Sunday, March 01, 2020

வற்றிச் சாகும் ஆறு: நிறைவடைந்த பயணங்கள் என்பது நகைமுரண்

உடன் பயனித்தவர்களின் மரணங்கள் ஏற்படுத்தும் வெற்றிடம் ஒருவித பதட்டத்தை உண்டு செய்கிறது. எனக்கு மரணம் குறித்த பயம் ஏதும் இல்லை.அது ஒரு எழாத்தூக்கம் அவ்வளவே. ஆனால், மரணம் வழியாக என் பயணங்கள் நின்றுவிடுவது குறித்தான உண்மை, மனம் கனக்கச் செய்கிறது.

நிற்கும் வரை பயணிப்பேன்

உடன் பயணித்த தக்கைகளும் சக்கைகளும்
கரை ஒதுங்கிவிட்டன.

சவாரி செய்த ஓடங்கள் அவற்றுக்கான
இலக்கோடு நின்றுவிட்டன.

எரியப்பட்ட கற்கள் ஆழம் சென்று
அமைதியாய் தூங்கிவிட்டன.

தடுத்த அணைகளின் இடுக்குவழி
கசிந்தோடுகிறேன் நான்.

வற்றிவிடும் நீரென்றாலும்
குளத்தில் காய்ந்துவிட மனமில்லை.

சோவென்று தரையில் அடித்து விழுந்தோடுகிறேன்
கடலில் கலக்க விரும்பியல்ல.

வீழ்ச்சிகளில் நீர் வீழ்ச்சியே
ரசிக்கப்படுவதும் கொண்டாடப்படுவதும் பிறரால்.

கடலில் கலப்பதும் சாபம் என்பதால்.

நான் ஓடிய நிலையில்
வற்றி மறைய விரும்புகிறேன்.

நிற்கும் வரை பயணிப்பேன்

No comments:

Post a Comment