Friday, May 25, 2018

அனிதாவின் தூக்குக்கயிறு, தூத்துக்குடியின் துப்பாக்கிகளுக்கு ஃபெட்னா பாராட்டுவிழா:எட்டப்பன்களின் சங்கமாகிவரும் FeTNA

A1 இறந்த நாளில் இருந்து தமிழ்நாடு அவலமாக காட்சி அளிக்கிறது. எத்தனை துரோகங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது மத்திய அரசால்? அவை எல்லாவற்றையும், தமிழ் மக்கள்மீது கடத்திக்கொண்டு பதவியில் இருக்கிறது எடப்பாடி தலைமையிலான மாநில அரசு.

நீட் தேர்வில் தமிழகத்தை அடகுவைத்ததில் முக்கிய சூத்திரதாரியான மாஃபாவை, அமெரிக்க ஃபெட்னா இந்த வருடம் அழைத்து அவரின் சேவையைப் பாராட்ட இருக்கிறது.
https://fetnaconvention.org/en/special-guests

ஆம் அனிதாவிற்கு எடுத்துக்கொடுத்த தூக்குக்கயிறுக்காகவும், தூத்துக்குடிக்கு எடுத்துக்கொடுத்த துப்பாக்கிக்காகவும், நெடுவாசல் தொடங்கி எல்லா இழவுகளுக்கும் காரணமாக இருக்கும் ஒரு அரசாங்கத்தின் பிரதிநிதியை, நீட்டின் சூத்திரதாரியான மாஃபா"வை   அமெரிக்க தமிழர்களின் அமைப்பு கொண்டாட இருக்கிறது. என்னவென்று கேட்டால் அவர்கள் ஃகார்வர்டின் தமிழ் சேருக்கு காசு கொடுத்தார்களாம்.

தூத்துக்குடி கொலைகாரர்களை அழைத்து கவுரவிக்கும் ஃபெட்னா, எட்டப்பன்களின் சங்கமாகிறது.இராசபக்சே இவர்களின் தமிழ் சேருக்கு காசு கொடுத்தால், அவரையும் அழைப்பார்கள் இவர்கள். தமிழ் வளர்க்கிறோம் என்ற பெயரில், தமிழனுக்கு பாடை கட்டியவர்களை அழைத்து சிறப்பிக்க இருக்கிறது ஃபெட்னா 2018.

ஃகார்வர்டு சேர் செய்கிறோம் என்ற பெயரில், அனிதாக்களைக் கொன்ற , தூத்துக்குடியை சுடுகாடாக்கிய ஒரு ஆட்சியின் பிரதிநிதியை அழைத்து கொண்டாடுகிறார்கள்.
**

நாஞ்சில் பீட்டர் என்ற ஒருவர் ஃபெட்னாவில் இயக்குநராக இருக்கிறார். ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? தமிழனைக் கொலைசெய்து, யாருக்காக இந்தச் ஃகார்வர்டுச் சேர்? ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டால், அவரின் மறுமுக‌த்தைக் காட்டுகிறார்.

மேலும் "ஃபெட்னா அறத்தின்மீது கட்டப்பட்ட அமைப்பு" என்கிறார் நாஞ்சில் பீட்டர்.

இல்லை அய்யா, ஒருவேளை அது அப்படி கட்டப்பட்டதாக இருக்கலாம், இன்று, உங்களைப் போன்ற எட்டப்பன்களால், எடப்பாடிகள் கொன்ற தமிழர்களின் பிணத்தில் வாழ முயற்சிக்கிறது.

‍‍‍‍==
அமைச்சர் வந்தால் ....
அவரிடமே உங்கள் சினத்தை காட்டுங்கள்.
கோரிக்கையை வையுங்கள்.
யார்வேண்டாம் என்பது.
குறிப்பு: நான் திமுக;
தந்தை பெரியார் தொண்டன்.
சாதி மதமற்றவன்.
==
எடப்பாடிகளும் இப்படியான எட்டப்பர்களும் தமிழர் கொலையில் விழாஎடுப்பவர்கள்.
FETNA's 31st Annual Tamil Conference Press Meet Stills
https://www.youtube.com/watch?v=ph6jvSJTrsQ

அதாவது கொலைகார அரசின் பிரதிநிதியை அழைத்து இவர்கள் விருந்து வைப்பார்களாம், நாம் அந்த விழாவிற்கு மொய் எழுதி , கொலைகார அரசின் பிரதிநிதியிடமே கோரிக்கை வைக்கலாமாம்.

என்ன மாதிரியான மனநிலை. இதில் நான் பெரியார் தொண்டன் என்ற அடிக்குறிப்பு வேறு.

பெரியார் அனிதாக்களின் சமாதியில் அழுது கொண்டிருக்கும்போது, நீங்கள் கொலைகார அரசின் பிரதிநிதியை அழைத்து கொண்டாடுகிறீர்கள். தயவு செய்து பெரியாரின் தொண்டன் என்று சொல்லி, கிழவனை மறுபடியும் சாகடிக்காதீர்கள்.

இயக்குநர் கரு.பழனியப்பன் சொல்வது போல, "உங்களின் பிணங்களைத் தோண்டி தூக்கில் ஏற்றும் காலம் வரும்".

ட்வீட்டர் உரையாடல்.
https://twitter.com/naanjilpeter/status/999713487927631873

https://twitter.com/kalvetu/status/999969019867357184

https://twitter.com/naanjilpeter/status/999744469699366915

No comments:

Post a Comment