Wednesday, May 31, 2006

நன்றி கலைஞரே நன்றி !!!

அனைத்து பள்ளிகளிலும் கட்டாயப் பாடமாக தமிழ்:

அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாய முதல் பாடமாக ஆக்கப்பட்டுள்ளது. 2வது பாடமாக ஆங்கிலமும், 3வது பாடமாக கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களும், 4வது பாடமாக பிற மொழிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒன்றாம் வகுப்பில் இருந்து 10ம் வகுப்பு வரை தமிழ் தமிழ் நாட்டில் கட்டாயப் பாடமாக்கப்படுகிறது.

இது Internatinal School/ CBSE/ICSE/ களுக்கும் சேர்த்தா?
L.K.G/U.K.G போன்ற சிறார் பள்ளி முதல் நடைமுறைப் படுத்தினால் நல்லது.


நிகர்நிலைப் பல்கலைக்கழகம்/தனியார் கல்லூரிகளில் 69 சதவீத இட ஒதுக்கீடு

பிற்படுத்தப்பட்டோர் : 30 %
மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர் : 20 %
பட்டியல் இனத்தோர் : 18 %
பழங்குடியினர் : 1 %

இதில் சிறுபான்மையினர் நடத்தும் நிறுவனங்கள் இடம் பெறாதது வருத்தமே. சிறுபான்மையினர் என்றாலும் அவர்கள் மதங்களிலும் (இனங்களிலும்) பிற்படுத்தப்பட்டோர்கள் உண்டு. அவர்களுக்கும் ஏதேனும் வழிமுறைகள் ஆராயப்பட வேண்டும்.

நன்றி கலைஞரே நன்றி !!!

****************


****************