Thursday, February 07, 2013

சிறந்த இலக்கியவாதி பாக்யராஜ் (What is Literature?)

ணையத்தில் நான் பார்த்தவரை இலக்கியவியாதிகள் என்ற ஒரு எலைட் குழு உள்ளது. இவர்கள் தமிழில் வந்துள்ள பிரிண்டட் &  பைண்டட் (printed) கதை புத்தகங்களைப் படித்திருப்பார்கள்.  (சும்மா இணையத்தில் படித்தால் அது வாசிப்பு அல்ல அது ப்ரெளசிங்- browsing) மேலும் அந்த புத்தகங்களைச் சேர்த்து வைத்தும் இருப்பார்கள். சிலர் ஆங்கில கதைப் புத்தகங்களையும் வாசித்து இருப்பார்கள். இப்படி படித்துவிட்டு அமைதியாக இருந்தால் இலக்கியவியாதி என்ற தகுதி வந்துவிடாது. அதை அவ்வப்போது பட்டியல் இட வேண்டும். அது பற்றி சங்க கூட்டங்களில் பேச வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக , "இரசினி" , "விசயகாந்த்" இரசிகர் மன்றம் போல ஏதேனும் ஒரு எலக்கியவியாதி சங்கத்தில் ஐக்கியமாகிவிட வேண்டும். அப்படி சங்கத்தில் ஐக்கியம் ஆகி , சங்கம் சார்ந்த செயல்களில் ஈடுபடவேண்டும். அபிமான கதை வியபாரியின் சரக்கு வெளிவந்தால் அதற்கு கண், காது ,மூக்கு வைத்து , "மனிதர்கள் புரிந்து கொள்ளக்கூடிய திரைக்கதையே இல்லை, அதையும் விட மேலானது" என்று சொல்ல வேண்டும். மேலும் "படிமம்", "பிரதி" என்று மானே தேனேயும் போட்டுக்கொள்ள வேண்டும். இந்தப்படம் எத்தனை பிரிண்ட் போடப்பட்டது என்றால் நீங்கள் லோக்கல். இந்தச் சினிமா எத்தனை பிரதி போடப்பட்டது என்றால் நீங்கள் எலக்ஸ். இதைத் தவிர முக்கியமான ஒன்று உள்ளது. அதாவது வணிகரீதியாக நன்றாக விற்பனை ஆகும் கதைகளை எழுதுபவர்களை, மறந்தும் இலக்கியவியாதி என்று ஒத்துக்கொள்ளவே கூடாது.அவர்கள் எல்லாம் மட்டமான கடைமட்ட இரசிகக்குஞ்சுக்காக எழுதுபவர்கள். இவர்களின் பீடாதிபதி மட்டும் தேவாதி தேவர்களுக்காக எழுதுபவர் போன்ற பில்டப்புகளை உருவாக்க வேண்டும்.

சரி கழுதை தேஞ்சு கட்டெரும்பு ஆன கதையாக , இவர்கள் பீடாதிபதிகள் சப்பையான திரைக்கதையை சினிமாவிற்கு எழுதிவிட்டால், அதே பீடாதிபதியே அதை இலக்கியம் என்று சொல்லிவிடுவார். திரைக்கதை இலக்கியமா ?? என்று இரசிக குஞ்சுகள் மலைத்துவிடுவார்கள். ஏன் என்றால் , தமிழில் குழப்பமற்ற திரைக்கதை என்றால் அது பாக்யராஜ் என்று போய் முடியும். அந்த அளவில் பாக்யராஜும் ஒரு இலக்கியவாதியாகிவிடுவார். "என்ன கொடுமை இது? இவ்வளவு நாள் பாக்கெட் கதை மன்னன் அசோகன் பதிப்பில் எழுதிய அனைவரையும் இலக்கியவியாதிகச் சேர்க்க மறுத்தோம், இப்படி தடாலடியாக நம்ம தல திரைக்கதையையும் இலக்கியம் என்று சொல்லி, பாக்யராசும் இலக்கியவியாதியாகி விட்டாரே?" என்று இரசிக சிகாமணிகள் வருந்தலாம்.

இதுதான் இலக்கியம் என்பதற்கு எந்த வரைமுறையும் இல்லை. 

திருவள்ளுவர் தவிர அந்தக் காலத்தில் முதல் அடியில் 4 இரண்டாவது அடியில் 3 என்று வார்த்தை வைத்து ட்வீட் செய்தவர்கள் ((Twitter) ) இல்லை. அது அந்தக் காலத்தில் புதுமையான முயற்சியாக இருந்து இருக்கலாம். அதை அந்தக் கால இலக்கியவியாதிகள் இலக்கியம் இல்லை என்று கூட மறுத்து இருக்கலாம். ஆனால் இன்று அது கொண்டாடப்படுகிறது. வெறுமனே பாட்டு பாடிக்கொண்டிருந்த காலத்தில், யாராவது ஒருவர் உரைநடையை ஆரம்பித்து இருக்கலாம். அவரும் ஏதாவது ஒரு மடத்தின் இரசிகக் குஞ்சுகளால் "இதெல்லாம் எலக்கியம் அல்ல" என்று திட்டு வாங்கியிருக்கலாம்.

இன்று மடாதிபதி திரைக்கதையும் இலக்கியம் என்று அருள்வாக்கு கூறியுள்ளார். ஏன் என்றால், இனிமேல் இவர் எழுதும் திரைக்கதைகளை யாரும் எலக்கியம் இல்லை என்று சொல்லிவிடக்கூடாதே? அப்படி நல்ல திரைக்கதைகளைக் சொன்ன பாக்யராஜும் சிறந்த இலக்கியவாதி. அவருக்கு அடுத்த இரசிகர் மன்ற விருதைக் கொடுக்கலாமே?
What is Literature?
The quest to discover a definition for “literature” is a road that is much traveled, though the point of arrival, if ever reached, is seldom satisfactory.  Most attempted definitions are broad and vague, and they inevitably change over time.  In fact, the only thing that is certain about defining literature is that the definition will change.  Concepts of what is literature change over time as well.
http://dlibrary.acu.edu.au/staffhome/siryan/academy/foundation/what_is_literature.htm

இயல்,இசை, நாடம் போல திரைக்கதை,பதிவு, ட்வீட், ப்ளஸ் என்று எழுத்தின் எந்த வடிவம் வேண்டுமானாலும் இலக்கியம் ஆகலாம். இதுதான் இறுதி வடிவம் என்று இலக்கியத்திற்கான எந்த சட்டகமும் இல்லை.
  • சில Literature வணிக அளவில் வெற்றி பெறுகிறது.
  • சில Literature வணிக அளவில் வெற்றி பெறுவது இல்லை. 
எது உங்களுக்கு பிடித்த இலக்கியம் என்றோ அல்லது கொடுப்பட்ட பத்தில் இதுதான் முதல் இடம் பெறும் இலக்கியம் என்றோ எந்த இரசிக மன்றமும் அவர்களுக்கான் ஒன்றைக் கொண்டாடலாம்.  ஆனால், மற்றதை இலக்கியம் இல்லை என்றோ வெறும் வணிக எழுத்து என்றோ சொல்வீர்களேயானால் , உங்களுக்கு இலக்கியம் என்றால் என்னவென்றே தெரியவில்லை.

இதுதான் இலக்கியத்தின் இறுதிவடிவம் என்று சொல்ல நீங்கள் யார்?

திரைக்கதையும் இலக்கியம்-அருள்வாக்கு
http://www.youtube.com/watch?v=deA8YbZAAZ0

Google +  உரையாடல்
https://plus.google.com/u/0/104594757340298036421/posts/horgFZJnjGD

2 comments:

  1. கல்வெட்டு,

    திருவள்ளுவர் தான் ஆகச்சிறந்த துவித்தர்னு ரொம்ப நாளாக நான் சொல்லிவருகிறேன், நீங்களும் அதையே சொல்லி இருக்கிறீர்கள்:-))

    எழுதுவது எல்லாம் இலக்கியம் என்றால் சரோஜாதேவிக்கதைகளும் இலக்கியமே,வாசிப்பவர்களை மகிழ்வித்து,பரவசப்படுத்தி,எழுச்சியடைய வைக்கும் எழுத்துக்கள் அவை :-))

    மிகச்சிறந்த வாசிப்பனுவத்தினையும்,வாசிப்பவனை இன்னொரு மெய்நிகர் உலகுக்கு கடத்தி செல்லும் வல்லமையும் கொண்ட எழுத்துக்கள் :-))

    இதெல்லாம் ஜெமோ வகையறாவுக்கு சுட்டுப்போட்டலும் வருமா?

    இதெல்லாம் படிச்சா என்னை ஏன் இலக்கியவாசகன்னு சொல்ல மாட்டேங்குறாங்க :-))

    ReplyDelete
  2. வவ்வால் கருத்துக்கு நன்றி.

    ஆம் தாத்ஸ் வள்ளுவர்தான் சிறந்த ட்வீட்டர்.

    இலக்கியம் என்பதில் நாம் முரண்படுகிறோம். :))

    டார்க் காமடி மாதிரி சரோஜாதேவி வகைகள்கூட இலக்கியமாகலாம் யார் கண்டார்கள்?. :))

    நான் சொல்ல வருவது இதுதான் இப்படித்தான் என்று இன்றைய சட்டங்களுக்குள் எதையும் அடக்க முடியாது என்பதே..விதியற்ற ஒன்று என்பதே...

    ReplyDelete