Wednesday, March 31, 2010

தம்மைத்தாமே நக்கிக்கொள்ளும் நாய்கள்‍ யார் யார்? - விளக்கம் : கதைபுக் ரைட்டர் ஜெய‌காந்தன்

  ஆ ரம்பகாலத்தில் இருந்தே தமிழ் பொழுதுபோக்கு கதைப்புத்தகம் எழுதுபவர்களை ,  மொழிபெயர்க்கப்பட்ட "பின்னங்கால் நவீன பிரியாணி"  பொட்டலம் விற்பவர்களை  பொழுது போக்கு வித்தைக்கரர்களாகவே பார்த்து வந்துள்ளேன்.

எந்தவித நேரடி அனுபவமும் இல்லாமல் மேசையில் உட்கார்ந்தபடி அமிஞ்சிக்கரையில் ஆரம்பித்து அமெரிக்கா தாண்டி அரேபியா வரை எதையாவது , எங்கிருந்தாவது எடுத்து உருவி ,படித்து கிழித்து குடுவையில் போட்டு குலுக்கி கலக்கி சமைத்து ...புத்தகமாகப் போட்டு "பிரிண்ட்டட் அண்ட் பைண்டட்" சந்தையில் விற்க அனுப்பவில்லை என்றால் ஜன்னி வந்துவிடும் என்ற அளவிற்கு தகவல் தொகுப்பை கதையாக கட்டுரையாக வெட்கமில்லாமல் படைப்பு என்று சொல்லி விற்கும் வல்லவர்கள்.

அதுவும் முற்போக்கு முகமூடி போட்டு சந்தில் சிந்துபாடும் கதைவியாபாரிகள் பார்க்க படு காமெடியாக இருப்பார்கள். அப்படி ஒருவர் கதைபுக் ரைட்டர்  ஜெய‌காந்தன் அவர்கள்.  இவர் கடைசியாக எழுதியது கர கர சங்கரா என்று நினைக்கிறேன்.

அவரின் அறிசீவிப் பேச்சை எனது சுய தகவலுக்காக இங்கே சேமித்து வைக்கிறேன்.



------------------------------------

23.4.05 அன்று சென்னையில் சமஸ்கிருத சேவாசமிதியில் ஜெயகாந்தனுக்கு நடத்திய பாராட்டுக் கூட்டத்தில் ஜெயகாந்தன் பேசியது:

"வர்ணவேறுபாடுகள் இருக்க வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும். ‘தமிழைவிட சமஸ்கிருதம் உயர்வானது.’
பிறமொழிக் கலப்பில்லாமல் தமிழில் எழுத வேண்டும், பேசவேண்டும் என்கிற தமிழறிஞர்கள், தம்மைத் தாமே நக்கிக் கொள்கிற நாய்கள்.
சமஸ்கிருதம் இங்கே ஆதரித்து வளர்க்கப்பட்டிருந்தால் ஆங்கிலம் இப்படி நுழைந்திருக்காது."
                                                                  - கதைபுக் ரைட்டர்  ஜெய‌காந்தன்

கல்வெட்டு:
சரிங்க கதைபுக் ரைட்டர்  ஜெய‌காந்தன் நீங்கள் மட்டும் சமஸ்கிரகத்தை மட்டும் சாப்பிட்டு நல்லா இருங்க. இன்னுமாயா உலகம் உங்கள நம்புது?


தகவல்கள் உதவி:

ஜெயகாந்தன் பத்மபூஷன் விருது
http://kattamanaku.blogspot.com/2009/01/blog-post_25.html

மறைவிலிருந்து வெளித்தோன்றும் மநுவாதிகள் -சு. வெங்கடேசன்
http://www.keetru.com/visai/aug05/su_venkatesan.php

ஜெயகாந்தனின் நாய் பேச்சின் பொழுது நெல்லை கண்ணன் அவர்கள் எழுதிய கடிதம்

அன்புள்ள அண்ணாச்சி,
வணக்கம்.

தமிழனாக, தமிழுக்காகவும், ஏழைகளுக்காகவும் வாழ்ந்து ஏழையாகவே மரணமடைந்த தோழர் ப. ஜீவானந்தம், தங்களைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு ‘‘தமிழைப்படி; தவறில்லாமல் எழுதப்படி என்று கற்றுத்தந்த தமிழால், முழுமையாக இலக்கணம் கற்று ஒரு முழுமையான தமிழ்ப்புலவனுக்குரிய தகுதி பெற்றேன்’’ என்று நீங்கள் எழுதியிருக்கின்றீர்கள்.

ஆனால் இன்றோ, ‘‘தமிழ் ஒன்றும் சொத்தல்ல. நான்தான் தமிழுக்குச் சொத்து’’ என்கிறீர்கள். எந்தத் தமிழில் எழுதினீர்களோ, எந்தத் தமிழ் உங்களுக்கு உணவு தந்ததோ, நீங்கள் அம்மணமாகத் திரிந்துவிடாமல் இருக்க ஆடை தந்ததோ, அந்தத்தமிழ் சொத்தில்லையா?

அத்தனை தமிழறிவையும் உங்களுக்குத்தந்த தோழர் ஜீவாவின் வாழ்க்கை போன்றதா உங்கள் வாழ்க்கை? அதனால்தான் ஏற்றத்தாழ்வுகளும் வர்ணபேதங்களும் இருந்தால்தான் வாழ்க்கை சுவைக்கும் என்கிறீர்கள்!

உங்கள் பிரளயம் அம்மாசிக்கிழவனும், விழுதுகள் ஓங்கூர் சாமியாரும், ரிஷிமூலம் ராஜாராமனும், பாரீஸக்குப் போ சாரங்கனும், ஒருவீடு, ஒரு மனிதன் ஒரு உலகம் துரைக்கண்ணுப்பிள்ளையும், ஹென்றிப்பிள்ளையும், யாருக்காக அழுதான் ஜோசப்பும், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் கல்யாணியும் அக்னிப்பிரவேசமும், சிலநேரங்களில் சில மனிதர்கள் கங்காவும் சுமைதாங்கியும், அந்தரங்கம் புனிதமானது அக்ரஹாரத்துப்பூனையும், ஒருவீடு பூட்டிக்கிடக்கிறதும் படித்து மேடைகள் தோறும் அவைகுறித்துப் பேசி வருகின்ற என்னால் தாங்கமுடியவில்லை.

நான் ‘சாதி’ பேசறதா நினைக்கக்கூடாது. ‘ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்களில்’ நீங்கள் எழுதினீர்கள்’, எதிர்காலத்தில் என் பெயருக்குப் பின்னால் ஏதேனும் பட்டம் போட்டுக் கொள்ள ஆசைப்பட்டால் என் ஜாதிப்பெயரான ‘பிள்ளைமார்’ என்ற பட்டத்தையே போட்டுக்கொள்வேன்’ என்று. அந்தப் பிள்ளைமார்களில் ஒருவரான மனோன்மணியம் ஆசிரியர் சுந்தரம்பிள்ளைதான்,

‘‘ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து
சிதையா உன் சீரிளமைத் திறம் வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே’’ என்கின்றார்.

வடலூர் இராமலிங்கம் பிள்ளையிடம் ஒரு துறவி ‘சமஸ்கிருதம்தான் எல்லா மொழிகட்கும் தாய்’ என்றாராம். வள்ளலாரோ ‘ஆமாம் ஆமாம்’ என்று சொல்லி, ‘தமிழ்தான் அனைத்து மொழிகளுக்கும் தந்தை மொழி’ என்றாராம்.

பிறமொழிகளைத் தூற்றுதல் கூடாது என்கின்ற தெளிவு எனக்கு உண்டு. ஆனால், எங்கேயும் வழக்கிலில்லாத மொழியன்றை தமிழைவிடச் சிறந்த மொழி என்று பேசுவதும், தமிழில் கலப்பின்றி பேசவேண்டும் _ எழுத வேண்டும் என்பவர்களை தங்களையே நக்கித்திரியும் நாய்கள் என்றும் சொல்லியிருக்கின்றீர்களே! ஆமாம். நாங்களெல்லாம் எங்கள் அன்னைத் தமிழுக்கு நன்றியுள்ள நாய்கள்தான்.

நீங்கள்..........?

தங்களின் ஞானத்தை பீடத்தில் அடகு வைத்துப் பெற்ற விருதிற்காகவா அன்னைத் தமிழைப் பழிப்பது? சாகித்ய அகாடமி விருது தந்த பொழுது ‘‘எனக்கு விருது தந்து சாகித்ய அகாடமி தன்னைப் பெருமைப் படுத்திக் கொண்டது’’ என்று பேசிய அந்த ஜெயகாந்தனா?  ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி எழுதிய கதையில், ஒருத்தி என்பதற்கு ஒருவள் என்று எழுதிய போது, இலக்கணத்தைப் படித்துவிட்டு, ‘‘இலக்கணத்தை மீறுங்கள். படிக்காமல் உடைக்காதீர்கள்’’ என்ற தாங்களா தமிழைப்பழிக்கின்றீர்கள்.

முன்பொருமுறை குமுதத்தில் ‘‘நான் முரண்பாடுகளில் மூட்டையாகிப்போனேன்’’ என்று எழுதினீர்கள். தங்களுக்கு வடமொழி நண்பர்கள் நிறைய உண்டு அறிவோம். அந்த வடமொழியும், வடமொழி நண்பர்களும் தங்களை வந்து சேர்ந்ததே _ அன்னைத் தமிழ் உங்களுக்கு அளித்த அளப்பரிய அறிவினாலும் எழுத்தாற்றலாலும்தான். இல்லையெனில் ஏது அந்த நட்பு?

நீங்களே எழுதியிருந்தீர்கள், ‘‘யாராவது வேண்டியவர்கள் உறவோ, நட்போ இறந்து போனால் அந்தச்சடலத்திற்கு மரியாதை செலுத்த வர வேண்டுமென்று அழைக்கக் கூடாது. ஏனென்றால் கம்பீரமான தோற்றத்தோடு பார்த்த அவர்களை பிணமாகப் பார்த்து அந்த உருவம் மனதில் பதிந்துவிடக் கூடாது’’ என்று.

எங்கள் நிலைமையைப் பாருங்கள். கம்பீரமாகப் பார்த்த உங்கள் உருவத்தை மறந்துபோக வேண்டிய சூழலை நீங்களே ஏற்படுத்தி விட்டீர்கள்.

பட்டினத்தார் சொல்வார் _ வயதானால் ‘‘செவி திமிர் வந்து, குழற மொழிந்து’’ என்று. திருநெல்வேலியில சாதாரணமா வயசானவங்க உளறுனா ‘‘போதங்கெட்டுப்போச்சு’’ம் பாங்க

உங்களுக்கு போதங்கெட்டுப்போச்சா?

உங்கள் தோழர் ஜீவாவும், ஞானத்தந்தை பாரதியும் நல்ல தமிழ் இருந்தும் வறுமையில்தான் செத்தார்கள்.

நீங்களோ வசதியாகி, வளமாகி, அதை வழங்கிய தமிழைப் பழிக்கின்றீர்கள்.

பொழச்சுப் போங்க அண்ணாச்சி!
அன்புடன்,
நெல்லை கண்ணன்...
கொறிக்க:
ஜெயகாந்தன் கோவை விழாவில் தகராறு
http://thoughtsintamil.blogspot.com/2005/06/blog-post_06.html

நன்றி கெட்ட ஜெயகாந்தன்

http://manikoondu.blogspot.com/2005/05/blog-post.html

ஜெயகாந்தனுக்குப் பொருத்தமான விருது ‘பத்ம பூஷன்’ மட்டுமல்ல ‘விபிஷணன்’ விருதும்தான்
http://mathimaran.wordpress.com/2009/01/29/


.......துணை வேந்தர் பொற்கோ "ஜெயகாந்தனின் பேச்சு பண்பற்றது, முறையற்றது என்று நாகரீகமாகச் சொல்லிவிட்டு பேச்சை முடித்துக் கொண்டார்"
http://njanapidam.blogspot.com/2005/04/blog-post.html

.

5 comments:

  1. பார்பனீயம் என்பது அறவே இல்லை என்னும் நண்பர்கள் ஜெயகாந்தனின் இந்த பேச்சுக்கு என்ன பதில் சொல்வார்கள்!?

    ReplyDelete
  2. //
    வால்பையன் said...
    பார்பனீயம் என்பது அறவே இல்லை என்னும் நண்பர்கள் ஜெயகாந்தனின் இந்த பேச்சுக்கு என்ன பதில் சொல்வார்கள்!?//

    என்ன சொல்வார்கள்?
    அவர் கதைபுத்தகம் நல்லா இருக்கும் என்பார்கள்.

    :-)))

    டிஸிக்கி:
    கடவுள் - பக்தி வட்டம்,
    நடிகர் ‍- இரசிக வட்டம் வரிசையில் கதபுக் - வாசக‌ வட்ட மக்களே
    இங்கே பேசுவது ஜெயகாந்தனின் கதை எழுதும் தொழில் பற்றியோ அல்லது அந்தக் கதையில் வரும் பாத்திரங்கள் "பேசும் ஸ்கிரிப்ட்" பற்றியோ அல்ல. கதபுக் ரைட்டர் அவர்களின் தனிப்பட்ட சமூகப்பார்வை குறித்தது.

    ****


    //"வர்ணவேறுபாடுகள் இருக்க வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும்.//
    - கதைபுக் ரைட்டர் ஜெய‌காந்தன்




    வர்ணாசிரம ஏற்றத்தாழ்வை வேண்டும் என்றும் சொல்லும் கதபொஸ்தக ரைட்டர் அவர்களே,

    நீங்க கொஞ்ச நாளைக்கு எடுப்பு கக்கூசில் போய் பீ அள்ளலாமே? கொஞ்சகாலம் சுடுகாட்டு வெட்டியாராக‌ வாழ்ந்து உங்க கொழுகைக்கு நியாயம் கற்பியுங்கள். வாழ்க்கையிலே ஒரு சுவராசியம் கிடைச்சாப்புல இருக்கும்.

    *************

    எல்லா சமுகத்திலும் , எல்லாக் காலங்களிலும் மனிதர்களுக்கு இடையேயான பொருளாதார ஏற்றத்தாழ்வு ஏதாவது ஒரு வகையில் இருக்கத்தான் செய்யும்.

    பிறப்பின் அடிப்படையில் எந்தக் கருமாந்திர ஏற்றத்தாழ்வையும் திணிக்காதீங்க* ****


    அதைதான் "பாசிஸ்ட்","ரேஸிஸ்ட்","ரேப்பிஸ்ட்" வரிசையில் "பார்ப்பனிஸ்ட்" என்பது.

    உலகுக்கு இந்து வருணாசிரத்தின் கொடை பார்ப்பனிசம்

    .

    ReplyDelete
  3. மயக்கமே வந்துடும் போலிருக்கு?????

    ReplyDelete
  4. ஜெயகாந்தன் மூளைகெட்டுப்போய் ரொம்ப நாளாச்சு..

    ReplyDelete
  5. நீங்க கொஞ்ச நாளைக்கு எடுப்பு கக்கூசில் போய் பீ அள்ளலாமே? கொஞ்சகாலம் சுடுகாட்டு வெட்டியாராக‌ வாழ்ந்து உங்க கொழுகைக்கு நியாயம் கற்பியுங்கள். வாழ்க்கையிலே ஒரு சுவராசியம் கிடைச்சாப்புல இருக்கும். //

    வர்ணவேறுபாடுகள் இருக்க வேண்டும் என்பவர்களுக்கான சரியான பதில்தான்

    ReplyDelete