Saturday, January 18, 2020

களரி - தமிழர் விளையாட்டா?

களரி.
தமிழர் விளையாட்டா?
ஏதாவது தரவுகள்? ஏன் கேரளம் இதில் முன்னணியில்  உள்ளது?

இன்றைய சூழலில், களரி என்றாலே கேரளம் என்றே அறியப்படுகிறது. இது ஓரளவு உண்மை. எடுத்துக்காட்டாக, "சிலம்பம் தமிழர் கலை" என்று ஐயமறச் சொல்வதுபோல, களரியைச் சொல்வதில் சில மனத்தடை உண்டு. "பொங்கல் விழாவில் , களரி விளையாட்டை/தற்காப்பு கலையை தமிழர் விளையாட்டு என்று காட்சிப்படுத்தலாமா?" என்றால், அதற்கான விடை, 👉"ஆம். Why not?" என்பதே எனது பதில். ஆனால் இந்தக் கேள்வி ஏன் எழுகிறது? என்பதை அறிந்து, இதைப் பயன்படுத்தி ஒரு உரையாடலை முன்னெடுப்பது, வரலாற்றை ஒரளவு அறிய உதவும்.

'இன்றைய" தமிழகம் முழுமைக்குமான ,எல்லா மாவட்டங்களுக்குமான ஓரே பண்பாடு /சடங்கு என்று ஒன்றைத் தேடினால் அது "சாம்பாரும் இட்லியும்தான்". (இட்லியே சங்க காலத்தில் இல்லாத ஒன்று. சாம்பாரும் இறக்குமதியே) 

எல்லா பழக்கங்களும் சின்ன குழுப்பண்பாடுதான். சல்லிகட்டு கூட வட மாவட்டங்களில் இல்லாத ஒன்று.தென் மாவட்டங்களுக்கே அதுவும் மதுரை அதன் சுற்று வட்டாரங்களுக்கே உரிய ஒன்று.

மஞ்சுவிரட்டு,சல்லிகட்டு,எருதுகட்டு எங்கள் வாழ்வு.
http://kalvetu.blogspot.com/2017/01/blog-post.html

சல்லிகட்டை சென்னையில் தேட முடியாது. அதுபோல, காணும் பொங்கல் என்பது தென் மாவட்டங்களில் இல்லை. ஆனால் சென்னையில் உண்டு.
**
👉களர் நிலம் (உப்பு நிலம்)
👉களைதல் 
👉களை எடுத்தல் 
👉களைக் கொத்தி (அருவா)
👉களம் காணுதல்
👉நெற்களம்

என்று, "களம்",  "களரி' என்று சொற்களை தமிழில் தேடலாம். 
**
களரி
இந்த விளையாட்டு ஏன் மதுரையில் சிலம்பம் அளவிற்கு இல்லை. ஆனால், தூத்துக்குடி கன்னியாகுமரிப் பக்கம் உள்ளதே? என்றால் அதற்கான காரணம் உண்டு.

எனது இணைய தோழர் @rajavanaj அவர்கள், இந்த தற்காப்பு கலைகளில் வல்லுநராகவும் , ஆசிரியராகவும் உள்ளார். இது குறித்து ஒரு புத்தகமும் எழுதப்பட்டுக் கொண்டுள்ளது அவரால். அவர் வழியே அறிந்த தகவல்கள் இங்கே. கட்டுரைக்காக சில இடங்களில் எனது மொழிநடையில். ஆனால், இந்த தகவல்களுக்கான Credit @rajavanaj க்கே.👍💐
👇👇👇
-----  @rajavanaj ----
தற்காப்பு கலைகளில் எது யாருடையது என்று பிரித்து பார்க்க முடியாதபடி கலந்து விட்டது.  

"தெற்கன்சுவடு" என்பது, திருநெல்வேலி, நாகர்கோயில், கன்னியாகுமரி பகுதிகளில் ஆடப்படும் விளையாட்டுகளின் ஒரு Collective Umbrella பெயர். இதனுள், "சைலாத்து", "துள்முறிச்சுவடு" மற்றும் "தெற்கன் களரி" உண்டு.

"தெற்கன் களரி" ஆசான்கள் பெரும்பாலும் தமிழர்கள். அதன் சுவடிகள் எல்லாம் தமிழில் தான் இருக்கும். இதே கலை, மேல் கேரளத்துக்கு போன போது, அது அரபிகள் மற்றும் துருக்கியில் இருந்து வாணிபத்துக்காக வந்தவர்களின் முறைகளோடு சேர்ந்து, "வடக்கன் களரி" ஆனது. அதன் ஆசான்கள் பெரும்பாலும் மலையாளிகள்.

தமிழ் வீரக்களைகளின் மூலத்தை இரண்டு பெரும் பிரிவாக சொல்லலாம். (1)சோழ மண்டல கலைகள்.
(2) பாண்டிய மண்டல கலைகள். 

இன்று பரவலாக பயிலப்படும் சிலம்ப முறைகள் சோழமண்டலத்தை சேர்ந்தது. "குத்துவரிசை", "அடிதடா' எல்லாம் சோழ மண்டலம் தான். சோழ மண்டலத்து "கை விளையாட்டு"களில் நுணுக்கங்கள் குறைவு. "கம்பு விளையாட்டு"களில் நுணுக்கங்கள் அதிகம்.  இதே பாண்டிய மண்டலத்தில் முற்றிலும் மாறாாக இருக்கும்.

பாண்டிய மண்டலத்தின் "சைலாத்து", "துள்முறிச்சுவடு", "தெற்கன்களரி' போன்றவை, அண்ணன் தம்பிகள் போன்றவை. மெல்லிய வேறுபாடுகள் தான் இருக்கும். 

"துள்முறிச் சுவடு" தான் போதி தர்மன் வழியே சீனா சென்றது என்பது ஒரு பரவலான நம்பிக்கை.  எனவே அதை வழக்கத்தில் சீன அடி என்பர்.
**
ஒட்டு மொத்தமாக தமிழர் கலை, தமிழர் பண்பாடு என்று சொன்னாலும், இதன் ஆழத்தில் சாதி உள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை. ஒட்டுமொத்த தமிழர்களுக்கும், சாதி நீக்கப்பட்ட கலை என்று ஒன்றைச் சொல்லிவிடவே முடியாது. ஒவ்வொரு சாதிக்கும் என ஒரு விளையாட்டு முறை இருக்கிறது.

இன்று "தலித்" அரசியல் முன்னெடுக்கும் கலைகள் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒன்றே. கன்னியாகுமரியில் உள்ள பெரும்பாலான "சைலாத்து" மற்றும் "தெற்கன் களரி" ஆசான்கள் ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்களே என்பது மறுக்கமுடியாத உண்மை. 

சொல்லிக் கொடுப்பதிலேயே நிறைய feudal values பார்ப்பாங்க. உள்ளே வரும் போதே சாதி கேட்பார்கள். சாதி கடந்த, மொழி அடிப்படை அடையாளங்கள், இப்போதுதான் கடந்த நாற்பது வருடங்களாக கட்டி எழுப்ப முயற்சி நடக்கிறது. இன்றைய இளைய தலைமுறை , பல கலைகளில் இருந்து நல்லவற்றை எடுத்து ஒரு ஒருங்கிணைந்த, inclusive கலை வடிவத்தை சாதி கடந்து தமிழர் கலையாக உருவாக்க முயல்கிறார்கள். செய்யறாங்க. பழைய 
ஆசான்கள் இதை ஏற்பதில்லை என்பதும் உண்மை.

"அருந்ததிய வரிசை" என்று உள்ளது. ஆம் அதே அருந்ததி இனம்/சாதி தான். "கள்ளன் பத்து", "பனையேறி மல்லன்", "நடராசர் வரிசை", "அய்யங்கார் வரிசை", "துலுக்கான வரிசை" இப்படியும் இருக்கு. இதில் ஏதாவது ஒன்றை எடுத்து, "இதுதான் தமிழர் மரபு"ன்னு  அடையாளப்படுத்தும் போது மற்றவர்கள் ஏற்பது இல்லைை என்பது உண்மை.
-----  @rajavanaj ----

தேவர் ஆட்டம் என்பதை , பள்ளர், பறையர், அய்யங்காரன், அய்யரன் ஆடி பார்த்துள்ளீர்களா? ஒரு அய்யங்காரன் மிருதங்கம் அடிப்பான் ஆனால், முனியாண்டி கோவிலுக்கு பறை அடிக்க மாட்டான். விளையாட்டுகளில் கலைகளில் சாதி உள்ளது. இதை மறுக்கமுடியாது. 

இந்த உண்மையை இளைய தலைமுறைக்கு மறைக்காமல் சொல்வதன் மூலமே, அவர்கள் இதைக் களைந்து நல்லதொரு பண்பாட்டை முன்னெடுக்க முடியும். வரலாற்றை , சாதிய அசிங்கங்களை மறைத்து , வறட்டு பெருமையாக , "இதுதான் தமிழர் பண்பாடு" ஏமாற்றிக் கொள்ளாமல், நல்லவற்றை கட்டமைப்போம். நம் புதிய பண்பாடாக.👍💐🖤❤️💙

பண்பாடு= பண்படுத்தப்பட்ட /செப்பனிடப்பட்ட /சரிசெய்யப்பட்ட பழக்கங்கள்(பாடுகள்). அதாவது ,இன்றைய நிலையில் இருந்து, தவறுகள் கலைந்து முன்னேறும் progressive வழி. வெற்றுக் கலாச்சாரமாக (மாற்றமுடியாத செதுக்கல் கல்வெட்டு -Cult - Culture  ) வரலாற்றில் தேங்கி விட வேண்டாம்.

கலாச்சாரம் என்பது இறந்த காலத்தைச் சுட்டுவது. Culture is a reference to a history not a current life. பழைய பழக்கங்களே நம் "கலாச்சாரம்" என்று இருந்தால், நாம் கோவலன் வப்பாட்டி வைப்பதை ஏற்றுக்கொண்ட, அவனுக்காக கசிந்துருகிய கண்ணகி போல வாழவேண்டும். இன்று நாம் அப்படியில்லையே? எனவே குழப்பிக்கொள்ளக்கூடாது.

பழக்கங்களை பண்படுத்தி நல்ல பண்பாடுகளை வளர்ப்போம்👍💐🖤❤️💙