Wednesday, November 24, 2010

சமரசங்களற்ற வாழ்வு சாத்தியமா? பகுதி-1

கொ ள்கை என்றால் என்ன?

எதையும் தெரிந்து கொள்வதற்குமுன்  அதைத் தெரிந்து கொள்வதற்கான அவசியம் அல்லது  அக/புறத்தூண்டல் வேண்டும். எனவே முதலில், "கொள்கை" எதற்கு? என்று பார்த்து விடுவோம்.

 அதானே, எதற்கு கொள்கை?  எனக்கு "கொள்கை" என்ற ஒன்று தேவையாய் இருக்கும் பட்சத்தில் மட்டுமே நான் அதைப்பற்றி சிந்தனை செய்யவேண்டும்.  தேவையே இல்லாதபோது அல்லது எனது அன்றாட வாழ்விற்கு அதனால் பாதிப்பு இல்லாதபோது அதன் தேவை எதற்கு? அமேசான் காட்டில், ஏதோ ஒரு மூலையில் ஒரு பாம்பு ஒருவனைக் கடித்துவிட்டதென்றால் எனக்கு என்ன ?  அது பாட்டுக்கு நடக்கும். எனக்கு அதனால் சாதக/பாதகம் என்றால் மட்டுமே அல்லது குறைந்த பட்சம் அறிந்து கொள்ளும் ஆவல் இருந்தால் மட்டுமே , அமேசான் என்றால் என்ன? பாம்பு என்றால் என்ன ?அது ஏன் கடித்தது? என்று தேட முயல்வேன்.

ப்படி கொள்கை என்பது எதற்கு? அது எனக்குத் தேவையா? என்று சிந்தித்தால் மட்டுமே , அதை வைத்துக் கொள்ள எனக்கு ஒரு அவசியம் வரும். இங்கேதான் "இலக்கு" என்ற ஒன்று வருகிறது. மதுரைக்கு காலை 4 மணிக்குள் போக வேண்டும் என்பது இலக்கு என்றால், அதற்கான வழிகளை , சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, எப்படி? ஏன்? ஒரு குறிப்பிட்ட வழியில் மட்டும் போகவேண்டும் என்பது கொள்கையாக வந்து நிற்கும்.

இலக்கே அற்றவர்களுக்கு கொள்கை எனபது இருக்காது. அதுபோல ஒரே இலக்கை அடைய, ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான கொள்கை இருக்கும். ஆட்சியைப் பிடிப்பதே (மக்கள் சேவை என்று கொள்க) எல்லா அரசியல் கட்சிகளுக்கும் இலக்கு. ஆனால் அதை அடையும் வழி மற்றும் வியூகங்கள் எல்லாம் சேர்ந்து அவரவருக்கான தனித்துவம் வாய்ந்த கொள்கையாக வந்து நிற்கும்.

எனவே, இலக்கு என்ற ஒன்று தெரிவானவுடன் , அதை அடையும் வழிகள் அதை அடைவதற்கு தான் நம்பும் முறைகள் என்று எல்லாம் சேர்ந்து கொள்கையாக உருப்பெறும். இலக்கை ஒட்டியே கொள்கை என்பதால் அல்லது இலக்குக்கான கொள்கை என்பதால் , ஒரே மனிதருக்கு பல கொள்கைகள் இருக்கலாம். ஒரே கொள்கையை அவரின் எல்லா இலக்குக்கிற்கும் தூக்கிக்கொண்டு தர நிர்ணயம் செய்ய இயலாது. ஆனால் எல்லா இலக்கிற்கும் பொருந்தக்கூடிய சில பொதுவான கொள்கைகள் இருக்கும் / இருக்கலாம்.  சட்டத்திற்கு புறம்பாக நடப்பது தவறு என்பது உனது பொதுவான கொள்கையானல், 50 ரூபாய் டவுசர் த ரோபோ அனுமதிச் சீட்டை 500 ரூபாய்க்கு வாங்கிப் பார்ப்பதும் தவறு.  இது போன்ற மொக்கைகள் 10000000000000 கோடி ஊழல் நடந்துவிட்டது என்று புலம்பக்கூடாது. ஏன் என்றால், உனக்குத் தேவையானபோது நீ  500 ரூபாய் தவறு செய்கிறாய் மற்றவர்கள்.... விரலுக்குத்தகுந்த வீக்கம். அது போல குடித்துவிட்டு பைக் ஓட்டுபவர்கள், குடித்துவிட்டு லாரி மற்றும் பஸ் ட்ரைவர்களால் ஆபத்து அதிகம் என்று வருத்தப்பட யோக்கியதை இல்லை.  ஏன் என்றால் குடிந்துவிட்டு வாகனம் ஓட்டுவது தவறு என்பது உனது கொள்கையானால் , குவார்ட்டர் குடித்த நீ ஆட்டோவில் வர வேண்டும். அப்படியே ஒரு குவாட்டரைப் போட்டுவிட்டு பைக்கில் வீடு திரும்பக்கூடாது. அபப்டி வந்துவிட்டு நாடு சரியில்லை என்று பிதற்றக்கூடாது. உன்னைப்போன்ற வெளாங்காவெட்டிகள் இருக்கும் நாடு இப்படித்தான் இருக்கும்.


இலக்கும்  கொள்கையும் முடிவானவுடன், "கொள்கை"ப்படி இலக்கை அடைகிறோமா அல்லது இலக்கை அடைவதே கொள்கையாகமாறி சமரசங்களை ஏற்றுக் கொள்கிறோமா?


---------------------------

அரசியல் கட்சிகளின் இலக்கு மற்றும் கொள்கை

னது 12 ஆம் வகுப்பு முதல் கல்லூரி முடியும் வரை ஊரில் உள்ள எல்லா அரசியல் கட்சியிலும், நான் எனக்கே தெரியாமல் உறுப்பினராக இருந்துள்ளேன். எனது அண்னன், "எதற்கும் இருக்கட்டும்" என்று அவனின் அரசியல் நட்புகள் மூலம் எல்லா கட்சியிலும், எனக்கும் சேர்த்து உறுப்பினர் அட்டை வாங்கிவிடுவான். கேட்டால் "நாள‌ப்பின்ன கலெக்டர் ஆபிஸ், தாசில்தார் என்று ஏதாவது சர்டிபிகேட் வேண்டும் என்றால், கட்சிக்காரர்கள் உதவுவார்கள்." என்று விளக்கம் கொடுப்பான்.

யார் , எந்தக்கட்சி , அவர்களின் கொள்கை என்ன என்று ஏதும் தெரியாமலே நான் என் அண்ணனால் நேர்ந்துவிடப்பட்டு இருந்தேன். சிறுவயதில் காய்ச்சல் தலைவலி தாண்டி , பெரிய வியாதிகள் வந்தால், பிள்ளைக்கு மொட்டை போடுவதாக தாய்மார்கள் தாங்களாகவே நேர்ந்து கொள்வார்கள். அதுபோல இதுவும்.

ன்றும் பல கட்சிகளில் உறுப்பினர்களாக இருப்பவர்களிடம்,
  1. ந்தக் கட்சியின் கொள்கைகள் என்ன?
  2. தற்கு உட்பட்டே நீங்கள் உறுப்பினர்களாக ஆனீர்களா?
  3. றுப்பினர் ஆவதற்குமுன் கொள்கைகளையும் , இலக்கையும்  அலசி ஆராய்ந்தீர்களா?
  4. து உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை, ஆசை, கொள்கை  மற்றும் இலக்கிற்கு ஏற்றதா?
  5. Why they exists as political party?  என்பதை ஆராய்ந்தீர்களா?
  6. ந்தக் கட்சி அறிவித்துக்கொண்ட இலக்கிலும், கொள்கையிலும்  தடம் மாறும்போது உங்களின் நிலை என்ன?
  7. நீங்கள் இன்று சேர்ந்துள்ள கட்சியுன் தலைமை , அவர்களின் சுய நலனுக்காக கூட்டணிகள் மாறும் போது கட்சியில் இருந்து வெளியில் வந்துவிடுவீர்களா? அல்லது நேர்ந்துவிடப்பட்ட ஆடுபோல கட்சி விசயத்தை வெளியில் பேசமாட்டேன் என்று இருப்பீர்களா?

இப்படியான கேள்விகள் கேட்டால் , "குஷ்பூவிற்கே தெரிந்த திராவிட வரலாறும், கொள்கையும் எங்களுக்குத் தெரியாதா?" என்பார்கள். எல்லாம் சரி, உங்கள் கட்சியின் முதல் பத்து முக்கிய கொள்கைகளைக் கூறுங்கள். மேலும், அந்தக் கொள்கையில் இதுவரை எவ்வளவு தூரம் வந்துள்ளீர்கள்? அதில் உங்கள் பங்கு என்ன என்றால்..."ஆங்.... பிரியாணி மற்றும் காண்ட்ராக்ட் கட்டிங்" என்றே சொல்கிறார்கள்.

கட்சியின் கொள்கை ,இலக்கு என்ன என்று தெரியாதவர்கள், எப்படி இலக்கை நோக்கி செல்லும் ஒரு தலைமையின் தொண்டராக அறிவித்துக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை.

சாதி, மதம் போல , வாழையடிவாழையாக காங்கிரஸ் குடும்பம், திமுக குடும்பம் ,கம்யூனிஸ்ட் குடும்பம் என்று ஞானஸ்தானம் செய்து நேர்ந்துவிடபட்டவர்கள் தான் அதிகம். ஒரு கட்சியில் சேர்வதற்கு முன் , அதன் கொள்கை, இலக்கு என்ன என்று கேட்டு , அது தனக்கு ஏற்றதா? அதன் செயல்திட்டங்களுக்கு எந்த அளவில் நாம் பங்காற்ற முடியும் என்று பார்த்து யாரும் உறுப்பினராவது இல்லை.  அப்படி இருந்தால், கட்சி எடுக்கும் எல்லா முடிவிற்கும் இவர்கள் கட்டுப்படாமல் கலகவாதியாய் மாறிவிடுவார்கள்.  மண்டையாட்டும் மக்கள் மட்டுமே கட்சி செய்யும் எல்லா ஊழல்களுக்கும் வியாக்யானம் கொடுத்துக் கொண்டு இருப்பார்கள். உட்கட்சி ஜனநாயகம் என்ற ஒன்று இருந்தால், இன்று இந்தியாவில் ஏறக்குறைய‌ எல்லாக் கட்சிகளிலும் மன்னர் பரம்பரை வாரிசு அரசியல் வந்து இருக்காது.

எனவே கொள்கை சார்ந்து யாரும் அரசியல் கட்சிகளில் உறுப்பினராவது இல்லை. எனக்கு என் அண்ணன் செய்தது போல ஏதாவது ஒரு பலனை எதிர்பார்த்து உறுப்பினராக இருக்கிறார்கள்.  சாதி, மதம் விசயத்தில் திமுகவின் கொள்கை என்ன என்று யாருக்காவது தெரியுமா? அப்படி ஒன்று இருந்தால், அதன் உறுப்பினர்கள் அனைவரும் அதைக் கடைபிடிக்க வேண்டுமே. கொள்கையைக் கடைபிடிக்காதவன் எப்படி உறுப்பினர் / தொண்டன் என்று சொல்லிக் கொள்ளமுடியும்?  ஆளுக்கு ஒரு வழி என்றால் why they exists as a member of a party?


.

Friday, November 19, 2010

கட்சிக்கு நேர்ந்துவிடப்பட்ட மொக்கைகள்

ரசியல்வாதிகள் எல்லாம் சாக்கடை, குப்பை என்று சொல்லுபவர்கள்,  கல்லூரிப்ப‌டிப்பு படித்த சில கனவான்களை 'அறிவாளிகள்' ,  'திறமைசாலிகள்' என்று எளிதாக நம்பிவிடுவார்கள். மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் பள்ளியில் இங்கிலீஸ் மீடியத்துல படித்தவர் என்பதற்காகவே அவரை அறிவாளியாகப் பார்த்தவர்கள் நம்மக்கள். ‌அந்த வகையில், மாண்புமிகு மன்மோகன்சிங்கும் ஒருவர். ஆளைப்பார்த்து 'நல்லவர்', 'நியாயவாதி', 'சே சே அப்படி எல்லாம் தப்புச் செய்யமாட்டார்' 'அறிவாளி'   என்றே நினைக்கப்பட்டவர்.

னது பார்வையில் மக்களின் தலைவராக இருக்க சில அடிப்படைத் தகுதிகள் , பண்புகள் வேண்டும் .பாடப்புத்தக கல்வி நிச்சயம் அந்த அடிப்படைத்தேவை இல்லை. காமரசர் நல்ல உதாரணம்.

ல்லவன் படித்தால் நல்லது செய்வான்.
திருடன் படித்தால் நூதனமாக திருட தன் கல்வியைப் பயன்படுத்திக்கொள்வான்.
அடிப்படையில் நீ யார்? நீ என்னவாய் இருக்கிறாய் என்பதே முக்கியம் . கல்வி "அந்த" உன் அடிப்படையில் இருந்து அடுத்த நிலைக்கு இட்டுச் செல்லும்.

நாய் கல்வி கற்றால், அழகாக எப்படிக் குரைக்கலாம் என்பதற்குத்தான் அந்த கல்வி பயன்படுமே தவிர, கல்லூரிப்படிப்பு கற்றுவிட்ட ஒரே காரணத்திற்காக அந்த நாய் இனிமேல் பேண்ட் சட்டை போட்டுத்தான் வெளியே வரும்,கம்பத்தைக் கண்டால் காலைத் தூக்காது என்று எதிர்பார்க்கக்கூடாது.

த்தி என்பது ஒரு ஆயுதம் அது சமையலுக்கு காய்வெட்டவும் பயன்படும் , அதே சமயம் தலையை வெட்டவும் பயன்படும். அதுபோலத்தான் கல்வியும். அது யாரிடம் உள்ளது என்பதைப் பொறுத்தே அதன்பயன்பாடு இருக்கும். பல நேரங்களில் "படிச்சவனா இப்படி?" என்று கேட்பார்கள். படிப்பிற்கும் "நீ யார்?" என்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. படிப்பு என்பது,  நம்பர் "0" போன்றது. அதை "1" க்குப்பின்னால் போட்டால் "1" ஐ  -> பத்தாக்கும் , "5"  க்குப்பின்னால் போட்டல் "5" ஐ -> ஐம்பதாக்கும்.


சூட்சுமம் உன்னில் உள்ளதே தவிர கல்வியில் இல்லை.

மேலும் சொல்வதானால் கல்வி என்பது நீர் போல. கள்ளிச்செடிக்கு நீர் ஊற்றினால் அது மாங்காய் கொடுக்கப்போவது இல்லை.

The Radia Papers– Raja, Tata, Ambani connection
http://indiasreport.com/magazine/data/the-radia-papers-raja-tata-ambani-connection/

சந்திக்கு வந்த டாப் சீக்ரெட் - சட்டம் நம் கையில்.
http://lawforus.blogspot.com/2010/11/blog-post_313.html

Performance Audit Report on the by the Department of Telecommunications Ministry of Communications and Information Technology
http://www.scribd.com/doc/42774182/CAG-2GSpectrum-20101115

ன்னளவில் மதிபிற்குரிய மன்மோகன் அவர்கள்,  ஒரு குமாஸ்தாவாக இருக்கலாம். மற்றபடி மக்கள் தலைவராக இருக்க முடியாது. பல கோடி ரூபாய் கொடுத்தாலும் விண்ணப்பிக்காத‌  வேலைக்கு நான் போக மாட்டேன். அப்படியே ஒன்று வந்தாலும், அந்த வேலையில் எனது பங்கு, கடமை போன்றவை தெரிந்துதான் சேருவேன்.  அம்மா சொன்னார் , அப்பா கேட்டார் என்பதற்காக சும்மாகாச்சுக்கும் இருக்க நான் எதற்கு? டவுசர் த ரோபோவாக இருந்துவிட்டுப் போகலாமே?

இவர் இருக்கிறார் என்றால் ..அது ஏன்? என்ன அவசியம் என்ற கேள்வி வருகிறது. இவரைபற்றி நான் ஏற்கனவே எழுதிய சில.

நாரயணமூர்த்தி மன்மோகன்சிங் புனிதர்களா?
http://kalvetu.blogspot.com/2006/10/blog-post_09.html

மன்மோகன் சிங்கின் காமெடி..ஏம்பா லூசாப்பா நாங்க?
http://kalvetu.blogspot.com/2009/04/blog-post.html


தாரம் இல்லை அய்யா. உங்களுக்கு மனட்சாட்சி என்ற ஒன்று உண்டா? நாட்டை வன்புணர்ந்தவன் யாரென்று தெரியவில்லை. எங்களால் அடையாளம் காட்டமுடியவில்லை. நிரூபிக்க முடியவில்லை. ஆனால் நாங்கள் வன்புணரப்பட்டது என்னவோ உண்மை அய்யா.  அரசியல் புரிய ஆரம்பித்த நாளில் இருந்து எப்படியாவது , யாரவது நாட்டை வன்புணர்ந்து கொண்டுதான் உள்ளார்கள். போபார்ஸ் ஊழல், ஹர்சத் மேத்தா ஊழல், மாட்டுத்தீவன ஊழல், மருத்துவக் கல்லூரி பெர்மிசன் ஊழல்..இப்போது ஸ்பெட்ரம் ஊழல். என்ன செய்யலாம்? எங்களுக்கே வெக்கமாக உள்ளது.  எந்த நாட்டில் பிறக்க வேண்டும் என்பது எங்கள் முடிவு இல்லை.  பிறந்துவிட்டோம்.

ட்டா ,வரி சக‌லமும் சரியா உள்ள‌ உள்ள அக்மார்க் சுத்தகிரய வீட்டிற்கு , கக்கூஸ் இணைப்பு கொடுக்க முனிசிபாலிட்டிகளால் , எங்களின் டவுசர்வரை கிழிக்கப்படுகிறது. ஆனால் பலகோடி வியபாரச் சமாச்சாரங்கள் மிகச் சுலபமாக நடக்கிறது.  எப்பூடி இப்படி?


ங்கள் ஊரில் சைக்கிள் திருடி மாட்டினவன் , ஏட்டய்யாவின் ஒரு அதட்டலுக்கே டவுசரில் ஒன்னுக்குப்போவான். படித்த மேன்மக்கள் என்ன ஆனாலும் வெக்கப்பட்டதாகவே தெரியவில்லை. எப்பூடி இப்படி?

ம்பானி , டாட்டா போன்றவர்கள் பணம் செய்யும் மிசின்கள் அவர்களிடம் மக்கள் நலன் இல்லை என்று குற்றம்சாட்டுவது, ஆடு கசாப்புக்கடைக்காரனிடம் ஜீவகாருண்யம் இல்லை என்று சொல்வது போன்றது. அவர்களின் தொழில் பணம் செய்வது. ஒருமுறை ரத்தன் டாடாவின் பேட்டியைப் பார்த்து "கொஞ்சம் நல்லவரா இருக்காரே" என்று நினைத்தேன்.

Polyester Prince-The Real Story of Dhirubhai Ambani
http://www.scribd.com/doc/3924530/Polyester-PrinceThe-Real-Story-of-Dhirubhai-AmbaniBanned-in-India


சென்னையைத்தவிர எந்த மாவட்டத்திலும் அல்லது மாநிலத்திலும் ஒரு நாளைக்கூட தங்கி செலவழித்திராத மண்டூகங்கள், கட்சிக்கு நேர்ந்துவிடப்பட்ட மொக்கைகள், இன்னும் அதுஅதுகள் சார்ந்த கட்சிக்கு வக்கலாத்து வாங்கிக் கொண்டுள்ளது. எப்பூடி இப்படியெல்லாம்...? மூளையை எப்படி அடகு வைக்கிறீர்கள்?

சோ ற்றால் அடித்த பிண்டங்கள், அடுத்த தேர்தலில் யார் அதிக காசு கொடுப்பார்கள் ஓட்டுப்போடலாம் என்று இருக்கும். இவர்களுக்கு காசு கொடுப்பதற்காகவே அரசியல்வாதிகள் நிறைய தவறு செய்ய நேரும்போலத் தெரிகிறது. ( கலாச்சார கூமுட்டைகள் இதுக்கெல்லாம் வெட்கப்ப‌டுதுகளா என்று தெரியவில்லை. மதவாதிகளுக்கும் , கலாச்சார கூமுட்டைகளுக்கும் பொம்பளப்பிள்ளைகள் டவுசர் ஒழுங்காப்போடுதுகளா என்று பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கும் போல.)

பிழைத்திருப்பதற்கும் வாழ்வதற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள்.


எதைப்படிப்பது எதைவிடுவது ?

Scam
 
http://news.outlookindia.com/item.aspx?701401

http://www.outlookindia.com/article.aspx?268064

http://www.outlookindia.com/article.aspx?268066

http://www.outlookindia.com/article.aspx?268068

http://www.outlookindia.com/article.aspx?268065




Monday, November 01, 2010

உங்களின் கனவுகளுக்கும் கற்பனைக்கும் எல்லையுண்டு

னவுகளுக்கு எல்லையில்லை. கனவுகாணுங்கள் இளைஞர்களே என்பது போன்ற கூக்குரல்களைக் கேட்டிருக்கலாம். ஆப்ரிக்காவின் அகண்ட காட்டுப்பகுதிகளில் நான் கேள்விப்பட்டிராத ஒரு இடம் ,செயல் , மக்களைப் பற்றி எனக்கு கனவு வ‌ந்ததே இல்லை.  கனவு என்பது காட்சி. அதற்கு ஒரு பிம்பம் வேண்டும். பிம்பத்தை கட்டமைக்க சில கட்டுமானப்பொருட்கள் வேண்டும். எங்காவது படித்த சில கதைகள் , செவிவழிக் கேட்ட கருத்துகள், கண்களால் கண்ட சில பிம்பங்கள் ...என்று ஏதாவது ஒன்று எனது மூளையின் டேட்டாபேஸில் இருந்தாக வேண்டும். அப்படி எனது மூளையில் இதுவரை புறவழி உணர்வுகளால் இன்னும் பதிவு செய்யப்படாத‌ ஒரு காட்சிப் பிம்பத்தை கனவாகக் காண்பது எனக்கு வாய்க்கவில்லை. உங்களுக்கு வாய்த்திருக்கிறதா?

சின்னவயதில் பேய்க்கனவு வாய்ப்பதற்கு முன் , பேய்க்கதைகள் என்னும் வடிவில் எனது மூளையில், பேய்க்கனவிற்கான கட்டுமானப் பொருட்கள் யார்மூலமோ ஏற்றப்பட்டு இருந்தது. அது இல்லாமல் பேய்க்கனவு சாத்தியமாகவில்லை.  "ஜகன் மோகினி" பார்த்தபின் பேய்க்கான ஒரு தெளிவான பிம்பம் விட்டலாச்சாரியின் தயவில் என் மூளையிள் வந்து உட்கார்ந்து கொண்டது.  அதற்குப்பின் வரும் பேய்கள் எல்லாம் சில காலம் "ஜகன் மோகினி"  பேய்களாகவே குட்டி குட்டியாக வெள்ளை டைட்சூட்டில் வந்தது.  இதுவே சில காலம் கழித்து அழகிய பெண்வடிவ மோகினியாக சேலை , மல்லிகை, வளையல்,கொலுசு  இத்யாதிகளுடன் அழகிய பேயாக மாறிவிட்டது.  ஒருவேளை ஆர்னிகா நாசர்  அல்லது ஜாவர் சீத்தாராமன் ?  கதை வழிவந்த உருவமோ? என்னமோ ஒன்று.  ஏதோ ஒரு புறவழி கதைகளால் என்னுள் பதியப்பட்ட‌  அழகிய பெண்வடிவ மோகினி அந்தக் கனவு பிம்பத்தை கட்டி எழுப்பியிருக்கிறது.

 கக்மக்சிக்பக்சிசுசா என்று கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? நான் கேள்விப்படவில்லை அதாவது அது எப்படி இருக்கும் என்ற காட்சியை யாரும் எனக்கு அறிமுகப்படுத்தவில்லை.  கக்மக்சிக்பக்சிசுசா என்று ஒரு கனவு வந்ததே இல்லை.  ஒருவேளை நாளை யாராவது ஒருவர் கக்மக்சிக்பக்சிசுசா கதை சொன்னால் நாளைய கனவில் அது வரலாம்.

கதைகளை மட்டுமே படித்த கதைபுத்தக வாசகர்கள் அதே கதை திரைப்படமாக வரும்போது மிகவும் ஏமாந்துவிடுவார்கள். கதையில் இருந்து திரைப்படத்தை உருவாக்கிய இயக்குனர், இவர்களின் கற்பனைகளை குலைத்து இருப்பார்.  ஒரு கதையில் வார்த்தைகளால் "அடர்ந்த காட்டில்  இருக்கும் அழகிய குளத்தின் அருகே இருக்கும் வீட்டில்... " என்று இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். 

வாசகன்1:
அதிகபட்சம் கிராமக் தோப்புகளில் மட்டுமே சுற்றித்திரிந்த ஒருவன் காடு சம்பந்தமாக வேறு எதையும் தெரிந்து வைத்திருக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். இந்தக் கதையைப்படிக்கும் அவன் "அடர்ந்த காடு" என்பதை அவன் அறிந்த கிராம தோப்புகளின் பிம்பததிற்கு உட்பட்டே கற்பனை செய்துகொள்ள முடியும். அவனால் அமேசான் காட்டினை இந்தக் கதையின் கற்பனைக்கு காட்சிப்படுத்திக் கொள்ளமுடியாது.
வாசகன்2:
வேடந்தாங்கல் மற்றும் டாப்சிலிப்ஸ் போன்ற காட்டுப்பகுதிகளைச் சுற்றிய ஒருவனுக்கு கதையாசிரியர் சொல்லும் "அடர்ந்த காடு"  என்பதை கற்பனை செய்துகொள்ள பல சாத்தியக்கூறுகள் உள்ளது. அவனால் மிகச்சிறந்த காட்டின் பிம்பத்தை கட்டிஎழுப்பி அதனில் கதையை நகர்த்த முடியும்.
வாசகன்3:
தமிழகத்தில் எழுதப்பட்ட கதை பெரு நாட்டில் வாசிக்கப்படும்போது அங்கே உள்ள ஒருவனுக்கு அமேசான் காட்டை "அடர்ந்த காடு"  என்பதற்கு இட்டு நிரப்பமுடியும்.

இயக்குனர்:
இந்தக் கதையால் கவரப்படும் ஈராக்கைச் சேர்ந்த ஒரு இயக்குனர் திரைப்படம் எடுக்கும்போது, அவரின் மண்சார்ந்த  பாலைவனச் சோலையை காடு என்பதாகக் காண்பிக்கிறார் / காட்சிப்படுத்துகிறார்.

முன்னரே பாலைவனச் சோலை பற்றிய அறிமுகம் இல்லாமல் , மேலே சொன்ன மூவரும் ஏமாற்றமாகிவிடுவார்கள். ஏன் என்றால் கதையைப் படிக்கும்போது  பாலைவனச் சோலையை அவர்களால் கற்பனைகூட செய்திருக்கமுடியாது.  அப்படியே தெரிந்து இருந்தாலும் கதையைப் படிக்கும்போது , அவர்கள் அவர்களின் வாழ்வோடு பொருந்திய / அறிமுகமான காட்டின் பிம்பத்தையே கதைக்காக எடுத்துக் கொள்வார்கள்.

அவர்களின் கற்பனையை மீறி திரைப்பட இயக்குனர் காட்சிப்படுத்தும்போது , "ஆகா இப்படியும் இருக்கலாம்" என்பதைமீறி , "நான் நினைத்ததுபோல இல்லையே" எனும்போது ஏமாற்றம் வருகிறது.

சரி அதை விடுங்கள். நீங்களே இந்தக் கதையின் வாசகன் என்று வைத்துக்கொள்ளுங்கள். கதைசொல்லி ""அடர்ந்த காட்டில்  இருக்கும் அழகிய குளத்தின் அருகே இருக்கும் வீட்டில்... " என்று சொல்லும்போது உங்களால் நீங்கள் இதுவரை அறிந்திராத ஒரு வீட்டை கற்பனை செய்யமுடியுமா? என்ன இருந்தாலும் உங்களுக்கு வீடு என்பதற்கான ஒரு அடிப்படை பிம்பம் ஏற்கனவே மனிதில் இருந்தாக வேண்டும்.

 பி ரச்சனைகளுக்கு எல்லாம் பெரிய பிரச்சனை நமது மூளையின் செயல்பாடு. எந்தப்புதிய தகவல் வந்தாலும் அதை ஏற்கனவே உள்ள ஒரு தகவல் கிடங்கில் அது இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்து அப்படி இருந்தால் அதனுடன் ஒப்பிட ஆரம்பித்துவிடும். அப்படி ஏதும் இல்லாவிட்டால், புதிய தகவல்களை அது எதிர்கொள்ளும்போது அது குறித்த சில விவரங்கள் மூளையில் புதிதாகப் பதிவாகிறது. பின்னாளில், அதுவே அடுத்து வரும் அது சார்ந்த தகவல்களை ஒப்பிடப் பயன்படுகிறது.

உங்களின் இன்றைய கனவு மற்றும் கற்பனையின் எல்லை, நீங்கள் நேற்றுவரை சேமித்த தகவல்களின் எல்லைக்கு உட்பட்டதே. புற உணர்வுகளால் ஏற்கனவே அறிமுகமாயிராத ஒன்றைப்பற்றி அகம் கனவுகாண முடியாது. அப்படி உங்களுக்கு நிகழ்ந்திருக்கிறதா? செவ்வாய் கிரகத்தில் உள்ள மனிதர்களின்(??) உருவங்களை இதுவரை புறவுணர்வுகளால் நீங்கள் அறிந்திராத ஒன்றாக கனவு காண , கற்பனை செய்ய முடிந்துள்ளதா?

உங்களின் புரிதலுக்கு அப்பால் அல்லது உங்களின் டேட்டாபேசை தாண்டிய தகவல்கள் உங்களை வந்து அடையும்போது அதை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?


Picture courtesy http://download-free-pictures.com