Monday, December 09, 2013

மெய்நிகர் உலகம் பொய்யில் வாழும் நான்

மிழ் பதிவுகள், கூகுள் கூட்டல் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட ஒரு உலகம் உள்ளது. மூளையைக் கழற்றி வைத்துவிட்டு மந்தைகளுடன் சேர்ந்துவாழ்தல் ( கூட்டமாக / குழுவாக‌)  என்ற விலங்குலக நெறிப்படி வாழும் இடம்.

உள்ளுரில் அடுத்த ஆண்டுக்கான பொங்கல் விழா சினிமாப் பாட்டு டான்ஸ்கள் அதாவது பின்னனியில் சினிமாப் பாட்டைப் போட்டுவிட்டு (காமரசம் சொட்டும் பாடல்கள்) அதற்கு குழந்தைகளை ஆடவிடும் சடங்கிற்கான ஒத்திகைகள் தொடங்கிவிட்டது.   "மம்மி பேரு ஜிம்மி அப்பனுக்கு சலாம் வைக்கனும்...." என்ற‌ ரீதியில் போகும் ஒரு  என்ற பாடலுக்கு ஆடவிருந்த என்மகளைக் காப்பாற்றி , ஒரு நாடகத்தில் சேர்த்துவிட்டாகிவிட்டது. குழந்தைகளை வைத்து நல்ல மேடை நாடகம் போடவேண்டும் என்ற தளரதா முயற்சியில் , வணிகச் சமரசங்கள் போல டமிள் சங்க சமரசங்களுடன் ஏதோ ஒன்று நடந்துகொண்டுள்ளது.

மகனை அவன் நண்பர்களுடன் சேர்ந்து இசைக்குழு அமைப்பதில் பெற்றோர்களின் சக்தி அனைத்தும் கரைந்துகொண்டு உள்ளது. பெற்றோர்களுக்கு இடையேயான பஞ்சாயத்துகள் , குழந்தைகளின் ஒழுங்கீனம் (இங்கே ஒழுங்கு என்பது , 40 வயது உள்ள பாடகர் சொல்லும் இசை  சார்ந்த விதிகளில் குழந்தைகள் ஒழுகுவது மட்டுமே) என்று தாவு தீர்ந்து , டவுசர் கிழிந்து , வீட்டில் சண்டையும் சச்சரவுமாக போய்க்கொண்டு உள்ளது.

டமிள் சங்கம் இல்லாமல் கலைச்சங்கம் என்ற‌ ஒரு அமைப்பும் உள்ளது இங்கே. அவர்கள் தமிழ் கலாச்சாரம் என்று டமிள் சங்கத்தைவிட கொடுமையாக  இருப்பவர்கள். காமப்படல்களை குழந்தைகளைவிட்டு ஆடவிடும் அழகில் அவர்கள் ஒருபடி மேல்.

காமத்தில் தவறு இல்லை. சினிமாவில் 40 வயது ஆடவனும் 20 வயது பெண்ணும் ஆடிய ஆட்டத்தை பெற்றோர்கள் மேடையில் ஆடினால் நல்லது. எந்த வார்த்தைகளுக்கு ஆடுகிறோம் என்றே தெரியாமல் குழந்தைகள் பலியாக்கப்படும் கொடுமையைப் பார்த்துக்கொண்டே உள்ளேன். கையறுநிலை அல்ல கழுத்தரு நிலை.  :((

**

"என்ன தாடியெல்லாம் வச்சு இருக்கீங்க?"

"விரதம்"

"என்ன விரதம் இந்த ஊரில்? அய்யப்பசாமியா (சும்மா கேலியாக கேட்டேன்)

"ஆமாம்" என்று குண்டைத்தூக்கிப்போட்டார்.

அதோடு அவர் நிறுத்தி இருந்தால் பரவாயில்லை " கொஞ்சநாளாவது நல்லவனா இருப்போம்.... " என்று சொல்லிவிட்டு சிரித்தார்.  அவரின் மனைவி கலச்சாரம் ,விரதம் என்று பேசிக் கொண்டு இருந்தார்.

பொறுக்க முடியாமல் பிளாக்குத்தனமாக (பேக்குத்தனமாக என்று படிக்கலாம்) சில குருத்துகளைச் சொல்லி,  அனைவரும் என்னை மிரட்சியாகப் பார்த்து......
.....மறுபடியுமா ? என்ற மனையிவின் அர்த்தமான பார்வையில் நிறுத்திக் கொண்டேன்.

********************

இங்கே புலம்ப என்ன கட்டுப்பாடு புலம்பி வைப்போம்.

வழக்கமாக வேலை செய்யும் (வாலண்டியர் கூலி) அரங்கில் ஃட்ராப்ட் ஃபீர் (draft beer) ஊற்றுவதில் நான் ஒரு பிஸ்து (பிஸ்கோத்து என்றும் வாசிக்கலாம்) , நான் ஊற்றும் அழகிற்கு என்றே தனியாக சன்மானம் வைப்பவர்கள் உண்டு. ஒருமுறை 4 டாலர் வரை ஒரே ஒருவரிடம் இருந்து கிடைத்தது. பாராட்டி பாராட்டி ஒவ்வொருமுறையும் கொடுத்தார்.

கள்ளுக்குடிப்பதும், பீர் குடிப்பதும், டுவைன் வயின் குடிப்பதும் பரிமாறுவதும் ஒரே விதம் அல்ல. அதே சமயம் இப்படித்தான் செய்யவேண்டும் என்ற இலக்கணமும் ஏதும் அல்ல. ஆனால் பழமைவாதிகளுக்கு அவர்களின் பழக்கம் சார்ந்து பரிமாறும்போது (ஊற்றும்போது) மகிழ்கிறார்கள்.

**

நம்ம கனவான்கள் இன்னும் குடிப்பதை, மனையியுடன் உடலுறவு கொள்வதை ஒரு ஒழுக்கக்கேடாக அல்லது கொலைக்குற்றமாகவே பார்க்கிறார்கள். சாமிக்கு மாலைபோடுபவர்கள் முதலில் நிறுத்துவது மது அடுத்து மனைவியிடம் இருந்து விலகி இருத்தல். ஏன் என்று புரியவில்லை. சாமிக்கு இது எல்லாம் ஆகாதா என்ன?

குடிப்பது தவறு சாமிக்கு ஆகாது என்றால் அதை ஏன் 300 நாளும் செய்துவிட்டு 65 நாள் மட்டும் தவிர்க்க வேண்டும். புரியவில்லை.  கக்கூஸ்போவது சாமிக்கு நல்லதா என்ன? மாலையும் கழுத்துமாக கம்மாக்கரையில் குத்தவைச்சு பீடி வளிக்கும் அய்யப்ப சாமிகளுடன் கூட்டாம்பீ போன சம்மூவத்தில் இருந்து வந்த‌ மக்கள் எப்படி அதைமட்டும் தவிர்க்க மாட்டேன் என்கிறார்கள். அதாவது மாலையைக் கழற்றிவிட்டு கக்கூஸ் போகும் நடைமுறை உள்ளதா என்ன?

*

வாழ்க்கை என்றால் என்ன என்பதை அவர்களுக்கான அளவுகோலுடன் அணுகுகிறார்கள். நான் பார்த்த வரையில் இவர்களுக்கு குடிக்கவும் தெரியவில்லை வாழவும் தெரியவைல்லை. வயிற்றில் அதிக அளவு தள்ளிவிட்டு ஸ்டெடியாக இருந்தால் குடிபயில்வான் என்று நினைத்துக்கொள்கிறார்கள். அதை 60 நாள் தவிர்த்துவிட்டால் பக்திப்பழம் என்றும் நினைத்துக்கொள்கிறார்கள். மேலும் சைவம் என்று சொல்லிவேறு சங்கறுக்கிறார்கள்.

நல்லாருங்க மக்கா.

"சைவம்" - என்பது மதம். அது "உணவுப் பழக்கம்" அல்ல‌
http://kalvetu.balloonmama.net/2011/01/blog-post.html

மலக்குடலுடன் இறைவனைத் தரிசிக்கலாமா?
http://kalvetu.balloonmama.net/2006/07/blog-post.html