Thursday, December 20, 2018

சனாதன பயங்கரவாத கருத்தியலும், சனநாயக இந்தியாவும்: திருமாவளவன்

ழல் இந்த நாட்டுக்கு கேடு விளைவிக்கிறது. ஊழலை ஒழிக்க வேண்டும். அதிலே யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. மது மக்களை சீரழிக்கிறது. மதுவை ஒழிக்க வேண்டும். மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். அதிலே யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால்,ஊழலை ஒழிக்கவேண்டும் என்கிற‌ விழிப்புணர்வு பெற்றிருக்கிற‌ அளவுக்கு,மதுவை ஒழிக்கவேண்டும் என்கிற‌ விழிப்புணர்வை பெற்றிருக்கிற‌ அளவுக்கு,சனாதன‌த்தின் பயங்கரவாதத்தை புரிந்திருக்கிறோமா? அந்த விழிப்புணர்வை பெற்றிருக்கிறோமா? என்கிற‌ கேள்வி நம் முன்னால் நிற்கிறது. அதைப் பற்றிய புரிதல்,அரசியல் களத்தில் பணியாற்றக் கூடியவர்களுகிடையிலும் கூட பெரிதாக இல்லை என்பதுதான். இடதுசாரிகள் அதைப் புரிந்து வைத்திருக்கிறார்கள். அம்பேத்கர் இயக்க,பெரியார் இயக்கத் தோழர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். அதிலும், எந்தளவுக்கு அந்த புரிதல் இருக்கிறது? என்பதை, நாம் மதிப்பீடு செய்யவேண்டிய ஒரு கட்டத்தில் இருக்கிறோம். இந்த தேசத்திற்கு ஊழலால் வருகிற ஆபத்தைவிட, மதுவால் வருகிற ஆபத்தைவிட,சனாதன பயங்கரவாதத்தால் வருகிற ஆபத்து, மிகவும் கொடியது. ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் இந்த தேசத்தை இழுத்துச் செல்வதற்கான ஒரு முயற்சி. சொல்லப்போனால்,சனாதன இந்தியாவை மீண்டும் இங்கே கட்டிக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம்.

இர‌ண்டு கோட்பாடுகளைக் இடையிலே யுத்தம் நடப்பதைப் போல,இர‌ண்டு சட்டங்களுக்கிடையில் யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. Code of Manu , Code of Ambedkar. Code of Manu என்பது மனுதர்மச் சட்டம். Code of Ambedkar என்பது இந்திய அரசிலமைப்புச் சட்டம். இது சனநாயதத்தை நிலைநாட்டப் போராடுகிறது. அது சனாதன‌த்தை நிலைநாட்டப் போராடுகிறது. ஆக இந்த இடத்தில்தான் நாம் எந்த பக்கம் நிற்க‌ வேண்டும் என்கிற, தேவை எழுகிறது. பௌத்தம் இதை எதிர்த்து போராடியதால் தான் தோழர்களே,வீழ்த்தப்பட்டது. இன்றைக்குள்ள‌ இந்திய அரசமைப்புச் சட்டம் 1950 லே நடைமுறைக்கு வந்தது என்றாலும் கூட, உண்மையில் இன்றைக்கு பத்து சதவீதம் கூட அரசியலமைப்புச் சட்டம் என்கிற இந்த இந்தியக் கட்டமைப்புச் சட்டம் நடைமுறையில் இல்லை.அதனால்தான் ஆணவக் கொலைகள் நடக்கின்றன.

சாதிக் கலப்பு நிகழ்ந்துவிடக்கூடாது. ஒரு சாதி இன்னொரு சாதியோடு கலந்துவிடக் கூடாது என்பது சனாதனம். சாதி விட்டு சாதி திருமணம் செய்ய கூடாது. இது தலித் அல்லாதவர்களுக்கும், தலித்துகளுக்கும் இடையிலான ஒரு தீண்டாமைச் சுவர் இருப்பதாக மட்டுமே நாம் புரிந்துகொண்டிருக்கிறோம். அதுவல்ல,ஒவ்வொரு சாதிக்கிடையிலும் தீண்டாமைச்சுவர் இருக்கிறது. எல்லா சாதிகளுக்கு இடையிலும் ஏற்றத்தாழ்வு இருக்கிறது. பார்ப்பனர்களைத் தவிர அத்தனை சாதியினரும் கீழ்சாதி என்பதுதான் மனுதர்மம். அந்த மனுதர்மக் கோட்பாட்டில் சனாதன கோட்பாடு அல்லது வர்ணாசிரமக் கோட்பாடு என்று சொல்லுகிற போது,நான்கு வர்ணங்களை சனாதனம் சொல்கிறது. பிராமணர்,சத்திரியர்,வைசியர்,சூத்திரர் என்கிற இந்த நான்கு வர்ணங்களுக்கிடையிலும் சமத்துவம் கிடையாது.

பிராமணர்களுக்குள்ளேயே ஆயிரத்தெட்டு சாதிகள். தமிழ்நாட்டில் இருக்கிற அய்யரும் அய்யங்காரும் ஒன்றல்ல. அவர்களுக்கிடையே இடைவெளி இருக்கிறது. தீண்டாமைச்சுவர் இருக்கிறது. அய்யர் வீட்டுக்குள்ளே அய்யங்கார் நுழைந்து விட முடியாது. அய்யர்,அய்யங்கார் ஒருவருக்கொருவர் கொடுக்கல் வாங்கல்,பெண் கொடுக்க பெண் எடுக்க என்பது இயல்பாக நடக்க வாய்ப்பே இல்லை. அய்யர், அய்யங்கார் நம்பூதிரிகளின் வீட்டுக்குள்ளே நுழைய முடியுமா? என்றால் நுழையமுடியாது. கேரளாவில் இருக்கிற நம்பூதிரிகள் இந்தியாவிலேயே மிக உயர்ந்த சாதி என்கிற எண்ணத்தோடு இருப்பவர்கள். நம்பூதிரிகளின் வீட்டுக்குள்ளே யாரும் நுழைந்துவிட முடியாது. மேற்கு வங்கத்தில் இருக்கிற Mukherjee, Banerjee, Chatterjee என்கிற இந்தப் பார்ப்பனர்கள்,நம்பூதிரிகளுக்குச் சமமானவர்கள் இல்லை. அவர்களுக்கிடையிலேயும் சமத்துவம் கிடையாது. பார்ப்பனர்களிலே கோயில் பூசாரி வேலை செய்யக்கூடிய பார்ப்பனர்கள் வேறு குலம் கோத்திரம். ஈமச்சடங்குகள் செய்கிற‌ பார்ப்பனர்கள் வேறு குலம், வேறு கோத்திரம். சவுண்டிப் பார்ப்பனர்கள் என்று சொல்வார்கள் ஈமச்சடங்குகளை செய்யக்கூடிய பார்ப்பனர்களை. சவுண்டிப்பார்ப்பனர்கள்,கோவிலில் பூசாரி வேலை செய்யக்கூடிய பார்ப்பனர்களோடு சமம் கிடையாது. சமையல் தொழில் செய்யக்கூடிய பார்ப்பனர்கள் சமம் கிடையாது.

இப்படி சாதிகளுக்கிடையிலே சமத்துவம் இல்லாத ஒரு நிலையை நிலைநாட்டி இருப்பது சனாதனம். மகாராஃச்டிராவிலே இருக்கிற பார்ப்பனர்கள் தங்களை "சித்பவன் பார்ப்பனர்கள்" என்று சொல்லிக் கொள்கிறார்கள். காஃச்மீரிலே இருக்கிற பார்ப்பனர்கள், "கவுல் பார்ப்பனர்கள்" என்று சொல்லிக் கொள்கிறார்கள். அண்மையிலேகூட கூட ஒரு பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி அவர்களை,கோயில் பூசாரி அவர்கள், "உன் குலம் கோத்திரம் என்ன?" என்று கேட்டபோது, "நான் காஃச்மீரத்தைச் சார்ந்த கவுல் பார்ப்பனர்" என்று சொல்லியிருக்கிறார். அது பூசாரி கேட்டதனால் சொல்ல வேண்டிய கட்டாயம். ஆக, அப்படி சொல்ல வேண்டிய நிலை இந்த சமூகத்தில் இன்றைக்கும் இருக்கிறது. நான் கூட கோயில்களுக்குப் போனால் என்னை கேட்கிறார்கள். நானும் ஏதாவது ஒன்றைச் சொல்ல வேண்டிய நிலையில், நாம் இருக்கிறோம். ஆக இதுதான் இன்றைக்கு சமூக யதார்த்தம்.

சத்திரிய வர்ணத்திற்கும், பிராமண வர்ணத்திற்கும் எப்படி சமத்துவம் இல்லையோ,அது போல் இந்த சத்ரிய குலத்திற்குள் ஆயிரத்தெட்டு சாதிகள். எந்த சாதியும் ஒன்றுக்கொன்று சமமானவை அல்ல. பெண் கொடுக்க, எடுக்க முடியாது. அவர்களுக்கிடையிலேயே ஏற்றத்தாழ்வு உண்டு. குலம் கோத்திரம் உண்டு. அப்படி கூறுபோட்டு வைத்து இருப்பதுதான் சனாதன தர்மம். மன்னாதி மன்னன் ராசாதிராச‌ன் என்று சொன்னாலும்,ஒரு கோவிலின் கருவறைக்குள்ளே,பாண்டிய மன்னனாக இருந்தாலும்,சோழ மன்னனாக இருந்தாலும்,சேர மன்னனாக இருந்தாலும் கருவறைக்குள் நுழைய முடியாது. பூணூல் போட்டவர் மட்டும்தான் கருவறைக்குகுள்ளே நிற்க‌ முடியும். அவன் கையில் இருக்கிற வாளைவிட,இவன் தோளில் கிடக்கிற‌ பூணூலுக்குத்தான் வலிமை அதிகம். அவ‌னால் மட்டும் தான் கருவறைக்குள்ளே நுழைய முடியும். இதை எது நிலைநாட்டியது? வன்முறை இல்லாமல் இதை நிலைநாட்டி இருக்க முடியுமா? ஒடுக்குமுறை இல்லாமல் இதை நிலைநாட்டி இருக்க முடியுமா? மன்னருடைய மனைவி என்று,எந்த ராணியாவது கருவறைக்குள்ளே நுழைந்துவிட முடியுமா? இன்றைக்கு சபரிமலைக்குள்ளே நம் வீட்டுப் பெண்கள் வழிபாடு செய்யமுடியவில்லை என்று நாம் சொல்கிறோம். அந்த காலத்தில் சேரனுடைய மனைவியும் நுழைந்து இருக்க முடியாது. மகாராணியாய் இருந்தாலும் கூட, அங்கே போய் இருக்க முடியாது. ஏனென்றால் மகாராணியும் மாதவிடாய்க்கு விதிவிலக்கானவள் அல்ல. அவர்களில் ஐதீகம், மாதவிடாய் பருவத்தில் இருக்கிற பெண்கள், படிக்கட்டு ஏறக்கூடாது என்பதுதான்.

அண்மையிலே நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது, ராசஃச்தானிலே,உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சர் "யோகி ஆதித்யநாத்" ஒரு அறிவிப்பைச் செய்தார். "ராசஃச்தானில் பிசேபி ஆட்சிக்கு வந்தால்,பால்ய விவாகத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வருவோம்". பால்ய விவாகம் என்பது சனாதனம். சிறுவனுக்கும், சிறுமிக்கும் திருமணம் செய்வது மனுதர்மச் சட்டத்தின்படி செல்லும். இன்றைக்கு நாம் நடைமுறையிலே வைத்திருக்கிற அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அது குற்றம். விதவை மறுமணம் செய்யக்கூடாது என்பது சனாதனம்,மனுதர்மம். சிறுமியே விதவையானால் கூட அவளுக்கு மொட்டை அடிக்க வேண்டும்,வெள்ளைப்புடவை உடுத்தவேண்டும்,தாலி அறுக்க‌வேண்டும்,கூந்தலை பறிக்கவேண்டும்,பூவைப் பறிக்கவேண்டும்,வளையலை உடைக்க வேண்டும். இதுதான் மனுதர்ம கோட்பாடு. இதுதான் சனாதனம். மக்கள் தொகையில் பாதியாக இருக்கிற பெண்களை ஒட்டுமொத்தமாக அடக்கி,ஒடுக்கி,முடக்கி வைத்தார்கள். மூலைக்குள்ளே ஒடுக்கி வைத்தார்கள். யாரும் படிக்க முடியாது. அவர்களுக்கு கல்வி இல்லை. மாதவிடாய் காலத்தில் அவர்களுக்கும் தீட்டு. வீட்டுக்கு வெளியேதான் கிட‌க்க வேண்டும்.

இந்தியா முழுவதும் கிராமங்கள் இரண்டு வாழிடங்களாக பிரித்து வைக்கப்பட்டிருக்கின்றன. ஊர்தெரு,சேரி. ஒரு இரட்டை இந்தியாவாக இருக்கிறது. சேரி இந்தியாவாக, ஊர்தெரு இந்தியாவாக, இரட்டை இந்தியாவாக இருக்கிறது. இரட்டைக் குவளை மட்டுமல்ல,இரட்டை வாழ்விடம்,இரட்டை சுடுகாடு. இது இன்றைக்கு அமைதியான முறையில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த அமைதி எவ்வளவு கொடூரமான ஒடுக்குமுறையால் நிலை நிறுத்தப்பட்டு இருக்கும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். ஊர்தெரு என்கிற‌ இடத்திலே,எல்லா சாதிகளும் கலந்து, ஒரு வீடு ஒரு சாதி, இன்னொரு வீடு அடுத்த சாதி, என்று சாதிக்கலப்புடன் தெருக்கள் இருப்பதில்லை. அதிலே மிகத்தெளிவாக, இது "கோனார் தெரு", இது "பிள்ளைமார் தெரு", இது "செட்டியார் தெரு", இது "முதலியார் தெரு", இது "படையாட்சி தெரு" என்று ஒவ்வொரு கிராமத்திலும் சாதிவாரியாக தெருக்கள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.யார் இதை வடிவமைத்தது? யார் இதை நிலைநாட்டியது? எத்தனையோ படையெடுப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால்,இந்த சமூகக் கட்டமைப்பில் சிறிய சீர்குலைவும் ஏற்படவில்லை.

மொகலாயர்களும் இந்த நாட்டை ஆண்டிருக்கிறார்கள் பல நூறு ஆண்டுகள். ஆங்கிலேயர்களும் இந்த நாட்டை ஆண்டிருக்கிறார்கள் பல நூறு ஆண்டுகள். எத்தனையோ அந்நியப்படையெடுப்புகள் இங்கே நிகழ்ந்திருக்கின்றன. எவ்வளவோ மாமன்னர்கள் இந்த நாட்டை ஆண்டிருக்கிறார்கள். ஆனால்,இந்த சனாதனக் கட்டமைப்பில் சிறிய மாற்றத்தைக்கூட ஏற்படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள். அந்த அளவுக்கு இந்த சமூகக் கட்டமைப்பின் வடிவம் வலுவாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அந்த அளவுக்கு சனாதனம் கோலோச்சியிருகிறது. மிக வலிமையாக கோலோச்சியிருகிறது. பெண்கள் குடும்ப என்ற அமைப்புக்குளே கட்டுப்பட்டு கிடக்கிறார்கள். மாமியார் என்கிற பெண், மருமகள் என்கிற பெண்ணை கொடுமையாக ஒடுக்குகிறாள். இந்த ஒடுக்குமுறையை மாமியாருக்கு கற்பித்தது யார்? ஆணாதிக்கத்தை இந்த மண்ணில் நிலைநாட்டியது அது? எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தும், ஆணாதிக்கத்தை தகர்க்க முடியவில்லை. இந்த மண்ணில் நீண்ட நெடுங்காலமாக இரண்டு கோட்பாடுகளுக்கு இடையிலே யுத்தம் நடந்து கொண்டே இருக்கிறது. ஒரு கோட்பாடு சனாதன கோட்பாடு, இன்னொரு கோட்பாடு ச‌னநாயகக் கோட்பாடு.

ச‌னநாயகம் என்கிற‌ சொல்லாட்சி இந்த நூற்றாண்டில் நடைமுறைக்கு வந்தது என்றாலும்கூட, ச‌னநாயகம் என்கிற கருத்து அல்லது சிந்தனை என்பது,கௌதம புத்தரின் காலத்திலிருந்தே நடைமுறையில் இருக்கிறது.அன்றைக்கு அதற்குப் பெயர்  பெயர் பௌத்தம். இன்றைக்கு நாம் அதற்கு அரசியல் சொல்லாடலாக Democracy அல்லது ச‌னநாயகம் என்று சொல்கிறோம். சனாதனக் கருத்தை எதிர்த்து கௌதம புத்தர் தான் ஒரு மாற்றுக்கோட்பாட்டை முன் வைக்கிறார். அதுதான் பௌத்தம். பௌத்தம் என்பதை சிலர் மதமாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். பௌத்தம் மதம் அல்ல. அது சனாதன் எதிர்ப்பு கருத்தியல்.  சனநாயக்கோட்பாடு. சமத்துவத்தை,சகோதரத்துவத்தை,சுதந்திரத்தை வலியுறுத்தக்கூடிய ஒரு கோட்பாடு. இதை எப்படி நாம் உறுதிப்படுத்த முடியும் என்று சொன்னால்,புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் அரசியல் அமைப்புச் சட்டத்தை எழுதி,அதற்கான முகவுரையை எழுதுகிறபோது,அதிலே மிக முக்கியமான நான்கு சொற்களை பதிவு செய்திருக்கிறார். அதுதான் அந்த அரசியலமைப்புச் சட்டத்திற்கான அடிப்படையான சொற்கள். அல்லது, கோட்பாட்டுச் சொற்கள் என்று சொல்லலாம். அதற்கான கோட்பாடு அந்த நான்கு சொற்களில்தான் அடங்கியிருக்கிறது.

அரசியல் அமைப்புச் சட்டம் என்று இதற்கு நாம் பெயர் சொல்வதைவிட, இந்திய‌ கட்டமைப்புச் சட்டம் என்று சொல்வதுதான் மிகப் பொருத்தமாக இருக்கமுடியும். Constitution of India என்கிற‌ ஆங்கில சொற்றொடருக்கு பொருத்தமான தமிழாக்கம், "இந்திய‌ கட்டமைப்புச் சட்டம்" என்று சொல்வதுதான். நாம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்று அழைக்கிறோம். அரசியலமைப்பு, சமூக அமைப்பு, பொருளாதார அமைப்பு, கலாச்சார அமைப்பு, இவை அனைத்தும் கொண்ட ஒரு இந்தியக் கட்டமைப்பு, எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டும் நூல்தான், சட்டம்தான் Constitution. எந்தவொரு சட்டமும் கோட்பாட்டின் அடிப்படையில் இருந்துதான் வரையறுக்கப்படும். சட்டம் வெறும் சட்டமாக இருக்காது. அதற்கு ஒரு கோட்பாடு உண்டு. ஆகவே,இந்த அரசியலமைப்புச் சட்டம் என்று சொல்லப்படுகிற,இந்திய‌ கட்டமைப்புச் சட்டத்திற்கான கோட்பாடு, இந்த நான்கு சொற்களில் அடங்கியிருக்கிறது. என்ன அந்த நான்கு சொற்கள் என்றால், Justice நீதி, Liberty சுதந்திரம், Equality சமத்துவம், Fraternity சகோதரத்துவம். இந்த நான்கு சொற்களும் மிக முக்கியமானவை. அந்த அரசியலமைப்புச் சட்டத்தின் அடித்தளமான சொற்கள்.

இதைப்பற்றி விமர்சிக்கிறவர்கள்,புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களைப்பற்றி விமர்சிக்கிறவர்கள்,இது ஃபிரஞ்சுப் புரட்சியின் வரலாற்றில் இருந்து காப்பியடிக்கப்பட்ட ஒன்று. அதிலிருந்து இவர் எடுத்துக் கையாண்டிருக்கிறார். இவர் சுதந்திரமாக, சொந்தமாக ஒன்றும் சிந்தித்து எழுதவில்லை என்கிற‌ அடிப்படையிலேயே, அவரை விமர்சித்த காலத்தில்,அதற்கு அவர் ஒரு பதில் சொல்லியிருக்கிறார். "நான் இந்த சொற்களை ஃபிரஞ்சுப் புரட்சியின் வரலாற்றில் இருந்து எடுத்துக் கையாண்டதாக பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒரு உண்மையைச் சொல்ல விரும்புகிறேன். இந்த சொற்களை நான் புத்தரின் போதனைகளில் இருந்து எடுத்து கையாண்டிருக்கிறேன்" என்று சொல்லி இருக்கிறார். ஆக ,புத்தரின் போதனைகளில் இருந்து எடுத்துக் கையாளப்பட்ட அந்த சொற்கள்தான், liberty equality and fraternity என்கிற சொற்கள். அம்பேத்கர் அவர்களே அதைப் பதிவு செய்கிறார்,குறிப்பிட்டிருக்கிறார். இவைதான் இன்றைக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் அடிநாதமாக, அடித்தளமாக விளங்குகின்றன. இதனடிப்படையில்தான் அரசியலமைப்புச் சட்டம் முழுமையாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. Justice For All எல்லோருக்குமான நீதி. சுதந்திரம்,கருத்துச் சொல்ல சுதந்திரம்,உடை உடுத்த சுதந்திரம்,உணவு உண்ண சுதந்திரம். சுதந்திரம், அதுதான் சனநாயகத்தின் ஆணிவேர். சனநாயகத்திற்கான அடிப்படை.

Equality, equality of status and of opportunity என்பதை அதிலே பதிவு செய்திருக்கிறார். அது ஆண்,பெண் இருபாலருக்கும் பொதுவானது. ஆணும் பெண்ணும் சமத்துவம், சமமானவர்கள். சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், மொழியின் பெயரால், பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு என்கிற சமத்துவமின்மை கூடாது. சமத்துவம் Equality .இதுவெல்லாம் நடைமுறைக்கு வரவேண்டுமானால் சமூகத்தில் சகோதரத்துவம் என்பது இங்கே நிலைநிறுத்தப்பட வேண்டும். சகோதரத்துவத்தை மறுப்பது சனாதனம். சமத்துவத்தை மறுப்பது சனாதனம். சுதந்திரத்தை ம‌றுப்பது சனாதனம். இதை வழங்குவது,சுதந்திரத்தை வழங்குவது,அனைவருக்கும் நீதி வழங்குவது, சமத்துவத்தை வழங்குவது,சகோதரத்துவத்தை வழங்குவது,ச‌னநாயகம். ஆகவே இந்த நான்கையும் அடிப்படையாகக்கொண்டு இந்திய கட்டமைப்பு சட்டத்தை வரையறுத்த புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், இந்த அரசு எத்தகைய அரசாக இருக்கும் என்பதை, அந்த preamble என்கிற முக‌வுரையிலே  சொல்கிறார். SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC . இதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் அல்லது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வரையறுத்த புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், கண்ட கனவு. நாம் கட்டமைக்கப் போகிற இந்தியா எப்படிப்பட்ட இந்தியாவாக இருக்க வேண்டும் என்றால், எப்படிப்பட்ட அரசு இங்கே அமைக்கப்பட வேண்டும் என்றால், SOVEREIGN, SOCIALIST, SECULAR, DEMOCRATIC, REPUBLIC . "இறையாண்மை உள்ள,சமதர்மம் உள்ள,மதச்சார்பற்ற,ச‌னநாயக குடியரசை நிறுவுவோம். எதற்காக? அனைவருக்கும் நீதி கிடைப்பதற்காக,அனைவருக்கும் சுதந்திரம் கிடைப்பதற்காக,அனைவருக்குமிடையிலும் சகோதரத்துவம் நிலைநாட்டப்படுவதற்காக,இந்திய‌ மக்களாகிய நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம்" என்றுதான், அந்த முகவுரை தொடங்குகிறது.

அதில் SECULAR என்பது இடையிலேயே இணைக்கப்பட்ட ஒரு சொல். அம்பேத்கர் அவர்கள் சட்டத்தை எழுதிய காலத்திலேயே,தொடக்கத்திலேயே,அது இடம்பெறவில்லை. இந்திராகாந்தி அம்மையார் அவர்கள்,பிரதமராக இருந்த காலத்திலே,அரசியலமைப்புச் சட்ட திருத்தம் கொண்டு வந்து,இடையிலே அது இணைக்கப்பட்டது. ஆனால், அதற்கான அடிப்படை என்பது,ஏற்கனவே அந்த சட்டத்தில் இடம் பெற்றிருக்கிறது. மதசார்பற்ற ஒரு அரசு என்பது,நிறுவப்பட்ட ஒன்று. உலகத்தில் எல்லா நாடுகளும், அரசியல் அமைப்புச்சட்டத்தின் மூலம்,அரச மதத்தை அறிவிப்பு செய்திருக்கிறார்கள். அரபு நாடுகள் எல்லாம் இசுலாம் சார்ந்த அரசு. ஆசிய நாடுகள் எல்லாம் பௌத்தம் சார்ந்த அரசுகள். ஐரோப்பிய நாடுகள் எல்லாம் பெரும்பாலும் கிறித்தவம் சார்ந்த அரசுகள். ஆக அந்தந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டம்,அரச மதம் எது என்பதை வெளிப்படையாகவே பிரகடனம் செய்திருக்கின்றன. இலங்கையின் அரச மதம் பௌத்தம். அதைப்போல, அரேபிய நாடுகளின் அரச மதம் இசுலாம். ஆசிய நாடுகளில் பெரும்பான்மையான நாடுகள் இந்தியாவைத்தவிர,பாகிஃச்தானைத்தவிர,பெரும்பாலான நாடுகள் பௌத்த நாடுகள். பௌத்த மதம் அரச மதம். ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டம்தான் அப்படி அரசமத‌த்தை declare செய்யாத அரசியலமைப்புச் சட்டம். பிரகடனம் செய்யாத ஒரு அரசிலமைப்புச் சட்டம். ஆக, மதச்சார்பின்மை என்பது, அரசியலமைப்புச் சட்டத்தின் அடிநாதங்களுல் ஒன்று. அதனுடைய ஆன்மாவில் ஒன்று. அதுதான் மிக முக்கியமானது. ஆகவே இடைக்காலத்திலே அது இணைக்கப்பட்டது. ஆக,இதுதான் அம்பேத்கர் கனவு கண்ட இந்தியா. SOVEREIGN, SOCIALIST, SECULAR, DEMOCRATIC, REPUBLIC .அப்படிப்பட்ட ஒரு இந்தியாவை நாம் கட்டமைத்துக் கொண்டு வருகிற நேரத்தில்,அதைத் தகர்த்துவிட்டு,ஆயிரக்கண‌க்கான தலைமுறைக்கு முன்னாள் இருந்த சனாதன இந்தியாவை இங்கே நிலைநாட்ட வேண்டும் என்று துடிக்கிறது சனாதனக் கூட்டம்.

ஆகவே, இந்த சனாதனம் என்பது எவ்வளவு வலிமையானதாக இருக்கிறது,எவ்வளவு கொடூரமாக இருக்கிறது,எவ்வளவு பயங்கரமான கருத்தியலாக இருக்கிறது என்பதற்கு அண்மையிலே நடந்த நான்கு படுகொலைகளை முக்கியமாக நாம் பார்க்கலாம். மராத்திய மாநிலத்தில் "நரேந்திர தபோல்கர்" (Narendra Dabholkar), "கோவிந்த் பன்சாரே" (Govind Pansare)இந்த இரண்டு பேரும் இசுலாமியர்களா? கர்நாடக மாநிலத்தில் கொல்லப்பட்ட பேராசிரியர் "கல்புர்கி"யும் (Kalburgi), "கௌரி லங்கேசு"ம்(Gauri Lankesh) கிறித்தவர்களா? இவர்கள் இந்துக்கள்தான். இவர்களை "சனாதன் சன்ஃச்தா" (Sanatan Sanstha ) என்கிற‌ ஒரு அமைப்பு தேடிப்பிடித்து வீட்டுக்கு போய், நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்து, சுட்டுக் கொலை செய்கிறார்கள். ஏன்? ஏன் என்கிற‌ கேள்விக்கு காந்தி படுகொலையை இணைத்துப் பார்த்தால் நாம் புரிந்துகொள்ள முடியும். காந்தியடிகள் புரட்சியாளர் அம்பேத்கர் பார்வையில் அவரும் ஒரு சனாதனத்தின் மாற்று வடிவம் தான். அவர் தீவிரமான இந்துத்துவ சிந்தனையாளர். இந்து மதத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர். அதனால்தான் தாழ்த்தப்பட்ட மக்களை அரசியல் ரீதியாக பிரிக்கக் கூடாது என்று,உண்ணாநிலை அறப்போராட்டம் இருந்தார். இந்துமதம் பலவீனப்பட்டு விடக்கூடாது,இந்துக்கள் பிளவு பட்டுவிடக்கூடாது  என்கிற‌ அடிப்படையிலே,அந்தக் கருத்தை அவர் முன்வைத்தார். "பிறவி அடிப்படையில் ஏற்றத்தாழ்வு இருப்பது என்பது,ஆண்டவன் இட்ட கட்டளை" என்பதை நியாயப்படுத்தக் கூடியவர்தான் காந்தியடிகள். அப்படிப்பட்ட காந்தியடிகளை RSS அமைப்பைச் சார்ந்த நாத்துராம் கோட்ஃசே (Nathuram Godse) சுட்டுக் கொன்றதற்கு என்ன காரணம்? அதி தீவிரமான இந்துத்துவ பற்றாளர் காந்தியடிகளை, RSS கும்பல் சுட்டுக் கொன்றதற்கு என்ன காரணம்? அவர்கள் விரும்பிய இந்தியாவைக் கட்டமைப்பதற்கு,காந்தியடிகளின் அணுகுமுறை எதிராகப் போய்விடும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்கிறார்கள். ஏனென்றால் விடுதலை அளிக்கப்படுகிற‌ அந்த காலகட்டத்தில்,பாகிஃச்தான் பிரிந்து செல்லக் கூடிய சூழல் ஏற்பட்டபோது,இருதரப்பிலும் வன்முறைகள் நிகழ்ந்து இலட்சக்கணக்கானோர் கொல்லப்படும் நிலை ஏற்பட்டது. அப்போது "இந்துக்களும் முஃச்லிம்களும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்" என்று அவர் பிரச்சாரம் செய்தார். இந்துக்களும் இஃச்லாமியர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சொன்னதே, அவர்களின் இந்துராசுடிரக் கனவுக்கு எதிராகப் போய் முடியும் என்று, முன்கூட்டியே சிந்திக்கிற ஒரு அமைப்புதான் RSS. மிகக் கொடூரமான,ஒரு பயங்கரவாதத்தை,ஆயதம் ஏந்தி,படுகொலை செய்யக்கூடிய ஒரு போக்கினை அவர்கள் அக்காலத்திலேயே கையில் எடுத்தார்கள்.

இந்துக்களும் இஃச்லாமியர்களும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று சொன்னதோடு மட்டுமில்லாமல்,பாகிஃச்தான் பிரிந்த நிலையில்,அன்றைய இந்திய அரசு,ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருந்தவர்கள்,பாகிஃச்தானுடைய‌ கட்டமைப்புக்காக வழங்க வேண்டிய கடைசித் தவணை தொகையை தர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். Last installment க‌டைசித் தவணைத் தொகை. நேரு அவர்கள் அதை நிறுத்தி வைத்தார். வன்முறை அடங்கட்டும் என்று நிறுத்தி வைத்தார். உடனே உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியவர் காந்தி. அதை உடனடியாக வழங்க வேண்டும். அவர்கள் பிரிந்து போய்விட்டார்கள். அவர்களுக்குச் சேர வேண்டிய தொகையை, முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என்று அவர் போராட்டம் நடத்தினார். இதுதான் RSS இயக்கத்தின் கண்களை உறுத்தியது. ஒரு அதிதீவிர இந்துத்துவ பற்றாளரான, எந்நேரமும் ஃக‌ரே ராம் ஃக‌ரே ராம் ஃக‌ரே கிருஃச்ணா என்று சொல்லிக்கொண்டே, முனகிக்கொண்டே இருந்த, காந்தியடிகளையே ஈவிரக்கமில்லாமல் சுட்டுக் கொன்றார்களே,அதனுடைய‌ தொடர்ச்சிதான் தபோல்கரையும்,பன்சாரேவையும்,கல்புர்கியையும்,கவுரி லங்கேசையும் படுகொலை செய்ய வைத்திருக்கிறது. இந்த தேசத்தை இந்தியா என்று அழைப்பதில் அவர்களுக்கு உடன்பாடில்லை. இன்றைக்கு நாம் பறக்கவிட்டு கொண்டிருக்கிற தேசியக்கொடியை,RSS அலுவலகத்தில் இன்றைக்கும் அவர்கள் ஏற்றவில்லை. "இதில் எங்களுக்கு உடன்பாடில்லை" என்று அன்றைக்கு அறிவித்தார்கள். அதை இன்றைக்கும் நடைமுறையில் பின்பற்றி வருகிறார்கள். "இந்து ராஃச்டிரம் என்று தான் இந்த நாட்டுக்கு பெயர் சூட்டவேண்டும். இந்து மதத்தை இந்த அரசாங்கத்தின் மதமாக அறிவிக்க வேண்டும். இந்துக்கள் மட்டுமே இங்கு வாழ வேண்டும், ஆள வேண்டும். சிறுபான்மையினர் என்கிற பெயரால் இங்கே யாரும் உரிமை கோரக்கூடாது". இதுதான் அவர்களின் நோக்கம். இந்து ராஃச்டிர கனவு. சவார்க்கருடைய(Savarkar) கனவு. அவரின் சீடர்களான ஃகெட்கேவர் (Hedgewar), கோல்வார்க்கர்(Golwalkar) போன்றவர்களுடைய கனவு. அவர்கள் வரையறுத்திருக்கிற செயல்திட்டங்கள் இதுதான். சனாதன இந்தியாவை மீண்டும் இங்கே நிலைநிறுத்த வேண்டும். முழுமையாக நிலைநிறுத்த வேண்டும். சாதி அடிப்படையிலான இந்தக் கட்டமைப்பில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடாது.

இதை இன்றைக்கு மெல்ல மெல்லத் தகர்த்துக் கொண்டிருப்பது எது? சின்னச் சின்ன செதில்களாக உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கின்றன. பெரிய தாக்குதல் கிடையாது. அதற்கு காரணமாக இருப்பது இந்த, இந்திய அரசியலமைப்புச் சட்டம்தான். இந்திய அரசியலமைப்புச் சட்டம்தான் சனாதன இந்தியாவை, மெல்ல மெல்ல தகர்த்து ச‌னநாயக இந்தியாவை கட்டமைப்ப‌தற்குரிய வழிவகையை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.

ஆகவே அவர்கள் இன்றைக்கு கையிலெடுத்திருக்கிற ஆயுதம் என்பது, "இந்துக்கள் ஓரணியில் திரள வேண்டும். இந்த தேசத்திற்கு இந்து ராஃச்டிரம் என்று பெயர் சூட்ட வேண்டும். இந்துக்களே இந்த மண்ணை தொடர்ந்து ஆளவேண்டும். சனாதனத்தை இங்கே நிலைநிறுத்த வேண்டும்", என்கிற அடிப்படையில்,ஒவ்வொரு சாதிக்கும் இடையில்,ஒரு நிலையான தடுப்புச்சுவரை நிறுவ வேண்டும்,எந்த காரணத்தை முன்னிட்டும் இவர்கள் ஒரு எண்ணிக்கை பலம், BC,OBC,MBC அல்லது Scheduled caste, Scheduled tribe என்கிற அடிப்படையில் கூட,ஒரு எண்ணிக்கை பல‌ம் வந்து விடக்கூடாது. Scheduled tribe என்பது இந்திய அளவில் ஒரு சமூகமாக,ஒரு இன‌மாக அணிதிரள்வதற்கு இந்த Social Justice என்ற இட ஒதுக்கீடு வாய்ப்பைத் த‌ந்தது. SC ST SC ST என்று எல்லா நிறுவனங்களிலும் சேர்ந்தே சங்கங்களை கட்டமைத்து வந்தார்கள். இப்போது  SC யைத் தனியே பிரித்து விட்டார்கள். ST யைத் தனியே பிரித்து விட்டார்கள். அந்த எண்ணிக்கை பலத்தை தகர்ப்பதற்காக. Scheduled caste மூவாயிரத்திற்கு மேற்பட்ட சாதிகள் இந்தியா முழுக்க இருகின்றன. கிட்டத்தட்ட இவர்கள் Scheduled caste என்கிற அடிப்படையில் இணைந்தால் கூட, 30 கோடி பேருக்குமேல் வருவார்கள். 30 கோடி பேர், தங்களை Scheduled caste என்கிற அடையாளத்தோடு,அரசியல் சக்தியாக, அவர்கள் எழுச்சி பெற்றால்,இந்தியாவின் நிரந்தர பிரதமராக ஒரு Scheduled caste தான் வர முடியும்.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டுவிடக்கூடாது,அந்த எண்ணிக்கை பலம் இவர்களுக்கு ஒரு நம்பிக்கையைத் தந்து விடக்கூடாது என்பதற்காகத்தான்,Scheduled caste என்கிற பட்டியல் இனத்தை,ஒவ்வொரு சாதியையும் தனித்தனிக் கூறாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சாதிப் பெருமையைப் பேசச் சொல்கிறார்கள். வன்னியர் வன்னியராய்த் திரள‌வேண்டும், என்று OBC மத்தியிலும் அந்த அரசியலை திணிப்பது, அது பிசேபி(BJP) agenda அது. ஒவ்வொருவரும் அவரவர் சாதியாகத் திரளவேண்டும். இதை ஏதோ தனிப்பட்ட ராமதாசுடைய செயல்திட்டம் என்று கருதி விடாதீர்கள். இது RSS, பாரதிய ச‌னதா ஆகிய சனாதனக் கும்பலின் செயல்திட்டம். ஒவ்வொரு சாதியைம் தனித்தனி சங்கமாக,அணிதிரள‌ வைக்க வேண்டும் என்பதை அவர்கள் திட்டமிட்டு பயிற்சி கொடுக்கிறார்கள். அதைத்தான் social engineering என்று சொல்லுகிறார்கள். அந்த அடிப்படையில் தான் தர்மபுரியை தீ வைத்துக் கொளுத்தியது,சூறையாடியது. அது எதேச்சையாக நடந்த, ஒரு காதல் பிரச்சினையால் நடந்த வன்முறை வெறியாட்டம் என்று தயவுகூர்ந்து யாரும் எண்ணிவிடாதீர்கள். அது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு வன்முறை வெறியாட்டம். தலித் வெறுப்பை உத்தியாகக் கொண்டு,சாதி இந்துக்களை எல்லாம் திரட்டுவது. அத‌ற்காகப் பயன்படுத்தப்பட்ட அரசியல் உத்தி. வன்னியர்கள் வன்னியர்களாத் திரளுவது,கவுண்டர்கள் கவுண்டர்களாக திரளுவது,முக்குலத்தோர் முக்குலத்தோராக திரளுவது. அதைப்போல தலித்துகளும் கூட,தனித்தனியே ஒவ்வொரு சாதியும் தங்கள் அடையாளத்தோடு எழுச்சி பெற வேண்டும். இது பாரதிய சனாதவுடைய agenda இது.

எத்தனையோ முயற்சிகள் விடுதலைச் சிறுத்தைகளுக்குள்ளேயும் ஊடுருவி, "நீங்கள் ஏன் தமிழரைப் பற்றி பேசுகிறீர்கள்? நீங்கள் ஏன் Dalit consolidation ஐப் பற்றிப் பேசுகிறீர்கள்? நீங்கள்,உங்கள் சமூகம் என்ன அடையாளமோ அந்த அடையாளத்தை ஏன் பேசக்கூடாது?"  என்று எனக்கே வந்து பாடமெடுத்திருக்கிறர்கள். எனக்கே பாடமெடுத்திருக்கிறர்கள். இது திட்டமிட்டு நடத்தப்படுகிற ஒரு தொலை நோக்குத்திட்டம். அவர்களுடைய செயல் திட்டங்களில் ஒன்று. பலபேர் இன்றைக்கு அதற்கு இரையாகும் நிலையிலே, தலித் சமூதத்திலும் இருக்கிறார்கள். அதாவது ஒரு பொது நீரோட்டத்திலே இணைந்துவிடக்கூடாது. ச‌னநாயக சக்திகளாக அணி திரண்டுவிடக்டக்கூடாது. ச‌னநாயக சக்திகளாக அணிதிரளும் முயற்சியில்,அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து விடக்கூடாது. அணி திரண்டுவிடக்டக்கூடாது. அதை எப்படியாவது தகர்க்க‌ வேண்டும். அப்படி இவர்கள் இன்றைக்கு மிகவும் திட்டமிட்டு உத்திகளை கையாள்கிறார்கள். அவர்களின் திட்டத்திற்கு மிகப் பெரிய முட்டுக்கட்டையாக இருப்பது எது என்றால், அரசியலமைப்புச் சட்டம் தான்.

வாச்பாயி (Vajpayee) அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன்,முதலில் அவர் நியமித்த ஒரு கமிட்டி "வெங்கடாச்சலய்யா கமிட்டி". அது எதற்கு என்றால் அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்துவதற்காக அல்லது மாற்றுவதற்காக. திருத்துவதற்காக அல்ல மாற்றுவதற்காக. Common Civil Code என்கிற‌ ஒரு பொது சிவில் சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்பது அவர்களின் நோக்கம். One Nation One Culture என்கிற முழக்கம் அந்த அடிப்படையில்தான் வருகிறது. One Nation என்பதிலே யாருக்கும் மாற்று கருத்து இல்லை. சரி ஒரே தேசமாக இருக்கட்டும். யாரும் இப்போது காலிஃச்தான் கோர‌வில்லை. தனித் தமிழ்நாடு கோரவில்லை. சம்மு காஃச்மீரை பிரித்துக்கொண்டு செல்வோம், என்று அரசியல் இயக்கங்களோ அல்லது பெரிய யுத்தங்களோ ஒன்றும் பெரிதாக நடக்கவில்லை. தங்களுக்கான உரிமைகளை கேட்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள். One Nation என்பதிலே யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. One Culture என்பது என்ன? ஒரே கலாச்சாரம் ஒரு தேசத்தில் எப்படி உருவாக்க முடியும்? ஒரே மதம் இருந்தால்தான் ஒரே கலாச்சாரம் இருக்க முடியும். அதுவும் இந்து மதத்தில் ஒரே கலாச்சாரம் உண்டா? இந்து சமூகத்தின் கட்டமைப்பிலே,பார்ப்பனரும் இந்துதான்,அடித்தட்டிலே கிடக்கிற தலித் அல்லது சக்கிலியனும் இந்துதான். ஆனால் சக்கிலியன் வீட்டில் நடக்கிற திருமணச் சடங்கும்,பார்ப்பனர் வீட்டில் நடக்கிற திருமணச் சடங்கும் ஒன்றா? பார்ப்பனர் வீட்டில் நடக்கிற ஈம‌ச் சடங்கும்,சக்கிலியன் வீட்டிலே நடக்கிற ஈம‌ச் சடங்கும் ஒன்றா? கிடையாது. இந்து மதத்திற்குள்ளே கூட ஒரே கலாச்சாரம் இல்லை.


இதையெல்லாம் மாற்றி அமைப்பதற்காக புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் Code of Hindu bill என்கிற ஒரு இந்துச் சட்ட மசோதாவைக் கொண்டு வந்தார். அதையே நிறைவேற்றவிடாமல், விவாதத்திற்கே எடுத்துக் கொள்ளாமல் முறியடித்தார்கள்,அன்றைய தீவிர இந்துத்துவ சக்திகள். நேருவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்களுக்குப் பணிந்து போகக்கூடிய நிலைதான் அன்றைக்கு பிரதமர் நேரு அவர்களுக்கு இருந்தது. அந்த நெருக்கடி இருந்தது. ஆகவே,One Nation One Culture என்பதும் சனாதனத்தின் ஒரு வெளிப்பாடு. ஒரே மொழி,ஒரே மதம் இருந்தால் தான் ஒரே கலாச்சாரத்தை இங்கே கட்டமைக்க முடியும். ஒரே கலாச்சாரம் என்கிற முழக்கம் எவ்வளவு கொடூரமானது,பயங்கரமானது,என்பதை இன்னும் நாம் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். அதை மூர்க்கமாக எதிர்க்க வேண்டும் நாம். Pluralism என்கிற பன்மைத்துவம் தான் ச‌னநாயகத்தின் அடிப்படை. பல்வேறு தேசிய இன‌ங்களைக் கொண்ட தேசம் இது. பல்வேறு மதங்களை கொண்ட தேசம் இது. பல்வேறு உணவுப் பழக்கத்தை கொண்ட,உடை பழக்கத்தை கொண்ட,கலாச்சாரத்தைக் கொண்ட ஒரு தேசம் இது. இந்த பன்மைத்துவத்தை முற்றிலும் சிதைத்து விட்டு,ஒருமைத்துவத்தை ஏகத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என்று அவர்கள் முயற்சிக்கிறார்கள். இது சனாதனத்தின் இன்னொரு செயல்திட்டம்.

எனவே இந்த நாட்டுக்கு பெரும் ஆபத்து சனாதன பயங்கரவாத கருத்தியல்தான். இந்த நான்கு பேரை நான் சொன்னேனே, கௌரி லங்கேஃச்கர் உட்பட. இவர்கள் இடதுசாரி சிந்தனையாளர்களாக இருகிறார்கள் அல்லது சனநாயக சக்திகளாக இருகிறார்கள் என்கிற அடிப்படையில்தான்,அவர்களைத் தேடி,கொலை செய்திருக்கிறது அந்த அமைப்பு. எவ்வளவு பயங்கரமான ஒரு கருத்தியலை இவர்கள் அடிப்படையாகக் கொண்டிருக்கிறார்கள்? மீண்டும் அவர்கள் இந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தை வந்தமர்ந்தால் இந்த நாடு என்ன ஆகும்? இன்னும் ஒரு ஐந்தாண்டு காலம் பாரதிய சனதா கட்சியின் ஆட்சி இங்கே நிகழுமேயானால், நடக்குமேயானால்,அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்கு அவர்கள் தயங்கமாட்டார்கள். அதிபர் ஆட்சி முறையை கொண்டு வருவதற்கு தயங்கமாட்டார்கள். இந்த தேசத்தின் பெயரை இந்து ராஃச்டிரம் என்று மாற்றுவதற்கு தயங்க மாட்டார்கள். 'கர் வாப்சி" (Ghar Wapsi ) என்பதை உரத்து முழங்குவது அல்ல, அதை தீவிரமாக நடைமுறைப் படுத்துவதில் குறியாக இருப்பார்கள். தமிழ்நாட்டுக்குள்ளே எவ்வளவு சிக்கல்? ஒட்டு மொத்தமாக பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, வட இந்திய மாநிலங்களில் எல்லாம் இரத்தக் களரி நடந்த நேரத்தில், தமிழ்நாடு ஓரளவிற்கு அமைதியாக இருந்தது. இங்கே யாராலும் அவ்வளவு பெரிய இரத்தக் களரியை உண்டு பண்ண முடியுவில்லை.

ஆனால், இன்றைக்கு விநாயகர் சதுர்த்தியின்போது தென்காசியிலே,வெளிப்படையாக வன்முறை நடக்கிறது. மிக வெளிப்படையாக இன்றைக்கு சனாதன சக்திகள் பேசத் தொடங்கி இருக்கிறார்கள்,வெளிச்சத்திற்கு வந்து இருக்கிறார்கள். பெரியாரையே கொச்சைப்படுத்தக்கூடிய அளவுகு,துணிச்சலைப் பெற்றிருக்கிறார்கள். ஆகவே சனாதனம் மீண்டும் இங்கே ஆட்சிக்கு வருவதென்பது,இந்த தேசத்திற்கு பெரும் ஆபத்து. அதைத்தான் இங்கே நாம் மதவெறி எதிர்ப்பு என்று பதிவு செய்திருக்கிறோம். இது வெறும் மதவெறி எதிர்ப்பு அல்ல. சனாதன எதிர்ப்பு. மதவெறி அரசியல் என்பது தன்னுடைய மதத்தின் மீதான பற்றுதலை மட்டும் வெளிப்படுத்துவதல்ல. வெறுப்புதான் வெறியாக மாறுகிறது. வெறுப்பில் இருந்துதான் வெறி உருவாக முடியும். எதன் மீது வெறுப்பு? சிறுபான்மை மக்களின் மீது வெறுப்பை விதைத்தால்தான்,இந்துக்களுக்கு வெறி அந்த மதத்தின்மீது உருவாகும். சாதி வெறியும் இன்னொரு சாதியின் மீதான வெறுப்பில் இருந்து தான் உருவாக முடியும். மத‌ வெறியும் இன்னொரு மதத்தின் மீதான வெறுப்பில் இருந்து தான் உருவாக முடியும். அதற்கு அவர்கள் கையாண்ட மிகப்பெரிய சாதுரியமான உத்திதான், பாபர் மசூதி இடிப்பு. Mandal Commission பரிந்துரை நடைமுறைக்கு வந்தபோது இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறோம் என்கிற பெயரால்,அத்வானி நடத்திய இரயாத்திரை என்பது இரத்த யாத்திரையாக மாறியது. அது பாபர் மசூதி இடிப்பிலே போய் முடிந்தது. பாபர் மசூதி இடிக்கப்பட வில்லை என்றால் பாரதிய ச‌னதா ஆட்சிக்கு வந்திருக்க வாய்ப்பே இல்லை. வாய்ப்பே கிடையாது. ஆக ஒரு வன்முறையின் மூலம் தான் ஒரு polarization அவர்களால் நடத்த முடிகிறது. Hindu Polarization. பாபர் மசூதி இடிப்பின் மூலம்தான் அவர்களால் நிகழ்த்த முடிந்தது. ஒரு நம்பிக்கையை அவர்களால் உருவாக்க முடியாது. இந்துக்களுக்கு ஒரு நம்பிக்கையை அவர்கள் தந்தார்கள். அப்படி மறுபடியும் மறுபடியும் இந்து polarization அவர்களின் வாக்கு வங்கிக்காக,அவர்களின் ஆட்சி அதிகாரத்திற்காக,அவர்கள் கையாளப்போகிற உத்தி என்பது,சிறுபான்மை மக்களுக்கு எதிராக,ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக,திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்படுகிற‌ வன்முறை வெறியாட்டம் தான் உத்தியாக இருக்க முடியும்.

ஒரு Civil war இங்கே நடக்கிறது,தொடர்ச்சியாக. இந்த நாட்டு மக்களுக்கு இடையிலே மறுபடியும் மறுபடியும்,சாதியின் பெயரால்,மதத்தின் பெயரால்,வன்முறைகள் அரங்கேறிக்கொண்டே இருக்கும். அதுதான் அவர்களுக்கான ஆதாயம். அப்படிப்பட்ட ஒரு இந்தியாவை,சனாதன இந்தியாவை கட்டமைக்க வேண்டும் என்று அவர்கள் துடியாய் துடித்துக் கொண்டிருக்கிற நிலையில்தான்,இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும்,ச‌னநாயகத்தையும் நாம் பாதுகாத்தாக வேண்டும். அதற்கு மதவெறி என்கிற, சிறுபான்மைச் சமூகத்திற்கு எதிரான,தலித்துகளுக்கு,பழங்குடி மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை விதைக்கிற,இந்த சாதியவாத,மதவாத கும்பலுக்கு எதிராக ச‌னநாயக சக்திகள் அணிதிரள வேண்டும். அந்த கொள்கை புரிதலோடு தான் இன்றைக்கு நாம் தேர்தல் களத்தை அணுகவேண்டி இருக்கிறது. அந்த அடிப்படையில்தான் காங்கிரசு கட்சியோடு முரண்பாடு இருந்தாலும்,இந்த தேசத்தை காப்பாற்ற வேண்டுமென்று இடதுசாரிகளும் கூட இன்றைக்கு தமிழகத்திலே திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இணைந்து நிற்க‌ முன்வந்திருக்கிறார்கள். விடுதலைச் சிறுத்தைகளும் அந்த அடிப்படையில்தான்,இன்றைக்கு கைகோர்க்கும் அந்த முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் அற்பர்கள்,ஏதோ நாம் வெறும் தேர்தல் இடங்களுக்காக,தொகுதிகளுக்காக,பெரிய கட்சியிடம் போய்,கெஞ்சிக் கிடக்கிறோம் என்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். அதற்காக நாம் வருத்தப்படவில்லை. ஆனால்,அதற்கு நாம் வீம்பு காட்டி,வீராப்பு பேசி,மீண்டும் சனாதன கும்பல்,ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு ஒருபோதும் இடம் தந்து விட மாட்டோம். யார்,என்ன நம்மை இழித்தாலும்,ப‌ழித்தாலும்,எவ்வளவு இளக்காரமாக பேசினாலும்,அதைப் பற்றி கவலைப்படாமல்,மதச் சார்பற்ற சனநாயக சக்திகள்,ஓரணியில் திரளுவதற்குரிய முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

பெரும் தீங்கு சனாதனிகளால் இந்த தேசத்திற்கு மிகப்பெரும் ஆபத்து சூழ்ந்து இருக்கிறது. இந்த நாட்டு மக்கள் தங்களுக்கு இடையிலேயே சிவில் வார் செய்து கொள்ளக்கூடிய நிலை இங்கே ஏற்படும். இல்லையென்றால் ஒருவன் செத்த மாட்டுத் தோலை உரித்ததற்காக தலித்துகளை அடித்துக் கொல்ல‌ முடியுமா? புனிதப்பசு Holy cow மாட்டுக்கறி தின்னக் கூடாது என்று அவன் ஆணை பிறப்பிக்கிறான். எவ்வளவு கொடூரமானது?  டி.எம்.கிருஃச்ணா (T.M.Krishna) கர்நாடக இசைக் கலைஞர்,அவருக்கு என்ன பாடலைப் பாடவும்,இசையை மீட்டவும் அவருக்கு சுதந்திரம் இருக்கிறது. ஆனால்,நீ கிறித்துவப் பாடலைப் பாடக்கூடாது,முஃச்லிம் பாடலை பாடக்கூடாது,இந்துக்களை எதிர்த்து பாடக்கூடாது என்று அவரை இந்துத்துவ எதிரியாக காட்டி,நடக்கவிருந்த,டெல்லியில் நடக்கவிருந்த நிகழ்ச்சியையே தடை செய்தது சனாதனம் தான். சனாதனக் கும்பல்தான். கேச்ரிவால் (Kejriwal) என்கிற ஒரு சனநாயக சக்தி அங்கே இருந்த காரணத்தினால்,கிருஃச்ணாவின் உணர்வை மதித்து,"நான் நடத்துகிறேன் வாருங்கள்" என்று ஒரு பூங்காவிலே அந்த நிகழ்ச்சியை நடத்தி காட்டினார்.

அந்த ச‌னநாயக சக்திகளாக அணிதிரள வேண்டிய ஒரு தேவை இருக்கிறது. இந்த இருபத்தோறாம் நூற்றாண்டிலே,ஒரு இசை கலைஞன்,தன் விருப்பப்படி,ஒரு இசை நிகழ்ச்சியை,நடத்த முடியாத அளவுக்கு,ஒரு கொடூரமான பயங்கரவாதம் இங்கே திட்டமிட்டு திணிக்கப்படுகிறது. அச்சுறுத்தல் நிகழ்கிறது. பாதுகாப்பில்லை. இடதுசாரி சிந்தனையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை. சனநாயக சிந்தனையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை. தலித்துகள் மீது அவர்கள் கரிசனம் காட்டுவதைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவது,உண்மையில் அவர்களை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல. தலித்துகளிடையே நாள்தோறும் நிகழ்கிற மத மாற்றத்தை தடுப்பதற்கான ஒரு உத்தி அது. இசுலாமியராகவும், கிறித்தவராகவும் நாள்தோறும் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். பௌத்தர்களாக மாறிக் கொண்டே இருக்கிறார்கள். பழங்குடி மக்கள் தொன்னூறு விழுக்காடு கிறித்துவர்களாக மாறிவிட்டார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்தியாவில் உள்ள பழங்குடி மக்களில் பெருந்தொகை, மக்கள் தொகையில் பெரும்பான்மையானவர்கள், கிறித்தவர்களாக மாறி இருக்கிறார்கள். ஏன்? அந்த மக்களின் நலன்களில் அவர்கள் அக்கறை செலுத்துகிறார்கள் என்பது தான் அதற்கு அடிப்படைக் காரணம். இன்றைக்கு திடுமென பழங்குடி மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அவர்கள் கரிசனம் காட்டுவது என்பது,அவர்களை மேம்படுத்துவதற்காக அல்ல,அந்த மத மாற்றத்தை தடுப்பதற்காக. அந்த அடிப்படையில்தான் தலித் சமூகத்தைச் சார்ந்த தலைவர்களையும் கூட தங்களோடு இணைத்துக் கொண்டு அதிகாரத்தை பகிர்ந்து தருகிற அல்லது குடியரசுத் தலைவர் நாற்காலியில் அமரவைத்து பார்க்கிற உத்திகளையும் கையாளுகிறார்கள்.

இதையெல்லாம் புரிந்து கொண்டு,ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த இயக்கங்களும்,அனைத்து சனநாயக சக்திகளோடும் இணைகிற முயற்சியில் ஈடுபடவேண்டும்.  கௌதம புத்தரால் வெற்றி பெற முடியவில்லை. அய்யன் திருவள்ளுவனால் வெற்றி பெற முடியவில்லை. அவ்வை பாட்டியால் வெற்றி பெற முடியவில்லை. சித்தர்களால் வெற்றி பெற முடியவில்லை. பசவா (Basava) இயக்கத்தால் வெற்றி பெற முடியவில்லை. அது இன்றைக்கு லிங்காயத்துகளாக‌ மாறிப்போய்,ஒரு புதிய சாதியாக மாறிப்போய் நிற்கிறது. நாராயண‌குருவால் வெற்றி பெற முடியவில்லை.ஐயா வைகுண்டரால் வெற்றி பெற முடியவில்லை. மாகத்மா சோதிராவ் ஃபுலே(Mahatma Jyotirao Govindrao Phule) அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களால், அவர், அவருடைய காலகட்டத்தில் அவர் விரும்பிய இந்தியாவைக் கட்டமைக்க முடியவில்லை. ஆனால், கௌதம புத்தரின் காலத்திலிருந்து,புரட்சியாளர் அம்பேத்கரின் காலம் வரையில்,தந்தை பெரியார் உட்பட,தொடர்ச்சியாக இந்த சனாதனத்திற்கு எதிரான,இந்த பயங்கரவாத கருத்தியலுக்கு எதிரான,யுத்தத்தை நடத்திக் கொண்டே வந்ததனால்,இந்த சனநாய சிந்தனைகளை அடைகாத்து வந்ததனால்,இன்றைக்கு நாம், இதை முன்னெடுத்துச் செல்லக்கூடிய வலிமையை பெற்றிருக்கிறோம். இந்தச் சமூகக் கட்டமைப்பிற்குள் ஒரு அசைவை நம்மால் ஏற்படுத்த முடிந்திருக்கிறது. அந்த அசைவை ஏற்படுத்துகிற வலிமை இன்றைக்கு ஒரே ஒரு சக்தி இடம் தான் இருக்கிறது. அது அரசிலமைப்புச் சட்டம். அதிலே நமக்கு முரண்பாடுகள் இருக்கலாம்,மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம்,அதில் திருத்தம் செய்ய வேண்டியவை இன்னும் இருக்கலாம்,அது திருத்தப்படக்கூடாத ஒன்று அல்ல. அது புனித நூல் அல்ல. ஆனாலும்,அது ச‌னநாயகத்தை கட்டமைப்பதற்கான அடித்தளம். அப்படிப்பட்ட அந்த ச‌னநாயகத்தை கட்டமைப்பதற்கான,அரசியலமைப்புச் சட்டத்தை அடியோடு மாற்ற வேண்டும் என்று துடியாய் துடிக்கிற,அந்த சனாதன கும்பலின்,வெறுப்பு அரசிய‌லை நாம் புரிந்து கொள்ள வேண்டும். குடிசைகளை மாற்றி அவர்களுக்கு வீடுகள் கட்டித்தர வேண்டும் என்பதற்கான திட்டமில்லை.

உலகிலேயே உயர்ந்த சிலை பட்டேலுக்கு நிறுவுகிறார்கள். பட்டேல் காங்கிரசு கட்சியில்,ஒரு உள்துறை அமைச்சராக இருந்தவர். நேரு அமைச்சரவையில் இருந்தவர். அவர் RSS இயக்கமில்லை. ஆனால்,ஏன் பட்டேலுக்கு சிலை? அவர் இந்திய சமஃச்தானங்களை எல்லாம் பிரிட்டிஃச் பகுதிகளோடு இணைத்தார். அதிலே யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. யார் உள்துறை அமைச்சராக இருந்தாலும் அந்த வேலையைத்தான் அன்றைக்கு செய்திருக்க முடியும்,செய்திருக்க வேண்டும். ஆனாலும் அவருடைய பங்களிப்பு போற்றுதலுக்குரியது. RSS இயக்கத்தை அவரும் கடுமையாக, "அது ஒரு நஞ்சு" என்று விமர்சித்து இருக்கிறார். ஒரு பெரிய கோட்டுக்கு பக்கத்துலே இன்னொரு பெரிய்ய கோட்டைப் போட்டால், பழைய பெரிய கோடு  சிறிய கோடாக மாறிவிடும் என்பதைப் போல,இந்தியா என்றால் காந்தி,காந்தி என்றால் இந்தியா என்றிருந்த நிலையில், காந்திக்கு பக்கத்திலே பட்டேலை நிறுத்தி,எதிர்காலத்தில் வருகிற தலைமுறையினர் எல்லாம்,பட்டேல்தான் இந்தியாவின் மிக உயர்ந்த மனிதர் அன்று கருதக்கூடிய நிலையை,இன்றைக்கு அவர்கள் திட்டமிட்டு செய்திருக்கிறர்கள்.

காந்தியடிகளோடு நமக்கு முரண்பாடு உண்டு. ஆனால் காந்தியடிகளின் மீதான வெறுப்பு இன்னும் அவர்களுக்கு மாறவில்லை என்பதுதான் இதற்கு காரணம். ஆகவே அவர்கள் ஒரு தொலைநோக்கு திட்டத்தோடு இயங்கிக் கொண்டே இருக்கிறார்கள். பாபர் மசூதியை இடித்ததன் மூலம் ஆட்சி அதிகாரத்திற்கு அவர்களால் வர முடிந்தது. குசராத்தில் மிகப்பெரிய வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்ததன் மூலம்,மோடி எல்லா மூத்த தலைவர்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு பிரதமராக முடிந்தது. வன்முறைகளை,ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறைகளை,ஒரு உத்தியாக கையாளுகிற இந்த சனாதன கும்பலை,நாம் அடையாளம் கண்டுகொள்ளவேண்டும். இந்த சனாதன பயங்கரவாதத்தை நாம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். அதற்கான ஒரு களமாகத்தான் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை இந்த கருத்தரங்கை ஒருங்கிணைத்து இருக்கிறது.

*******
திருமா அவர்களின் இந்த https://www.youtube.com/watch?v=ynYx01bRx9A வீடியோ உரையில் இருந்து, வரிவடிவமாக எழுத்தாக இங்கே பதிகிறேன். திருமா அவர்கள், இலங்கையில் இராசபக்சேவைப் பார்த்து மரியாதை செய்த ஒரு நிகழ்வை அதிகம் விமர்சித்தவன் நான். இன்றைய நாளில் திருமா ஒரு சிறந்த தலைவராக,சிறந்த கருத்தியல்வாதியாக‌ மிளிர்கிறார். நிச்சயம் மாறிவருகிறார்.

இவரின் இந்த வீடியோ பேச்சை இங்கே எழுத்தாக பதிந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது இவரின் இந்த வீடியோ பேச்சு சொல்லும் கருத்து மீது வந்த திடீர் காதலால் அல்ல. நான் பலகாலமாக‌ சொல்லிவரும் அதே சனாதன அரசியலை, இந்திய வரலாற்றில் அது ஏற்படுத்தியுள்ள களங்கத்தை,கலகத்தை இவரும் சொல்கிறார். சிறப்பாக தொகுத்துச் சொல்கிறார் என்பதால்.

திருமா அவர்கள், என்றேனும் ஒருநாள் தமிழக முதல்வராக வந்தால், ஏன் துணைமுதல்வராக வந்தால்கூட அது நாம் அவருக்குச் செலுத்தும் மரியாதை. ஒரு முறை அவரின் இந்த உரையைக் கேட்டுவிடுங்கள்.

முடிந்தவரை அவரின் உரையை வரிவடிவமாக கொடுத்துள்ளேன். அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ள ஆங்கில சொற்கள், மேலதிக தகவல் தேடுபவர்களுக்கு வசதியாக இருக்கட்டும் என்று நானாகச் சேர்த்தது. கட்டுரையின் தலைப்பு நானாக‌க் கொடுத்த ஒன்று.

அன்புடன்,
கல்வெட்டு.


Friday, December 14, 2018

Knowledge vs Intellect:அறிவாளி என்பதும் Intellect ஒன்றல்ல

மிழில் அறிவு/அறிந்தவர்கள் என்பதை, ஆங்கிலத்தின் knowledge (knowing things)/people who knows things என்று சொல்லலாம் (Someone who is intelligent or well informed). அத்தோடு நிற்காமல் அறிவை (knowledge) பலவழிகளில் தமிழ் பிரிக்கிறது. படிப்பறிவு, பட்டறிவு, நுண்ணறிவு, படைப்பறிவு,பகுத்தறிவு ,பொது அறிவு,கள அறிவு என்று. ஒவ்வொன்றும் "அறிதல்" என்ற ஒரே தளத்தில் இருந்தாலும், தனித்துவமானவை.

சிலை வடிக்கும் கலையும், கதை எழுதும் கலையும் படைப்பு என்ற ஒரே தளத்தில் உள்ளது என்பது என் நிலைப்பாடு.கரகாட்டக் கலையில் புதிய ஒரு வித்தையை உருவாக்கினாலும் படைப்பே.

நடுநிலைமை
-------------------
நீதிபதி என்பவர், நடுநிலையாக இருக்கமுடியாது. He can be true to his judgement but he cant skip his responsibility of making judgement. "இரண்டையும் கேட்டாச்சு.நான் நடுநிலைமை எடுக்கிறேன்" என்று ஒரு நீதிபதி சொல்லமுடியாது.

"நடுநிலைமை என்பது அயோக்கியத்தனம்" என்றே நான் சொல்லி வருகிறேன். சமூகத்திற்காக பயந்து, சில நேரங்களில் மனதில் எடுத்த நிலைப்பாட்டைக்கூட மறைத்துவிட்டு, அயோக்கியத்தனமான "நடுநிலையாக" வேடிக்கை பார்ப்பவர்கள் அதிகம். சமூகத்தின்மீது அக்கறை உள்ளது போல் காட்டுபவர்கள், பேசுபவர்கள், அவர்களைக் கவலையாக்கும் செயல்களில் ஒரு நிலைப்பாட்டை கொண்டிருக்க வேண்டும்.

Intellect
----------
Intellect என்பதற்கான சரியான தமிழ்ச் சொல்லைத் தேடிக்கொண்டுள்ளேன்.
மேதை = A specialist in a particular branch of knowledge.
கலைஞர் = A specialist in a particular branch of art.

அறிஞர் என்பதை ஓரளவிற்கு Intellect வுடன் தொடர்புபடுத்தலாம். ஆனால் அதிலும் சிக்கல் உள்ளது. எடுத்துக்காட்டாக‌ "தமிழறிஞர்" என்று சொல்வது, துறைசார் மேதையாகிவிடுகிறது. துறைசார் படிப்பு (learning) என்பது, அந்த துறைசார் அறிவு (knowledge.. knowing things) என்பதாகும். அதற்கும் intellect க்கும் நேரடித் தொடர்பு இல்லை.

எடுத்துக்காட்டாக,
"PhD in Bible study"  is not directly = Intellect
"PhD in Bible study"  =  Great knowledge in Bible.
அவ்வளுவுதான் அதுதாண்டி ஒன்றும் இல்லை.

Intellect என்பதற்கு "Noam Chomsky" இப்படி விளக்கம் சொல்வார்.

Intellectuals are in a position to expose the lies of governments, to analyze actions according to their causes and motives and often hidden intentions. IT IS THE RESPONSIBILITY of intellectuals to speak the truth and to expose lies.

https://www.britannica.com/biography/Noam-Chomsky#ref1052470
//The Responsibility of Intellectuals reminds us that “privilege yields opportunity and opportunity confers responsibilities.” All of us have choices, even in desperate times.//

https://www.britannica.com/biography/Noam-Chomsky
//responsibility as intellectuals to bring the truth about matters of human significance to an audience that can do something about them.//

அமெரிக்க 9/11 மதவாத கொலை குறித்து பேசும் போது ...
http://bostonreview.net/noam-chomsky-responsibility-of-intellectuals-redux
//If the responsibility of intellectuals refers to their moral responsibility as decent human beings in a position to use their privilege and status to advance the cause of freedom, justice, mercy, and peace—and to speak out not simply about the abuses of our enemies, but, far more significantly, about the crimes in which we are implicated and can ameliorate or terminate if we choose—how should we think of 9/11?//

The Responsibility of Intellectuals  என்ற புத்தகம் அவரின் பார்வையை தெளிவாகப் புரிந்துகொள்ள உதவும்.

Intellect = சமுதாயப் பொறுப்புணர்வு
---------------------------------------
Intellectual என்பதை என்னால் சமுதாயப் பொறுப்புணர்வு என்றே பொருள் கொள்ள முடிகிறது தமிழில். இந்த சமுதாய பொறுப்பு என்பதற்கு , பெரிய பட்டப்படிப்புகளும் , கலைகளைப் படைக்கும் திறனும் அவசியமா என்றால் இல்லை.

அம்பேத்கர் மெத்தப் படித்தவர் & Intellect
பெரியார் மெத்தப் படிக்காதவர் & Intellect

FYI:
"Manifesto of the Intellectuals" என்றே பழைய வரலாறு உண்டு.
Dreyfus and the Birth of Intellectual Protest
http://standpointmag.co.uk/node/4256/full

Wednesday, December 12, 2018

When it's useful and obvious you don't care to understand: God's Manual. Why do you Bother?

காரின் பெருமை பற்றி நிறைய பேசினார் அவர். அவருக்கு கிடைத்த‌ காரை பலமைல் தூர ஓட்டிய அனுபவத்தையும், அப்போது அவர் பார்த்த இடங்களையும் அழகிய கவிதைகளில் விவரித்தார். அவர் பேசப் பேச எனக்கும் காரில் போக வேண்டும் என்ற ஆசை வந்தது. எனது ஆசையை அவரிடம் சொன்னேன். மகிழ்ந்து போய் எனக்கு கார் நிச்சயம் கிடைக்கும் என்று கூறி, கார் manual புத்தகத்தை கொடுத்துவிட்டு, வாரவாரம் அதைப் படிக்கச் சொன்னார். சரி கார் எங்கே என்றேன்? "உனக்கான கார், மேல் மாடியில் உள்ளது. நீ இறந்த பிறகு உனக்கு கிடைக்கும்" என்றார்.
**
நேற்று நண்பருடன் காரில் பயணிக்கும் போது, அவரின் கார் நின்றுவிட்டது. காரில் சில எண்களும் எழுத்துகளும் மின்னி மின்னி ஏதோ ஒரு குறையைச் சொல்லிக் கொண்டிருந்தன. காரின் manual எங்கிருக்கிறது என்பதுகூட அவருக்கு தெரியவில்லை. தெரிந்திருக்க தேவையும் இல்லை. அவரின் அலைபேசியின் இணைய இணைப்பின் மூலம், இணையத்தில் யூட்யூப்பில் தேடுகிறார். இரண்டு வருடங்களாகிவிட்டது கார் வாங்கி. இதுவரை நின்றது கிடையாது இப்படி நடுவழியில். அவருக்கும் கார் manual குறித்த தேவை இதுவரை வந்ததே இல்லை. அவர் நாளை புதிய கார் வாங்கினாலும், பயன்படுத்துவாரே தவிர , manual விரித்து மோட்டுவளையை வெறித்து தவம் செய்ய மாட்டார்.

காரின் உட்கூறுகள் குறித்தும், அதன் மூலம் குறித்தும், அது எப்போது யாரால் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறித்தோ சிந்திப்பதே இல்லை. வாராவாரம், அதை விற்ற கம்பனிக்குப் போய் மன்றாடி, manual படித்து விரதமும் இருப்பதில்லை.

Useful things don't require reinforcement.

தினமும் விற்கிறார்கள் கதவு தட்டி.கார் கொடுப்பார்கள் என்று கதவு திறந்தால், manual கொடுத்து, யாரோ ஒருவனுக்கு, ஏதோ ஒரு காட்டில், என்றோ ஒருநாள், கார் கிடைத்த கதையைச் சொல்லி, அவர்களையும் தேற்றி என்னையும் எமாற்றி அழுகிறார்கள்.

செத்த பிறகு எனக்கான கார்  கிடைக்கும் என்கிறார்கள். இதுவரை செத்துப் பார்த்திராத மனிதர்கள். கடவுளின் வார்த்தைகளை மனிதர்களே கூவி விற்கிறார்கள்.

Sunday, December 09, 2018

Rationalist க்கான அறம்:மதம் இல்லாவிட்டால் மிருகமாகிவிடுவீர்களா?

தங்களை பின்பற்றுபவர்கள் அதைப் பின்பற்ற காரணமாகச் சொல்வதும்,அறிவியலார்களை நோக்கி மிகவும் அதிகமாக கேட்படும் கேள்வியும் அறம் சார்ந்த ஒன்று. "மதங்களின் மீது நம்பிக்கை இல்லாத போது, எந்த அறத்தில் வாழ்க்கையை நடத்துவது? மதம் இல்லாத போது எது ஒழுக்கம்? எது நியாயம்? எது அறம்? என்று எப்படி உணர்வது?

இதன் மறுபக்கம் ஒன்று உள்ளது."எது நல்லது? எது கெட்டது? என்பதை மதம் சொல்கிறது. மதமற்ற நீங்கள், உங்களுக்கான அறத்தை எங்கிருந்து பெறுவீர்கள்?" என்பதும் உள்ளடக்கம். Rationalist யாரும் தினமும் கொள்ளையடித்துக் கொண்டும், வாரம் ஒருமுறை கொலை செய்துகொண்டும், வன்புணர்வு செய்துகொண்டும் இருப்பதில்லை.இருந்தாலும், அவஅறிவியலார்களுக்கு (those who don't question and/or seek for evidence ) அப்படி ஒரு கேள்வியுண்டு.

அவஅறிவியலார்களிடம் நான் கேட்கும் முதல் கேள்வி, "அறம் என்று எதைச் சொல்கிறீர்கள்? எந்த மதம் அறத்தைச் சொல்லித்தருகிறது?" என்பதே. ஏன் என்றால், அறம் என்பதற்கு "One size fits all " என்பது போன்ற விளக்கம் ஏதும் இல்லை. "அறம் என்பது personal" என்பதே என் நிலைப்பாடு. ஒரு இடத்தில் அறமாக இருக்கும் ஒரு செயல், மற்ற ஒரு இடத்தில் அறமாக இருக்காது. உதாரணம், பிகினி உடைகள். கடற்கரையில் பிகினி உடைகள் அணிவது அந்த இடம் சார்ந்த உடைக்கான அறம். அதே உடை, ஒரு திருவிழாவில் அறமாக இருக்காது. எந்த மதமும் எல்லா நிலப்பகுதி மக்களுக்கும், எல்லாக் காலத்துக்குமான அறங்களைச் சொல்லிவிடுவது இல்லை. சொல்லவும் முடியாது.மதப்புத்தகங்கள் எல்லாம் பல ஆயிரம் வருடங்களுக்கு முந்தியவை. அவைகள் living document கிடையாது.

மதத்திற்கும் அறத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை, அதைப் பின்பற்றும் மக்களின் செயல்களை வைத்துச் சொல்லலாம்.வீபூதி அணிந்தவன் ஒன்வேயில் போகிறான். அய்யப்பனுக்கு மாலை போட்டவன் ரோட்டில் மலம் கழிக்கிறான்.இயேசு படம் போட்ட டாலர் அணிந்தவன் கையூட்டு வாங்குகிறான்.இசுலாமியன் ஏமனில் குண்டு போடுகிறான். புத்தமதத்தவன் அடுத்த இனத்தை கொலை செய்கிறான்.

மதம், கடவுள் என்பது அரசியல். மேலும், இருக்கும் அரசியல்களில் கேடுகெட்ட அரசியல். அறம் என்பது அதில் இல்லை. இருப்பதாக நம்பப்படுகிறது. சிவிக்பண்புகளைக் கடைபிடிப்பவன் எந்த மதத்தில் இருந்தாலும் கடைபிடிப்பான்.

If you think somethings are good and useful, it is going to stay the way it is whether there is a god or not. It is going to stay because you try to sympathize with fellow human.

இதற்கு மதம் தேவை இல்லை.கடவுள் என்ற idea க்களும் தேவை இல்லை. மதத்தை practice செய்பவர்கள், நாளையே கடவுள் இல்லை என்பது தெரிய வந்து (just for this conversation) மதமற்றவராக மாறிவிட்டால், திருட்டு கொலை, கொள்ளை போன்றவைகளை செய்வீர்களா? இல்லை என்பீர்களேயானால் ஏன்?

Pain,happiness,joy,death etc going to stay irrespective of god (and or religion) and you simply try to avoid doing bad things to others because you know how it hurts to you. You no need some third person to tell this. It is fundamental nature of human.

அறம் என்பது தான் செய்யும் எந்த செயலையும் நியாயப்படுத்த் , சரியென்று சொல்லிக்கொள்ள வளைக்கப்படும் ஒரு open source சித்தாந்தம். அறம் என்பது தனக்குத் தேவையானதைச் செய்து கொண்டு, அதற்கான காரணங்களை தனக்குச் சாதகமாக (குற்றவுணர்வைத் தவிர்க்க) எதையாவது சொல்லிக்கொள்வது.

போர்வீரர்கள் செய்யும் கொலை எல்லாம் அறமாக ஆகிவிடுகிறது. அவர்களின் மதம் அன்பை போதிக்கிறது என்பது இங்கே பொய் அல்லவா? போர் என்ற பெயரில் இந்திய ராணுவத்தினர் பாகிஃச்தானியர்களைக் கொல்கிறார்கள். இசுரேல் இராணுவம் பாலஃச்தீனியர்களைக் கொல்கிறது. அல்லா குடியிருக்கும் சவூதி ஏமனில் இசுலாமியர்களைக் கொல்கிறது. இவர்கள் எல்லாம் அன்பே வடிவான எதோ ஒரு கடவுளையும், அந்த கடவுள் சொன்ன அறத்தையும் பின்பற்றுபர்கள். இங்கே அறம் என்பது என்ன?

தமிழகத்தில் "அகறி"கள் (non-meat eaters) பலர், முத்துமாலை (சிப்பிக் கொலை), பட்டுச்சேலை (பட்டுப்புழு கொலை), தோல் செருப்பு, தோல் பை, ( பல விலங்குகளின் உரிக்கப்பட்ட தோல்) ஏன் மிருதங்கத்தின் வார் என்று, கொன்ற மிருகங்களின் பயனாளிகளே இவர்கள். இவர்களின் தேவைகாரணமாகவும்தான் இந்த உயிர்கள் கொல்லப்படுகின்றன் என்பது உண்மை. ஆனால், இவர்கள் தங்களை "விலங்குகளைக் கொல்லா அறவாதிகள்" என்று சொல்லிக் கொள்வார்கள். தான் செய்வது தனக்கே தெரியாத மூடர்கள் இவர்கள். இவர்களுக்கான அறம் என்பது இந்த இடத்தில் ஏமாற்று.

அறம் என்பதற்கு பதில்,  "Empathizing with fellow human" என்று பாருங்கள். அதற்கு கடவுளோ மதமோ தேவை இல்லை. எந்த மதப்புத்தகங்களும் இல்லாத ஒரு உலகில்,ஒரு குழந்தை அழுகிறது. மனிதனாக உங்களுக்கு அழுகையும் வலியும் புரிவதால்,  உதவுவீர்கள் சரியா? Empathy இது மனிதனின் அடிப்படை. இதைச் செய்ய ஒரு புனிதப்புத்தகம் அவசியம் வேண்டும் என்றால், என்ன சொல்ல? Grow Up என்பதைத் த‌விர.

Friday, November 09, 2018

அறங்களின் அரசியல்:நடு நிலை என்பது அயோக்கியத்தனம்

றங்களில் இரண்டு வகை. அகம் சார்ந்த அறம் மற்றும் புறம் சார்ந்த அறம்.

அகம் சார்ந்த அறம்
ஒருவர் அவர் குடும்பத்தில் நல்ல அப்பாவாக, கணவனாக, மனைவியாக, மகனாக,தாத்தாவாக, பாட்டியாக இப்படி பல வடிவங்களில் அவர்களுக்கு பிடித்த, நல்லவராக இருப்பார். அப்பா வாங்கும் கையூட்டு, அம்மா செய்யும் அலுவலக அரசியல்கள் ஏதும் குழந்தைகளுக்கு தெரியாது . அவர்கள் அளவில், குடும்பத்திற்காக உழைக்கும் அப்பா அல்லது அம்மா நல்லவர்கள்.

இந்த அகம் சார்ந்த அறத்தை என்ன நட‌க்கிறது என்று தெரிந்தவர்கள் தவிர, மற்றவர்கள் விமர்சிக்க முடியாது. இது அவர்களுக்கான அக‌ அறம் very personal. அலுவலத்தில் வாங்கிய கையூட்டுப் பணத்தை, கடவுள் படம் போட்ட பீரோவில் வைத்து பாதுகாத்து, அதில் இருந்து கடவுளுக்கும் காணிக்கை செலுத்தும் மனிதர்களைப் பார்த்துள்ளேன். இங்கே கையூட்டு வாங்குவது எல்லாரும் செய்வதால் அவர்களுக்கான அறமாக‌ அவர்கள் நியாயப்படுத்திக் கொள்ளலாம்.

இணையத்தில் திருடிப் பார்க்கும் திரைப்படங்களை ஒரு கையால் டீல் செய்து கொண்டு, மறு கையால் புனித சிலைகளின் படங்களுக்கு சலாம் வைத்து டீல் செய்வது அவர்களுக்கான அக அறம்.

புறம் சார்ந்த அறம்
இது ஒவ்வொருவரும் ,அவர்கள் யார் என்று சமூகத்திற்கு பொதுவெளியில் அறியத்தருவது. இதில்கூட இரண்டுவகை உண்டு. அறிந்தே அறியத் தருவது , அவர்களை அறியாமலேயே அறியத் தருவது. புற அறம் மட்டுமே விமர்சிக்கப்படுகிறது மற்றவர்களால். இதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு , நடிகர் சிவக்குமார் அவர்களின் செல்போன் வன்முறை. அவர் யார் என்று பொதுவெளியில் அறியத் தருகிறார். அதுவே விமர்சிக்கப்படுகிறது. வீட்டில் அவர் பேரப்பிள்ளைகளுக்கு அருமையான தாத்தாவாக அவர் இருப்பது பொருட்டல்ல இங்கே.

செயமோகன்
செயமோகன் அவரின் சார்பு நிலைகள் வழியாக அவர் யார் என்று பொதுவெளியில் அறியத் தருகிறார்.  அன்னா கசாரே ஆதரவு, வங்கியில் பணம் எண்ணும் பெண் விமர்சனங்கள், இணையத்தில் இருப்பவன் மொண்ணை, கலைஞர்-திராவிடம், மகாபாரத ரீமேக் என்று பல தளங்களில் அறியத்தருகிறார்.

அது தாண்டி, காசுக்காக தொப்பி&திலகத்தை குப்பையில் போட்டுவிட்டு, அதே கோலிவுட்டில் வசனம் எழுதுகிறார். ஒருவேளைச் சோறுக்காக ஒருவன் ஓட்டலில் திருடுவது அவனுக்கான அறமாக இருக்கலாம். தனது வியாபாரத்தை விரிவாக்க செயமோகன் செய்யும் சமரசமும் முன்னதும் ஒன்றுதான் என்று நம்ப உங்களுக்கு உரிமை உள்ளது. நான் அதை அயோக்கியத்தனம் என்பேன்.

சர்க்கார்
முருகதாசு, நோலனின் கதையை அப்படியே திருடியது உலகம் அறிந்த உண்மை.  https://www.youtube.com/watch?v=ugMgEytkG70

அன்னா கசாரே போன்ற பிம்பங்களை தாங்கும் செயமோகன் இப்படியான ஒருவரிடம் காசுக்கு சமரசம் செய்வது, சப்பைக்கட்டு கட்டுவது எல்லாம் அவரின் பிழைப்பு சார்ந்த விசயம் என்று விட்டுவிடலாம்.  ஆனால், தனக்கு கிடைத்த வாய்ப்பின் வழியாக அவர் அவரின் அகஅறமாக சர்க்கார் படத்தின் வழியே சிலவற்றை அறியத் தருகிறார்.

இது முதல் முறை அல்ல. அவரின் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வந்தால் தெரியும். அவரின் புறஅறம் என்னெவென்று. எனது விமர்சனங்கள் அவர் அறியத்தரும் பேசுபொருட்களில் இருந்தே.

செயமோகன் ஒரு விசம்
ஆம் விசமனிதர்தான். திராவிடம், திராவிடக் கருத்துகள் திராவிடத் திட்டங்கள் அனைத்திற்கும் எதிரி.பெரிய சங்கி கூட்டத்தை, இலக்கியம் என்ற பெயரில் வளர்த்து வருகிறார். இந்த சங்கிக்கூட்டம் பண மதிப்பிழப்பின்போதும் சரி, எந்தவிதமான தமிழ்/தமிழ்நாடு சார்ந்த நிலைப்பாடுகளாக இருந்தாலும் அவர்கள் எதிர்  நிலையில்தான் இருப்பார்கள். இந்த சங்கிக் கூட்டம்தான் குசராத் படுகொலைகளுக்குப் பிறகும், சனாதன பிசேபி அரசை, மோடி என்ற உருவில் மாய்ந்து மாய்ந்து ஆதரித்தார்கள்.

ஆம், இவர் நன்றாக கதை எழுதுபவர்தான். நல்லா கதை எழுதுகிறார் என்பதற்காக, அவரின் அயோக்கிய சங்கித் தனங்களை, இங்கே பேசாமல் இருக்க முடியாது. தங்க ஊசி என்பதால் கண்ணில் குத்திக் கொள்ள முடியாது.

அவருக்கு அரசியல் உள்ளது அது எதுவென்று அறியத்தருகிறார். ரஞ்சித்தோ அல்லது பரியேறும் பெருமாள் "மாரி செல்வராசோ" செயமோகனிடம் வசனத்திற்காக போக மாட்டார்கள். செயமோகனின் அரசியல் களம் அதுவல்ல. எதிர் நிலை.

அவரிடம் போவதும் இருப்பதும் விச மனிதர்கள் அல்லது கதை என்னும் மகுடிக்கு மயங்கிய எளியவர்கள். அவர்களைப் பயன்படுத்தி அவர் விசம் பரப்புகிறார். அவரைக் கொண்டாடுபவர்கள் மோடிக்கு ஓட்டுப் போட்டவர்கள், ஆதரித்தவர்கள் அனைவரின் கையும் இரத்தக் கறை படிந்ததே என்பது என் நிலை. சின்ன கூட்டத்தில் விசம் வளர்த்துக் கொண்டிருந்த அவர் இன்று பெரிய மீடியாவை தன் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துகிறார். துயரமான நிலை

கடவுள் & மதம்
ஆகச் சிறந்த அயோக்கியத்தனம் மத நிறுவனம். நான் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த ஒருவன். என்னைப் பாதித்தது சனாதன(aka இந்து)மதம்தான். அதைத்தான் என் எழுத்தில், என் கோபங்களில் பார்க்க முடியும். அதற்காக, நான் பிற மதத்தை ஆதரிக்கிறேன் என்பதல்ல. அடிவாங்கிய இடத்தில், அடித்தவர்களை நோக்கி அழுகிறேன் அவ்வளவே. பிற இடங்களில் பிறர் வாங்கிய  அடிகளையும் உணர்ந்தாலும், என் தாய் மொழியிலேயே ,என்னால் கதற முடிகிறது. என் சூழ்நிலைகளே வந்து விழுகிறது கண்ணீராக.

உலகம்  இனிமையானதே
பரியேறும் பெருமாள் படத்தில் வரும் நாயகி போல, உலகம்  இனிமையானதே என்று வாழ்பவர்கள் ஒரு வகை. அப்படி இருப்பது உங்கள் உரிமை. இரவும் பகலும் வந்து போகிறது என்று தெரிந்திருந்து, ஆனால் "பகலிலும் கண்ணை மூடி இருப்பதே சுகம்" என்று நீங்கள் இருங்கள் தவறே இல்லை. அதற்காக, "பகல் என்பதே இல்லை" (இப்பெல்லாம் யாரு சாதி பாக்குறாக‌ வகை) என்று சொல்லாதீர்கள். சாதி,மத,வர்க்க அரசியல் எல்லா இடத்திலும் உள்ளது. இந்த மெய்நிகர் உலகிலும்.

"அது இருக்கிறது. ஆனால், நான் அது இல்லாததுபோல அனைவருக்கும் நல்லவராக இருக்க நினைப்பதால் கண்ணை மூடிக்கொள்கிறேன்" என்று சொல்லுங்கள் ஏற்றுக்கொள்கிறேன்.
"இல்லையே இல்லை உனது பார்வைதான் தவறு" என்றால், அது குறித்தான கவலைகள் எனக்கு இல்லை. உங்களுக்கும் இல்லை என்பது எனக்குத் தெரியும்.

உரையாடல் சாத்தியமா?

https://youtu.be/CHxmO5QdinY


தனது மூதாதையர் கருப்பின அடிமைகளை வைத்து இருந்தவர். அவர் வைத்திருந்த ஒரு கருப்பின அடிமையாலேயே கொல்லப்பட்டார் என்பதை "ஆன்டர்சன் கூப்பர்"( Anderson Cooper) டிஎன்ஏ சோதனைகள் மூலம் அறிய வருகிறார். பேட்டியாளர் "அது horrible way to die" என்று சொல்லிவிட்டு , ஆன்டர்சனிடம், "நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் do you think he deserved it? " என்று கேட்கிறார்.

ஆன்டர்சன் cooper சொன்ன பதில் "yea, I have no doubt". அதற்கு மேல் ஒருபடி போய், "It is awesome and I feel bad for the man who killed him" என்கிறார். தனது முன்னோர்களே என்றாலும், தவறை தவறு என்று சொல்வது.நீதியின் பக்கம் நிற்பது.

வரலாற்றுத் தவறுகளை ஏற்றுக்கொண்டவர்களிடம் மட்டுமே, அதற்கு அடுத்து என்ன செய்யலாம் என்று உரையாட முடியும். பரியேறும் பெருமாள் மாரி செல்வராசு, இறுதிக் காட்சியில் உரையாடவே விரும்புகிறார். அங்கே ஒருவர் அவரின் தவறுகளை, அவரின் சமுதாயத் தவறுகளை உணர்ந்து கொண்டு உரையாட வருவதால்.

பார்ப்பனிசத்தில், "தங்கள் முன்னோர்கள் முட்டாள்கள்,கொடியவர்கள்" என்று ஒத்துக்கொண்ட ஒருவரைக் காட்டுங்கள்.

தங்கள் முன்னோர்கள் செய்தது தவறு என்று உணர்ந்தவர்கள், நிச்சயம் அவர்களைப் போல வாழ மாட்டார்கள் வலிந்து திணித்துக் கொண்ட புற அடையாளத்திலும் அக அடையாளத்திலும். அவர்களிடம் உரையாடுவது என்பது, அவர்கள் சொல்லும் "நான் கண்னை மூடிட்டேன், இப்ப இருட்டு. வா பேசுவோம்" என்பது போன்றது. அத்தகைய போலித்தனமான உரையாட‌ல்களின் அவசியம் குறைந்துவிட்டது.

Call a spade a spade

அமெரிக்காவில் கறுப்பின மக்களை, வெள்ளையினத்து மக்கள் அடிமையாக நடத்திய‌ வரலாறு, இன்று ஒரு வெள்ளை ஆசிரியையால் பள்ளியில் பாடமாகவே சொல்லிக் கொடுக்கப்படுகிறது. American Civil War குறித்து, அமரிக்காவில் உள்ள எல்லா இனக்குழந்தைகளும் தெரிந்து கொள்கிறார்கள். மறைக்கப்படுவது இல்லை. மறக்கப்படுவதும் இல்லை.

தமிழகத்தில், இந்தியாவில் பார்ப்பனியம் செய்த கொடுமையை, முலை அறுப்பை, முலை வரியை, கோவில் தடையை,ஒரு தலைமுறையையே படிக்கவிடாமல் செய்ததை, வள்ளளாரும் நந்தனும் மறைந்ததை, ஆண்ட சாதிகள் கொடுமையை, உத்தப்புரச்சுவரை வரலாற்றுப் பாடமாக தமிழகத்தில் வைக்கவேண்டும். பிரச்சனைகளை, வரலாற்றை, வலியை சொல்லிக் கொடுக்கவேண்டியது அவசியம். இப்படிச் செய்ய மறந்ததால்தான் இன்இன்றைய‌ய சமுதாயம் பெரியாரை உடைக்கிறது.

வருடம் வருடம் நரகாசுரனை வதைத்து ஒன்றை எதையோ குழந்தைகளின் மனங்களில் நிறுவ முயல்கிறாரகள். இது  Continuous Reinforcement Dogmatism. இதையும் தாண்டி, வரலாறு சத்தமாக ஒலிக்கவேண்டியது அவசியம்.

வலிகள் வரலாறாக சொல்லித்தரப்படாவிட்டால் "இட ஒதுக்கீடு இல்லாட்டியும் நான் டாக்டராகி இருப்பேன்" என்று கிருட்டிணசாமிகள் பேசிக்கொண்டேதான் இருப்பார்கள்.
**

கீழே உள்ள உரைகளைக் கேளுங்கள். இதைப் பார்த்துவிட்டு ஒரு நிலையெடுங்கள். உங்களுடன் இருக்கும் நண்பர்களுடன் உரையாடுங்கள்.

கக்கூசு படம்
https://youtu.be/-UYWRoHUpkU


(கக்கூசு படத்தை என் குடும்பத்துடன் பார்த்தேன். என் குழந்தைகளின் கேள்விக்கு நான் சொன்ன ஒரே பதில்.  "ரேசிசம், பாசிசம், நாசிசம் போல பார்ப்பனிசம் இந்தியாவின் சாபக்கேடு" )

**
மறந்து போன வரலாற்றை மறுபடியும் நம் நினைவுகளில் துளிர்க்கச் செய்ய, அய்யா செந்தலை கவுதமன் அவர்களின் உரை

திராவிட இயக்கத்தை அழிக்க தமிழ்த்தேசியம் என்ற பெயரில் எட்டப்பர்கள்
https://youtu.be/IpayVYS938I



திராவிட இயக்க வரலாறு - புலவர் செந்தலை கவுதமன்
https://www.youtube.com/watch?v=6wsfh5obNwE


கலைஞர் குறித்தும் திராவிடம் குறித்தும்
(Why Reservation Doctor Ezhilan Naganathan)
https://youtu.be/CAl4hdrlJ6o


பேசித் திரிந்த பழைய கதைகள்

இலக்கிய அடியாள்: செயமோகன்
http://kalvetu.blogspot.com/2017/03/blog-post_27.html

கதை விற்கும் டவுசர்களின் அட்டகாச வரலாற்று அறிவு மற்றும் சொம்பாய் மாறுதல்: செயமோகன் & மதன்
http://kalvetu.blogspot.com/2012/05/blog-post_17.html

பெரிய ஒலிபெருக்கியின் சப்தம்
http://kalvetu.blogspot.com/2016/08/blog-post.html

எளக்கிய மொக்கைகளே கீப் இட் அப்.
http://kalvetu.blogspot.com/2015/04/blog-post.html
*

Thursday, November 08, 2018

தாழப் பறக்கும் கொடி: இன்று நடந்த கொலைகள்

ழி நெடுக பல கொடிக் கம்பங்களைக் கடந்து செல்வேன். பள்ளிகள், கார் விற்பனை நிலையங்கள், தீயணைப்பு நிலையங்கள் என்று. கடந்த சில வருடங்களாக, மாதங்களில் ஒருமுறையேனும் இந்தக் கொடி, தன்னை இறக்கிக் கொண்டு, யாருக்காவது அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கும்.

இது வாடிக்கையாவிட்டத்து. Becoming a new normal.

எனது வாழ்நாளில் பெரும் பகுதியை இங்கே வாழ்ந்திருக்கிறேன், வாழ்ந்து கொண்டுள்ளேன். இந்த நாட்டின் அரசியலை, தேர்தலை புரிந்து கொள்ள வெகு நாளாயிற்று எனக்கு. அமெரிக்காவின் சட்டம், அது கொடுக்கும் சுதந்திரம் என்று பலமுறை அதிசியத்திருக்கிறேன். அதிகமாக கிராமங்கள் பக்கம் செலவழிப்பவன் என்ற முறையில், இவர்களின் துப்பாக்கித் தேவையின் அரசியல் அறிந்தவன். அதன் நியாயம் என்பது நாணயத்தின் ஒரு பக்கம் மட்டுமே.

அந்த சுதந்திரம், அந்த தேவையின் நியாயம், கணநேர கோப வெளிப்பாட்டின் கொலையாகவும், அரசியல் மதம் சார்ந்த பிரிவுகள் கொடுக்கும் அழுத்தங்களின் கொடுங்கொலைக்களமாகவும் மாறி வருகிறது.

பெரும்பான்மை மக்களின் ஓட்டுதான் அதிகாரத்தைக் கட்டமைக்கிறது. அந்த பெரும்பான்மை மக்களின் இதயங்கள் அழுகிவிடும் நிலையில், மனிதம் மாண்டுவிடுகிறது. துப்பாக்கிக்கான கட்டுப்பாடுகள், சட்டவடிவாக மாறும் என்பது என் நம்பிக்கை மற்றும் ஆசை.

கலிபோர்னியாவில் நேற்று இரவு நடந்த துப்பாக்கி சூட்டுக் கொலையில் இறந்தவர்களுக்கு அஞ்சலி!

12 dead in California bar shooting
https://www.cnn.com/us/live-news/california-shooting-intl/index.html

Sunday, November 04, 2018

Irrational, victim shaming, dogmatism: They won’t be happy until all believe in that stupidity

தாழ்த்திக்கொண்ட மக்கள் அல்ல, தாழ்த்தப்பட்டவர்கள். ஒடுங்கிய மக்கள் அல்ல, ஒடுக்கப்பட்டவர்கள். 

சனாதன வேதமதம் (aka இந்து)  என்பது, அதன் பார்ப்பனிசத் தத்துவங்களை(வருண பேதம்) கடவுள் உருவாக்கியதாகச் சொல்கிறது. 

கீதை - அத்தியாயம் 4 சுலோகம் 13
------------------------------------------------------------
சதுர் வர்ணம் மயா சிருஃச்டம் (catur-varnyam maya srstam)
குண கர்ம விபாசக (guna-karma-vibhagasah)
தஃச்ய கர்த்ரம் அபிமாம் (tasya kartaram api mam)
வித்தய கர்த்தார அவ்யம் (viddhy akartaram avyayam)

இதன் பொருள்:
------------------------
நான்கு வர்ணங்கள் என்னால் உண்டாக்கப்பட்டவை. 
அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்ய வேண்டும்.அதனை மாற்றிச் செயல்பட வைக்க இந்த வர்ண தர்ம உற்பத்தியாளனாகிய என்னால் கூட முடியாது.

இப்படிக்கு,
கிருட்டிணன் (கடவுள்)

**

இதைச் சொன்னால் பார்ப்பனிசம் கடைபிடிப்பவர்கள் (நவ பார்ப்பனர் உட்பட) இதன் பொருளை மாற்றி,  "அப்படியெல்லம் இல்லை. இது குணத்தால் வருவது.திராவிடம்தான் மாத்திச் சொல்கிறது" என்பார்கள். சரிதான் எந்த நூற்றாண்டிலாவது, அப்பா அம்மா அய்யர்/அய்யங்காரா இருந்து, அவர்களின் பிள்ளைகள் குணத்தால் வேறு வர்ணத்திற்கு மாறிய எடுத்துக்காட்டு உண்டா? அய்யர் அய்யங்காராக இருந்து அருந்ததி சாதிக்கு மாறிய, அல்லது அருந்ததி சமுதாயத்தில் இருந்து அய்யராக மாறிய ஒரு குடும்பத்தைக் காட்டுங்கள். ஏன் ஆயிரம் ஆண்டுகளாக குணத்தால் மாற்றம் நடக்கவில்லை வர்ணத்தில்.

இதைத்தான் மிசுடர் இந்துக் கடவுள் சொன்னார், "அதனை மாற்றிச் செயல்பட வைக்க இந்த வர்ண தர்ம உற்பத்தியாளனாகிய என்னால் கூட முடியாது" என்று.

வேலைக்குப் போகும் பெண்களை விலைமாதர்கள் என்று சொன்ன ஒரு சாமியாரை அய்யர் இனத்தில் இருந்து விலக்கியா வைத்தார்கள்? பெண்கள் படுத்துதான் முன்னேறுகிறார்கள் என்று சொன்ன சிரிப்பு நடிகர் ஒருவர் இன்றும் அய்யராகவே உள்ளார். அவரின் குணத்தால், "தம்பிராசு சங்கம்" அவரை வேறு வர்ணத்திற்கு மாற்றி அறிவுப்பு வெளியிட்டுவிட்டதா என்ன?

**
சனாதன வேதம் என்பது, அய்யர் அய்யங்கார்களுக்காக அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு மதம். அய்யர் அய்யங்கார்களின் உளவியல் அடக்குமுறை என்பது, கடவுள் என்ற கான்செப்டை ஒட்டியது. அவர்களின் அனைத்துச் சித்தாந்தங்களும் கடவுள் என்னும் ஒன்றைக் கற்பித்து, அதற்கு அருகில் தாம் மட்டுமே இருக்க  தகுதியானவர்கள் என்று சொல்லி, சாமான்ய மனிதனை நம்பவைத்து, காலம் காலமாக செய்துவரும் உளவியல் ஒடுக்குமுறை. Yes , continuous reinforcement of dogmatism.

இப்படியான ஒடுக்குமுறைகளில் இருந்து மக்கள் வெளியே வரவேண்டும் என்று சொல்லி கேள்வி கேட்டால், இத்தகைய செயல்களை விமர்சிப்பது மற்றவர்களின் தாழ்வுமனப்பான்மை என்று சுலபமாகச் சொல்லிச் செல்கிறார்கள்.

சாசுதிரம், சடங்கு மற்றும் பயமுறுத்தல் போன்றவை இத்தகைய‌ irrational behavior களை மக்களிடம் ஊக்குவிக்கிறது. சாதரண மக்களை ஆட்டுவிக்கும் உளவியல் சுமைகள் அதிகம். ஒரு காணொளியில், (https://twitter.com/_karunai_malar/status/1058957980878557185?s=09) அய்யர் அய்யங்கார்கள் தின்ற எச்சில் இலையில் அடுத்தவர்கள் உருள்கிறார்கள். இதை தாழ்வு மனப்பான்மையால் அவர்கள் செய்கிறார்கள் என்றால் அதைவிட மனித குரூர சிந்தனை இருக்க முடியாது. 
**

கோவிலில் பூசை செய்யும் அய்யர் அய்யங்கார் போல, தானும் கருவறைக்குள் நுழைய, சக "பறைய இந்து" போராடினால், அது அவர்களின் தாழ்வு மனப்பான்மையா? அல்லது எல்லா இந்துக்குமான உரிமை கோரலா?

வெள்ளையர்களைப் (white race) பார்த்து கருப்பின மக்களுக்கு தாழ்வுமனப்பான்மை என்று racism த்திற்கு சப்பைக்கட்டு கட்ட முடியுமா? அமெரிக்க கருப்பின அடிமைக்காலத்தில், அம்மக்களின் போராட்டம் அவர்களின் தாழ்வு மனப்பான்மையால் வந்ததா? அடிமைத்தனத்தை உயர்வா எடுத்து அப்படியே வாழ்ந்திருக்கனும் அதுதான் சரிபோல‌. 
**
அய்யர் அய்யங்கார் எச்சிலில் மற்ற மக்கள் உருளும்  இப்படியானதொரு இழிநிலையில் அவர்களை வைத்துள்ள  வேத சனாதனமதம்(aka இந்து) எப்படி அன்பே உருவானதொரு கடவுளின் மதமாக முடியும்? உருள்பவர்களைவிட, அப்படி உருள்வார்கள் என்று இப்படி எச்சில் இலை விழாக்களில் உட்கார்ந்து சாப்பிடும் மனிதர்களை என்ன செய்வது?

அய்யர் அய்யங்கார்களை முன்னிலைப்படுத்தும் Irrational சடங்குகளின் உளவியலில் இருந்து எப்படி சாமான்ய மனிதனை  விடுவிப்பது என்பதே பேச்சாக இருக்க வேண்டும். பெரியார் அம்பேத்கர் போன்றவர்கள் அதற்குத்தான் உழைத்தார்கள். அவர்களின் ஒடுக்கப்பட்ட நிலையை "அவர்களின் தாழ்வுமனப்பான்மை" என்று கார்பெட்டுக்கு அடியில் தள்ளிவிடுவது victim shaming.

**
பாசிய , ரேசிச, நாசிச வரிசயில் உலகிற்கு இந்துமதம் கொடுத்த கொடை பிறப்பால் இழிவு அட்டவணை தயாரிக்கும் பார்ப்பனிசம். 

அய்யர் அய்யங்கார் எச்சில் இலையோடு நிற்கவில்லை.
-------------------------------------------------------
இந்த பார்ப்பனியத்தனம் அய்யர் அய்யங்கார் எச்சில் இலையோடு நிற்கவில்லை. 

ஆணிவேர் வரை எல்லா சாதிகளிலும் உள்ளது.. திருப்பூரை அடுத்துள்ள அலகுமலை கிராமத்தில் சக இந்து (தாழ்த்தப்பட்ட) சமூகத்தினர் ஈசுவரன் கோயில்(??) வழியாகச் செல்ல அனுமதிக்கக் கூடாது என்ற நோக்கத்துக்காக சக இந்து ஆதிக்கசாதி மக்கள் (அது என்ன சாதி??) கம்பிவேலியை அமைத்திருக்கிறார்கள். இது இன்று நடப்பது.
https://www.vikatan.com/news/tamilnadu/141413-untouchability-issue-at-a-village-in-tirupur-district.html

"உங்களுக்கு வேணுமின்னா தனிக்கிணறு வெட்டிக்கோங்க" என்பது போல‌, "இந்தச் சாலை வழியேதான் போகனுமா என்ன?" என்றும் கேட்கலாம். இப்படி ஆதிக்க சாதியைப் பார்த்து போராடுவது, இந்தக் குழந்தைகளின் தாழ்வு மனப்பான்மை என்று கூட சொல்லலாம். அப்படிச் சொல்பவர்கள் நிச்சயம் கடவுள்கள்.
**

ஈசுவரன் கோயில் வழியாகச் செல்ல குழந்தைகளைத் தடுத்து வைத்துள்ளார்கள். இப்படியான கொடுமைகளைப் பார்த்தும் அந்த ஈசுவரன் மிக்சர் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். எல்லாத்துக்கும் காரணமான, அனைத்தையும் அறிந்த, நம் தலைவிதியை ஏற்கனவே தீர்மானித்த, நம் துயரங்களையும டிசைன் செய்த, ஆர்க்கிடட்டான ஈசுவரனிடம் முறையிடமுடியாது. அப்படிச் செய்வது, மலேரியா குறித்து கொசுவிடம் பேசுவது போன்றது. "You cannot discuss your Malaria with the Mosquito!". 

Rational thought process கொண்ட மனிதர்கள்தான் சத்தம் எழுப்ப வேண்டும்.
**

Rational thought process கொண்ட மனிதர்களுக்கு  moral (ஒழுக்கம்) கிடையாது, அவர்கள் ஏன் இதைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்று கேட்கிறார்கள், அவஅறிவிலார்கள் (irrational people) . அல்லது,  "அறிவியலார்கள் இரகசியமாக கடவுளை ஏற்கிறார்கள்" என்ற சந்தேகம் அவர்களுக்கு. 

இது எப்படி உள்ளது என்றால், "தள்ளுவண்டி வச்சு நடக்கும் குழந்தை, அப்பா அம்மாவும் இரகசியமாக தள்ளுவண்டி வைத்துள்ளார்கள். இல்லாட்டி அவர்களால் நடக்க முடியாது" என்று நம்புவது போன்றது. மதக் கதைப்புத்தங்களை மறைத்து வைத்துவிட்டால், நீங்கள் (irrational people) உங்களின் moral (ஒழுக்கம்) value களை இழந்து, திருடனாக, கொள்ளைக்காரனக மாறிவிடுவீர்களா என்ன?  

Irrational people can be happy with their stupidity but looks like they won’t be happy until all believe in that stupidity.
*

Monday, October 29, 2018

'பீ' மேலாண்மை: திரு.சக்கியின் சபரிமலை-கக்கூசு ஒப்பீடு

"Mount Whitney" அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள உயரமான மலை. எந்தப் புனிதக் கதைகளும் இட்டுக்கட்டப்படாத இயற்கையான, அழகான‌ இடம். ஆண்களும் பெண்களுமாக, பல ஆயிரக்கணக்கில் மலையில் ஏறி, மலை உச்சியை அடைவார்கள். விரதம் இல்லை வெறும் பொழுது போக்காக மட்டும். பெண்கள் அவர்களின் சானிட்டரி நாப்கின்களுடன் ( or  tampons/menstrual cup) செல்லலாம். மலையின் சுத்தம் காட்டி அல்லது அந்தக்கால கதைகளைக் காட்டி பெண்களை பலிகடா ஆக்குவத்தில்லை. ஆனால் இந்தமலை, சபரிமலையைவிட அதிக சுத்தமான இடம்.

"பீ" மற்றும் "மூத்திரம்" கழிப்பது குறித்த கடுமையான விதிகள் உள்ளது இங்கே. 22 மைல்கள் பாதையில் கக்கூசு கிடையாது. ஒரு காலத்தில் வைத்து இருந்தார்கள். பராமரிப்பு பிரச்சனைகளால் இப்போது கக்கூசுகள் இல்லை.

பீ வந்தால் என்ன செய்வது? ஆண் என்றாலும் பெண் என்றாலும் நீங்கள் பேண்ட பீயை, நீங்களே பையில் பிடித்து எடுத்து வரவேண்டும். ஆம். இதனால் அழகிய ஓடைகள் அழகாகவே உள்ளது. ஓடைகள் ஆய் கழுவ பயன்படுவதில்லை.

Mt. Whitney: Human Waste
https://www.fs.usda.gov/detail/inyo/recreation/hiking/?cid=stelprd3820395

மலையில் ஏற கொடுக்கப்படும் அனுமதித்தாளுடன், 'பீ' போக என்று அதற்கான  பைகளையும் அரசாங்கமே கொடுத்துவிடுகிறது. கொடுக்கப்பட்ட பையில் குத்தவச்சு பேண்டுவிட்டு, அதை மடித்து பொட்டலமாக்கி, நீங்களே சுமந்து, அதற்காக இருக்கும் கழிவுக்கூடையில் போட வேண்டும்.

அரசன் ஆனாலும்,  ஆண்டியானாலும், சாமியார் ஆனாலும், சாமியே ஆனாலும்,  ஆண்ட பரம்பரையே என்றாலும் அனைவருக்கும் ஒரே நடைமுறைதான்.
Using A “WAG” (Waste Alleviation and Gelling) Bag
http://www.mount-whitney.com/hiking_backpacking_mt_whitney/mt_whitney_wag_bags

இதனால் இன்றும் அந்தப் பாதைகள் சுத்தமாகவும், மலை, எந்தப் புனிதக் கதைகளும் சாமியும் இல்லாமல், சுத்தமாக உள்ளது.
**

இந்தியாவில் ஆன்மீகம் என்பது பூசணிக்காயை தெருவில் உடைப்பது தொடங்கி, சட்டை இல்லாமல் வெற்றுடம்புடன் பெண்  சிலைகளை தொட்டு குளிப்பாட்டும் பூசாரிகள் தொட்டு, கங்கையில் பிணத்தை தூக்கி எறியும் சிவிக் பண்புகள் அற்ற வெற்றுச் சடங்குகளே.

சாலை விதிகளுக்கு முரணாக கட்டப்பட்ட தெருவோர கோவில்களும் (எல்லா மதங்களும் அவர்கள் பங்கிற்கு) , அந்த ரோட்டில் அடைத்துக்கொன்டு பைக்கை நிறுத்திவிட்டு பயபக்தியாய் வணக்கிச் செல்லும் நல்லவர்களைக் கொண்ட ஆன்மீகம் இந்திய ஆன்மீகம்.

எந்த வெட்கமும் இல்லாமல் வாழும் யோக மனநிலை கொண்டது. அதுதான்  அதன் சிறப்பே. பொது வாழ்வு சிந்தனைகள் அற்ற ஒன்று.  சமூகம் , இயற்கை, மற்றும் அன்றாட சிவில் செயல்பாடுகள் என்று எல்லா இடங்களிலும் அயோக்கியத்தனங்கள் செய்தாலும், ஏதாவது ஒரு மதத்தைப் பிராக்டீசு செய்தால் அவன் புனிதமானவனாகிவிடுவான் இந்தியாவில்.
Image from: https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Pumpkins-broken-on-roads-despite-instructions/article15783243.ece
**

சபரிமலை, சக்கி அவர்களின் கக்கூசு உதாரணம்
-----------------------------------------------
சபரிமலை குறித்து ஏகப்பட்ட விவாதங்கள். தந்திரிக்குச் சொந்தமா? மலைவாழ் மக்களுக்குச் சொந்தமா?

அய்யப்பன் பிரம்மச்சாரி, பருவப் பெண்களை அவரிடம் இருந்து மறைத்து வைக்க வேண்டும் என்று ஒருபக்கம்.

"அனுமாரும் பிரமச்சாரிதானே? அவர் கட்டுப்பாடாக இருக்காரே? ஏன் அய்யப்பனும் அப்படி இருக்கக்கூடாது?" என்று ஒருபக்கம்.

இந்த விவாதங்களில், உடற்பயிற்சி சொல்லித்தரும் பிரபல தொழிலதிபர் திரு. சக்கி வாசுதேவன் அவர்களின் பேட்டியில், "பெண்கள் கக்கூசிற்கு ஆண் போகாதது போல, ஆண்களுக்கான கோவிலுக்கு பெண்கள் போகக்கூடாது" போன்றதொரு வாதத்தை வைக்கிறார். https://youtu.be/IqmAxB5qiH4?t=330

சரிதான் சக்கி அவர்களே. சபரிமலையில் 10 ல் இருந்து 50 வயது பெண்கள் மட்டும் வரக்கூடாது என்பது ஏன்?

50 வயதுக்கு மேல் உள்ள ஆணை பெண்கள் கக்கூசில் அனுமதிப்பார்களா என்ன? அல்லது, ஆண்கள் கக்கூசில் 50 வயதுக்கு மேல் உள்ள பெண்களை அனுமதிப்பார்களா என்ன?

நீங்கள் சொன்ன கக்கூசு உதாரணம்போல, எந்த வயதிலும் பெண்கள் வரக்கூடாது என்று சொன்னால்கூட ஒரு நியாயம் உள்ளது.


**
'பீ' மேலாண்மை
-----------------------------
சக்கியின் வழியாக, கக்கூசு மற்றும் 'பீ' மேலாண்மை குறித்தான சிலவற்றைப் பேசலாம்.

நான் 1984 ல் பழனிக்கு நடைபயணமாகச் சென்றுள்ளேன். குருசாமிகளின் அலப்பரையினால் , அவர்களைத் தவிர்த்து, எனக்கு நானே மாலைபோட்டு, பழனி சென்றுள்ளேன். மூன்று நாள் நடைப் பயணமாக.

அப்போதெல்லாம் பயணத்தில் எங்கே மலம் கழிப்பது என்ற கவலையோ, அது குறித்து சிந்திக்க வேண்டும் என்ற தேவைகளோ இல்லாதிருந்தது. அப்படி சிந்திக்க வேண்டும் என்று யாரும் சொல்லித்தரவில்லை. குருசாமி நடத்தும் பசனைக் கூட்டங்களில்கூட, எதைச் சாப்பிடுவது என்றும், என்ன பாட்டு பாடுவது என்றும், மாலையை எப்படி அணிய வேண்டும் என்ற‌ சடங்குகளையே சொல்லிகொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

குருசாமியிடம் மாலை போட்டுக்கொண்ட மேலச்சின்னம் பட்டி சரவணனுக்கும், எங்கே எப்படி மலம் கழிப்பது குறித்தான விசயங்களை அவனின் குருசாமி சொல்லிக் கொடுக்கவில்லை.

வாய்க்கால் கரை, கம்மாக் கரை என்று நீர்நிலைகளை ஒட்டி, எங்காவது குத்தவைத்து மலம் கழித்துவிட்டு அந்த நீர்நிலைகளிலேயே குண்டியைக் கழுவிட்டு முருகன் பேரைச் சொல்லி நடந்து கொண்டிருப்பார்கள் சாமிகள். சாமிகள் செல்லும் வழியெல்லாம் சந்தனக் குவியலாய் 'பீ'யை விட்டுச் செல்வார்கள்.

சந்தனம் மணக்கும் முருகனைக் காணச் செல்லும் வழியெல்லாம் பீக்காடாக ஆக்கிச் செல்வது குறித்த எந்த குற்றவுணர்வும் இல்லாமல், "முருகன் சிரசில்" ஒட்டிய சந்தனம் என்று புரோக்கர்கள் கொடுத்த சந்தனத்தை வாங்கிவருவதே முக்கியமாக இருந்தது.
**
ஒரு தலைமுறையே, ஒரு சமுதாயமே 'பீ' மேலாண்மை குறித்த எந்த சிந்தனையும் இல்லாமல், ஏன் அதை ஒரு பிரச்சனையாகவே எடுத்துக்கொள்ளாமல், கிடைத்த இடத்தில் பேண்டு கழித்த காலங்கள் அது.  அதே சமயம், பக்தி என்ற பெயரில் பசனைப் பாடல்களும், மாலையில் துணை மாலை முக்கியமா? என்ற கடுமையான விதிகள் இருந்தது.

கருவறையில் குசுவை நசுக்கிவிட்டால்கூட தவறே இல்லை. ஆனால், ஒரு அவசரத்திற்கு  குழந்தைகளை ஒன்னுக்கு இருக்கவிடக்கூட‌  கோவிலில் கழிப்பறையைக் காண முடியாது. மனிதர் கூடும் இடங்களில் கருவறைகளைவிட கக்கூசின் தேவை முக்கியம்.
**

சபரிமலை
---------------------
நான் சபரிமலை சென்றது இல்லை. சபரிமலைப் பாதையில் பீ, மூத்திரம் வந்தால் சாமிகள் அதை அந்த புனித ம‌லையிலேயே கழிந்து விட்டு வருகிறார்களா? அல்லது அய்யப்பன் மலை என்பதால், தங்களின் பீயை பையில் எடுத்து வந்து, புனித மலை தாண்டி, அடிவாரத்தில் போடுகிறார்களா என்று தெரியவில்லை.

"பெண்களின் இரத்தப் போக்கு இந்தக் கோவிலுக்கு தீட்டு" என்று சொல்லி 10 ல் இருந்து 50 வயது பெண்கள் வரக்கூடாது என்று கொந்தளிக்கும் ஆண் சாமிகள் நிச்சயம் அவர்கள் தினந்தோறும் பேளும் பீயை அய்யப்பன் வாழும் புனித மலையில் விட்டு வரமாட்டார்கள் என்றே நம்புகிறேன்.
**

மலை ஏறி இறங்கும் வரை, தினந்தோறும் புனித மலையில் மலம் கழிப்பவன் அய்யப்பனைப் பார்க்கலாம்.

மலை ஏறி இறங்கும் வரை தினந்தோறும் புனித மலையில் ஒன்னுக்கு போகிறவன் அய்யப்பனைப் பார்க்கலாம் என்பதால், மாதத்தில் மூன்றுநாள் வந்து போகும் "கருப்பை இரத்தம்" உள்ள பெண்கள் போவதில் பிரச்சனை இருக்காது அல்லவா?
**

ஒருவேளை, புனித மலைக்கு எந்த மனிதக் கழிவுமே ஆகாது என்றால், Mount Whitney சட்டதிட்டங்கள் போல‌ இப்படி ஒரு சட்டம் போடுவோம்.

"புனித மலையான சபரிமலையில், பேள்வதற்கு தடை. அது கக்கூசாக இருந்தாலும், கம்மாக்கரையாக இருந்தாலும். புனிதமான மலையில் பேள்வது பெரிய குற்றம். மலை ஏறுபவர்கள் அவர்களின் பீயை அவர்களே பையில் எடுத்து வரவேண்டும். அதை அதற்கென உள்ள பெட்டியில் போடவேண்டும்"

இப்படியான சட்டங்கள்தான் உண்மையான தூய்மை காக்கும்.

A tea stall inside a toilet block at Sabarimala
https://www.thehindu.com/news/national/kerala/a-tea-stall-inside-a-toilet-block-at-sabarimala/article6279967.ece

Sabarimala 2016 | Toilet waste are overflowing to Pampa
https://www.youtube.com/watch?v=GhveJAb6pwg

**
ஆண்களுக்கு  மட்டுமான கிளப்
---------------------------------------------------
ஆண்களுக்கு  மட்டும் என்று சில இடங்கள் இருக்கலாம் தவறே இல்லை. ஆண்களுக்கு மட்டுமான தனிப்பட்ட கடவுளாக அய்யப்பன் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், "ஏன் பெண்கள் வரக்கூடாது?" என்ப‌தற்காக ஆன்மீக அடியாட்கள் கொடுக்கும் விளக்கங்கள்தான் முன்னுக்குப்பின் முரணாக உள்ளது.

அய்யப்பன் திருமணமாகாத ஆண்:
-----------------------------------------------------------
திருமணமாகாத ஆண் ஒருவரைப் பார்க்க ஏன் திருமணமான ஆண்களை அனுமதிக்கிறார்கள்? விரதம் இருந்தால் "திருமண தோசம்" போய்விடும் என்றால் அது பெண்ணுக்கும் பொருத்தம்தானே?

பெண்கள் மலையேற முடியாது:
-------------------------------------------------------
10 இருந்து 50 வயது பெண்கள் மட்டும் மலை ஏற முடியாதா? 60 வயது பாட்டியால் ஏற முடிந்த மலையை 30 வயது பெண்ணால் ஏற முடியாதா என்ன? அப்படியே ஏற முடியாது அல்லது கூடாது என்றால், ஏன் இந்த வயதுக்கட்டுப்பாடு?

மலையில் புலி உள்ளது:
-------------------------------------
புலிக்குத் தேவை மாமிசம்தான். அதற்கு ஆண் மனித மாமிசம், பெண் மனித மாமிசம் என்ற வேறுபாடு இல்லை. மாமிச உடலுடன் ஆண் போகும் போது ஏன் அதே மாமிச உடலுடன் பெண் ஏன் போகக்கூடாது?

கருப்பை இரத்த வாடைக்கு புலி வரலாம் வாதத்தை ஏற்றுக்கொண்டாலும்,  தனது பக்தைகளை புலியிடம் இருந்து காப்பாற்ற முடியாத அய்யப்பன் எப்படி புலியிடம் பால் கறந்திருக்க முடியும்? என்ன மாதிரியான கடவுள் இவர்?
**

பெண்களின் இரத்தப் போக்கு இந்தக் கோவிலுக்கு தீட்டு என்பதே "10 ல் இருந்து 50 வயது பெண்கள் வரக்கூடாது" என்பதற்கான காரணம். செயல்படும் நிலையில் உள்ள கருப்பையுடைய பெண்கள், கன்னிச்சாமியின் கருவறைக்கு வரக்கூடாது என்பது ஒட்டுமொத்த மனிதத்தை அவமதிக்கும் செயல்.

ஒவ்வொரு மாதமும் உருவாகும் முட்டைகள், குழந்தைகளை உற்பத்தி செய்யக்கூடிய தகுதியான முட்டைகள். அது நடக்காதபோது இயற்கையாக வெளியேறும் ஒரு நிகழ்வு. இந்தக் காலத்தில் பெண்கள் அய்யப்பனைப் பார்க்கக்கூடாது என்று சொல்லி, இவர்கள் பெண்ணையும், அய்யப்பனையும் ஒருசேர அவமானப்படுத்துகிறார்கள்.
.
பழைய தகவல்
மலக்குடலுடன் இறைவனைத் தரிசிக்கலாமா?
https://kalvetu.blogspot.com/2006/07/blog-post.html

Monday, October 15, 2018

96 விமர்சனம்:சானு நிம்மதியாய் இருக்கிறார். எப்படி? ஏன்?

நான் 1986 ல் பத்தாம் வகுப்பு படித்தவன். எனக்கு 10 வருடங்களுக்குப் பிறகு பத்தாம் வகுப்பு படித்த ஒரு கூட்டத்தை அருமையாக‌ கதைப்படுத்துகிறார்கள். இந்தப்படத்திற்காக 'விசய் சேதுபதி' அதிகம் மெனக்கெட்டு உடம்பை வளர்த்துள்ளார். டி ராசேந்தரை நினைவுபடுத்தும் தோற்றத்தைக்கொண்டுவர, அதிகம் உழைத்துள்ளதை பாராட்டவேண்டும்.

தொந்தியும் தொப்பையுமாக, சதக் பொதக் என்று, ஒரு சராசரி ஆண் வர்க்கத்தை அப்படியே பிரதிபலிக்கிறார் விசய் சேதுபதி.சினிமாவைக் காதலிக்கும் ஒரு நடிகனால் மட்டுமே படத்திற்காக இப்படி உடம்பில் மாற்றம் காட்ட முடியும்.

ராமச்சந்திரனாக வாழ்ந்து இருக்கிறார்

நட்சத்திர விடுதியில் திரிசாவுடன் தரையில் அமர்ந்திருக்கையில் தள்ளி அமர்வது, குழந்தை போல பாசாங்கு காட்டுவது, கார் கதவைத் திறக்கும்போது சசிகலாவிற்கு எடப்பாடி அய்யா காட்டும் வகையான‌ பவ்யம், எல்லாவற்றையும் தாண்டி, தூங்குபவளின் தாலியை வணங்கி கண்ணில் ஒற்றுவது போன்ற "அரைவேக்காட்டுத்தனம் + பத்தாம் வகுப்பிற்கு மேல் மனதளவில் வளராத‌" கேரக்டரை நம் கண்முன் கொண்டுவருகிறார் அவரின் தேர்ந்த நடிப்பால். வெல்டன் சேதுபதி!

குறியீடுகள்

ராமச்சந்திரன் கேரக்டர் எப்படிப்பட்டது என்பதை பல குறியீடுகளாலும் இயக்குநர் உணர்த்துகிறார். அறையில் இருக்கும் நம்மாழ்வார் படம், தொழிலதிபர் 'சக்கி' புரோமோட் செய்யும் காப்பர் சொம்பு & டம்ளர் என்று பல குறியீடுகளால், ராமச்சந்திரன் கேரக்டர் வாழும்,  "ஃகீலர் வாழ்க்கையை" நமக்கு குறிப்பால் குறிப்பால் உணர்த்தி, அந்த அரைவேக்காட்டுக் கேரக்டரிடம் என்ன எதிர்பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கிவிடுகிறார் இயக்குநர்.

அதையும் தாண்டி, பெண்கள் "சிலீவ் லெஃச்" போடக்கூடாது என்று ராமச்சந்திரன் கேரக்டர் சொல்வதாக அவரின் மாணவிகளை வைத்தும் சொல்லியிருக்கிறார். இப்படியான காட்சிப்படுத்தல்கள்மூலம், 96 க்குப்பிறகு வளராமல் தேங்கிவிட்ட "முன்னோர்கள் என்ன முட்டாள்களா?" என்று சொல்லும் இன்றைய வாட்சப்பு மனிதர்களின் பிரதிநிதியாக ராமச்சந்திரனை கச்சிதமாக திரையில் கொண்டுவருகிறார் விசய் சேதுபதி. வெல்டன்!

பாலுறவு நடக்குமா /நடக்காதா

"வீடு பக்கத்துல இருக்கு வாங்க பேசுவோம்" என்று 1986  பத்தாம் வகுப்பு கிழக்கூட்டமான நானே சகசமாக சொல்லியிருக்கிறேன் என் ஆரம்பப்பள்ளி பப்பி லவ் பெண்களிடம். 1996 ல் பத்து படித்த கூட்டம், "பாலுறவு" நடந்துவிடலாம் அல்லது நடந்துவிடுமோ? என்பது குறித்தே பயப்படுகிறார்கள் அல்லது அதையே முக்கிய கருவாக வைத்து பயம் காட்டுகிறார்கள் பார்வையாளர்களுக்கு.

மேலும் , "ஒன்னியும் நடக்காது தைரியமா படம் பாருங்க" என்பதை "ரம்பாவே ஆடினாலும் அசையாதவர்" என்று கீரோயின் வழியாக‌ பிலடப், "அய்யா நல்லவர் வல்லவர்" என்ற லோக்கல் தாதாக்களின் அல்லக்கை பில்டப்பிற்கு சிறிதும் சளைக்காத மாணவி கதாபாத்திரம்.

இப்படி பலவழிகளில் பாலுறவு நடக்குமா /நடக்காதா/நடக்கவே நடக்காது/ தங்கக்கம்பி தம்பி என்று, சானு‍-ராமச்சந்திரன் சந்திப்புகள் திகிலாகவே போகிறது. அவர்கள் அருகில் இருந்தாலே ஏதாவது நடந்துவிடலாம் என்ற பில்டப்புகளை இயக்குநர் குறியீடுகளாலும், சவலைப்பிள்ளை போன்றதொரு மன்னாரு பாத்திரத்தை தன் நடிப்பாலும், நம் கண்முன் கொண்டுவந்து விசய்சேதுபதியும் "சபாசு" என்று சொல்ல வைக்கிறார்கள்.
**
"அந்த விசயம்" நடந்துவிடுமோ?

இது எல்லாம் தாண்டி நட்சத்திர விடுதியில் , திரிசா படுக்கையில் இருந்துகொண்டு "மேல வாடா" என்று அழைத்தவுடன் விசய் சேதுபதி "அஞ்சரைக்குள்ள வண்டி" லெவலில் சீன் போட்டு, தட்டுத்தடுமாதிரி படுக்கையில் கைவைத்து ஏறி, மனம் எல்லாம் காமம் மட்டுமே உள்ள அந்நியனாக நடிப்பில் அசத்துகிறார். படம் முழுக்க "அந்த விசயம்" நடந்துவிடுமோ என்ற பரிதவிப்பில் பார்வையாளர்களை சீட்டின் நுனிக்கு கொண்டுவருவதில் இயக்குநர் வெற்றி பெற்றுவிட்டார். இயக்குநரின் சிறப்பு!

வெறுமனே நடிப்பால் மட்டும் இல்லாமல், உரையாடல்ககளிலும் நேரடியாகவே,  "ஏதாவது ஆயிருமா?", "என்னடா இந்த வேகத்தில் இருக்காங்க" என்று தோழியாக வரும் ஒரு கேரக்டர் பதற்றத்தை ஏற்படுத்திக்கொண்டே உள்ளது கதைக்கு வலுச்சேர்க்கிறது.

திரிசா தவிர எல்லா நண்பர்களும் "ஏதாவது ஆயிருமோ?" என்ற சிந்தனையிலேயே படத்தை நகர்த்துகிறார்கள். அருமையான திரைக்கதை ஒருவித படப்படப்புடன் ஏதாவது ஆகாதா? அல்லது ஆயிருமோ? என்ற பரிதவிப்பை படத்தின் பின்பாதி முழுக்க தெளித்து மிரட்டியிருக்கிறார் இயக்குநர். இயக்குநரின் எதிர்பார்ப்பை தன் சீரிய நடிப்பால் சிறக்கச் செய்கிறார் விசய்சேதுபதி.
**
நீ இன்னும் வெர்சினா?

எனது 1986 பத்தாம் வகுப்பு காலம் மற்றும் இந்தப்படம் நடக்கும் 1996 பத்தாம் வகுப்பு காலங்களில் வளர்ந்து "ஆளான "ஆணுக்கோ பெண்ணுக்கோ கன்னிகழிதல் என்பது திருமணம் முதலிரவு நேரமே. சுய இன்பங்கள் தவிர்த்து, வெர்சினிட்டியை இழப்பது என்பது நேரடி உடலுறவில் மட்டுமே சாத்தியம்.

ராமச்சந்திரனுக்கு திருமணம் ஆகவில்லை என்று தெரிந்தும், சானு அவரிடம் "நீ இன்னும் வெர்சினா?" என்று கேட்பது, ரம்பை வந்தாலும் கவுந்தடித்துப் படுக்கும் "குலக்குத்துவிளக்கு" கேரக்டராக காட்டப்படும் ஒரு கதாபாத்திரத்தை, அவமதிப்பதாகவே உள்ளது. இது திரைக்கதையில்/கேரக்டர் பில்டப்புகளில் சின்ன சறுக்கல்.

ராமச்சந்திரன் paid sex ல் வெர்சினிட்டியை இழந்திருக்கவேண்டும் அல்லது dating, சேர்ந்துவாழ்தல் போன்ற மியூச்சுவல் கன்சன்ட் sex ல் வெர்சினிட்டியை இழந்திருக்கவேண்டும்.

ஆனால், கொடுக்கப்பட்ட "கேரக்டர்பில்டப்புகள்"படி, ராமச்சந்திரன் அப்படி இல்லை. இது தெரிந்தும், "வெர்சினா?" என்று சானு கேட்பதும் , அதற்கு  ராமு உடம்பெல்லாம் தெறித்து, நடுங்கி, சீன் போடுவதும் ஏன் என்று தெரியவில்லை. கொடுக்கப்பட்ட பாத்திரத்தை விசய் சேதுபதி சரியாகச் செய்தாலும், ஏன் இயக்குநர் இப்படி தான் பில்டப் கொடுத்த ஒரு "குலக்குத்துவிளக்கு" கேரக்டரை அவரே கேரக்டர் அசாசினிசேசன் செய்கிறார் என்று தெரியவில்லை.

காதல் கல்யாணக் குழப்பம்

"யாரையாவது காதலிச்சியா" என்ற கேள்விக்கு "ஆமா கல்லூரில ஒரு பொண்ணு..." என்று கதை சொல்கிறார். ஆக, இவர் சானுவை பாலத்தில் கடக்காமல் நின்றாலும், பிற பெண்களை காதலித்துள்ளார். ஆனால், அந்தப் பெண் க‌ல்யாணம் என்று சொன்னவுடன் இவரின் 'சானு' நினைவு வந்துவிட்டதாகச் சொல்லி விலகிவிட்டதாகச் சொல்கிறார். காதலுக்கு "ரீட்டா" கல்யாணத்திற்கு "சானு" என்ற பழையகால கதைகளை கண்முன் கொண்டு வந்துள்ளார் தனது நடிப்பால்.

பத்தாவது படிக்கும்போது இனம் புரியாத உணர்வாக சானுவை விரும்பியவர், கல்லூரியில் அடுத்தவரைக் காதலித்தேன் என்று சொல்கிறார். ஆனால், திருமணம் என்றவுடன் சட்டென்று 'சானு' நினைவிற்கு வந்து காதலை கலாய்க்கிறார்.

கடைசிவரை காதல் என்றால் என்னவென்று புரியவே புரியாத மயிலாப்பூர் சந்துரு வகை மனிதர்களை, அச்சு அசலாக காட்சிப்படுத்துகிறார் விசய் சேதுபதி தன் நடிப்பால். வெல்டன் சேது!

சானுவின் நிம்மதி

சானு கேரக்டர் ராமச்சந்திரனைக் கட்டாமல் நிம்மதியாய் இருப்பதாகச் சொல்வதன் மூலம், பத்தாவது வகுப்பிற்குப்பிறகு வளராமல் பாலத்திலேயே நின்றுவிட்ட ராமச்சந்திரனைக் கட்டியிருந்தால், சானு நிலைமை என்னவாகி இருக்கும் என்பதை,விழாவிற்கு வருபவர்களை வைத்து குறிப்பால் உணர்த்துகிறார் இயக்குநர்.

அந்த 96 கூட்டத்தில் சானு மட்டுமே "Jean Legging" பாட்டமும், சுரிதார் டாப்பும் அணிந்தவர். மற்றவர்கள் எல்லாம் சேலையும் சுரிதாருமாக உள்ள பெண்கள். ராமச்சந்திரனைக் கட்டியிருந்தால், வீட்டிலேயே பிரசவம் என்ற பாரிசாலன், ஃகீலர் ரேஞ்சு வாழ்க்கையாகி இருந்திருக்கலாம் சானுவிற்கு யார் கண்டார்கள்? நம்மாழ்வார் படம் மற்றும்  காப்பர் டம்ளர் வகையில் வாழும் ராமச்சந்திரன் சானுவை மணந்திருந்தால், 96 பத்தாம் வகுப்பு சந்திப்பிற்கு "பின் கொசுவம் வைத்து" சேலை கட்டிவர வேண்டும் என்றுகூட சானுவிடம் சொல்லியிருக்கலாம்.

பலூனை உடைத்துகொண்டும், தலையைக் குனிந்து கொண்டு சவலைப்பிள்ளையாக இருக்கும் ராமச்சந்திரன் கேரக்டர், அதைத்தான் உணர்த்துகிற‌து. மனம் வளர்ச்சியில்லாமல் பத்தாம் வகுப்பிலேயே தேங்கிவிட்ட ஒரு கேரக்டரை, த‌ன் நடிப்பால் பின்னி எடுக்கிறார் விசய் சேதுபதி. இவர் ஒரு சாதனைபதி!!

திரிசா


அருமையான நடிப்பு. Ageing gracefully!

இந்தப்படத்தின் மொத்த சுமையையும் சுமக்கிறார். மனவளர்ச்சி தடைப்பட்ட பழைய காதலன்(?), ஏதாவது நடந்துவிடுமோ என்ற பாலியல் பரவச பில்டப் கொடுக்கும் நண்பர்கள் கூட்டம் என்று பல அரைகுறை மனவளர்ச்சி கதா பாத்திரங்களுடன் சமாளித்து, கதையை நகர்த்திச் செல்கிறார்.

இறுதிக்காட்சியில், "இப்படி இன்னும் வளராமயே இருக்கானே" என்ற உணர்வில், தலையில் கைவைத்து ஆசிர்வாதம் கொடுத்து பிரிகிறார், அழுகிறார்.

ஒருவேளை திருமணம் நடந்திருந்தால் 96 ன் இரண்டாம் பாகமாக "சிப்பிக்குள் முத்து" இருக்கும்.

விசய் சேதுபதி

"நடுப் பக்கத்தைக் காணோம்" படத்தில் அவ்வளவாக வசனம் இல்லை. அதற்கடுத்து (நான் பார்த்தது) ஏதோ ஒரு ரவுடிப் படம் (நயன்தாராவுடன்).சவசவ என்று பேசினார்.  நடிகர் திலகத்தின் கட்டபொம்மன் வசனமாடல் ஒருகாலத்திலும், மணிரத்தினத்தின் முனுமுனு வசனங்கள் ஒருகாலத்திலும், இயல்பான பேச்சு மொழி வசனங்கள் ஒரு காலத்திலும் சக்கை போடு போட்டது. அந்த ட்ரெண்டுகளை மாற்றி, ஒருவித "சவசவ" பேச்சுமொழியை  அறிமுகப்படுத்தி, அனைவர் உள்ளங்களையும் கவர்ந்து வருகிரார் விசய் சேதுபதி.

வாட்சப்பு குரூப்புகளில் இருந்துகொண்டு, காப்பர், நம்மாழ்வார் என்று எதையாவது பார்வேர்டு செய்து, கண்டதைப் பின்பற்றி , கண்டதைத் தின்று தொந்தி வளர்த்து அலையும் மனிதர்களை கண்கூடாகக் கொண்டுவர நிறைய மெனக்கெட்டு இருக்கார்.

இந்தப் படத்திற்காக உடம்பில் முன்னேற்றம். சிறப்பு!

இசை
அருமை. கண்களை மூடிக்கொண்டே ரசிக்கலாம் படத்தை.

விசய்சேதுபதியின் சவலைப்பிள்ளைத்தனமான, 'கிள்ளினா அழுதிடுவேன்', 'கிட்ட வந்தா கடிச்சு வச்சுடுவேன்', 'தள்ளியே நிப்பேன்', 'பலூன் உடைப்பேன்' வகை நடிப்பு சமயங்களில், நாம் சிறிது நேரம் கண்ணை மூடி, நம்மை இயல்புக்கு கொண்டுவர, இப்படி இசையை இரசிப்பது தேவை.

இயக்கம்
எடுத்துக்கொண்ட கதை அருமை. " மயிலை மன்னாரு" வகை கதாபாத்திரத்தையும், சின்னவயசு காதலையும்,கவட்டைச் சிந்தனையிலேயே அலையும் அரைவேக்காட்டு நண்பர்களையும் ஒரு சேர ஒரு திரைக்கதையில் எடுக்க நினைத்து, டைரக்டர் அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்.

96 ல் பத்தாம் வகுப்பு முடித்துபிறகு, சானுவை அவரின் திருமணம்வரை பின் தொடர்ந்திருக்கிறார் இராமச்சந்திரன். இது ஒரு creeping சைக்கோ மனநிலை. வேறு ஒரு பார்வையில் இதைப் பார்த்தால் இது ஒரு சீரியல் கில்லர் வகைப்படமாக எடுக்க நிறைய scope உள்ளது தெரியும். ஆனால், சிறிதும் வழுவாமல், வளராத மனநிலை கொண்ட ஃகீரோவை வைத்து "பெட்டியை மூடும் வரை" சிறப்பாக கதையை நகர்த்தி வெற்றி பெறுகிறார் இயக்குநர்.

டைரக்டர் டச்சு
பிடித்த பெண்ணிற்கு திருமணமானபின், அவரின் குழந்தை அவரைப்போல் இருப்பதால், "குழந்தையை சைட்டு அடிக்கிறான்" என்ற கூமுட்டை வசனங்களை சைக்கோத்தனமாக பேசினாலும், அதை அனைவரும் இரசிப்பதாகக் காட்டுகிறார். இதெல்லாம் ஈவ்டீசிங் அல்ல அழுக்கு மனங்களின் வெளிப்பாடு. இப்படியான கேப்மாரித்தனங்களை போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார் இயக்குநர். சிறப்பு!

பள்ளிக்காலம்
பள்ளிக்காலத்தில் வருபவர்கள் நன்றாக நடித்துள்ளனர். ராமச்சந்திரன் சைக்கிளில் உள்ள பச்சை கலர் handbrake sleeve , பள்ளியில் காட்டப்படும் duster , ராமச்சந்திரனின் புத்தககப்பை என்று அந்தக் கால நினைவுகளைக் கொண்டு வருகிறார் இயக்குநர். சிறப்பு.

தோழியாக வரும் பெண் அணிந்துள்ள  Dental braces தவறாகத் தெரிகிறது. அந்தக் காலத்தில் braces ஒரே ஒரு கம்பியில்தான் இருக்கும். இந்தப் பெண் ஒவ்வொரு பல்லுக்கும் தனித்தனி அழுத்தம் கொடுக்கும் இந்தக்கால braces அணிந்துள்ளார். 96 ல் தஞ்சாவூர்/கும்பகோணம் பக்கம் அது கிடைத்ததா என்பதை அந்த ஊர்க்காரர்கள் விளக்கலாம்.

நிறைவேறாக் காதல் + சைக்கோ மனநிலை

மருத்துவர் சாலினியின் மருத்துவமனையில் கீரோ நுழைவது போல முடித்திருந்தால் "நிறைவேறாக் காதல் + சைக்கோ மனநிலை" திரைக்கதைக்கு வலுக்கூடியிருக்கும்.

அது போல இப்படியான எதிர்மறை ஃகீரோ கேரக்டரை இரசிகர்கள் ஏன் மாய்ந்து மாய்ந்து இரசிக்கிறார்கள் என்று  மனநல மருத்துவர் சாலினி பேசிக் கேட்க வேண்டும். அப்படிச் செய்தால் படத்திற்கு இன்னும் விளம்பரம் கிடைக்கும்.

****

தன்னை மணக்காமல் சானு ஏன் நிம்மதியாக இருக்கிறார்? என்பதை, ராமச்சந்திரன் தன் நடிப்பால் justify செய்து இருக்கிறார்.

வெல்டன் இயக்குநர் & ஃகீரோ!

Sunday, October 14, 2018

நீர்'வீழ்ச்சி'களின் பார்வையாளன்: It is another milestone

"ருக்கிறார்" என்பதே எனது பதிலாய் உள்ளது. "அப்பா எப்படி இருக்கிறார்?" என்ற அன்பான கேள்விகளுக்கு. அதுதாண்டி சொல்ல ஒன்றும் இல்லை.கைப்பிடி மண் சொந்தமாக இல்லாவிட்டாலும், பிறந்து விடுவதாலேயே ஒரு ஊர் நமக்கான சொந்த ஊராகிவிடுகிறது.சொந்த வீடு இல்லாதவர்கள்கூட‌ இருக்கலாம். ஆனால், சொந்த ஊர் இல்லாதவர்கள் இல்லை. எனது சொந்த ஊர், என் பெற்றவர்கள் இல்லாத ஊராய் ஆகிவிடும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது நெருக்கிவரும் உண்மை.

கசங்கிய துணிபோல ஆகிவிட்டார் அப்பா.ஆனால், அவரின் கோவமும் பிடிவாதமும் இன்னும் கஞ்சி போட்ட கதராய் உள்ளது. 83 வயதில் நிலைதடுமாறி விழுந்துவிடுதல் என்பது சிக்கலானது. படுத்த படுக்கையாகிவிட்டார்.
**

" Leave No Trace " என்ற‌ கருத்தாக்கம், மலைப்பயணங்கள் மற்றும் இயற்கையில் மனிதன் ஊடுருவும்போது கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டி விதிமுறைகளைக் குறிக்கும். https://lnt.org/learn/7-principles

காடுகளில் பயணம் செய்யும்போது, நீங்கள் அந்தக் காட்டின் பார்வையாளர் மட்டுமே. எதையும் மாற்றி அமைக்க உரிமை இல்லை. உங்கள் கண் முன்னால் புலியொன்று மானை அடித்து வீழ்த்தலாம். மான்கூட்டம் ஒன்று அழகிய புல்வெளியை மேய்ச்சல் நிலமாக்கலாம். நீங்கள் யாருக்காகவும் எதற்காகவும் வருந்தி, இடையூறு செய்திடமுடியாது. அங்கு நீங்கள் ஒரு பார்வையளர் மட்டுமே. மானை அடித்து தின்னும் புலிக்கு ஒரு குடும்பம் இருக்கலாம். அதன் குழந்தைகள் அதன் பாலுக்காக காத்து இருக்கலாம். தாய்ப்புலி பசியாறினால்தான் தன் குழந்தைகள் பசியாறும் நிலை இருக்கலாம். பார்வையாளனான நமக்கு, காட்டின் விதிகள் தெரியாது. அப்படியே பார்வையாளனாக பயணத்தை தொடர்வதே நல்லது.
**

ஒருநாள் முழுக்க அப்பாவின் அருகில் இருந்தேன் அதே அறையில். படுத்த படுக்கையாகிவிட்ட அவர் படுக்கையிலேயே சிறுநீர் போவதைக்கூட உணராமல் இருந்தார். அந்த அறையே துர்நாற்றம் அடித்தது. மறுநாள் காலையில் மதுரை சென்று, நண்பர் ஒருவரின் உதவியுடன் "Prevention of Bed/Pressure Sores Air mattress",  புதிய Full Foam மெத்தை, Adult Diaper இன்னும் சில மருந்துச் சாமான்கள் என்று வாங்கி வந்தேன். அறையை முழுக்கச் சுத்தம் செய்து, வெந்நீர் மற்றும் டெட்டால் கலவையில் கழுவிவிட்டேன். அப்பாவிற்கு "டவல் பாத்" கொடுத்து, பின்புறம் சுத்தம் செய்யும்போதுதான், அவருக்கு பின்பிறத்தில் பெரிய புண் வந்துள்ளதை கண்டேன். அண்ணனை அழைத்து அதைக் காட்டினேன். மருத்துவமனையில் இருந்து வந்ததில் இருந்து படுத்தே உள்ளார். தினமும் போர்வையை மட்டும் அலசி காயவைக்கிறார்கள். அவரின் உடம்பைக் கண்காணிக்கவில்லை.

பின்புறம் துடைத்து,மருந்து போட்டு, adult diaper ஐ மாட்டிவிட்டேன். மாலையிலும் ஒருமுறை செய்தேன். மதுரை "வடமலையான் மருத்துவமனை"க்குச் சென்று , அப்பாவை வீட்டில் வந்து பார்த்துக்கொள்ள செவிலியர் ஒருவரை ஏற்பாடு செய்தேன். இவை எல்லாம் இரண்டு நாட்களில் முடிந்துவிட்டது.

நான் செய்யும் எந்த செயல்களும் அப்பாவிற்கோ அண்ணனுக்கோ பிடிக்கவில்லை. அண்ணன் எதற்கு எடுத்தாலும், "எங்களுக்குத் தெரியாதா?", "நாங்க இத்தனை நாள் பார்க்கவில்லையா?" என்றே பேசிக்கொண்டு இருந்தான். அப்பாவோ, எதற்கும் ஒத்துழைக்க மறுத்தவண்ணமே இருந்தார். Adult Diaper போடுவது அவருக்கு பிடிக்கவில்லை. நான் அப்பாவிற்கு ஊட்டிவிடுவது அண்ணனுக்கு பிடிக்கவில்லை. நடுங்கும் கைகள் என்றாலும் "அவராகவே சாப்பிடவேண்டும் அதுதான் அவருக்கு எக்சர்சைசு" என்று என்னை சத்தம் போட்டான் அண்ணன்.

அப்பா அவரின் நடுங்கும் கைகளால் சாப்பிடும்போது உடல்முழுவதும் சாப்பாட்டை சிந்திவிடுகிறார். அதை யாரும் கவனிப்பது இல்லை. அதனுடனேயே தூங்கி எழுந்து உடல்முழுக்க அழுக்காகிவிடுகிறது.
**

"அவன் கிடக்கிறான் நீங்க எப்பயும் போலவே இருங்க"

"இவன் என்ன, இன்னிக்கு இருப்பான் நாளைக்கு பார்க்கப்போவது நாங்கதானே?" என்ற சத்தம் கேட்டு காலையில் கண்விழித்தேன். இரவு நேரங்கழித்து படுத்தமையால் அதிகநேரம் தூங்கிவிட்டேன்.

ஆம், எனது கவனிப்பு முறைகளால் கோவம் கொண்ட அப்பா, இனிமேல் சாப்பிடமாட்டேன் என்று உண்ணா நோன்பு இருக்க ஆரம்பித்துவிட்டார். "நான் இப்படியே இருந்து செத்துவிடுகிறேன்" என்று அவர் ஒருபக்கம் மிரட்ட, "டயப்பர் எல்லாம் வேண்டாம். நீங்க எப்பவும்போலவே இருங்க" என்று அண்ணன் ஒரு பக்கம் அவருக்கு ஆதரவாய் இருப்பதுபோல என்னை எதிர்க்க அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டிருந்தான். அவர்கள் அனைவரும் என்னை அந்த அறையில் வேண்டாத விருந்தாளியாக மட்டுமல்ல, ஒரு எதிரியாய் உணரச்செய்து கொண்டிருந்தார்கள்.

காந்தியின் வன்முறை போல அப்பாவின் உண்ணாவிரதம், "இவன் என்ன செய்வது எங்களுக்குத் தெரியாததா?" என்ற அண்ணனின் கோவம் என்று ஆரம்பித்த சண்டைகளில் மனம் வெறுத்துப் போயிற்று எனக்கு.

நான் செய்த‌ வேலைகளை தொடர்ந்து செய்ய நாளை முதல் மதுரை வடமலையான் மருத்துவமனையில் இருந்து செவிலியர் ஒருவர் வருகிறார். நிச்சயம் அவர் இவர்களை மீறி இந்தச் சூழ்நிலையில் வேலை செய்ய முடியாது. அதுவும் நான் ஏற்பாடு செய்த செயல் என்பதால் நிச்சயம் அண்ணனுக்குப் பிடிக்காது. மருத்துவமனையை அழைத்து அவர்களின் சேவையை இப்போதைக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டு, அண்ணனிடம் உனக்குச் சரியென்றுபடும்போது அழைத்துக்கொள் என்று சொல்லிவிட்டேன்.
**

எனது ஊரில் எனது வீட்டில் நான் பார்வையாள‌னாகிப் போனேன்.ஓவென்று கீழிற‌ங்கி, தலைகுப்புற வீழ்ந்து, முட்டிமோதி கதறியழும் நிலைகவிழ்ந்த ஆற்றை, நீர்வீழ்ச்சியென்று ஓரமாக இருந்து பார்க்கவேண்டிய நிலை. ஆறு கவிழ்கிறதே என்று பள்ளத்தை சரிசெய்துவிடமுடியாது. அதுதான் காட்டின் விதிகள்.

வீட்டில் பணத்திற்கு குறைவில்லை. என்னைவிட பணக்காரர் என் அப்பா. ஆம், வீடு சேமிப்பு அரசு ஓய்வூதிய‌ம் என்று அவர் நல்ல நிலையிலேயே உள்ளார். அதுதாண்டி அவருக்கு தேவையான எல்லாவற்றையும் செய்யும் விரும்பிய நிலையில் நான். அண்ணனும் வசதியாகவே உள்ளான். இருக்கும் வீடுகள் பத்தாது என்று பல‌ இலட்சங்களைக் கொட்டி பலமாடி வீடு ஒன்றைக் கட்டிக்கொண்டுள்ளான். பணம் என்பது குறை அல்ல இங்கே. ஆனால், அவர்கள் செய்வது அவர்களுக்கு சரியாய் உள்ளது. நான் சொல்வதோ அல்லது செய்வதோ அவர்களுக்கு பிடிக்கவில்லை.

போர்வை நனைந்தால் துவைத்துக் கொள்ளலாம். டயப்பர் தேவை இல்லை என்று, தினமும் நனைந்த போர்வையை துவைக்க ஆள் வைக்கிறார்களே தவிர, எப்போதும் நனைந்த படுக்கையும், அதனால் வரும் புண் மற்றும் இதர சிரமங்களையும் புரிய மறுக்கிறார்கள்.
**

கலைஞரைப் பார்த்துக்கொண்ட குடும்பத்தினரைவிட, ஒரு நல்ல நோயாளியாய் மருத்துவரின் ஆலோசனைகளின் பேரில், மழை பெய்தாலும் குடைபிடித்து நடந்த கலைஞர் என் கண் முன்னே வந்துபோனார்.

வழக்கம்போலவே தரையில் எறியப்பட்ட மீனாய் உணர்ந்தேன். ஒன்றும் செய்ய இயலவில்லை. மேற்கொண்டு பிரச்சனைகளைத் தவிர்க்க அந்த அறையைவிட்டு வெளியில்வந்து மாடிக்குச் சென்றுவிட்டேன். இரண்டு வாரங்களாக நான் இருந்தும் இல்லாமலேயே இருந்தேன். அப்பாவிற்கும் உதவமுடியவில்லை. அவரே அதை வெறுக்கிறார். அண்ணனைமீறி ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஒவ்வொருவருக்கும் சரியெனப்படுவதையே அவர்கள் செய்கிறார்கள். அப்பா, அவர் என்ன சொல்கிறாரோ அதைத்தாண்டி வேறு எதுவும் செய்ய விடுவது இல்லை. அண்ணனோ என்னை ஒரு பார்வையாளன் என்ற இடத்திலேயே நிறுத்த விரும்புகிறான்.
**

அன்றைய‌ உடன்கட்டை, தேவதாசி ஆதரவு முதல் இன்றைய அய்யப்பன் ஆதரவு வரை, தான் மதிப்பிழக்கிறோம் என்பது தெரியாமலே ஆதரிக்கிறார்கள் பெண்கள். ஆனால், வேறு சிலருக்கு அது தவறாய்த் தெரிகிறது. நீதிமன்றம் அரசாங்கம் போன்ற அதிகார மையங்களால் மட்டுமே இதனை உடைக்கமுடியும்.

அதிகாரமற்ற பார்வைகள் அதிகாரமில்லாத காரணத்தினாலேயே அவமானப்படுத்தப்படும் ,நிராகரிக்கப்படும். அதுவே எனக்கு நடந்தது. 17 வருடங்களாக தொலைவில் வாழ்வது உறவுகளிடம் தொலைந்த வாழ்க்கையே. Long distance relationship என்பது, காதலில் மட்டுமல்ல எந்த உறவுகளிலும் சரியாக வராது. உறவாடாமல் உறவு இல்லை.
**

அப்பாவின் நண்பர்களிடம் பேசினேன். அனைவரும் நான் சொல்வதை ஏற்றுக்கொண்டாலும், இறுதியில் "அப்பா அப்படித்தான். நீதான் செய்யணும்" என்றார்கள். எப்படிச் செய்வது என்றுதான் தெரியவில்லை. அது அவர்களுக்கும் தெரியவில்லை.

ஓவென்று கதறிவிழும் அருவியை, நீர்வீழ்ச்சியென நின்று பார்ப்பதே காட்டில் ஒரு பயணியாய் செய்ய முடிந்தது. பாதைகளை மாற்றிவிட முடியாது. நமக்குச் சரியெனப்படுவது மற்றவர்களுக்கும் சரி என்று இருக்காது என்று எனக்குத் தெரிந்த போதும், இது போன்ற மருத்துவச் சூழ்நிலைகளில், நோயாளியின் விருப்பத்திற்கு விட்டுவிடுவது சரியா? என்பது தெரியவில்லை. அதுவும், என் அப்பா போன்ற பிடிவாதக்காரர்கள், என் அண்ணன் போன்றவர்களிடம், அவர்களின் வழிக்கே விட்டுவிடுவது என்பது பலமுறை என்னை " Point of No Return" போய் நிறுத்துயுள்ளது. இந்த முறையும் அதுவே நடந்துவிட்டது.
**

மூன்று வாரங்கள் அப்பாவுடன் அவருக்கு உதவியாய் இருக்க நினைத்துச் சென்றது வேலைக்காகவில்லை. இரண்டு வாரங்களில் கிளம்பிவிட்டேன். மகனாய் ஏதும் செய்ய முடியாது. பார்வையாளனாய் பரிதவிக்கிறேன்.

நல்ல மாணவன், நல்ல கண‌வன், நல்ல குடிமகன்..இப்படியான "நல்ல" நல்லவைகளில் "நல்ல நோயாளி" என்பதும் முக்கியமானது. சின்ன வயதில் அப்பாவை அதிசியத்து அவரிடம் இருந்து பாடங்கள் கற்றுக்கொண்டேன். "டே நீ அவன் கால்தடத்த மிதிச்சாலும் அவன் புத்தி வராதுடா" என்று ஒரு கிழவி யாரோ ஒருவரைத்திட்டியதைக் கேட்ட நான், என் அப்பாவின் கால்தடங்களை மிதித்தே பின் தொடர்வேன் சின்னவயதில். நானும் அப்பா மாதிரி வரவேண்டும் என்ற ஆசையால்.

இன்றும் அப்பாவிடம் இருந்து பாடங்களைக் கற்கிறேன். எப்படி இருக்கக்கூடாது என்று.
**

ஏற்கனவே பலமுறை சொன்னதுதான். நாம் நமது முதுமைக்காலத்திற்கு திட்டமிட வேண்டும். அனைவரும் ஒருகாலத்தில் படுத்த படுக்கையாகவோ  அல்லது படுத்தவுடன் எழுந்திருக்காமல் சென்றுவிடும் சூழலோ வரலாம். அப்படியான நேரத்தில் என்ன செய்யலாம் என்பதை குழந்தைகளுக்கும் உறவினர்களுக்கும் இப்போதே சொல்லிவிடவேண்டும். முதுமைக் காலத்தில் குழந்தைகளுடன் இருப்பது சிறந்ததுதான். ஆனால், அதற்கான நடைமுறை வாய்ப்புகள் வருங்காலத்தில் இருக்குமா? இல்லாவிட்டால் எங்கே? எப்படி? முதுமையைக் கழிக்கப்போகிறோம் என்பதற்கான திட்டங்கள் அவசியம்.

உதாரணத்திற்கு Coma (state of unconsciousness) போன்ற நிலைக்குச் சென்றுவிட்டால், நம்மை நம் உறவினர்கள் குழந்தைகள் என்ன செய்யவேண்டும். எவ்வளவு காலம் பராமரிக்கலாம்? சட்டம் அனுமதிக்கும் பட்சத்தில் மருத்துவத்தை நிறுத்தலாமா? என்பது போன்றவைகளை இப்போதே பேசலாம். அமெரிக்கா போன்ற இடங்களில், பெற்றோர்கள் இருவரும் விபத்தில் இறந்தால் குழந்தைகளுக்கான பராமரிப்பை யார் செய்யவேண்டும் என்று சொல்லியிருக்காவிட்டால், அரசு அவர்கள் விதிப்படி பாதுகாவலரை நியமிக்கும். இதுபோன்ற சிக்கல்களை திட்டமிடல்கள்மூலம் தவிர்க்கலாம்.

உறவுகள் தாண்டி நம்மைக் கொண்டாட சிலரும், நாம் இருப்பதற்கான வலுவான காரணங்களையும் (மூத்திரச் சட்டி பெரியார்) ஏற்படுத்திக்கொண்டால் முதுமைகூட இனிக்கும்.
**

இறப்பும் ஒரு milestone. இறுதியான  milestone. அதற்காகவும் திட்டமிடுதல் வேண்டும்.