Monday, June 18, 2012

கனவு காணுவற்கு ஏற்ற பதவிதான் இந்திய குடியரசுத்தலைவர் பதவி

திமுக தலைவர் கலாமை ஆதரிக்காமல் இருக்க காரணம் அல்லது "கலாம் கலகம் கழகம்" என்று போடும் வெற்றுக்கூச்சல்கள் எல்லாம், அன்னை சோனியாவினை மகிழ்விக்கவே தவிர, எந்த ஒரு கொள்கை அடிப்படையிலும் கிடையாது என்பது உலகம் அறிந்த உண்மை.

அன்னை சோனியாவின் கடைக்கண் பார்வை கலாம்மீது பட்டுஇருந்தால் (ஒரு வேளை) இதே திமுக தலைவர் , "கலாம் காலம் கனி தமிழ்க்கனி" என்று எதையாவது சொல்லி அப்போதும் அன்னையின் ஆதரவைப்பெற கரகம் எடுத்து ஆடி இருப்பார்.

எந்த விசயத்திலும் இவரின் ஆதரவு அல்லது எதிர்ப்பு என்பது குடும்பநலம் சார்ந்த எதோ ஒரு காரணத்தில் இருக்கும். ஆட்சி, சொத்து, ஜெயலலிதா பயம் என்று எப்படியோ ஒரு காரணம்.

***

கலாம்

இவர் ஏதோ உலகைக்காக்க வந்த இரட்சகன்போல் இந்த நடுநிலைவியாதிகள் கொண்டாடுவதன் காரணம் "நோகாமல் நொங்கு சாப்பிடும்" வர்க்கத்தின் முகமூடியாக இவர் இருப்பதாலே தவிர‌ வேறு ஒரு காரணமும் இல்லை. ஆரம்ப காலங்களின் இவர்மீது ஒரு மரியாதை இருந்தது. ஆனால் இப்போது இவர்மீது எந்தவிதமான ஈடுபாடும் இல்லை.

இப்போது இவர் நிற்கவில்லை என்று சொல்லிவிட்டார். மம்தா என்ன செய்யப்போகிறாரோ?

***

குடியரசுதலைவர் பதவி
தொங்கு பாரளுமன்றம் வந்தால் நம்ம ஆள் ஒருத்தர் இந்தவீட்டில் இருக்கவோனும் என்ற ஒரே நோக்கத்தை தவிர அரசியல் கட்சிகள் இந்த பதவிக்கு எந்த முக்கியத்துவத்தையிம் தருவது இல்லை.

சூப்பர் ஃச்டாரு முதல் பவர் ஃச்டாரு வரை கான் முதல் டோனி வரை யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.

இப்போது இருக்கும் மேதகு பிரதீபா அவர்களே இருக்கலாம். இவரைவிட இந்தப்பதவியைப் புரிந்தவர்கள் யாரும் இல்லை. எந்தவித சவடால்களும் இல்லாமல் பதவியைப் புரிந்துகொண்டு காலத்தை ஓட்டியவர்.