Friday, July 20, 2012

Sex-slave would protect decent, devout and 'virile' Kuwaiti men from adultery

குவைத் என்ற ஒரு நாடு இருக்கிறது. அந்த நாட்டில் இஸ்லாம் என்ற மதம் கடைபிடிக்கப்படுகிறது.அந்த‌ நாட்டில் உள்ள கண்ணியமான ஆண்கள் அந்த நாட்டில் உள்ள பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள் அல்லது அந்த நட்டில் உள்ள பெண்களை மோகிக்கிறார்கள். அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டாலும் அடுத்த பெண்களை மோகிக்கிறார்கள். இதற்கு தீர்வு என்ன? அந்த கண்ணியமான ஆண்கள் இப்படி தவறு செய்யாமல இருக்க , அடுத்த நாடுகளில் சிறையில் இருக்கும் பெண்களை விலைக்கு வாங்கி , புணர்வதற்காக வைத்துக்கொள்ளலாம். இதில் தவறு ஏதும் இல்லை. இப்படி செய்வதால் காமம் தலைக்கு ஏறி கட்டுப்படுத்த இயலாமல் இருக்கும் இந்த நாட்டின் கண்ணியமான ஆண்கள் அவர்கள் புணர்வதற்கு என்று உடல்கள் கிடைக்கும். மேலும் இப்படிச்செய்வதால் , இவர்கள் வாழும் நாட்டில் உள்ள பெண்களால் இவர்கள் காமம் உந்துதல் ஆக மாட்டார்கள்.

"sex-slave would protect decent, devout and 'virile' Kuwaiti men from adultery " இப்படிச் சொல்பவர், குவைத்தில் இருக்கும் ஒரு அரசியல்வாதி பெண். இவர் ஒருமுறை குவைத் பாராளுமன்றத்திற்கு போட்டியிட்டவர். இவரது பெயர் "சல்வா அல் முட்ரி" (Salwa al Mutairi )

1. மிகவும் நல்ல திட்டம். இப்படி புணர்வதற்காக எங்கே பெண்களை வாங்குவது?
நிச்சயம் இப்படி வாங்கப்படும் பெண்கள் குவைத்தில் இருக்கும் இஸ்லாமியராக இருக்கக்கூடாது. குவைத்தில் உள்ள கண்ணியமான இஸ்லாமிய ஆண்கள் புணருவதற்கு என்று வேறு நாட்டில் இருக்கும் போர்க்குற்றாவாளிகளான பெண்களை வாங்கிக்கொள்ளலாம். வேறு மதத்தில் உள்ள பெண்களைத்தான் வாங்க வேண்டும்.

இப்படிக் போர்க்குற்றவாளிகளை விலைக்கு வாங்குவதால், குவைத்தில் உள்ள கண்ணியமான இஸ்லாம் ஆண்களுக்கு புணருவதற்கு பெண்கள் கிடைக்கிறார்கள். அதே சமயம் இந்த போர்க்குற்றவ்வாளிகளுக்கு சோறு கிடைக்கிரது. இல்லை என்றால் இவர்கள் சிறையில் பசியால் வாடி செத்துவிடுவார்கள்.
2. ஆகா அருமை. இதற்கு இஸ்லாம் என்ற மதம் என்ன சொல்கிறது?
"சல்வா அல் முட்ரி" இவரது மெக்கா பயணத்தின்போது அங்குள்ள இஸ்லாம் குருமார்களிடம் கருத்து கேட்டுள்ளார். அவர்கள் இஸ்லாம் ஷரியத் சட்டப்படி இது தவறே இல்லை என்று ஆசி வழங்கியுள்ளார்கள்.
3. இதற்கு ஏதாவது முன்னோடி திட்டங்கள் உள்ளதா?
ஏன் இல்லை? 8 ஆவது நூற்றாண்டில் "ஹாரவுனல் ராஸ்தி" என்ற இஸ்லாமிய தலைவர் குவைத்தௌ ஆட்சி புரிந்துள்ளார். அவர் 2000 க்கும் மேற்பட்ட பெண்களை புணருவதற்காக விலைக்கு வாங்கு வைத்து இருந்தார்.
4. மிகவும் அருமயான திட்டம் எப்படி செயல்படுத்துவது?
"சல்வா அல் முட்ரி"  இதற்கும் திட்டம் வைத்துள்ளார். எப்படி வீட்டு வேலைக்கு ஆட்கள் கொடுக்கும் நிறுவங்கள் உள்ளதோ, அதுபோல கண்ணியமான குவைத் ஆண்களுக்கு , வேறு நாட்டில் இருந்து பெண்களை புணருவதற்காக விற்பனை செய்யும் அலுவலகங்களை திறக்கலாம்.
5. இப்படிச் சொல்லும் "சல்வா அல் முட்ரி" அவர்களுக்கு மனித நேயம் உள்ளதா? ஒரு பெண்ணே இப்படிச் செய்யலாம?
என்ன இப்படிக் கேட்கிறீர்கள்? இப்படி விலைக்கு வாங்கப்படும் பெண்களுக்கு குறைந்தபட்ச வயதாக 15 இருக்க வேண்டும் என்று பெருந்தன்மையுடன் சொல்லியுள்ளார். அவரின் கருணையைப்பாருங்கள்.
**********
பொறுப்புத் துறப்பு:
இந்த தகவல் பெறப்பட்ட தளங்கள்

http://www.dailymail.co.uk/news/article-2000292/Men-allowed-sex-slaves-female-prisoners-job--WOMAN-politician-Kuwait.html
A Kuwaiti woman who once ran for parliament has called for sex slavery to be legalised - and suggested that non-Muslim prisoners from war-torn countries would make suitable concubines.

The political activist and TV host even suggested that it would be a better life for women in warring countries as the might die of starvation.

Mutairi claimed: 'There was no shame in it and it is not haram' (forbidden) under Islamic Sharia law.'
T'S OK TO HAVE SEX SLAVES! SAYS THE FEMALE POLITICIAN (KUWAIT)
http://www.youtube.com/watch?v=3jMf_KNrLpQ

Russian Blondes Wanted for Islamic Sexual Slavery
http://frontpagemag.com/2011/nonie-darwish/russian-blonds-wanted-for-islamic-sexual-slavery/
Ms. Mutairi who was nice enough to put the minimum age of 15 for slave girls, Christian Jews or other, to be sold. She demanded the immediate establishment of slave agencies just like agencies for maids, where the slave girls will earn a whopping 50 Kuwaiti Dinar monthly ..Wow, what a deal!



Thursday, July 05, 2012

ஈழத்தமிழர் பிரச்சனை: ஏன் கடிதங்கள் எழுதப்படுகிறது?

 

முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள்:

தமிழ்நாடு: திமுக ஆட்சி
இந்தியா:  ஆட்சியில் திமுக பங்கெடுத்து நடத்தும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி

இந்தியாவால் ஏதாவது செய்யமுடியும் என்று முதல்வர் கருணாநிதி நினைத்து இருந்தால், அதைச் செய்யாத கூட்டணியில் இருந்திருக்கத்தேவையே இல்லை.

இந்தியாவால் ஏதும் செய்யமுடியாது என்று முதல்வர் கருணாநிதி நினைத்து இருந்தால் கடிதம் எழுதத் தேவை இல்லை.

அப்படி இருந்தும் எழுதிய கடிதங்கள் அவர் அவருக்கே எழுதிக்கொண்ட பொம்மைக் கடிதங்கள்.

இன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள்:

தமிழ்நாடு: அதிமுக ஆட்சி
இந்தியா:  திமுக பங்கெடுத்து நடத்தும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி

இந்தியாவால் ஏதாவது செய்யமுடியும் என்று  முதல்வர் ஜெயலலிதா நினைத்தால் அதைச் செய்ய கடிதம் மட்டுமே எழுதமுடியும். உண்மையான அக்கறை இல்லாமல் இருந்தால்கூட , இந்த அரசியல் சூழ்நிலையில் , குறைந்தபட்சம் இவர் எழுதும் கடிதங்கள் இவரே இவருக்கு எழுதும் பொம்மைக்கடிதங்களாக பார்க்கப்படாது.

இந்தியாவால் ஏதும் செய்யமுடியாது என்று முதல்வர் ஜெயலலிதா நினைத்து இருந்தால் கடிதம் எழுதத்தேவையே இல்லை.