Friday, October 06, 2006

வெட்கமாக இருக்கிறது :-(((

ந்தியாவில் ஒரு காஸ்மாபாலிடன் சிட்டி பெங்களூர். அதுவும் பல சாப்ட்வேர் முதலைகள் வாழும் இடம் .மன நலம் குன்றிய ஒரு சிறுவனை (11 வயது) மனம் நலம் குன்றியவன் என்பதற்காக விமானத்தில் ஏற அனுமதி மறுத்துள்ளது.

அதுவும் ஒரு படித்த இளம் அதிகாரி அவ்வாறு கூறுகிறார். :-(((

இதுபோல் எத்தனை கொடுமைகள் இன்னும் வெளியில் தெரியாதவை.

என்ன படித்தாலும், எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும் இந்தியாவில் மனிதப் பண்புகள் பெரும்பாலனவர்களுக்கு கிடையாது என்பது உண்மை.இது பிற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டுச் சொல்கிறேன்.

பிட்சா,பெப்சி சாப்பிடுவதிலும்,கார்-iPOD ,ஜீன்ஸ் போன்ற வஸ்தாதுகளில் வளர்ந்த நாட்டை கேள்வியே கேட்காமல் காப்பி அடிக்கும் நாம் அவர்களிடம் உள்ள நல்ல பண்புகளைக் கண்டுகொள்வது இல்லை.


இவை சிறு வயதில் இருந்தே ஊட்டி வளர்க்கப்பட வேண்டும்.
கூட்டம் அதிகமாக இருக்கும் பேருந்தில்,புகை வண்டியில் இன்ன பிற இடங்களில் முதியோர்கள்,உடல்,மனக் குறைபாடு உள்ளவர்களுக்கு பிறர் விரும்பி உதவி செய்ய வேண்டும்.

இதற்கெல்லாம் சட்டம் வேண்டுமா?

சீ.சீ..

செய்திக்கு நன்றி:
ஊசி aka PIN
http://oosi.blogspot.com/2006/10/bangalore-airport.html

CNN - IBN வீடியோ
http://www.indiaabroad.com/video/player.php?url=http://video.tv18online.com.edgesuite.net/cnnibn/flvstore/10_2006/chennai_autism.flv