Tuesday, January 29, 2013

விஸ்வரூப சினிமா வழியாக


Gabbeh திரைப்படம் பார்த்தவுடன் ஏதோ வண்ணமயமான பூக்கள் நிறைந்த சோலைக்கு போய்வந்த உணர்வு வந்தது. அதை அப்படியே பதிந்து வைக்க வேண்டும் என்று 2008 ல் ஒரு பதிவு எழுதினேன். http://kalvetu.balloonmama.net/2008/02/gabbeh.html . அதற்குப்பிறகும் படம் பார்த்துக்கொண்டுதான் உள்ளேன் இருந்தாலும் எழுத வேண்டும் என்ற ஒரு உந்துதல் உடனே வந்தது இல்லை. எழுத வேண்டும் என்று தோன்றும் , இரண்டொருநாளில் அது மறந்துவிடும். அல்லது வேறு ஒரு வேலை வந்துவிடும்.

மதம் / சொர்க்கம் எனது நிலை
மதம் என்பது ஒருவகை குழு. அவர்களுக்கான சில விதிகள், சில நடைமுறைகள் இருக்கும் மற்றபடி அவர்கள் பெரும்பாலும் கடவுள் என்ற ஒன்றிற்கு பயந்து வாழ நிர்பந்திக்கப்பட்டவர்கள். கடவுள் என்ற கருத்தாக்கமும் , அந்த ஒன்று இறந்த பின் கொடுக்கப்போகும் சில வெகுமதிகளும் அல்லது வாழும் காலத்தில் கிடைக்கும் (கிடைக்கிறது என்று நம்பும்) சில பொருள் சார்ந்த விசயங்களுமே மதங்களின் இருப்புக்கு காரணம். 

அடுத்தவர்களின் நினைவில் வாழ்வதுதான் / மறுமை சொர்க்கம் என்று சொல்லப்படுவது. இதை யாரும் மக்கள் புரியும் வண்ணம் விளக்குவது இல்லை. அப்படி விளக்கினால் மதத்திற்கு மக்கள் வரமாட்டார்கள் என்பது மதவாதிகளுக்கு நன்கு தெரியும்.

வாழ்வு என்பதே சேகரிக்கப்படும் நினைவுகளும், நினைவுகளின் துணையில் உயிர்த்திருப்பதும்தான். மூளையின் நினைவுகள் அனைத்தும் அழிக்கப்பட்ட நிலையில் உடல் இயங்கிக்கொண்டு இருந்தாலும் அது வாழ்வது ஆகாது. வெறுமனே பிழைத்திருக்கும் உடல்தான் அது. எனவே வாழ்க்கை என்பது நினைவுகளே. ஒருவன் இறந்தபின் அவன் குறித்த நினைவுகள் மற்றவர்களிடம் இருக்கும்வரை அவனும் இவ்வுலகில் இருக்கிறான் ஆனால் உடலாக இல்லாமல். 


இதுவே எல்லாப் புராணம் / கதை /மதங்களில் வலியுறுத்தப்படும் சொர்க்கம்.
இறந்த பின்னாலும் ஒருவர் மற்றவரின் நினைவுகளில் நல்லவிதமாக நிலைத்திருக்க அவர் சமூகக் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப நல்லவராக இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்து மற்றவரின் நினைவுகளில் நிலைத்திருந்தால் அது அவர் சொர்க்கத்தில் இருக்கிறார் என்று பொருள்.கெட்டவராக நினைவுகளில் நிலைத்து இருந்தால் அதுதான் நரகம் எனப்படுவது.

இதில் சிறப்பான மற்ற ஒன்றும் உள்ளது. அதாவது உங்கள் மூளையில் (நினைவுகளில்)நீங்கள் அடுத்தவருக்கு இடம் கொடுக்கும்போது நீங்களே சொர்க்கத்தின் அதிபதியாகிறீர்கள். கெட்டவர்களுக்கு இடம் கொடுக்கும்போது நீங்களே நரகத்தின் அதிபதியாகிறீர்கள்.
உங்கள் மூளை அல்லது மனது என்று கவர்ச்சியாகச் சொல்லப்படும் இடம்தான் எல்லாம். அடுத்தவ‌ருக்கு இடம் கொடுப்பதால் அது சொர்க்கமாகிறது. நீங்களும் அடுத்தவரின் சொர்க்கத்தில் இடம் பிடிக்கலாம். 

எல்லா மத சாதிக் குப்பைகளையும் ஒதுக்கிவிட்டு நாமே சொர்க்கமாகவும், அடுத்தவர் சொர்க்கத்தில் இடம் பிடிக்கவு முடியும். ஏன் என்றால் தூதர்கள் வெளியில் இருந்து வருவது இல்லை.
*************************************

தைச் சொல்ல வேண்டிய தேவை உள்ளது. பொதுவாக மதங்கள் மனிதற்கு இடையில் வேற்றுமையை ஆராதிக்க கற்றுக்கொடுக்காமல், அவற்றை வைத்து பிரிக்கவே செய்கிறது. எந்த ஒரு மதமும், "உனது அம்மா போல மற்ற அம்மாக்களும் சிறந்தவர்களே" என்று சொல்வது இல்லை. இந்த மதம் மட்டுமே சிறந்தது என்று நிறுவவே பார்க்கிறது. அதாவது ஒரு ஒற்றைத் தன்மையை நோக்கிய காய்நகர்த்தல்.


தமிழகத்தில் இஸ்லாம் விமர்சனம்

இஸ்லாத்தின் வரலாறு தெரியாமல், அந்த மதப் பெற்றோர்களுக்கு பிறப்பதால் பிறந்தவுடன் அதே மதம் அவர்களுக்கும் வந்துவிடுகிறது. இது எல்லா மதங்களுக்கும் உள்ள நிலை. இஸ்லாம் ஒரு எடுத்துக்காட்டு இங்கே. பிறரைப் புண்படுத்தாமல் கருத்தைச் சொல்லவேண்டும். மதத்தை விமர்சிக்கக்கூடாது என்றும் சொல்லும் இவர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள்.  பலருக்கு மன வருத்தம் கொடுத்துதான் புதிய மதங்கள் உருவாகிறது. 

  • யூத மதத்தை அதன் குறைகளை விமர்சித்தவர் தூதர் இயேசு.
  • பல உருவ வழிபாடுகளை வைத்துக்கொண்டிருந்த ஒரு பெருங்கூட்டத்தை விமர்சித்தவர் தூதர் நபி. 
இவர்கள் (தூதர் இயேசு & தூதர் நபி )  தான் நம்பிய ஒன்றை வளர்த்தெடுக்க , தான் நம்பாத ஒன்றை பகிரங்கமாக விமர்சனம் செய்தவர்கள். எனவே மதங்களில் இருப்பவர்கள், அவர்கள் மதத்தை கட்டிக்காக்க வேண்டிய தேவை இல்லை. காலம் பார்த்துக்கொள்ளும். யாரும் ஏதும் பேசக்கூடாது, அல்லது எங்களிடம் தான் பேசவேண்டும் என்பது தவறு. அமேசான் டாட் காமில் கிடைக்கும் குரானை வாங்கிப்படித்து எனது கருத்தை வைக்க எந்த தடையும் இல்லை. அப்படி குரானை உங்களிடம் படித்து உங்களிடம் மட்டுமே விமரசிக்க வேண்டும் என்றால், அதை பள்ளிவாசலில் மட்டும் கிடைக்கும்படி பார்த்துக் கொள்ளலாம்.

கலை
கலை (Art ) என்பது வெளிப்படுத்தும் ஒன்று. அதாவது exhibiting   தன்மை கொண்டதுதான் கலை. உள்ளுக்குள் வைத்து புகைந்துகொண்டு இருப்பது கலை அல்ல.
கலாச்சாரம்
கலைகளின் சாரம் அல்லது கலையின் ஆதாரம். ஏதோ ஒரு ஆதாரத்தைக் கொண்டது. இன்று உள்ள ஒரு நிலைக்கு அதற்கு முந்தைய நிலையும் உண்டு என்பது.
பண்பாடு
பண்+பாடு. பண்பட்ட (பதப்படுத்தப்பட்ட) பழக்கங்கள் என்பதுவே பண்பாடு எனப்படுவது.

கலாச்சாரம் அல்லது பண்பாடு என்பது இறந்த காலத்தைச் சுட்டுவது. அல்லது நிகழ்காலத்தில் உள்ள ஒரு பழக்கத்திற்கு வேறு ஒரு பழைய வடிவம் இருக்கலாம் என்பதே கலாச்சாரம். மற்றபடி அந்த பழைய வடிவத்தை இன்றும் பின்பற்ற வேண்டும் என்பது கலாச்சாரம் அல்ல. அதன் பொருளும் அதுவல்ல. அப்படி இருந்தால் நாம் இன்னும் கண்ணகிபோல கோவலன் போல வள்ளுவன் போல அதே கால முறைகளில் ஜீவித்து இருக்க வேண்டும். நாம் அப்படியில்லை. எனவே குழப்பிக்கொள்ளக்கூடாது.


கமல்
கமலின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எனக்கு மதிப்பு உண்டு. அவரின் நடிப்பு அல்லது திரைசார்ந்தவகைள் குறித்து பெரிய பிம்பங்கள் இல்லை. போகாத பொழுதுகளைப் போக்கப் பயன்படும் படங்களில் இவருடையதும் ஒன்று. மகாநதி போன்றவை நினைவில் நிற்கும், சகலகலா வல்லவன் போன்றவை நினைவில் நிற்காது. மற்றபடி சொல்ல ஒன்றும் இல்லை. நான் குணா (கல்லூரியில் படிக்கும் போது ரீலிஸ்) படத்திற்கு அடுத்து திரை அரங்கில் பார்க்கும் கமல் படம். 10 ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்கில் பார்க்கும் தமிழ்படம். இந்தப்படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகளால் வந்த எதிர்ப்பால் , அப்படி என்னதான் உள்ளது என்பதை அறிய பார்க்கவேண்டும் என்று பார்த்த படம்.
விஸ்வரூபம்


நானும் என் மனைவியும் இந்தப்படத்திற்குச் சென்றோம்.குழந்தைகளை நண்பர் வீட்டில் விட்டுவிட்டுச் சென்றோம். படம் தொடங்குவதற்கு முன் திரையரங்கு நிறைந்துவிட்டது. அருகில் உள்ள தெலுங்கு பதிப்பிற்கான அரங்கமும் நிறைந்தே இருந்தது. படம் ஆரம்பித்தவுடன் கமலின் இரசிகர்களின் கைதட்டலும், உற்சாகமும் அரங்கத்தை நிறைத்தது. நான் படம் பார்க்க வந்த நோக்கம் வேறு என்பதால், நான் கொண்டாட்ட மனநிலையில் இல்லை. போஸ்ர்ட்மாட்டம் செய்யப்போகும் ஒரு மருத்துவரைப் போலவே இருந்தேன். ஒரு கலையை இப்படி அணுகுவதே தவறு. இருந்தாலும் நான் அப்படித்தான் இருந்தேன்.

டத்திற்கான பெயர், வலம் இருந்து இடமாக திரையில் எழுதப்படுகிறது. அரபி வடிவ எழுத்துகள், அதன் பாணியில் எழுதப்படுகிறது. அரபி என்பது ஒருமதத்திற்கான மொழி அல்ல. அதை பலர் பயன்படுத்துகிறார்கள். சமஸ்கிரகம் மந்திரங்கள் பயன்படுத்தும் அதே எழுத்துருவில்தான் இந்தி மசால சினிமாவின் எழுத்துகளும் பதியப்படுகிறது. இதில் ஏதும் பிரச்சனை இருக்க முடியாது. எனக்கு எந்த அரசியலும் தெரியவில்லை.

டத்தின் தொடக்கத்தில் இருக்கும் நடனம் ஒரு அற்புதமான அனுபவம். இந்தக்கணம்  வரை எனக்கு மனதில் இருப்பது, அந்த நடனமும் அதில் வரும் அழகுப் பெண்களுமே. அற்புதமான நடனம். அரைகுறை ஆடைகள் இல்லாமல் ஒரு நல்ல நடனம். இந்த நடனத்தை காட்சிப்படுத்திய விதம் என்று யூட்யூப்பில் பல காட்சிகள் கிடைக்கிறது. http://www.youtube.com/watch?v=olkPxE569OY . அந்தப்பாடல் காட்சியின்போது கமல் என்ற கலைஞன் தெரிகிறார். இந்தப்பாடலினூடே கதைமாந்தர்கள் அறிமுகமாகிறார்கள்.

மல் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அய்யர்/ஐயங்கார் பேச்சுவழக்கை நுழைத்துவிடுகிறார். இந்தப்படத்திலும் உண்டு. ஆரம்பக் காட்சிகளிலேயே நாயகி என்ன சாதி என்பதை இப்படி மெனக்கெட்டு காட்டுகிறார். இல்லாத ஒன்றைக்காட்ட வில்லை அவர். அவர் விருப்பம் அவரே இயக்குநர் என்பதால் அவர் சுதந்திரம். ஆனால், நாயகியின் சாதி நிறுவல் கதைக்கு என்ன வலுச் சேர்க்கிறது என்று புரியவில்லை. நல்லவேளை சீதா பாட்டி, அம்புஜம் மாமி என்று கேரக்டர்கள் இல்லை. எங்கே அவர்களும் (மைக்கேல் மதன காமராசன்) வந்துவிடுவார்களோ என்று ஒரு பயத்திலேயே கடைசிவரை இருந்தேன்.

ந்த அறிமுக கதக் ஆட்டத்திற்குப்பிறகு என்னளவில் படத்தில் ஒன்றும் இல்லை. ஒரு கடத்தல், பாம் வைக்கும் கதை,போலீஸ் என்று உள்ள பார்முலாப்படி அனைத்தும். படம் முழுவதும் பார்த்தே ஆகவேண்டும் என்ற வைராக்கியத்திற்காக இருந்தேன்.ப்கானில் கமல் பயிற்சி பெறுவதாக காட்டப்படும் காட்சிகள் அதிக நேரத்தை விழுங்குகிறது. எவ்வளவு யோசிச்சாலும் அல்லது மண்டபம் போட்டு யோசனை செய்தாலும் , இந்தப்படத்தில் கமல் செய்த இமாலயத் தவறு (இஸ்லாமியப் பிரச்சனை) என்னவென்று புரிந்துகொள்ள முடியவில்லை.

மல் ஏன் இந்தக் கதையை எடுத்தார் என்று தெரியாது. அது படைப்பாளியின் சுதந்திரம். ஏன் இந்தக் கதையை எடுக்கக்கூடாது என்பதே எனது கேள்வி?

லக அளவில் கவனிக்கப்பட்ட,இன்னும் கவனிக்கப்படும் ஒரு நிகழ்வை தனது திரைப்படத்திற்கு களமாகப் பயன்படுத்தியுள்ளார். இதில் ஒரு தவறும் தெரியவில்லை எனக்கு. இது போல உள்ளூர் நிகழ்வில் இருந்து, உலக நிகழ்வுவரை எதை வேண்டுமானாலும் தனது கதையின் மூலமாகப் பயன்படுத்திக்கொள்ள யாருக்கும் தடை இருப்பதாகத் தெரியவில்லை. உலகின் மற்ற பாகங்களில் தோன்றிய மதங்களையும், உலகின் மற்ற பாகங்களில் உருவான பொருட்களையும் ஏற்றுக்கொள்ளும் நாம், உலகின் மற்ற பாகங்களில் நடக்கும் ஒரு நிகழ்வைக் களமாகக் கொண்ட கதையை ஏன் எற்றுக்கொள்ளக் கூடாது?

ந்தப்படத்தில் குண்டுவைக்கும் ஒருவரும், அந்த குண்டை எடுக்கும் ஒருவரும் இஸ்லாமியர். அதாவது நல்ல பாத்திரமும், கெட்ட பாத்திரமும் இஸ்லாமியர். இருவரும் அவர்களின் செயலைச் செய்யும்போது அவர்கள் நம்பும் அதே இறைவனைத் தொழுதுவிட்டுச் செய்கிறார்கள். கதைப்படி வில்லனும் இஸ்லாம், கதாநாயகனும் இஸ்லாம். இருவருமே தொழுகிறார்கள் நேரம் கிடைக்கும்போது. ஒருவர் தொழுதுவிட்டு நல்லது செய்கிறார், மற்றவர் தொழுதுவிட்டு கெட்டது செய்கிறார். தமிழ் திரைப்படங்களில் இது ஒன்றும் புதியது அல்ல.

ரே சாதிகளுக்கு இடையேயான மோதல் (கிழக்குச் சீமையிலே) படமாக்கப்பட்டுள்ளது.  90 சதவீத தமிழ்ப்படங்களில் ஒரே மதங்களைச் (இந்து/சனாதனம்) சார்ந்தவர்களே கதையின் நாயக பாத்திரமாகவும், வில்லன் பாத்திரமாகவும் வருகிறார்கள். உதாரணத்திற்கு சாமி படங்கள் என்று சொல்லப்படும் ராமநாராயணன் அவர்களின் படங்களில்,  காளிபூசை செய்யும் மந்திரவாதி வில்லனாகவும், அதே காளியைக் கும்பிடும் ஒரு குடும்பம் நல்லவர்களாகவும் வருவார்கள்.

ந்த ஒரு மதம் அல்லது சாதி அல்லது ஒரே இனக்குழுக்களை எடுத்துக்கொண்டாலும், அவர்களுக்கு இடையே வேற்றுமைகளும், பூசல்களும் உண்டு. இஸ்லாம் என்ற மதம் உலக அளவில் பரவி இருந்தாலும், அதிலும் வேறுபாடுகள், சண்டைகள்,பூசல்கள் உண்டு. ஈராக்  சாதாம் உசேனின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரண‌ம்,  அங்கே நிலவிய சியா, சன்னிப் பிரிவுகளின் உச்சகட்ட பூசல்கள் சண்டைகள். எனவே முஸ்லிம்கள் என்றால் அவர்களுக்கு இடையே சண்டைகள் கிடையாது என்றோ, அதில் உள்ளவர்கள் அனைவரும் சாந்தசொருபீகள் என்றோ சொல்லமுடியாது.

மீபத்தில் வெளியாகி இருக்கும் ஒரு இஸ்லாம் தலைவரின் http://vimeo.com/58302985 ஆபாசப் பேச்சுகளும், அதை கைதட்டி இரசிக்கும் பெண்கள்,குழந்தைகள் அனைவரும் விஸ்வரூபம் என்ற ஒரு படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள். ஒரு சினிமாப்படத்திற்கு இத்தகைய அமிலப் பேச்சுகளை பேசும் இந்த போக்கு,  தமிழகத்தில் இருக்கும் வேறு எந்த சமூகத்தில் இருந்தும் வேறுபடவில்லை. "வேலைக்குபோகும் பெண்கள் விபச்சாரிகள் போன்ற‌வர்கள்" என்று ஒரு இந்து மடாதிபதி சொல்லுவதும், "மகள் அப்பாவுடன் படுக்க நினைக்கிறாள், அடுத்து அவர் தன் மகளை வைத்துக்கொள்வார்" என்று பேசும் இந்த மத தலைவரும் எந்த அளவிலும் வேறுபாடு கொண்டவர்கள் அல்லர்.  சமீபத்தில் நான் வருத்தப்பட்ட சம்பவங்களில் இந்த மதத் தலைவரின் பேச்சும் ஒன்று. வருத்தமான ஒன்று. சமூகத்திற்கு அடையாளமாக இருப்பவர்ககுக்கு நிதானம் தேவை.

யாராவது இந்தப் படத்தை எதிர்த்து போராட வேண்டும் என்றால், சூரனைக் கொன்றதற்காக தீபாவளி கொண்டாடும் மக்கள்தான் போராடவேண்டும் இந்தப்படத்தை எதிர்த்து. ஏன் என்றால்,  ஆப்கான போகும் முன்பே "அசுரன் பக்கமும் அசுரன் தரப்பு நியாயம் இருக்கும், அது அவர்களின் சொந்தங்களுக்கே தெரியும்" என்று சொல்லி விடுகிறார்கள்.

ணையத்தில் பலர் கமல் காட்சிப்படுத்தும் ஆப்கான் கிராமம் குறித்தும் , அதில் காட்டப்படும் கதை மாந்தர்களின் துப்பாக்கி கலாச்சாரம் குறித்தும் கவலை கொள்கிறார்கள். கமல் ஆப்கானில் நடக்கும் பயிற்சிகள் , அங்கு வாழும் மக்கள் என்று ஒரு மாதிரி கிராமத்தை அமைத்துள்ளார். தினமும் போரைச் சந்திக்கும் ஒரு கிராமம், அதுவும் முக்கியமான ஒரு போராட்டத்தலைவர் வசித்துவரும் கிராமம் எப்படி இருக்கும் என்று  இவர்களாக ஒரு கிராமத்தை வடிவமைத்து உள்ளார்கள். எளிதாகக் கிடைக்கும் ஆயுதங்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை , துப்பாக்கியையும், போரையும் தினசரி வாழ்க்கையில் எளிதாகக் கடக்கிறார்கள்.

துப்பாக்கி அவர்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக உள்ளது என்று காட்டப்படுகிறது. இந்த கிராம அமைப்பில் பல குறைகளைக் காணலாம். ஆனால், எனக்கு இவையாயும் திட்டமிட்ட சதியாகத் தெரியவில்லை. ஏதோ அவர்களுக்கு தெரிந்த ஒரு கிராமத்தை வடிவமைத்து உள்ளார்கள். ஒருவேளை அந்த கிராமத்தில் இருக்கும் ஒரு பெண் கமலை காதலிப்பதாக திரைக்கதை இருந்திருந்தால் , மென்மையான பக்கங்களை காட்டும் வாய்ப்பு கிட்டியிருக்கும். ஆனால் போராளியின் பார்வை, அவர்களின் முகாம் என்று விரிவதால் அத்தகைய சம்பவங்கள் இல்லாமல் துப்பாக்கி,போர் , சார்ந்தே உள்ளது கிராமம்.

மல் இரஷ்யாவின் ஆக்ரமிப்பில் இருந்து கதை சொல்லவேண்டும் என்று நாம் சொல்லலாம். "ஆப்கான் இப்படி ஆனதிற்கு பன்னாட்டு சதி" என்று வரலாறு சொல்ல படம் எடுக்க வேண்டும் என்றும் ஆசைப்படலாம். ஆனால் அதையும் கமல்தான் செய்ய வேண்டும் என்று நிர்பந்திக்க முடியாது. 

தேவர்மகன் எடுத்து தேவர் சாதி பெருமைபேசிய கமலுக்கு, ஒரு காலத்திலும் தலித் பெருமை பேசும் "போற்றிப்பாடடி தலித்" என்று பாடி, அந்தப் தலித் பாத்திரம் பஞ்சாயத்து தலைவராக இருந்து, தேவர் சாதிக்கு தண்டனை கொடுக்கும் காட்சி அமைக்க துணிவு இருக்காது. அவருக்கு தெரிந்தது அவ்வளவுதான். கலைஞனிடம் நாம் எதிர்பார்க்கலாம், விமர்சனம் செய்யலாம் ஆனால் கட்டிவைத்து நிர்ப்பந்திக்க முடியாது. உசேனின் ஒவியச் சணடைபோல கமலை நாடுகடத்த வேண்டுமா என்ன?

டத்தில் தற்கொலைப்படையில் டீனேஜ் குழந்தைகள் உள்ளதாகவும், சிறுவயதில் இருந்தே துப்பாக்கி பழக்கப்படுகிறது என்றும் சொல்லாமல் சொல்லப்பட்டு இருக்கும். எனக்கு இது புதிதாகத் தெரியவில்லை. ஏன் என்றால் தமிழ்ப்படங்களில், அப்பாவைக் கொன்ற வில்லன் குடும்பத்தைப் பழிவாங்க அம்மா சிறுவயதில் இருந்தே தன் குழந்தையை சண்டைப்பயிற்சிகள் கொடுத்து வளர்ப்பதாக பல படங்கள் உள்ளது.  ஒரு பாடல் காட்சி வைத்து, பிள்ளையை உரமேற்றி வளர்ப்பதாக காட்டப்படும் படங்கள் பல உண்டு. அதே அளவுகோளில் நண்பர்களையும், பல சொந்தங்களையும் இழந்த ஒரு ஆப்கான் கிராமப் போராளி , அவன் குழந்தைகளையும் ஒரு போராளியாக வளர்க்க நினைக்கிறான் என்று அவர்கள் தரப்பு நியாயமாகவே காட்டப்படுகிற‌து. இதில் என்ன தவறு உள்ளது என்று தெரியவில்லை. குழந்தைகளை இப்படிக் காட்டுவது தவறு என்றால் , ஆம் தவறுதான் ஆனால் இதை அந்தப் போராளியின் நிலையில் இருந்து பார்க்க வேண்டும்.  கதை போராளியின் பார்வையில் சொல்லப்படுகிறது. மத தலைவர்கள் பேசும் ஆபாச கூட்டத்திற்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும் பெற்றோர்களுக்கு உள்ள நியாயத்தைவிட அந்தப் போராளிக்கு அதிக நியாம உள்ளது.

லையூர் மம்மட்டியான், மலைக்கள்ளன் போன்ற படங்களில் கிராமங்கள் இவர்களுக்கு (போராளிகளுக்கு) ஆதரவாக இருப்பதாகவே காட்டப்படும். இங்கேயும் அப்படியே. ஒரு கிராமம் , அவர்களின் நியாயத்திற்கு போராடும் போராளிகளுக்கு உதவுகிறது. இதை கதையின் போக்கில் பார்க்காமல் , "கிராமமே இப்படியா?" என்றால் என்ன சொல்வது?  இந்தப்படத்தில் ஏன் தமிழக இஸ்லாமியர்கள் மனம் நோகிறார்கள் என்று தெரியவில்லை. கதையின்படி ஒரு தமிழக இஸ்லாமியன், ஆப்கான் இஸ்லாமியர்கள் செய்யும் கெட்ட செயல்களை (கதையின்படி) முறியடித்து பள்ளிக்குழந்தைகளைக் காக்கிறான். கமல் இதை நினைத்துதான் பிரியாணி பற்றி பேசி இருப்பார் என்று நினைக்கிறேன். ஆனால் தமிழக இஸ்லாமியர்கள் , ஏன் ஆப்கான் இஸ்லாமியரை அப்படிக் காட்டினீர்கள் என்று போராடுகிறார்கள்.

ந்தப்படத்திற்கு எதிராக வழக்குப்போடவேண்டியவர்களில் முக்கியமான இடத்தில் இருப்பவர்கள்
1. சாம்சங் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள். ஏன் என்றால், சாம்சங் கேலக்க்சிபோன் குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது. அது வேலையும் செய்கிறது.

2. ஆப்பிள் ஐபோன் தயாரிப்பாளர்கள்கூட வழக்குப்போடலாம், ஏன் என்றால் அவர்கள் போனை வைத்து பாம் வெடிக்கச்செய்யும் முயற்சி தோற்றுவிடுகிறது. சிக்னல் தடை செய்யப்படுவதால். சரியான் சிக்னல் ரிசீவர் இல்லை. சாம்சங் வேலை செய்யும்போது ஆப்பிள் வேலை செய்யாதா என்று வழக்குப்போடலாம்.

3. அதுபோல அமெரிக்ககர்களின் நோக்கம் ஆயில்தான் என்றும் சொல்லப்படுகிறது.அவர்களின் போரின் நோக்கமே இப்படி பகிரங்கமாக கேலி செய்யப்படுவதாக அவர்கள் வழக்குப்போடலாம்.

4.கதையில் எந்த சம்பந்தமும் இல்லாமல் திடீரென்று ஒரு நைஜீரிய இளைஞனை மனித வெடிகுண்டாக நுழைப்பதற்காக, கருப்பின மக்கள் போராடலாம்.
தையை எடுத்தவன் தமிழன், அதில் நாயகனாக வரும் பாத்திரம் தமிழன். அவருடன் ஒரு ஆப்கானைச் சேர்ந்த‌ போராளி எப்படி தமிழில் பேசமுடியும்? இதற்காக (மூளையை கசக்கி??)  அந்த ஆப்கான் போராளி சில காலம் தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் இருந்ததாகச் சொல்லப்படும் ஆதிகாலத்து உத்தி ஒரு பிரச்சனையாகி உள்ளது. அவர் சுற்றி திரிந்த பகுதிகளில் தமிழகமும் என்று வருகிறது. இரண்டு வருடம் அவர் சுற்றி திரிந்ததாக  சொல்லப்படுகிறதே தவிர, அவருக்கு தமிழக இஸ்லாமிய அமைப்புகள் உதவி செய்ததாக இல்லை. ஒருவேளை அதுகூட தவறு என்று அதற்காகப் போராடும் தமிழக இஸ்லாமியர்கள், நல்லது செய்யும் இஸ்லாமிய நாயகன் முழுக்க முழுக்க தமிழனாகவே காட்டப்பட்டு இருந்தாலும் அதை விட்டுவிடுகிறார்கள்.

மல் இதை தமிழக இஸ்லாமியர்கள் கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்த்து இருப்பார்போல. தமிழக இஸ்லாமியன் நல்லவன் என்பதைக் காட்டிலும், ஆப்கான் இஸ்லாமியன் கெட்டவனாக அதுவும் , தமிழகம் வந்து சென்றதாகச் சொல்லப்பட்ட கதை அவர்களை நோகடிக்கிற‌து என்று நினைக்கிறேன்.

டத்தில் வரும் , தண்டனை முறைகள் புதியதாகத் தெரியவில்லை. கடுமையான சட்டங்கள் உள்ள தாலிபான்களின் பகுதியில் வழங்கப்படும் தண்டனைகள் எனக்கு புதியதாகத் தெரியவில்லை. சவூதியில் சமீபத்தில் ஒரு பெண் வாளால் தலை அறுக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது. http://www.cnn.com/2013/01/10/world/meast/saudi-arabia-sri-lankan-maid/index.html தாலிபான்களால் ஒரு பள்ளிச் சிறுமிக்கு துப்பாக்கிச் சூடு கிடைத்தது http://www.cnn.com/2012/10/16/world/asia/pakistan-activist-reaction/index.html இத்தகைய தண்டனைகளை நிறைவேற்றுபவர்களும் , தண்டனைக்கு உள்ளாபவர்களும் இஸ்லாமியர்களே. நிசத்தில் நடக்கும் ஒன்று படத்திலும் உள்ளது. அதைத்தாண்டி ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

ந்தப்படத்திற்காக கமல் அமெரிக்காவிடம் பொட்டி வாங்கிவிட்டார் என்று http://vimeo.com/58302985 சொல்லப்படும் குற்றச்சாட்டையும், ஏன் இது இஸ்லாமிய விரோதப்படம் என்று தமிழக இஸ்லாமியர்கள் நினைக்கிறார்கள் என்றும் என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை. 

தக் நடனக் காட்சிக்காக திரையில் பார்க்கவேண்டும் அருமையான காட்சிப்படுத்தல்.மேலும் அரசியல்/மத காரணங்களுக்காக பார்ப்பதும் பார்க்காமல் இருப்பதும் உங்களின் உரிமை சார்ந்தது.

.

Monday, January 07, 2013

விந்துதானம் கொடுத்தவர் எப்படி தந்தையானார்?

வி ந்து தானம் செய்து விட்டாலும், அது மருத்துவர் மூலம் உட்செலுத்தப்படுகிறதா என்று கவனித்துக் கொள்ளவும்.

அமெரிக்கா கான்சாஸ் ( Kansas ) மாநிலத்தில் உள்ள பெண்தம்பதிகள் (lesbian couple) குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினார்கள். இதற்காக இவரகள் கிரெக் லிஸ்டில் ( Craig list ) ஒரு விளம்பரம் கொடுக்கின்றனர்.  சேர்,கார், தட்டுமுட்டு சாமான் தொடங்கி, காதலன் தேவை வரை அனைத்து விளம்பரங்களுக்கும் இடமளிக்கும் கிரெக் லிஸ்டில் ,விந்து தானம் கேட்டு விளம்பரம் கொடுக்கின்றனர் இந்த பெண்தம்பதிகள். இந்த விளம்பரத்திப் பார்த்த வில்லியம் என்பவர்   ( William Marotta  )  இவர்களுக்கு விந்துதானம் செய்ய முன்வந்துள்ளார். இவர் திருமணம் ஆனவர்.

விந்துதானம் கொடுப்பதற்குமுன்னால், பிறக்கப்போகும் குழந்தைக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் முழுமையான பெற்றோர் உரிமை அந்த பெண்தம்பதிகளுக்கே (lesbian couple)  என்றும், எந்தவிதமான பணம் சார்ந்த உதவியும் (Child support ) தன்னால் கொடுக்கப்படமாட்டாது என்று ஒப்பந்தம் போட்டபின்னரே இவர் விந்துதானம் செய்கிறார். இது நடந்தது 2009 ல். இதற்குப்பிறகு இவர் இதை மறந்துவிட்டார்.

அப்படி இவர் கொடுத்த விந்துமூலம் அந்த பெண்தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்த மூன்றாண்டுகளில் அந்த பெண்தம்பதிகள் இருவரும் பிரிந்துவிட்டனர்.  சட்டப்படி கான்சஸ் மாநிலத்தில் பெண் + பெண் திருமணம் (lesbian marriage ) செல்லாது அல்லது இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. அவர்களாக சேர்ந்து வாழ்ந்துள்ளனர், இபோது பிரிந்துவிட்டனர். பிரிந்தபிறகு அந்தக் குழந்தை ஒரு பெண்ணின் பாதுகாப்பில் ( custody ) வருகிறது. இப்போது அந்தப்பெண் குழந்தையை வளர்க்க அரசாங்க உதவியை ( child support ) நாடுகிறார்.

குழந்தையை வளர்க்க அரசாங்க உதவியை நாடுபவர்களின் பொருளாதர நிலைமை மற்றும், அந்த குழந்தையின் தந்தையின் பொருளாதார நிலைமை , போன்ற எல்லா ஜாதகத்தையும் அரசாங்கம் விரிவாக அலசியே உதவி செய்ய முடிவு எடுக்கும். அனைத்தையும் விசாரித்த மாநில அரசாங்கம் , இப்போது வில்லியம்தான் குழந்தையின் தந்தை , அவர் குழந்தை வளர்ப்பிற்கு மாதம் மாதம் பணம் கொடுக்கவேண்டும் என்று தீர்ப்பளிக்கிற‌து.

விந்துதானம் கொடுத்தவர் எப்படி தந்தையானார்?

பெண்தம்பதிகளுக்கும், வில்லியத்திற்கும் இடையே ஒப்பந்தம் இருந்தாலும், இவர் கொடுத்தவிந்தை அந்தப் பெண் அவராக உட்செலுத்திக்கொண்டார். இது வில்லியத்திற்கு தெரியாது. இவர் சும்மா மூன்று கப் நிறைய விந்தை கொடுத்துவிட்டார். விந்தை வாங்கிய பெண் மருத்துவரை நாடாமல் அவராக உட்செலுத்திக்கொண்டுவிட்டார். மருத்துவரின் மேற்பார்வையில் நடக்காதல் , மாநில அரசாங்கம் இதை ஒரு இயற்கையான புணர்வில் வந்த கருத்தரிப்பு என்றே கருதுகிறது. இவர்களுக்கு இடையே ஒப்பந்தம் இருந்தாலும், கொடுக்கப்பட்ட விந்தை மருத்துவர் செலுத்தாததால், இவர்கள் இயற்கையாக புணர்வில் குழந்தை பெற்று இருக்கலாம் என்று கருதுகிறது.

Under a 1994 Kansas law, a sperm donor isn't considered the father only when a donor provides sperm to a licensed physician for artificial insemination of a woman who isn't the donor's wife.

தானம் கொடுத்த மாட்டை பல்லைப் பிடித்து பார்ப்பது போல, விந்துதானம் செய்தவரின் , பணத்தையும் பிடுங்கிக்கொள்ளும் நிலை வந்துள்ளது.

நீங்கள் விந்துதானம் செய்வது என்றால், தானம் செய்யப்பட்ட விந்து ஒரு மருத்துவரின் மேற்பார்வையில் பெண்ணின் உடலில் செலுத்தப்படுகிறாதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். இல்லையென்ரால், நீங்கள் அந்தப் பென்ணிடம் இயற்கையான முறையில் உடலுறவு கொண்டு, கருத்தரிக்க வைத்ததாகவே கருத இடமுள்ளது.

நீதி:
சுயமைதுனத்தில் வெளியேறும் விந்துகளை பாதுகாப்பாக அழித்துவிடுங்கள். தானம் கொடுப்பதாக இருந்தால் மருத்துவர் , சட்டவல்லுனர்  என்று கலந்து ஆலோசித்துவிட்டுச் செய்யுங்கள். தகர டப்பாக்களை விற்பதுபோல கிரெக் லிஸ்டில் விற்க அல்லது தானம் செய்ய வேண்டாம்.

செய்தி உதவி:
http://www.cnn.com/2013/01/04/us/kansas-sperm-donation/index.html
http://www.keyc.tv/story/20482751/state-trying-to-make-sperm-donor-pay-child-support

Friday, January 04, 2013

கரகாட்டம்: வயசு போனால், பவுசு போச்சு..! (பாரதி தம்பி)



இந்தப்பதிவு முழுக்க முழுக்க "பாரதி தம்பி" http://nadaivandi.blogspot.com/2007/09/blog-post_19.html அவர்களின் ஆக்கம். இதன் முக்கியத்துவற்காக பின்னூட்டங்களுடன் இங்கே பிரதியெடுக்கப்படுகிறது.

திரண்டு நிற்கிறது பெருங்கூட்டம். 'ர்ர்ரூரூம்.. ர்ர்ரூரூம்..' ஒலிக்கிறது உருமிமேளம். பளபளக்கின்றன ஜிகினா உடைகள். ஆரம்பமாகிறது ஆட்டம். கதவடைத்து, விளக்கணைத்து, நான்கு கண்கள் மட்டுமே விழித்திருந்து நான்கு சுவர்களுக்குள் நடக்க வேண்டிய ஆண் பெண் உடலுறவு, ஆயிரக்கணக்கான கண்களின் முன்னால் அரங்கேறுகிறது. ஒரே ஒரு வித்தியாசம், உறவில் ஈடுபடுபவர்கள் உடையணிந்திருக்கிறார்கள். இதைத்தான் நாம் நாட்டுப்புற கலை என்கிறோம். கரகாட்டம் என்றும், குறவன் குறத்தி ஆட்டம் என்றும் விதவிதமாய் பெயர் வைத்திருக்கிறோம். உண்மையில் இது கலையா..? யார் வீட்டுப் பெண்களையோ மேடையேற்றி ஆபாசமாக ஆடவிட்டு ரசிப்பதுதான் தமிழ் கலாச்சாரமா..?

கிராமத்துக் கொடை விழாக்களின் இரவு நேரங்களை கொண்டாட்டங்களில் பங்கெடுக்கும் இவர்களின் வாழ்க்கை ரணம் மிகுந்தது. சராசரி பெண்கள் பேசத் தயங்கும் - ஒரு அர்த்தம் மட்டுமே கொண்ட - இரட்டை அர்த்த வசனங்களை இவர்கள், மேடைகள் தோறும் ஒலிபெருக்கிகளில் பேச வேண்டும். எல்லோரது கண்களும் தன் உடலின் எந்த பாகத்தை மேய்கின்றன என்பது தெரிந்திருந்தும், தொடர்ந்து ஆட வேண்டும். நாவில் நீரொழுக சுற்றி அமர்ந்திருக்கும் அத்தனை ஆம்பளை நாய்களும் மனதளவில் அம்மணமாய் இருக்கின்றன என்பது ஆடுகிற அவர்களுக்குத் தெரியாதா என்ன..? ஆனாலும் வயிற்றுப்பாட்டுக்கு ஆட வேண்டியிருக்கிறது. 'வயித்துப்பாட்டுக்கு இப்படி செய்றதைவிட வேற ஏதாவது தொழில் செஞ்சுட்டுப் போயிடலாமே..?' என அவசரப்பட்டுக் கேட்டுவிட வேண்டாம். அதையும்தான் செய்ய வேண்டியிருக்கிறது. நூற்றுக்கணக்கானவர்கள் மத்தியில் இப்படி ஆடை அணிந்து அவமானப்படுவதைவிட, ஒரு அறைக்குள் ஆடையின்றி உழைப்பது மேலானதுதான்.

ரகாட்டம், குறவன் குறத்தி ஆட்டம் என்ற இரண்டு பெயர்களில் நடத்தப்படும் இந்த ஆட்டங்களை நடத்த கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்கள் இருக்கிறார்கள். பெரும்பான்மையாக குறவர் (நரிக்குறவர் அல்ல..) என்ற SC பிரிவுக்குள் வரும் இனத்தவர்கள் இந்த தொழிலில் இருக்கின்றனர். தஞ்சாவூரில் சௌராஸ்ட்டிரா( இவர்கள் பட்டுநூல் நெய்யும் வேலையில் பெருமளவு ஈடுபட்டிருப்பதால், வட்டார வழக்கில், 'பட்டுநூல்காரர்கள்' என்றழைக்கப்படுகிறார்கள்) இனத்தைச் சேர்ந்த சிலரும், தேவர் மற்றும் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த சிலரும் இந்த தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். அனைவருக்குமே இந்த தொழிலைப்பற்றிய கசப்புணர்வு மனதளவில் பதிந்துகிடக்கிறது.



"முன்னாடியெல்லாம் ரொம்ப பக்தியா இருப்பாங்க. நாங்க ஆடுறதுதான் ஆட்டம். ஆனா இப்ப எல்லாம் மாறிப்போச்சு. 'செக்ஸா' ஆடச்சொல்றாங்க. 'முடியாது'ன்னு வீறாப்பா சொல்ல முடியாது. நாங்க முடியாதுன்னு சொன்னா, அடுத்த ஊரு செட்டு அதைவிட செக்ஸா ஆட தயாரா இருக்காங்க. தவிரவும், எங்களுக்கு இதைவிட்டா வேற எதுவும் தொழில் தெரியாது.. ஆனா, ஆடுற எங்களை மட்டும்தான் அசிங்கமா பேசுறாங்க. அப்படி ஆடச்சொல்லிக் கேக்குறவங்களையும், நாக்கத் தொங்கப்போட்டுக்கிட்டுப் பார்க்குறவங்களையும் யாரும் ஒண்ணும் சொல்றது கிடையாது.

அவங்க அப்படிக் கேக்கலன்னா நாங்க ஏன் ஆடப்போறோம்..? இந்த கலையை முறைப்படி எப்படி ஆடனும்னு எங்களுக்குத் தெரியும். அதுப்படி ஆடிட்டுப் போயிடுவோம். கட்டிப்பிடிச்சு, காலைத்தூக்கி ஆடனும்னு எங்களுக்கு என்ன ஆசையா..? எங்க வீட்டு ஆம்பளை, பொம்பளைக்கெல்லாம் வெட்கம், மானம் இல்லையா..? எங்களுக்கும் அப்படியெல்லாம் ஆட விருப்பம் இல்லைதான். அதனாலதான் இப்பல்லாம் எங்கப் பிள்ளைகளை எப்படியாவது பள்ளிக்கூடம் அளவுக்காவாவது படிக்கவச்சு, மில் வேலைக்கு, ஒர்க் ஷாப்புக்குன்னு அனுப்பிகிட்டிருக்கோம்.." என்கிறார்கள் சில ஆட்டக்கார நண்பர்கள்.

பார்வையாளர்களின் மன வக்கிரங்களை திருப்திபடுத்த மேடைகளில் ஆபாசமாக பேசவும், ஆடவும் வேண்டியிருப்பதால், அது இவர்களின் சொந்த வாழ்வையும் பெருமளவுக்குப் பாதிக்கிறது. உறவுகளுக்குள் உடலுறவு என்பது இங்கே கிட்டத்தட்ட தவறில்லை. சில இடங்களில் ஆட்டத்துக்குப் போகிறவர்கள், பாலியல் தொழில் செய்ய வேண்டியிருப்பதையும் நானறிவேன். வயதும், இளமையும் இருக்கிறவரைக்கும்தான் ஆட்டத்துக்கு அழைப்பார்கள் என்பதால், 45 வயதுக்கு மேல் இங்கு பெண்கள் செல்லாக்காசாகிவிடுகின்றனர். வயசு போனால், பவுசும் போய்விடுகிறது.



இரவு பத்து மணிக்கு ஆட்டத்தைத் தொடங்கினால், விடிய, விடிய ஆட வேண்டியிருக்கும். இதற்காக இவர்கள் பெரும் சம்பளம் 2,500 முதல் 3,000 ரூபாய். பெரும்பாலும், 'ரத்னா கரகாட்டக் குழு','ரூபா கரகாட்டக் குழு' என்று பெண்களின் பெயரால் அந்தந்தக் குழுக்கள் அறியப்பட்டாலும், நடப்பில் அந்தக் குழுவின் நிர்வாகியாக இருப்பது ஒரு ஆண்தான். பெண்ணை வைத்தே ஆட்டமும், வருமானமும் இருந்தாலும் அவள் அங்கு பெயரில் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகிறாள்.

ருடத்தின் ஆறு மாதங்கள் மட்டுமே கோயில் திருவிழாக்கள் நடக்கின்றன. அந்த நாட்களில் மட்டுமே வருமானம். அதைக்கொண்டுதான் மற்ற நாட்களில் சாப்பிட வேண்டும். பெரும்பாலான செட்டுக்காரர்கள் ஏதோவொரு ஏஜண்ட் கையில் சிக்கியிருக்கின்றனர். 'வருடம் இத்தனை ஆயிரம் ரூபாய்' என்று மொத்தமாக அந்த ஏஜண்ட்டிடம் காண்ட்டிராக்ட் பேசி பணம் வாங்கிக்கொண்டு, அவர்கள் எப்போது எங்கு அழைத்தாலும் போய் ஆடிவிட்டு வருகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு அந்த 2500,3000 ரூபாயும் கிடைக்காது. நிகழ்ச்சிக்குப் போய்வர பஸ்ஸுக்கு மட்டுமே பணம் தரப்படும்.

மேடைதோறும் ஆடி எல்லோரையும் 'சந்தோஷப்படுத்தும்' இவர்கள், வாழ்நாளில் ஒரு பொழுதும் சந்தோஷமாய் இருப்பதில்லை. நகரத்தின் குப்பைக் கூடமாய் இருக்கும் இடமே இவர்களின் வாழ்விடம். எல்லா வகையிலும் இவர்களை விட மேம்பட்ட நிலையில் இருக்கும் நாம், சிந்தனையையும், செயலையும் இவர்களுக்காகவும் கொஞ்சம் செலவிடுவோம் நண்பர்களே..!

---------  Comments from original post---------

12 comments:

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

    //எல்லோரது கண்களும் தன் உடலின் எந்த பாகத்தை மேய்கின்றன என்பது தெரிந்திருந்தும், தொடர்ந்து ஆட வேண்டும். //

    இது கரகாட்டம் மட்டும் அல்ல பெண்களை முன்னிலைபடுத்தி ஆடும் எல்லா ஆட்டங்களுக்குமே பொருந்தும். சினிமாவில் ஜட்டி,பிராவுடன் (உள்ளாடைகளில் ஜிகினா சேர்த்து விட்டால் அது மேலாடை என்பதறிக) ஆட்டம் ஆடும் பெண்களின் அப்பட்டமன பாலியல் இயக்கங்கள் கொண்ட இந்த குத்தாட்டங்கள் சென்சாரின் அனுமதியுடனே காட்சிப்படுத்தப்படுகிறது.

    வெள்ளைத் தோலுடன் சினிமாவில் ஆடினால் இருக்கும் மதிப்பு இந்த தெரு ஓர ஆட்டப் பெண்களுக்கு இருக்காது. மற்றபடி ஆட்டம் எல்லாம் ஒன்றுதான்.2000 ரூபாய்க்கு தெருவில் ஆடும் போது இருக்கும் வலி 2 இலட்சம் ரூபாய்க்கு சினிமாக்காக அதே தெருவில் ஆடினால் "நடிகை" யாக கொண்டாடப்படும்.

    ***

    மிட்டாமிராசுகளும், ஊர்ப் பெரிசுகளும் கோவிலகளில் பெண்களை ஆடவிட்டு(தேவதாசி) பார்த்துக் கொண்டிருந்த காலத்தில் , சாதரணமக்கள் தெருவில் இந்த ஆட்டக்காரிகளை பார்த்துக் கொண்டு இருந்திருக்காலாம்.

    வேறு வழியே இல்லாமல் இந்த தொழிலுக்கு வருவது (விருப்பம் இல்லாவிட்டாலும் வழி வழியாக திணிக்கப்படுவது ) தவிர்க்கப்பட வேண்டும் என்றால் அவர்களுக்கு வாழ்வாதரத்தை அமைத்துக் கொள்ளும் பொருளாதார வலு வேண்டும். அதற்கு கல்வியும் அரசின் உதவியும் தேவை.

    சினிமா விழாக்களில் மாண்புமிகுக்கள் முன்னால் ஆடும் ஆட்டங்களுக்கு கரகாட்டகாரர்கள் ஏன் அழைக்கப்படுவது இல்லை. கரகாட்டகாரர்களுக்கு ஏன் சினிமா ஆட்டக்காரர்கள் போல கலைமாமணி விருது கிடைப்பது இல்லை?

    ஒருவேளை இவர்களும் மாண்புமிகுக்கள் முன்னால் ஆடினால சலுகைகள் கிடைக்குமோ?

    **

    மாடலிங்,சினிமாவும் பெண்களின் உடல் சார்ந்து இயங்கும் துறையே. ஆனால் இங்கே வருபவர்கள் புகழ் , வசதியான வாழ்க்கை வேண்டும் என்று வருகிறார்கள். அதற்கான திரைமறைவு விலைகளை கொடுக்கத் தயங்குவது இல்லை.கிராம ஆட்ட நாயகிகள் அவர்களின் அன்றாட வாழ்வாதார விசயங்களுக்காக ஆடுகிறார்கள் "வயிற்றின் வலி" மிகவும் கொடுமையானது. இரவிக்கையின் மேல் குத்தபடும் பத்து ரூபாய் நோட்டு பால் கொடுக்கும் முலையைக் குத்தினாலும்,சோத்துக்காக அழும் குழந்தைக்காக வலியைத் தாங்க வேண்டியுள்ளது.

    சினிமாவில்: ஆட்டம் கொண்டாடப்பட்டு உடல் கொள்ளை போகிறது.

    தெருவில்: கரகாட்டம் கேவலமாக்கப்பட்டு உடல் கொள்ளை போகிறது.

    நிச்சயம் இவர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. மனிதன் உள்ளவரை காமம் கலர் கலராக சட்டை போட்டுக்கொண்டு வரும். காமம் உள்ளவரை எல்லா வடிவத்திலும் அதை நுகர மனிதர்கள் விரும்புவார்கள்.கலை,வாழ்க்கை எதுவாக இருந்தாலும் யாவும் "காமம்" என்ற ஒரு நாரில் பின்னப்பட்ட பல மலர்கள்தான் இவை. முறைப்படுத்தப்பட்ட காமம் வாழ்க்கையாகிறது.

    **

    சாருக்கான சட்டையை கழட்டி அடி வயிற்றை சமீபத்தில் காண்பித்த பின்னால் அவருக்கு இரசிகைகள் பட்டாளம் கூடியுள்ளதாம். ஆணின் உடல் பெண்களாலும் இரசிக்கப்படுகிறது என்பது உபரித் தகவல்.

    **

    Wednesday, September 19, 2007 12:37:00 PM

ஆழியூரான். said...

    கல்வெட்டு.. விரிவான கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி தோழர்..

    Wednesday, September 19, 2007 12:46:00 PM

இராம்/Raam said...

    நண்பா,

    நல்ல பதிவு.....

    இதேமாதிரி நானும் ஒரு பதிவு போட்டுருந்தேன்......

    Wednesday, September 19, 2007 1:22:00 PM

அய்யனார் said...

    நல்ல பதிவு ஆழியூரான்..

    ஒரு கவிதை நினைவிருக்கா சாமி சிலைக்கு முன்னால ஆடிவரும் கரகாட்டம் பாத்து குப்பையாச்சி மனசா? எப்படியோ வரும் ..ஆனா தீம் இதான்..அங்கயும் அவள் உடல்தான்..

    பலூன் மாமா சொல்வது போல நடிகைகளுக்கு நாம் தரும் அங்கீகாரம் கரகாட்டத்திற்கு தருவதில்லை..வறுமையும் விளிம்பு நிலை வாழ்வும் சங்கடத்தை தந்தாலும் உள்ளே தீப்பற்றிக் கொள்ளாதிருக்கிறதா என்ன?

    /சாருக்கான சட்டையை கழட்டி அடி வயிற்றை சமீபத்தில் காண்பித்த பின்னால் அவருக்கு இரசிகைகள் பட்டாளம் கூடியுள்ளதாம்/

    சல் மான் கான் னு ஒருத்தர் சட்டையே போடுவதில்ல..

    அர்னால்ட்,ஸ்டாலன் இவங்களும் முண்டா பனியனோடதான் திரிவாங்க.. அழியும் உடல்தான ரசிச்சிட்டு போகட்டும் விடுங்க :)

    Wednesday, September 19, 2007 1:23:00 PM

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

    // சல் மான் கான் னு ஒருத்தர் சட்டையே போடுவதில்ல..

    அர்னால்ட்,ஸ்டாலன் இவங்களும் முண்டா பனியனோடதான் திரிவாங்க //

    :-))

    அய்யனார்,

    சாருக்கான் இப்போதான் முதமுதலா அடி வயிற்றை காட்டுகிறார் என்கிறார்கள். அதானால்தான் அது செய்தி. :-))

    // அழியும் உடல்தான ரசிச்சிட்டு போகட்டும் விடுங்க //

    :-))

    Wednesday, September 19, 2007 1:38:00 PM

லக்ஷ்மி said...

    //ஆனா, ஆடுற எங்களை மட்டும்தான் அசிங்கமா பேசுறாங்க. அப்படி ஆடச்சொல்லிக் கேக்குறவங்களையும், நாக்கத் தொங்கப்போட்டுக்கிட்டுப் பார்க்குறவங்களையும் யாரும் ஒண்ணும் சொல்றது கிடையாது.// இந்த விஷயம் மட்டும் சினிமா, கரகாட்டம், விபச்சாரம் என்று எல்லா நிலையிலும் மாறாத நிஜம்.

    //2000 ரூபாய்க்கு தெருவில் ஆடும் போது இருக்கும் வலி 2 இலட்சம் ரூபாய்க்கு சினிமாக்காக அதே தெருவில் ஆடினால் "நடிகை" யாக கொண்டாடப்படும்// நிச்சயமாய் இல்லை கல்வெட்டு. 2000த்துக்கு பதில் 2 லட்சம் கிடைப்பது மட்டுமே நிஜம். ஆனால் கொண்டாடப்படுவதெல்லாம் இல்லை. தன் மேக்கப் தொழிலாளியின் சம்பளப் பணத்தை கேட்டதற்கே விபச்சாரி என்று அழைத்தது போன்ற சொல்ல மறந்த கதைகள் நிறையவே உண்டு. அவர்களைப் பற்றிய கிசுகிசுக்களும் பாத்ரூம்களில் காத்திருக்கும் கேமராக்களும் கொண்டாடும் வழிகளா என்ன? புகழ் இருப்பது என்பது வேறு. ரூபா கரகாட்டக் குழுவின் நாயகியும் அந்த சுத்துவட்டாரத்துக்குள் எல்லோருக்கும் தெரிந்தவளாகத்தானிருப்பாள். அது போலவே நாடறிந்தவர்களாய் நடிகைகள் இருக்கிறார்கள். அவ்வளவே.

    Wednesday, September 19, 2007 2:58:00 PM

கையேடு said...

    மீண்டும் விளிம்பு நிலையில் இருப்போருக்கான ஒரு நல்ல பதிவு.

    இப்பதிவுக்கு சம்பந்தமில்லாத ஒரு சுட்டி - ஒரு பகிர்வு.

    http://home.iitk.ac.in/~amman/articles/patriotism.html

    Wednesday, September 19, 2007 4:15:00 PM

செல்வேந்திரன் said...

    கும்பாட்டம் என்றுதானில்லை ஆழி, திருவிழாக் கச்சேரியில் பாட வந்தவளை, ஆடல் பாடலுக்கு ஆட வந்தவளையெல்லாம் அடுத்த திருவிழா வரும் வரைக்கும் விடாமல் தூரத்தும் தெக்கத்தி மைனர்கள் ஏராளமாய் இருக்கிறார்கள்... ஏற்கனவே இந்தக்கலை அடுத்த தலைமுறைகள் கற்றுக்கொள்ள விரும்பாமல் சாவின் முதுகில்தான் சவாரி செய்து வருகிறது... மிஞ்சி போனால் பத்து வருஷம் தாக்கு பிடிக்கலாம்... அப்புறம் தூர்தர்ஷன் வீடியோ லைபரவரியில் மட்டும்தான் வாழும் என நிணைக்கிறேன்...

    Wednesday, September 19, 2007 7:14:00 PM

Anonymous said...

    மனம் சங்கடப்படுகிறது...

    இந்தியா என்றாலே துக்கம் மனதை அடைக்கிறது..........

    Thursday, September 20, 2007 11:04:00 AM

குசும்பன் said...

    நல்ல பதிவு ஆழியூரான், தஞ்சாவூர் கொடி மரத்து மூலையில் இருந்து இவர்கள் வீடு ஆரம்பம் ஆகும் ஒவ்வொரு வீட்டு முன்பும் சேது புகழ், சமுத்திரம் புகழ், அப்படி இப்படின்னு போர்டு மட்டும் அழகாக கலர் கலராக இருக்கும் ஆனா வாழ்கையும் வீடும் இருண்டுதான் கிடக்கும். மிக அருமையாக இருந்தது உங்க பதிவு!

    Thursday, September 27, 2007 12:15:00 PM

காரூரன் said...

    நல்ல பதிவு,

    தஞ்சை பெருங்கோயிலுள்ள‌ நிர்வாணமான ஓவியமும் கலை என்பார்கள். இது பழமை வாதமா அல்லது கலையா? ஆண்களின் பல்வீனத்தை பெண்கள் பயன் படுத்திகின்றார்களா? அல்லது பெண்களின் பலவீனத்தை ஆண்கள் பயன் படுத்துகின்றார்களா? அல்லது எளியவர்களின் பல்வீனத்தை வலியவர்கள் பயன்படுத்துகின்றார்களா? இப்படி கேள்விகள் கேள்விகளாகவே நின்று விடுகின்றன.

    Saturday, September 29, 2007 6:46:00 PM

சுரேகா.. said...

    கரகாட்டக்காரர்கள் பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்கும் எண்ணம் இருக்கிறது!

    அதற்கான திட்டமும் தயார்!

    தங்களுக்குத்தெரிந்து யாராவது இதற்கு முன்னால் இதுபற்றி எடுத்திருக்கிறார்களா?

    தயவுசெய்து விபரம் தெரிவிக்கவும்

    rsundartronics@gmail.com


-------- Comments --------------------------