Friday, February 10, 2006

இங்கு இப்பொழுது படித்ததில் பிடித்தது


பல விசயங்களில் இப்போது தமிழ் வலைப் பதிவு நண்பர்கள் விவாதம் செய்கிறார்கள். பின்னூட்டம் பெறுவது எப்படி என்பது முதல் தன் கட்டிலுக்கு அடியில் இருந்து வரும் "நெட்ஓர்க்கிங் ஃபண்டமெண்டல்ஸ்" அண்ட் "உள்குத்து மேட் ஈஸீ" வரை பல அறிவுரைகள். இங்கே இப்பொழுது நடைபெறும் விவாதம் (அ) சண்டை(க்கோழி)யில் படித்ததும் பிடித்ததும்.



1.இப்போதும் பெரியார் வந்திருக்காவிட்டால், நம்மிடம் சொல்வதற்கு காருண்யக் கதைகளே எஞ்சியிருக்கும். அவர் நாம் முதுகுகளில் சுமந்து திரிந்த புனிதங்களை உடைத்து அவலங்களைச் சொன்னார்.

2.புத்தரின் அன்பும் கருணையும் வெறும் வார்த்தைகளாக்கப்பட்டது.

3.எனக்குத் தேவை இல்லாத ஒன்றை பெற்றுக்கொள்வதோ, மற்றவர்க்கு தேவையில்லாத ஒன்றைக் கொடுப்பதோ நான் செய்வது கிடையாது
--தங்கமணி.

4...கொஞ்சம் கூட்டம் சேர்ந்தவுடன், கொஞ்சம் பெரிதான அமைப்பை உருவாக்கி அதற்கு அடுத்த நடவடிக்கையை கொள்ளவேண்டும். இப்படித்தான் உலகம் மாறுகிறது. இப்படித்தான் அடிமைத்தனம் அகன்றது. பெண்கள் வோட்டுரிமை பெற்றார்கள். நீங்கள் பெற்றீர்கள். அப்படித்தான் உழைக்கும் வர்க்கம் தற்காப்பு பெற்றது. எந்தவொரு பலன்களும் அந்தமாதிரியான உழைப்பால் வந்தது தான்.. அது ஒரு கூட்டதிற்குப் போய், பின்னால் நழுவியவர்களால் வந்ததல்ல. நாலு வருடத்திற்கு ஒருமுறை ஓட்டுமட்டும் போட்டவர்களால் வந்ததில்ல்லை. ஒரு தேரும் வேட்பாளர்களுக்கு ஓட்டு போடுவதால் மட்டும் அமையப் போவதில்லை. அது ஒரு ஆரம்பமாக வேண்டுமானல் இருக்கலாம்.
--அனாதை

5.'இங்கு-இப்போது' என்பதில் அனேக பாடங்கள் உள்ளன.

--புத்தரின் மேற்கோளில் இருந்து மு.மாலிக்

மேலே கண்ட மேற்கோள்கள் தங்கமணியின் இந்தப் பதிவில் இருந்து இங்கே சேமிக்கப்படுகிறது.

6.என்னை உனக்கு அறிமுகப்படுத்திக்கொள்ள நான் விரும்பவில்லையெனில், நீ என்னைப்பற்றி என்ன தெரிந்துகொண்டாலும் புரிந்துகொண்டதாக நினைத்தாலும் அதுகுறித்த அக்கறையோ மரியாதையோ எனக்கில்லை என்பதே.

--சன்னாசி

மேலே கண்ட சன்னாசியின் மேற்கோள் முகமூடியின் இந்தப் பதிவில் இருந்து இங்கே சேமிக்கப்படுகிறது.


****************


****************