Friday, January 22, 2010

தூசி தட்டிய சில பதிவுகளும் தொக்கி நிற்கும் கேள்விகளும்

சு டர்: இன்னும் எத்தனை நாளைக்கு நம் உயிர்ச்சுடர்?    என்ற பதிவில் உஷா அவர்கள் சில கேள்விகளைக் கேட்டிருந்தார்.
//உங்களிடம் இரண்டு கேள்விகள்.
1- பெரியாரின் கடவுள் மறுப்பு இயக்கம் ஏன் தமிழகத்தில் தோற்றுப் போனது?
2- ஏழ்மை, வறுமை, மத, இன, சாதி பேதங்கள் இவையெல்லாம் உலகில் என்றாவது மறையுமா?

//
இது குறித்து பதில் எழுத வேண்டும்.
மேலும் காதல், தாலி, இந்து மதம், சனாதனம் குறித்தும்......

                                                                                                                                                             






Image courtesy  http://www.freefoto.com


தி னமும் வரும் வழிதான். ஆனால் இன்று அதிசியமாய் அந்தப்பூக்களைப் பார்க்க நேர்ந்தது. சாலையின் நடுவே உள்ள மணல் திட்டுகளிலும், சாலையின் ஓரத்தில் உள்ள புதர்களிலும் நீல நிறப்பூக்கள். அவை இன்றுதான் பூத்து இருக்கலாம். நாளையும் அது இருக்குமா என்று தெரியாது. வாகனத்தை மெதுவாக ஓட்டி , அதன் அழகை பார்க்கலாம் என்று நினைக்கையில் ,பின்னால் வந்தவரின் ஹாரன்.  திரும்பிக்கூட பார்க்காமல் அந்த பூக்களுக்கு விடை கொடுத்தேன். அவை நாளையும் இருக்குமா என்று தெரியாது.

வாழ்க்கை என்பது என்ன என்று தெரியாமலேயே வாழ்ந்து கொண்டு உள்ளேன்.

இப்படித்தான் நீண்ட தூர ஓட்டங்களின் போது நான் ஓடுவதும்,நிற்பதும் எனது கட்டுப்பாட்டில் இருந்தாலும், இலக்கை அடைய வேண்டும் என்ற வறட்டு குறிக்கோளில், சாலையோர மரங்களின் அடியில் நின்று போகும் சுகத்தை வலிய இழந்திருக்கிறேன்.

எல்லோரும்வென்று கீழிறங்கும் அருவியை பார்த்துக் கொண்டு இருந்த போது, இன்னும் சிறிது நேரத்தில் கீழே விழப்போவது தெரியாமல் அமைதியுடன் ,தொட்டுச்செல்லும் கரையைக் கடக்கும் நதியை பார்ப்பதில்தான் நேரம் செலவழித்தேன், நாயகராவிலும் ஒக்கனேகலிலும்.

பிடித்ததை தேர்ந்தெடுத்து வாழ்வது என்பது எல்லாக் கணங்களி்லும் வாய்ப்பதில்லை.

 ‍‍‍‍‍‍‍நாளை அந்தப் பூக்களை விசாரிக்க வேண்டும் "எப்படி இருக்கிறீர்கள்?" என்று

Tuesday, January 19, 2010

இஸ்லாம் ஆண்கள் ஏன் அரேபியா பாணி ஆடைகளை தமிழகத்தில் அணிவது இல்லை?


டை என்பது வாழும் இடத்தின் பருவநிலைகளுக்கு ஏற்ப இருக்கவேண்டிய ஒன்று. மேலும், அது அன்றாட வேலைகளை எளிதாகச்செய்யும் வண்ணம் இருக்க வேண்டும். நீச்சல் குள‌த்தில் பிகினி யில் இருப்பது சதாரண‌விசயம். ஆனால் பாவாடை போட்டுக்கொண்டு பாரசூட்டில் குதித்தால், அது விரசமாக பார்க்கப்படும்.  உடையின் வடிவமும் , தேவையின் அளவும்  ஒருவர் வாழும் இடம் , இயற்கைச் சூழ்நிலை போன்றவற்றால் மாறும் தன்மை கொண்டது.  மதம் சமூகம் விதிக்கும் கட்டளைகளுக்காக, பாலைவன உடையை ஆர்க்டிக்கில் அணிய முடியாது.
மதங்களின் கட்டுமானத்தில் , ஒவ்வொரு உடையின் பின்னாளும் உடல் சார்ந்த / சமூகம் சார்ந்த‌ அரசியல் மற்றும் வரலாறு உள்ளது. குழந்தைகளுக்கு செக்குமாடுபோல ஒரு பழக்கத்தையும் , பிறந்தவுடன் மதம் என்ற ஒரு சுமையையும்  ,  அந்த மதம் தோன்றிய இடத்தில் உள்ள புரியாத பழக்க வழக்கங்களை ஏற்றிவிட்டு , வளர்ந்தபின்  அவர்கள் அதைவிடமுடியாமல் கூச்சப்படும்போது அதை உரிமை,கண்ணியம்,நற்குடி   என்று நமக்கு நாமே சொல்லி , நம்மையும் சமூகத்தியும் ஏமாற்றிக் கொள்ளவேண்டாம்.

கண்ணியம் என்பது அணியும் மட்டும் உடையில் இல்லை. இடத்திற்கு தக்க உடை அணிவதும் , அந்த உடையில் எப்படி உடல் மொழியை வெளிப்படுத்துகிறோம் என்பதிலும்தான் உள்ளது. செவிலியர் பணியில் இருக்கும் பெண்கள் முழங்கால்வரை போடும் உடையில் இல்லாத கண்ணியம் , முழுக்க முழு சேலை கட்டிக் கொண்டு "வடுமாங்கா ஊறுது" என்று ஆடுவதில் இருக்கப்போவது இல்லை.  


ஆட்டம் தவறு என்று சொல்லவில்லை.  ஆட்டம், கொண்டாட்டங்களுக்கு எதிரானவனும் இல்லை நான். எந்த உடையிலும் உடல்மொழிதான் செய்தியைச் சொல்லும் என்று சொல்லவே இந்த உதாரணம்.  நிர்வாணமாக நின்று ஓவியத்திற்கு Model ஆக இருப்பதில் காமம் இல்லை. மார்பகத்தை கேன்சர் காரணங்களுக்காக பரிசோதனை செய்யும் மருத்துவரின் கையில் முழு மார்பகமும் இருந்தாலும், அவரின் உடல் மொழியிலோ அல்லது பரிசோதனைக்கு வந்த பெண்ணின் உடல் மொழியிலோ காமம் இருக்கப்போவது இல்லை.

குழந்தைகள் மீது மதம் மற்றும் உடைத் திணிப்பு
பெண்ணோ ஆணோ , வாழும் இடத்தில் உள்ள பருவ நிலைக்கு ஏற்ப ,பிறந்தது முதல் 18 வயது வரை எல்லா வகை ஆடைகளையும் அணிந்து வாழும் சுதந்திர சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். சேலை ,சுரிதார்,பேண்ட் சட்டை,ஸ்கர்ட் ‍ டாப்ஸ்,அரை டவுசர் டாப்ஸ்,பொது இடத்தில் குளிக்க‌ நீச்சல் உடை,இன்னபிற.மேலும், 18 வயது வரை குழந்தைகள் மதமற்று இருக்கட்டும். 18 வயது வரையில் அவர்கள் எல்லா மதத்தையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு தாருங்கள். அனைத்தையும் அறியட்டும்.  எதையும் தடை செய்யாதீர்கள்.

சேலைகட்டிக்கொண்டு முழங்காலுக்கு மேலே தொடை தெரிய தூக்கி ஆடுவது ஆபாசம். ஆனால் அரை டவுசர் போட்டுக்கொண்டு அதே தொடைகள் தெரிய டென்னிஸ் விளையாடுவதில்  எந்த ஆபாசமும் இல்லை.
ஆபாசமாக இருப்பதும் , கவர்ச்சியாக இருப்பதும் ஆடையில் இல்லை. உடல் மொழியில்தான் உள்ளது எனது கற்பிக்கப்படவேண்டும். How do you carry yourself and what signal you give to others  என்பதுதான் கண்ணியத்தை அளக்கும் அளவுகோல்.

இப்படிச் சுதந்திரத்தை கொடுத்து வளர்த்துவிட்டு,18 க்குப் பின்னர் அவர்கள் விரும்பி அணியும் உடையைத் தடை செய்யாதீர்கள். நிச்சயம் அவர்கள் நீச்சல் உடையுடன் ஷாப்பிங் போகப்போவது இல்லை. அல்லது சேலையுடன் நீச்சல்குளம் போகப்போவது இல்லை.  இதுதான் சுதந்திரம். இதற்கு பிறகு அவர்கள் அவர்களாக மதம் / உடை என்று எதையும் தேர்ந்தெடுப்பது அவர்களின் உரிமை. அதற்குப்பின் நீங்கள் அவர்களின் வாழ்க்கையில் உடை/மதம்/பழக்கத்தில் தலையிடவேண்டாம்.  வழிகாட்டல் இருக்காலாம், ஆனால் மதம் சார்ந்த அல்லது குடும்பம் சார்ந்த நிர்ப்பந்தமாக இருத்தல் கூடாது.

ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை கொண்டவர்கள் .ஒரே குடும்பத்தில் ஒரே பெற்றோரால் வளர்க்கப்படும் இரட்டைக் குழந்தைகள் வளர்ந்தபின் வெவ்வேறு பாதையை (உணவு ,உடை,பழக்கம்,கல்வி) தேர்ந்தெடுத்து வளரும் சாத்தியக் கூறுகள் அதிகம்.  எனவே, பெற்றோர்கள் " எங்களின் பழக்கம் இது , பின்னாளில் நீ  உனதை தேர்ந்தெடுத்துக்கொள் " என்ற விசயத்தை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். அது அவர்களின் மனத்தடைகளைக் களையும். பெற்றோர்கள் நல்ல மென்டோராக இருக்க வேண்டும் சர்வதியாரியாக இருக்கக்கூடாது.

உடல் உடை அரசியல்

ஆடை என்பது நாகரீக சமுதாயத்தில் உடலின் தேவைகளுக்காக அணிவது. அணியும் ஆடையைத் தாண்டி , வெளிப்படுத்தும் உடல் மொழியில்தான் கண்ணியம் உள்ளது. யாரும் எப்போதும் எல்லா உடல்க‌ளையும் புணரும் நோக்கிலேயே அலைவது இல்லை.  கணுக்கால் தெரிந்தவுடன்  காமம் வரும்படி (அதாவது காதல்) செய்துவைத்துள்ள நம் திரைப்படங்களும் , நம் நாட்டில் உள்ள பாலியல் வறட்சியும் நமது மணக்கோணல்களுக்கு ஒரு காரணம்.



 சேலை அல்லது பாவடை தாவணி அணியவைத்து, அந்த உடையிலேயே பெரும்பாலும் புணருதல்,மோகித்தல் வகையான‌ அசைவுகளை கொடுக்கும் நமது திரைப்படங்களைவிட, நீச்சல் குளத்தில் பிகினியுடன், நேரடியாக நம்மிடம் உரையாடும் ஒரு பெண்ணின் உடல் மொழி காமத்தை தூண்டுவது இல்லை. வளர்ந்த நாடுகளில் , நீச்சல் குளத்தில் எந்தப் பெண்ணும் அவர்கள் அணிந்துள்ள உடை குறித்து கவலை கொள்வது இல்லை. இயல்பாக நம்மிடம் பேசுவார்கள். அருகில் இருப்பார்கள். அமெரிக்க நீச்சல் குளங்களில் இதுவரை நடந்துள்ள வண்புணர்வு நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை , நமது நாட்டு கோவில் திருவிழாக்களிலும், பஸ்களிலும் உரசப்படும் பெண்களின் எண்ணிக்கையைவிடக் குறைவாக இருக்கும்.

முன் அறிமுகம் இல்லாத பெண்களுடன் உடல் ஆடை குறித்தான எனது அனுபவம்
நேரடியான பேச்சுக்கள் மனத்தடைகளைக் குறைக்கும். Life Guard இல்லாத நீச்சல் குளங்களில், பாதுகாப்பு காரணக்களுக்காக தனியாக‌ ஒருவர் மட்டும் இருக்க அனுமதியில்லை. மிகச்சாதரணமாக ,பிகினி உடையுடன் என்னிடம் வந்து "தனியாக நீச்சல் அடிக்கிறேன் , கொஞ்ச நேரம் எனக்காக இங்கேயே இருக்க முடியுமா" என்று ,என்றுமே பார்த்துப் பேசியிராத ஒரு அறிமுகம் இல்லாத, வெளிநாட்டுப்பெண் நேரிடையாக கேட்டதுண்டு.


டில்லியில் இருந்து ரிசிகேஷ்,ஹரித்துவார் போன்ற வரலாற்றுச் சிறப்பும் ,இயற்கையின் கொடையுமாக உள்ள இடங்களுக்கு பயணம் சென்றபோது , ஒரு இளம் தம்பதியினர் எனக்கு அறிமுகமானார்கள். அவர்கள் ஒருவயதில் குழந்தையுடன் வந்திருந்தார்கள். பஸ்பயண நேரமே பழக்கம்.

ஹரித்துவாரில் குளித்து முடித்தபின் பெரும்பாலும் கங்கைக் கரையிலேயே உடைமாற்றல் நடக்கும்.  ஆண்கள் நாங்கள் இருவரும் முதலில் குளித்துவிட்டோம்.  நான் மட்டும் அங்கேயே துண்டைக் கட்டி உடை மாற்றிவிட்டேன்.  நாங்கள் வந்தபின் குழந்தையை என்னிடம் கொடுத்துவிட்டு அந்தப் பெண்ணும் அவள் கணவனும் குளிக்கச் சென்றனர். ஆற்றின் அதிகவேகம் கருதி மனைவியின் பாதுகாப்புக்காக அந்தக் கணவன் இரண்டாவது முறைக் குளியல்.  இருவரும் குளித்து வந்தபின், அந்த கணவன் அங்கேயே துண்டைக் கட்டி உடை மாற்றிவிட்டார். அந்தப் பெண் இப்போது உடை மாற்றவேண்டும்.

அவர்கள் இருவரும் என்னையும் அழைத்து ஒரு சேலையை சுற்றிப்பிடிக்கச் சொன்னார்கள். நானும் , அவளது கணவரும் சேலையை வட்டமாகச் சுற்றிப்பிடித்து வெளிப்புறமாக நோக்கியிருந்தோம். குழந்தையை நடுவில் கிடத்திவிட்டு நாங்கள் பிடித்துக்கொண்ட 'சேலை வட்ட மறைப்புக்குள்' வேறு புதிய உடை மாற்றினாள் அந்தப் பெண்.  நான் அவர்களின் குடும்ப உறுப்பினர் கிடையாது. பஸ்நேரப் பழக்கம் மட்டுமே. இது இயல்பு மற்றும் நம்பிக்கை சார்ந்த நிலை.  நல்ல மனங்கள் உண்டு என்பதைச் சொல்லவே இது.
 மனிதனாக இருத்தலை அங்கீகரிக்க இதைவிட ஒரு அந்நியப் பெண்ணிடம் என்ன வேண்டும்?

தற்போது வழக்கத்தில் இருக்கும் பாலைவனப் பிரதேச மக்களின் உடைகள்

ஹிஜாப் (hijab ) அன்னும் வார்த்தை அரபியின் ஹஜபா ( hajaba) என்னும் வார்த்தையில் இருந்து வந்தது. ஹஜபா என்றால் பார்வையில் இருந்து உடல் கன பரிணாமங்களை (conceals a figure) மறைத்துக் கொள்வது என்ற பொருள்படும். ஹிஜாப் உடையில் பல இரகங்கள் உள்ளது.

பெண்களுக்கான உடைகள்

அபயா (Abaya) 


உடலை தளர்வான உடையால் போர்த்திக் கொள்வது போன்ற உடை. இந்த உடைக்குள் அணியும் பிரதான உடை குறித்த கட்டுப்பாடு இல்லை.பெண்கள் அவர்கள் விருப்பப்படு எந்த உடை வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம்.


அமிரா (Amira‌) 

 தலையை மூடும் வண்ணம் அணியும், கைக்குட்டை போன்ற சிறிய துணி.  இது அபயாவுடன் சேர்ந்து அணியப்படுவது உண்டு. இன்றைய‌ தினத்தில் இதை இஸ்லாம் மத அடையாளமாக மட்டும்  அணியும் பெண்களும் உள்ளார்கள்.


பாஸியா (Boshiya / Niqab/ Yashmak) 

அமிராவை விட நீளமானது. முகத்தை முற்றிலும் மறைத்து கண்களுக்கு மட்டும் இடைவெளிவிட்டு தலையைச் சுற்றிஅணியப்படும் உடை (veil) .


புர்கா (Burqa) 

பாஸியாவைவிட அதிக நீளம்கொண்டது. கைகளையும் மறைக்கும் வண்ணம் நீளமாக இருக்கும். பல வண்ணங்களில் இருக்கும். கண்ணிற்கு சன்னல் போன்ற அமைப்பு இருக்கும்.



சதார் (Chador) 


அபயா + புர்கா சேர்ந்த அமைப்பு.






ஆண்களுக்கான உடைகள்:

டெஜ்லாபா(Djellaba) / காலபியா(Galabiyah) :

பெண்களுக்கான அபயா போல இது ஆண்களுக்கானது. தளர்வான உடை. இதனுள் அணியும் பிரதான உடை எதுவாகவும் இருக்கலாம்.





குத்ரா (Ghutra) :

இது பெண்களின் அமிரா (Amira‌) போன்ற தலையை மூடி இருக்கும்





இஸ்லாம் மதத்தின் உடைக்கட்டுப்பாடு
மேலே சொன்னவையாவும் பாலைவனப்பிரதேசப் பழக்க வழக்கங்கள். இஸ்லாம் மதத்தில் இறைத்தூதர் என்று அறியப்படும் முகம்மது அவர்கள் பிறந்த காலமாக‌ நான் அறிவது: கி.பி 571 . அவருக்கு கடவுள் குரான் இறக்கியது கி.பி 610. வரலாறு தெரியாதவர்களால் மட்டுமே பர்தா (Burqa) இப்போது இஸ்லாம் மதத்தின் அடையாளமாக மட்டும் அறியப்படுகிறது. உண்மையில் இஸ்லாம் மதம் தோன்றுவதற்கு முன்னரே கி.மு 5000 காலத்தில், பெண்கள் முகத்தை மறைக்கும்விதமாக உடை அணிந்து உள்ளார்கள். Assyrian empire, காலத்திற்கு முன்னரே இந்த வகை உடைகள் இருந்துள்ளது. Byzantine Empire காலங்களில் / ரோமன் பாகனிசம் காலத்திலும் இந்த வகை உடைகள் பெண்களுக்கு இருந்துள்ளது. இதன் காலமும் முகமதுவிற்கு முன் கி.பி 200 காலத்தியது.

இந்த‌ மாதிரியான உடலை மூடிய போர்த்திய வண்ணம் இருக்கும் உடைகள் , பெரும்பாலும் பாலைவன மண் பிரதேசங்களின் மண் புயலில் இருந்து முகத்தை மறைக்கும் விதமாக ஆண்/பெண் இருபாலராலும் அணியப்பட்டது.  ஆண்களுக்கு இருக்கும் தாடி மீசை அமைப்பு இயற்கையாக மண்புயலில் இருந்து சுவாசத்தைக் காத்தாலும் , பெரும் புயல் காலங்களில் முகத்தை மறைத்தல் தேவைப்பட்டது.  மேலும் முகத்தை மூடுவது பெண்களுக்கு சமூகக்கட்டுப்பாடாகவும், உயர்குலப்பெண்கள் என்ற அடையாளமாகவும் இருந்துள்ளது.  சின்னச் சின்ன குழுக்களுக்கு இடையேயான சண்டைகளில், பருவப் பெண்களை அபகரித்துச் செல்வது அந்தக்கால வழக்கில் இருந்தது. அது போன்ற காலங்களில், பெண்கள் முகம், மற்றும் முழு உடலையும் போர்த்திய வண்ணம் இருந்தால், வயது வித்தியாசங்கள் சட்டெனத் தெரியாமல் போக வாய்ப்பு உள்ளதால் இதை ஒரு பாதுகாப்பு உணர்வுக்காகவும் அணிந்தனர்.

                                                                                                                                                                     

ஹதீஸ்கள்,பத்வாக்கள் எல்லாத்தையும் விட்டுவிட்டு ஒரிஜினல் குரானை மட்டும் பார்த்தால், 24:31 மற்றும் 24:32 வசனங்கள் உடை குறித்தான சில கட்டுப்பாடுகளைச் சொல்கிறது.

[24:31] قُل لِّـلْمُؤْمِنِيْنَ يَغُـضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْ‌ؕ ذٰلِكَ اَزْكٰى لَهُمْ‌ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا يَصْنَعُوْنَ‏
Say to the believing men that they restrain their eyes and guard their private parts. That is purer for them. Surely, Allah is well aware of what they do.

[24:32] وَقُل لِّلۡمُؤۡمِنَـٰتِ يَغۡضُضۡنَ مِنۡ أَبۡصَـٰرِهِنَّ وَيَحۡفَظۡنَ فُرُوجَهُنَّ وَلَا يُبۡدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنۡهَا‌ۖ وَلۡيَضۡرِبۡنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِہِنَّ‌ۖ وَلَا يُبۡدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوۡ ءَابَآٮِٕهِنَّ أَوۡ ءَابَآءِ بُعُولَتِهِنَّ أَوۡ أَبۡنَآٮِٕهِنَّ أَوۡ أَبۡنَآءِ بُعُولَتِهِنَّ أَوۡ إِخۡوَٲنِهِنَّ أَوۡ بَنِىٓ إِخۡوَٲنِهِنَّ أَوۡ بَنِىٓ أَخَوَٲتِهِنَّ أَوۡ نِسَآٮِٕهِنَّ أَوۡ مَا مَلَكَتۡ أَيۡمَـٰنُهُنَّ أَوِ ٱلتَّـٰبِعِينَ غَيۡرِ أُوْلِى ٱلۡإِرۡبَةِ مِنَ ٱلرِّجَالِ أَوِ ٱلطِّفۡلِ ٱلَّذِينَ لَمۡ يَظۡهَرُواْ عَلَىٰ عَوۡرَٲتِ ٱلنِّسَآءِ‌ۖ وَلَا يَضۡرِبۡنَ بِأَرۡجُلِهِنَّ لِيُعۡلَمَ مَا يُخۡفِينَ مِن زِينَتِهِنَّ‌ۚ وَتُوبُوٓاْ إِلَى ٱللَّهِ جَمِيعًا أَيُّهَ ٱلۡمُؤۡمِنُونَ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ

And say to the believing women that they restrain their eyes and guard their private parts, and that they disclose not their natural and artificial beauty except that which is apparent thereof, and that they draw their head-coverings over their bosoms, and that they disclose not their beauty save to their husbands, or to their fathers, or the fathers of their husbands or their sons or the sons of their husbands or their brothers, or the sons of their brothers, or the sons of their sisters, or their women, or what their right hands possess, or such of male attendants as have no sexual appetite, or young children who have no knowledge of the hidden parts of women. And they strike not their feet so that what they hide of their ornaments may become known. And turn ye to Allah all together, O believers, that you may succeed.



குடும்ப உறுப்பினர்கள் தவிர்த்து மற்றவர்களிடம், பெண்கள் வெறும் மேல் சட்டையுடன் (ஜாக்கெட்) இருக்கக்கூடாது. தலையில் போடும் துணியை எடுத்து (draw their head-coverings over their bosoms, and that they disclose not their beauty) மேல் சட்டைக்குமேல் மார்பகத்தில் போர்த்தும் படி ( மாராப்பு) அணிய வேண்டும். அவ்வளவுதான் கட்டளை.

தமிழகத்தில்/ இந்தியாவில் இஸ்லாம் உடை

குரான் அந்தக்கால அரபியா பாணி "அபாயா" உடையை உதாரணமாகக் கொண்டு இந்த விளக்கம் கொடுத்து உள்ளது.  தமிழகத்தில்/இந்தியாவில் இது சேலை முந்தானையின் மூலமே சுலபமாக முடிந்துவிடும் விசயம். அல்லது சுரிதார் துப்பட்டா அதே வேலையைச் செய்கிறது. எனது புரிதலின்படி  இந்தியாவில் வாழும் ஒரு இஸ்லாமியப் பெண், சேலை அல்லது சுரிதார் (துப்பட்டாவுடன்) அணிந்தாலே அவர் குரான் கட்டளைக்கு ஏற்ப உடை அணிந்தவர் ஆவார். அல்லது பேண்ட் சட்டை போட்டு அதனுடன் நீள ஸ்கார்ப்போட்டு கழுத்தில் சுற்றி மார்பகங்களின்மீது படரும் வண்ணம் அணிந்தாலே போதும்.

எதற்கு பாலைவனப் பிரதேச அபயா உடைப்பாணி கட்டாயம் என்று தெரியவில்லை. அதுவும் இஸ்லாமியர் ஆண்கள் யாருமே , பாலைவனப் பிரதேச டெஜ்லாபா(Djellaba) / காலபியா(Galabiyah) குத்ரா (Ghutra)  பாணி உடைகளை அணியாத போது ஏன் பெண்கள் மட்டும் இப்படி இருக்கிறார்கள் என்பது புரியவில்லை.

இஸ்லாம் என்ற மதம் பாலைவனத்தில் உருவாகியது என்ற ஒரே காரணத்திற்காக பாளையங்கோட்டை வாசிகளும் அந்த நடையுடைகளைப் பின்பற்றுவது என்பது , மதத்தையும் வாழும் இடத்தையும் வேறுபடுத்த தெரியாத நிலை.

இஸ்லாம் இந்த மண்ணில் இருந்து தோன்றியது என்ற ஒரே காரணத்திற்காக இந்த பாணி உடைகளை ,  எல்லா நாடுகளிலும் இஸ்லாமியப் பெண்கள் அணிந்து மதத்தைக் காக்கும் போது, இஸ்லாம் ஆண்கள் ஏன் அரேபியா பாணி ஆடைகளை தமிழகத்தில் அணிவது இல்லை?

பர்தாவை விடுங்கள், இஸ்லாம் பிறந்த இடம் பாலைவனம். பலைவன விலங்கு ஒட்டகம். அதனால் இஸ்லாம் கதைகளில் ஒட்டகமும், அவர்களின் பிரதான மாமிச உணவாக அதன் இறைச்சியும் பயன்பட்டு வந்தது. சவூதியில் ஒட்டகம் சாப்பிட்டார்கள் என்று , ஜாம்பஜாரிலும் குர்பானிக்கு ஒட்டகம் கொண்டுவந்து மதக்கடமை ஆற்றுவது நடந்து கொண்டுதான் இருக்கிறது.

மதம் சார்ந்த உடைகளும் மற்றவர்களும்
உடை என்பது உடலின் மீதான அரசியல். இருபாலருக்கும் அதில் பங்கு உண்டு. சமுதாயத்திற்கும் அதில் பங்கு உண்டு. தான் அணியும் ஒரு உடையை, தான் பெருமையாக நினைப்பதும் , அதே கருத்தைக் கொண்டவர்கள் அதை ஆதரிப்பதும் அவர்களின் உரிமை. மதக் காரணக்களுக்காக எந்தவிதமான உடையையும் அணியும் உரிமை யாருக்கும் உள்ளது.

முகத்தை மூடிய பெண்களுடன்/ஆண்களுடன் நான் உரையாடும் போது

மனிதனின் இயல்பான சந்திப்புகள், உரையாடல், நம்பிக்கை  என்று  பொதுவாக இதை அணுகலாம். நான் கலந்து கொள்ளும் ஒரு விழாவில் ஒரு பெண் பர்தாவுடன் முகத்தை மூடிக்கொண்டு கலந்துகொண்டால், பர்தா அணியும் அவர்கள் உரிமையை நான் மதித்தாலும், ஆண்களின் பார்வையில் இருந்து தப்ப‌ ,பாலியல் சார்ந்த பாதுகாப்பின்மை காரணக்களுக்காகவே அவள் இப்படி என் முன் இருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ளும்போது , ஆணாகிய நான் அதை எனக்கு ஏற்பட்ட அவமானமாய்த்தான் உணர்வேன்.   தன்னை பாதுகாக்க என்று எண்ணி , முகத்தை மறைத்து , என்னிடம்  பேசும்போது இந்த முகம் மறைத்தல் அடுத்த அடுத்த சந்திப்புகளில்கூட இது மாறாது என்று தெரியவரும்போது , உடல் அரசியல் மனிதனை எவ்வளவு கேவலப்படுத்துகிறது என்று  குறுகிப்போவேன் நான்.

பழகும் முன்னரே மதம் அல்லது அவர்களின் வாழும் சூழல் கற்பித்த முன் முடிவுகளுடன் ஒரு பெண் என்மீது கொண்ட நம்பிக்கியின்மை.  என்னளவில்  அது அவர் என்மீது பிரயோகிக்கும் சமுதாயப் புறக்கணிப்பு.
Tony Blair said wearing full face veils was a "mark of separation"
http://news.bbc.co.uk/1/hi/england/bradford/6066726.stm

உண்மையில் மதக்கடவுளும் மதம் சார்ந்த உடையும் பெண்களை ஆண்களின் கொடுமையில் இருந்து காக்கிறதா?

உண்மை என்னவென்றால் ,முகத்தைமறைத்தாலும் அல்லது உடல் முழுதும் மறைக்கும் அபயா பாணி உடை அணிந்தாலும் , மனித மிருகங்களிடம் இருந்து பெண்களுக்கு கடவுள் 100% பாதுகாப்பு கொடுக்கமுடியாது.


அமிலப் பெண்கள்
http://rishansharif.blogspot.com/2009/01/blog-post_08.html
(பெரிய அளவுபடங்கள்:இளகிய மனமுடையவர்கள் இப் பதிவைத் தவிர்க்கவும் )


இப்படங்களில் இருப்பவர்கள், அமிலத்தாக்குதலால் பாதிக்கப்பட்ட பெண்கள். இதைச் செய்தவர்கள் ஆண்கள். குடும்ப உறுப்பினர்கள், உறவுக்காரர்களே இப்படிச் செய்துள்ளார்கள்.  மதங்களாலும் அது சொல்லும் கடவுளாலும் மனிதமிருகங்களிடம் இருந்து ஆபத்து வரும்முன் பெண்களைக் காக்கவே முடியாது. பின்னே எதற்கு பெண்களுக்கு மதம் சார்ந்த உடைக்கட்டுப்பாடு?
  • ஒருவன்/ஒருத்தி  ஏதோ ஒரு மதத்தில் சேர்ந்து வாழலாம்/பொழுதைப் போக்கலாம்.
  • மதத்தில் சேர்ந்து, மதப்புத்தம படித்து, மதச்சட்டை அணிந்து, மதக் கடவுள் தொழுது, மதக் கடவுளுக்கும் தூதருக்கும் விசுவாசமாய் இருந்தால் மட்டும் அவன் நல்லவனாகிவிட முடியாது.
  • சாத்தானை இறைவனாலும் விரட்டமுடியாது.
  • ஆடையோ அல்லது எல்லாம் வல்ல இறைவனோ பெண்களை எக்காலத்திலும் காக்க முடியாது.
  • சமூகமும், சரியான புரிதலுமே பெண்களை மட்டும் அல்ல அனைவரையும் ஒரே இடத்தில் புரிதலுடன் வாழவைக்க முடியும்.

மதப்புத்தகத்தில் சொல்லாததைச் செய்யலாமா?  
பிரா கண்டுபிடிக்கப்பட்டது 1913 ல் by a New York socialite named Mary Phelps Jacob. மார்பகங்கள் வளர்ச்சியடையத் துவங்கியவுடன், பெண்களுக்கு இது ஒரு உடல் சார்ந்த உடை. இப்போது இது எல்லா மதப் பெண்களாலும் பயன்படுத்தப்படுகிறது. 1913 முன்னரே எழுதப்பட்ட மதப்புத்தகங்கள் இதைச் அணியச் சொல்லவில்லை. என்ன செய்யலாம்? இப்படி எல்லாம் ஒன்று கண்டுபிடிக்கப்படும் என்று அந்தக்கால மதத்தூதர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. அவர்களைச் சொல்லியும் குற்றம் இல்லை.

  • மதப்புத்தகம் சொல்லாததை காலத்திற்கு ஏற்ப ஏற்கும்போது,
  • மதப்புத்தகம் சொல்லியதை காலம்/ வாழும் சூழல் / பருவ நிலை/ கருதி மாற்றிக்கொள்ளலாம்.
  • மதப்புத்தகம் சொல்லிவிட்டது என்பதற்காக விடாமல் அணிவது  தனிப்பட்ட உரிமை.


France புதிய சட்டம் பரிசீலனை.

http://www.telegraph.co.uk/news/worldnews/europe/france/6946579/Women-who-wear-burkas-in-France-face-700-fine.html

* France passed a law in 2004 banning students and staff from wearing "conspicuous" religious symbols in schools – including veils – to defend secularism.
* Women who wear the burka in public will be fined £700 under laws being considered in France.
* MPs will vote on the proposal this month after a long impassioned debate over the merits of outlawing the burka and niqab.


 Tens of Thousands of Women Arrested Because of Their Clothing



பர்தா ஆவணப்படம்



Vijay TV:

விஜய் டிவீ பர்தா நிகழ்ச்சி விள‌ம்பரம்
(கடைசி 1:40 நிமிட கிளிப்பிங்ஸில் பர்தா நிகழ்ச்சியின் முன்னோட்டம் உள்ளது)




விஜய் டிவி அலுவலக முற்றுகை அறிவிப்பு
(இஸ்லாத்தில் உள்ள இஸ்லாம் பெண்கள், அதுவும் அவர்கள் அணியும் பர்தா பற்றி அவர்களே ஒரு டிவியில் பேச இஸ்லாம் சங்க பொறுப்பாள‌ர்களின் அனுமதி வேண்டும்)
http://www.tntj.net/?p=9594

விஜய் டிவி நிகழ்ச்சி வாபஸ்
http://www.tntj.net/?p=9622

விளக்கங்கள் :முற்றுகை இல்லை.
http://www.onlinepj.com/vimarsanangal/vijay_tv/


உடல் , உடை , மதம் அரசியல் விமர்சனங்கள்

சில தமிழ்ப்பதிவுகளின் சுட்டிகள்

தருமி சமூகம்
http://dharumi.blogspot.com/search/label/சமூகம்

வால்பையன் இறை நம்பிக்கை
http://valpaiyan.blogspot.com/search/label/இறை நம்பிக்கை

தெகா
http://thekkikattan.blogspot.com/search/label/சமூகம்

செங்கொடி
http://senkodi.wordpress.com/
http://ta.wordpress.com/tag/இஸ்லாம்-கற்பனைக்கோட்டை/

ஓசை செல்லா -லயலோ கல்லூரி லீனா மணிமேகலை உடை சர்ச்சை!
http://osaichella.blogspot.com/2007/12/blog-post_4567.html

I didn't post this video to teach you how to beat your wife. I posted because it is interesting how different cultures do things differently. -TheDavidPoeShow

Wife Beating  - The Rules
http://www.youtube.com/watch?v=mr-vt2DTCFw

http://www.youtube.com/watch?v=Wp3Eam5FX58

Sudan women face 20 lashes for 'indecent' clothes
http://www.google.com/hostednews/afp/article/ALeqM5jV5NUROkttGGjhb_YX78gm4KJXqg

SUDAN: Female journalist faces 40 lashes for choice of clothes
http://latimesblogs.latimes.com/babylonbeyond/2009/07/sudanese-journalist-taken-to-court-for-sensational-clothing.html

Trouser wearing Woman jailed in sudan
http://www.youtube.com/watch?v=bGq5UrDJdNA

Unbelievable gore violence Kurdish Girl Stoned to Death
http://www.youtube.com/watch?v=2rgSH0h45Eo

Picture and  other resources are from web and subject to respective site copyright:

http://en.wikipedia.org/wiki/Byzantine_dress
http://en.wikipedia.org/wiki/Assyria
http://lexicorient.com/e.o/assyria.htm
http://karenswhimsy.com/assyrian-empire.shtm
http://www.suppressedhistories.net/articles/veil.html
http://www.fashion-era.com/ancient_costume/assyrian_clothing_pictures_assur.htm
http://www.odysseyadventures.ca/articles/layard_assyria/layard_text.htm
http://middleeasternaffairs.suite101.com/article.cfm/the_burqa_controversy#ixzz0chDLtvqC
http://middleeasternaffairs.suite101.com/article.cfm/the_burqa_controversy
http://www.mysticalpublishing.com/garb_of_middleeast.asp