Tuesday, August 09, 2016

இரோம் சர்மிளா ‍ - காந்தியின் தேசம் என்ற‌ பொய்மை

ணிப்பூர் எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்று. அங்கே உள்ள "லோக்டக்" ஏரி ( Loktak Lake) உலகில் உள்ள ஒரே மிதக்கும் பூங்கா.

http://www.thebetterindia.com/38244/loktak-lake-manipur-floating-national-park/

https://www.youtube.com/watch?v=ieEkp_jgsLU

பார்க்க வேண்டிய இடங்கள் என்ற எனது ஆசை மற்றும் பேராசைப் பட்டியலில் இன்றுவரை இந்த இடம் இருந்து கொண்டுள்ளது. மணிப்பூர் , இந்தியா என்ற அடையாளத்துடன் இருந்தாலும், லாட்டரி சீட்டுகளே தமிழகத்தில் அந்த மாநிலத்தின் இருப்பை எனக்கு உணரச் செய்தது. பாடப்புத்தகங்கள் சொன்னதைவிட மதுரை "கே.ஏ.எஃச் சேகர்" லாட்டரி கடைகளே இந்த மாநிலத்திற்கு அதிக வெளிச்சம் அடித்துக்காட்டியது.

அதன் பிறகு மணிப்பூர் என்றாலே என் நினைவிற்கு வருவது இரோம் சர்மிளா.
AFSPA என்ற இந்திய இராணுவச் சட்டத்தை எதிர்த்து கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்தியவர். இப்போது அதை கைவிடுகிறார்.

Armed Forces Special Powers Act (AFSPA), which gives soldiers sweeping powers to arrest without warrants and even shoot to kill in certain situations. AFSPA is in effect in several Indian states, including in Manipur and Indian-administered Kashmir.

ஆம் இப்படியான சட்டம் காந்தியின் தேசத்தில்தான் உள்ளது. அதை எதிர்த்து ,அதே காந்தி தேசப் பெண்தான் , அதே காந்திய வழியில் 16 வருடமாக போராடினார். காந்தியின் பேர் சொல்லும் கட்சியோ, கடவுளின் பேர் சொல்லும் கட்சியோ ஒரு துரும்பைக்கூட அசைக்கவில்லை. கிரிக்கெட்டுக்கு கூவும் மக்களும் , மதத்திற்கு மல்லுக்கட்டும் மக்களும் கார்பரேட்டு அடிமைகளான என்போன்ற சாம்பிராணிகளும் வெட்கித்தலைகுனிய வேண்டும்.

உலகில் ஏதேனும் போராட்டங்கள் நடந்தால் பலர் தங்களின் சொம்புகளைத் தூக்கிக்கொண்டு மடச்சாம்பிராணி பக்த கோடிகளுக்கு காந்தியம் உபதேசம் செய்வார்கள். காந்தி குல்லா போட்டு கல்லா கட்டுவார்கள். ஆம் நீங்கள் காலம்முழுக்க தாங்கிப்பிடித்த காந்தீயம் இன்று பல்லிளிக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் ஒரு துரும்பைக்கூட அசைக்க வலுவற்றது இந்த போராட்ட முறை. நீங்கள் எடுக்கும் எந்த ஒரு போராட்ட முறையின் வெற்றி தோல்வியில், அதன் மறுமுனையில் உள்ளவர்களின் பங்கும் முக்கியமானது. காந்தியின் அகிம்சைப் போராட்டம்தான் சுதந்திரம் வாங்கிக்கொடுத்தது என்று நீங்கள் நம்பினால், அதன் அர்த்தம், அந்த போராட்ட வடிவத்தை மறுதரப்பு மதித்தது என்பதுதான் உண்மை. இன்று உலகில் உள்ள அரசாங்கங்கள் எதுவும் நீங்கள் நம்பிக்கொண்டு இருக்கும் மனிதநேயம் கொண்டது அல்ல. அது முழுக்க முழுக்க அரசியல் , அதிகாரம் மற்றும் பண பலம் கொண்ட அமைப்புகள்.

ஒரு கொள்ளையர்களின் கூட்டத்திற்கு பெருங்கொலைகாரனே தலைவானக‌ இருக்க முடியும் என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. இன்று மக்களின் மீதான ஒரு அவ நம்பிக்கையை கோடிட்டுகாட்டியுள்ளார் சர்மிளா.

Irom Sharmila: World's longest hunger strike ends
http://www.bbc.com/news/world-asia-india-37007494

//Some people are seeing me as a strange woman because I want to join politics. They say politics is a dirty, but so is society.//

-சர்மிளா உங்களின் அரசியல் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகள்.

-அரசியல்பாதை சரியானதுதான் அதில் பங்கெடுக்கும் மக்கள் சரியானவர்களாக‌ இருக்கும்வரை.

-இந்தியாவில் உங்களைப் போன்றவர்கள் அரசியல் தலைவர்களாக‌ வேண்டும்.


கல்வெட்டு: பாலஸ்தீனம்-இலங்கை ...
http://kalvetu.balloonmama.net/2009/11/blog-post_17.html