Friday, November 08, 2013

எழுத்துரு: ஒரு இணைய மொண்ணையின் கடிதம்

ருத்தை கருத்தாக சொல்லிச்செல்லாமல் "இணையமொன்னீஸ்" , "அறிவாளிக்குமட்டுமே தெரியும் நான் போட்டிருக்கும் ஆடை" என்ற ரீதியில் பீடங்களில் அமர்ந்து கொண்டு , இணையத்தில் என்ன பேசினாலும் நீ "ஆசானோட (ஆசான் இத நீங்கள் சொல்லியபடி தமிங்கிலீசில் எழுதினால் நல்லா இருக்காது ) கதை படிச்சியா?" என்று கூசா தூக்கும் இரசிகர்களையும் வைத்துக்கொண்டு , பல குருத்துகளை இணையத்தில் கொட்டிவரும் அய்யா அவர்களின் குருத்தைப் ப‌டித்து , பேஸ்தடித்துபோன எந்த தகுதியும் இல்லாத ஒரு சராசரி இணைய‌ மொண்ணையின் குருத்து. உங்கள் கொல்லைப்புர வட்டம் இருக்கும் திசை நோக்கி கும்பிடு போட்டு, உங்களின் பூசாரிகளுக்கு காணிக்கை கொடுத்துவிட்டு புலம்பிகிறேன்.

ந்த ஒரு மொழியாகட்டும் அதன் எழுத்துகள் (வரி வடிவம்) அப்படியே காலம் முழுக்க இருக்கப்போவது இல்லை. தமிழகத்தில் கிடைக்கும் கல்வெட்டுகளை படிக்க அதற்கென பயிற்சி பெற்றவர்கள் தேவை....அதுவும் தமிழே என்றாலும்.  எனவே, எந்த எழுத்துருவும் காலத்தால் மாறத்தான் செய்யும். அதை தடுக்க முடியாது.  மேலும் அது மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக யாரும்  பொந்துமரபு சாமிகளிடம் வேண்டுதலும் வைக்கவில்லை.  இத்தகைய மாற்றங்கள் தடுக்க முடியாத ஒன்று ....நடந்துகொண்டே இருக்கும்.  அவை வளர்ச்சி அல்லது சீர்த்திருத்தம் பரிணாமம் போல,சிறிது சிறிதாக நடக்கும்.  தமிழில் நடித்த படம் சரியா போணியாகவில்லை என்று கவர்ச்சியாக தெலுங்கு சினிமாவில் நடித்து கல்லா கட்டப்போகும் நடிகையின் குருத்துபோல உள்ளது சிந்தனைச் சிற்பியின் குருத்து.  எழுதிய பொஸ்தம் கேரிபாட்டர் போல விற்கவில்லை என்றால், கேரிபாட்டரை தமிழ்படுத்தி கதை வியாபாரம் செய்யலாம். அதைவிடுத்து "தமிழை ஆங்கிலத்தில் எழுது" என்று குருத்துச் சொன்னால் எப்படி இணைய மொண்ணைகள் சும்மா இருப்பார்கள்? அவர்கள்தான் தற்குறிகள் , மொண்ணைகள் ஆயிற்றே? "அரசனின் ஆடை , அறிவாளிகளுக்கு மட்டுமே தெரியும். அப்படியான அறிவாளி சர்டிபிகேட் கிடைக்கும் ஒரே அக்மாரக் ஒரிஜினல் இடம் கொல்லைப்புரம் வாசகர் வட்டம்" ..... என்பதை விடாமல் மெயின்டன் பண்ணினாலும் உதவவில்லையே? என்ன செய்யலாம்?

மாற்றம் , வளர்ச்சி எல்லா மொழிகளுக்குமே பொதுவானது. தமிழும் விதிவிலக்கல்ல. மொழி என்பது ஊடகம். பேச்சாக , எழுத்தாக அதற்கேயான தனி வடிவம் உள்ளது. பல மொழிகள் ஒரே எழுத்துருக்களைக் கொண்டு, ஆனால் தனித்துவமான பேச்சுவழக்கைக் கொண்டுள்ளது.  இந்தி என்ற ஒரு மொழிக்கான தனி எழுத்துரு கிடையாது. devanagari என்ற ஒரு எழுத்துருக்களையே அது பயன்படுத்தி வருகிறது. சமஸ்கிரகம் தொடங்கி பல மொழிகள் இந்த எழுத்துருவைப் பயன்படுத்துகிறது. இன்றைய ஆங்கில எழுத்துரு என்பதன் மூலம் Anglo-Saxon இலத்தீன் என்று கலந்துகட்டி உள்ளது.

ரி விடுங்க  . குழந்தைகளுக்கு இரண்டு வரி வடிவம் இருப்பது அதுவும் தமிழுக்கு என்று தனி வரிவடிவம் இருப்பதுதான் பிரச்சனையா? உலகில் உள்ள எல்லா எழுத்துருக்களையும் ஆங்கில வரிவடிவம் கொண்டு எழுதிவிடலாம் இன்றுமுதல்.  சரி ஆங்கில வரிவடிவம் மட்டும் அப்ப‌டியே வாழ்ந்துவிடுமா என்ன? ஆங்கில‌ எழுத்துருக்களின் "மூலம்" இன்று உள்ள "நிலைமை" என்று அய்யாவிற்கு தெரியாதா என்ன? "அப்ப‌டியெல்லாம் இல்ல இணைய மொண்ணையே, தமிழ் நாளை இருப்பதற்கு உத்திரவாதம் இல்லை" என்ற வாதத்தை நீங்கள் வைக்கலாம். சரி  ".... நாளைதான் நீங்கள் இருப்பது உத்திரவாதம் இல்லையே இன்றைக்கே சொத்தை கோவிலுக்கு எழுதி வைத்துவிட்டு குழிக்குள் இறங்கிவிடுங்கள்...." என்று சொன்னால் உங்கள் இரசிக சிகாமணிகள் கோபப்படுகிறார்கள். "ஆச்சானைப் பற்றி நாக்குமேல்பல் போட்டு பேச என்ன தகுதி உள்ளது?" என்று. "சாரோட கத பொக் படிச்சியா , படிச்சியா ? சங்கத்துல மெம்பரா? என்று கேட்டு கடுப்படிக்கிறார்கள் சார். உங்கள் புனைவில் சேகர் செத்தால் என்ன செக்குமாடு சாணி போட்டால் என்ன? பொஸ்தகத்து வரிகளின் படிமத்தில் பலாச்சுளை இருந்தால் என்ன பல்லி இருந்தால் என்ன? அதை யார் பேசுகிறார்கள் அல்லது விமர்சிக்கிறார்கள். இங்கே பேசப்படுவது உங்கள் கிந்து குருத்துக்கான எதிர் குருத்து மட்டுமே. அதை உங்கள் கொல்லைப்புர வட்டத்திற்கு சொல்லுங்கள். உங்கள் கிந்து கருத்தை விமரசிக்கக்கூட பலாப்பழத்தோட வரிசையில் நிக்கனுமா என்ன? கிந்து குருத்து பலாப்பழத்தில் சுளைதேடும் வட்டத்திற்கு மட்டும் என்றால் கொல்லைப்புர வட்டத்தில் வித்திருக்கலாமே?

மிழில் இத்தனை எழுத்துகள் உள்ளன அதனால் தான் படிக்க முடியவில்லை  என்று எந்தக் குழந்தையும் என்னிடம் சொன்னது இல்லை. (நீ என்ன பிடுங்கினே எந்தனை குழந்தையிடம் பிடுங்கெனே என்று என்னைக் கேட்க வேண்டாம். எதையோ எங்கேயோ பிடுங்கிக் கொண்டுள்ளேன் என்று வைத்துக்கொள்ளுங்கனேன் கொல்லைப்புர இரசிகாஸ்). நான் எப்போதும் தமிழில் உள்ள மொத்த எழுத்துகள் என்று "உயிர்" எழுத்துகளையும் "மெய்" எழுத்துகளையும் மட்டும்தான் சொல்வேன் என் மாணவர்களிடம் . "உயிர்மெய்" எழுத்துகள் ஒரு சப்பை மேட்டர். பெருக்கல்போல பிள்ளைகள் பெருக்கிச் சொல்லிவிடுகிறார்கள்.  அதுவும் , சின்னச் சின்ன பாடலாக வாய்ப்பாடுபோல சொல்லித்தரும்போது பட்டென்று பற்றிக்கொள்கிறார்கள். எழுதுவதும் சிரமம் என்று இதுவரை யாரும் சொன்னதில்லை. சரி அதையும் தாண்டி தமிழில் இவ்வளவு எழுத்துகள் உள்ளது அதுதான் இங்கிலிபீசுக்கு மாற முக்கிய காரணம் என்று அய்யா குறி சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். சார் நீங்க சீன மாண்டெரின் எழுத்துகளையும் பாருங்க சார். 80,000 எழுத்துகள் உள்ளது என்கிறார்கள். பல எழுத்துகள் இப்போது நடைமுறையில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எந்த கொல்லைப்புர வட்ட சங்கமும் அதை ஆங்கில எழுத்துருவில் எழுதலாம் என்று சொல்லவில்லை. இத்தனைக்கும் தமிழ்நாட்டைவிட அதிகம் அம்பேரிக்காவுடன் தொழில்ரீதியான உறவில் இருப்பவர்கள் சீனர்கள்.

மிழ், ஆங்கிலம் அத்துடன் இன்னொரு மொழி என்று சுலபமாக கற்கிறார்கள் குழந்தைகள். கிந்து போன்ற பொதுவான ( not like local கொல்லைப்புர வட்ட குருத்துகள்) அதிக வீச்சுள்ள பத்திரிக்கைகளில் எழுதும் முன்னர் , குழந்தைகளின் பன்மொழித்திறன் குறித்து அதற்கான அறிஞர்களிடம் கேட்டு எழுதலாம். சும்மா ஊட்டியில் ரூம் போட்டு என்ன சொன்னாலும் சொக்கிப்போகும் இரசிகர்களிடம் பேசுவதுபோல் இங்கேயும் எழுதினால் என்ன செய்வது?  தமிழ்நாட்டில் தமிழ் வாசிப்பு குறைந்துபோகக் காரணம், எழுத்துரு என்று என்று எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?

கற்றதை பயன்படுத்த சரியான தளங்களை குழந்தைகளுக்கு ஏற்படுத்த மறந்துவிட்டோம்.

தை பொஸ்தகங்களில் உங்களின் திறமை குறித்தான விமர்சனமே அல்லது இது. எல்லாரையும்போல நீங்களும் தமிழ் எழுத்துருவின் பயனர்.  கார் ஓட்டுபவன் எல்லாம் கார் மெக்கானிக் அல்லவே? காரின் கட்டுமானம் குறித்து மெக்கானிக்கிற்கு ஓரளவு தெரியும். ஆனால் தடாலென்று "ரயிலை ரோட்டிலும் ஓட்டலாம் கார் போல" என்று கிளம்பினால். அறிவு போதமை என்று சொல்லக்கூடாதா என்ன? "இந்த விசயம் இவருக்கு தெரியாது. அதில் அவ்வளவு ஞானம் இல்லாதவர்"...... என்று சொல்வது தனிமனித தாக்குதலா என்ன? மடவாசிகள்போல் பீடத்தில் அமர்த்தி என்ன சொன்னாலும் சரி என்று சொல்லவேண்டுமா என்ன? . நான் சொல்வது "இந்த நபருக்கு இந்த விசயத்தில் போதிய அறிவு இல்லை" என்றுதான் சொல்கிறேன். இவர் இந்த விசயத்தைப் பேசவே கூடாது என்று அல்ல. "நான்  இப்படி 'ka' தட்டினால் எனது கணினி யந்திரம் "க"  காட்டுவதால் எல்லா இரசிகர்களும் இனிமேல் தமிழ் 99 போன்ற உள்ளீடுசமாசாரங்களை விட்டுவிட்டு என்னைப்போல் , எனக்கு மட்டும் சாமியாடி என்னை தொழுது பிழைத்து வாழவும்......" என்று சொன்னால் கேட்டுச்செல்ல நான் என்ன மடவாதியல்லவே? சராசரி இணைய மொண்ணையாயிற்றே என்ன செய்வது?

ப்படித்தான் பேசுவார்கள் என்பது தெரியும், இவர்கள் இப்படித்தான் என்று முன்முடிவுகளோடு விடைகளை வைத்துக்கொன்டு கேள்வி கேட்கிறீர்களோ என்ற சந்தேகம் இணையமொண்ணையான எனக்கு வருவதை தடுக்க முடியவில்லை. தயார் செய்ய‌ப்பட்ட விடைகளுக்கு வெறும் மின்னஞ்சல்மூலம் கேள்விகளைப் பெற்றுக்கொண்டு,  கோபால்பல்பொடி முதல் கோமேதகம் வரை எல்லாக் கேள்விகளுக்கும் பொந்துஞானமரபில் தேய்த்து எடுக்கப்பட்ட களிம்பு விடைகளைக் கொடுத்துக்கொண்டு இருப்பவரிடம் எப்படி உரையாடல் சாத்தியமாகும்?  விவாதம் and/or  உரையாடல் என்பது சம நிலையில் இருக்கும் இருவருக்கு இடையில் இருக்க முடியும். பீடத்தில் இருந்துகொண்டு சொல்வது உரையாடலா போதனையா?  உங்களிடம் இரசிகர்மன்ற உறுப்பினர்களும், புனைவுகள் மூலம் பெற்ற ஊடக ஒலி பெருக்கியும் உள்ளது என்பதற்காக எதையாவது சொல்லிகொண்டு இருந்தால் என்ன செய்வது? இணையமொண்ணைகள் அவர்லள் பங்கிற்கு புலம்பி வைக்கிறார்கள்.

ணையமொண்ணைகள் பொங்கல் வைப்பது நீங்கள் சொல்லும் கருத்துக்களுக்காக மட்டுமே. கருத்துசொல்லும் உரிமையின்மீது அல்ல. கதை எழுதுவதை தொழிலாக செய்து வரும் ஒருவரை , அந்த தொழில் செய்கிறார் என்பதற்காகவே என்ன சொன்னாலும் ஆதரிப்பது /எதிர்ப்பது  என்பது நடிப்பதை தொழிலாக செய்து வரும் டாக்டரு விஜயின் கட்டவுட்டிற்கு பால்பாக்கெட் பீச்சுவவது/எதிர்ப்பதைவிட‌ ஆபத்தானது. மன்னிக்க வேண்டும். புனைவுகள்மீது எனக்கு என்றும் ஈர்ப்பு இருந்தது இல்லை.  அது எனக்குத் தெரியாது. கனவில் (புனைவில்) கழுதை செத்தால் என்ன பிழைத்தால் என்ன என்று இருந்துவிடுவேன்.  அதில் பேசி ஒன்றும் ஆகப்போவது இல்லை. அதே சமயம் அதை நிராகரிக்கவும் மாட்டேன். தமிழின் வளர்ச்சியில் எல்லாம் ஒரு அங்கமே.

னது கதை என்னும் புராடக்டை தமிழ் எழுத்துரு என்னும் ஒன்றில் சமைத்து, அது கேரி பாட்டர் போல் விற்கவில்லை என்றவுடன், தமிங்கிலீசில் தயார்  செய்து விற்றால் நிறைய விற்குமே என்று ஆசைப்படுகிறீர்கள்.  புனைவுகள் தமிழ் எழுத்துருவில் கதை புத்தகமாகிறது. இந்த எழுத்துரு செத்தாலும் வேறு ஏதோ எழுத்துருவில் கதை விற்கமுடியும். பரோட்டோ மாஸ்டருக்கு பரோட்டா  அதிகம் விற்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கும். எந்த நடிகையை நடிக்க வைத்தால் படம் அதிகம் விற்கும் என்று தயாரிப்பாளர் திங் பண்ணலாம். எந்த ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் புதிய மொபலை அறிமுகப்படுத்தலாம் என்று ஒரு நிறுவன முதலாளி திங் பண்ணலாம். வணிகத்தில் இதெல்லாம் சகசம். ஆனால் தன் கொல்லைப்புர விசுவாசிகள் ஆசான் என்பதை தமிங்கிலீசில் அடித்தால் எப்படி இருக்கும் என்பதையும் சிந்திக்க வேண்டும் நீங்கள். எது சொன்னாலும் அதிருதுல்ல...ஆம் தகரங்கள் அதிரத்தான் செய்யும் கனமான கருத்து இல்லை என்றால்.

ரோட்டா மாஸ்டரும் "இங்கே சூடான பரோட்டா" கிடைக்கும் என்று தமிழ் எழுத்துருவில் எழுதி,  வெளியே தட்டி வைத்து விற்கிறார்.
இங்கே அவர் பரோட்டா தான் விற்க முய‌ல்கிறாரே தவிர தமிழ் வளர்க்க முயலவில்லை. இதே பரோட்டா கடை வேறு நாட்டில் இருந்தால் வேறு மொழியில் எழுதி வைத்து இருப்பார்.  கதை விற்பனையாளர்களும் கனவு புனைவு என்று எழுதி அதை விற்கிறார்கள். அவர்களின் கனவு புனைவு பொரோடக்ட்களை எழுதும் மொழி/வரிவடிவம் தமிழ் . தமிழ் நாசமாகப்போனாலும் அதே கனவு புனைவு பொரோடக்ட்களை வேறு மொழியில் எழுதிக்கூட சந்தைப்படுத்த முடியும். அவர்களின் சரக்கை சந்தைக்கு எடுத்துச்செல்ல எந்த எழுத்துருவும் சரி. அதற்காக எங்கள் சங்கை அறுக்க வேண்டாம் என்றுதான் கேட்டுக்கொள்கிறோம்.

***

தமிழால் நீங்களும் பிழைக்கிறீர்கள் , உங்களால் தமிழும் செழுமை அடைகிறது. இரண்டும் உண்மை.  பயன்பாடு இல்லாவிட்டல் மொழி சாகும்.  இப்படி ஒரு மொழியும் எழுத்துருவும் இல்லாவிட்டால் இதை வசப்படுத்த தோன்றியிருக்காது என்பதும் உண்மை. ஆனால் கனவுகளை புனைவுகளாக அழகாக எழுதத் தெரிந்த காரணத்தினால் , உங்கள்  வணிகம் சரியில்ல என்பதால் இப்படி "தமிங்கிலீஃச் எழுத்துருவில்  எழுதினால் என்ன?"  என்பது மாதிரியான கருத்துகள்,  மொழியை எப்படி செழுமைப்படுத்தும்?

மேலும் இணையம் என்பது இணைத்தல் மட்டும் அல்ல இணை யானவர்கள் என்ற ஒரு எண்ணம் கொண்டோர் பழகும் இடம். இதில் நீங்களும் ஒருவர் என்ற எண்ணம் வேண்டும். அப்போதுதான் உரையாடல் சாத்தியமாகும். பாப்புலர் கதை விற்பனயாளர் போன்ற தொப்பிகளுடன்  வலம்வரும்வரை மற்றவர்கள் இணைய மொண்ணைகளாத்தான் தெரிவார்கள். ஏன் என்றால் யாரும் இங்கே அவர்களின் தொழில் சார்ந்த உன்னத தொப்பிகளை அணிந்து திரிவது இல்லை.