Monday, September 17, 2012

Innocence of Muslims திரைப்படம் சில எண்ணங்கள்

1.அமெரிக்காவில் திரைப்பட தணிக்கை என்பது அரசாங்கத்தால் செய்யப்படுவது அல்ல. அது ஒரு தனியார் அமைப்பு. திரைப்பட தயாரிப்பாளர்கள் ,தயாரிப்பு அரங்க உரிமையாளர்கள் என்ற பலர் சேர்ந்த கூட்டமைப்பு.
http://www.mpaa.org

2.ஒரு படம் நல்ல படமா அல்லது கெட்ட படமா என்று சொல்வது அவர்கள் வேலை அல்ல. ஆனால் அது எந்த வயது பார்வையாளர்களுக்கானது என்ற ஒன்றைச் சொல்லும் அமைப்பு.

3.அமெரிக்க காங்கிரஸ் சபை மற்றும் ஜனாதிபதி இதில் தலையிடமுடியாது. அமெரிக்க அரசின் திட்டங்கள் மற்றும் வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்களை கடுமையாக விமர்சித்து பல ஆவணப்படங்கள் இதே அமெரிக்காவில் வருகிறது. Michael Moore ன் படங்கள் ஒரு எடுத்துக்காட்டு. பேச்சு சுதந்திரம் உள்ள அமெரிக்காவில் இவை எல்லாம் தடை செய்ய இயலாதது.

4.இதன் காரணத்தாலேயே கூகுள் இன்னும் திரைப்பட முன்னோட்டத்தை அவர்களின் இணையத்தில் இருந்து எடுக்க முடியாது என்று அமெரிக்க அரசாங்கத்திற்கு சொல்லிவிட்டது. (வேண்டும் என்றால், கூகுளுடனான தொடர்பை அல்லது தேவைப்பட்டவர்கள் துண்டித்துக் கொள்ளலாம். அது ஒரு எதிர்ப்பாக இருக்கும்)

5.எனவே அமெரிக்க தூதரகங்களை தாக்குவது ஒரு அடையாள  எதிர்ப்பாக , உணர்விற்கு வடிகாலாக இருக்கலாமேதவிர , திருமா போல " ஒபாமா மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று சொல்வது எல்லாம் என்ன புரிதலில் என்று தெரியவில்லை.
http://tamil.oneindia.in/news/2012/09/17/tamilnadu-ban-the-controversial-anti-islam-movie-thirumavalavan-161612.html

படம் குறித்து
7.இந்தப்படம் ஆலன் இராபர்ட் என்பவரால் இயக்கப்பட்டாலும் அவரும் இதில் நடித்த மற்றவர்களும் , தயாரிப்பாளரின் சூழ்ச்சிக்குப் பழியானவர்கள் என்றே சொல்லி வருகிறார்கள்.

8.அமெரிக்காவில் இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே இது திரையிடப்பட்டுள்ளது "Vine Theater, Hollywood CA.  அதுவும் 10 பேர் மட்டுமே முதல் காட்சிக்கு வந்துள்ளதாகச் செய்தி. அந்த ஒரு காட்சியைத் தவிர இதுவரை இது அமெரிக்காவில் எங்கும் திரையிடப்படவில்லை.

9.படத்தை தயாரித்த Sam Bacile என்பவர் வங்கி தொடர்பான குற்றங்களுக்காக சிறைதண்டனை பெற்றவர்.

மதங்களும் வன்முறையும்

குஜராத் இரயில் எரிப்பு, பாபர் மசூதி இடிப்பு, ஒரிசாவில் பாதிரி எரிப்பு என்று பல சம்பவங்கள் மட்டும் அல்லாமல் “War of the Cross,” or Crusade,
என்பவைகள்கூட மதத்தொடர்பு சண்டைகளே. இது அந்த அட்டவணையில் மற்ற ஒன்று.

எந்த மதமும் மற்ற ஒரு மதத்தின் இருப்பை அங்கீகரிக்காது.
மதங்களும் அதைப் பின்பற்றுபவர்களும் ஒருவரை ஒருவர் சகித்துக்கொள்வார்களே தவிர ஒரு போதும் "நான் நம்பும் கடவுள், நான் படிக்கும் மதப்புத்தகம்,  நான் நம்பும் தூதுவரைப் போல , உனது கடவுளும் , உனது தூதுவரும், உனது மதப்புத்தகமும் உயர்வானதே" என்று சொல்லாது.

யாரிடம் அதிக மக்கள் உள்ளார்கள் , யார் சொர்க்கத்திற்கு வழிகாட்டுவார்கள் யார் அக்மார்க் நல்லவர்கள் என்பதில் உள்ள போட்டியானது, தனியார் நிறுவன தொழிற்போட்டியைவிட அதிக வன்மம் கொண்டது.

One religion may tolerate the existence of other religion but never agree that all religion has equal value like the one they practice. If they believe so why they promote conversion from one to other?

மதங்கள் அற்ற உலகு என்பது பகல்கனவு என்றாலும், மதங்களைப் புரிந்துகொண்டு அதையும் தாண்டி பயணப்பட கற்றுக்கொள்ள வேண்டும். இந்த உலகத்தை அறிவியல் பார்வையாலும் , மனிதத்தை அன்பாலும் பார்க்க கற்றுக்கொள்வது அவசியம்.

லிபியா நாட்டில் அமெரிக்க தூதரகத்தில் இறந்த நால்வருக்கு எனது அஞ்சலி. நம்பிக்கைகள் மற்றும் அரசியல்சார்பு என்று எல்லாவற்றையும் தாண்டி மதத்தின் பெயரால் மனிதர்கள் கொல்லப்படுவது கடவுளுக்கே பிடிக்காது என்றே நினைக்கிறேன்.

Wednesday, September 12, 2012

பொய் சொல்லும் கலைஞர்..நீங்களுமா அய்யா?

"ன் தலைவன் உண்டு தூங்கினால் சரி.  பொதுசனம் எப்படியோ போகட்டும்.
நல்லா வேண்டும் உங்களுக்கு" என்ற ரீதியில் சொல்லுதிர்க்கும் அரசியல் அடிமைகளின் கருத்தையும் தாண்டி, கலைஞர் அவர்கள் அவரது கருத்தாக சிலவற்றைச் சொல்லியுள்ளார்.
அதை வரவேற்கிறேன். அதற்காக நன்றி.

http://tamil.oneindia.in/news/2012/09/12/tamilnadu-why-did-jayalalithaa-supported-anti-161306.html

பலமுறை முதல்வராக இருந்தவர் ஒரு பெரிய கட்சியின் தலைமைப் பொறுப்பில் இன்றுவரை இருப்பவர், அவர் கண்முன் நடைபெறும் ஒரு நிகழ்வை புறந்தள்ளிவிட முடியாது.  ஆனால் அதில் அவர் சொல்லியுள்ள பொய்தான் வருத்தம் கொள்ளச் செய்கிறது.

புள்ளிவிவரப்புலியான நீங்களுமா அய்யா?  :-(((

கலைஞர் சொன்னது:
//போராட்டம் நடத்துவோரும் நமது மக்கள்தான். அவர்களை ஏதோ விரோதிகள் என்பதைப்போல இந்த அரசு நினைக்கக் கூடாது.//

மிக்க நன்றி


கலைஞர் சொன்னது:
// போராட்டம் நடத்துவோரும், அந்த அணு உலை தொடங்குவதற்கு முன்பாகவே தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தால், இத்தனை கோடி ரூபாய்களை செலவழித்திருக்கத் தேவையில்லை.//

இது பொய்.
இந்த போராட்டம் எப்போது தொடங்கியது என்பதை பூவுலகின் நண்பர்கள் தொகுத்துள்ளார்கள். இதில் தகவல்பிழை இருந்தால் சுட்டலாம் .

http://www.poovulagu.net/2012/01/25.html

1.கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு எதிரான போராட்டம் 1986 ஆம் ஆண்டிலேயே தொடங்கி விட்டது. இது திடீரென இப்போது தொடங்கியது அல்ல.

2.கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து 1987 இல் மீனவக் கிராமங்களின் தலைவர்கள் கூட்டம் திருச்செந்தூரில் நடந்தது. 1987 செப்.22 அன்று இடிந்தகரையில் கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை எதிர்த்து ஒரு மிகப் பெரிய பொதுக் கூட்டம் நடந்தது.

3. 1988 இல் நெல்லையில் மிகப் பெரிய ஊர்வலம் நடத்தப்பட்டது. 1989 இல் நாகர்கோவிலில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட ஊர்வலம்.

4. 1989 மார்ச் 20 அன்று தூத்துக்குடியில் ஊர்வலம். இதில் ஜார்ஜ் பெர்னாண்டஸ், பாலபிரஜாதிபதி அடிகள் உட்பட பல அரசியல் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கலைஞர் சொன்னது:
//.........., இத்தனை கோடி ரூபாய்களை செலவழித்திருக்கத் தேவையில்லை.//

எத்தனை கோடி செலவழித்தாலும் மக்கள் சொன்னதற்காக நிறுத்தப்பட்ட பல அணு உலைகளின் பட்டியல்.

http://www.poovulagu.net/2012/02/30.html

உலகின் பல இடங்களில் கட்டுமான பணிகள் நடக்கும் போதோ ,அல்லது நடந்து முடிந்த பிறகோ ,பல அணு உலைகள் மூடப்பட்டுள்ளன .
  
அணு உலை                                        
நாடு    
மூடப்பட்ட நிலை
ரோச்டோவ்      
ரஷ்யா 
90 சதவீத வேலைகள் முடிந்திருந்த நிலையில்                        பொதுமக்கள் எதிர்ப்பின் காரணமாக 1997           -இல் நிறுத்தப்பட்டது .
மொச்சொவ்சீ
ஸ்லோவாகியா   
1994 டிசம்பரில் ஐரோப்பா முழுவதும் மக்கள் பலமாக எதிர்த்ததால் 1995 மார்ச் மாதம் அரசு ரத்து  செய்தது .
பட்டான்
பிலிப்பைன்ஸ் 
உபகரணங்கள் திருப்திகரமாக இல்லாததால் 1985 -ஆம் ஆண்டு கைவிடப்பட்டது .
ஸ்வட்டண்டார்ப்   
ஆஸ்திரியா 
உபகரணங்கள் திருப்திகரமாக இல்லாததால் 1985 -ஆம் ஆண்டு கைவிடப்பட்டது .
என்லியாவோ  
தைவான்  
96 .2 சதவீத மக்கள் எதிராக வாக்களித்ததால் ,1994 -ஆம் இரண்டு அணுஉலை வேலைகள்  நிறுத்தப்பட்டன

Monday, September 10, 2012

நீங்க நாசமாப் போவிங்கப்பா....

யாரை நோக்கித் தூற்றப்படும் மண் இது?



கலைஞராக இருந்தாலும் புரட்சித்தலைவியாக இருந்தாலும் ஆளும் வர்க்கம் என்ற மனப்பானமையே உள்ளது. யாரும் மக்கள் தலைவர்களாக இல்லை.

இவர்களுக்கும் தொண்டர்கள் உள்ளார்கள் எனும்போது .....

எந்தக் கட்சிக்கும் இது ஒரு பெரிய பிரச்சனையாகத் தெரியவில்லை.

குறைந்த பட்சம் கூடங்குளத்திற்காக பொது கடை அடைப்பு நடத்தியிருக்க வேண்டும் அனைத்து கட்சிகளும்.

***

ஒரு ஊரில் என்னமாதிரியான தொழிற்சாலை வரவேண்டும் என்பதை அந்த ஊர்தான் தீர்மானிக்க வேண்டும். ஒரு ஊரே போராடும்போது ...

முள்ளிவாய்க்கால் மற்றும் கூடங்குளத்திற்கு கலங்காத மக்கள்...

உனக்கு மின்சாரம் வேண்டும் என்பதற்காக அடுத்தவன் தலையில் தீ வைக்க முயலக்கூடாது. உங்களுக்கு மின்சாரம் வேண்டும் என்பதற்காக சொந்த சகோதரன் சீரழிந்தாலும் கண்டுகொள்ளாமல் இருக்கும் தமிழக பொதுசனம்.