விளக்கம்
http://tbcd-tbcd.blogspot.com/2007/12/blog-post_28.html

ஆய் மதனின் உளறல்கள்....அடவுலே இருக்க விட மாட்டாய்ங்க போலிருக்கே !!
http://tbcd-tbcd.blogspot.com/2009/03/blog-post_08.html

சாரு நிவேதிதாவுக்கு மறுப்பு
http://marudhang.blogspot.com/2010/07/blog-post_16.html

Sunday, May 13, 2012

நித்தி பிள்ளை இல்லை முதலி : இலக்கியவியாதி நெல்லை கண்ணன் கவலை

மிழ்நாட்டில் எந்த இலக்கியவியாதிகளும் சமூகப்பணிகளில் நேரடிப்பங்கு கொள்வது இல்லை. கதைப்புத்தகம் எழுதுவது, அம்புலிமாமா வாசக வட்டத்தின் சொம்புக்கூட்டங்களில் கலந்துகொண்டு மயிர்பிளக்க விவாதிப்பது போன்ற உலகமாகப் பணிகளில் மட்டுமே கலந்துகொள்வார்கள். சமூகப்பிரசனைகள் இவர்களுக்கு தேவை அற்றது. முடிந்தால் அதில் பட்டும்படாமல் எதையாவது உருவி கதை சமைக்கப் பார்ப்பார்கள் (சுசாதா பாணி பிரச்சனைக்குள் போகாமல் மொக்கை கருத்துகளை கதையாக்குவது.) அல்லது வாய்கிழியப் பேசிவிட்டு கர கர சங்காரா என்று கடைசிக்காலத்தில் மடப்பிரச்சாரவாதிப்போல சமஸ்கிரகத்திற்கு சொம்பெடுப்பது (செயகாந்தன் பாணி) என்று மாறிவிடுவார்கள்.

நெல்லை கண்ணன் அவர்களின் தமிழ்ப்பற்று குறித்துபேச ஒன்றும் இல்லை. நல்ல தமிழ் ஆர்வலர். ஆனால் இவர் எந்த சாதி எந்த மடத்திற்கு நல்லது என்று சண்டைபோட வந்துள்ளார்.

http://tamil.oneindia.in/news/2012/05/13/tamilnadu-nellai-kannan-seeks-jaya-help-save-madurai-aadheenam-153902.html

பின்னர் குழுத் தலைவர் நெல்லை கண்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

"மதுரை ஆதீனமாக சைவ வேளாளரை நியமனம் செய்ய வேண்டும். ஆனால், அகமுடைய முதலியாரான நித்தியானந்தாவை, ஆதீனமாக நியமித்துள்ளது சைவத்திருமடங்களின் விதிகளுக்கும், மரபுகளுக்கும் புறம்பானது."

மடங்களுக்கு நல்ல மனிதர்கள் தேவை இல்லை. ஒருவேளை நித்தி சைவ வேளாளராக இருந்திருந்தால் பஞ்சாயத்து கண்ணன் ஒகே சொல்லியிருப்பார் என்றே நினைக்கிறேன்.

காஞ்சியாகட்டும் மதுரையாகட்டும் மடங்களுக்கு சாதிதான் முக்கியமே தவிர நல்ல மனிதர்கள் அல்ல. அதுக்கு சொம்பாக இப்படி இலக்கியவியாதிகளும் பேசுவது அதிர்ச்சியாக இல்லை........ஏன் என்றால் செயமோகனாகட்டும் செயகாந்தன் ஆகட்டும் சுசாதா ஆகட்டும் நெல்லை கண்ணன் ஆகட்டும் மதத்தில் திளைப்பவர்களே .அவர்களின் மதமே வர்ணாசிரம சாதியக் கட்டுமானம்தான் எனும்போது சொல்ல ஒன்றும் இல்லை.

நெல்லை கண்ணன் இனி பிள்ளை கண்ணன்.

தம்மைத்தாமே நக்கிக்கொள்ளும் நாய்கள்‍ யார் யார்? - விளக்கம் : கதைபுக் ரைட்டர் ஜெய‌காந்தன்
http://kalvetu.blogspot.com/2010/03/blog-post_31.html


"சைவம்" - என்பது மதம். அது "உணவுப் பழக்கம்" அல்ல‌
http://kalvetu.blogspot.com/2011/01/blog-post.html