Thursday, July 05, 2012

ஈழத்தமிழர் பிரச்சனை: ஏன் கடிதங்கள் எழுதப்படுகிறது?

 

முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள்:

தமிழ்நாடு: திமுக ஆட்சி
இந்தியா:  ஆட்சியில் திமுக பங்கெடுத்து நடத்தும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி

இந்தியாவால் ஏதாவது செய்யமுடியும் என்று முதல்வர் கருணாநிதி நினைத்து இருந்தால், அதைச் செய்யாத கூட்டணியில் இருந்திருக்கத்தேவையே இல்லை.

இந்தியாவால் ஏதும் செய்யமுடியாது என்று முதல்வர் கருணாநிதி நினைத்து இருந்தால் கடிதம் எழுதத் தேவை இல்லை.

அப்படி இருந்தும் எழுதிய கடிதங்கள் அவர் அவருக்கே எழுதிக்கொண்ட பொம்மைக் கடிதங்கள்.

இன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள்:

தமிழ்நாடு: அதிமுக ஆட்சி
இந்தியா:  திமுக பங்கெடுத்து நடத்தும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி

இந்தியாவால் ஏதாவது செய்யமுடியும் என்று  முதல்வர் ஜெயலலிதா நினைத்தால் அதைச் செய்ய கடிதம் மட்டுமே எழுதமுடியும். உண்மையான அக்கறை இல்லாமல் இருந்தால்கூட , இந்த அரசியல் சூழ்நிலையில் , குறைந்தபட்சம் இவர் எழுதும் கடிதங்கள் இவரே இவருக்கு எழுதும் பொம்மைக்கடிதங்களாக பார்க்கப்படாது.

இந்தியாவால் ஏதும் செய்யமுடியாது என்று முதல்வர் ஜெயலலிதா நினைத்து இருந்தால் கடிதம் எழுதத்தேவையே இல்லை.

No comments:

Post a Comment