Saturday, January 28, 2006

இறுதியாக தமிழ்மணம் நண்பர்களுக்கு

நான் காசியிடம் கேள்வி கேட்டமைக்காக உண்மையான பெயரிலும் ,அனானியாகவும் , போலிப் பெயரிலும் வந்து காசி எது தேவை இல்லை என்று முயற்சி செய்கிறாரோ அதே வகைப் பின்னூட்டங்களை என் மீதும் கொட்டியமைக்கு நன்றி. பலரிடம் நேரில் பேச ஆசைதான் ஆனால் அவர்களின் பிளாக் ப்ரொஃபைல் மயில் முகவரி இல்லாமல் இருக்கிறது.
நான் தான் போலி டோண்டு என்று சொல்லி போலி டோண்டுவைத் திட்டுவதாக நினைத்து என்னைத் திட்டி அதே வகைப் பின்னூட்டம் வந்து இருக்கிறது. அது போல் நான் தான் அவர் ,இவர் என்று பல அனுமானங்கள். இருந்து விட்டுப் போகட்டும்.குஷ்பூ,பிராமண மற்றும் மதப் பதிவுகளுக்கு பிறகு ஆக்ரோசமான தாக்குதல்களை காசியிடம் கேள்வி கேட்ட எனது இந்தப் பதிவில் தான் பார்க்கிறேன்.

உங்களது பதிவுகளிலேயே என்னைப்பற்றி விமர்சனம் செய்து நேரிடையாக கல்வெட்டு இப்படி என்று பேர் சொல்லியே எழுதவும். எதற்கு கிசு கிசு பாணியில் பின்னூட்டம் இட வேண்டும்?

இலவச சேவையாக இருந்தாலும் பொதுவில் வந்துவிட்டபின் பதில் சொல்ல வேண்டியது இலவச சேவை செய்பவரின் கடமை. நான் மாதத்தில் பல முறை தெருவில் நின்று பலூன் செய்து பல சேவை நிறுனவங்களுக்கு நிதி திரட்டுபவன். இலவசமாகச் செய்தாலும் போலீஸ் முதல் பல இடங்களுக்கு நான் பதில் சொல்ல கடமைப் பட்டவன். அதுபோல் என்னிடம் வந்து இலவச சேவை பெறும் குழந்தைகளின் பெற்றோருக்கும் பதில் சொல்ல கடமைப் பட்டவன். ஓசியாத்தேனே வாங்கிற அப்பால போ என்று சொல்லமுடியாது.

செஞ்சிலுவைச் சங்கம் இலவசமாக பல உதவி செய்கிறது என்பதற்காக அது கேள்விக்கு அப்பாற்பட்ட ஒரு அமைப்பு கிடையாது. மக்களுடன் நேரடியாக களத்தில் இறங்கி சேவை செய்யும் பலருக்கு இது தெரிந்து இருக்கும்.

நான் என்ன செய்கிறேனோ அதைப் பற்றி கொஞ்சம் இங்கே எழுதுகிறேன் அவ்வளவே. தமிழ்மணத்தின் (அல்லது நிர்வாகியின்) பதிலில் எனக்குத் திருப்தி இல்லாததால் நான் என்னை தமிழ்மணத்தில் இருந்து விலக்கிக் கொண்டு விட்டேன்.

நான் எப்போதும் போல் கல்வெட்டு மற்றும் பலூன் பதிவில் எழுதுவேன்.

நான் காசியுடம் தொலைபேசியில் பேசியும், எனது நிலைமையயும் கூறிவிட்டேன். அவரும் அவரின் நிலையை கூறிவிட்டார்.

காசி யாத்திரை காட்சி முடிந்து விட்டது நண்பர்களே கலைந்து செல்லுங்கள். எதற்கும் நிறைய ஸ்மைலி போட்டுக் கொள்கிறேன். :-)))))))))

ரகு மற்றும் ஜோ உங்களுக்கிடையேயான விவாதங்களும் (நல்லவிதமாக இருந்தாலும்) முடிவில்லாமல் நீண்டு கொண்டே போவதால் நிறுத்தி வைக்கிறேன். மன்னிக்கவும். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.


****************


****************

2 comments:

  1. கல்வெட்டு,

    உரிய நேரத்தில் தங்களுக்கு பொங்கல் வாழ்த்து கூற இயலாமைக்கு வருந்துகிறேன். பொங்கல் திருநாளாகிய இந்த உழவர்கள் திருநாளை அனைத்து சமூகத்தவரும் கொண்டாட வலியுறுத்தி, பொங்கலுக்கு வெகுநாட்களுக்கு முன்பே தாங்கள் எழுதியிருந்த கட்டுரையைப் படித்திருந்தேன். அருமை. பல நாட்களாக இந்தப் பக்கம் வரவில்லையாகையால் நான் உங்கள் வாழ்த்தைப் பார்க்கமுடியவில்லை. மன்னிக்கவும்.

    ReplyDelete
  2. வணக்கம், உங்களுக்கு வந்த எதிர்ப்புகளைப் பற்றி அறிகையில் வருத்தமாகவுள்ளது. விரைவில் சகஜ நிலைக்குத் திரும்பி, உங்கள் இரு பதிவுகளிலும் இடுகைகளை வழங்குவீர்களென்று நம்புகிறேன். நன்றி.

    ReplyDelete