Sunday, December 09, 2018

Rationalist க்கான அறம்:மதம் இல்லாவிட்டால் மிருகமாகிவிடுவீர்களா?

தங்களை பின்பற்றுபவர்கள் அதைப் பின்பற்ற காரணமாகச் சொல்வதும்,அறிவியலார்களை நோக்கி மிகவும் அதிகமாக கேட்படும் கேள்வியும் அறம் சார்ந்த ஒன்று. "மதங்களின் மீது நம்பிக்கை இல்லாத போது, எந்த அறத்தில் வாழ்க்கையை நடத்துவது? மதம் இல்லாத போது எது ஒழுக்கம்? எது நியாயம்? எது அறம்? என்று எப்படி உணர்வது?

இதன் மறுபக்கம் ஒன்று உள்ளது."எது நல்லது? எது கெட்டது? என்பதை மதம் சொல்கிறது. மதமற்ற நீங்கள், உங்களுக்கான அறத்தை எங்கிருந்து பெறுவீர்கள்?" என்பதும் உள்ளடக்கம். Rationalist யாரும் தினமும் கொள்ளையடித்துக் கொண்டும், வாரம் ஒருமுறை கொலை செய்துகொண்டும், வன்புணர்வு செய்துகொண்டும் இருப்பதில்லை.இருந்தாலும், அவஅறிவியலார்களுக்கு (those who don't question and/or seek for evidence ) அப்படி ஒரு கேள்வியுண்டு.

அவஅறிவியலார்களிடம் நான் கேட்கும் முதல் கேள்வி, "அறம் என்று எதைச் சொல்கிறீர்கள்? எந்த மதம் அறத்தைச் சொல்லித்தருகிறது?" என்பதே. ஏன் என்றால், அறம் என்பதற்கு "One size fits all " என்பது போன்ற விளக்கம் ஏதும் இல்லை. "அறம் என்பது personal" என்பதே என் நிலைப்பாடு. ஒரு இடத்தில் அறமாக இருக்கும் ஒரு செயல், மற்ற ஒரு இடத்தில் அறமாக இருக்காது. உதாரணம், பிகினி உடைகள். கடற்கரையில் பிகினி உடைகள் அணிவது அந்த இடம் சார்ந்த உடைக்கான அறம். அதே உடை, ஒரு திருவிழாவில் அறமாக இருக்காது. எந்த மதமும் எல்லா நிலப்பகுதி மக்களுக்கும், எல்லாக் காலத்துக்குமான அறங்களைச் சொல்லிவிடுவது இல்லை. சொல்லவும் முடியாது.மதப்புத்தகங்கள் எல்லாம் பல ஆயிரம் வருடங்களுக்கு முந்தியவை. அவைகள் living document கிடையாது.

மதத்திற்கும் அறத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை, அதைப் பின்பற்றும் மக்களின் செயல்களை வைத்துச் சொல்லலாம்.வீபூதி அணிந்தவன் ஒன்வேயில் போகிறான். அய்யப்பனுக்கு மாலை போட்டவன் ரோட்டில் மலம் கழிக்கிறான்.இயேசு படம் போட்ட டாலர் அணிந்தவன் கையூட்டு வாங்குகிறான்.இசுலாமியன் ஏமனில் குண்டு போடுகிறான். புத்தமதத்தவன் அடுத்த இனத்தை கொலை செய்கிறான்.

மதம், கடவுள் என்பது அரசியல். மேலும், இருக்கும் அரசியல்களில் கேடுகெட்ட அரசியல். அறம் என்பது அதில் இல்லை. இருப்பதாக நம்பப்படுகிறது. சிவிக்பண்புகளைக் கடைபிடிப்பவன் எந்த மதத்தில் இருந்தாலும் கடைபிடிப்பான்.

If you think somethings are good and useful, it is going to stay the way it is whether there is a god or not. It is going to stay because you try to sympathize with fellow human.

இதற்கு மதம் தேவை இல்லை.கடவுள் என்ற idea க்களும் தேவை இல்லை. மதத்தை practice செய்பவர்கள், நாளையே கடவுள் இல்லை என்பது தெரிய வந்து (just for this conversation) மதமற்றவராக மாறிவிட்டால், திருட்டு கொலை, கொள்ளை போன்றவைகளை செய்வீர்களா? இல்லை என்பீர்களேயானால் ஏன்?

Pain,happiness,joy,death etc going to stay irrespective of god (and or religion) and you simply try to avoid doing bad things to others because you know how it hurts to you. You no need some third person to tell this. It is fundamental nature of human.

அறம் என்பது தான் செய்யும் எந்த செயலையும் நியாயப்படுத்த் , சரியென்று சொல்லிக்கொள்ள வளைக்கப்படும் ஒரு open source சித்தாந்தம். அறம் என்பது தனக்குத் தேவையானதைச் செய்து கொண்டு, அதற்கான காரணங்களை தனக்குச் சாதகமாக (குற்றவுணர்வைத் தவிர்க்க) எதையாவது சொல்லிக்கொள்வது.

போர்வீரர்கள் செய்யும் கொலை எல்லாம் அறமாக ஆகிவிடுகிறது. அவர்களின் மதம் அன்பை போதிக்கிறது என்பது இங்கே பொய் அல்லவா? போர் என்ற பெயரில் இந்திய ராணுவத்தினர் பாகிஃச்தானியர்களைக் கொல்கிறார்கள். இசுரேல் இராணுவம் பாலஃச்தீனியர்களைக் கொல்கிறது. அல்லா குடியிருக்கும் சவூதி ஏமனில் இசுலாமியர்களைக் கொல்கிறது. இவர்கள் எல்லாம் அன்பே வடிவான எதோ ஒரு கடவுளையும், அந்த கடவுள் சொன்ன அறத்தையும் பின்பற்றுபர்கள். இங்கே அறம் என்பது என்ன?

தமிழகத்தில் "அகறி"கள் (non-meat eaters) பலர், முத்துமாலை (சிப்பிக் கொலை), பட்டுச்சேலை (பட்டுப்புழு கொலை), தோல் செருப்பு, தோல் பை, ( பல விலங்குகளின் உரிக்கப்பட்ட தோல்) ஏன் மிருதங்கத்தின் வார் என்று, கொன்ற மிருகங்களின் பயனாளிகளே இவர்கள். இவர்களின் தேவைகாரணமாகவும்தான் இந்த உயிர்கள் கொல்லப்படுகின்றன் என்பது உண்மை. ஆனால், இவர்கள் தங்களை "விலங்குகளைக் கொல்லா அறவாதிகள்" என்று சொல்லிக் கொள்வார்கள். தான் செய்வது தனக்கே தெரியாத மூடர்கள் இவர்கள். இவர்களுக்கான அறம் என்பது இந்த இடத்தில் ஏமாற்று.

அறம் என்பதற்கு பதில்,  "Empathizing with fellow human" என்று பாருங்கள். அதற்கு கடவுளோ மதமோ தேவை இல்லை. எந்த மதப்புத்தகங்களும் இல்லாத ஒரு உலகில்,ஒரு குழந்தை அழுகிறது. மனிதனாக உங்களுக்கு அழுகையும் வலியும் புரிவதால்,  உதவுவீர்கள் சரியா? Empathy இது மனிதனின் அடிப்படை. இதைச் செய்ய ஒரு புனிதப்புத்தகம் அவசியம் வேண்டும் என்றால், என்ன சொல்ல? Grow Up என்பதைத் த‌விர.