Wednesday, December 19, 2012

இட ஒதுக்கீடு பொருளாதர சமநிலைக்கல்ல

ட ஒதுக்கீடு பொருளாதர சமநிலைக்கல்ல.
சமூகச் சமநிலையை இப்படியாவது கொண்டுவரமுடியும் என்று எண்ணி கொண்டுவரப்பட்ட ஒன்று..

சாதி என்ற ஒன்றே பிறப்பால் சீதனம்போல் கொடுக்கப்படுகிறது. அதை வேண்டாம் என்று சொல்வதும் பிராக்டிஸ் செய்யாமல் இருப்பதும் அடையாளங்களை கங்கையில் முழுகி கரைத்து மனிதனாக இருப்பதும் அவரவர் விருப்பம்.

< - - - - அய்யர், அய்யங்கர், தேவர் ,மறவர் ,பிள்ளை, கள்ளர், பறையர் ,பள்ளர்கள் ,சக்கிலியர்கள்  - - - > R சாதி அடுக்கு என்று கொண்டால்....

பார்ப்பனியம் என்ற ஒன்று இந்த எல்லா சாதிகளுக்கு இடையிலும் உள்ளது என்பதே எனது நிலை.

அதாவது, இடது புறம் (L)உள்ளவர்களில் ஆரம்பித்து ஒவ்வொருவரும் அவருக்கு அடுத்த (R) வல‌து புறத்தில் உள்ள ஒரு அடுக்கை கீழ் நிலையில்தான் பார்க்கிறார். அப்படிப் பார்க்கும்போதே அவர்களும் பார்ப்பனீயம் பிராக்டிஸ் செய்பவர்கள் ஆகிறார்கள்.

என்ன இதன் வீரியம் இடமிருந்து வலமாக மாறிச் செல்லும்.

இடப்புறம் ஒருவித கண்ணுக்குத் தெரியாத விலக்கல்கள் இருக்கும் நுட்பமான சீண்டல்கள் (அசைவத்திற்கு வீடு இல்லை என்பது போல) வலம் செல்லச்செல்ல அடிதடி என்று வரும்.

முதல்வரிசையில் உள்ளவர்கள் ஆணிவேராக அதைப் பற்றி இருப்பதால் அது வளருகிறது என்று நான் நம்புகிறேன்.

தலை முதல் வால் வரை ஒரே பார்ப்பனிய இரத்தம் என்றாலும் வாலை வெட்டுவதால் இது ஒழியாது, தலை நறுக்கப்படவேண்டும்.

தொப்பிகளை அனைவரும் கழற்ற வேண்டும் என்றால் , தொப்பி வியபாரி முதலில் அதை தூர எறிய வேண்டும். காஞ்சி மடாதிபதிகள் போன்றோர் சாதிய அடையாளங்களை அழித்து, மீன் விற்கும் சேரியில் இருந்து ஒருவரை அடுத்த வாரிசாக அறிவித்தால், அது ஆக்க பூர்வமானது என்பேன்.

**

இதை நான் சொல்லும்போது மற்ற ஒன்றையும் சேர்த்தே சொல்ல வேண்டியுள்ளது. "அப்ப ஏன் சாதி வாரி இட ஒதுக்கீடு?"  என்று கேட்கலாம்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட‌ குடும்பங்களை,  "சுனாமி victim யார் யார்?" என்று தேட அதே சுனாமி என்ற சொல்லைக் கொண்டுதான் வகைப்படுத்த முடியும். எனவே, பல்லாயிரம் ஆண்டுகள் சாதி என்ற ஒன்றினை மூலமாக வைத்து ஒடுக்கப்பட்டவர்களை, அந்தப் பெயரில் தேடிதான் நிவாரணம் வழங்க முடியும். எனவேதான்.... அதாவது தொலைத்த இடத்தில் தேடுவது ...அல்லது காயத்தை  மருந்திட காயம் பெயர் சொல்லி தேட வேண்டிய நிர்ப்பந்தம். :((

மேலும் சாதி வாரியான இட ஒதுக்கீட்டின் நோக்கம் பொருளாதார சமநிலை அல்ல, சமூகச் சமநிலை.

அதாவது "படித்து நாலு காசு சம்பாரிச்சாலாவது சமூகம் இவர்களையும் சமமாக நடத்தும்" என்று எண்ணியே இது அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், கலெக்டரானாலும் இன்னும் சமூகச் ச‌மநிலை வரவில்லை என்பது உண்மை.  :((

சமூகச் சமநிலைக்கு என்ன தீர்வு?


உதாரணம் யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்ன சம்பளம் கம்மியான் வேலை என்பது போல நடக்க வேண்டும். எல்லா வேதத்தையும் கரைத்து குடித்தாலும், விஜய் மல்லையா போல பணம் இருந்தாலும் திருப்பதியில் அர்ச்சகராக இருக்க அனைவருக்கும் வழியில்லை ..எனும்போது சமுதாயச் சமநிலை என்பது கேள்விக்குறியே.

அமெரிக்காவில் இருக்கும் கோவிலுக்குகூட சாதி பார்த்துதான் அர்ச்சகர் இறக்குமதி எனும்போது எப்படி தமிழகத்தில்/ இந்தியாவில் சமூகச் சமநிலை வரும்? "நல்லா பாட்டுப்பாட, சாமியை அலங்காரம் செய்ய யார் வேண்டுமானாலும் வரலாம்" என்று சொல்ல அம்ரிக்கவாசிகளால்கூட முடியவில்லை. அர்ச்சகர் படிப்பு படித்துவிட்டு பல சாதியினர் உள்ளார்கள் வேலை செய்ய.
  • நான் பிறப்பால் ஒருவனை மேல்/கீழ் என்று பார்த்தால் நானும் பார்ப்பனீயன்.
  • நான் என்னை வேறுபடுத்திக்கொள்ள சில சாதி அடையாளங்களை அணிந்தால் (or some other way) நான் எனது சாதியை பிராக்டீஸ் செய்கிறேன்.
  • நான் என்னை வேறுபடுத்திக்கொள்ள சில மத அடையாளங்களை அணிந்தால் (or some other way ) நான் மதத்தை பிராக்டீஸ் செய்கிறேன்.
  • நான் தமிழை எழுதி /வாசித்து/ பேசி வந்தால் தமிழை பிராக்டீஸ் செய்கிறேன்.
  • எப்போது பிராக்டீஸ் நிற்கிறதோ அப்பபோது நான் அதுவல்ல. நான் அந்த வழியில் வந்தவன் அவ்வளவே.
Image Courtesy
http://online.wsj.com/article/SB118256120981545474-search.html

2 comments:

  1. கொட்டை எழுத்தில் போட்ட கருத்துக்களுக்கு என் கன்னாபின்னா வென்று ஆதரவை தெரிவித்து ஆமோதிக்கின்றேன். ஏறக்குறைய இந்த விசயத்தை கடந்த ஒரு வருடமாக கடைபிடிக்க தொடங்கியுள்ளேன் என்பதை உங்கள் வார்த்தைகளை படித்தவுடன் சற்று மனதில் பெருமிதம் வந்துள்ளது. இன்னும்நிறைய மாறுதல் வேண்டும். கடந்து வருவேன் எனறே யோசிக்கின்றேன்.

    ReplyDelete
  2. எப்போவாவது எழுதினாலும் ஆணி அடிச்சாமாதிரி இறக்கிட்டு போறிங்க தல!

    ReplyDelete