Thursday, September 01, 2005

பதிவு 02: Kiss & Ride

(வாஷிங்டனில் வளைகாப்பு தொடர்ச்சி.... )

மூட்டை முடிச்சை பிரிச்சு hotel அறையில் அடுக்கி வைத்தது என் வேலை. இரண்டு குழந்தைகளையும் குளிப்பாட்டி இரவு உணவு கொடுத்து தூங்க வைத்தது மனைவியின் வேலை. இதை எல்லாம் முடித்து, அடுத்த நாள் விழாவிற்குத்தேவையான துணிகளை மடித்து வைத்துவிட்டு படுப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

பிள்ளைகள் பிறப்பதற்கு முன்னர் நாங்கள் சென்ற Pittsburgh பயணத்தின் போது இரவு நேரங்களில், அதுவும் வந்து விடுதியில் இறங்கியவுடன் ஊர்வம்பு பேசிப்பேசியே பொழுதைப் போக்கிவிடுவோம். இப்போது என்னடாவென்றால் சின்னப் பொண்ணுக்கு Diaper மாத்துவது Similac கலக்குவது (Similac நம்ம ஊர் அமுல் பவுடர் போல் ஒன்று) பெரியவனை குளிப்பாட்டுவது படுக்கை ஏற்பாடு செய்வது.......

என்னத்த சொல்ல போங்கள் பக்கத்து அறையில் இருந்த நியூஜெர்சி நண்பருடன் கூட இரவில் பேச முடியவில்லை. இரண்டு வருடங்கள் கழித்து பார்கப்போகும் நண்பர் பக்கத்து அறையிலேயே இருந்தாலும் பார்க்க முடியவில்லை.

அவர் என்ன செய்து கொண்டு இருந்தார் என்கிறீகளா? அதேதான் அவரும் சம்சாரி ஆயிட்டார். எனது மகன் வயதில் அவருக்கு ஒரு மகள். அது தவிர இந்தியாவில் இருந்து அவரது மாமனார் மாமியார் வந்து இருந்தனர். வளைகாப்புடன் வாஷிங்டன் Tour ம் அவரது சுற்றுலா அட்டவணையில் இருந்தது. பாவம் அவர் வண்டி ஓட்டி ஓட்டியே பஞ்சராகி படுத்துவிட்டார்.

புதிதாக எந்த ஊர் போனாலும் அந்த ஊரை அதிகாலையில் சுற்றி வருவது எனக்குப் பிடிக்கும். இந்த முறை அதிக அலுப்பாக இருந்தமையால் காலையில் எந்திரிக்க முடியவில்லை. விழா மதியம் தான் என்பதால் காலையில் கொஞ்சம் லேட்டாக எந்திரிக்க முடிந்தது.

காலை பத்துமணிக்குமேல் எழுந்து வெளியே வந்து hotel-ஐ ஒரு சுற்று சுற்றி வந்தேன். ஆகா ஆகா என்ன அருமையான இடம். பக்கதிலேயே பெரிய திரை அரங்கம். அருகிலேயே சின்ன சின்ன கடைகள். பெரிய திறந்தவெளி மைதானத்தின் ஒரு மூலையில் Eckerd shop அருகில் Taco Bell. மறுபுறத்தில் சிறிய பஸ் நிறுத்தம். அங்கே காத்திருக்கும் பயணிகள்.

எனக்கு அந்த இடத்தின் அமைப்பும் அமைதியும் சட்டெனப் பிடித்துவிட்டது.
எல்லாவற்றையும்விட அதிகம் பிடித்தது அங்கு பஸ் நிறுத்ததில் காணப்பட்ட இந்த அறிவிப்பு பலகைதான்.





Park and Ride பார்த்திருக்கிறேன் ஆனால் Kiss and Ride இப்போதுதான் பார்க்கிறேன். Park and Ride என்றால் காரில் வருபவர்கள் தங்கள் காரை அங்கேயே (அதற்கென்று இருக்கும்) உள்ள parking area வில் விட்டுவிட்டு பஸ்சில் வேலைக்குச் செல்வார்கள். மாலையில் திரும்ப வரும்போது பஸ்சில் இருந்து இறங்கி தங்கள் காரை நோக்கி நடையைக் கட்டுவார்கள்.

Kiss & Ride இது என்ன?

என்ன நீங்களும் என்னை மாதிரி எதை எதையே கற்பனை பண்ணி டயத்த வேஸ்ட்டு பண்ண வேண்டாம். கூகிள் ஆண்டவன் மேல பாரத்தப் போடுங்கள்.

கூகிள் ஆண்டவர் புண்ணியத்தில் கண்டுபிடித்தது.

The Kiss & Ride is a designated area (identified by signs) for parents picking up or unloading their children by private vehicle. The area is separate from the bus loading/unloading location so there is no conflict with the two operations.

For the Kiss & Ride to function properly, several procedures must be followed:

  • A school staff member, normally assisted by student safety patrols, provides supervision.
  • Children load and unload from the passenger side of the car only, so they will not have to cross the driveway in front of traffic.
  • Drivers remain in the car. Safety patrols will assist with the car door.
  • Cars stay in a single file line as they move to and from the Kiss & Ride.
  • Parents wanting to enter the school must park in an available parking space. They are not to enter the Kiss & Ride line in this case.
  • Arrive early.
  • The busiest time at the Kiss & Ride area is five minutes before the start of classes. Plan to arrive 10 to 15 minutes before the final bell, when the traffic is lighter.

அதிக விபரங்களுக்கு. கூகிள் ஆண்டவரின் ஜோசியம்

பள்ளி செல்லும் குழந்தைகளுக்குதான் எத்தனை பாதுகாப்பு விதிகள். இந்த மக்கள் அதைப் பின்பற்றும் விதமே தனி. இதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு எனது நாட்டைப் பற்றிய எண்ணம் வந்து போவதைத் தடுக்க முடியவில்லை.

ஆஹா ஆரம்பிச்சுட்டான்யா இவனும் இந்த பேவரட் மேட்டர.அங்க குந்திக்கினு இந்த நொள்ளப் பேச்சு பேசாமா அடங்கமாட்டானுக இவனுக. அப்படீனு நீங்க கத்துறது காதுல விழல..விழவேயில்ல

இந்தியாவையும் அமெரிக்காவையும் ஒப்பிடக்கூடாதுதான். என்றாலும் இங்க இருந்து எதை எதையோ காப்பி செய்யும் நம்மால் நல்லவற்றை எடுத்துக் கொள்ள முடியவில்லை.

என்னதான் பொருளாதாரத்தில் முன்னேறினாலும் நமது உடன் பிறந்த அலட்சியம் நம்மை விட்டுப் போக ரொம்ப நாளாகும் என்றே தோன்றுகிறது.

சாலையைக் கடப்பதற்கு என்றே உள்ள சுரங்கப்பாதையில் செல்லாமல் குறுக்குக் கம்பியைத்தாண்டும் பாதசாரிகளும், ஒரு மணிநேரம் சாலையக்கடக்க நின்றாலும் பள்ளிக் குழந்தைகளுக்கு நின்று வழி கொடுக்காமல் செல்லும் வாகனங்களும், பள்ளிப் பேருந்தில் இருந்து இறங்கும் குழந்தைகளுக்காக நின்று வழிகொடாமல் முந்திச்செல்லும் வாகனங்களும் நிச்சயம் ஒருநாள் மாறவேண்டும்.

பல எண்ணங்களுடன் Germantown ஐ ஒரு சுற்று சுற்றி காலாரா நடந்த திருப்தியில் விடுதி அறைக்கு வந்தால்.......

No comments:

Post a Comment