Friday, December 03, 2021

ஆட்டுக்கார அலமேலும் அந்த ஆடும்: ரசினி என்ற நரி

"இதுதான் படத்தில் நடித்த ஆடு" என்று ஒரு ஆட்டை அழைத்து வந்தார்கள். எங்கள் ஊரில் இருந்த ஒரே தியேட்டர் "அசந்தா" தியேட்டர் மட்டுமே. "இன்று இப்படம் கடைசி" என்று இருக்கும் போசுட்டரில் குறுக்காக பட்டை ஒட்டிய காலம் அது.

மதுரை டவுனில் படம் ஓடி, ஃபிலிம் தேய்ந்தபிறகே எங்கள் ஊருக்கு வரும். இரண்டு வாரங்கள் தாண்டி ஓடினாலே அது எங்கள் ஊரில் "சில்வர் சூப்ளி".

இந்தப்படம் ஒரு மாதம் ஓடியது என்று நினைக்கிறேன். அப்போது, நான் எனது குண்டியின் பின்புறம் தெரியும் வண்ணம் "சன்னல்" வைத்த அரை டவுசரில் இருந்த காலம் என்று நினைக்கிறேன். என் சகாக்களும் அப்படியே. வேளாண்மை குடோனில் இருந்த சிமெண்ட் சறுக்கில், சறுக்கி சறுக்கியே எங்கள் டவுசரில் இயற்கையாகவே பின்னால் சன்னல் வந்திருக்கும். எங்கள் பெண் தோழிகள் அதையெல்லாம் கண்டுகொள்வதே இல்லை. சன்னல் வைத்த எங்கள் டவுசர்களுக்கு அவர்கள்  பழகி இருந்தார்கள்.

அன்று அந்த ஆட்டை மேள தாளங்களுடன் ஒவ்வொருதெருவாக அழைத்து வந்தார்கள்.எனது அம்மாகூட அந்த ஆடு அலமேலுவைக் காத்த கதையைச் சொல்லிச் சொல்லி மாய்ந்து கொண்டிருப்பார். அலமேலு வந்திருந்தால்கூட அவ்வளவு கூட்டம் கூடியிருக்குமா என்று தெரியாது. அவ்வளவு கூட்டம்.

ஆடு மதுரை திரும்பும் வரை என் போன்ற சன்னல் வைத்த டவுசர்கள் அதன்பின்னால் சுத்திக் கொண்டிருந்தோம். சந்தடி சாக்கில் ஆட்டின் கொம்பைத் தொட்ட ஒருவன் (முனியாண்டி என்று நினைக்கிறேன்) பேமசாகிவிட்டான். அடுத்தநாள் பள்ளியில் , பல பெண்கள் தங்கள் அழுக்குப் பாவாடையில் வைத்து காக்காய்கடி கடித்த கம்மர்கட்டை அவனுடன் பகிர்ந்தார்கள். சுமதி அவனுக்கு கொடுக்கவில்லை என்பது எனக்கு திருப்தி. அப்படிக் கொடுத்திருந்தால் அடுத்த நாள் அவளின் சைக்கிள் கடையில் அவளுக்காக நிற்கக்கூடாது என்று நினைத்து இருந்தேன்.

தியேட்டரில் கடலைமிட்டாய் விற்கும் அண்ணன் ஒருத்தன் எங்கள் பக்கத்து வீட்டுக்காரன். அவனுக்கு ஆட்டின் பின்னால் போகும் பாக்கியம் கிடைத்தது மதுரவரை.

சில வாரங்களுக்குப்பின் அவனிடம் , "எண்னே , இப்ப அந்த ஆடு எங்க இருக்கு? மெட்ராசுக்கு நடிக்கப் போயிருச்சா? என்றேன். "போடா வெண்ணை , அது அன்னிக்கே மிளகரணைப் பிரிவில் பிரியாணியாயிருச்சு" என்றான். மருத போகும் இடத்தில், 'குமாரம்' தாண்டி 'மிளகரணை'ப் பிரிவில் அதை பிரியாணியாக்கிட்டார்களாம்.

சாராயம் பிரியாணி என்று அலமேலுவின் ஆட்டைத் தின்று செரித்து விட்டார்கள்.

"அய்யோ! அப்போ அது சினிமா ஆடு இல்லையா? புதுப்பட்டித் தியேட்டருக்கு என்ன பண்ணுவாங்க?" என்றேன்.

"டிஃச்டிரிபூட்டர் வாடிப்பட்டி சந்தைல புது ஆடு வாங்கித்தருவார் அவுகளுக்கு. அதுவும் படம் ஒருவாரத்துக்கு மேலயாவது ஓடினாத்தான்" என்று சொன்னான் அந்த அண்ணன்.
**

காலம் முழுக்க சினிமா ஆடுகள் தெருவுக்கு வந்து போகிறது. ஆடுகளாவது பிரியாணியாகும். இந்த நரிகளால் என்ன பயன்?

நல்ல வேளை காந்தி செத்துட்டார். "எதற்கெடுத்தாலும் சாப்டாமா அழிச்சாட்டியம் உண்ணாவிரதம் செய்தா நாடு கெட்டுப்போயிடும்" என்று ஆன்மீகம் குருத்து சொல்லிருக்கும்.

G+ Post 05/30/2018

Sunday, November 14, 2021

சனாதனம்,பிராமணன்,பார்ப்பனியம், அந்தணர்,வர்ணம், சாதி: சொல்-பொருள் விளக்கம்

சனாதனம்:

சமசுகெரகச் சொல். அதன் பொருள் "என்றும் மாறாதது". அதாவது அதில் சொல்லப்பட்டவைகள் எக்காலத்திலும் யாராலும் மாற்றமுடியாதது. (இந்த விளக்கமே அறிவியலுக்கு முரணானது). மாற்றவே முடியாதது என்று சொல்வதன் நோக்கம், "இது உனக்கு விதிக்கப்பட்டது. அவ்ளோதான். நாங்க எழுதிவைத்ததைக் கேள்." என்ற அரசியலே.

(சனாதன்) வேதம்:

அப்படி மாற்றவே முடியாத(சனாதன்) ஒன்று எது? அதை எழுதினார்கள்?என்றால் அதுதான் வேதங்கள் எனப்படுபவை. இந்த வேதங்களை யார் எழுதினார்கள்? ஆரிய பிராமின்கள். ஏன் எழுதினார்கள்? கதைகளின் மூலம் வரலாற்றைக் திரிக்க & தங்களின் கருத்தை சமூக சட்டமாக்க.

கர்மா:

சமசுகெரக பொருள் விதிக்கப்பட்டது.

தர்மா/தர்மம்:

சனாதன தர்மத்தின் சுருக்கம்.

(தமிழில் அறம் மட்டுமே உள்ளது. அது பிறப்பால் வருவதும் இல்லை. பரிகாரம் செய்தால் போவதும் இல்லை. அது சமூக நன்னடத்தை அவ்வளவே)

எமதர்மன்: சனாதன தர்மத்தை execute செய்பவன்.

தர்மன்: எம தர்மனுக்கும் குந்திக்கும் பிறந்த யுதிச்தரனின் (Yudhishthira) டுவீட்டர் Handle.

வர்ணம்:

Literal meaning = Color

சனாதன வேதத்தில், மனிதர்களை பிறப்பால் தீண்டாமை பார்க்கும் ஒரு கோட்பாடு.  Birth based discrimination in the name of Varnam. (Similar to Racism, Fascism & Nazism)


சாதி:

Jati is a Sanskrit word meaning "birth.

சாதி என்பது தமிழ்ச்சொல்லே அல்ல. Jaன் Jaனனம் என்ற சமசுகெரம். Jaன் என்றாலே பிறப்புவழி.

பிராமணன்:

சனாதன வேத‌ நால் வருணத்தில் முதல் வருணமாகச் சொல்லப்படுவது.

Brahmin, Kshatriya, Vaishya & Shudra

பிராமணன் என்பது சாதி அல்ல அது வர்ணம். அய்யரன், அய்யங்காரன், சர்மான், பண்டிட்,நம்பூதிரியன்,தீட்சிதன் போன்றவைகளே சாதி. ஆனால், இவையாவும் ஒரே பிராமிண் வர்ணத்தில் வருபவை.

பிறப்பு வழியில் அய்யரன் அய்யங்க்காரனாக பிறந்த இந்த சாதி ஆண்கள், "யக்ஞோபவிதம்" என்ற  சடங்கு செய்து, பூணூல் போட்டு, அக்னி(தீ) வளர்த்து வழிபட்டு , மனிதனின் இயல்பான பெண் யோனி வழிப்பிறப்பை பாவயோனி என்று சொல்லி, இரண்டாம பிறப்பாக (கிறித்துவ பாப்டிசம் போல?)செய்து கொள்ளும் சடங்கே பூணூல் சடங்கு. இந்த அய்யரன் அய்ய‌ங்காரன் சாதியில் பிறந்தவகர்ளே என்றாலும் அந்தசாதிப் பெண்களுக்கு பூணூல் சடங்கு அதாவது இரண்டாம் பிறப்பு சடங்கு இல்லை. 

இந்த சாதிப் பெண்கள் வர்ணத்தில் சூத்திரவர்ணமே. பிறப்பையும் பெண்ணையும் அசிங்கப்படுத்தும் "பாவயோனி" என்ற சொல் இவர்களிடம் உண்டு.
 
தமிழ்நாட்டில் சாதிச் சங்கம் உள்ளது. அது சாபக்கேடுதான்.
ஆனால் "வர்ணத்திற்கு" என சங்கம் வைத்துள்ள ஒரு வர்ணம் "பிராமிண்" வர்ணம்தான்.
Caution:
இவர்கள் தங்களை பிராமணன் என்று ஒவ்வொரு முறை சொல்லும் போதும், பிறரை மறைமுகமாக சூத்திரன் என்றே வசைபாடுகிறார்கள்.

When "they" say they are Brahmin, we must ask following questions to expose them.

  • How do you become Brahmin?
  • What makes you Brahmin?
  • Is that birth based discrimination?
  • If you are Brahmin what about millions of people in India, why they are not Brahmins?

பார்ப்பான்/பார்ப்பனிசம்:

சனாதன வேதத்தை practice செய்பவன் பார்ப்பான். பிறப்பு வழி தீண்டாமை பார்க்கும் அவனது செயல் பார்ப்பனிசம். Similar to Racism, Fascism & Nazism) 

Parpanism is ideology which discriminate people by birth.

மறப்பினும் ஓத்துக் கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

கவனியுங்கள் இங்கே பிறப்பின் வழி என்கிறார் வள்ளுவர். 

அந்தணர்:
அந்தணர் வேறு பார்ப்பான் வேறு!
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

அவ்ளோதன். அறத்தின் வழி நடக்கும் மனிதன் அந்தணன். கவனியுங்கள் இதில் பிறப்போ, வர்ணமோ, சாதியோ இல்லை. ஓரு பட்டம் போன்றது. அவ்வளவே.

Wednesday, April 07, 2021

காதல் கம்யூனிட்டி: என் ஊரில் உள்ளவரைக் காதலிக்கலாமா?

ந்திய அமைப்பில் சனாதனம் என்பது ஒரு கொடிய நோய். அது வர்ணங்களை வகுத்து, மனிதனை பிறப்பால் தீண்டாமை அடுக்காக பிரிக்கிறது. நான்கு வர்ணங்கள் (பிராமணன்,சத்ரியன்,வைசியன் & சூத்திரர்) 'Varnam' defines the hereditary roots of a Newborn. இங்கு முக்கியமானது இது பிறப்பால் தீர்மானிக்கப்படுகிறது hereditary roots of a Newborn. மேலும் இது மாற்றக்கூடியதுமில்லை. வர்ணம் குணத்தால் வருவது என்று சொல்வது கயமை. 

இன்று பிராமிண் என்று சொல்பவனின் குழந்தையின் குணத்தை, எந்த பல்கலைக்கழகம் ஆராய்ந்து, அந்தக் குழந்தைக்கு பூணூல் சான்றிதழ் கொடுக்கிறது? கிடையாது. அது ஒரு பிறப்புசார் சடங்கு. கிருச்ணசாமியோ அர்சூன் சம்பத்தோ தலைகீழாக நின்றாலும் தமிழ்நாடு பிராமிண் வர்ணச் சங்கத்தில் http://www.thambraas.com/ உறுப்பினராக முடியாது. வர்ணம் என்பது பிறப்பு வழித்தீண்டாமை. 

ஒவ்வொரு வர்ணத்திலும் ஆயிரம் சாதிகள் உள்ளது. இது அடுத்த அடுக்கு. அய்யரன், அய்யங்காரன், சர்மா,பண்டிட், தீட்சிதன்,நம்பூதிரி எல்லாம் சாதிகள். ஆனால் அவையாவும் ஒரே பிராமிண் வர்ணம். வர்ணம் தாண்டி இந்த சாதி அடுக்கு உள்ளது. தில்லை "தீட்சிதன் சாதி" அய்யங்காரன் சாதியைவிட உயர்ந்தது. "நம்பூதிரியன் சாதி" அய்யரன் சாதியைவிட உயர்ந்தது. ஆனால் இவர்கள் அனைவரும் ஒரே பிராமின் வர்ணம். இந்த பிராமின் வர்ணம் வைசிய வர்ணத்தைவிட உயர்ந்தது. காந்தி வைசிய வர்ணம். இவரைக் கொன்ற கோட்சே பிராமின் வர்ணம். ஆனால் இருவரும் சனாதனிகள். கிந்து என்ற மதம் ஒரு மாய அடுக்குகளால் நிறைந்தது.பிராமிண் என்ற வர்ணம் அதை தினமும் கட்டிக்காத்து தீண்டாமைத் தீயைக் காக்கிறது அறிவுத் தளத்தில். 

இந்த வர்ணமும் சாதியும் மனதில் உள்ள ஒன்று. இது வெளியில் தெரியாது. ஆனால் அன்றாட வாழ்வியலில் இது கடுமையாக பின்பற்றப்படுகிறது. இன்றுவரை மீனாட்சி சிலைக்கோ, பழனி முருகன் சிலைக்கோ பிராமிண் வர்ணம் தவிர வேறு யாரும் கழுவி,குளிப்பட்டி அலங்காரம் செய்து சாம்பிராணி போட முடியாது. மற்ற வர்ணத்தினர் சிலையை வணங்கலாம். ஆனால், தொட முடியாது. தன்னை கிந்து என்று சொல்லிக் கொள்ளும் ஒவ்வொருவரும் இதை ஏற்றுக்கொள்கிறார்கள். ஏற்றுக்கொண்டே சிலை பார்க்கச் செல்கிறார்கள். இதை ஏற்பது என்பது சனாதனத்த, வர்ணத்தை, சாதியை ஏற்பதே.

எனவே தன்னை கிந்து என்று நம்புபவர், அதை தன் வாழ்வில் நடைமுறைப்படுத்தி அதன் வழி செல்பவர் (those who practice) அனைவருமே சனாதன, வர்ண சாதிய ஆதரவாள‌ர்களே. இது அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், இதுதான் உண்மை. இவர்களின் வாழ்வியல் பழக்கங்களால்தான் வர்ணமும் சாதியும் இருக்கிறதே தவிர இட ஒதுக்கிட்டு உரிமைக்கான சான்றிதழ்களால் அல்ல. இட ஒதுக்கிட்டு உரிமைக்கான சான்றிதழ் பாதிக்கப்பட்டவனுக்கு மருந்திடும் செயல்.‌

காதல் கம்யூனிட்டி
இப்படியான ஒரு சமூகத்தில் வாழும் ஒருவர் காதல் வயப்படுகிறார். அவர் சனாதன,வர்ண ,சாதி சித்தாந்தங்களை கேள்வி கேட்பவர்,விமர்சிப்பவர், கடைபிடிக்காதவர். ஆனால், அவர் வாழும் சூழலில், அவர் பார்த்துப் பழகும் மனிதர்களிடமே அவர் காதல் கொள்ள இயலும். தமிழ்நாட்டில் வாழ்பவர் அமெரிக்காவில் எதோ ஒரு நகரத்தில் இருக்கும் வெள்ளை இனத்தவருடன் பார்த்துப் பழக வாய்ப்பு கிடைப்பதில்லை. 

காதலுக்கும் எல்லையுண்டு. உங்களால் நீங்கள் வாழுமிடம் தாண்டி யாரையும் காதலித்துவிட முடியாது. Love may not have emotional boundaries but it has geographic boundaries.

உங்களின் கனவுகளுக்கும் கற்பனைக்கும் எல்லையுண்டு
http://kalvetu.blogspot.com/2010/11/blog-post.html

காதல் என்பது காமம்+அன்பு என்பதன் கூட்டமைப்பு. நேரில் பார்த்து பழகாமல் காதல் வராது. அது சினிமாவில் நடக்கலாம். அப்படி நேரில் பார்த்துப்பழகுவது என்பது வாழும் புவியியல் எல்லைகள் சார்ந்தது. தமிழ் நாட்டில் பிறந்த ஒருவர், காச்மீரிலிருந்து ஒருவரை காதலிக்க முடியாது. ஆசை இருந்தாலும். ஒவ்வொருவருக்கும் limited geographic boundaries availability தான் உள்ளது. இப்படியான சூழலில், உங்கள் ஊரில், நீங்கள் வாழும் இடத்தில், உங்களால் அங்கு இருப்பவர்களுடனே பழக முடியும். வேறு வழியே இல்லை. அல்லது நீங்கள் நாடு விட்டு நாடு மாறி வாழவேண்டும். அங்கு பழகி காதலிக்க வேண்டும்.

சாதி (Caste) &  சமூகம் (Community )
சாதி caste என்பதும் சமூகம் community என்பதும் ஒன்றல்ல. கம்யூன் (commune) என்ற commune French word ன் பொருள் a group of people living together and sharing possessions and responsibilities என்பதாகும். ஒரு ஊர் என்பது கம்யூன்/கம்யூனிட்டி. அந்த ஊருக்கு புதியதாக யார் வந்தாலும் அவர்களும் அந்த கம்யூன்/கம்யூனிட்டியில் ஒருவராவர். ஆனால், இந்திய சனாதன சாதி முறையில் , புதியதாக‌ ஒரு ஊருக்கு வருபவரின் caste மாறப்போவது இல்லை. எனவே caste என்பதை community உடன் குழ‌ப்பவேண்டாம். இந்தியாவில் மிகத்தவறான பொருளில் பயன்படும் சொல் community.

‌சாதியை (caste) மறுக்கும் ஒருவர் அதே சமூகம்/ஊர்/நகரம்/வாழுமிடம் (community) த்தில் உள்ள ஒருவரை காதலிக்கலாமா?
என்ன கேள்வி இது? 
காதல் என்பதே இருக்கும் இடத்தில் உள்ளவர்களின் மேல் வரும் காமம் கலந்த அன்புதான். மனிதர்கள் கந்தர்வக்காதல் என்று எங்கோ கனவுலகத்தில் உள்ள ஒருவரைக் காதலிக்க முடியாது. அது புராணக் கதைகளில் மட்டுமே சாத்தியம். மேலும் உங்கள் நண்பர்கள் விமர்சிக்கிறார்கள் என்பதற்காக நீங்கள் உங்கள் காதலை அணுக முடியாது. அது தவறானது. காதல் என்பதும் திருமணம் என்பதும் அந்த உறவில் உள்ள இருவருக்கு மட்டுமானது. முடிவெடுக்க வேண்டியவர்கள் அவர்களே. எனவே உங்கள் ஊரில் உங்களுக்கு எட்டும் தூரத்தில், நீங்கள் வாழும் இடத்தில், உங்களோடு பழகுபவர்கள், வாழ்பவர்களின் மீதுதான் காதல் சாத்தியம்.

ஆனால், இந்திய சூழலில் வர்ணம்&சாதி என்ற அடையாளங்களை நீங்கள் எப்படி முன்னெடுக்கிறீர்கள் என்பது வேறு தளம். நீங்கள் இருவரும் அதை விடுத்து சுயமரியதைத் திருமணம் செய்து, கிந்து மதம் மட்டுமல்ல எந்த மத அடையாளமும் இல்லாமல் வாழ முடிந்தால் வர்ணம்&சாதி அடையாளங்கள் போகலாம். ஆனால், அது இந்தியாவில் வாழும் ஒருவருக்கு சாத்தியமா என்றால் கடினமே.

சாதியை ஒழிப்பது என்பது அந்த சாதியாளராக தன்னை நினைக்காமல், அதை practice செய்யாமல் விடுவதில்தான் உள்ளது. குலதெய்வம் என்பதும் சாதித்தெய்வம் தான். என்ன செய்யப்போகிறீர்கள்? வாழ்வு சிக்கலனாது. நீஙகள் காதலை தவிர்த்தாலும் சிக்கல்கள் தொடரத்தான் போகிறது. உங்கள் காதலரிடம் சாதி/வர்ணம் உங்கள் நிலைப்பாடுகள் குறித்து பேசலாம். ஆனால், நண்பர்கள் சொல்கிறார்கள் என்று காதலைத் தொலைத்துவிடாதீர்கள்.
ஒருவரைக் காதலிப்பது அவரின் சாதிக்காக இல்லை எனும்போது அது சாதிக்கான காதல் அல்லவே? பிடித்தவரின் காதலை அவரின் சாதிக்காக ஒதுக்குவதும் சாதி பார்ப்பதே. காதலை உங்களுக்காக காதலியுங்கள். 

**
//I don't support caste but the same time I’m in love with a girl from my community. I get criticized for my choice. Is it double standard?// 
இப்படி ஒரு கேள்வி ஒரு தோழரிடம் இருந்து. அதற்கான விரிவான பதில்

Tuesday, October 20, 2020

நவராத் கொலு என்ற சனாதன பொம்மைக்கடை & கீழடி தமிழர் கொலு


"நவ்/நவ" என்பதும் "ராத்/ராத்திரி" என்பதும் தமிழ் சொற்கள் அல்ல.

கொலு (Kolu) என்பது குடியிருக்கும்,தொகுப்பு,இருக்கும் என்று பல பொருளில் பயனாகும் தமிழ்ச்சொல்.

👉 "இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்"


👉"தங்க தேரோடும் அழகினிலே இந்த ராசாத்தி கொலுவிருந்தாள்"
👇👇

👉"வாடிப்பட்டி சமசுதான மன்னர் முனியாண்டி அவர்கள் , அமைச்சர்கள் சூழ அவையிலே கொலுவிருந்தார்"

இப்படி அழகு, அலங்காரம்,தொகுப்பு ,இருப்பு.. பலவாறு பயனாகும் தமிழ்ச்சொல் "கொலு" (Kolu not Golu).

இது எப்படி சமசுகெரக "நவ்ராத்" & சனாதன சடங்குக்கு மட்டும் உடைய idea of god பொம்மைகளின் கார்ட்டூன்களின் சடங்காகிப் போனது? எதையும் தின்று ஏப்பம் விடும் பிராமணன், தமிழகப் பண்பாடுகளை சனாதனமயமாக்குவதே தொழிலாகக் கொண்டவன். அவனின் அயோக்கியத்தனங்களில் ஒன்றே இந்த பண்பாட்டு படையெடுப்பு. கோவில் எனப்படும் சிலைகளை வைத்து குறி சொல்லும் அறிவியலுக்கு புறம்பான கருத்துகளை வளர்க்கும் இடங்களை எப்படி களவாடி கருவறைத் தீண்டாமையை வளர்த்தானோ அதுபோலவே கொலுவும் திருடப்பட்டது.

இப்படி பொம்மைகளை வைக்கும் மண்டகப்படி குப்பைகள் வடக்கில் காசுமீர் கிந்துவிடம் இல்லை. ஏன் கொலு என்ற தமிழ்ச்சொல்லே தெரியாது அங்குள்ளவர்களுக்கு. எனவே இது கிந்துக்களின் கல்ச்சுராம் என்று பொய் சொல்லவும் முடியாது பிராமிண் வர்ணத்தானுகளால். ஆனால் இது தமிழகத்தில் பிராமிண் வர்ணத்தானுகளாலே முன்னெடுக்கப்பட்டு , நவ்ராத்திரி சடங்காக முன்னெடுக்கப்படுகிறது.
**
கொலு (Kolu) என்பது தமிழ்ச்சொல்.
அதை மீட்டெடுக்க வேண்டும் சனாதனிகளிடம் இருந்து 💪. இது எந்த மதத்திற்கானதும் அல்ல. பொங்கல் போல, இது பொதுவான சொல். அனைத்து தமிழர்களுக்குமானது irrespective of their religion.

பொங்கல் பண்டிகையின் போது அலங்காரம் செய்வதே தமிழர்களின் கொலு. பொங்கல் பானையில் இருந்து வீடுகளை வெள்ளையடித்து கோலமிடுவது எல்லாம் அலங்காரமே. அதில் நம் பண்பாட்டு அடையாளங்களை, கீழடி அடையாளங்களை, ஆதிச்சநல்லூர் அடையாளங்களை காட்சிப்படுத்தலாம்.

இது மதம் தொடர்பற்ற , அனைத்து தமிழர்களுக்கும் பொதுவான, அனைவரும் கொண்டாடும் ஒன்றாக, பண்பாட்டு  அடையாளமாக இருக்கவேண்டும்.💪💐🖤❤️💙

அதற்கு பொங்கல் நாட்களே சிறந்தது. 

நவராத்ரி நாட்கள் என்று "ராத்ரி நேரத்து பூசையில்" சனாதனமாக , மதமாக ஆக்கிவிடவேண்டாம். நவ்ராத் கொலு என்பது சனாதனச் சனியன்கள் நம்மிடம் ஆட்டையப்போட்ட கொலு.அதை தமிழர்களின் விழா அல்ல. சனாதனத்தின் விழா. தவிர்ப்போம் அதை.

#கொலு
#Kolu

Friday, May 01, 2020

May 01, 2020 அமெரிக்கா எப்படி உள்ளது? Coronavirus COVID-19 FAQ-4

Q1: May 01, 2020 அமெரிக்கா எப்படி உள்ளது?   இதுவரை எத்தனை பேர் இறந்துள்ளார்கள்?
இதுவரை,  COVID-19  உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,103,225. இறந்தவர்களின் எண்ணிக்கை 64,808.
மாநிலங்கள் வாரியாக எத்தனைபேர் என்ற புள்ளிவிவரங்கள் இங்கே கிடைக்கிறது.
https://coronavirus.jhu.edu/us-map

உலக அளவிலான கணக்கும் இதே தளத்தில் உள்ளது.
https://coronavirus.jhu.edu/map.html

Q2: அதிகமாக பாதிக்கப்படுவது வயதானவர்கள் என்று தெரியும். ஆண் பெண் விகிதங்கள் உள்ளதா?
ஆம்.  உலக அளவில் அதிகமாக ஆண்களே இறந்துள்ளார்கள். இதற்கான தெளிவான மருத்துவ விளக்கங்கள் இல்லை. இனிமேல் வரலாம்.
ஆனால், இந்தியாவில் இது தலைகீழாக உள்ளது. ஆம் இந்தியாவில் அதிகமாக பெண்கள் இறந்துள்ளார்கள் ஆண்களைவிட.
DEATHS AMONG CONFIRMED CASES %. MALE 2.6  FEMALE 3.1 RATIO 0.9
https://fivethirtyeight.com/features/why-are-more-men-than-women-dying-of-covid-19/

Q3: அமெரிக்காவில் #StayHome ஆர்டர் விலக்கப்ப‌ட்டுவிட்டதா?
ஆம் மற்றும் இல்லை.
நான் ஏற்கனவே பல இடங்களில் சொன்னது போல, அமெரிக்கா ஒரு சனநாயக நாடு. மாநிலங்களின் கூட்டமைப்பு & கூட்டாட்சி தத்துவத்துவம் கடைக்கோடி கிராமம் வரை செயல்படுத்தப்படும் ஒன்று. 
அமெரிக்கா:
அதிபர் ட்ரம்ப், அமெரிக்கா முழுமைக்கும் #StayHome ஆர்டர் விலக்கப்படும் என்று ஒருமுறை சொல்லப்போக, அதற்கு வந்த எதிர்ப்பினால் பின்வாங்கிவிட்டார். இன்று, இப்போது, அமெரிக்க பெடரல் அரசு ஒவ்வொரு மாநிலமும், அவர்கள் மாநில நிலைமைக்குப் ஏற்ப #StayHome ஆர்டரை விலக்கிக்கொள்ளலாம் என்று சொல்லி, பெடரல் அரசு சார்பாக , மூன்று கட்டங்களாக எப்படி செயல்படுத்தலாம் என்று சில பரிந்துரைகளை (guidelines)செய்தததோடு நிறுத்திக்கொண்டார்.
https://www.whitehouse.gov/openingamerica/#guidelines
மாநிலங்கள்:
இப்போது ஒவ்வொரு மாநிலமும், அவர்களின் மாநில நிலைகளுக்கு ஏற்ப #StayHome ஆர்டரை விலக்கிக்கொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக, வடக்கு கரொலைனா (North Carolina) மாநிலத்தில் May 8.
வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
https://files.nc.gov/governor/documents/files/EO135-Extensions.pdf
கவுண்ட்டிகள்:
North Carolina மாநிலம் இப்படி சொன்னாலும், அதே மாநிலத்திற்குள் உள்ள கவுண்ட்டிகள், அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்றும் சொல்லவேண்டும். ஏனென்றால் கவுண்ட்டிகள் (County) அதற்கான தனி ஆணையைப் பிறப்பிக்க அதிகாரம் உள்ளது. இதுவரை தனியாக ஆணைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்த "Wake County", நாங்கள் இன்று முதல் மாநில கவர்னரின் வழிமுறையை ஏற்றுக்கொள்கிறோம் என்று சொல்லி அவர்களும் May 8 வரை நீட்டித்து விட்டார்கள். https://covid19.wakegov.com/wake-county-to-follow-governors-stay-at-home-order-starting-may-1/
முனிசிபாலிட்டிகள்:
இந்த Wake County யில் 12 முனிசிபாலிட்டிகள் உள்ளது. அதில் ஒரு மினிசிபாலிட்டி மட்டும், நாங்கள் உங்கள் ஆட்டைக்கு வரலை. நாங்கள் எங்களுக்கான முடிவை நாங்களே எடுத்துக்கொள்கிறோம் என்று சொல்லிவிட்டார்கள். இவர்களும் May 8 வரை நீடித்துள்ளார்கள் என்றாலும், இவர்களுக்கான தனி "PROCLAMATION CONTINUING TOWN OF APEX STATE OF EMERGENCY AND TERMINATION OF WAKE COUNTY EMERGENCY RESTRICTIONS IN FAVOR OF STATE RESTRICTIONS" ஐ அறிவித்துள்ளார்கள்.
https://www.apexnc.org/1407/COVID-19
ஆம் முனிசிபாலிட்டி அளவில் அவர்கள் அவர்களாக முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது. இந்தியா போல ஒரே நாடு , ஒரே மாநிலம், ஒரே மாவட்டம் என்றெல்லாம் ஒட்டு மொத்தமாக கட்டுப்படுத்த முடியாது.
Q4: Coronavirus? COVID-19  வந்ததால் பொதுவாக என்ன மாற்றங்கள் நடந்துள்ளது? இனிமேல் எப்படி இருக்கும் வாழ்வு? உங்களின் #StayHome அனுபவம் & கருத்து?
வீட்டில் தண்ணீர் மின்சார செலவு அதிகமாகிறது. வாகன எரிபொருள் தேவை குறைந்துவிட்டது. அலுவலகம் என்ற கட்டிடங்கள் Duplicate home போன்றே தெரிகிறது. இவையெல்லாம் தேவையா? கொரானோ பலவற்றை புரட்டி போட்டு சிந்திக்க வைத்துள்ளது. சிலையைவைத்து பிழைக்கும் so called கோவில் தொழில் உட்பட.

IT எனப்படும் பொட்டி தட்டும் தொழிலில் #StayHome அதாவது #WorkFromHome என்பது பரவலாக இருந்தது என்றாலும், வீட்டில் இருந்து வீடியோவில் மொகரையை காட்டியதில்லை. அலுவலக பிம்பங்களை கலைக்க மனமில்லாமல். இப்போது கலைந்த முடியுடன் மேக்கப் இல்லாமல், பெண்களே வீடியோ வழியில் இணைந்து பேசுகிறார்கள்
ணையம் மற்றும் அதுசார்ந்த கட்டமைப்புகள் இந்த அளவு வளர்ந்திருக்காவிடில் #StayHome வேறுவிதமாக இருந்திருக்கும். அறிவியல் ஒரு கலங்கரை விளக்கம் போல. கொரானாவிற்கு முன் இணையத்தை விரிவுபடுத்தியதால் பல நன்மைகள். மதங்கள் மயிரைக்கூட பிடுங்கவில்லை. அது இனிமேலும் மனிதகுலத்திற்கு தேவையா?
மதம் & Idea of god, கருமா குருமா சோசியம் வாச்து எல்லாம் தேவையற்ற ஆணிகள் என்பதை கொரானா வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.
Online ordering, curbside pickup, போன்றவை கொரானாவுக்கு முன்னரே இருந்தது. ஆனால், இப்போது அது ஒரு தவிர்க்கமுடியாத ஒன்றாகி வருகிறது. அறிவியல் /தொழில் நுட்பம் சாதித்தது இது. இன்றுவரை திருப்பதி சிலை நட்டமாகவே நிற்கிறது. ஏதாவது பயன் உண்டா? அதை ஓரமாக வைத்துவிட்டு கல்வி நிலையமாக்கலாம்.

வீட்டில் சமையல் வேலை கூடிவிட்டது. பெண்கள் மட்டுமே சமைக்க வேண்டும் என்ற (கொடுமைக்காரர்களின் ) வீடுதவிர, மற்றவர்கள் வீடு தேவலை. பெண்கள் மட்டுமே சமைக்கும் அடிமையகங்களில் அவர்களுக்கு வேலை அதிகமாகிவிட்டது.
ரே ஒரு குழந்தை மட்டும் உள்ள வீடுகளில் , அந்தக் குழந்தைகளுக்கு மனப் பாதிப்புகள் வரலாமா? என்ற ஒரு ஆராய்ச்சி நடக்கிறது.இப்படியான ஒரு குழந்தை குடும்பங்களில் அவர்களை மற்ற குழந்தைகளுடன் இணைப்பது இணையமே. பெற்றோர்களே online game களை ஊக்குவிக்கும் நிலையும் வந்துவிட்டது.

வீடுகளில் நடக்கும் சாயிபாபான்,சத்யசாயிபாபன் பசனைகள் ஏன் இன்சா முனியாண்டியின் விரதமே டப்பா டான்சாகி அடங்கிவிட்டது.மதங்கள் எந்த அறிவியலை வெறுத்ததோ அந்த அறிவியலைப் பயன்படுத்தி வெட்கமே இல்லாமல் ஆன்லைன் பசனைகளை ஆரம்பித்து விட்டன.
னக்கென அதாவது தான் தனியாக இருந்தாலும் தனக்கென பொழுது போக்குகளை ஆர்வங்களை தேடல்களை வைத்துக் கொள்ளாதவர்கள், மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள்.சோசியல் skill என்பது இணையத்தின் வழியேமட்டுமே நடப்பதாகிவிட்டதால், விட்டத்தை வெறிப்பது அதிகமாவிட்டது.
It's THE right time to reset your compass.
டற்பயிற்சி செய்வதற்கென்றே தனியான அமைப்புகளில் (monthly payments gym) சேர்ந்தவர்கள், இப்போது அப்படியான இடங்களுக்கு செல்ல முடியாமல் இருப்பதை ஒரு excuse ஆகக் கொண்டு, சும்மா வெட்டியாக இருப்பதும் நடக்கிறது. நம்முடன் கூடவே வருவது நம் உட‌ம்பும் தரையும்தான். ஆம் சாகும் வரை. எனவே எப்போதும், 30 min floor floor exercises routine களை உங்கள் உடற்பயிற்சியில் சேர்த்துக் கொள்ளுங்கள்.(Please don't even mention yoga to me .Its good for old people. பாயை விரித்து படுத்துக்கொண்டே உருள்வதற்கு )
க்களின் நடமாட்டத்தை நம்பியே இருக்கும் நடைபாதை வியாபாரிகளின் நிலைமைதான் பாவம். அது போல அலுவலகத்துக்கு போவோரின் ஆடை மிடுக்கிற்காக, அதை நம்பி துணி தேய்ப்பவர்கள் போன்ற தொழிலாளிகளின் நிலை.இவர்கள் என்ன மாற்று தொழிலை செய்துவிட முடியும்?
திகமாக ஒரு ரூம் கட்டுவதே நல்லது என்பது போன்ற வீட்டு அமைப்புகள் இந்தியாவில் அதிகம். நிலத்தின் பாதியை திறந்தவெளியாக விட்டு, மரம்செடி தோட்டம் என்று வீடு கட்டி அதில் வாழப் பழகுவது நல்லது.தோட்டங்கள் நல்ல பொழுதுபோக்கு. மேலும் சில உணவுத்தேவைகள் நிறைவேறும். சிறுகக்கட்டி பெருகவாழ்.  அம்பேரிக்காவில்கூட அதிகமான ரூம் உள்ள வீடுகளையே நம்மவர்கள் விரும்புகிறார்கள். காலியிடம் இருந்தால் அதிலும் sunroom கட்டுகிறார்கள். நிலத்தை அப்படியே விடுவது, அதில் தோட்டம் வைப்பது என்பதை அவசியத் தேவையாகவே நினைப்பது இல்லை.Self sustaining க்கு மட்டுமல்லாமல் இவைகள் பல வகைகளில் நல்லது.
முந்தைய‌ FAQ கள்
தோழிக்கு முத்தம் கொடுத்தால் பரவுமா Coronavirus? COVID-19 FAQ-3
https://kalvetu.blogspot.com/2020/03/covid-19-faq-3.html

Where did we screw up & What can you do, if you survive this pandemic? FAQ 2
https://kalvetu.blogspot.com/2020/03/where-did-we-screw-up-what-can-you-do.html

SARS-CoV-2 கரோனா வைரசு & COVID-19 நோய் FAQ1
https://kalvetu.blogspot.com/2020/03/sars-cov-2-covid-19-faq.html


Saturday, March 28, 2020

தோழிக்கு முத்தம் கொடுத்தால் பரவுமா Coronavirus? COVID-19 FAQ-3

Q1: சாதரண  Flu  காய்ச்சலே அதிகப்பேரைக் கொல்லும்போது எதற்கு இந்த கொரானோ வைரசு (coronavirus) பற்றி அதிகம் கவலைப்பட வேண்டும்?

டிவி ரங்கராசு கூமுட்டையான் மாதிரி பேசாதீங்க தோழர்.

  • சாதரண Flu வைவிட கொரானோ வைரசு அதிக தொற்றும் தன்மை (contagious) கொண்டது. 
  • இந்த நோய் இருந்தாலும் 14 நாட்கள் வரையில் எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்க வாய்ப்பு அதிகம். 
  • இருப்பது தெரியாமலேயே அடுத்தவருக்கு பரப்பிவிடும் அபாயம் உள்ளது. 
  • Flu க்கு தடுப்பு மருந்து உள்ளது. இதற்கு இல்லை.
  • நோய் வந்தவர்களில் இறப்பு சதவீதம்  flu வைவிட கொரானோ வைரசு க்கு அதிகம்.

Q2: எப்போது இந்த‌ social distancing  முடிவிற்கு வரும்?
தெரியாது .
என்ன அவசரம்? வீட்ல தான இருக்கீங்க.ஏப்ரல் மே வரை கூட போகலாம். இது போன்ற அறிவிப்புகளுக்கு உள்ளூர் அரசாங்கம் சொல்வதை கவனியுங்கள். அரசாங்கமே சொன்னாலும், அடுத்த மூன்று நான்கு மாதங்களுக்கு எட்டியே இருங்கள்.
Q3. இந்த கொரானோ வைரசு நீச்சல்குளம், ஆறு, ஏரி போன்றவற்றில் குளிக்கும்போது ஒட்டிக்கொள்ளுமா/பரவுமா?
இன்றுவரை* தண்ணீர்மூலமாகப் பரவியதாக தகவல்கள் இல்லை. உங்களுக்கு இந்த வைரசு இருந்தால் போகாதீர்கள் பிறர்நன்மைக்காக. உங்களுக்கு இந்த நோய் இல்லாவிட்டாலும் தவிர்த்துவிடுங்கள் இந்த நேரத்தில். குளிக்காமல் இருங்கள் வீட்டுக்குள்தானே இருக்கின்றீர்கள். கவலை வேண்டாம்.
Q4: குறைந்த வெப்பத்தில் அல்லது அதிக வெப்பத்தில் இந்த வைரசு செத்துவிடுமா?
வாட்சப்பு மேட்டரா தோழர்?
இதுவரை நேரடியான அறிவியல் சோதனைத் தகவல்கள்  இல்லை. ஆனால், பொதுவாக வைரசுகளின் அதிக வெப்பநிலையிலும், அதிக ஈரப்பதம் உள்ள இடத்திலும் இதன் ஆயுட்காலம் குறைவு. இதற்காக முடி உலர்த்தும் ட்ரையரை மூக்கில் வைக்காதீர்கள்.
Q5. கொசுவால் இது பரவுமா?
இல்லை.
இதுவரை கொசுவால் பரவியதாக World Health Organization (@WHO)சொல்லவில்லை. அதற்காக கொசுவோடு விளையாடவும் வேண்டாம். அறிமுகமே இல்லாத அழகிக்கு கொசுவலைக்குள் முத்தம் கொடுத்தால் நோய் வராது என்று நினைக்கவும் வேண்டாம்.
Q6. ஏன் மக்கள் தண்ணீர் பாட்டில்களை வாங்கி அடுக்குகிறார்கள் அமெரிக்காவில்? தண்ணீர் வழங்கலில் சிக்கல் வரப்போகிறதா?
இல்லை.
முனிசிபல் தண்ணீர் வழங்கலில் சிக்கல்  இல்லை. வரப்போவதாக வதந்திகூட இல்லை. எதையாவது வாங்கி குமித்தால்தான், நாமும் இந்த pandemic க்கில் பங்குகொண்ட திருப்தி வரும் என்பதற்காக, எதையாவது வாங்கி அடுக்குகிறார்கள்.
Q7. உணவகங்களில் போய் உட்கார்ந்து சாப்பிட முடியாது ஆனால், takeout /curbside delivery /home  delivery சரியா? உணவு மூலமாக பரவுமா?
ஏம்பா வீட்லதான இருக்க. சமைச்சு சாப்ட வேண்டியதுதானே?
ரைட்டு விடு.
இதுவரை உணவு மூலமாக பரவியதாக தகவல்கள் இல்லை.
யாரும் வேண்டும் என்றே, இந்த வைரசால் பாதிக்கப்பட்டவரை வேலைக்கு வைக்க மாட்டார்கள். ஆனால், இந்த வைரசு இருப்பது தெரியாமலேயே யாராவது வேலை செய்து, அவர்கள் உங்களுக்கு பொட்டலம் கொடுக்கும்போது கைபட்டு ஒட்டிவிட வாய்ப்புள்ளது.
உணவு கொடுக்கப்படும் டப்பாக்களை துடைத்துவிடுங்கள். கவனமாக இருக்கவும். 
Q8. இந்த வைரசு தரையில் விழுந்தால் (சளி, தும்மல் வழியாக) எவ்வளவு நாள் பிழைத்திருக்கும்?
மூன்று நாள் வரை இருக்கும். அதுவும் தரையின் தன்மையைப் பொறுத்து.
எடுத்துக்காட்டாக எவர்சில்வர் & பிளாச்டிக் பாத்திரத்தில் ஒட்டிய இந்த வைரசு 72 மணி நேரம் வரை உயிரோடு இருக்கும்.
தாமிரத்தில் 4 மணி நேரம், அட்டையில் 24 மணி நேரம்.
Q9. பல் வலி. பல் டாக்டரிடம் போகலாமா?
உப்பு வச்சு தேய்க்கவும். இல்லாட்டி சிரிக்காமல் இருக்கவும்.
அமெரிக்காவில் அவசர சிகிச்சை தவிர அனைத்தையும் "எப்படியோ காலத்தை கடத்துங்கள்" என்று சொல்லிவிட்டார்கள் பல் மருத்துவர்க்ளின் அமைப்பு.
Q10. இந்த கொரானோ வைரசு என் தம்பிக்கு வந்த Flu வைவிட மோசமானதா என்ன?
ஆமா ஆமா ஆமாய்யா.
எத்தனை தடவை சொல்வது. போய் உட்காருப்பா. வாட்சப்பை நம்பாதே
Q11: கொரானோ வைரசு இருந்தும், அந்த COVID-19 நோய்க்கான அறிகுறியே இல்லாமல் ஆட்கள் இருக்கலாம் என்கிறீர்களே, அப்படியான நிலையில், யாருக்கு இது உள்ளது என்று தெரியும்?
எல்லாருக்கும் இருப்பதாகவே நினைத்து கவனமாக இருப்பதே நல்லது.
உயிர் முக்கியம் என்றால் social distance ஐ தொடரவும். கைளைக் கழுவவும். வெட்டியாக சுத்தாமல் வீட்டில் இருக்கவும்.சிலைகளை வேடிக்க பார்க்க போகவேண்டாம். அதுகளே மெரண்டு போய்க்கெடக்காம்.  
Q12: என் மனைவிக்கு உடல் சரியில்லை (கொரானோ வைரசு இல்லை வேறு ஏதோ பிரச்சனை) எப்படி கவனிப்பது?
ம்ம்....
எப்படிக் கவனிப்பதுன்னு கேள்வியா எப்படி சமாளிப்பதுன்னு கேள்வியா?
மகிழ்ச்சியாக கடையில் போய் சரக்கடிக்க இது நேரமில்லை தோழர். முதலில் இது கொரொனாவுக்கான அறிகுறியா என்று பாருங்கள். மருத்துவமனையை நாடவும்.
எதற்கும் வழியில்லை என்றால், மனைவிக்கு என்று தனி அறையை ஒதுக்கவும். கதவை மூடியே வைக்கவும்.
ஒருவர் மட்டுமே அவரைக் கவனிக்கவும். குழந்தைகளை அனுமதிக்காதீர்கள்.
13. COVID-19 நோய்க்கான அறிகுறிகள் என்ன?
காய்ச்சல், வற‌ட்டு இருமல் (dry cough), மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவை. இதற்கான அறிகுறிகள்.
ஏற்கனவே உங்களுக்கு, இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை இருந்தால் கவனமாக இருக்கவும். 
Q14. எப்படித்தான்யா இது பரவுது?

அலோ மப்புல இருந்தீங்களா? இதோடோ பலமுறை சொல்லீட்டேன். கைகடுக்க பல கட்டுரை எழுதிட்டேன்.

  • Respiratory Droplets எனப்படும் இருமல், தும்மல், எச்சில்  போன்றவற்றின் மூலமாக இந்த வைரசு பரவுகிறது. ஒருவர் தும்மும் விலகி இருக்கவும். அல்லது ஓடிவிடவும்.
  • அதுபோல பேசும்போது இயல்பாக வாயில் இருந்து வரும் காற்றில் , நம் எச்சிலின் துளிகள் இருக்கும். அது அடுத்தவர் வாய்க்கு அல்லது மூக்கிற்கு சென்று பரவும்.
  • ஏற்கனவே ஒரு ஆள் தும்மிய இடத்தில், நீங்கள் கை வைத்து உங்கள் விரலை உங்கள் முதத்தில் சொறிந்து , உங்கள் வாயில் விரல்பட்டு , உங்கள் வயுத்துக்குள் வைரசு போக வாய்ப்புண்டு.

Q15. தோழிக்கு முத்தம் கொடுத்தால் பரவுமா?
எது? அன்பா? வைரசா?
யோவ் கொஞ்ச நாளைக்கு மூடிக்கிட்டு இருய்யா.
Q16. மனைவிக்கு முத்தம் கொடுத்தால் பரவுமா?
ஏன்யா இம்சிக்கிற?
Q17. பிறர் என்னைத் தொட்டால் பரவுமா தோழர்?
அடங்குய்யா. கொஞ்ச நாளைக்கு Massage Parlor போவதைத் த‌விர்த்தால் நல்லது தோழர். அழகிகள் தொட்டால் சூடும் பரவும். அழகிக்கு கொரானோ இருந்து உங்களுக்கும் பரவ வாய்புள்ளது.
Q18. முத்தமெல்லாம் இல்லீங்க. சும்மா தோளோடு தோள் சேர்த்தாலுமா பரவும்?
யோய் ஏன்யா உசுர வாங்குற?
தோலோடு தோல் சேர்ந்தால் பரவியதாக தகவல்கள் இல்லை. தோளோடு தோள் சேரும் போது, வாயில் ஒட்டிய வைரசு, தோலில் இருந்து வாயிக்குப் போனால் சங்குதான?
பேசாமா ஊட்ல இருங்க தோழர்.
 Q19. இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை நாளைக்கு பிறரிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்? அல்லது எவ்வளவு நாள் அவர்கள் ஆபத்தானவர்கள்?

அலோ, அவர்கள் ஆபத்தான தீவிரவாதிகள் இல்லை. பாவம் பாதிக்கப்பட்டவர்கள்.

  • எந்தவித காய்ச்சல் மருந்தும் எடுக்காமல் இருந்து காய்ச்சல் குறைந்து இருந்தல்.
  • இருமல், மூச்சு திணறல் போன்ற எந்த அறிகுறியும் இல்லாமல் ஒரு வாரம் இருத்தல்.
  • COVID-19  பரிசோதனையில் negative போன்றவை அவர்களுக்கு அந்த வைரசு போய்விட்டது என்பதை உறுதி செய்யும். 
  • மருத்துவர், மருத்துவமனையின் பரிந்துரைப்படி செயல்படவும்.

Q20. Mask  அணிய வேண்டுமா?
யோவ் என்னிக்காவது நீ Helmet போட்ருக்கியா?? இப்ப உயிர் பயம் வந்திருச்சு உனக்கு சரியா?
  • உங்களுக்கு COVID-19 நோயில்லை என்றால் வேண்டாம்.
  • உங்களுக்கு COVID-19 நோய் உள்ளது என்றலோ COVID-19 நோய் உள்ளவருக்கு உதவிகள் செய்பவர் என்றாலோ அணியலாம்.
மருத்துவர்களுக்கே கிடைக்காமல் தட்டுப்பாடாக உள்ளது.
தேவை இல்லாமல் வாங்கி தட்டுப்பாடை உண்டாக்க வேண்டாம்.
Q21. Flu காய்ச்சலும் கொரானோ வைரசும் ஒரே நேரத்தில் வருமா? வாய்ப்புள்ளதா?
வாய்ப்புள்ளது.
எனக்கு Pollen Allergy உள்ளது. இதனால் தும்மல் வந்துக்கிட்டே இருக்கும்.
COVID-19 Respiratory droplets , Restaurant, Coffee shop, Brewery and my Pollen allergy
http://kalvetu.blogspot.com/2020/03/covid-19-respiratory-droplets.html
எனக்கு, இப்போது கொரானோ வைரசும் வந்தால் இரண்டும் சேர்ந்த இம்சைதான்.
Q22. ரொம்பவே பயமுறுத்திறீங்களே. எப்ப முடியும் இது?
யாருக்கும் தெரியாது தோழர்.
அதுதான் உண்மை.
Q23. எங்க ஆத்துல யாருக்கும் COVID-19 இல்லை. ராகவன் சாசுதிரி குடும்பத்திலும் யாருக்கும் இதுவரை COVID-19 இல்லை. அத்திம்பேர் ஆத்துலயும் நன்னா இருக்கா. எல்லாரும் ஒரே அபார்ட்மென்டுதான். எல்லாரும் சேர்ந்து ஒரு கோமம் செய்யலாமுன்னு இருக்கோம் தேச நன்மைக்காக. செய்யலாமா?
அவா அவா ஆத்துல அவா அவா இருங்கோ மாமி. ஏன் இம்சையக் கூட்டுறேழ்? இந்த தேசம், நீங்க உங்க ஆத்துல கெடந்தாலே நன்னா இருக்கும். யாரு? எங்க? யாரைத் தொட்டாகன்னு நோக்குத் தெரியாது மாமி. ராகவன் சாசுதிரிக்கு மாம்பலத்தில் ஒரு தென்கலை தொடுப்பு இருக்கு நோக்குத் தெரியுமோ?
ஆத்துலயே கெடங்கோ மாமி. தேசம் நன்னா இருக்கும்.
Q24. வயதானவர்கள் அதிக கவனமா இருக்கனும் சொல்றீங்க. எந்த வயது வயதான வயது?
புரியும்படி சொல்லனும்னா, வொலகநாயகன், சங்கி'கந்த்' வயசுக்காரர்களில் இருந்துன்னு சொல்லலாம். குத்து மதிப்பா 60 வயதுன்னு வச்சுக்கோங்க தோழர். ஆனா ஏதாவது ஏற்கனவே உடல்  பிரச்சனைகள் உள்ளவர்கள் அனைவருமே அதிக கவனமா இருக்க வேண்டும்.
Q25. குழந்தைகள் நிலைமை எப்படி?
இந்த வைரசு குழந்தைகளுக்கு தொற்றினாலும் அவ்வள‌வாக பாதிப்பது இல்லை. ஏதோ ஒரு காரணம், நல்லதுதான். அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அல்லது வேறு எந்த நோய்களிம் இல்லாததால் இருக்கலாம். ஏன் என்று இதுவரை தெரியவைல்லை. ஆனால் ,அவர்கள் மூலம் பெரியவர்களுக்கு பவரவும் அபாயம் உள்ளது.
அதிக தவல்களுக்கு.
Where did we screw up & What can you do, if you survive this pandemic? FAQ 2
http://kalvetu.blogspot.com/2020/03/where-did-we-screw-up-what-can-you-do.html
Q26. கர்ப்பிணிப் பெண்களுக்கு?
அது என்னயா கர்ப்பம்+பிணி. அது என்ன நோயா? பிணி பனி ன்னுகிட்டு இருக்க. தன் வயிற்றில் புள்ளையைச் சுமப்பவள். வயுத்துப்புள்ளக்காரின்னு சொல்லுய்யா.
வயதானவர்களுக்கு அதிகம் பாதிப்பு என்று சொல்ல அதிக சான்றுகள் உள்ளது. ஆனால், வயுத்துப்புள்ளக்காரிகளுக்கு பாதிப்பு என்று சொல்ல  சான்றுகள் இல்லை. தாயும் சேயும் இந்தக் காலத்தில் மிகவும் கவனமாகவே இருக்க வேண்டும்.
 Q27. வாடிப்பட்டில‌, அக்காவுக்கு புள்ள பொறந்திருக்கு. தாய் மாமான் நானு. போய் பார்த்து மோதிரம் போடலாமா மருமவனுக்கு?
மூடிட்டு வூட்ல இருய்யா.
Q28. காய்கறியை சுத்தப்படுத்த வேண்டுமா? ஆட்டுக்கறி கோழி மாடு சாப்பிடலாமா?
காய்கறிகளை நன்றாக கழுவிய பின்னர் பயன்படுத்தவும்.
பாட்டில், டப்பாக்களில் வரும் உணவுப் பொருட்களை, பயன்படுத்தும் முன் டப்பா, பாட்டிலை சுத்தம் செய்யவும். கறி உணவுகளிலும், அது தயாரிக்கப்படும் இடம், என்று தெரிந்து வாங்குவதே நல்லது.
இதுவரை அவரைக்காய் பொரியலாலும், ஆட்டுக்கால் சூப்பாலும் நோய் பரவியதாக ஏதும் சான்று இல்லை. 
நன்னா கறி சாப்பிடலாம் நம்ம ராகவ ஆச்சாரி மாதிரி.
Q29. பினாயிலோ ,டெட்டாலோ கிடைப்பது இல்லை. நானே வீட்டில் மூலிகை முறையில் செய்யலாமா ?
யோவ் எதுக்குய்யா? வைரசைக் கொல்றேன்னு வாயில ஊத்தவா? பீதியக் கெளப்பாதய்யா. நீ அந்த முன்னோர்கள் முட்டாள்கள் இல்ல பார்ட்டியா?
முதலில் சமைக்க கத்துக்கோங்க இந்த Stay home காலத்தில்.
கை கழுவ சோப்பு இருக்கா? கக்கூசு கழுவ வெளக்கமாரு இருக்கா? அது போதும் இந்தக் காலத்திற்கு. 
ஏற்கனவே ஆசுபத்ரில கூட்டம். நீ ஏதாவது ராமரு பிள்ளைத்தனமா எதையாவது ஒன்னுகெடக்க ஒன்னப்பண்ணி, இம்சையக் கூட்டாத சரியா?
நாதக பக்கம் போகாத வைரசு முடியுற வரைக்கும். சரியா? 
Q30. அரிசி ,பருப்பு எவ்வளவு மூட்டை வாங்கி அடுக்க வேண்டும்?
யோவ். லூசாப்பா நீயி?
அப்ப மத்தவன் என்ன செய்வான்? சங்கி மாதிரி சிந்திக்காதீங்க.
ஒரு முறை கடைக்குப் போனால், ஒரு வாரத்திற்கு தேவையானதை வாங்கிவரவும். அடிக்கடி போவதைக் குறையுங்கள்.
Q31. ஊபர், ஓலா, போன்றவை பாதுகாப்பானதா?
பாதுப்பு இல்லைன்னு சொல்ல முடியாது பாதுகாப்பானதுன்னும் சொல்ல முடியாது. வெளியில் போவதைக் குறையுங்கள், தவிருங்கள். இப்படியான சேவைகளை பயபடுத்த நேர்ந்தால், கவனமாக இருக்கவும். ஓட்டுபவருக்கும் சேர்த்தே சொல்கிறேன்.
Q32. பாட்டி ஏழுமலையானைப் பாக்கனும்றா. அழைச்சிண்டு போலாமா?
யாரு அதே மாமியா? ஊட்க்கு போலயா மாமி இன்னும்?
கொரானோ வைரசுஅழிச்சிண்டு போயிருவா மாமி. பாட்டியை அடக்கி வைங்கோ. பாட்டிக்கு குவார்ட்டர் கொடுத்து மகிழ்ச்சியாக ஆட விடுங்க மாமி.
Q33: நல்ல‌ வாழை எலை கிடைக்கவே மாட்டன்றதே லோகத்தில. கலிகாலம் வந்திடுத்து.
யாருப்பா அது குச்சி மட்டும் தெரிது?
அவனவன் சோத்துக்கு சிங்கி அடிசிக்கிட்டு இருக்கான். நீர் பேளுவதற்கு வாய எய இல்லைன்றீர். போங்க தல அக்கிட்டு.

Q34. ஒருவாரமா வீட்ல இருந்து பால பெரியவா மாதிரி ஆயிட்டேன். என்ன செய்யலாம் வீட்டில் இருக்கும்போது?
  • வீட்டிற்குள் சின்னச் சின்ன Floor Exercises செய்யலாம்.ஏறி இறங்கவும்.
  • வீட்டில் மாடிப்படி இருந்தால் ஏறி இறங்கவும்.
  • மச்சினி இருந்தால் அவளை உப்பு மூட்டை தூக்கவும். இதுல ரெண்டு வசதி. தூக்கி முடிச்சவுடன் பொண்டாட்டிகாரி மிதியும் போனசாக கிடைப்பதால் நல்ல உடற்பயிற்சி தோழர்.
    நான் யோகாவுக்கு எதிரி. ஆனால், இந்த காலத்தில் நீங்கள் செய்ய ஒன்றைப் பரிந்துரைக்கிறேன். 
    தயவு செய்து சக்கி போன்ற தாடிப்பயல்களின் யோகா அல்லது பதஞ்சலி கோமணான்டியின் யோகா என்று பார்த்து , கொரானோ வருவதற்கு முன்னாலேயே செத்துடாதீங்க தோழர்.
    Shilpa Yoga வை உங்களுக்கு பரிந்துரைக்கிறேன்.
    மனம் உடல் கொரொனா என்று அனைத்தும் சாந்தியாகும். 
    Shilpa Yoga
    https://www.youtube.com/watch?v=mFvF9WYbz8k

    பெண்களே மன்னிக்க!
    உங்களுக்கு சக்கி போன்ற தாடிப்பயல்கள் அல்லது பதஞ்சலி கோமணான்டியின் யோகா வீடியோக்களைதவிர விடிவே இல்லை போல. நல்ல வேளை ரசினி போன்ற பாட்டையாக்கள் யாரும் யோகா வீடியோ போடல இன்னும். இல்லாட்டி உயிர்ச் சேதம் அதிகமாயிருக்கும்.

    ****
    குறிப்பு
    A: கொரானோ/கரோனா வைரசு என்று சொல்வது = SARS-CoV-2 
    அதனால் வரும் நோய்= COVID-19 

    B: CNN ல் வந்த கேள்வி பதில் பகுதியில் இருந்து தேவையானதை எடுத்து , எனது கருத்தும் சேர்த்து இந்த கேள்வி பதில் உருவாக்கப்பட்டது. எனது பதில்களில் உள்ள மருத்துவ, statistical data சான்றுகளுக்கு இந்த தளத்தை பார்வையிடவும். இதில் அமெரிக்கவாசிகளுக்கான பல தனி செய்திகளும் உள்ளது.
    https://www.cnn.com/interactive/2020/health/coronavirus-questions-answers/

    Friday, March 27, 2020

    Where did we screw up & What can you do, if you survive this pandemic? FAQ 2

    ன்று நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் கரோனா வைரசு ஒரு வைரசுக் குடும்பம் என்பதைப் பார்த்தோம் முந்தைய கட்டுரையில். ஆம் அது நமக்கு புதிதல்ல. மனிதர்களிடம் பரவிய Corona Virus கள் இதுவரை ஏழு. இன்று வந்துள்ளதையும் சேர்த்து. அனைத்தும் அதே அந்த ஒரே கரோனா வைரசு குடும்பத்திலிருந்து வந்தவைகளே. இன்று நம்மை வாட்டி வதைப்பது அதில் ஒரு புதிய கிளை SARS-CoV-2 கரோனா வைரசு அதனால் இன்று வந்துள்ள நோய்க்கு பெயர் COVID-19.

    SARS-CoV-2 கரோனா வைரசு & COVID-19 நோய் FAQ

    http://kalvetu.blogspot.com/2020/03/sars-cov-2-covid-19-faq.html

    நாம் அடுத்த கட்டத்தை அடைந்துள்ளோம். இதை இந்த நேரத்தில் பகிர்வது அவசியமாகிறது. இதைப் படித்து. உங்களின் புத்திக்குச் சரியென்று பட்டால் மட்டுமே பிறரிடம் பகிரவும். 

    (1) இது பற்றி நமக்கு முன்னமே தெரியாதா?
    தெரியும். ஆம் தெரியும். இந்த கரோனா வைரசு குடும்பம் என்றுமே அழியப் போவதில்லை. அது வெவ்வேறு பரிமாணங்களில்  நம்மை வந்து தாக்கலாம் அல்லது புதிய ஒரு வைரசு வரலாம் என்பது World Health Organization(WHO) க்கு தெரிந்த ஒன்றுதான். ஆனால், அவர்களால் ஏதும் செய்ய முடியாது அல்லது முடியவில்லை. ஏன் என்றால் அது ஒரு ஐநா சபை போன்ற ஒரு அமைப்புதானே தவிர, பெரிய முதல் போட்டு, மருத்துவர்கள & ஆராய்ச்சியாளர்கள் படையை வைத்து தொடர் ஆராய்ச்சி செய்யக்கூடிய அளவிற்கு வசதி படைத்தது அல்ல.

    (2) சரி மற்றவர்கள் என்ன செய்தார்கள்?
    ன்றும் செய்யவில்லை என்பதுதான் உண்மை. அந்த மற்றவர்களில் நீங்களும்,நானும், நம்மை ஆள நாம் தேர்ந்தெடுத்த அரசியல் தலைவர்களும், நாம் அடிமையாக கிடக்கும் அல்லது நம்மை பொருளாதார அடிமைகளாக வைத்து இருக்கும் பெருநிறுவன அமைப்புகளும் அந்த அமைப்புகளின் முதலாளிகளும் காரணம்.

    (3) ஒருவர் கூடவா இதைக் கணிக்கவில்லை?
    நீங்கள் நம்மூர் சோசியப்பயல்களை மனதில் வைத்து கேட்கிறீர்களா அல்லது சக்கி வகையறா சாமியார்ப்பயல்களை மனதில் வைத்து கேட்கிறீர்களா என்று தெரியாது. அவனுகள் கூமுட்டைகள் அவஅறிவியலாளர்கள். 
    (4) மேட்டருக்கு வாங்க. வேறு யாராவது கணித்தார்களா இல்லையா?
    தை கணிக்க வேண்டியதும், கண்காணிக்க வேண்டியதும் அறிவியாலாளர்களின் பொறுப்பு & கடமை. என்னைப்போன்ற ஒரு எட்டணா பிளாக்கர் எதையாவது சொல்லி, அதை பத்தணா மனிதர்கள பத்துபேர் படித்து, அது கவனம் பெறாமல் போயிருந்தால் வருத்தம் இருக்கப்போவது இல்லை எனக்கு. பல ஆராய்ச்சியாளர்கள் அவர்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் இதை பேசி இருக்கலாம். 
    ஆனால், இதை அன்றே கணித்து பொது அரங்கில் உங்களுக்கும் எனக்கும் புரியும்படி பலர் முன்னிலையில் சொன்னார் ஒருவர். அவர் சொன்ன நாள் Apr 3, 2015 . ஆம் அன்றே நாம் அனைவரும் அறிந்த, ஏன் உலகமே அறிந்தவரே இதைச் சொல்லி நம்மை எச்சரித்தும் உள்ளார். உங்களின் பலர் இதை ஏற்கனவே பார்த்து கேட்டு இருக்கக்கூடும். அப்போதெல்லாம் இது ஒரு சினிமா கதைபோல இருந்து இருக்கலாம். தோழர்களே இன்று அது நம் தெருக்களுக்கு வந்துவிட்டது.
    The next outbreak? We’re not ready Apr 3, 2015 | Bill Gateshttps://www.youtube.com/watch?v=6Af6b_wyiwI
    (4.1) Apr 3, 2015 ல் அப்படி Bill Gates என்னதான் சொன்னார்? 
    Bill Gates மிகத் தெளிவாக, Ebola virus நேரத்தில் நடந்த மாதிரிகளை முன்வைத்து, "இப்படி ஒரு வைரசு, அல்லது ஏதேனும் ஒரு புதிய Flu வைரசு அடுத்த பத்தாண்டுகளில் வந்தால் அதைச் சமாளிக்கக்கூடிய அளவிற்கு நாம் இல்லை". என்பதை மிகத் தெளிவாகச் சொல்லி, அதனால் வரக்கூடிய பொருளாதர இழப்புகளை 3 trillion என்றும், மில்லியன் கக்கில் மனித உயிர்கள் போகும் என்றும் சொல்லியிருந்தார். அதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்றும் சொல்லியுள்ளார்.

    1. ஏழை நாடுகளில் வலுவுள்ள மருத்துவக் கட்டமைப்பு 
    2. Army Reserve போல Medical Reserve Corps .
      (எப்போதும் தயார் நிலையில் இராணுவம் போல இறங்கிச் செயல்பட கட்டமைப்பு வசதிகளுடன் மருத்துவர்கள் & மருத்துவம் சார்ந்த உதவியாளர்கள்.)
    3. இந்த புதிய  Medical Reserve வை ஏற்கனவே இருக்கும் Army Reserve உடன் இணைந்து செயல்பட வைக்க ஒரு கட்டமைப்பு.
      (அவசர காலத்தில் இராணுவத்தின் logistics  க்கை பயன்படுத்திக் கொள்ள இது உதவும்.)
    4. Germs Games. (virus simulations)நாம் துப்பாக்கிகளாலும் தோட்டாக்காளாலும் பல சோதனைகளை ஏன் இன்று குழந்தைகளின் விளையாட்டுவரை கொண்டு வந்துவிட்டோம். ஆனால் அதைவிடப் பெரிய வைரசு க்கு நாம் தயாராகவில்லை.
    5. Large research & development setup 

    ப்போது 2020 இன்றுவரை நாம் இதை எதுமே நாம் செய்யவில்லை. பலனை அனுபவிக்கிறோம்.

    (5) மன்னிச்சிருங்க தோழர். சொதப்பிட்டோம். சரி இப்போது, இந்த COVID-19 க்கு என்ன செய்வது?
    இங்குதான் நாம் கவனமாக இருக்க வேண்டும். இரண்டு தளங்களில் நமக்கு தாக்குதல்களும் சிக்கலும் வருகிறது, வரலாம், வந்துவிட்டது. 
    (5.1) ஒரு சமுதாயமாக என்ன செய்யவேண்டும் என்ன செய்யலாம்?
    நான் Yuval Noah ன் கட்டுரையை ஏற்கனவே உங்களை வாசிக்கச் சொல்லியிருந்தேன். அதில் இல்லாத புதிய ஒன்றை என்னால் சொல்லிவிட முடியாது.Yuval Noah Harari: the world after coronavirusThis storm will pass. But the choices we make now could change our lives for years to comehttps://www.ft.com/content/19d90308-6858-11ea-a3c9-1fe6fedcca75
    சமுதாயமாக செய்ய வேண்டியது ஒன்றுதான். அரசாங்கம் இந்த நேரத்தில், "உங்களின் நல்லதுக்காகவே செய்கிறோம்" என்று அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடலாம். அதை சில நிசப்த உப்புமாக்களும், " லத்தில அடிச்சா இந்த நேரத்துல குண்டிய மூடிக்கணும். எல்லாம் நம்ம நல்லதுக்கே" என்று சொல்லலாம். ஆம், பெருவாரியான மக்கள் முட்டாள்களே. அதற்காக அவர்களின்மீதான அடக்குமுறையை நீ இன்று சரி என்று சொன்னால், நாளை உனக்கு வரும்போது, உனக்கு அழக்கூட.எந்த முட்டாளும் இருக்கமாட்டான்.
    • உலகின் எல்லா அடக்குமுறைகளும், ஏதோ ஒன்றை, யாரோ ஒரு பகுதிக்கு நல்லது என்று நம்பவைத்து , அடுத்த ஒன்றை அழிப்பது என்றே தொடங்கும். 
    • இந்த நேரத்தில் சகோதரத்துவத்துடனும், சமுதாயப் பொறுப்புடனும், தன்மரியாதையுடனும் நடந்துகொள்ளவேண்டும்.உன் சகோதரன் முட்டாள் என்பதற்காக அவனை அதிகாரத்தின் அடக்குமுறைக்கு பலிகொடுக்கும் சடங்கைச் செய்யாதே.
    • சாமி பொம்மைகளும், பொம்மைச் சாமியார்களும் உதவப்போவது இல்லை. ஒருவருக்கொருவர் துணையாக இருப்பதே நாம் செய்ய வேண்டியது. 
    (5.2) தனிமனிதனாக தன்னையும் காப்பாற்றி மற்றவர்களுக்கும் பரவாமால் காக்க என்ன செய்யலாம்?

    • வீட்டில் இருங்கள். மூடிக்கிட்டு இருங்கள். தேவையானதை வாங்க ஒருவர் மட்டுமே போய்வாருங்கள். இந்த வைரசை பரப்புவதும் அந்த வைரசால் சாவதும் மனித‌னே. ஆரம்பத்தில் இது விலங்குகளிடம் இருந்தே மனிதனுக்கு தொற்றிக்கொண்டாலும், இன்றையை தேதியில் நாமே இந்த வைரசின் "கொலைபரப்புச் செயலாளர்கள்". எப்படி சனாத வர்ணத்தை ஆரம்பித்தவன் ஒரு கேடுகெட்ட பார்ப்பன விலங்கு என்றாலும், இன்று அதைத் தூக்கி, பரப்பித் திரிவது சூத்திர தீச்சட்டி பரம்பரைகளோ அதுபோல.
    • வெளியில் போய் வருபவர்கள், வீட்டிற்குள் வந்தவுடன் வேறு எதையும் தொடும்முன், கைகளை நன்றாக சோப்புப்போட்டு, தேய்த்துக் க‌ழுவுங்கள். முடிந்தால் குளித்துவிடுங்கள்.
    • மற்ற வைரசு போல் அல்லாமல் SARS-CoV-2  சிறிது வித்தியாசமாகச் செயல்படுகிறது. இது உங்களை நேரடியாக மட்டும் கொல்லாமல், ஏற்கனவே இருக்கும் உங்களின் உடல்சார் பிரச்சனைகளை பெரிதாக்கி அல்லது வைரசுடன் சண்டை போட முடியாத அளவிற்கு நோய்த்தடுப்பு ஆற்றல் (immunity) இல்லாதவர்களை கொல்கிறது. 
    ல்ல நிலையில் உள்ளவர்களிடம்  இந்த SARS-CoV-2  வைரசு  போனாலும், அவர்களுக்கு சின்ன பாதிப்பு அல்லது எந்த பாதிப்பும் இல்லாமலும் இருக்கலாம். இதுதான் மிக ஆபத்தானது.
    ஏதாவது நோக்காடு symptom வந்தால், மட்டுமே மருத்துவரைப் பார்ப்போம். எல்லாம் நல்லபடியாக இருக்கும் ஒருவர், நல்ல  நோய்த்தடுப்பு ஆற்றல் (immunity)  கொண்ட ஒருவர், அவரிடம் இந்த வைரசு இருந்தாலும், அவருக்குத் தெரியாது.  அதே சமயம் ,அவர் அந்த வைரசை சுமந்து மற்றவர்களிடம் பரப்பிவிடுவார். அவரிடம் இருந்து வாங்கியவர் ஏப்பை சாப்பை என்றால், மரணம்தான்.

    வேறு ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன். என் மகன் வயது 19. அவன் என் சொல்பேச்சு கேட்காமல், வெளியில் போய் அவன் நண்பர்களைப் பார்க்கிறான். அவன் நண்பர்களில் ஒருவன் வேறு எங்கிருந்தோ இந்த வைரசை பிடித்து வந்தவன். அவனிடம் இருந்து என் மகனுக்கு வந்தாலும், அவன் வயது காரணாமக மிகவும் இயல்பாக எந்த நோக்காடு அறிகுறியும் இல்லாமல் இருக்க 100% வாய்ப்புள்ளது. ஆனால், நான் ஒரு 59 வயது அல்பகேசு. அந்த வைரசுஎன் மகன் மூலமாக எனக்கு வந்தால், அது என்னைத் தூக்கிவிட வாய்ப்புள்ளது.

    • எனவே, உங்களின் குழந்தைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துங்கள். கண்காணியுங்கள். அல்லது கட்டிப் போடுங்கள். இவர்களே இந்த வைரசின் ஆக்கபூர்வ "கொலைபரப்புச் செயலாளர்கள்". 

    நான் ஒரு டுபாக்கூர் என்று தயவுசெய்து சொதப்பிவிடாதீர்கள். தென் கொரியாவும் இப்படி மக்களின் நடமாட்டத்தை கவனித்து, கண்காணித்து இதனை ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. நான் பெரிதும் மதிக்கும் @RichardDawkins Richard Dawkins
    (Ethologist, evolutionary biologist, and author) பரிந்துரைத்த @mattwridley ன் கட்டுரை இது. இதையும் படித்துவிடுங்கள். 

    THE CURIOUS AGE DISCRIMINATION OF CORONAVIRUS
    http://www.rationaloptimist.com/blog/age-discrimination-of-coronavirus/

    ஆங்கிலம் தெரியாத உங்களின் வீட்டு பாட்டிகளிடம் சொல்லுங்கள். அவர்களின் பேராண்டிகளே எமனை அழைத்து வரலாம் என்றும், அந்த எமன் பேராண்டியிடம் நட்பாகவே இருப்பான் என்றும் , பாட்டியைத் தூக்கிடுவான் என்றும் சொல்லுங்கள்.

    கட்டுரையில் உள்ள "டைபாயிடு மேரி" கதையைப் படித்துப் பாருங்கள். எப்படி இந்த டைபாயிடு அவளிடம் இருந்தும் அவளை ஒன்றும் செய்யாமல், ஆனால் அவள் மூலம் மற்றவர்களுக்கு பரவி ஊரை காலி செய்தது என்றும், ஒன்றுமே செய்ய முடியாத அரசு அவளை சாகும்வரை வரை சிறையில் அடைத்தே வைத்து இருந்ததும் தெரியவரும். 

    எப்போதும் நான் சொல்வதுதான். வரலாறு தெரியாதவனால் அவனுக்கான எதிர்காலத்தை உருவாக்க‌ முடியாது.

    //Typhoid Mary was a cook who moved from one rich employer to another in New York and Long Island, infecting seven households with typhoid between 1900 and 1907 before doctors traced her as the common cause of the infections. The key point is that she was in good health herself throughout. When confronted, she indignantly refused to submit stool samples for analysis, until eventually imprisoned for this refusal.

    After three years she was released while promising not to work as a cook. -Unhappy with the low wages of a laundress, she changed her name, resumed cooking and resumed causing typhoid. After a 1915 outbreak in a hospital for women in which 25 people fell ill and two died, Mary Mallon/Brown was again arrested and kept in quarantine for the rest of her life, refusing to have her gall bladder removed. When she died in 1938, an autopsy revealed a thriving colony of typhoid bacteria in her gall bladder. For some genetic reason they had not caused any symptoms in her.//

    (6) ரைட்டு எல்லாம் செய்தும் நான் (நீங்கள்தான்) போய்ச்சேர்ந்துவிட்டால் என்ன செய்வது?
    • ப்போதுள்ள சூழலில், எரிப்பதா புதைப்பாதா என்ற கேள்வியே இருக்காது. பொசுக்கி சாம்பலைக்கூட த‌ருவார்களா என்று தெரியாது. எனவே எனது கல்லறை பளிங்கில் இருக்க வேண்டும்,அய்யப்பய‌லுகளை வைத்து பிண்டம் கொடுக்கனும் என்று மேலும் எழவைக் கூட்டாதீர்கள். நிம்மதியாக போவோம் இருப்பவர்களை பாதிக்காமல்.
    • எல்லா வங்கி கணக்குகள், கடன் பத்திரங்கள், நிலம்,வீட்டு பத்திரங்கள் இருக்கும் இடம் , காப்பீட்டு கணக்கு, வைப்பாட்டி கணக்கு என்று எல்லாவற்றையும் மனைவியிடம் கணவனும், மனைவி கண்வனிடமும் சொல்லிவிடுங்கள்.
    • வைரசுக்குப்பிறகு பணம் என்ன ஆகும் என்று தெரியாது. அயோத்தி ராமுக்கு அட்டிகை செய்ய வேண்டும் என்றால். பிரதமர் வைரசு அரித்த உங்களின் கோவணத்தைக் கூட உருவுவார்.
    • பிழைத்து இருப்பவர்களுக்கு வாழ பணம்முக்கியம். எனவே தகவலகளை ஆவணப்படுத்துங்கள்.
    • உங்கள் அலுவலத்தில் மேனேசரின் எண், அவரும் போயிட்டால் தொடர்பு கொள்ள வேறு ஒரு அலுவலக நண்பனின்/தோழியின் எண் என்று வீட்டில் கொடுத்து விடுங்கள். அலுவலகம் சார்ந்த நடைமுறைகளை முடிக்க சுலபமாக இருக்கும்.
    • இது போன்ற வேலைகளை வைரசுக்கு பயந்தோ அல்லது வப்பாட்டிக்கு பயந்தோ மட்டும் செய்வது சரியில்லை. இது போன்ற திட்டங்களை "What to Do When I'm Gone" என்று எப்போதும் தயார் நிலையில் ஒரு நோட்டில் எழுதி வைத்து விடுங்கள். 

    (7) நான் போயிட்டேன் (நாந்தேன் கல்வெட்டு என்ற தோழர்) என்றாலும், இந்த pandemic ல் தப்பி பிழைப்பவர்கள்  இருப்பவர்கள் இனி என்ன செய்யலாம்? என்ன செய்ய வேண்டும்?
    முதலில், உங்களின் பீர் பாட்டிலை உயர்த்தி அல்லது காஃபி கோப்பையை உயர்த்தி எனக்கு மகிழ்ச்சிவிடை கொடுங்கள். எப்போதாவது காடுகளுக்கோ மலைகளுக்கோ ஆறுகளுக்கோ ஏரிகளுக்கோ கடலுக்கோ வானத்துத்துக்கோ சென்றால், உரக்க என் பெயர் சொல்லுங்கள் அங்கே. 'அவனும் இயற்கையின் காதலனே" என்று. 
    மேலே சொன்னதைச் செய்யாட்டிக்கூட மன்னித்துவிடுவேன். கீழே சொல்லப்போவதைச் செய்யவில்லை என்றால் பேயாக வந்து படுத்துவேன்.


    1. இனிமேல் இப்படி ஒரு வைரசு pandemic வந்தால்  என்ன செய்யவேண்டும் என்பதை உடனே தொடங்கிவிடுங்கள். சாமி,பூசாரி என்று எந்த எழவும் உதாவது என்பதை இந்த வைரசில் இருந்து கற்று இருப்பீர்கள். மேலே பில் கேட்சு அண்ணாத்தே சொன்னதைச் செய்யுங்கள். உடனே.
    2. இப்படியான வைரசு pandemic ஒருபுறமென்றால்,Global warming  ஒருபுறம். அதன் தாக்கம்/அழிவு எப்படி இருக்கும் என்றே தெரியாது. அது வந்தால் இப்படிகட்டுரை எழுதக்கூட நேரம் கொடுக்காமல் நம்மை (உங்களை) தூக்கியடிக்கும். Its real and its coming அதற்காக திட்டமிடுங்கள்.
    3. இந்த கருமம் பிடித்த சனாதன வர்ண சாதி எழவுகள், சாமி, சாமியார்ப் பயலுகளைவிட்டு அறிவியலைக் காதலியுங்கள். அறிவிலைக் கும்பிட்டு படையல் போடு அதையும் சிலையாக்கிவிடாமல், அறிவியலைக் கேள்வி கேட்டு , அறிவியலை அலற‌விட்டு, அதன் மூலம் அறிவியலை வளர்த்து, empathy  யோடு global well-being க்காக நேரம் செலவிட்டு வாழுங்கள்.

    Sunday, March 22, 2020

    COVID-19 Respiratory droplets , Restaurant, Coffee shop, Brewery and my Pollen allergy

     னக்கு முன் மூன்று சிறுமிகள் நடந்துகொண்டு இருந்தார்கள். நடுநிலைப்பள்ளி மாணவிகளாக இருக்கலாம். பள்ளிகள் மூடப்பட்டுவிட்டதால் குழந்தைகள் சும்மா பொழுதைப் போக்கிக் கொண்டுள்ளார்கள். அவர்களைக் கடந்து ஓடினேன். கடக்கும்போது நகர காவல்துறை வாகனமும் கடந்து போனது. கலகலப்பாக இருக்கும் ஊர் வெறிச்சோடிக்கிடந்தது. ஊரில் இரண்டு முக்கியமான பேக்கரிகள். அவர்களின் கடையை வாசலுக்கு கொண்டுவந்துவிட்டார்கள். எந்தக் கடையிலும் வாடிக்கையாளர்கள் உள்ளே அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை. கடைகள் இயங்குகின்றன. ஆனால், எல்லாம் Curb Side Pick-up Drive Thru தான். கடைகளையும் அடைத்துவிடமுடியாது. அதை நம்பி பலர் வாழ்கிறார்கள். சமூக வாழ்க்கை ஒரு சக்கரம்போல அது ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.

    மெரிக்கா வந்து 20 வருடங்களில் இதுவரை ஒரே ஒருமுறைதான் நான் Drive Thru வில் சென்று வாங்கியுள்ளேன்.அதுவும் என் மகனின் நச்சரிப்பு தாங்காமல். எனக்கு கடைக்குள் போய் அமர்ந்து சாப்பிடுவதுதான் பிடிக்கும். அது காஃபி என்றாலும். ஒவ்வொரு கடையும் ஒரு அனுபவம். அந்தக் கடையில் உள்ளவர்களுடன் உரையாடுவது ஒர் அனுபவம். வெறும் பசிக்காக தின்பது என்றால், restaurant  களுக்கு போகவே தேவை இல்லை. அதை நானே வீட்டில் செய்துவிடுவேன். Restaurant  களில் உண்பது, அங்கு கிடைக்கும் ஒரு அனுபவத்திற்காகவே தவிர சுவைக்காக அல்ல. இதுவரை "இந்தைக்கடையில் இது சிறப்பாக இருக்கும்" என்று எந்த உணவும் அந்த உணவுக்காக ஈர்த்தது இல்லை. ஆனால், சில கடைகளின் உள் அலங்காரம், அவர்களின் theme , அங்கு இருப்பவர்கள் இப்படி ஏதாவது வேறு ஒரு காரணத்திற்காவே restaurant செல்வேன்.

    காஃபிக் கடைகளும் , பீர் கடைகளும் அப்படியே. ஊரில் உள்ள அனைத்து காஃபி கடைகளுக்கும் போய் உட்கார்ந்து சாப்பிட்டால்தான் மகிழ்ச்சி. பீர் Brewery களுக்கும் அப்படியே. ஏதோ ஒரு கிராமத்தின் உட்பகுதியில் இருக்கும் Brewery க்கு சென்று அவர்களின் ஊரில், அந்தக் கடையில் சிறப்பாக இருக்கும் ஒன்றை சுவைத்துவிட்டுவருவதே எனக்கு இனிமை.

    Primary purpose of me dining out is for the overall dining experience not for the taste of the food. This applies to Restaurant, Coffee shop and Brewery . 

    தனால் , நண்பர்கள் மத்தியிலும் சரி எனக்கு சிக்கல்தான். "ஒரு பீருக்காக அவ்வளவு தூரமா? ஏதாவது பக்கத்து கடைக்கு போவோம்" என்பார்கள் நண்பர்கள். அப்படியான தருணங்களில், நான் சரி என்று சொல்லிவிடுவேன். ஆனால், நான் தனியாக இருக்கும்போது தேடித்தேடி கடைகளுக்கு செல்வேன்.

    காஃபிக்கோ, பீருக்கோ செலவழிப்பது $1 முதல் $10 வரைதான் இருக்கும். மது கொடுக்கும் போதை எனக்கு இரண்டாம் பட்சம்தான். அந்த ஊர் ,அந்த இடங்களின் அனுபவமே எனக்கு முக்கியம். இந்த கொரானோ வைரசால் எனக்கு வாரம் ஒருமுறை காஃபிக்காக வெளியில் போவதற்கு தடை வந்துவிட்டது. கடைகள் இருந்தாலும், காஃபியை contact free & touch free ஆக வெளியில் இருந்தே Curb Side Pick-up Drive Thru வாங்குவது எனக்கு உகந்தது அல்ல.

    எனவே , இப்போது அதிகமாக ஓடுகிறேன் நகரத் தெருக்களில். அதுவே பொழுதுபோக்கு.

    னக்கு இந்த வசந்தகாலத்தில் (spring season) ஒரு ஒவ்வாமை (allergy) உண்டு. ஆம் pollen allergy. North Carolina மாநிலத்தில் இந்தக் காலத்தில், ஊரே பச்சை & மஞ்சள் நிற மகரந்த துக‌ளால் மூடுப்படும். மரங்களின் மகரந்தச் சேர்க்கைக்காலம் இது. இந்த துகள் ஒவ்வொருவருக்கும் ஒரு வகை ஒவ்வாமையை  (allergy) உண்டாக்கும். சிலருக்கு கண் எரிச்சல் & கண் வீங்குதல், சிலருக்கு தோல் அரிப்பு, சிலருக்கு மூக்கு மற்றும் சுவாசம் தொடர்பான சிக்கல். இன்று நான் ஓடிவிட்டு வந்தபோது என் சட்டை முழுக்க மஞ்சள் ஆகி இருந்தது. நான் சுவாசித்த காற்றில் எவ்வளவு மகரந்தத்தூளை உள்வாங்கி இருப்பேன்?

    ந்த மகரந்தத்தூள் என் மூக்கின் உட்புற தசைகளில் ஒட்டி, தசைகளை புண்ணாக்கிவிடும். இடைவிடாத தும்மலும், பல நேரம் மூக்கின் உட்புறத் தசைகள் சிவப்பாகி , தொடர் தும்மலில் புண்ணாகி இரத்தம் வரும். "மே" மாதம் தொடங்கி "ஆகசுடு" மாதம் வரை  எனக்கு இந்த தொந்தரவு நீளும் . பலவிதமான மருந்துகள் எடுத்தும் பயன் இல்லாமல், இப்போது இதனோடு வாழப்பழகிவிட்டேன்.

    கொரனோ வைரசு காலத்தில் எனக்கும் என் போன்ற  pollen allergy மூக்குப் பிரச்சனை உள்ளவர்களுக்கும் ஒரு சிக்கல். பொதுவில் இடைவிடாமல் தும்ம முடியாது. பிறர் கவலையுடன் அல்லது பயத்துடன் அல்லது திகிலுடனே பார்க்கிறார்கள். குடும்பம் நண்பர்கள் வட்டங்களுக்கு இது புதிதல்ல. அவர்களுக்கு என் நிலைமை பல ஆண்டுகளாக தெரியும். ஆனால், பொதுவெளியில் அதுவும் COVID-19 respiratory droplets வழி பரவும் இந்த நேரத்தில், எங்களைப் போன்றவர்களின் pollen allergy  தும்மலை யாரும் வேறுபடுத்திவிட முடியாது.

    முடிந்தவரை ஆளில்லாத ஓரமாகப் பார்த்துப் போய் தும்மிக்கொண்டுள்ளேன் கடைகளில். அருகில் யாராவது இருந்தால் மிகவும் சிரமங்களுக்கு இடையே அடக்கிக்கொண்டு ஓட்டி வருகிறேன். எனக்கே இப்படி என்றால், முதியவர்கள், ஏற்கனவே நுரையீரல் மர்றும் சுவாசம் தொடர்பான நோய் உள்ளவர்களின் நிலைமை மிகவும் சிக்கலானது.

    இந்த மாநில pollen  பற்றி பிறர் பகிர்ந்துள்ள சில வீடியோக்கள்.

    North Carolina residents plagued by pollen burst (2019 News)
    https://www.youtube.com/watch?v=7BFqNp3PQ8o


    Pollen Season @ The South (NC)
    https://www.youtube.com/watch?v=tNnoQxraYow


    Seven Lakes North in West End, NC
    https://www.youtube.com/watch?v=PR_mnNM7zp8



    Friday, March 20, 2020

    மருத்துவர் சாலினி செய்த சம்பவங்கள்: புமாமோ என்ற "அல்ப கேசு"

    டந்த 15 வருடங்களாக இணையத்தில் உள்ளேன். எதிர்தரப்பை சரியாகவே அடையாளம் கண்டுள்ளேன் ஆரம்பகாலத்திலேயே என்பதில் எனக்கு மகிழ்ச்சியுண்டு. 

    பத்ரி என்ற ஒரு ஆளை அனைவரும்கொண்டாடி, அவர் கடையின் மொட்டைமாடியில் ஆங்கில சினிமாப்படங்களை கூட்டமாக‌ (public screening) *உரிய அனுமதி* இல்லாமல் பார்த்து, அந்த திருட்டுத்தனத்தையும் சிலாகித்து அந்த அமெரிக்க ரிட்டர்ன் ஆளை கொண்டாடிக்கொண்டிருந்த காலத்தில், " ஏன்யா உன் பதிப்பக புத்தகத்தை செராக்ச் எடுத்து மற்றவன் இப்படி புத்தகக்கண்காட்சியில் பிறருக்கு கொடுத்தால், சும்மா இருப்பியா?" என்றேன். அத்தோடு அதை மூடிவிட்டார் பத்ரி. அதுபோல அவரின் கதைபுக் லாகாவில் வெற்றிலை போட்டுக்கொண்டிருந்த பாரா என்ற ஒருவர் , இணையத்தில் படங்களை திருடி அதை புத்தகங்களின் அட்டைப்படமாக போட்டு விற்றுக்கொண்டிருந்தார். அந்தப் பஞ்சாயத்தும் சந்தி சிரித்தது.

    இலக்கிய அடியாள்: செயமோகன்
    http://kalvetu.blogspot.com/2017/03/blog-post_27.html
    //ஒவ்வொரு துறையிலும் ஆளுமைகள் (professional and commanding)  ஆட்கள் இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் படைப்பு/ஆளுமை என்பதை ஒரு துறைக்கும் மட்டுமான புனித பரிவட்டமாக மாற்றிவிட்டார்கள் இந்த தமிழ் எழுத்துவேலை செய்பவர்களும் , அவர்களின் இரசிகர்களும்.
    இணையத்தில் இவர்கள் அரசியல் அடியாட்கள்போல , அவர்களுக்கான ஒரு அடியாட்கள் கூட்டத்தையும் வைத்துள்ளார்கள். இவர்களை எதிர்த்து ஏதேனும் சொல்லிவிட்டால் "நீ முட்டாள். கதை படி " என்ற மந்திரத்தை எடுத்து வீசுவார்கள்.//
    எழுத்துரு: ஒரு இணைய மொண்ணையின் கடிதம்
    http://kalvetu.blogspot.com/2013/11/blog-post.html
    பெரிய ஒலிபெருக்கியின் சப்தம்
    http://kalvetu.blogspot.com/2016/08/blog-post.html

    தை புத்தகத்திற்கு என்று சில அடிமைகள் உள்ளார்கள். அவர்கள் இந்த பார்ப்பனன்களின் பின்னால் போய் தங்களின் கதைகளை வெளியிட்டதாலேயே அவரை அனுசரித்து கம்பு சுற்றிக்கொண்டிருந்தார்கள். இதில் இணைய மொண்ணை புமாமோ (புளிச்ச மாவு மோகன்) கத பொக் அடிமைகள் ஒருவிதம். இதுதான் சங்கிகளின் சாக்கடை. இங்கிருந்தே பல சங்கிகள் உற்பத்தியாகிறார்கள். இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். நம்முடன் பேசிக்கொண்டே இருப்பார்கள். திடீரென்று "ஆசானின் வெண்முரசுல பாருங்க.." என்று ஆரம்பிப்பார்கள். இவர்களுக்கு புமாமோ ஆசான் எனும்போதே நீங்கள் அவர்களுடன் கவனமாக இருக்கவேண்டும். எனது வட்டத்தில் நான் இவர்களை சேர்த்துக்கொள்வதே இல்லை. அப்படியே இருந்தாலும், இவர்களை பொதுவில் விமர்சிக்க தயங்குவது இல்லை. இவர்களின் கதை புத்தக அறிவு என்பது எதற்கும் பயன்படாத ஒரு குப்பை. சுசாதா அடிமைகளும் இவ்வகையே.

    ப்படியான இந்த புமாமோ, நமது அரக்கன் பெரியாரைப் பற்றி, அவரின் வைக்கம் போராட்டத்தைப்பற்றி , "பெரியார் பத்தோடு பதினொன்றாக இருந்தார்" என்று பேசியது உண்டு. புமாமோ ஒரு குப்பை. சமூக அரசியல் அறிவற்ற ஒரு அம்புலிமாமா கதைபுக் டைப்ரைட்டர். திராவிட அரசியல் மீது வன்மம் கொண்டவர். இந்த நூற்றாண்டில் ஒரு சனாதன அம்புலிமாமா கதையை டப்பிங் செய்து கொண்டிருக்கிறார் வெண்முரசு என்ற பெயரில். அதன் தேவை என்ன? அவரின் நோக்கம் , கிந்துத்துவாவை கதைகள் மூலம் கடத்துவது. அது போல , அன்னா கசாரேவுக்கு புக் போட்டு அவரையும் பீசேபியைம் கொண்டாடுவது. இதுதான் இந்த புமாமோ சங்கியின் நோக்கம்.

    லக மனிதாபிமானக் கழகத்தின் சார்பில், பழ.அதியமான் எழுதிய  "வைக்கம் போராட்டம்" நூலறிமுக நிகழ்ச்சி(14-03-2020) பேசிய  மனநல மருத்துவர் சாலினி இந்த புமாமோவை மெட்ராசு பாசையில் ஒரு வாங்க்கு வாங்கி இருப்பார். நான் மருத்துவர் சாலினி மீது மரியாதை கொண்டவன். அவரும் என்னை போலவே புமாமோவை துவைக்கிறார் என்பது மகிழ்ச்சி.

    அவர் பேசியதை முழுவதுமாக கேட்டுவிடுங்கள்.

    பெண்களுக்கெதிரான இந்து மதம் | மருத்துவர் ஷாலினி | Dr Shalini | வைக்கம் போராட்டம்


    அவர் உரையில் இருந்து சில முக்கிய சம்பவங்கள்.

    புமாமோ சம்பவங்கள்:
    • புளிச்ச மாவு மோகன் என்றே அழைக்கிறார்.
    • புமாமோ ஒரு "அல்ப கேசு" என்கிறார்.
    • இதுக்கெல்லாம் பதில் சொல்ல வேணுமா? என்கிறார்.
    • புமாமோவை ஒரு குப்பையாகவே ஒதுக்குகிறார்.


    இந்த உரையில் இருக்கும் வேறு சில தகவல்கள்.

    ராமனுக்கு ஒரு அக்கா உண்டு. பெயர் 'சாந்தா". பெண்களை மனிதனாக மதிக்காத பார்ப்பனன்களின் கதையில், மகள் இருந்தும், புத்திர பாக்கியம் இல்லாமல் தவம் செய்து பிறந்தவன் ராமு என்பார்கள். ஆம் ராமுவின் அக்கா "சாந்தா"வை புத்திரியாக மதிக்கவேயில்லை.

    வால்மீகி ராமாயனத்தின் உண்மையான பெயர் "சீத்தாயா சரித்திர மகத்". அதாவது சீதையின் மாகா சரித்திரம்" என்பதே. இந்த சீதையின் சரித்திரத்தை, அவரின் குழந்தைகள் (லவ,குச) தெருத்தெருவாக பாடி, தங்கள் அம்மாவுக்கு அப்பன் ராமன் செய்த கொடுமைகளைச் சொல்லி ஊர் ஊராக பொலம்பிய கதையே இது. இதை முன்ன பின்ன ஒட்டி பட்டி டிங்கரிங் பார்த்து ராமுயாணம் ஆக்கிவிட்டார்கள். உண்மையில் இது , ராமனால் துன்பப்பட்ட சீதையின் கதையை, அவரின் குழந்தைகள் பொதுமக்களிடம் புலம்பும் கதையே.

    பார்ப்பனியத்தில் அய்யர் அய்யங்கார் பெண்களையும் சூத்திரனாக கருதுவது ஏன் என்ற கேள்விக்கும் இதில் விடை உள்ளது. ஆம் , சாதி அய்யர் அய்யங்காரராக இருந்தாலும், அந்த சாதிப்பெண்கள் வர்ணத்தில் பிராமின் அல்ல. சூத்திரர்களே. மாடுகளை ஓட்டிக்கொண்டு வந்த பிராமின்கள் தங்களோடு பெண்களை அழைத்து வந்ததாக வரலாறு இல்லை. அவர்கள் இந்த நிலப்பகுதியில் இருந்த திராவிடப் பெண்களையே மணந்தார்கள் அல்லது அடிமையாக்கினார்கள். அதனாலே அவர்களுக்கு இந்தப் பெண்கள் மீது ஒவ்வாமை. பரசுராமன் என்ற ஒருவன் தாயைக் கொன்றதும் இதனால்தான். அவன்களில் எவனும் தந்தையைக் கொன்றதாக கதை இருக்காது. பெண்களை அவமானப்படுத்தும் அவர்களின் நோக்கம், அவர்கள் இந்த மண்ணின் பெண்கள் என்பதாலேயே. 

    பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டங்கள் வந்தபோது, அதை எதிர்த்து தந்தி அனுப்பிய 1000 பெண்கள் அனைவரும் இந்த பார்ப்பன குடும்ப பெண்களே.

    இந்த வீடியோ பார்த்த போது மேலும் சில வீடியோக்களைப் பார்த்தேன்.

    நானும் திராவிட இயக்கத்தவன்தான் என்ற காமராசர் | பேரா. நாகநாதன்
    https://www.youtube.com/watch?v=TCrhJeHrWHw


    இவர் சொல்வதில் இருந்து சில முத்துகள்.

    புத்தரின் சீடர்களைவிட நல்ல சீடர்கள் கிடைத்தது பெரியாருக்கு.
    அண்ணா, கலைஞர்,நாவலர்,அன்பழகன் என்று.

    பெரியார் கூட்டத்தில், கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்த ஒரு மாணவனை பிறர் கண்டித்த போது, "அவர் காலை அவர் மீதுதானே போடுகிறார். என் மீதா போடுகிறார் அவர் அப்படியே இருக்கட்டும் என்கிறார் பெரியார். மேலும், "கைமேல் கைவத்து கைகளைக் கட்டி இருக்கிறாயே, அது என்ன கைக்கு ஒரு மரியாதை? காலுக்கு மரியாதை? ஒரு கையை மற்றொரு கைமீது கட்டி அமரும் போது, ஒரு காலை இன்னொரு காலின்மீது போட்டு அமர்ந்தால் என்ன தவறு?" என்று கேட்கிறார்.

    ஆம் பெரியர் அரக்கனே. சேகுவார போல, தன் தமிழ்நாடு தாண்டியும் பிற நாட்டுக்குச் (கேரளம்) சென்று போராடியவர் பெரியார். "அல்ப கேசு" புமாமோக்கும் அவரின் கதபொக் அடிமைகளுக்கும் இது புரிய வாய்ப்பே இல்லை.