Friday, September 16, 2016

காவிரி


1. தற்கொலை, கொலை , வாகன எரிப்பு போன்ற செயல்களும் மூடத்தனங்களே.

2. அரசியல் என்பது அய்ட்டி வேலை, சாமியார் வேலை, கதை பொத்தகம் எழுதும் வேலை, கொத்தனார் வேலை போன்றதொரு வேலை. அதற்கு சிபாரிசு, பண முதலீடு என்று எல்லாம் உள்ளது.

3.உங்களின் ஓட்டுக்கு விலை கொடுத்தாகிவிட்டது. தங்கள் வாக்கு உரிமையை காசுக்கு வித்த சமூகம் , அதை வாங்கியவர்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டாகிவிட்டது. அரசியல்வாதிகளைக் கேள்வி கேட்க உங்களுக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை.

4. மழை நீர் சேமிப்பு, ஏரிகள் பரமாரிப்பு என்ற எந்த சுய சொரணயும் அற்ற சமுதாயம் நம்முடையது. அம்பேரிக்கா வந்தும் அரசால் பாதுகாக்கப்பட்ட குடிநீருக்கான ஏரிகளில் பொம்மைகளை கரைப்பது, பூசை என்ற பெயரில் குப்பைகளை எறிவது என்று நடத்தும் நாம் சிவில் விதிகளைக் கையாளவே முடியாது.

5. சினிமா தொழிலாளிகளை அல்லது கதை பொத்தக தொழிலாளிகளை கேள்வி கேட்க எந்த உரிமையும் இல்லை. அவர்கள் உங்களுக்கான பொழுது போக்கு விசயங்களை விற்று தொழில் செய்பவர்கள்.

6.பிக்பாக்கெட் அடிக்கும் கூட்டத்திற்கு தலைவனாக‌ ஒரு கொலைகாரனே வரமுடியும். மக்களாகிய‌  நாம் எந்த விதிகளையும், சிவில் விதிகளையும் கடைபிடிப்பது இல்லை. நம்மை ஆள, நம்மில் சிறந்த மொள்ளமாரிகளால்தான் முடியும்.

7. இந்தப் பிரச்சனையை இணையத்தில் பேசி தீர்க்கமுடியாது. உலக அளவில் இந்த நூற்றாண்டிற்கான அரசியல் போராட்டவடிவம் மாறி இருந்தாலும், இந்தியா  & தமிழர்கள்  இன்னும் கதை பொத்தகம்  சினிமா தாண்டி இணையத்தை உருப்படியாக பயன்படுத்துவது கிடையாது.

8.கருத்துச் சுதந்திரம் என்பது, உங்களுக்கு பிடித்த கருத்தை நான் சொல்லும்போது நீங்கள் போடும் + அல்ல, உங்களுக்கு பிடிக்காத கருத்தை நான் சொல்லும்போது நீங்கள் எனது சொல்லும் உரிமைக்கு கொடுக்கும் + தான்.

9.கருத்து , உரையாடல் என்பது அரசியல் அம்மாவிற்கும்  அரசியல் அய்யாவிற்குமே நடக்காது எனும்போது , அடுத்த மாநிலத்துடன் பேசுவது (கருத்து , உரையாடல்)  என்பது என்றுமே நடக்கப்போவது இல்லை. இது கசப்பான உண்மை.

10.தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் உள்ள ஒரே பொது அமைப்பு என்பது மத ரீதியான இந்து என்ற சனாதனமும் (அதிக மக்களால் கடைபிடிக்கப்படுவது) அரசியல் ரீதியான இந்தியா பொது  விதிகளும்தான். இப்படியான இருவருக்கும் உள்ள ஒற்றுமை அம்சங்களால் இதற்கு விடைகாண முடியவில்லை என்றால் எதனாலும் முடியாது.

.