Tuesday, April 27, 2010

ஈராக், கம்யூனசம் கலந்த‌ யோனிக் கவிதைக்கு நாங்கள்தான் அத்தாரிட்டி.

திவுலகில் யோனி என்ற சொல் கலந்து  பலர் எழுதியுள்ளார்கள். அதைத்தாண்டி தற்போது அரசியல்வாதியாய் இருக்கும் சல்மா  மற்றும் நானறியாத‌ பலர் இருக்கலாம். 

இன்னும் பின்னே சென்றால் ஆண்டாள் அப்புறம் சவுந்தர்யலகிரி .

விருந்து,மருதம், சரோஜாதேவி பத்திரிக்கைகளும் உண்டு.



நா ப்கின் இல்லாமல் , யோனிக்கு சுருட்டி வைக்கக்கூடத் துண்டுத் துணியில்லாமல் இருக்கும் மக்களுக்கு.....
They don't use ANYTHING during menses ..felt criminal
http://kalvetu.blogspot.com/2007/03/they-dont-use-anything-during-menses.html
..... இளக்கியவியாதிகளின் யோனி எழுத்துப்புண்ணாக்கு ஒரு வெங்காயமும் செய்யப்போவது இல்லை.  எதையோ எழுதி  எண்டரைத் தட்டி "கவி இன்பம்" ,  "வாசிப்பு அனுபவம்" ,  "சுய இன்பம்" என்று 10 இளக்கிய வியாதிகளுடன்,   பேப்பரில் அச்சடித்து பைண்டு செய்யப்பட்ட பொஸ்தகமாக விற்க மட்டும் உதவலாம். புரட்சியும் வரப்போவது இல்லை புண்ணாக்கும் வரப்போவது இல்லை.

இவர்களால் 10 இலக்கியப் புண்ணாக்குகளைத் தாண்டி யாருக்கும் பயன் இல்லை, பாதிப்பும் இல்லை.  கேட்டால் ,  "இலக்கியம் என்றால் மக்களுக்கு ஏதாவது செய்யத்தான் வேண்டுமா? "  என்று பக்கவாட்டு நவீனம் பேசுவார்கள். மக்களுக்கான ஒன்று என்றால் அது மக்களுக்கான ஒன்றைப் பேச வேண்டும். எளக்கிய இன்பமும், வாசிப்பு இன்பமும் பெறும் ஒரு சுய இன்பக் கூட்டத்திற்கு மட்டும் என்றால் நீங்கள் சொல்வது சரி. எதையாவது பிதற்றலாம்.

ஆடு புழுக்கை போடுவதும் மாடு சாணி போடுவதும் இயல்பானது. இவர்கள் எழுதுவது எனக்குப் பிரயோசனம் இல்லாதது என்றாலும் அதுதான் அவர்கள். அப்படி எழுதும் சுதந்திரம் யாருக்கும் உண்டு. அடிப்படையாக ஒரே விதி, வாழும் நாட்டின் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு  இல்லையென்றால் சங்குதான்.  சட்டங்கள் இல்லாவிட்டாலும் கலாச்சாரக் காவலர்கள் சுயமாக சொம்பெடுத்து வருவார்கள். அவர்களை எதிர்கொள்ளத் துணிவு வேண்டும்.

ஆனால், கலாச்சாரக் காவலராக இல்லாமல் போராட்டக்காரராக அறியப்பட்ட பதிவர் வினவு (வினவு என்ற பதிவு எழுதுபவர்கள் ) மற்றும் அங்கு வரும் பின்னூட்டங்கள் பதிவுலகப் போலீஸ் போலச் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
அய்யனாரின் பதிவில்
//வினவு said...
இங்கே நாங்கள் ஈராக் மக்களின் பிரதிநிதிகள் என்பதை இலக்கிய முட்டாள் அய்யனார் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை பணிவாக இல்லை உத்தரவாக சொல்கிறோம். //

யாருக்கு யார் உத்தரவிடுகிறார்கள்?

     ஈராக்காகவே இருந்தாலும் அவரவருக்கு மாற்றுக் கருத்து இருக்கும்.
     மாற்றுக்கருத்து இருந்தால் .... ?

அது என்ன உத்தரவு?
    பாட்டாளி ,வர்க்கம் பாடப்புத்தகத்தில் உத்தரவு என்பது எந்த அர்த்தம்?

நீங்கள் எந்த ஈராக் மக்களின் பிரதிநிதிகள்?
     சியா பிரிவிற்கா அல்லது ஷன்னி பிரிவிற்கா?

ஈராக் போர் என்பதே பெட்ரோல் சம்பந்தப்பட்டது.  அது தனி அரசியல். அதற்காக மாற்றுக் கருத்தே (உங்கள் பார்வையில் அது கேவலாமனதாக இருந்தாலும் ) இருக்கக்கூடாதா?  இராமன் என்ற மற்றவர்கள் புனிதமாக நம்பும் ஒரு உருவத்தை செருப்பால் அடிக்கக்கூடியவர் பெரியார். ஸ்டாலின் அல்லது மாவோ பற்றி எழுதினால் கோவம் வருவது, அவர்களின் "பிம்பம்" குலைக்கப்படுவதாலா? அல்லது அவர்களின் "இசங்கள்" சிதைக்கப்படுவதாலா? இசங்கள் சிதைக்கப்படுவதால் என்றால் , கொள்கை பற்றிக் கேட்காமல் ஏன் யோனி பற்றியே பொழுதுபோகிறது?

மக்கள் கலை இலக்கிய கழகம் (ம.க.இ.க) செய்துவரும் அல்லது முன்னெடுத்துவரும் சிதம்பரம் , இரட்டக்குவளைப் பிரச்சனைகள் போன்ற நாம் வாழும் சூழலில் களை எடுக்கப்பட வேண்டிய சமூகப்பிரச்சனைகள் பற்றிய புரிதலும் அதற்கான ஆதரவும் உண்டு. ஆனால் தலைவர்களைத் தொழுவது என்பது மதம் போன்றது என்பதனாலும், அதன் வழி வரும் அவர்களின் ஆக்ரோச அடக்குமுறைப் பேச்சுக்கள் பதிவுலகச் சுதந்திரத்தை கெடுக்கும் என்பதனாலும் கண்டிக்கப்பட வேண்டியது.

1. மக்கள் கலை இலக்கிய கழகம் (ம.க.இ.க) தின் அடிப்படைக் கொள்கைகள் என்ன?  ( தமிழ் மக்களின் கலை மற்றும் இலக்கியங்களை முன்னேற்ற / தொகுக்க/ காக்க / புதியவை செய்ய/ அல்லது கட்டுப்பாடு விதிக்க ??? )

2. ம.க.இ.க கம்யூனிச சார்பானதா?

3. ஆம் என்றால் , தமிழ் நாட்டில் தோன்றிய இந்த தமிழ் மக்கள் கலை இலக்கிய அமைப்புற்கும் கம்யூனசித்திற்கும் என்ன தொடர்பு? ( கம்யூனச அரசியல் சார்ந்த கலை இலக்கியதிற்கு மட்டும் ஆன அமைப்பா? அல்லது கம்யூனசக் கொள்கைகளை தமிழ் மக்களின் கலை இலக்கியம் வழியாக பரப்பவா )

3. புண்ணாக்கு கவிதைகளில் ,கதைகளில் ,கட்டுரைகளில்  "யோனி" என்று யாராவது எழுதினால் , ம.க.இ.க விடம் விளக்கவேண்டுமா? இவர்கள் என்ன கலை இலக்கிய யோனி அத்தாரிட்டியா?  ( ம.க.இ.க விடம்முன் அனுமதி அல்லது வீடுதேடி வந்து விளக்கம் கேட்டால் குடும்பம், பக்கத்துவீடு ஆரம்பித்து போலீஸ் , கோர்ட் வரை செல்ல ஆயத்தங்களுடன் "குஸ்பூ ‍ Vs திருமா/இராமதாஸ்"  போல இருக்க வேண்டுமா? )

4. அல்லது ஈராக், கம்யூனசிம் ,கம்யூனசித் தலைவர்கள் சம்பந்தமான  வார்த்தைகள் கலந்து வந்தால் மட்டும் விளக்க வேண்டுமா?


மன்மோகன் சிங்கை "கூட்டிக்கொடுக்கும் மாமா" என்று இவர்கள் சொல்வது போல (http://truetamilans.blogspot.com/2010/04/blog-post_17.html  ) மற்றவர்களும் மாவோ அல்லது யாரோ ஒருவரை விமர்சிக்கக்கூடும்.

வசைச்சொல் தாண்டி ஏன் அந்த வசைச் சொல் பயன்படுத்தப்படுகிறது? அந்த அளவிற்கு கொள்கைகளில் என்ன கேள்வி என்று கேட்காமல், யோனி என்ற வார்த்தையை வைத்து மல்லுக்கட்டுவது, நீங்களும் "கம்யூனச சாமிக்கூட்டம்" போல மனிதர்களை புனிதர்களாக்கிவிடும் வேலையை உங்களை அறியாமல் செய்கிறீர்கள்.   புனித பிம்பங்களின் மீதான காதலின் அடுத்த கட்டமாக "அடக்குமுறை" , "சர்வதிகாரம்" நோக்கிய திசையில் சரியாகவே அடியெடுத்து வைக்கிறீர்கள்.



அய்யனார் ‍- யோனி நிலம்
http://www.ayyanaarv.com/2010/02/blog-post_16.html

லீனா -இரண்டு கவிதைகள்
http://ulaginazhagiyamuthalpenn.blogspot.com/2010/01/blog-post.html


தமிழச்சி - யோனிகளை ஏன் வெடி வைத்து சிதறடிக்க வேண்டும்?
http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=1884

ஓசை செல்லா- பெண்ணியம், ஆணியம், முலைகள், குட்டி ரேவதி

http://osaichella.blogspot.com/2009/03/blog-post_504.html


தகவலுக்கு:
நாரயணமூர்த்தி மன்மோகன்சிங் புனிதர்களா?
http://kalvetu.blogspot.com/2006/10/blog-post_09.html

மன்மோகன் சிங்கின் காமெடி..ஏம்பா லூசாப்பா நாங்க?
http://kalvetu.blogspot.com/2009/04/blog-post.html

கம்யூனிசம்-காந்தியம்-நாடி ஜோதிடம் மற்றும் பக்கவாட்டு நவீனத்துவம்
http://kalvetu.blogspot.com/2007/10/blog-post_26.html

India Inc Stinks-SEZ ல் செக்ஸ் அனுமதி உண்டா ?
http://kalvetu.blogspot.com/2007/02/india-inc-stinks-sez.html


Picture:
http://www.ezakwantu.com

3 comments:

  1. அன்பான நண்பர் திரு கல்வெட்டு,

    இன்றைக்குதான் நீங்கள் திரு வினவு அவர்களின் தளத்தில் எழுதிய பின்னூட்டங்களை பார்த்தேன். கூடவே உங்களுக்கு அவர்கள் செய்த அர்ச்சனைகளையும்
    பார்த்தேன்! முதலில் ஏன் என்று புரிவில்லை! உங்களின் தளத்திற்கு வந்தபிறகு புரிகிறது!

    சில கேள்விகளை வைத்திருக்கிறீர்கள்! அதற்க்கு நான் பதில் தருகிறேன்!

    // 1. மக்கள் கலை இலக்கிய கழகம் (ம.க.இ.க) தின் அடிப்படைக் கொள்கைகள் என்ன?
    ஒரே கொள்கை - வன்முறை மற்றும் சர்வாதிகார வெறி பிடித்த, பெரும் கொலைகள் செய்த மாவோ மற்றும் ஸ்டாலின் செய்தது போன்ற "புரட்சிகர ஆட்சியை" இந்தியாவில் அமைப்பது!! சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் "மாவோ கடவுளை இந்தியாவில் காட்டும் கழகம்"

    //2. ம.க.இ.க கம்யூனிச சார்பானதா? //
    மாவோ கம்யூனிச சார்பானது!

    //3. ஆம் என்றால் , தமிழ் நாட்டில் தோன்றிய இந்த தமிழ் மக்கள் கலை இலக்கிய அமைப்புற்கும் கம்யூனசித்திற்கும் என்ன தொடர்பு? //
    ஒரு தொடர்பும் இல்லை! இந்திய தேசிய எதிரியான மாவோவின் பெயரை வைத்துக்கொண்டால் போலிசு சும்மா உடாதே என்பதற்காக, தங்களின் ஜனநாயக தன்மை இல்லாத சார்வதிகார வழிமுறைகளை மறைக்க, கலை இலக்கியம் என்று பித்தலாட்ட பெயர் ஒன்றை அவர்களாகவே சூட்டிக்கொண்டார்கள்!!
    நம்ம mainstream கம்யூனிஸ்ட்கள் நடத்தும் "ஜனநாயக வாலிபர் மற்றும் மாதர் சங்கம்" போலதான் இதுவும்!

    //3. புண்ணாக்கு கவிதைகளில் ,கதைகளில் ,கட்டுரைகளில் "யோனி" என்று யாராவது எழுதினால் , ம.க.இ.க விடம் விளக்கவேண்டுமா? இவர்கள் என்ன கலை இலக்கிய யோனி அத்தாரிட்டியா? ( ம.க.இ.க விடம்முன் அனுமதி அல்லது வீடுதேடி வந்து விளக்கம் கேட்டால் குடும்பம், பக்கத்துவீடு ஆரம்பித்து போலீஸ் , கோர்ட் வரை செல்ல ஆயத்தங்களுடன் "குஸ்பூ ‍ Vs திருமா/இராமதாஸ்" போல இருக்க வேண்டுமா? )//
    ஆமாம். ஸ்ரீ ராமா செனே குண்டர்கள் செய்தால் ஜெட்டி அனுப்பி கிண்டல் செய்யலாம். நம்ம மாவோ தொண்டர்கள் செய்தால் இதுதான் புரட்சி என்று பாட்டு பாடலாம்! கலாச்சார கூத்தாடிகள் என்று வரும்பொழுது, அது காவி, இது செவப்பு! அவ்வளவுதான்! ரெண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்!

    //4. அல்லது ஈராக், கம்யூனசிம் ,கம்யூனசித் தலைவர்கள் சம்பந்தமான வார்த்தைகள் கலந்து வந்தால் மட்டும் விளக்க வேண்டுமா? //
    ஆமாம். இவர்கள்தான் இப்பொழுது உலகத்தில் எஞ்சியிருக்கும் ஒரே கம்யூனிச அத்தாரிட்டி!! அதான் இவர்களுக்கு விளக்க வேண்டும்! அது ஏனென்றால், உலகம் முழுவதிலும் கம்யூனிசம் பெயரால் இவர்கள் செய்த வண்டவாளங்கள், கொடுமைகள் வெளியே வந்து, ஏறக்குறைய எல்லா இடங்களிலிருந்தும் அடித்து விரட்டப்பட்டு, கியூபா, வட கொரியா, நேபால் மற்றும் இந்திய என்ற சில இடங்களில் மட்டும் உட்கார்ந்துகொண்டும் உலக புரட்சி பற்றி உளறிக்கொண்டிருக்கும் இவர்களை கேட்காமல் கம்முநிசம் பற்றி யாரிடம்தான் கேட்கவேண்டும்! வேற ஆள் இல்லையே! அழிந்து போன அக்காடியன் நாகரீகம் பற்றி தெரிந்தவர்கள் உலகில் சுமார் ஒரு நூறு பேருக்கு மேல இருக்கமாட்டார்கள்! அவர்களிடம் தான் அதைப்பற்றி கேட்கவேண்டும்! அதே போலதான் இதுவும்!

    நன்றி

    ReplyDelete
  2. நோ,
    இசங்கள் வேதமாகவும் தலைவர்கள் கடவுளாகவும் பார்க்கப்படும்போது எல்லாம் மதமாக மாறும்.

    :-((((

    ReplyDelete
  3. ஆடு புழுக்கை போடுவதும் மாடு சாணி போடுவதும் இயல்பானது. இவர்கள் எழுதுவது எனக்குப் பிரயோசனம் இல்லாதது ..........

    இந்த வரிகள் மிகவும் கவர்ந்தது. ஒரே ஒரு கேள்வி?

    பிரச்சனைக்குள் நான் வர விரும்பவில்லை. காரணம் தனிப்பட்ட அபிப்ராயங்களை மதிப்பவன் என்பது போல தரங்கெட்ட வார்த்தைகளை எந்த கல்வி கற்றுக் கொடுத்தது?

    உடுத்துவது, உண்பது, பேசுவது, பழகுவது என்று எல்லாமே பார்த்து பார்த்து பக்குவமாக செய்து கொள்ளும் மூளை இது போன்ற சமயங்களில் தன்னிலை மறந்து விடுமா?

    போக்குவரத்து காவலர் இல்லாவிட்டால் தறிகெட்ட தனமாக ஓட்டிப்பழகியவர் அவரே எதிரே நிற்கும் போது இயல்பாக வந்து நிற்கும் அமைதியான கீழ்படிதல் எப்படி வருகிறது?

    ஒழுங்கே கேள்விக்குறியாக கேலிக்குறியாக இருக்கும் இந்த சமூகத்திற்கு கற்ற கல்வி தந்த பயன் என்ன?

    ReplyDelete