Wednesday, October 17, 2007

கடவுள் - கரண் தப்பார் - கனிமொழி

டவுள் இருக்கிறார் என்பதும் கடவுள் இல்லை என்பதும் இரண்டுவிதமான நம்பிக்கைகள். அறிவியலை ஒதுக்கிவிட்டு தட்டையாக நம்பிக்கை என்ற ரீதியில் மட்டும் ஆராய்ந்தால் , இதை இரண்டுவிதமான நம்பிக்கைகள் என்று சொல்லலாம்.

கடவுள் பற்றிய விமர்சனங்கள், எதிர் கருத்துக்கள் சொல்லப்படும் போதெல்லாம் கடவுளை நம்புபவர்களின் மனதை நோகடிக்கக்கூடாது என்ற கருத்துகள் அள்ளிவிடப்படும். "கடவுள் இருக்கிறார்" என்பது பலரின் நம்பிக்கை என்றால் அதே கடவுள் "இல்லை" என்பதும் சிலரின் நம்பிக்கையே.

அப்படி இருக்கையில் "கடவுள் இல்லை" எனறு நம்புபவர்களின் மனதை, "கடவுள் இருக்கிறார்", "பாலம் கட்டினார்" என்று சொல்லி நோகடிப்பது எந்த விதத்தில் சரி? இத்தைகைய செயல்கள் "இல்லை" என்பவர்களின் நம்பிக்கையை கேள்வி கேட்கும் செயல் அல்லவா? அதுவும் தவறுதானே? அவர்களுக்கும் வலிக்கும்தானே?

இருக்கிறார் என்பதும் நம்பிக்கை. இல்லை என்பதும் நம்பிக்கை. இரண்டையும் நம்பிக்கை சார்ந்த விசயங்களாக எடுத்துக் கொண்டால் ,யார் நம்பிக்கை உண்மை அல்லது உயர்ந்தது என்று எப்படி அளவிட முடியும்? இப்படி இருக்கையில், "இல்லை" என்று சொன்னால் மட்டும் ஒரு சாரருக்கு வலிக்கும் என்று அரசும் ஊடகங்களும் ஏன் புலம்புகின்றன?

"இருக்கு" என்று சொல்லி ஒருசாரர் அடிக்கும் கும்மி, மறுசாரருக்கு வலிக்கும் அல்லவா? இது ஏன் புரிந்து கொள்ளப்படவில்லை? இது எப்போதும் ஒருதலைப் பட்சமான புரிதலாக இருக்கிறது.

அதிக சதவீத மக்கள் "இருக்கு" என்று நம்புகிறார்கள் என்பதற்காக "இல்லை" என்று நம்பும் மக்களை கருத்துச் சொல்ல அனுமதிக்காமல் அல்லது அதன் பெயரில் பெரிய அரசியலையே கட்டமைக்க முயல்வது கேவலம்.

இரண்டுமே நம்பிக்கைகள். யாரும் யார் நம்பிக்கையையும் கேள்வி கேட்கக்கூடாது என்றால், அவரவர் அவரவர் கருத்தைச் சொல்லும் சுதந்திரம் இருக்க வேண்டும். கேள்வி கேட்பதால் மனது புண்படுகிறது என்றால் அது இரு நம்பிக்கையாளர்களுக்கும்தான்.

"இருக்கு" என்று நம்புபவர்களின் பேச்சுக்காளால் தினம் தினம் "இல்லை" என்று நம்புபவ்ர்களின் மனதும் புண்படுகிறது.


  • அவரவர் நம்பிக்கைகள் அவரவர்களுக்கு.
  • "இல்லை" என்று பேசவே கூடாது என்றால் "இருக்கு" என்றும் பேசக்கூடாது.

********
ரு முதல்வர் கடவுள் நம்பிக்கையாளர்களை புண்படுத்தும் வண்ணம் பேசலாமா? என்று கேட்கிறார் கரண் தப்பர். கரணின் கேள்வியே அபத்தமானது. ஸ்டிரியோடைப் என்று சொல்லப்படும் அதே "நம்பிக்கையாளர்கள் புண்படுவார்கள்" என்ற ரீதியில் கேட்கப்பட்ட தட்டையான கேள்விகள். அதே முதல்வர்தான் அந்த மாநிலத்தில் இருக்கும் மாற்று நம்பிக்கையாளர்களுக்கும் (கடவுள் இல்லை என்று நம்புபவர்களுக்கும்) முதல்வர்.

http://www.ibnlive.com/videos/50516/.html






கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ள இருள் நீக்கி சுப்பிரமணியில் இருந்து, காசுக்கு கலை சொல்லிக் கொடுக்கும் சிரி சிரி ரவி சங்கர பாபா முதல் , ஆன்மீக வாந்திகள் மைக் போட்டு கடவுள் இருக்கிறார் என்று கத்தும் போது , கடவுள் இல்லை என்று நம்பும் நம்பிக்கையாளர்களின் மனதும்தான் புண்படுகிறது.

தப்பாருக்கு அது புரியாது. இவர்களை உட்காரவைத்து கரண் தப்பார் "ஏன் நம்பிக்கையளர்களை (கடவுள் இல்லை என்று நம்பும்
நம்பிக்கையளர்கள்) படுத்துகிறீர்கள்" என்று கேட்பாரா?

**

கனிமொழி ???

நோ கமெண்ட்ஸ்.

அரசியலுக்கு இபோதுதான் வந்துள்ளார். இவரை அறிவாளி, சிந்தனையாளர், கவிதை சொல்லி என்று கொண்டாடியவர்களுக்கு வேண்டுமானால் இவரின் பேட்டி ஏமாற்றமாக இருக்கலாம். சராசரி அரசியல்வாதிக்கு உள்ள எல்லாத் தகுதிகளும் கொண்டவர் இவர் என்பதால் தனியாக விமர்சனங்கள் இப்போது தேவை இல்லை.


Picture courtesy
http://louisproyect.wordpress.com/category/religion/
1819 caricature by British George Cruikshank. Titled “The Radical’s Arms”, it depicts the infamous guillotine. “No God! No Religion! No King! No Constitution!” is written in the republican banner.