Monday, December 09, 2013

மெய்நிகர் உலகம் பொய்யில் வாழும் நான்

மிழ் பதிவுகள், கூகுள் கூட்டல் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட ஒரு உலகம் உள்ளது. மூளையைக் கழற்றி வைத்துவிட்டு மந்தைகளுடன் சேர்ந்துவாழ்தல் ( கூட்டமாக / குழுவாக‌)  என்ற விலங்குலக நெறிப்படி வாழும் இடம்.

உள்ளுரில் அடுத்த ஆண்டுக்கான பொங்கல் விழா சினிமாப் பாட்டு டான்ஸ்கள் அதாவது பின்னனியில் சினிமாப் பாட்டைப் போட்டுவிட்டு (காமரசம் சொட்டும் பாடல்கள்) அதற்கு குழந்தைகளை ஆடவிடும் சடங்கிற்கான ஒத்திகைகள் தொடங்கிவிட்டது.   "மம்மி பேரு ஜிம்மி அப்பனுக்கு சலாம் வைக்கனும்...." என்ற‌ ரீதியில் போகும் ஒரு  என்ற பாடலுக்கு ஆடவிருந்த என்மகளைக் காப்பாற்றி , ஒரு நாடகத்தில் சேர்த்துவிட்டாகிவிட்டது. குழந்தைகளை வைத்து நல்ல மேடை நாடகம் போடவேண்டும் என்ற தளரதா முயற்சியில் , வணிகச் சமரசங்கள் போல டமிள் சங்க சமரசங்களுடன் ஏதோ ஒன்று நடந்துகொண்டுள்ளது.

மகனை அவன் நண்பர்களுடன் சேர்ந்து இசைக்குழு அமைப்பதில் பெற்றோர்களின் சக்தி அனைத்தும் கரைந்துகொண்டு உள்ளது. பெற்றோர்களுக்கு இடையேயான பஞ்சாயத்துகள் , குழந்தைகளின் ஒழுங்கீனம் (இங்கே ஒழுங்கு என்பது , 40 வயது உள்ள பாடகர் சொல்லும் இசை  சார்ந்த விதிகளில் குழந்தைகள் ஒழுகுவது மட்டுமே) என்று தாவு தீர்ந்து , டவுசர் கிழிந்து , வீட்டில் சண்டையும் சச்சரவுமாக போய்க்கொண்டு உள்ளது.

டமிள் சங்கம் இல்லாமல் கலைச்சங்கம் என்ற‌ ஒரு அமைப்பும் உள்ளது இங்கே. அவர்கள் தமிழ் கலாச்சாரம் என்று டமிள் சங்கத்தைவிட கொடுமையாக  இருப்பவர்கள். காமப்படல்களை குழந்தைகளைவிட்டு ஆடவிடும் அழகில் அவர்கள் ஒருபடி மேல்.

காமத்தில் தவறு இல்லை. சினிமாவில் 40 வயது ஆடவனும் 20 வயது பெண்ணும் ஆடிய ஆட்டத்தை பெற்றோர்கள் மேடையில் ஆடினால் நல்லது. எந்த வார்த்தைகளுக்கு ஆடுகிறோம் என்றே தெரியாமல் குழந்தைகள் பலியாக்கப்படும் கொடுமையைப் பார்த்துக்கொண்டே உள்ளேன். கையறுநிலை அல்ல கழுத்தரு நிலை.  :((

**

"என்ன தாடியெல்லாம் வச்சு இருக்கீங்க?"

"விரதம்"

"என்ன விரதம் இந்த ஊரில்? அய்யப்பசாமியா (சும்மா கேலியாக கேட்டேன்)

"ஆமாம்" என்று குண்டைத்தூக்கிப்போட்டார்.

அதோடு அவர் நிறுத்தி இருந்தால் பரவாயில்லை " கொஞ்சநாளாவது நல்லவனா இருப்போம்.... " என்று சொல்லிவிட்டு சிரித்தார்.  அவரின் மனைவி கலச்சாரம் ,விரதம் என்று பேசிக் கொண்டு இருந்தார்.

பொறுக்க முடியாமல் பிளாக்குத்தனமாக (பேக்குத்தனமாக என்று படிக்கலாம்) சில குருத்துகளைச் சொல்லி,  அனைவரும் என்னை மிரட்சியாகப் பார்த்து......
.....மறுபடியுமா ? என்ற மனையிவின் அர்த்தமான பார்வையில் நிறுத்திக் கொண்டேன்.

********************

இங்கே புலம்ப என்ன கட்டுப்பாடு புலம்பி வைப்போம்.

வழக்கமாக வேலை செய்யும் (வாலண்டியர் கூலி) அரங்கில் ஃட்ராப்ட் ஃபீர் (draft beer) ஊற்றுவதில் நான் ஒரு பிஸ்து (பிஸ்கோத்து என்றும் வாசிக்கலாம்) , நான் ஊற்றும் அழகிற்கு என்றே தனியாக சன்மானம் வைப்பவர்கள் உண்டு. ஒருமுறை 4 டாலர் வரை ஒரே ஒருவரிடம் இருந்து கிடைத்தது. பாராட்டி பாராட்டி ஒவ்வொருமுறையும் கொடுத்தார்.

கள்ளுக்குடிப்பதும், பீர் குடிப்பதும், டுவைன் வயின் குடிப்பதும் பரிமாறுவதும் ஒரே விதம் அல்ல. அதே சமயம் இப்படித்தான் செய்யவேண்டும் என்ற இலக்கணமும் ஏதும் அல்ல. ஆனால் பழமைவாதிகளுக்கு அவர்களின் பழக்கம் சார்ந்து பரிமாறும்போது (ஊற்றும்போது) மகிழ்கிறார்கள்.

**

நம்ம கனவான்கள் இன்னும் குடிப்பதை, மனையியுடன் உடலுறவு கொள்வதை ஒரு ஒழுக்கக்கேடாக அல்லது கொலைக்குற்றமாகவே பார்க்கிறார்கள். சாமிக்கு மாலைபோடுபவர்கள் முதலில் நிறுத்துவது மது அடுத்து மனைவியிடம் இருந்து விலகி இருத்தல். ஏன் என்று புரியவில்லை. சாமிக்கு இது எல்லாம் ஆகாதா என்ன?

குடிப்பது தவறு சாமிக்கு ஆகாது என்றால் அதை ஏன் 300 நாளும் செய்துவிட்டு 65 நாள் மட்டும் தவிர்க்க வேண்டும். புரியவில்லை.  கக்கூஸ்போவது சாமிக்கு நல்லதா என்ன? மாலையும் கழுத்துமாக கம்மாக்கரையில் குத்தவைச்சு பீடி வளிக்கும் அய்யப்ப சாமிகளுடன் கூட்டாம்பீ போன சம்மூவத்தில் இருந்து வந்த‌ மக்கள் எப்படி அதைமட்டும் தவிர்க்க மாட்டேன் என்கிறார்கள். அதாவது மாலையைக் கழற்றிவிட்டு கக்கூஸ் போகும் நடைமுறை உள்ளதா என்ன?

*

வாழ்க்கை என்றால் என்ன என்பதை அவர்களுக்கான அளவுகோலுடன் அணுகுகிறார்கள். நான் பார்த்த வரையில் இவர்களுக்கு குடிக்கவும் தெரியவில்லை வாழவும் தெரியவைல்லை. வயிற்றில் அதிக அளவு தள்ளிவிட்டு ஸ்டெடியாக இருந்தால் குடிபயில்வான் என்று நினைத்துக்கொள்கிறார்கள். அதை 60 நாள் தவிர்த்துவிட்டால் பக்திப்பழம் என்றும் நினைத்துக்கொள்கிறார்கள். மேலும் சைவம் என்று சொல்லிவேறு சங்கறுக்கிறார்கள்.

நல்லாருங்க மக்கா.

"சைவம்" - என்பது மதம். அது "உணவுப் பழக்கம்" அல்ல‌
http://kalvetu.balloonmama.net/2011/01/blog-post.html

மலக்குடலுடன் இறைவனைத் தரிசிக்கலாமா?
http://kalvetu.balloonmama.net/2006/07/blog-post.html

Friday, November 08, 2013

எழுத்துரு: ஒரு இணைய மொண்ணையின் கடிதம்

ருத்தை கருத்தாக சொல்லிச்செல்லாமல் "இணையமொன்னீஸ்" , "அறிவாளிக்குமட்டுமே தெரியும் நான் போட்டிருக்கும் ஆடை" என்ற ரீதியில் பீடங்களில் அமர்ந்து கொண்டு , இணையத்தில் என்ன பேசினாலும் நீ "ஆசானோட (ஆசான் இத நீங்கள் சொல்லியபடி தமிங்கிலீசில் எழுதினால் நல்லா இருக்காது ) கதை படிச்சியா?" என்று கூசா தூக்கும் இரசிகர்களையும் வைத்துக்கொண்டு , பல குருத்துகளை இணையத்தில் கொட்டிவரும் அய்யா அவர்களின் குருத்தைப் ப‌டித்து , பேஸ்தடித்துபோன எந்த தகுதியும் இல்லாத ஒரு சராசரி இணைய‌ மொண்ணையின் குருத்து. உங்கள் கொல்லைப்புர வட்டம் இருக்கும் திசை நோக்கி கும்பிடு போட்டு, உங்களின் பூசாரிகளுக்கு காணிக்கை கொடுத்துவிட்டு புலம்பிகிறேன்.

ந்த ஒரு மொழியாகட்டும் அதன் எழுத்துகள் (வரி வடிவம்) அப்படியே காலம் முழுக்க இருக்கப்போவது இல்லை. தமிழகத்தில் கிடைக்கும் கல்வெட்டுகளை படிக்க அதற்கென பயிற்சி பெற்றவர்கள் தேவை....அதுவும் தமிழே என்றாலும்.  எனவே, எந்த எழுத்துருவும் காலத்தால் மாறத்தான் செய்யும். அதை தடுக்க முடியாது.  மேலும் அது மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக யாரும்  பொந்துமரபு சாமிகளிடம் வேண்டுதலும் வைக்கவில்லை.  இத்தகைய மாற்றங்கள் தடுக்க முடியாத ஒன்று ....நடந்துகொண்டே இருக்கும்.  அவை வளர்ச்சி அல்லது சீர்த்திருத்தம் பரிணாமம் போல,சிறிது சிறிதாக நடக்கும்.  தமிழில் நடித்த படம் சரியா போணியாகவில்லை என்று கவர்ச்சியாக தெலுங்கு சினிமாவில் நடித்து கல்லா கட்டப்போகும் நடிகையின் குருத்துபோல உள்ளது சிந்தனைச் சிற்பியின் குருத்து.  எழுதிய பொஸ்தம் கேரிபாட்டர் போல விற்கவில்லை என்றால், கேரிபாட்டரை தமிழ்படுத்தி கதை வியாபாரம் செய்யலாம். அதைவிடுத்து "தமிழை ஆங்கிலத்தில் எழுது" என்று குருத்துச் சொன்னால் எப்படி இணைய மொண்ணைகள் சும்மா இருப்பார்கள்? அவர்கள்தான் தற்குறிகள் , மொண்ணைகள் ஆயிற்றே? "அரசனின் ஆடை , அறிவாளிகளுக்கு மட்டுமே தெரியும். அப்படியான அறிவாளி சர்டிபிகேட் கிடைக்கும் ஒரே அக்மாரக் ஒரிஜினல் இடம் கொல்லைப்புரம் வாசகர் வட்டம்" ..... என்பதை விடாமல் மெயின்டன் பண்ணினாலும் உதவவில்லையே? என்ன செய்யலாம்?

மாற்றம் , வளர்ச்சி எல்லா மொழிகளுக்குமே பொதுவானது. தமிழும் விதிவிலக்கல்ல. மொழி என்பது ஊடகம். பேச்சாக , எழுத்தாக அதற்கேயான தனி வடிவம் உள்ளது. பல மொழிகள் ஒரே எழுத்துருக்களைக் கொண்டு, ஆனால் தனித்துவமான பேச்சுவழக்கைக் கொண்டுள்ளது.  இந்தி என்ற ஒரு மொழிக்கான தனி எழுத்துரு கிடையாது. devanagari என்ற ஒரு எழுத்துருக்களையே அது பயன்படுத்தி வருகிறது. சமஸ்கிரகம் தொடங்கி பல மொழிகள் இந்த எழுத்துருவைப் பயன்படுத்துகிறது. இன்றைய ஆங்கில எழுத்துரு என்பதன் மூலம் Anglo-Saxon இலத்தீன் என்று கலந்துகட்டி உள்ளது.

ரி விடுங்க  . குழந்தைகளுக்கு இரண்டு வரி வடிவம் இருப்பது அதுவும் தமிழுக்கு என்று தனி வரிவடிவம் இருப்பதுதான் பிரச்சனையா? உலகில் உள்ள எல்லா எழுத்துருக்களையும் ஆங்கில வரிவடிவம் கொண்டு எழுதிவிடலாம் இன்றுமுதல்.  சரி ஆங்கில வரிவடிவம் மட்டும் அப்ப‌டியே வாழ்ந்துவிடுமா என்ன? ஆங்கில‌ எழுத்துருக்களின் "மூலம்" இன்று உள்ள "நிலைமை" என்று அய்யாவிற்கு தெரியாதா என்ன? "அப்ப‌டியெல்லாம் இல்ல இணைய மொண்ணையே, தமிழ் நாளை இருப்பதற்கு உத்திரவாதம் இல்லை" என்ற வாதத்தை நீங்கள் வைக்கலாம். சரி  ".... நாளைதான் நீங்கள் இருப்பது உத்திரவாதம் இல்லையே இன்றைக்கே சொத்தை கோவிலுக்கு எழுதி வைத்துவிட்டு குழிக்குள் இறங்கிவிடுங்கள்...." என்று சொன்னால் உங்கள் இரசிக சிகாமணிகள் கோபப்படுகிறார்கள். "ஆச்சானைப் பற்றி நாக்குமேல்பல் போட்டு பேச என்ன தகுதி உள்ளது?" என்று. "சாரோட கத பொக் படிச்சியா , படிச்சியா ? சங்கத்துல மெம்பரா? என்று கேட்டு கடுப்படிக்கிறார்கள் சார். உங்கள் புனைவில் சேகர் செத்தால் என்ன செக்குமாடு சாணி போட்டால் என்ன? பொஸ்தகத்து வரிகளின் படிமத்தில் பலாச்சுளை இருந்தால் என்ன பல்லி இருந்தால் என்ன? அதை யார் பேசுகிறார்கள் அல்லது விமர்சிக்கிறார்கள். இங்கே பேசப்படுவது உங்கள் கிந்து குருத்துக்கான எதிர் குருத்து மட்டுமே. அதை உங்கள் கொல்லைப்புர வட்டத்திற்கு சொல்லுங்கள். உங்கள் கிந்து கருத்தை விமரசிக்கக்கூட பலாப்பழத்தோட வரிசையில் நிக்கனுமா என்ன? கிந்து குருத்து பலாப்பழத்தில் சுளைதேடும் வட்டத்திற்கு மட்டும் என்றால் கொல்லைப்புர வட்டத்தில் வித்திருக்கலாமே?

மிழில் இத்தனை எழுத்துகள் உள்ளன அதனால் தான் படிக்க முடியவில்லை  என்று எந்தக் குழந்தையும் என்னிடம் சொன்னது இல்லை. (நீ என்ன பிடுங்கினே எந்தனை குழந்தையிடம் பிடுங்கெனே என்று என்னைக் கேட்க வேண்டாம். எதையோ எங்கேயோ பிடுங்கிக் கொண்டுள்ளேன் என்று வைத்துக்கொள்ளுங்கனேன் கொல்லைப்புர இரசிகாஸ்). நான் எப்போதும் தமிழில் உள்ள மொத்த எழுத்துகள் என்று "உயிர்" எழுத்துகளையும் "மெய்" எழுத்துகளையும் மட்டும்தான் சொல்வேன் என் மாணவர்களிடம் . "உயிர்மெய்" எழுத்துகள் ஒரு சப்பை மேட்டர். பெருக்கல்போல பிள்ளைகள் பெருக்கிச் சொல்லிவிடுகிறார்கள்.  அதுவும் , சின்னச் சின்ன பாடலாக வாய்ப்பாடுபோல சொல்லித்தரும்போது பட்டென்று பற்றிக்கொள்கிறார்கள். எழுதுவதும் சிரமம் என்று இதுவரை யாரும் சொன்னதில்லை. சரி அதையும் தாண்டி தமிழில் இவ்வளவு எழுத்துகள் உள்ளது அதுதான் இங்கிலிபீசுக்கு மாற முக்கிய காரணம் என்று அய்யா குறி சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். சார் நீங்க சீன மாண்டெரின் எழுத்துகளையும் பாருங்க சார். 80,000 எழுத்துகள் உள்ளது என்கிறார்கள். பல எழுத்துகள் இப்போது நடைமுறையில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எந்த கொல்லைப்புர வட்ட சங்கமும் அதை ஆங்கில எழுத்துருவில் எழுதலாம் என்று சொல்லவில்லை. இத்தனைக்கும் தமிழ்நாட்டைவிட அதிகம் அம்பேரிக்காவுடன் தொழில்ரீதியான உறவில் இருப்பவர்கள் சீனர்கள்.

மிழ், ஆங்கிலம் அத்துடன் இன்னொரு மொழி என்று சுலபமாக கற்கிறார்கள் குழந்தைகள். கிந்து போன்ற பொதுவான ( not like local கொல்லைப்புர வட்ட குருத்துகள்) அதிக வீச்சுள்ள பத்திரிக்கைகளில் எழுதும் முன்னர் , குழந்தைகளின் பன்மொழித்திறன் குறித்து அதற்கான அறிஞர்களிடம் கேட்டு எழுதலாம். சும்மா ஊட்டியில் ரூம் போட்டு என்ன சொன்னாலும் சொக்கிப்போகும் இரசிகர்களிடம் பேசுவதுபோல் இங்கேயும் எழுதினால் என்ன செய்வது?  தமிழ்நாட்டில் தமிழ் வாசிப்பு குறைந்துபோகக் காரணம், எழுத்துரு என்று என்று எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?

கற்றதை பயன்படுத்த சரியான தளங்களை குழந்தைகளுக்கு ஏற்படுத்த மறந்துவிட்டோம்.

தை பொஸ்தகங்களில் உங்களின் திறமை குறித்தான விமர்சனமே அல்லது இது. எல்லாரையும்போல நீங்களும் தமிழ் எழுத்துருவின் பயனர்.  கார் ஓட்டுபவன் எல்லாம் கார் மெக்கானிக் அல்லவே? காரின் கட்டுமானம் குறித்து மெக்கானிக்கிற்கு ஓரளவு தெரியும். ஆனால் தடாலென்று "ரயிலை ரோட்டிலும் ஓட்டலாம் கார் போல" என்று கிளம்பினால். அறிவு போதமை என்று சொல்லக்கூடாதா என்ன? "இந்த விசயம் இவருக்கு தெரியாது. அதில் அவ்வளவு ஞானம் இல்லாதவர்"...... என்று சொல்வது தனிமனித தாக்குதலா என்ன? மடவாசிகள்போல் பீடத்தில் அமர்த்தி என்ன சொன்னாலும் சரி என்று சொல்லவேண்டுமா என்ன? . நான் சொல்வது "இந்த நபருக்கு இந்த விசயத்தில் போதிய அறிவு இல்லை" என்றுதான் சொல்கிறேன். இவர் இந்த விசயத்தைப் பேசவே கூடாது என்று அல்ல. "நான்  இப்படி 'ka' தட்டினால் எனது கணினி யந்திரம் "க"  காட்டுவதால் எல்லா இரசிகர்களும் இனிமேல் தமிழ் 99 போன்ற உள்ளீடுசமாசாரங்களை விட்டுவிட்டு என்னைப்போல் , எனக்கு மட்டும் சாமியாடி என்னை தொழுது பிழைத்து வாழவும்......" என்று சொன்னால் கேட்டுச்செல்ல நான் என்ன மடவாதியல்லவே? சராசரி இணைய மொண்ணையாயிற்றே என்ன செய்வது?

ப்படித்தான் பேசுவார்கள் என்பது தெரியும், இவர்கள் இப்படித்தான் என்று முன்முடிவுகளோடு விடைகளை வைத்துக்கொன்டு கேள்வி கேட்கிறீர்களோ என்ற சந்தேகம் இணையமொண்ணையான எனக்கு வருவதை தடுக்க முடியவில்லை. தயார் செய்ய‌ப்பட்ட விடைகளுக்கு வெறும் மின்னஞ்சல்மூலம் கேள்விகளைப் பெற்றுக்கொண்டு,  கோபால்பல்பொடி முதல் கோமேதகம் வரை எல்லாக் கேள்விகளுக்கும் பொந்துஞானமரபில் தேய்த்து எடுக்கப்பட்ட களிம்பு விடைகளைக் கொடுத்துக்கொண்டு இருப்பவரிடம் எப்படி உரையாடல் சாத்தியமாகும்?  விவாதம் and/or  உரையாடல் என்பது சம நிலையில் இருக்கும் இருவருக்கு இடையில் இருக்க முடியும். பீடத்தில் இருந்துகொண்டு சொல்வது உரையாடலா போதனையா?  உங்களிடம் இரசிகர்மன்ற உறுப்பினர்களும், புனைவுகள் மூலம் பெற்ற ஊடக ஒலி பெருக்கியும் உள்ளது என்பதற்காக எதையாவது சொல்லிகொண்டு இருந்தால் என்ன செய்வது? இணையமொண்ணைகள் அவர்லள் பங்கிற்கு புலம்பி வைக்கிறார்கள்.

ணையமொண்ணைகள் பொங்கல் வைப்பது நீங்கள் சொல்லும் கருத்துக்களுக்காக மட்டுமே. கருத்துசொல்லும் உரிமையின்மீது அல்ல. கதை எழுதுவதை தொழிலாக செய்து வரும் ஒருவரை , அந்த தொழில் செய்கிறார் என்பதற்காகவே என்ன சொன்னாலும் ஆதரிப்பது /எதிர்ப்பது  என்பது நடிப்பதை தொழிலாக செய்து வரும் டாக்டரு விஜயின் கட்டவுட்டிற்கு பால்பாக்கெட் பீச்சுவவது/எதிர்ப்பதைவிட‌ ஆபத்தானது. மன்னிக்க வேண்டும். புனைவுகள்மீது எனக்கு என்றும் ஈர்ப்பு இருந்தது இல்லை.  அது எனக்குத் தெரியாது. கனவில் (புனைவில்) கழுதை செத்தால் என்ன பிழைத்தால் என்ன என்று இருந்துவிடுவேன்.  அதில் பேசி ஒன்றும் ஆகப்போவது இல்லை. அதே சமயம் அதை நிராகரிக்கவும் மாட்டேன். தமிழின் வளர்ச்சியில் எல்லாம் ஒரு அங்கமே.

னது கதை என்னும் புராடக்டை தமிழ் எழுத்துரு என்னும் ஒன்றில் சமைத்து, அது கேரி பாட்டர் போல் விற்கவில்லை என்றவுடன், தமிங்கிலீசில் தயார்  செய்து விற்றால் நிறைய விற்குமே என்று ஆசைப்படுகிறீர்கள்.  புனைவுகள் தமிழ் எழுத்துருவில் கதை புத்தகமாகிறது. இந்த எழுத்துரு செத்தாலும் வேறு ஏதோ எழுத்துருவில் கதை விற்கமுடியும். பரோட்டோ மாஸ்டருக்கு பரோட்டா  அதிகம் விற்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கும். எந்த நடிகையை நடிக்க வைத்தால் படம் அதிகம் விற்கும் என்று தயாரிப்பாளர் திங் பண்ணலாம். எந்த ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் புதிய மொபலை அறிமுகப்படுத்தலாம் என்று ஒரு நிறுவன முதலாளி திங் பண்ணலாம். வணிகத்தில் இதெல்லாம் சகசம். ஆனால் தன் கொல்லைப்புர விசுவாசிகள் ஆசான் என்பதை தமிங்கிலீசில் அடித்தால் எப்படி இருக்கும் என்பதையும் சிந்திக்க வேண்டும் நீங்கள். எது சொன்னாலும் அதிருதுல்ல...ஆம் தகரங்கள் அதிரத்தான் செய்யும் கனமான கருத்து இல்லை என்றால்.

ரோட்டா மாஸ்டரும் "இங்கே சூடான பரோட்டா" கிடைக்கும் என்று தமிழ் எழுத்துருவில் எழுதி,  வெளியே தட்டி வைத்து விற்கிறார்.
இங்கே அவர் பரோட்டா தான் விற்க முய‌ல்கிறாரே தவிர தமிழ் வளர்க்க முயலவில்லை. இதே பரோட்டா கடை வேறு நாட்டில் இருந்தால் வேறு மொழியில் எழுதி வைத்து இருப்பார்.  கதை விற்பனையாளர்களும் கனவு புனைவு என்று எழுதி அதை விற்கிறார்கள். அவர்களின் கனவு புனைவு பொரோடக்ட்களை எழுதும் மொழி/வரிவடிவம் தமிழ் . தமிழ் நாசமாகப்போனாலும் அதே கனவு புனைவு பொரோடக்ட்களை வேறு மொழியில் எழுதிக்கூட சந்தைப்படுத்த முடியும். அவர்களின் சரக்கை சந்தைக்கு எடுத்துச்செல்ல எந்த எழுத்துருவும் சரி. அதற்காக எங்கள் சங்கை அறுக்க வேண்டாம் என்றுதான் கேட்டுக்கொள்கிறோம்.

***

தமிழால் நீங்களும் பிழைக்கிறீர்கள் , உங்களால் தமிழும் செழுமை அடைகிறது. இரண்டும் உண்மை.  பயன்பாடு இல்லாவிட்டல் மொழி சாகும்.  இப்படி ஒரு மொழியும் எழுத்துருவும் இல்லாவிட்டால் இதை வசப்படுத்த தோன்றியிருக்காது என்பதும் உண்மை. ஆனால் கனவுகளை புனைவுகளாக அழகாக எழுதத் தெரிந்த காரணத்தினால் , உங்கள்  வணிகம் சரியில்ல என்பதால் இப்படி "தமிங்கிலீஃச் எழுத்துருவில்  எழுதினால் என்ன?"  என்பது மாதிரியான கருத்துகள்,  மொழியை எப்படி செழுமைப்படுத்தும்?

மேலும் இணையம் என்பது இணைத்தல் மட்டும் அல்ல இணை யானவர்கள் என்ற ஒரு எண்ணம் கொண்டோர் பழகும் இடம். இதில் நீங்களும் ஒருவர் என்ற எண்ணம் வேண்டும். அப்போதுதான் உரையாடல் சாத்தியமாகும். பாப்புலர் கதை விற்பனயாளர் போன்ற தொப்பிகளுடன்  வலம்வரும்வரை மற்றவர்கள் இணைய மொண்ணைகளாத்தான் தெரிவார்கள். ஏன் என்றால் யாரும் இங்கே அவர்களின் தொழில் சார்ந்த உன்னத தொப்பிகளை அணிந்து திரிவது இல்லை.

Wednesday, October 30, 2013

குரல் வளம் தாண்டி உடல்வளமும் ஒரு தகுதி?

பாடகர்கள் (ஆண் / பெண்) என்பவர்கள் ஏற்கனவே உலகம் தைத்து வைத்துள்ள சட்டைக்குள் அடங்கக்கூடிய உடல் கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்பது போல் இசை உலகம் மாறிவிட்டது. அவர்களின் குரல் வளம் தாண்டி உடல்வளமும் ஒரு தகுதியாக மாறிவிட்டது. அல்லது அவர்களே உடல்வளத்தையும் மாற்றி அதையும் ஒரு அங்கமாக குரல்வளத்துடன் சேர்த்து சந்தைப்படுத்துகிறார்கள்.

 

மனதை மகிழச்செய்யும் உடல்வளம் என்பது நல்லதுதான். பாடல் என்பதுதாண்டி சின்ன அளவு காமமும் சேரும்போது சொக்கத்தான் வைக்கிறது. ஆனால் அந்த உடல்வளம் எல்லாப் பாடகர்களுக்கும் வாய்த்துவிடுவது இல்லை. வெறுமனே கிராமபோன் , வானொலி என்ற அளவில் இருந்தால குரலுக்குபின்னால் இருக்கும் உடல் பற்றிய தேவைகள் இருந்திருக்காது. தொலைக்காட்சியும், காட்சிகளுடன் கூடிய ஒலி-ஒளி தட்டுகள் வந்தபிறகு குரலுக்குப்பின்னால் உள்ள உடல் அழகு ஒரு முக்கியவிசயமாகமாறி வருகிறது.

அம்பேரிக்காவில் நடக்கும் பாடல் போட்டி நிகழ்ச்சிகள் (அதை பிரதியெடுத்து நடக்கும் டமில் நிகழ்ச்சிகள்) எல்லாம் உடல் அழகும் ஒரு பொருளாக மாறிவிட்டது.  Ray Charles ( http://www.youtube.com/watch?v=Q8Tiz6INF7I ) போன்று கண்தெரியாத  பலர் உள்ளார்கள். அவர்கள் புகழ் பெறவும் செய்துள்ளார்கள். பாடகர் வரிசையில்  Andrea Bocelli  (  http://www.youtube.com/watch?v=L8RG-U1LAG0 )  போல் பலர் உள்ளார்கள்.

ஆனால் வெளிப்படையாக பளிச்சென்று தெரியும் ஒரு உடல் குறைபாட்டுடன் (அப்படிச் சொல்வதில் உவப்பில்லை என்றாலும் வேறுபடுத்திக் காட்ட இந்த வார்த்தை) கையில் ஒரு ஊன்றுகோலை வைத்துக்கொண்டு  சாதித்துக் காட்டிவரும் Singer Chris Hendricks சாதனை மனிதர்தான். இரண்டு கிடார் வாசிப்பவர்கள், ஒரு ட்ரம்மர் கொண்டுள்ள இவரின் சின்ன இசைக்குழு பல சாதனைகளைச் செய்து வருகிறது. http://www.youtube.com/watch?v=B8Mv2ngrweM

Singer Chris Hendricks

Who Is Chris Hendricks?  http://www.youtube.com/watch?v=8BoN2djjYY0


சின்ன வயதில் பலரின் கேலிக்கும், கிண்டலுக்கும்.உதாசீனப்படுத்தலுக்கும் ஆளான இவர் அதையே ஒரு சவாலாக்கி சாதித்து வருகிறார். முக்கியமாக இவர்கள் பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாக பேசி, இசை நிகழ்ச்சி நடத்தும் ஒன்று சிறப்பானது. Singer Chris Hendricks  க்கும் அவரின் குழுவினருக்கும் எனது அன்பும் மரியாதையும்.

நேற்று எனது மக‌னின் பள்ளிக்கு வந்து இருந்தார்கள். அவர்களை அழைத்துவர உள்ளூர் வணிகநிறுவனங்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் நிதி உதவி செய்துள்ளது என்று நினைக்கிறேன்.

#அடுத்த பெட்னாவிற்கு ஆண்ட்ரியாவா? என்று சொல்லி முடிக்கிறேன்

Wednesday, October 09, 2013

மேடை சார்ந்த நடிப்பு மற்றும் தொப்புள்


நடிகர்கள் , அதுவும் குறிப்பாக நடிகைகள் குறித்து எனக்கு நிறைய மரியாதை உண்டு. சின்னவயதில் " டேய் சூப்பரா நடிச்சிருக்காண்டா ரஜினி"  என்ற அளவில் பேசித் திரிந்துள்ளேன். மரியாதை என்பது கற்றுத்தரப்படவில்லை என்பதைவிட பால்காரன், வேலைக்காரன் என்ற அளவில் சினிமா நடிகர் நடிகைகளையும் ஒருமையில் அழைக்கும் நோய் அதுவாகவே எனக்கும் வந்து சேர்ந்து இருந்தது. எனக்கு மட்டும் அல்ல என் வயதினர் அனைவரும் அப்படியே.

கல்லூரி காலங்களில்கூட அந்த நோய் இருந்தது. எப்போது மாறினேன் என்று தெரியவில்லை. நடிகர் நடிகர்களை மரியாதையுடன் அழைக்க / பேச வலிந்து மாற்றிக்கொண்டேன். எனக்கு திருமணமாகி குழந்தைகள் பிறந்து அவர்கள் படம் பார்க்க ஆரம்பித்தவுடன் , நடிகர் நடிகைகளை மிகவும் மரியாதையாக‌ அறிமுகம் செய்து வைத்தேன். குழந்தைகளுக்கு வடிவேல் மிகவும் பிடிக்கும். வடிவேல் / விஜய் நகைச்சுவைக்காட்சிகள் அதிகம் பிடிக்கும். அபப்டி அவர்கள் அந்தக் காட்சிகளைப் பார்க்கும் நேரத்தில் "இவர்தான் வடிவேல் அங்கிள். இவருக்கும் குடும்பம் உள்ளது. மனைவி, குழந்தைகள் உள்ளார்கள். அப்பா வேலை செய்வதுபோல இவர் நடிக்கும் வேலை செய்கிறார்."  என்ற அள‌வில் அறிமுகம் இருக்கும்.

நடிகைகள் என்றால்... "இந்த ஆண்டி அப்பா கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்து நடிக்கிறார். இவருக்கு குழந்தைகள் உள்ளார்கள். (குழந்தைகளின் பெயர்கள் தெரிந்து இருந்தால் அவையும் சொல்லப்படும்) அப்பா இவருக்கு இரசிகராக இருந்தேன். நன்றாக நடனம் ஆடுவார்" என்ற அளவில் இருக்கும். கமலின் குழந்தைகளை யார் என்றும் சொல்லி உள்ளேன்.

Shakira - Hips Don't Liஎ குடும்பத்துடன் அடிக்கடி பார்ப்போம்.... அப்போதும் அதில் நடனம் ஆடும்  Shakira  அழகு, நளினம் வெளிப்படையாக பேசப்படும். அந்தப் பாட்டு பண்பலையில் வந்தால் அப்பா உங்க பாட்டு என்று சொல்லிவிடுவார்கள் குழந்தைகள். 

Taylor Swift எப்படி இளமைக் காலத்தில் இருந்து பாடல்களில் ஆர்வம் காட்டி கடின உழைப்பில் முன்னேறினார் என்பது போன்ற  ஆவணப்படங்களும் பார்ப்பது உண்டு. பொழுதுபோக்கு ( திரைப்படம், தொலைக்காட்சி, ...)  உலகத்தில் இருப்பவர்கள் இரத்தமும் சதையுமான மனிதர்கள் என்பதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பேன் குழந்தைகளிடம்.

இதையெல்லாம் குழந்தைகளுக்குச் சொல்வதன் காரணம்..... நடிகர்/நடிகைகளின் புற அழகு / குரல் / நடனம் இரசிக்கப்பட்டாலும் அது அவர்கள் திரையில் செய்யும் ஒரு தொழில்/வேலை தானே தவிர , அவர்களுக்கும் குடும்பம் உள்ளது.  திரை வாழ்க்கைக்கும் நிச வாழ்க்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது அவர்களுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக‌.

***

இவை எல்லாம் சினிமா இரசிகன் தொடங்கி கதைபுத்தக இரசிகன் வரை அனைவருக்கும் தெரியவேண்டும்.

டமில் வொலகத்தில் இருக்கும் பிரச்சனையாக நான் (நான் ) நினைப்பது இரசிகர்கள் மட்டும் நடிகர்/கதைபுக் ரைட்டர்களின் துதிபாடிகளாக இருப்பது இல்லை.... அந்த நடிகர்/கதைபுக் ரைட்டர்களும் அதையே விரும்புகிறார்கள் அல்லது அவர்களின் தொழில் பிம்பத்தை அவர்களே உண்மையாக நினைத்து வாழவும் ஆரம்பித்துவிடுகிறார்கள்.

அந்த வழியில்தான் இந்த இளம் நடிகையும் என்று நினைக்கிறேன். உங்களின் மதங்கள் எதை அனுமதிக்கிறது என்று தெரிந்துகொண்டு திரைக்கு வருவது நல்லது. இப்படியான புகார்கள்/மதங்களைத் தொடர்புபடுத்தி காரியங்கள் செய்து படத்திற்கு விளம்பரங்கள் செய்வதற்கு பதில் ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்துவிடலாம். அங்குதான் எந்தவிதான செயலும் மக்கள் நலனாக‌ அல்லது சாணக்கியத்தனமாக போற்றப்ப‌டும்.

Wednesday, October 02, 2013

அக்டோபர் 2

ன்னளவில்....அம்பேத்கர், பெரியார்  போன்றோர்களின் சாதிய நிலைபாடுகளுக்கும் காந்தியின் சாதிய நிலைப்பாடுகளுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. மதங்களில் காந்தி ஒரு வகையான நிலைப்பாடு கொண்டவர். விமர்சனங்களுக்கு  அப்பாற்பட்ட மனிதர்கள் கிடையாது அது காந்தியே என்றாலும். காந்தி குறித்த உரையாடல்கள் மாசி (மா. சிவக்குமார்) அவர்களின் வலைப்பதிவில் நிறைய நடத்தி ஓய்ந்தாகிவிட்டது.


அம்பேரிக்காவில் கருப்பின இளைஞர்கள் ஒருகாலத்தில் நடத்திய "உணவகங்களில் அமர்வுப்போராட்டங்கள் Greensboro sit-ins (http://en.wikipedia.org/wiki/Greensboro_sit-ins) எல்லாம் காந்தியின் பாதிப்பு என்று நினைக்கும்போது "அமைதியாக எதிர்த்தல்" என்ற காந்தியவழியில் மதிப்பு வருகிறது. உணவகங்களில் உணவு பரிமாற மறுத்த வெள்ளையின மக்களை அமைதியாக எதிர்கொண்டார்கள் கருப்பின இளைஞர்கள்.  இப்படி பல அமைதிப் போராட்டங்கள் இந்த மண்ணில் நடந்துள்ளது.

ஆனால் அவை எல்லாம் இன்றைய காலகட்டத்தில் ஏட்டுச்சுரைக்காய் ஆகிவிட்டது. அம்மாவின் உண்ணா நோன்பும் அய்யாவின் உண்ணா நோன்பும் கசாரேவின் உண்ணாநோன்பும் இராம்தேவ் உண்ணா நோன்பும் நகைப்பிற்கு உரியது.

***

குட்ரோச்சி ( Ottavio Quattrocchi ) மற்றும் சவார்க்கர் ( Vinayak Damodar Savarkar )  வகையறாக்கள் எல்லாம்  காந்தியை சொந்தம் கொண்டாடும் போது கெதக் என்று இருக்கிறது.  கள்ள நோட்டு அடிப்பவர்கள்கூட அதிக காந்திபடம் வெளியிடுவதால், காந்தியவாதிகளாக காட்டிக்கொள்ளலாம. எல்லாம் அவர்கள் உரிமை.

***

மக்களின் பேரன்பை பெற்ற காந்தியையும் , இன்று நான் உட்பட பலர் பொட்டிதட்ட , கல்வி கற்க காரணமாய் இருந்த காமராசரையும் நினைவில் கொள்கிறேன்.


Wednesday, August 28, 2013

எது மாற்றுக்கல்வி? ஏன் மாற்றுக் கல்வி? எப்படி மாற்றுக்கல்வி?

picture. Thanks to http://bigthink.com
மு தலில் கல்வி அல்லது கற்றல் என்றால் என்ன என்று பார்ப்போம்.

கற்றல் என்பது தெரிந்துகொள்வது அல்லது புரிந்துகொள்வது அவ்வளவுதான். அதாவது "மனிதர்கள் கூட்டமாக வாழ்வது ஊர் எனப்படும்" என்று ஒருவர் சொன்னால் "ஓ அப்படியா" என்று தெரிந்துகொள்வது. மற்றபடி அதை தெரிந்து என்ன புண்ணியம்? என்பது "கற்றலின் வழி செயற்படல் அல்லது தேடல் அல்லது பகுத்தறிதல் " என்ற அளவுகோலில் வரும்.

ஒவ்வொருவருக்கும் குடும்பச் சூழலில் தொடங்கி, பின்பற்றும் கொள்கைகள், நண்பர்கள், பிறக்கும் ஊர், நாடு, அவர் படிக்கும் நூல்கள் .....என்று பல தகவல்கள் தெரியவரலாம். இவை அனைத்தும் கற்றலின் கூறுகளே. ஏற்கனவே தெரிந்து (கற்றலின் மூலம்) வைத்துள்ள அனுபவங்களை தொகுத்து அடுத்த தலைமுறைக்கு கொடுப்பது கல்வி முறை.

இந்த மனிதக்கூட்டம் எதைக் கற்க வேண்டும்?

எந்தக் கட்டுக்குள்ளும் அடங்காதது காலம்.இதுவரை எவ்வளவு ஆண்டுகள் கடந்துள்ளது , இனிமேல் எவ்வளவு ஆண்டுகள் மீதம் உள்ளது என்பதை யூகம் செய்யலாம. வேதப் புத்தகங்களில் சொல்லும் கதைகள் போல அறுதியிட்டுக்கூறமுடியாது. மனித இனம் (பல விலங்கினங்கள்) அதன் தேவை பொருட்டும், தேடல் மூலமும் (தேடலே தேவை பொருட்டு வருவது) பலவற்றை அந்த அந்தக் காலத்தில் கண்டறியும். கற்கால கருவிகள் முதல் , இந்தக்கால வசதிகள் வரை எல்லாம் ஒரு தொடர்ச்சியான சங்கிலி முன்னேற்றம். இந்த முன்னேற்றத்தில் மாட்டுக்கு 'இலாடம்' கட்டுதலும் ஒன்று. இன்றைய வாழக்கை முறையில், எத்தனை பேர்களுக்கு மாடுகளை படுக்க வைத்து இலாடம் கட்டத்தெரியும்? ஒரு காலத்தில் அது முக்கியம் இன்று ...?

உலகம் முழுக்க காலை உணவாக 'குழிப்பனியாரம்தான்' சாப்பிட வேண்டும் அதுதான் அக்மாரக் சுத்த சன்மார்க்க காலை உணவு என்று யாரும் ஒற்றை அளவுகோலை வைக்க முடியாது. எனவே இன்றைய தலைமுறை எதைக் கற்கவேண்டும் என்பது

இடம்,
தேவை,
காலம்,
சூழல், etc

எல்லாம் சார்ந்த ஒன்று. அனைவருக்கும் பொதுவான கல்வி என்பதுகூட உலகத்தில் உள்ள அனைவருக்கும் அல்ல, ஒரு சின்ன குழுவிற்கு அந்தக் குழுவின் பிரதிநிதிகள் சிலவற்றைப் பாடமாக வைப்பது.

எதைக் கற்கவேண்டும்?

எதைக் கற்கவேண்டும் என்பதை ஒரு குழந்தையை முடிவு செய்யவிட்டால் அது "அழுதால் பால்கிடைக்கிறது. எனவே அழுகையே போதும்" என்றுகூட இருந்துவிடலாம். ஆனால் அனுபவம் வாய்ந்த பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள்? மொழியைக் கற்பிக்கிறார்கள். எதற்கும் இருக்கட்டும் என்று கடவுள்,பேய்,பிசாசு என்றும் சொல்லிக்கொடுக்கிறார்கள். குழந்தையை குழந்தையாய் வாழவிடுங்கள் என்று சொல்பவர்கள் ஏன் கடவுள்,பேய்,பிசாசு வகையறாக்களை கற்பிக்கிறார்கள் என்றும் தெரியவில்லை.

ஒருவன் 12 ஆம் வகுப்பு படித்துவிட்டு 'சைக்கிள்கடை வைக்கப்போறேன்' என்று சொன்னால் எந்தப் பெற்றோரும் ஏற்றுக்கொள்வது இல்லை. இதே பெற்றோர்கள்தான், குழந்தையை குழந்தையாய் இருக்கவிடுங்கள் என்றும் கொடி பிடிப்பார்கள். இன்றுள்ள சூழலில் ஆரம்பப்பளி வரை குழந்தைக்கு எதைக் கற்பிக்கலாம் என்பது பெற்றோர்களிடம் உள்ளது. அதற்குப்பிறகு அவர்களின் சுயதேடல் தொடங்கிவிடுகிறது.

எனவே எதைக் கற்கவேண்டும் என்பது ஒருவயது வரை பெற்றோரும் அதற்குப்பிறகு வளரும் குழந்தையும் முடிவு செய்யவேண்டிய ஒன்று.

தமிழ்நாட்டில் உள்ள பாடத்திட்டம் சரியா?

பள்ளிகளில் உள்ள பாடத்திட்டம் என்பது முழுக்க முழுக்க வேலை, பொருளீட்டல் போன்ற உத்திரவாதங்களைக் கொடுக்கும் நோக்கிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.  கலைகள்,சரித்திரம்,கனவு ....எல்லாம் வயிறு நிறைந்தபின்னால்தான் என்ற 'பசிநெறியின்' அடிப்படையில், சோற்றுக்கு வழிசெய்யும் ஏதோ ஒரு வேலையை நோக்கிய படிக்கட்டுகளே தமிழ்நாட்டில் உள்ள பாடத்திட்டம்.

இது சரியா ? தவறா? என்பது ஒற்றை வரியில் சொல்லக்கூடிய விடை அல்ல. அம்பானியின் முழந்தை 'காக்கயின் சிறகில் சித்திரம் வரைவது எப்படி?' என்ற ஒரு பாடத்தை எடுத்து படிக்கலாம். ஏன் என்றால், அவர்களுக்கு பசியாற்றுவது என்பது முதல் தேவையாய் இல்லாமல் இருக்கலாம். சைக்கிள் ஓட்டும் ஒரு குமாஸ்தாவின் குழந்தையின் தேவை , படித்து கார் வாங்குவதாக இருக்கலாம். இப்படி தேவையின் அடிப்படையில் மட்டுமே பாடத்திட்டங்கள் அமைக்கபப்டுகிறது.

இவை மாறவேண்டும் என்றால், தேவைகளும் நோக்கமும் மாறினால்தவிர இது மாறாது. சைக்கிள் ரிக்சா ஒட்டி சிறப்பான வாழ்வு வாழமுடியும் என்ற நிலைவரும்போது சைக்கிள் ரிக்சாவிற்கான கற்றலின் தேவை வந்துவிடும்.

பாடத்திட்டம் சரி. சொல்லிக்கொடுக்கும் முறை சரியா?

ஒரே பாடத்திட்டத்தை பொதுவான (பெரும்பான்மை) வசதி,தேவை,நேரம் அனைத்தையும் கருத்தில் கொண்டு மாநில அரசு ஒரு முறையை பரிந்துரை செய்கிறது. அது அனைவருக்கும் சரியாக இருக்காது. என்ன செய்யலாம்? பணம் படைத்தவன் அல்லது மாற்றுக்கான வசதி/நேரம் உள்ளவன் அவனுக்கு மாற்று என்றுபடும் ஒன்றை தேடிக்கொள்ளலாம்..மற்றவர்கள்?

நாமக்கல் பாணி பள்ளிக்கூடங்கள்மீது வெறியும் , கோபமும், இயலாமையும் வருகிறது. ஆனால் எடுக்கப்படும் மார்க் மட்டுமே மேல்ப்படிப்பிற்கு உதவும் அதுவே ஒரு குறைந்தபட்ச வாழ்தலுக்கான உத்திரவாதத்தைக்கொடுக்கும் எனும்போது, கோழி வளர்த்து முட்டைகளை வாரி வழங்கிய நாமக்கல் தொழிலதிபர்கள், மாணவர்களிடம் இருந்து மார்க் என்ற முட்டையை எடுக்கும் சரியான (ரிசல்ட்டுக்கு உத்திரவாதம் தரும்) வழியை கண்டுபிடித்து செயல்படுத்தி வருகிறார்கள்.

'மார்க் மட்டுமே' எனும் தேவை இருக்கும் வரை அதை மட்டுமே அல்லது அதை நோக்கியே உற்பத்தி நிகழும். இதை மாற்ற அதன் தேவை மாறினால்தான் முடியும். வாழ்வாதர வாய்ப்புகளை மொட்டையான மார்க் மட்டும் அல்லாமல் அடுத்த கூறுகளையும் சேர்த்து ஏற்படுத்தும்போதுதான் மாற்றுக்கல்வி அல்லது மாற்று கற்பிக்கும்முறை சாத்தியமாகும்.

உதாரணமாக வரலாறு படித்த ஒருவனுக்கு மாதம் ரூபாய் 60 ஆயிரம் சம்பளத்தில் கங்கைகொண்டசோழபுரம் அருங்காட்சியகத்தில் வேலை கிடைக்கும் என்றால் வரலாறு படிக்கும் தேவை கற்றலுக்கு வந்துவிடும்.

பிறந்தவுடன் குழந்தைக்கு சாதியையும், மதத்தையும் அந்தக் குழந்தையைக் கேட்காமலேயே ஞானஸ்தான்ம செய்துவிட்டு, நியுமரலாஜி நேமாலஜி எல்லாம் சேர்த்து கலவையாக ஒரு பெயரையும் கொடுத்துவிட்டு , அதே பெற்றோர்கள் .....குழந்தையின்மீது எதையும் திணிக்கக்கூடாது என்று கொடிபிடிப்பது ஆச்சர்யம். திணிப்பை எதிர்ப்பவர்கள் சாதி, மதங்களை திணிக்காமல் சுத்த சுயம்பு சன்மார்க்க திணிப்பற்றவ்ர்களாக இருக்க எல்லாம் வல்ல பூனைச் சாமி அருள் வழங்கட்டும்.

Tuesday, August 27, 2013

உடலுறவின் தேவை என்ன?

னித இனம் மற்றும் இதர பல உயிரினங்களின் ஒரே நோக்கம் அதாவது "உயிர்த்து இருத்தலின் ஒரே நோக்கம் சந்ததி உருவாக்கம் என்பதே" என்று இன்றும் நம்புகிறேன். மற்ற எல்லா வாழ்வியல் அற‌ங்களும், தேவைகளும் சந்ததி உருவாக்கம் என்ற நாரின் மேல் கட்டப்பட்ட பூக்களே. இப்படியான மறு உருவாக்கம் என்பது, ஒவ்வொரு உயிரினத்திலும் ஒரு மாதிரி உள்ளது. தாவரங்களில் மகரந்தச் சேர்க்கை என்பது காற்று, பூச்சிகள் என்று அடுத்தகூறுகளை நம்பிய ஒரு வடிவம். இரண்டு மரங்கள் நேரடியாக மரவுறவு (உடலுறவு) கொண்டுதான் காய்களை,கனிகளை,விதைகளை உருவாக்க வேண்டும் என்ற தேவை இல்லை.

தேனீக்கள் போன்ற மூன்றாம் ஆட்கள் மூலமாக இனப்பெருக்கத்திற்கான கூறுகளை அவுட்சோர்ஸ் செய்துவிட்டு மரங்கள் மரம்போல் நிற்கிறது. ஆண் பெண் என்று தனி இனம் இல்லாமல் ஒரு உயிரியே ஆணாக பெண்ணாக இரண்டு கூறுகளும் உடையனவாகவும் உள்ளது ( hermaphrodites ).   மனித இனத்தில் இருக்கும் பெரும்பாலனா ஒழுக்க,சாதி,சமய கூறுகள் எல்லாம் சந்ததி ,இனம்பெருக்கம், உடலுறவு போன்ற கூறுகளை நேரடியாக அல்லது மறைமுகமாகக் கொண்டவை. சந்ததிப் பெருக்கத்திற்கு நேரடி உடலுறவு தேவை இல்லை எனும்போது இவைகள் என்னவாகும்?

பல பெண்களை டேட் (Date) செய்தும் எந்த ஒரு பெண்ணின்மீதும் ஈர்ப்பு வராமல் கடைசியில் ஒரு ஆணைத் திருமணம் செய்துகொண்ட சக ஊழியரை அறிவேன். இவர்களின் திருமணத்தில் உடலுறவு இருந்தாலும், அதன் தேவை சந்ததிப் பெருக்கத்திற்கானது  அல்ல. சந்ததிப் பெருக்கத்திற்கு ஏதோ ஒரு பெண்ணின் கருமுட்டையை வாங்கி, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம அல்லது தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று இருக்கிறார்கள்.

அதிகரித்து வரும் ஒருபால் திருமணங்களும், அறிவியல் வளர்ச்சியில் நேரடித் தொடர்பு இல்லாமல் கரு உண்டாக்கும் முறைகளும் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில், ஆண் பெண்ணின் உடலுறவு என்பது எந்த நோக்கத்திற்கானது? வலிந்து திணிக்கப்படும் பெண்ணுடல்/ஆணுடல் கவர்ச்சி விளம்பரங்களால் மூளையில் பதிய வைக்கப்பட்டுள்ள காரணிகள்தான் சட்டன்று உணர்வுகொள்ள வைக்கிறாதா? ஒரு வேளை இவை குறைந்து, சந்ததி தேவைக்கும் உடலுறவு தேவையே இல்லை, செய்து வாங்கிக் கொள்ளலாம் என்று நிலை வந்துவிட்டால் உடலுறவின் தேவை முற்றிலும் இல்லாமல் போய்விடும் வாய்ப்பு உள்ளது.

நேரடி உடலுறவு கொண்டு பிற்காலத்தில் அது நின்று போய் மரங்கள்/தாவரங்கள் போல மகரந்தம் கடத்தலில் சந்ததி வளர்க்கும் உயிரினங்கள் ஏதும் உண்டா?

தொடுதல் , அணைப்பு, முத்தம் எல்லாம் சந்ததி உருவாக்க உதவாதவை , ஆனாலும் மனித இனம் இதனால் கிளர்ச்சி அடைகிறது என்பது உண்மையே. ஒருவேளை மனித இனம் ஒன்றின்மீது ஒன்று சார்ந்து இருக்கும் தேவையின் வெளிப்பாட்டிற்காக மட்டும் உடலுறவு என்றாகும் நிலை வருமோ?

Monday, August 05, 2013

திண்ணையும் காம்பவுண்டு சுவரும்



இதை பலமுறை பல இடங்களில் சொல்லியாகிவிட்டது. இன்று பார்த்த ஒரு கூகிள் ப்ளஸ் மறுபடியும் சொல்லத்தூண்டுகிறது. பெரிய பெரிய திண்ணைகள், தாழ்வாரங்கள் என்று ஒருகாலத்தில் வீடுகள் இருந்தது. எனக்கு நினைவு தெரிந்து கட்டப்பட்ட வீடுகளில்கூட திண்ணைகள் வைத்தே கட்டப்பட்டது. எங்கள் வீட்டில் திண்ணை இல்லாதது எனக்கு பெருங்குறையாகவே இருந்தது. ஆரம்பபள்ளிக் காலங்களில் பக்கத்துவீட்டில் திண்ணைகள் இருக்க எங்கள் வீட்டில் திண்ணை இல்லாமல் இருந்தது. அந்தவயதில் , கல் ,செம்மண் கொண்டு நானே ஒரு திண்ணையைக் கட்டி முடித்தேன். அதற்கு பிறகு  அங்கே யாரவது தங்கிச் செல்லும்போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கும். மோர் விற்கும் பாட்டி, இரண்டாவது ஆட்டம் படம் பார்த்துவிட்டு ஊருக்கு போகமுடியாமல் , படுத்து எந்திரித்து போகும் தெரிந்த உறவுகள், யாரென்று தெரியாமல்கூட யார் யாரோ வந்து உட்கார்ந்துவிட்டு, தண்ணி வாங்கி குடித்துவிட்டுப்போன கதைகள் உண்டு.

திண்ணை தவிர்த்து ஊரில் உள்ள ஒரு மடத்திலும், பலர் தங்கிச்செல்வார்கள், படுத்து இருப்பார்கள். திண்ணை என்பது யாரும் எப்போதும் வரலாம் என்று எப்போதும் எதிர்பார்த்து இருக்கும் கதவுகள், கட்டுப்பாடுகள் அற்ற இடம். ஆனால் காலம் செல்லச் செல்ல திண்ணைகள் கக்கூஸ்களாக உருமாறியது. இடப்பற்றாக்குறையில் , முதலில் கைவைக்கப்பட்டது கிராமங்களின் திண்ணை. பலர் அதையும் சேர்த்து ரூம் கட்டிவிட்டார்கள். பலர் சின்ன கக்கூஸ்களை கட்டிக்கொண்டார்கள். ரோடு உயர்ந்ததில் எங்கள் திண்ணை புதையுண்டுவிட்டது.

புதியவீடுகள் , திண்ணைகள் இல்லாதது மட்டுமில்லாமல், காம்பவுண்டு சுவருடன் கட்டப்பட்டன. இன்றைய பொழுதில் யார் வீட்டிற்கும் சொல்லாமல் போனால் அது கொடுந்துயராமாகவே பார்க்கப்படுகிறது. எப்போ வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் தங்கிச்செல்ல இன்னும் சில இரயில் நிலையங்களும் பஸ்டாண்டுகளும் மட்டுமே உள்ளது. உறவு, விருந்தினர், தெரிந்தவர் என்பது எல்லாம் பல கட்டுப்பாடுகளுடன், அவர்களுக்கான எல்லைக்கோட்டினுள் மட்டுமே இயங்கமுடிகிறது.

தெரிந்தவர்கள் வந்து தங்கிச்செல்ல இதயமும் இல்லை இடமும் இல்லை என்பது மட்டுமல்லாமல், இன்றைய வாழ்க்கைச்சூழல் இடம் கொடுப்பது இல்லை. கணவன் , மனைவி , வேலை, குழந்தைகள் பள்ளிக்கூடம் என்று சீராக ஒடும் பற்சக்கரத்தின் இடையில், சொல்லாமல் கொள்ளாமல் நுழைந்துவிடும் யாரும் அந்தக்குடும்பத்தின் ஓட்டத்தை தடைப்படுத்தவே செய்கிறார்கள்.

வீடுகளை விடுங்கள். கோவில்கள் எப்படி மாறிவிட்டது. மதிய நேரங்களில் மீனாட்சி கோவிலின் குளப்படிகட்டுகளில் உட்கார்ந்தது ஒருகாலம். பிற்காலத்தில் படிகளில் கேட் போடப்பட்டது. மீனாட்சி அம்மன் கோவிலில் காலையில் ஒரு நேரத்திற்குப்பிறகு நடை சாத்திவிடுவார்கள். கடவுளேயானாலும் அவரும் குறிப்பிட்ட மணிநேரங்கள்தான் தரிசனம் கொடுப்பார். அப்படியான நேரங்களில், குளத்தைச் சுற்றியுள்ள மண்டபத்தில் உட்காரலாம்.நடை திறந்தபின் கோவிலுக்குப் போகலாம். ஆனால் இப்போது, கோவிலைவிட்டு மொத்தமாக விரட்டி அடித்துவிடுகிறார்கள். அதற்கென்றே ஒரு படையும் உள்ளது.

இதைச் சொன்னால் சிலர் "அது கடவுள் செய்வது அல்ல. நிர்வாகம் செய்வது" என்று கடவுளுக்கே வாய்தா வாங்குவார்கள். சரியான நிர்வாகத்தினரைக்கூட தேர்வுசெய்யமுடியாத கடவுள் உனக்கு என்ன வழியைக் காட்டப்போகிறார்?

திண்ணை மட்டுமல்ல ஆலய மண்டபங்கள் மடங்கள் எல்லாம் அழிந்துவிட்டது. யாரும் எந்த எதிர்பாராத‌ விருந்தினரையும் ஏற்றுக்கொள்ளமுடியாத வாழ்க்கைமுறை.

Wednesday, July 24, 2013

உங்களுக்காக வழிமேல் விழிவைத்து --- கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் பதிவர்/ப்ளசர்களே என் ப்ரியமானவர்களே,

ஜூலை 28 ஞாயிறு (28/07/2013) மாலை 4:30 மணி அள‌வில் ஓம்காரின் பிரணவபீடத்தில் உங்களை எல்லாம் சந்திக்க ஆவலாய் உள்ளேன்.

நோக்கம்:
படமும், எழுத்துமாய் அறிமுகமாகி இன்றுவரை அதே படமும் எழுத்துமாய் இருக்கும் உங்களை எல்லாம் நேரில் காண்பதே. உங்களுக்காக காத்திருக்கிறேன்.

இடம்:
http://pranavapeetam.org/contact.htm

Pranava Peetam Trust
#47, Ponurangam Road(East),
Near Jain Temple.
R S Puram,
Coimbatore 641002.

ஓம்கார் அவர்கள் அவரது ஆன்மீக பயிற்சிவகுப்புகள் தொடர்பாக காலை முதல் மாலை 4 வரை வகுப்பில் இருப்பார். எனவே அவரை போன் போட்டு இம்சிக்காமல் , இந்த இடத்தை பேப்பரில் குறித்துக்கொள்ளுங்கள்.  :))

உங்களுக்காக வழிமேல் விழிவைத்து...

*******
1. சேலம் வைத்தியர் காளிமுத்து , ஊர் ஊருக்கு லாட்ஜ் போட்டு அன்பரகளுக்கு குணப்படுத்துவார். அவர் எப்போது எங்கே என்று தெளிவாக போஸ்டர் அடித்து மதுரை சந்து பொந்துகளில் இருக்கும். தேடிப்போவார்கள் தேவையானவர்கள்.

2. கட்சி தலைவர்கள், வட்டம் மாவட்டங்களில் சொல்லிவிட்டால் எல்லாம் தயாராய் இருக்கும்.

3. பிஸ்கோத்து பிளாக்கர்/ப்ளசரான எனக்கு இருக்க இடம் (மடம்) கொடுத்த சக பிளாக்கர்/ப்ளசர் ஓம்கார் அவர்களுக்கு என் நன்றி.

"இப்படி இப்படி என்ன செய்யலாம்"  என்றவுடன் "எங்கேயும் போகவேண்டாம், இங்கேயே வாருங்கள். மற்றவர்களையும் இங்கே வரச்சொல்லிவிடுங்கள்"  என்று சொல்லி பரசவப்டுத்திவிட்டார் ஓம்கார்.

ஓம்காருக்கும்  எனக்குமான ஆதிகால உரையாடல்களை அறிந்தவர்களுக்கு எங்களின் வெட்டு குத்துகள் தெரியும். ஆனால் அன்பிற்கு உண்டோ அடைக்கும்தாழ்?

#I feel honored

**
மனைவியிடம் சொன்னபோது "இந்த ஆளோட நான் எப்படி குடும்பம் நடத்துகிறேன்" என்ற‌ சொற்பொழிவும் இருக்கும் என்று சொல்லிவிடுங்கள் என்றார்.

பாதி வழியில் இறங்கிக் கொண்ட பயணி


பிறந்த இடம் தாண்டி வேறுமாநிலம் அல்லது வேறுநாடுகளில் வாழும் அனைவருக்கும் எப்போதாவது இது உணர்த்தப்பட்டு இருக்கும். உணர்வது அல்லது பிறரால் உணரவைக்கப்பட்டு இருக்கும். அப்படி இல்லை என்பவர்கள் பாக்கியவான்கள். நீங்கள் இந்தி படங்களின் இறுதி காட்சியில் வரும் கூட்டு குடும்ப நடனம்போல ஆடி மகிழ்ந்துகொள்ளலாம். இது வழியில் இறங்கிக்கொண்ட ஒரு பயணியின் புலம்பல்.

குடும்பத்தைவிட்டு ஓடிவிடவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு யாரும் புலம்பெயர்வது இல்லை. உள்ளூரில் பொருளீட்ட முடியாமல் அல்லது பொருளீட்ட வக்கற்ற நிலையில்தான் அடுத்த ஊர் நோக்கிய பயணங்கள் கனவுகள் தொடங்குகிறது. அப்படி சென்றபிறகு பல்வேறு காரணங்களால் பெயர்த்து நடப்பட்ட மரம்போல,  புதிய மண்ணில் கிடைத்த இடத்தில் வேர்விடத்துவங்கி , கிளைபரப்பி அடுத்து நகரமுடியாமல் ஆகிவிடுகிறது. ஒருவேளை புலத்தில் இருந்து மறுபடியும் பெயர்ந்து பிறந்த மண்ணில் மறுபடியும் பூத்துக்குலுங்கும் சோலைகள் நீங்கள் என்றால்  நீங்களும் பாக்கியவான்கள். நீங்களும் இந்தி படங்களின் இறுதி காட்சியில் வரும் கூட்டு குடும்ப நடனம்போல ஆடி மகிழ்ந்துகொள்ளலாம்.

கல்யாணம் காட்சி , நல்லது கெட்டது என்று வேட்டியை மடித்துக்கொண்டு களம் இறங்கி அன்பு வளர்க்க  ஆசை இருந்தாலும், புலிவாலைப் பிடித்தகதையாக வாழ்வு ஒடிக்கொண்டுள்ளது. 20 ஆண்டுகள் குடும்பத்தில், உறவுகளில் வெறும் தொலைபேசியில் பேசி எந்தவிதமான உறவுகளையும் வளர்த்துவிடமுடியாது எனப்து நிதர்சனம். இடையில் 30 நாட்கள் விடுப்பில் வந்தாலும் சொந்தவீட்டில் விருந்தாளியாகவே நடத்தப்படுவது கொடுமையிலும் கொடுமை.

அம்மா அப்பா கூட அவசரத்திற்கு உதவமுடியாத தொலைதூர பிள்ளைகளின் வெறும் போன் பேச்சுகளால் ஒருவிதபயனும் இல்லை என்பதை அறிந்தே உள்ளார்கள். குடும்பத்தில் நடக்கும் எந்த விதமான கொள்கை முடிவுகள், செயல்கள் என்றாலும் "நீ என்ன 10 நாள் இருந்துட்டு போயிருவ , சும்மா வந்தமா இருந்தமான்னு இரு. நாங்க பாத்துக்கிறோம்" என்று சொல்லி வலிய குடும்ப ஜீப்பில் ஏறினாலும் இறக்கிவிட்டுவிடுகிறார்கள்.

ஒரு பயணத்தின் பாதிவழியில் இறங்கிக்கொண்ட பயணியால், விடுபட்ட பயணத்தை ஒருக்காலும் தொடரமுடியாது. அது மற்றவர்களின் பயணமாகிவிட்டது.

Friday, July 05, 2013

சாதி ,காதல், கொலைகள்,கலாச்சாரம்....புற்றீசல் கருத்துகள்

Image Courtesy www.thelovelyplanet.net
மீபத்தில் நடந்தமுடிந்த சம்பவங்களின் நிழலில், தங்களின் இத்துப்போன கிழிந்த‌ டவுசர்களை உலர்த்தி இன்பம்காண ஆரம்பித்துவிட்டனர் பலர். இதில் மிகவும் பேசப்படும் இரண்டு வார்த்தைகள் கலாச்சாரம் மற்றும் திராவிடம். ஆளாளுக்கு கலாச்சாரம் கெட்டுவிட்டது என்று புலம்பும்முன் , சற்று நிதானித்து, கலாச்சாரம் என்ற சொல் உங்கள் மூளையில் என்ன பிம்பங்களை செதுக்கிச் செல்கிறது என்று யோசியுங்கள்.  உங்கள் மூளைக்கு நீங்களே அதிபதி. உங்களுக்கான விளக்கங்களை நீங்களே சமைத்துக்கொள்ளலாம்.

கலை
கலை (Art ) என்பது வெளிப்படுத்தும் ஒன்று. அதாவது exhibiting   தன்மை கொண்டதுதான் கலை. உள்ளுக்குள் வைத்து புகைந்துகொண்டு இருப்பது கலை அல்ல.

கலாச்சாரம்
கலைகளின் சாரம் அல்லது கலையின் ஆதாரம். என்று எப்படி வேணுமானாலும் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். காசா பணமா? ஆனால் அது எதோ ஒரு பழைய ஆதார மூலத்தைத்தைப் பற்றிக்கொண்டு தொங்கும் ஒரு வார்த்தை என்று நான் நம்புகிறேன்.  இன்று உள்ள ஒரு நிலைக்கு அதற்கு முந்தைய நிலையும் உண்டு என்பது.

பண்பாடு
பண்+பாடு. பண்பட்ட (பதப்படுத்தப்பட்ட) பழக்கங்கள் என்பதுவே பண்பாடு எனப்படுவது.

கலாச்சாரம் அல்லது பண்பாடு

பண்பாடு என்றாலே பழைய பழக்கம். ஏன் என்றால் புதிய பழக்கங்கள்,செயல்கள் பண்பட நாட்கள்/ஆண்டுகள் ஆகும்.

கலாச்சாரம் அல்லது பண்பாடு என்பது இறந்த காலத்தைச் சுட்டுவது. அல்லது நிகழ்காலத்தில் உள்ள ஒரு பழக்கத்திற்கு வேறு ஒரு பழைய வடிவம் இருக்கலாம் என்பதே கலாச்சாரம்.  (விக்கி ஆண்டவர்: The term "culture" appeared first in Europe in the 18th and 19th centuries, to connote a process of cultivation or improvement, as in agriculture or horticulture.)  மற்றபடி அந்த பழைய வடிவத்தை இன்றும் பின்பற்ற வேண்டும் என்பது கலாச்சாரம் அல்ல.  அதன் பொருளும் அதுவல்ல. அப்படி இருந்தால் நாம் இன்னும் கண்ணகிபோல, கோவலன் போல, வள்ளுவன் போல, அதே கால முறைகளில் ஜீவித்து இருக்க வேண்டும்.  நாம் அப்படியில்லை.  சேலையைக் கலாச்சார கம்பளமாக பறைசாற்றும் நாம், இரவிக்கையில் புரட்சிகள் படைத்துக்கொண்டே உள்ளோம் என்பதை மறக்கக்கூடாது.  அதாவது பிடித்த ஒன்றை கலாச்சாரம் என்று தொங்குவதும், காலத்துக்கு ஒத்துவராத ஒன்றை (உம்: தூக்குவாளி) அப்படியே கடாசிவிட்டு நவீனத்து மாறுவதும் (உம்:ஹாட்பாக்ஸ்) அவரவர் வசதி.

மேலும் கலாச்சாரம் என்பது மற்றவர்களின் பார்வையில் இருந்தே தீர்மானிக்கப்படுகிறது.  உதாரண‌த்திற்கு , இன்று நடக்கும் செயல்கள் எல்லாம் ஏதோ புதிய கலாச்சாரத்தை பதியவேண்டும் என்று திட்டமிடப்பட்டு நடப்பவை அல்ல. வாழ்வு அதன்போக்கில் இன்றைய காலகட்டத்திற்கு தக்க எதையோ கிறுக்கிச் செல்கிறது.  இன்று நடப்பவை கலாச்சார உற்பத்தி அல்ல. வெறும் செயல்கள்/நிகழ்வுகள்/படைப்புகள்.......ஆனால் பத்து வருடம் அல்லது 20 வருடம் அல்லது 100 வருடங்கள் கழித்து இதை அறியவரும் ஒரு கூட்டம், இன்று நாம் செய்து கொண்டிருப்பதை அவர்களின்முன்னோர்களின் கலாச்சாரமாகப் பார்க்கும்.

கலாச்சாரமும் பிரபலபதிவர் என்ற கூமுட்டைகளும்
http://kalvetu.balloonmama.net/2010/10/blog-post_13.html

கண்ணுக்கு புலப்படாத கலாச்சாரம், பண்பாடு
http://thekkikattan.blogspot.com/2010/11/template-post.html

  •  கலாச்சாரம் என்பது எப்போதுமே இறந்தகாலம். நிகழ்காலத்தில் அதை அப்படியே பிடித்து தொங்கிக்கொண்டிருக்க முடியாது.
  • அது போல இந்த கலாச்சாரம் அல்லது நிகழ்வுகள் அல்லது பழக்கங்கள் மண்,காலம்,சூழ்நிலை என்று கணம் தோறும் மாறுபவை. 
  • உலகம் முழுக்க ஒரே கலாச்சாரம் அல்லது நல்ல பழக்கம் / கெட்ட பழக்கம் என்று எந்த அளவுகோலும் கிடையாது. 
  • ஜட்டி பிராவுடன் அம்பேரிக்கா பீச்சில் தாத்தா,பாட்டி,குழந்தைகள்,நண்பர்கள்,தோழிகள்..என்று இருப்பது அந்த ஊருக்கு இயல்பானது. குற்றாலத்தில் துண்டைக்கட்டிக்கொண்டு குளிப்பவன் , அவனது கோமணத்தை அளவுகோலாகக்கொண்டு,  இதைத் தவறு என்று சொல்ல இயலாது. 
  • அங்கீகரிக்கப்பட்ட அம்மணக்குளியல் தளங்களும், அம்மண ஓட்டங்களும் அம்பேரிக்காவில் உண்டு. அம்பேரிக்கா மட்டும் அல்ல பட இடங்களில்.
  • இதையெல்லாம் உனது கலாசார அடுப்பாங்கரை அடிஸ்கோலில் அளந்து இது சரியில்லை அது சரியில்லை என்று சொல்லிக்கொண்டிருப்பதால் பயன் ஏதும் இல்லை.
இடம்,காலம்,சுற்றுப்புறம்,தட்பவெட்பம்,தேவை ...இன்னபிற காரணிகளில் அந்த அந்த சமூகம் அதற்கான தேவைகளை தீர்மானிக்கட்டும். உங்களின் கலாச்சார அளவுகோலை உங்கள் சமூகத்திற்கு மட்டும் அளக்க பயன்படுத்துங்கள்.

நீதி:
உங்களின் கலாச்சார சொம்புகள் உங்களுக்கானது அல்லது அதிக பட்சம் உங்கள் ஊருக்கானது / நீங்கள் வாழும் குழுவிற்கானது மட்டுமே. உலகமே அப்படிச் செய்யவேண்டும் என்று எதிர்ப்பார்த்து உயர்வு தாழ்வைச் சொல்லித் திரியவேண்டாம்.

Wednesday, July 03, 2013

எந்த ஓவியனும் கிறுக்கியிராத கோடுகளை ஒரு குழந்தை படைத்துக்கொண்டிருக்கலாம்

Image courtesy http://www.spencerart.ku.edu

டைப்பாளி அல்லது படைப்பு குறித்த தமிழ் இலக்கிய உலகின் வர்ணனைகளை ஒதுக்கிவிட்டு எனது பார்வையாக சொல்கிறேன். நீங்கள் ஏதேனும் ஒரு இலக்கிய மடத்திற்கு நேர்ந்து கொண்டிருந்தாலோ அல்லது "இது இப்படித்தான் இதைத்தாண்டி ஒன்றும் இல்லை" என்று இணைய மொண்ணை வசனம் பேசினாலோ இது உங்களுக்கானது அல்ல. மன்னிக்கவும். "நேற்றுள்ளவை இன்று மாறியுள்ளது, அதுபோல இன்றுள்ளவை நாளை மாறும் , மாறாமலும் போகும் எனக்குத் தெரியாது" என்று நினைப்பவர்களுக்கானது இது.  நான் உங்களுடன் பெஞ்சில் அமர்ந்து பேசுகிறேன்.  உங்கள் முன்னால் சிம்மாசனம் போட்டு செய்யும் போதனைகள் அல்ல இது.  நீங்கள் என்னைப்போல நிச்சயம் தனித்துவமானவர்கள் என்பதில் மாற்று இல்லை.

நான் என்னிடம் வரும் அனைத்தையும் மொத்தமாக விலக்கிவிட்டு , பிறகு தேவையானதை தேடிப் பொறுக்கிக்கொள்வேன். வரும் அனைத்தையும் மொத்தமாக ஏற்றுவிட்டு தேவையில்லாததை விலக்கிவிடும் பாக்கியம் வாய்க்கவில்லை. அதனால்தான் எனது பாத்திரம் எப்போதும் காலியாகவே உள்ளது. காலியாக இருந்தாலும் அதில் விழும் அனைத்து நீர்த்துளிகளும் தங்குவது இல்லை. எதிரொலி போல சிதிறியடிக்கப்பட்டுக்கொண்டே உள்ளது. அப்படி ஏதேனும் தங்கிவிட்டாலும், கொட்டிக் கவிழ்த்துவிட்டு மறுபடியும் தேடி பொறுக்கிக்கொள்ளவே எத்தனிக்கிறேன்.

படைப்பு என்பது சீவிச் சிங்காரித்து வர்ணம் பூசி அழகு படுத்திக்கொள்வது அல்ல. மனிதன் பல வழிகளில் கருத்தைப் பகிர முடியும். ஓவியம், சிற்பம்,எழுத்து,பாட்டு,பேச்சு..இன்றைய மின் வடிவங்கள் என்று பல வழிகள். இவை எல்லாம் ஒரு வகை தொடர்பு சாதானங்கள் (medium) . இந்த சாதனம் வழியாக என்ன சொல்லப்படுகிறது என்பது முக்கியமா இல்லையா என்பதை ஆராயுமுன், இதில் என்னவும் சொல்லப்படலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  "இதுதான், இது இப்படித்தான் , இதைத்தாண்டி சொன்னால்  அது இதுவல்ல"  என்று எப்போது நினைக்க ஆரம்பிக்கிறீர்களோ அப்போதே உங்களின் டவுசரின் ஒரங்கள் உங்களாலேயே கிழிக்கப்பட்டுக் கொண்டுள்ளது என்று அறிக.

சிறந்த இலக்கியவாதி பாக்யராஜ் (What is Literature?)
http://kalvetu.balloonmama.net/2013/02/what-is-literature.html

படைப்பாளன் என்பவன் இடித்துக்கட்டுபவன் அல்லது புத்தம் புதிதாக வேறு வடிவம் கொடுப்பவன். படைப்பு என்பது ஓவியம், சிற்பம், எழுத்து, பாட்டு, பேச்சு.. இன்றைய மின் வடிவங்கள் என்று எதுவாகவும் இருக்கலாம். படைப்பாளி குழந்தை மன நிலையில் (பிடித்ததைச் செய்யும் அடம்) இருந்து கொண்டே,  பெரியவர்கள் சொன்னதை இடித்துக்கட்ட முயல்பவன். ஆனால் அப்படி யாரும் இன்றைய சூழ்நிலையில் வாழ்ந்துவிட முடியாது. பல சமூகக் கட்டுப்பாடுகளுடன்தான் படைப்பாளியும் இயங்க வேண்டியிருக்கும். உடைக்கவே கூடாதவற்றை உடைக்க நினைக்கும்படைப்பாளி ,அதை உடைத்தால் அடைக்கலம் கேட்டு போராட வேண்டியதுதான் வழி.

இன்றைய கால கட்டத்தில் படைப்புக்கு எல்லை இல்லை என்று சொல்ல இயலாது. அது சமூகம் (பெரும்பான்மையினர்) வகுத்த வெளிக்குள் நொண்டிக்கொண்டுள்ளது. படைப்பாளி தன்னால் மக்கள் திரளை உருவாக்க (பெரும்பான்மை) இயலும் என்றால் அவனின் படைப்பு வழிவந்த சமூகம் பெரிதாகி, அது புதுவிதி செய்யும். அறிவியல் படைப்புகள் (கண்டு பிடிப்புகள்) எல்லாம்  பெரிய எதிரிகளை எதிர்கொண்டே வளர்ந்துள்ளது. அப்படி வந்தாலும் காலத்தால் "அழியாமல் இருப்பேன்" என்று சவால் விடாமல்,  புதியவை வரும்போது பழையவை மரணக்குழிக்குள் போய்க்கொள்கிறது.

இடித்துக்கட்டப்படுபவையே படைப்பு. அலங்கரிப்படும் குப்பைகள் அல்ல. அப்படிச் செய்பவனே படைப்பாளி.படைப்பு எந்த தளத்திலும் நிகழலாம். இதுதான் படைப்பு இதைத்தாண்டி இல்லை என்று எதுவும் இல்லை.

இதுவரை எந்த ஓவியனும் கிறுக்கியிராத கோடுகளை தினமும் ஒரு குழந்தை உலகின் ஏதோ ஒரு மூலையில் படைத்துக்கொண்டிருக்கலாம். உடைக்கப்படும் அனைத்தும் அடுத்த ஒன்று உருவாக வழிவகுக்கலாம். இல்லாமலும் போகலாம்.படைப்பு கட்டிக்காக்கப்பட வேண்டியதும் இல்லை தொழப்பட வேண்டியதும் இல்லை. படைப்பு பகிர்ந்து கொள்ளப்படவேண்டியது, நிபந்தனை இல்லாமல் இரசிக்க கொடுக்கப்பட வேண்டியது. அதுபோல இரசிப்பவனை எடைபோடாததும் அதுவே.

Sunday, June 23, 2013

மது, புகை , டேட்டிங் அம்பேரிக்கா டம்ளர் கலாச்சார மொக்கை

 Image Courtesy http://territrespicio.com
த்தனை தடவை புலம்பினாலும் மறுபடியும் மறுபடியும் இதே போன்ற செயல்களைச் சந்திக்க நேரிடுவதால் புலம்பிவைக்கிறேன்.

1.மது அருந்துவது
2.புகை பிடிப்பது
3.டேட்டிங்

இந்த மூன்றிலும் அம்பேரிக்காவில் வாழும் சுத்த ,சுயம்பு , Original கலாச்சார டம்ளர்களின் போக்கு எப்போதும் ஆச்சர்யப்படுத்துகிறது. இவர்கள் எல்லாம் முதல் தலைமுறை அமெரிக்கவாசிகள். பலர் இங்கே படிக்கவந்து டாக்குடராகி பெரிய பதவிகளில் இருப்பவர்கள். பயணம், விழா என்று பல அய்ரோப்பிய வழி அமெரிக்கர்களிடம் பழகுபவர்கள். இவர்கள் அனைவரும் கார்,வீடு,பிட்சா,டவுசர்....என்று அய்ரோப்பிய வழி அமெரிக்கர்களிடம் இருந்து பலவற்றைக் காப்பியடித்து அவர்களின் அன்றாட வாழ்வில் செய்துகொண்டிருப்பவர்கள். இப்படியானவர்கள் கலாஆஆஆச்சாரம் என்ற பெயரில் வீட்டில் இன்னும் கண்ணகிகால கல்சுரவாதிகளாகவே இருக்கிறார்கள். அதில் பெருமையும் கொள்கிறார்கள் என்பதுதான் டம்ளர் கல்ச்சுராத்தின் மேல் வைக்கப்ப‌டும் செர்ரி பழம்.

ஒழுக்கம்:
ஒழுக்கம் என்பது ஒழுகுவது. ஏற்கனவே இறுதிசெய்யப்பட்ட பழக்கங்களை கடைபிடிப்பது. எது ஒழுக்கம்? எதை ஒழுகுவது ? என்பது இடம்,பொருள்,காலம் என்று பல காரணிகளால் கடைபிடிக்கப்படுவது. இதுதான் ஒழுக்கம் என்று உலகம் முழுக்க பொருந்தக்கூடிய எந்த விதியும் இல்லை. மேலும் அது தலைமுறை தலைமுறைக்கு மாறிக்கொண்டே இருக்கும் ஒன்று.
 
மது அருந்துவது.
மது என்பது எது? என்பது தொடங்கி எந்த அளவிற்கு அருந்தலாம்? என்பது போன்றவை மண்டபம் போட்டு பேசக்கூடிய விசயங்கள். மேலும் அவை வாழும் இடத்தில் உள்ள அரசு அமைப்புகளால் தீர்மானிக்கப்படுபவை. குவைத்தில் ஃபாகில் பாண்டியன் அண்ணாச்சி மெஸ்ஸில் இருந்தால் அதிகாரபூர்வ மது தடை. அதே சமயம் அய்ரோப்பிய குடியுரிமையுடன் , சகல மரியாதையுடன் வாழும் மிட்டா மிராசு மேன்மக்களுக்கு  இந்த தடைஎல்லாம் இருப்பதாக தெரியவில்லை.

ok ok ok ...கள்ளுண்ணாமை ப‌ற்றி வள்ளுவர் சொன்னார் என்று சொல்லி கம்பு சுற்ற வேண்டாம். பெய்யனப் பெய்யும் மழை என்றுகூடத்தான் தாடித்தாத்தா சொன்னார். அப்படி என்றால் நம்மூரில் எத்தனை பத்தினிகள் தேருவார்கள்?

அதே திருதாத்ஸ் "சற்றும் சாயாமல் நிமிர்ந்து நிற்கும் இவளின் முலை மேல் கிடக்கும் துப்பட்டா, வெறி கொண்ட ஆண் யானையின் முகம் மீது இட்ட
பட்டாடை போலக் காட்சி தருகிறது"

கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.


என்றுகூட கலக்கி எடுத்திருப்பார் . அவர் சொன்னார் என்பதற்காக, "குன்றென இருக்கும் உன் முலைமீது படர்ந்திருக்கும் சேலை அழகு" என்று தோழிகளிடம் சொல்லி, வாங்கிக்கட்டிக் கொள்ள முடியுமா என்ன? மென்று முழுங்கிவிட்டு, "you have beautiful eyes" என்று மொக்கையாக எதையாவது சொல்லிவைக்கத்தான் முடியும்.  அதாவது எதற்கெடுத்தாலும் பழைய காலங்களில் இருந்து சாதகமான உதாரணங்களை மட்டும் சொல்லித் திரிய வேண்டாம் அவ்வளவுதான். Back to the point...

மாலை வேளைகளில் பல குடும்பங்கள் கூடும் சந்திப்புகளில், பெரும்பாலான டம்ளர் வீடுகளில், மது குப்பிகளுடன் ஆண்கள் கும்மாளமிட்டுக்கொண்டிருக்க , பெண்கள் அவர்கள் பாட்டுக்கு தனி அறையில் (கூடத்தில் ) இருப்பார்கள். ஏதோ குடிப்பது ஆண்களின் ஏகபோக உரிமை, "எங்க ஏரியா உள்ளே வராதே" என்று எழுதப்படதா விதியாகவே கடைப்பிடிக்கிறார்கள்.

உங்கள் வீட்டில் விருந்து என்றால், அது மதுவுடன் கூடியதா என்று சொல்லிவிடுங்கள். மதுவுடன் கூடியது என்றால், உங்கள் மனைவி மது அருந்துவாரா என்று கேட்டு ஆம், என்றால் அவரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். மது அருந்தாத ஆணோ பெண்ணோ அனைவரும் ஒன்றாக இருந்து கலந்து பேசுவதுதான் நல்ல நிகழ்வுகள். அது போல வரும் ஆண்கள், பெண்கள் (பிற‌ரின் மனைவியர்) மது அருந்துவார்களா அவர்களின் விருப்பம் என்ன என்றும் கேட்டுவிடுங்கள்.

ஆண்கள் மட்டும் தனியாகப் போய் குடிக்க வேண்டும் என்றால், ஏதாவது பாரில் உங்களின் சந்திப்பை வைத்துக்கொள்ளலாம். குழந்தைகள் மத்தியில், இன்னும் திருட்டுத்தனம் போல, அல்லது அம்மா,பெண்கள் பங்குபெறாத (விலக்கப்பட்ட) ஒன்றுதான் மது என்று ப‌திய வைக்க வேண்டாம்.

டம்ளர் ஆண்கள் குடிப்பார்கள், அவர்களின் மனைவிமார்களை "குடிக்க விருப்பம் உள்ளதா? விரும்பினால் அவசியம் வா"  என்று சொல்லவே மாட்டார்கள். தொடைகளுக்கு இடையில் மட்டும் அல்ல பெண்ணின் குடலிலும் கவனமாக,  இன்றும் கலாச்சாரம் பேணப்படுகிற‌து ஆண்களால்.

புகை பிடிப்பது.
ஆண்கள் புகை பிடித்தாலும் பெண்கள் புகை பிடித்தாலும் உடல் ஒரே மாதிரிதான் எதிர்வினை செய்யும். பிள்ளையைச் சுமக்கும் பெண்களுக்கு அது  குழந்தையைப் பாதிக்கும். மற்றபடி,   உடல் கேடு என்பது பொதுவானதுதான். அய்ரோப்பிய அமெரிக்க பெண்கள் புகை பிடிப்பதை எல்லாம் பார்க்கிறார்கள். இவர்களும் புகைக்கிறார்கள். ஆனால் டமிள் நாட்டு நடிகை ஒருவர் புகை பிடித்த படம் ஒன்றைப் பார்த்துவிட்டால் பேஸ்புக்கில் பொங்கிவிடுகிறார்கள். கல்சுராத் டம்ளர்கள்.

டேட்டிங்
பெண்ணின் உலகைப் புரிந்து கொள்ள பெண்ணுடன் பழகவேண்டும். வெறுமனே கதைப் புத்தகங்களைப் ப‌டித்து, சில மொக்கை கதைபுக் ரைட்டர்கள் எழுதிய மொக்கை கவிதைகளைப்படித்து, கடல் படம் புரியாதவன் வாழத் தகுதியில்லாதவன் என்று அவர்கள் சொல்லும் அலப்பரைகளை வேதவாக்காகக் கொண்டு குருடன் யானையைப் பார்த்த கதையாக வாழும் நிலைதான் இன்றும் உள்ளது.

திருமணத்திற்கு பின்னால்தான் பெண்ணிற்கும் மனசு உள்ளது, அவளுக்கும் தனியான ஆசை,கோபம்,துக்கம் உள்ளது என்று தெரியவருகிறது. அதுவரை பெண்களை முலையாகவும், தொடைகளாகவும், இடுப்பாகவுமே திரைப்படங்கள் மூலமாக கண்டுவந்த ஒருவனுக்கு, சடாரென்று பெண் உடன் சேர்ந்து வாழ்வது சிக்கலான ஒன்று.

அய்ரோப்பிய அமெரிக்கர்கள் மத்தியில் உள்ளது மிகவும் ஆரோக்கியமான டேட்டிங்.  வீட்டிற்கு வந்து , அப்பாவின் அனுமதி பெற்று,  அருகில் உள்ள மாலுக்கு அழைத்துச் சென்று சொன்ன நேரத்திற்கும் வீடு திரும்ப வேண்டும் என்ற விதிகளுடன் துவங்கும் ஒன்று. உங்களின் டீன் ஏஜ் குழந்தைகளுக்கு நல்ல எதிர்பால் தோழமைகளை ஏற்படுத்திக் கொடுங்கள். டேட்டிங் என்பது திருமணத்தில் முடிய வேண்டியதும் அல்ல. அல்லது தொடைகளுக்கு இடையே ஏதாவது நடந்துவிடுமோ என்று கவனத்தை அங்கேயே வைத்துக்கொண்டு இருக்கும், டம்ளர் திரைப்பட பாணி டான்சும் அல்ல.

சொல்லி வைத்த தேதி, நேரத்தில் இருவர் சந்தித்துக்கொள்ளும் ஒரு நிகழ்வு. அதை எப்படி நீங்கள் உங்கள் குழந்தைக்குச் சொல்லித் தருகிறீர்கள் என்பதில்தான் அது நல்லதாகவும் / கெட்டதாகவும் குழந்தைகளால் உள்வாங்கப்படும்.

மிகவும் கட்டுக்கோப்பாக அனைத்து ஆச்சார குப்பைகளுடன் வளர்க்கப்பட்டு, மேல்நிலைப்பள்ளியில் அதிக மதிப்பெண்கள், கல்லூரிக்காக வைக்கப்படும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள்  வாங்கி கல்லூரியில் சேர்ந்த ஒரு பெண் இப்போது போதைப் பொருள் வழக்கில் சிக்கியுள்ளார். அவர் அப்பா எதிர்பார்க்காதது.

அதற்காக போதைப் பொருளை பழக்க வேண்டும் எனது அல்ல.

சிம்பிள் ஜென்டில் மேன்...

21 வயதில் உங்கள் மகன் உங்களுடன் முதல் பியர் அருந்த வேண்டும் என்றும், 21 வயதில் உங்கள் மகளுடன் ஒயின் சாப்பிட ஆசை என்றும் சொல்லிவிடுங்கள். அவர்கள் உங்களுக்கு தெரியாமல் செய்யும் செயல்கள் குறைய‌ வாய்ப்பு உள்ளது.  குறைந்த பட்சம், மது அருந்துவது, டேட்டிங் போவது ஒரு இமாலயக் குற்றம் என்ற குற்றவுணர்வு இல்லாமல், உங்களிடம் பகிரிந்துகொள்ள ஒரு பாதை கிடைக்கும் அவர்களுக்கு.

அதற்காக குடித்தே ஆக வேண்டும், டேட்டிங் செய்தே ஆக‌ வேண்டும் என்று சொல்வதாக நினைத்து பஞ்சாயத்து செய்ய வந்துவிட வேண்டாம். அதைத் தவறு என்று கற்பிக்காதீர்கள். அவர்கள் விரும்பும் பட்சத்தில் சரியான வயதில் சரியாக செய்ய சொல்லிக்கொடுக்க நீங்கள் தயாராக இருப்பதை அவர்களுக்கு தெரிவித்துவிடுங்கள். அதே போல் நீங்கள் உங்கள் மனைவிமார்களிடம் காட்டும் டம்ளர் கலாச்சாரச் சொம்புகளை அடுத்தமுறை ஊருக்குபோகும்போது உங்கள் ஊர் பஞ்சாயத்து ஆலமரத்தில் விட்டுவிட்டு வாருங்கள்.
.

Wednesday, May 29, 2013

இணையம் குப்பை. நாந்தான் லார்டு லபக்கு - கத புக் வியபாரி & ரைட்டரு காத்தவராயன்

துறை சார்ந்த அறிவு (அறிந்து வைத்து இருத்தல்) என்பது அந்த துறையில் இருப்பவர்களுக்கு இருக்கும். எனக்கு நன்றாக பலூன் பொம்மைகள் செய்யத்தெரியும். அதற்காக எங்கள் கிராம கோவில் திருவிழாவில், பலூன் ஊதி விற்பவரிடம் போய்,  "நான் யார் தெரியுமா? வாழ்நாளில் நீ இப்படி செய்வது உண்டா?"  என்று சவால் விட்டுக் கொண்டு இருக்க மாட்டேன்.  அவரிடம் இருந்து என்ன கற்கலாம் என்றே பார்ப்பேன். என்னை அவர் தெரிந்திருக்க வேண்டிய தேவையே இல்லை. ஒருவேளை அவர் என்னை தெரிந்து,  என்னை கேவலப்படுத்த கேள்விகள் கேட்டால்கூட அவரை வெற்றி கொள்ளவேண்டும் என்று எண்ணம் வராது.

ஏன் என்றால், ஊதுவது பலூன் என்றாலும், இடம் பொருள் பார்த்து அவர் செய்யும் தொழில் நுட்பங்கள் என்னைவிட சிறப்பாகக இருக்கலாம்.

****

இணையத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறேன். பிரிண்டட் அண்டு பைண்டட் கதை புத்தக வியபாரிகள், பிளாக்கர்கள் ஆக அவதாரம் எடுக்கும் முன்பே என்னைபோல பலர் இங்கே இருக்கிறார்கள்.  100 பேர் படிக்கும் பத்திரிக்கைகளுக்கு எழுதிக்கொண்டு இருந்த இந்த கிணற்றுத்தவளைகள் சொன்னது,(சொல்வது)  அவர்களின் பக்த கோடிகளுக்கு வேண்டுமானால் ஆச்சரியமாக இருக்கலாம்.

இணையத்தில் அனைவரும் கருத்து கந்தசாமிகள். எதையும் பீடம் சொல்லி தெரிந்துகொள்ள வேண்டிய நிலையில் யாரும் இல்லை. இணையத்தில் பத்தோடு பதினொன்றாகத்தான் இருக்க முடியும். இதை தாங்க முடியாமல் "இணையம் குப்பை. நாந்தான் லார்டு லபக்கு" என்று சொன்னால் , பஜனை மடங்களோடு உங்களின் சேவையை நிறுத்திக்கொள்ளலாம்.

****

உன்னை சாமான்யனுக்கு தெரியவில்லை. அதனால சாமான்யன் முட்டாள் என்று குற்றம் சாட்டிக்கொண்டிருக்காமல் , சாமான்யன் உன்னைத் தெரிந்து வைத்துக்கொள்ளும் அள‌வில் நீ என்ன செய்ய மறந்தாய் என்று பார். இல்லை என்றால் உனது பீடங்களின் அடியில் மண்டியிட்டுக்கிடக்கும் அடிமைகளிடம் மட்டும் பேசலாம்.  இணையப் பக்கம் வரவேண்டாம்.

****

இந்த இலக்கியவியாதிகள் 40 ஆண்டுகளாக இயங்குகிறார்கள் என்று கொள்வோம். இதுவரை இவர்களால் சமுதாயத்தில் ஒரு கருத்து மாற்றைத்தைக்கூட கொண்டுவரமுடியவில்லை. மாற்றங்களைக் கொண்டுவருபவர்களைத்தான் மக்கள் நினைவில் கொள்வார்கள். (பெரியார், கலைஞர், காமராசர்....)

உங்களின் கதைப் பொஸ்தகங்கள் 1000 பேர் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வந்தால் அது சமூக மாற்றம் அல்ல. அதன் வீச்சு அவ்வளவுதான். பொழுதுபோக படித்துவிட்டு, அதை விவாதிக்க மண்டபம் கட்டி பேசிக்கொன்டு இருக்கலாம். பூனை டாக்டர் கதையை படித்த 6 ஆம் வகுப்பு மாணவன்  "என்ன இது 50 % ஆங்கில வார்த்தைகளா உள்ளதே" என்று துப்பி விட்டான். ஒரு மாணவியின் பெற்றோர்கள் "நல்ல தமிழ் கதையா குடுங்க. இதில் பாதி ஆங்கிலமாக இருக்கு" என்று மகளை படிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.  பாலைவன மனிதன் நல்லா இருக்கு என்று சொல்கிறார்கள். ஆனால் கதையைப் படித்துவிட்டு ஆசிரியருக்கு கடிதம் எழுதும் குழந்தைகள் இவர்கள். இப்படி தற்பெருமை தம்பிரான்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டுமா என்று கவலையாக உள்ளது.

****

கதைப் புத்தகங்கள் எழுதுவதால் நீங்கள் எல்லாம் தெரிந்தவர் அல்ல. அது போல கதபுக் எழுதும் வேலை செய்வதால் நீங்கள் யாரைவிடவும் குறைந்தவரும் அல்ல.  நீங்கள் எழுதிய "பீ" கதைக்கு பீடம் விருது கொடுத்துவிட்டார்கள் கொடுத்துவிட்டார்கள் என்பதற்காக , கக்கூஸ் காவலாளியிடம் அறிவுசார் விவாதங்கள் நடத்தி , "நாந்தான் லார்டு லபக்கு"  என்று சொல்லி அலைய வேண்டாமே.

குளத்தை விட்டு வந்தால் முதலையும் மொக்கைதான்.



இப்படி பலபேர் இருக்காங்க.....
பாஸ்போர்ட்' மருதன் வெளியிடாத பின்னூட்டம்
http://etamil.blogspot.com/2009/01/blog-post.html

ஹாய் மதனுக்கு ஒரு பகிரங்கக கடிதம்
http://www.varalaaru.com/default.asp?articleid=482

**

Friday, April 05, 2013

பழமைக்கு திரும்பவே முடியாத தூரத்தில்


 தல நாற்று
---------------
நாற்று நடவு காலங்களில், வரப்புகளிலும், வயலை ஒட்டிய சின்ன சாலைகளிலும் தல நாற்று என்ற ஒன்றை (ஒற்றை நாற்றுக்கட்டு) வைத்து , அந்த வழியே போவோவரிடம் காசு கேட்பார்கள், நடவுப் பெண்கள்.

மாமா , மச்சான், கொழுந்தியா கிண்டல்கள் சத்தமாகப் பேசப்படும்.அதுவும், கொழுந்தியா, அத்தை மகள் வகையறா முறைப்பெண்கள் இருந்துவிட்டால் அவ்வழியே செல்லும் ஆண்களுக்கு திண்டாட்டம்தான்.

காசு போட்டால் பெண்களின் குலவை ஒலி இலவசம். நன்றாக தெரிந்தவர்கள் வந்தால் கண்ணில் பட்டவுடன் குலவை ஒலியை தொடங்கி விடுவார்கள். காசு போடாமல் நகர முடியாது. பைக்கில் போகும் மைனர்கள் அதிக காசு போடுவார்கள்.

சின்ன வயதில் காசு இல்லை போடுவதற்கு. இப்போது ஒவ்வொருமுறை ஊர் போகும் போது யாராவது கேட்க மாட்டார்களா என்று இருக்கும். வயல்கள் அழிந்த நிலையில் , கேட்பதற்கு யாரும் இல்லை.

என் சின்ன வயது அத்தைகளும், அக்காமார்களும், பாட்டிமார்களும் மட்டுமே கனவாக வந்து போகிறார்கள்.

கமலை
------------
புன்செய் நிலங்கள் மோட்டார் தோட்டமாக மாறுவதற்கு முன், கமலை மாடுகள் பூட்டி நீர் இழுக்கும் கமலைகளின் பெரிய அண்டா போன்ற பாத்திரமும் (தக‌ரத்தில் செய்யப்பட்ட ஒன்று) அதன் வாய்ப்பகுதியில் இருக்கும் தோல் பையும் இன்னும் கண்ணில் இருக்கிறது. இழுத்த தண்ணீர் மேலே வந்தவுடன், அண்டாவைக் கவிழ்ப்பது போல செய்ய , இழுக்கும் கயிற்றில் ஏறி உட்கார்ந்து கீழ்நோக்கி அமுக்க வேண்டும். ஒரு வாகாக உட்கார்ந்து செய்ய வேண்டும்.

உறவு வழித் தாத்தா ஒருவர், கமலை இறைக்கும் அழகைப் பார்த்து நானும் கமலை இறைக்க வேண்டும் என்று அழுது அழிச்சாட்டியம் செய்த காலங்கள் நினைவில் வந்து போகிறது.

தேவையற்றுப் போய்விட்ட திறன்களால், மனிதர்களும் மண்ணும் தேவையற்றுப்போய் விட்டது.

கட்டை வண்டி
---------------------
கட்டை வண்டிக்கு சக்கரம் செய்து, இறுதியாக பட்டை போடுவார்கள். இரும்பாலான பட்டை. சக்கரத்தின் அச்சு செய்வது முதல், ஆரங்களை ஒவ்வொன்றாகச் செய்து சக்கரம் கோர்ப்பது ஒரு கலை. ஒரு கட்டை வண்டி உருவாகும் ஒவ்வொரு நிலைகளையும் பள்ளி செல்லும் வழியில் இருந்த தச்சர் ஒருவரின் வீட்டில் கண்டிருக்கிறேன். வில்லு வண்டி வைத்து இருந்த உறவு வழித்தாத்தா ஒருவர், தச்சரின் நண்பர். தாத்தாவின் வண்டித் தேவைகள், ஏர், பரம்பு, என்று எல்லாவற்றையும் செய்து தருபவர் இவர். பல நேரம் அவர் பட்டரையில் உட்கார்ந்து பொழுதைப் போக்கியுள்ளேன்.

கட்டை வண்டி , டயர் வண்டியாக மாறி, ட்ராக்டர் + ட்ரக் ஆக கண்முன்னே மாறி பழமை ஒழிந்துவிட்டது. அருகில் இருந்த கரும்பாலையும், வயலும், கட்டைவண்டி செய்யும் தொழிலும் மாறி மாறி இன்று எதுவும் இல்லை.

*****

பழமைக்கு திரும்பவே முடியாத தூரத்தில் இருக்கிறேன். கனவும் நினைவும் மட்டுமே எச்சங்கள்.

Monday, March 11, 2013

லயோலா கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதம்

ரண்டு நாடுகள் மோதிக்கொள்ளும் இராணுவப் போரில் அதிக உயிர்களை அதாவது அதிக  எதிரிநாட்டு உயிர்களைக் கொன்று வாகைசூடும் நாடு வெற்றுபெற்றதாகக் கருதப்படும். அதுதான் அதன் வடிவம் விதிகள். அதுபோல உண்ணாவிரத போராட்டம் என்பதற்கு ஒரு வடிவம் உள்ளது. இதில் உண்ணாநோன்பு இருப்பவரின் நிலை தோல்வியை நோக்கியே.  எப்போதும் அவருக்கு தோல்வி அல்லது சாவு மட்டுமே நிரந்தரம். அந்தப்போராட்டம் வெற்றிஅடைவது என்பது அவரின் கையில் இல்லை , அவர் யாரை நோக்கிப்போராடுகிறாரோ அவரின் கையில் உள்ளது.

ஆனால் இந்தப் போராட்டவடிவத்தில் ஒரு குறைந்தபட்ச எதிர்பார்ப்பு உள்ளது. அதுதான் பேச்சுவார்த்தை. எதிர்தரப்பு பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தால்கூட அது ஒரு அடையாள வெற்றிதான். காந்தி ,திலீபன், அன்னாகசாரே , இராம்தேவ் என்று இதுவரை நடந்த போராட்டங்கள் எல்லாம் அடுத்த தரப்பை பேச்சுவார்த்தைக்கு இணங்க வைக்கும் ஒரு உத்தி. அதாவது தன்பால் ஒரு இரக்க‌த்தை அல்லது அனுதாபத்தை பொதுமக்கள் மத்தியில் வரவைத்து, அதன்மூலம் அதனது கோரிக்கைகளுக்கு வலுச்சேர்த்து எதிர் தரப்பை பேச்சுவார்த்தைக்கு வரவைக்கும் ஒரு போராட்டம்.

இந்தகைய‌ போராட்டங்கள் எப்போதும் போராடுபவனால் வெற்றி பெறாது. மாறாக யாரை நோக்கி போராட்டம் செய்யப்படுகிறதோ, அந்த தரப்பு மனது வைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். காந்தியின் போராட்டங்கள் வெற்றி என்று சொல்லித்திரிவது காந்தியின் வெற்றி அல்ல. எதிர்தரப்பில் இருந்த பிரிடிஷ் தரப்பு அந்த போராட்டங்களை மதித்து ஏதோ செய்தத்தால் கிடைத்த வெற்றி. திலீபன் விசயத்தில் அவர் யாரை நோக்கி போராட்டம் நடத்தினாரோ அந்ததரப்பு ஒன்றும் செய்யவில்லையாதலால் அவரின் போராட்டம் தோல்வியில் முடிந்தது.

உண்ணா நோன்பு போன்ற எளிய போராட்டங்கள் ஒரு சாதாரண மனிதனால் சட்டென்று செய்துவிடக்கூடிய ஒன்று. அதிக பண பலமோ ஆள்பலமோ தேவை இல்லை. அதனால்தான் அந்த வடிவம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது. ஆனால் இத்தகைய போராட்டங்கள் மனிதாபிமானம் உள்ளவர்களை நோக்கி செய்யப்படும்போதுதான் , குறைந்த பட்ச பேச்சுவார்த்தையாவது சாத்தியம். மனசாட்சியற்ற அதிகார வர்க்கங்களை எதிர்த்து செய்யப்படும் உண்ணா நோன்பு போராட்டங்கள் நசுக்கப்படும்.

மீபத்தில் நடந்த லயோலா கல்லூரிமாணவர்களின் போராட்டம் என்பது, தங்களின் நிலையை உலகுக்கு உரக்கச் சொல்லத் தவிக்கும் மாணவர்களின் போராட்டம் என்பதால் நான் ஆதரித்தேன். இப்படி போராடுவதால் என்ன கிடைக்கும்? உனது மகனை அனுப்புவாயா? என்று கேட்கும் கேள்விகளுக்கு ஒரு வரியில் பதில் சொல்லிவிடலாம். ஆனால் சிலவற்றை விளக்கவேண்டிய தேவை உள்ளது.

அவரவர் கட்சிக்கு நேர்ந்துவிட்டுக்கொண்ட அடிமைகள் சில உண்ணாவிரதங்களை நினைவில் கொள்ளவேண்டும்.

1. ஈழத்தில் போர்நிறுத்தம் வேண்டி லஞ்ச்பிரேக் உண்ணாவிரதம் இருந்தவர், என்ன சாதித்தார் அந்த உண்ணாவிரதத்தால்? கடைசியில் மழை நின்றாலும் தூறல் விடவில்லை என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.

2. காவிரி நீர்வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தவர், என்ன சாதித்தார் அப்போது அந்த உண்ணாவிரதத்தால்?

இவர்கள் இருவரும் தாங்கள் முதலமைச்சர் பதவியில் இருந்தபோது சகல வசதிகளுடன் உண்ணாவிரதம் இருந்தார்கள். இப்படியான வரலாறு கொண்ட கட்சி முதாலாளிமார்களின் அடிமைகள் இன்று லயோலா கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதத்தை கொச்சைப்படுத்துகிறார்கள்.

த‌லைமை சொன்னால் சட்டையை மாற்றுவது, வள்ளுவர் கோட்டத்தின் முன்னால் கூடுவது போன்ற செய‌ல்களைச் செய்கிறீர்கள். மேலும் மண்சோறு சாப்பிடுவது, தேர் இழுப்பது, காலில் விழுவது , பேரன் பேத்திகளின் இரசிகர் மன்ற நிர்வாகிகளாக இருப்பது என்று நீங்கள் செய்யும் எல்லா அடிமைச் செயல்களுக்கும் , பதவி என்ற பிஸ்கெட்டுகள் அல்லது ஏதோ ஒரு சுயஇலாபம் என்ற பொறைகளே அடிநாதமாக இருப்பதை மறக்க வேண்டாம்.

ஆம் ஒத்துக்கொள்கிறேன் குறைந்த பட்சம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பண்பிலா தேசத்தில், உண்ணாவிரதம் என்பது கேலிப்பொருளே. எதிர்தரப்பு அகிம்சைவாதிகளாக இருந்தால்தான் இத்தகைய அகிம்சை போர்கள் அவர்களின் மனதில் வலியை ஏற்படுத்தும். இல்லாவிட்டால் இப்படியான கைதுகளில்தான் முடியும். அல்லது ஒட்டுமொத்த கல்லூரிகளுக்கும் விடுமுறை கொடுத்து நசுக்கப்படும்.

ஓட்டுப்போடும் வயது வந்த இளைஞர்கள் , அவர்கள் நம்பும் பிரச்சனைக்கு இப்படியான போராட்டங்களை நடத்துவதை வரவேற்க வேண்டும். வேறு என்ன போராட்ட வடிவம் உள்ளது இந்தியா ஜனநாயகத்தில்? 10 பேர் கூடி கோசம்போடுவதால் கவன ஈர்ப்பு வரப்போவது இல்லை. தேர்தல் முறையில்தான் வெல்ல வேண்டும் என்றால், நல்ல தலைவர்கள் வேண்டும்.தேர் இழுப்பது , மண்சோறு சாப்பிடுவது போன்ற அடிமைகளின் இயக்கத்தில் நல்ல தலைவர்களை எங்கே தேடுவார்கள் இவர்கள்?

ஆம் 18 வயதிற்குப்பிறகு எனது மகன் அல்லது மகள் இத்தகைய சமூகப்பிரச்சனைகளில் இப்படியான போராட்டங்களைச் செய்தால் நான் ஆதரிப்பேன். மறந்துவிடாதீர்கள் , உண்ணாவிரதம் இருந்த லயோலா கல்லூரிமாணவர்களுக்கும் பெற்றோர்கள் உண்டு. அவர்கள் மனது பாறை அல்ல. ஆம் வலிக்கும் வலிக்கத்தான் செய்யும்.

பதவிக்காக சட்டையை மாற்றுவது அல்லது தேர் இழுப்பது அல்லது மண்சோறுசாப்பிடும் பிள்ளை இருந்தால்தான் வெட்கப்படுவேனே தவிர இப்படியான பிள்ளைகள் இருந்தால் பெருமைதான்படுவேன்.

மறந்துவிடாதீர்கள் லயோலா கல்லூரி மாணவர்களாவது கைது செய்யப்பட்டார்கள். உங்களின் தலைவர்கள் வெற்றி வெற்றி என்று அவர்களாகக் கூவிக்கொண்டு அவர்களாகவே எழுந்துபோனார்கள்.

.

Thursday, February 21, 2013

இறந்த அனைத்து குழந்தைகளுக்கும் சாட்சியாய் இவன்

ப்பனின் அரசியல் நிலைப்பாடுகளுக்காக சின்னப்பிள்ளைகளை இப்படி ஆற அமர உட்கார வைத்து பிஸ்கெட் கொடுத்து குளோஸ் ரேஞ்சில் (close range) கொல்வதற்கு வன்மங்களால் நிரம்பி வழியும் கொடுமனம் கொண்டிருக்க‌ வேண்டும். இப்படியான ஒரு சாவிற்குப்பதில் ,வானில் இருந்து பொழிந்த எண்ணற்ற குண்டுவீச்சுகளில் ஏதோ ஒரு ஒன்றில் அழிந்துபோன, முகம் பதிவுசெய்யப்படாத எண்ணற்ற குழந்தைகளில் ஒன்றாக சேர்ந்து இறந்திருக்கலாம் இவன். அப்படியான கூட்டுக்கொலை தருணங்களிலாவது பற்றிக்கொண்டுசாக ஏதோ ஒரு கரம் கூடவே இருந்து இருக்கும். சாகும்போதான‌ தனிமை , அதுவும் இப்படியான ஒரு நிலைமை , அதுவும் குழந்தைகளுக்கு கொடியது. அமெரிக்காவில் சமீபத்தில் ஒரு பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் இப்ப‌டித்தான் குளோஸ் ரேஞ்சில் வைத்து சுடப்பட்டார்கள். http://en.wikipedia.org/wiki/Sandy_Hook_Elementary_School_shooting

குழந்தையைப் பறி கொடுத்த ஒரு தாய் சொன்னது  "....எனது குழந்தை சாகும்போது அவன் ஆசிரியரின் கையைப் பிடித்துக்கொண்டே இறந்துள்ளான். என் குழந்தை தனியாக இருக்கவில்லை. அந்தக் கொடுமையான தருணத்தில்கூட அவனை அணைக்க ஒரு கரம் இருந்துள்ளது. அதை நினைத்து கொஞ்சம் ஆறுதலாக உள்ளது....." என்று சொன்னார். (அந்தக் குழந்தையுடன் அந்த ஆசிரியையும் இறந்துகிடந்த கோலத்தைப் பார்த்து காவல் அதிகாரிகள் அந்த அம்மாவிற்கு சொல்லியுள்ளார்கள்.)

ஆம் கொடுமையாக நடத்தொழிக்கப்பட்ட இனப்போரில் இறந்துபோன எத்தனையோ குழந்தைகளில் இவனும் ஒருவன். இவனின் அப்பா தலைமை பொறுப்பில் இருந்தார் என்பதற்காக இவனின் இறப்பு எந்த சிறப்பான தகுதியையும் பெற்றுவிடவில்லை. ஆனால், இவனின் அப்பா தலைமை பொறுப்பில் இருந்த ஒரே காரணத்திற்காக, நிறுத்தி நிதானமாக இவன் கொல்லப்பட்ட விதம் புகைப்படமாக வெளிவந்தவுடன் மனதைப் பிசைகிறது. "சித்திரவதைப்படுத்தாமல் விட்டார்களே" என்று எண்ணினால்கூட, குழந்தைகள் உலகத்தைப் புரிந்துகொண்டவர்களுக்கு இந்தக் காட்சிகள் சொல்லும் கதைகள் மனதை அறுக்கும். எளிதில் கடந்துபோய்விட முடியாத ஒன்று இந்தக் காட்சி.
போரில் இறந்த அனைத்து குழந்தைகளின் கொலைகளுக்கும் சாட்சியாய் இவன். இவனின் அப்பாவித்தனம் மனசைப் பிசைகிறது.


J
allianwala Bagh - யும் Holocaust -யும் அறிந்து வைத்துள்ள நாம், இன்று நம் கண்முன்னால் முள்ளிவாய்க்காலை மையமாகக் கொண்டு நடந்தேறிய கொடூரங்களை எந்த அளவு அறிந்துள்ளோம்? தமிழனாய் பிழைத்திருப்பது (Survival) முக்கியமல்ல. தமிழனாய் உணர்வதும் (Feel) வாழ்வதும்  (Living) முக்கியம். எத்தகைய கொடூரங்கள் நடந்தாலும் தின்று செரித்துவிட்டு வாழ்ந்துகொண்டு இருக்கும் ஜடங்களாய் ஆகிவிட்டோம் நாம். ஆம், தனி மனிதர்கள் ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான் நிதர்சனம்.நாம் அனைவரும் நம்மீது எறியப்படும் கல்லின் அளவிற்கு ஏற்ப முனகும் சாமானியர்கள். கற்கள் நம்மீது வந்து விழாதவரை கவலைப்படுவது இல்லை. ஆசிரியர்கள் ஒரு சமூக அங்கமாக இருந்தாலும் , அவர்களுக்கான பிரச்சனைகளுக்கு அவர்கள் மட்டுமே குரல் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். விவசாயிகள் சமூகத்தின் ஆதரமான சக்தியாக இருந்தாலும் , எலிக்கறி தின்று கொண்டு நாசமடைந்தாலும் அது "டெல்டா விவசாயிகளின் பிரச்சனையாக" மட்டுமே வந்துபோய்க்கொண்டு இருக்கும். நெசவுத் தொழில் சீரழிந்து கஞ்சித்தொட்டிகள் வைக்கப்பட்டாலும் , அந்த நிகழ்வு அவர்களின் பிரச்சனையாக மட்டுமே ஆராயப்படும். தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டங்களுக்கு பிறகு மக்கள் சேர்ந்து நடந்திய எந்த பெரிய எதிர்ப்புகளும் இதுவரை இல்லை.

ப்படியான பொதுசன‌ங்களைக் குற்றம் சொல்லவும் முடியாது. ஏன் என்றால் மனிதர்களில் இந்த நடுத்தரவரக்கம் (பணத்தில் அல்ல குணநலன்களில்) தேங்கிப்போன ஒரு குட்டை. இவர்களின் தேடல் பயணம் நின்று நெடுநாளாகிவிட்டது. குளம் குட்டை போன்ற நீர்நிலைகள் தன் மீது கொட்டப்படும் நீரை வைத்து பிழைத்துக்கொண்டு இருக்கும். பயணம் (தேடல்) இருக்காது. சாக்கடை வந்து சேர்ந்தாலும் அமைதியாய் இருக்கும். இத்தகைய குளங்கள் கல்லெறியப்படும்போது மட்டுமே கலங்கும். அப்படி கலங்கும் போது வரும் அலைகள்கூட கரையைத்தொடாது. எறியப்படும் கல்லின் அளவைப் பொறுத்து உண்டான அலைகள் நடுவில் நின்றுவிடும். நம் போன்றவர்கள் இத்தகைய குளம். தேங்கிவிட்டவர்கள். கல்லெறியப்படும்போது நம்மால் முடிந்த அலைகளை எழுப்பிவிட்டு அமைதியாகிவிடுகிறோம். அசிங்கமாய் இருந்தாலும் அதுதான் நிதர்சனம் என்பதில் எனக்கும் வெட்கம் உண்டு.

பொது மக்கள் என்று சொல்லப்படும் ஒரு பிரிவு எந்தப் பிரச்சனைகளுக்கும் கொந்தளித்ததாக தெரியவில்லை. ஆனால் சமீபத்தில் "அன்னா கசாரே" ஊழல் எதிர்ப்பு பேரணிகள் மற்றும் "டெல்லி பெண்ணின் வண்புணர்வு கொலைக்கு" எதிராக ஒரு புதிய கூட்டம் தெருவிற்கு வந்து குரல் கொடுத்தது. நிச்சயம் ஆதரிக்கப்படவேண்டிய ஒன்று இவர்களின் போராட்டம்.  இவர்கள் யார்? எங்கே வாழ்கிறார்கள்? இவர்களிடம் எப்படி மற்ற பிரச்சனைகளையும் கொண்டு சேர்ப்பது? விவசாயி, ஆசிரியர், நெசவாளி போன்ற பொதுப்பிரச்சனைகளில் இவர்களையும் எப்படி பங்கு கொள்ள வைப்பது? என்று எனக்கு தெரியவில்லை. இவர்கள் மின்னல் போல வந்துவிட்டு போய்விடுகிறார்கள். இவர்களின் உணர்வுகளை ஒரு சில ஊடக தந்திரங்களால் மட்டுமே தட்டி எழுப்ப முடிகிறது. சொந்த சகோதரன் அவனது பிரச்சனையை முன்னிருத்தி அற‌வழியில் போராடினாலும் , கூடங்குளம் பிரச்சனையை அது ஒரு என்ஜிஓ பிரச்சனை என்று சுலபமாக கடந்து செல்ல முடிகிற‌து இவர்களால். ஒரு சின்ன நீர்க்குமிழிக்குள் வாழும் இவர்களின் செயல்பாடுகள் வெகுசன ஊடகங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. "எதற்காக மட்டும் குரல் கொடுக்கலாம்?" என்பதை இவர்கள் பார்க்கும் செய்தி ஊடகமும் அது திணிக்கும் செய்திகளுமே தீர்மானிக்கிறது.

ழம் என்றாலே எதோ தமிழர்கள் அவர்களாக விரும்பி விளையாடும் விளையாட்டு எனவும், அவர்கள்தான் முதல் குற்றவாளிகள் எனவும் இத்தனை காலமமாக சித்தரித்து வந்த இந்து பத்திரிக்கை அதன் லங்க ரத்னா அவார்ட் வின்னர் இராமின் தலைமைக்குப்பிறகு , ஏன் இப்போது இதைச் செய்தியாக்குகிறார்கள்? http://www.thehindu.com/opinion/op-ed/the-killing-of-a-young-boy/article4428792.ece  ஒருவேளை இப்போதுதான் இவர்களுக்கு இலங்கையின் செயல்பாடுகள் தெரியவருகிறதா? அல்லது இப்போதுதான் தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டார்களா?

த்திரிக்கைகளின் ஆதரவு எதிர்ப்பு நிலைகளைத்தாண்டி தமிழகத்தில் உள்ள முக்கியமான கட்சிகளின் அரசியல் நிலை என்னவென்று தெரியவில்லை. இத்தைகைய சூழலில் மக்கள் தேர்ந்தெடுத்த அதிகாரமும் ஆட்சியும் தான் இறுதி நம்பிக்கை. அரசியல் கட்சிகளும் , அதிகார மையங்களும் பேராறு போன்ற திறன் கொண்டவை. எப்போதும் சலசலத்து பயணித்துகொண்டே இருக்கும். இறுதியில் தன்னை அழித்துக்கொள்ளவும் செய்யும். அப்படித்தான் கடந்த காலத்தில் ஒரு சில அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும், மக்கள் இயக்கங்களும் சமூக மாற்றங்களுக்காக போராடின. ஆனால் இன்று அப்படியான அரசியல் கட்சிகளோ தலைமையோ இல்லை. பேராறு போன்ற திறன் கொண்டு போராடவேண்டிய இயக்கங்களே குளமாகிவிடும்போது அனைத்தும் தேங்கிவிடுகிறது.

ந்தச் சிறுவனின் அப்பாவி முகத்தையும், அதற்கு அடுத்த படத்தில் அவன் இறந்துகிடக்கும் காட்சியைப் பார்த்த பலரும் நெஞ்சு துடித்து தத்தம் அளவில் வருத்தத்தை பதிவு செய்து கொண்டு இருக்கும்போது (காங்கிரஸ் கட்சி) அரசு வெளியுறவு அமைச்சர் "சல்மான் குர்ஷித்" அவர்கள் இப்படியான ஒரு செய்தியைச் சொல்கிறார்.
1. இலங்கை நமது நட்பு நாடு, அண்டை நாடு,முக்கிய நாடு, நல்ல நண்பர்கள்.
2. சமீபத்தில் வெளியான புகைப்படங்கள் குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது. அது நம்பகமானதா என்பதை சொல்ல முடியாது.

http://tamil.oneindia.in/news/2013/02/20/india-prabakaran-son-death-lanka-defiant-india-cautious-170162.html
து எப்படி இருக்கிறது? இவர்கள் எந்த மனநிலையில் இருந்து பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. மிகவும் வருத்தமாக உள்ளது. சரி இவர்கள்தான் இப்படி எங்கோ இருக்கிறார்கள் தமிழரகளின் உணர்வு தெரியவில்லை என்று விட்டுவிடலாம். ஆனால் , போர் நடந்துகொண்டு இருக்கும்போது அதிகாரத்தில் இருந்தவர் என்ற முறையில் கலைஞ‌ரின் செயல்பாடுகள் எனக்கு உவப்பானதும் அல்ல. பெரும்பகுதிகடற்கரை பகுதியை மாநில எல்லையாகக்கொண்ட அதுவும் தனது எல்லையில் அடுத்த நாட்டைக்கொண்டுள்ள தமிழகத்திற்கு வெளிவிவகாரங்களில் அதிக பொறுப்பு உள்ளது. கலைஞர் வர்களுக்கு அது நன்றாகே தெரியும். மேலும் அவர் மாநில அரசின் அதிகாரத்தின் எல்லைகளை அறிந்தவர். நிர்ப்பந்தங்களை எபப்டி கொடுக்கலாம் என்பதை அறிந்தவர். ஆனால் அவர் அதை செயல்படுத்த முனையவில்லை. முள்ளிவாய்க்கால் போர்க்காலத்தில் ஏன் அவர் அப்படி பட்டும்பாடாமலும் நடந்துகொண்டார் என்று வரை எனக்கு விடை தெரியவில்லை. "ஈழத்திற்காக நிறைய செய்துவிட்டேன் இனிமேலும் இழக்க முடியாது என்று சொல்லிவிடலாம். யாரும் கேட்கப்போவது இல்லை. ஆனால், ஒருபுறம் டெசோ போன்ற கூட்டங்களை நடத்திக்கொண்டும், மறுபுறம்  "கொள்கைகள் ஒத்து இருப்பதால்தான் கூட்டணி தொடர்கிறது" என்றும் கலைஞர் சொல்கிறார்.
"கொள்கை மாறுபாடுகள் ஏற்பட்டாலொழிய நாங்கள் கூட்டணியிலிருந்து விலகுவதில்லை"
http://tamil.oneindia.in/news/2012/09/22/tamilnadu-will-not-quit-the-upa-haste-karunanidhi-161888.html
லங்கை விசயத்தில், காங்கிரசின் கொள்கையும் , திமுகவின் கொள்கையும் போர்க்காலத்தில் ஒத்து இருந்ததால்தான் போர்க்காலத்தின்போது கூட்டணி முறியவில்லை.கொள்கை மாறுபட்டிருந்தால் கலைஞர் நிச்சயம் கூட்டணியைத் தொடர்ந்து இருக்கமாட்டார். ஏன் என்றால் "கொள்கை மாறுபாடுகள் ஏற்பட்டாலொழிய நாங்கள் கூட்டணியிலிருந்து விலகுவதில்லை" என்று அவரே சொல்கிறார். இதுதான் எனது புரிதல். ஈழவிசயத்தில் கலைஞரின் நிலைப்பாடுகள் குழப்பமாக உள்ளது என்பதால்தான் அவரைக் கேள்வி கேட்க வேண்டியுள்ளது. "டெசோ" போன்ற விளையாட்டுகள் இல்லாமல், "நாங்க அப்ப ஆதரிச்சோம் பல இழப்புகள்,  இப்ப கொள்கை மாறிட்டோம்" என்று ஈழ வியசத்தில் தெளிவாகச் சொல்லிவிட்டால் திமுக நிலைப்பாடுகளை கேள்வி கேட்காமல் விட்டுவிடலாம். துக்ளக் "சோ" போன்றவர்களை ஏதும் கேட்பதில்லை. ஏன் என்றால் அவர்களின் நிலைப்பாடுகள் உள்ளங்கை பூசணிக்காய் போன்றது. ஆரம்பகாலம் முதல் அவர்களின் நிலைப்பாடுகள் மாறவில்லை.

மேலும் அதிமுக vs திமுக என்று கட்சிக்காரர்கள் எடுக்கும் நிலைகளும்,  அதற்கு அவர்கள் வைக்கும் வாதப் பிரதிவாதங்களும் ஈழ விசயத்தில் உதவாது. சேற்றைவாரி இறைத்துக்கொள்வதால் நெல் விளைந்துவிடாது. நானும் அந்த அரசியல் தளத்தில் இருந்து சொல்லவில்லை. அதிமுக வின் குறைகளை பட்டியலிடுவதாலேயே திமுக வின் தவறுகளை நியாயப்படுத்த முடியும் என்று முயற்சிக்காதீர்கள். அதுபோல திமுக வின் குறைகளை பட்டியலிடுவதாலேயே அதிமுக வின் தவறுகளை நியாயப்படுத்த முடியும் என்று முயற்சிக்காதீர்கள். ஒட்டு மொத்த தமிழகமும் சேர்ந்து, நம் கண்முன் நடக்கும் மனிதநேயத்திற்கு சாவால்விடும் கொலைகளுக்கு எதிராக ஏதாவது செய்ய இயலுமா? என்று சிந்திக்கலாம். வெறுமனே "ஒப்பீட்டளவில் திமுக‌ ஈழத்தின்பால் அதிக அக்கறை கொண்டது" என்று சொல்வதாலோ அல்லது "இல்லை இல்லை, ஒப்பீட்டளவில் அதிமுக‌ ஈழத்தின்பால் அதிக அக்கறை கொண்டது" என்று சொல்வதாலோ என்ன கிடைத்துவிடப்போகிறது,துயரில் சாகும் குழந்தைகளுக்கு? செயல்படாத தன்மை விசம் போன்றது. "பாலிடால்" என்ற கொல்லி "சயனைவிட" சமத்து என்று சொல்வதால் அதைக்குடித்தவனின் சாவு நிற்கப்போவது இல்லை...தள்ளிப்போகும். இதில் என்ன சிறப்பு உள்ளது?

 
ந்தியாவில் உள்ள புனித தலங்களுக்கு வந்து போகிறார் இராஜபக்சே. ஆம் காசு கொடுத்து அர்ச்சனைச்சீட்டு வாங்கிவிட்டால் ஆண்டவனுக்கு கொலைகாரன்கூட வாடிக்கையாளர்தான். அன்றாடங்காய்ச்சிகள் என்ன செய்துவிடமுடியும் புலம்புவதைத்தவிர.

For PDF version:
http://pdfmyurl.com/?url=http://kalvetu.balloonmama.net/2013/02/blog-post_1855.html

.

Thursday, February 14, 2013

காதலர் தினத்தில் வெட்கப்படுவோம் வாருங்கள்

கோ வாவில் நடந்த சம்பவம், பெங்களூர் சம்பவம், டெல்லி சம்பவம் இன்று காரைக்கால் இளம்பெண் வினோதினி   ......இந்த சம்பவங்கள் எல்லாம் ஒரு செய்தியைச் சொல்கிறது...

பசியோடு அலையும் மிருகங்களாகவே ஆண்கள் இருக்கிறார்கள் அல்லது வாய்ப்புகள் வராதவரை நல்லவர்களாக இருக்கிறார்கள். பாட்டி தொடங்கி தன் அம்மா முதல் சகோதரி வரை பிகினியில் பார்த்து சேர்ந்து வாழும் , சேர்ந்தே குளிக்கும் ஒரு மேற்கு கலாச்சார ஆணுக்கு , தன் அருகில் ஒரு பெண் அரை நிர்வாணத்துடன் படுத்து சூரியக் குளியல் செய்தாலும் , புணரும் வெறி வராது. ஆனால் பாரதிராஜா நாயகிகள் காட்டும் கணுக்கால் கொலுசில்கூட சொப்பன ஸ்கலிதம் வரும் அளவிற்கே ஆண்கள் வளர்க்கப்படுகிறார்கள் தமிழகத்தில். இந்த வியசத்தில் வடக்கு பரவாயில்லை. மும்பையில் ஆண் பெண் பேருந்தில் சேர்ந்து அமரலாம். சூரத் போன்ற இடங்களில் ஷேர் ஆட்டோவில் தெரியா ஆண் பெண் இடித்துக்கொண்டுதான் அமருவார்கள்.

சேலை அல்லது பாவடை தாவணி அணியவைத்து, அந்த உடையிலேயே பெரும்பாலும் புணருதல்,மோகித்தல் வகையான‌ அசைவுகளை கொடுக்கும் நமது திரைப்படங்களைவிட, நீச்சல் குளத்தில் பிகினியுடன், நேரடியாக நம்மிடம் உரையாடும் ஒரு பெண்ணின் உடல் மொழி காமத்தை தூண்டுவது இல்லை. வளர்ந்த நாடுகளில் , நீச்சல் குளத்தில் எந்தப் பெண்ணும் அவர்கள் அணிந்துள்ள உடை குறித்து கவலை கொள்வது இல்லை. இயல்பாக நம்மிடம் பேசுவார்கள். அருகில் இருப்பார்கள். அமெரிக்க நீச்சல் குளங்களில் இதுவரை நடந்துள்ள வண்புணர்வு நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை , நமது நாட்டு கோவில் திருவிழாக்களிலும், பஸ்களிலும் உரசப்படும் பெண்களின் எண்ணிக்கையைவிடக் குறைவாக இருக்கும்.

ம் சமுதாய அமைப்பில் பிழை உள்ளது. உடல்சார்ந்த புரிதல்கள் தமிழகத்தில் (இந்தியாவில்) குறைவு ஒப்பீட்டளவில். ஏன் இப்படி இந்திய சமுதாயம் உள்ளது என்று சிந்திக்கலாம். பெண்களை ஈவ் டீசிங் செய்யும் வகையிலேயே திரைப்பாடல்கள் (கும்பலாக 10 பேர்  ஆட்டம் போடுவது... என்னாடி பந்தாடும் பாப்பாக்களே என்று ) இன்றுவரை உள்ளது. அதைப்பார்த்து ஆண் ஏன் இரசிக்கிறான்? மெய் வாழ்க்கையில் தன்னால் செய்ய இயலாத, நினைத்துப் பார்க்கவே முடியாத செயல்களை (பெண்ணுடன் பேசுவது, சேர்ந்து சில இடங்களுக்கு போவது) , சமூகம் இன்னும் அங்கீகரிக்காத செயல்களுக்கு , க‌தாநாயகன் செய்யும் அடாவடி ஈவ்டீசிங் பாடல்களை ஒரு வடிகாலகப் பார்க்கிறான். நிச வாழ்வில் அவன் பார்க்கும் பெண்கள் திரையில் அவன் கண்ட நாயகிகளையே உணர்த்துகிறாள் என்று எண்ணுகிறேன். கும்பலுடன் அவன் இருக்கும்போது , படங்களில் பார்த்த நாயகன் நாயகியைக் கூட்டமாக சேர்ந்து பாட்டுப்பாடி கலாய்க்கும் காட்சிகள் வந்துபோகுமோ என்னவோ.

நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு படகுக் குழு ( rowing team from Groningen, Netherlands  ) "Why this Kolaveri Di?"  என்ற தமிழ்ப்பட பாடலுக்கு அழகாக காட்சிப்படுத்தியுள்ளார்கள். இதில் இவர்கள் எப்படி பெண்ணைக் கையாள்கிறார்கள் என்று பாருங்கள்.

"Why this Kolaveri Di?" goes Dutch
http://www.youtube.com/watch?v=Cd77LenKLHg



அதே சமயம் இந்தப்படத்தின் அதிகாரபூர்வமான பாடலில் பெண்கள் (வெளிநாட்டுப் பெண்களும் உண்டு) எப்படி கையாளப்படுகிறார்கள் என்றும் பாருங்கள்.

WHY THIS KOLAVERI DI - Official Movie Full Song Video
http://www.youtube.com/watch?v=5DK-ZWyxZ8k

ப்படி ஆணையும் பெண்ணையும் பிரித்து வைத்து , புணருவதை நோக்கிய மிருகமாகவே ஆண்கள் தயார் செய்யப்படுகிறார்கள் நமது சமுதாயத்தில் என்பது என் எண்ணம். திருமணமே பெண்ணின் அருகாமைக்கான  ஒரே வழி என்றே இன்னும் உள்ளது. காமம் வேறு , காதல் வேறு என்பது புரியவில்லை. சளிக்காமல் உடலுறவு கொண்டாலும் , அதைத்தாண்டி காதல் வேண்டும் என்னை மணந்துகொள் என்று சொல்லும் ஆண்களையும் காட்டும் படங்கள் உண்டு மேற்குலகில். (http://www.imdb.com/title/tt1411238/) ஆனால் பெண்ணிடம் உடல் சார்ந்த உறவே , ஆண் பெண் உறவின் உட்சம் என்பதுபோலத்தான் நம் சமுதாயம் உள்ளது.

வ் டீசிங் பாடல்களை எந்த புரிதலும் இல்லாமல் இன்றுவரை கேட்டுக்கொண்டுள்ளோம், ஆனால் சின்னச் சின்ன ஆண் பெண் அணைத்தலைக்கூட கொலைக்குற்றமாகப் பார்க்கிறோம். சேலை கட்டிக்கொண்டு வக்கிரமாக ஆடுவதை குடும்பத்துடன் இரசிக்கும் நாம், மேலை நாட்டுப் பெண்கள் பிகினியில் குளித்தால்கூட அவர்களின் கலாச்சாரத்தை
 கேலிசெய்கிறோம். மேற்குலகில் குற்றமே இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் உடல் விரட்டல் இப்படி இல்லை என்று என்னால் சொல்லமுடியும். பிகினியோடு ஒரு பெண் என்னருகில் வந்தால் அது இயல்பாய் இருக்கிறது. உடல் ஈர்ப்பு என்பது (வெறி) முதன்மை இல்லை.
முன் அறிமுகம் இல்லாத பெண்களுடன் எனது அனுபவம் (பல பதிவுகளில் நான் ஏற்கனவே சொல்லியுள்ளது)

நேரடியான பேச்சுக்கள் மனத்தடைகளைக் குறைக்கும். Life Guard இல்லாத நீச்சல் குளங்களில், பாதுகாப்பு காரணக்களுக்காக தனியாக‌ ஒருவர் மட்டும் இருக்க அனுமதியில்லை. மிகச்சாதரணமாக ,பிகினி உடையுடன் என்னிடம் வந்து "தனியாக நீச்சல் அடிக்கிறேன் , கொஞ்ச நேரம் எனக்காக இங்கேயே இருக்க முடியுமா" என்று ,என்றுமே பார்த்துப் பேசியிராத ஒரு அறிமுகம் இல்லாத, வெளிநாட்டுப்பெண் நேரிடையாக கேட்டதுண்டு.

டில்லியில் இருந்து ரிசிகேஷ்,ஹரித்துவார் போன்ற வரலாற்றுச் சிறப்பும் ,இயற்கையின் கொடையுமாக உள்ள இடங்களுக்கு பயணம் சென்றபோது , ஒரு இளம் தம்பதியினர் எனக்கு அறிமுகமானார்கள். அவர்கள் ஒருவயதில் குழந்தையுடன் வந்திருந்தார்கள். பஸ்பயண நேரமே பழக்கம்.

ஹரித்துவாரில் குளித்து முடித்தபின் பெரும்பாலும் கங்கைக் கரையிலேயே உடைமாற்றல் நடக்கும்.  ஆண்கள் நாங்கள் இருவரும் முதலில் குளித்துவிட்டோம்.  நான் மட்டும் அங்கேயே துண்டைக் கட்டி உடை மாற்றிவிட்டேன்.  நாங்கள் வந்தபின் குழந்தையை என்னிடம் கொடுத்துவிட்டு அந்தப் பெண்ணும் அவள் கணவனும் குளிக்கச் சென்றனர். ஆற்றின் அதிகவேகம் கருதி மனைவியின் பாதுகாப்புக்காக அந்தக் கணவன் இரண்டாவது முறைக் குளியல்.  இருவரும் குளித்து வந்தபின், அந்த கணவன் அங்கேயே துண்டைக் கட்டி உடை மாற்றிவிட்டார். அந்தப் பெண் இப்போது உடை மாற்றவேண்டும்.

அவர்கள் இருவரும் என்னையும் அழைத்து ஒரு சேலையை சுற்றிப்பிடிக்கச் சொன்னார்கள். நானும் , அவளது கணவரும் சேலையை வட்டமாகச் சுற்றிப்பிடித்து வெளிப்புறமாக நோக்கியிருந்தோம். குழந்தையை நடுவில் கிடத்திவிட்டு நாங்கள் பிடித்துக்கொண்ட 'சேலை வட்ட மறைப்புக்குள்' வேறு புதிய உடை மாற்றினாள் அந்தப் பெண்.  நான் அவர்களின் குடும்ப உறுப்பினர் கிடையாது. பஸ்நேரப் பழக்கம் மட்டுமே. இது இயல்பு மற்றும் நம்பிக்கை சார்ந்த நிலை.  நல்ல மனங்கள் உண்டு என்பதைச் சொல்லவே இது. மனிதனாக இருத்தலை அங்கீகரிக்க இதைவிட ஒரு அந்நியப் பெண்ணிடம் என்ன வேண்டும்?

ந்தாம் வகுப்பிற்குப் பிறகு உடன் படித்த பெண்களின் கையைக்கூட தொட முடியாது. இப்படி விலக்கியே வளர்க்கப்பட்ட நம் சமுதாய ஆணையும்
பெண்ணையும் சட்டென்று திருமணம் செய்து  வைத்து, முதல் நாள் இரவிலேயே போய் புணருங்கள் என்று சொல்லி கதவடைத்தால் அதில் எங்கே காதல் வரும்.
காதல் என்றால் என்ன?

சின்ன வயதில் வரும் பாலியல் ஈர்ப்ப்பு என்பது வெறும் Crush. பலர் இந்த வெறும் Crush  ஐ புனிதமாக கருதுவதுபோல ஒரு உருவாக்கம் தமிழகத்தில் உள்ளது. அதனாலதான் அழகான பெண்ணை தூரத்தில் இருந்து இரசிப்பதுடன் நிறுத்தாமல், ஒருதலைக்காதல் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். ஒருதலைக்காதல் என்ற ஒன்று இல்லை. அது ஆசை (Crush) மட்டும். இது ஒரு நோய்க்கூறு. அதாவது ஒருதலைக்காதல் என்பதே நோய். அப்படி ஒன்று இல்லை. அதற்குப் பெயர் ஆசை Crush . Love கிடையாது .

ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் வருவது ஆசை (Crush) , அதை எப்படி காதலாக (Love) மாற்றுவது... அதாவது அந்தப் பெண்ணை அணுகி (approach) எப்படி தன் விருப்பத்தை தெரிவித்து அந்தப்பெண் விரும்பும் பட்சத்தில் பழக ஆரம்பித்து,  அதற்குப் பின்னால் திருமண விருப்பதைச் சொல்வது என்று கற்றுத்தரப்பட வேண்டும். இடையில் கருத்து வேறுபாடுகள் வந்தாலும்  அழகாகப் பிரியவும் கற்றுக்கொள்ள வேண்டும். எனது உடன் வேலை பார்க்கும் பெண் விவகாரத்துப் பெற்றவர். இன்னும் அவர் கார் நடுவழியில் பழுதாகி நின்றால் அழைப்பது அதே விவகாரத்து செய்யப்பட்ட பழைய /முன்னாள் கண‌வனைத்தான்.

காதலைக் கற்றுக்கொடுப்போம்.
ணுக்கால் தெரிந்தவுடன் வருவது காதல் அல்ல. அது பெண்ணுடல் பார்த்தவுடன் வரும் காமம். அதில் தவறு இல்லை. ஆனால் பார்த்தவுடன் புணரவேண்டும் அதற்கு தமிழகத்தில் ஒரே வழி கல்யாணம் என்பதால், அதைக் காதலாகக் கருதி அலையக்கூடாது. No Strings Attached (2011) என்ற படத்தில் நண்பர்களாக இருப்பவர்கள் , காமம் தாண்டி தவிப்பது, காதலுக்காக. திகட்ட திகட்ட உடலுறவு கிடைத்தாலும் அதையும் தாண்டி காதலிக்கப்பட வேண்டும் , காதலிக்க வேண்டும் என்பது தேவை என்று கதை சொல்லப்பட்டு இருக்கும்.  காமம் என்பது காதலைத்தூண்ட ஒரு வாசனைத் திரவியம் மேஜிக். ஆனால் காதல் என்பது புரிந்துகொள்ளல் அன்பு செலுத்துதல் ப்ரியமாய் இருத்தல் துணையாய் இருத்தல். அது உள்ளதா?

Valentine's Day
மேலைநாடுகளில் காதலர் தினத்தில் யாருக்கு வேண்டுமானாலும் Happy Valentine's Day என்று வாழ்த்துகள் சொல்லலாம் . அப்பா, அம்மா, தம்பி, தங்கை, அண்ணன், ஆசிரியர், அக்கம் பக்கம் என்று யாரும் யாருக்கு வேண்டுமானலும் வாழ்த்துகள் சொல்லலாம்.  அதாவது காமம் கடந்த ஒரு வழக்கமாக மாறிவிட்டது.  இருந்தாலும், காமம் கலந்த காதலில் (கணவன்-மனைவி) இது புது அர்த்தம் பெறுகிறது. தமிழில் காதல் என்பது காமம் கலந்த ஒன்றைத்தவிர மற்றதற்கு பயன்படுத்த முடியாது. எனது தோழர்களிடம் உங்களைக் காதலிக்கிறேன் என்று சொன்னால் தவறாகிவிடும். சரி உங்களுடன் அன்பாகியிருக்கிறேன் என்று சொன்னாலும் ஏதோ சப்பென்று உள்ளது. என்ன சொல்லலாம்...

தமிழ் இணையைப் பயனாளர்கள் அனைவருக்கும் எனது அன்பும் ப்ரியங்களும் I love you all .

காதலைக் கற்றுக்கொடுப்போம் இளைஞர்களுக்கு. ஆரோக்கியமான‌ நல்ல ஆண் பெண் உறவுகளை வளர்த்தெடுங்கள்


.