Tuesday, August 17, 2010

உமாசங்கர் ( இந்திய ஆட்சிப் பணித்துறை) Vs தமிழக அரசு வழக்கு பிரச்சனைகள் - வருத்தம், கண்டனம்

நேர்மையான முறையில் வேலை பார்க்கும் அரசு அலுவலர்களைக் காண்பது என்பது அரிதாகி வருகிறது.  நான் அறிந்தவரையில் உமாசங்கர் ஒரு நேர்மையான அதிகாரியாகவே தெரிகிறார். நிச்சயம் இவர் பாராட்டப்படாவிட்டாலும் பழிவாங்கப்படமால் இருக்கவேண்டும்.

அரசு அலுவலர்களின் பணி சிவில் பணிதான். வழக்குகள் இருக்கலாம் ஆனால் அடக்குமுறை கூடாது.

உமாசங்கர் I.A.S. இதுவரை அதிகாரியாக சென்றவிடமெல்லாம் நல்ல பல சேவைகளை மக்களுக்கு அளித்தவர் என்பது வெள்ளிடை மலை. புதிய திட்டங்கள், செயல் முறைகள் என்று தனக்கென ஒரு பாணியில் நற்பணி செய்து வந்த அவருக்கு இன்றைய அரசு அளித்துவரும் "தண்டனை" , அதற்குரிய காரணம் எல்லாமே என் போன்ற ஒரு குடிமகனுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.

அரசு இது போன்ற அதிகாரிகளுக்கு தண்டனைகளைத் தருவதற்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும், கண்டனத்தையும் இவ்விடுகை மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
http://umashankarias.wordpress.com

Complaint filed by C.Umashankar IAS., against the State of Tamil Nadu
http://dharumi.blogspot.com/2010/08/424-complaint-filed-by-cumashankar-ias.html

உமாசங்கர் ஐ.ஏ.எஸ் -ஒரு நினைவு குறிப்பு
http://kusumbuonly.blogspot.com/2010/07/httpwww.html

முயற்சி எடுத்த, வேண்டுகோள் வைத்த, பதிவுகள் இட்ட அனைத்து பதிவர்களுக்கும் நன்றி

.


அறுக்கப்பட்ட நெற்கதிர்களை ரோட்டில் போட்டு வாகனங்கள் உதவியுடன் நெல்மணிகளை மேலும் உதிர்த்து எடுக்க ரோட்டில் வைக்கோல் காயப்போடுவதை  தேவையான மாற்று ஏற்பாடுகள் செய்யாமல் தடாலடியாக தடை செய்தது தவிர இவரின்மீது குற்றச்சாட்டு என்று என்னளவில் இல்லை.  அப்படி மாற்று ஏற்பாடுகள் செய்துவிட்டுத்தான் தடை செய்தார் என்றால் அந்தக் குற்றச்சாட்டும் இல்லை. ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் வைத்து விவசாயம் பார்க்கும் விவசாயிகள் நெல் உலர்த்த களம் கிடைக்காமல் பட்ட அவதிகளை அறிந்ததால்  இவரின் இந்த தடாலடி முடிவிற்கு ஆதரவு இல்லை.